Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:10:53 AM
வியாழன் | 9 மே 2024 | துல்ஹஜ் 1743, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:46
மறைவு18:28மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:37
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7446
#KOTW7446
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 28, 2011
பெரிய சதுக்கை சுற்றுப்புறத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகர்மன்றத் தலைவர் பார்வையிட்டார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4726 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடிசைப் பகுதிகள் பெரும்பாலும் மூழ்கியுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகர்மன்றத் தலைவர் ஆபிதா 26.10.2011 முதல் பார்வையிட்டு வருகிறார்.

காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் அமைந்துள்ள பெரிய சதுக்கை வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்த வளாகத்தில்தான் துணை அஞ்சலகமும் அமைந்துள்ளது.





பெரிய சதுக்கையையொட்டி குத்பா பெரிய பள்ளிவாசலுக்குச் செல்லும் லெப்பப்பா தர்ஹா அமைந்துள்ள குறுக்குச் சாலையில் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளதால், தேங்கிய மழை நீர் வற்றாமல், அப்பகுதி போக்குவரத்தை துண்டித்துள்ளது.



இதனால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், நகர்மன்றத் தலைவர் ஆபிதா 26.10.2011 அன்று மாலை 05.30 மணியளவில் அப்பகுதியைப் பார்வையிட்டார்.



வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினத்தன்று அச்சாலை வழியாகவே பொதுமக்கள் செல்ல வேண்டியுள்ளதாகவும். அந்நாளில் காலை நேரத்தில் பம்ப் செட் கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்தித் தருமாறும், இனி வருங்காலங்களில் சிமெண்ட் சாலை போடுவதற்கு அனுமதி வழங்க வேண்டாமென்றும் அப்போது பொதுமக்கள் நகர்மன்றத் தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.



பெரிய குத்பா பள்ளிக்குச் செல்லும் லெப்பப்பா சாலையில் தேங்கியுள்ள நீரை ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையன்று அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிமெண்ட் சாலை இதர கோரிக்கைகளை அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு மனுவாக அளித்து, அவர் மூலம் கோரிக்கைகளை முன்வைக்குமாறும், நகர்மன்றத் தலைவராக தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து மக்கள் சிரமத்தைப் போக்கிட ஆயத்தமாக உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Good Start
posted by Nainaysh (Chennai) [28 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 12368

People are often unreasonable, illogical, and self-centered... forgive them anyway,

The good you do today, people will often forget tomorrow... do good anyway,,

Give the world the best you have, and it may never be enough...

give the world the best you have anyway,,,

You see, in the final analysis, it's all between you and God...

it was never between you and them anyway,,,.

Just do good and win their hearts......

Regards,
Nainaysh Ibrath,,.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பெரிய சதுக்கை சுற்றுப்புற...
posted by S.I.தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE) [28 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12375

அஸ்ஸலாமு அழைக்கும்,

தார் ரோடு போட்டா சேவை குறைவாக இருக்கும் சிமெண்ட் ரோடு போட்டா தார் ரோடு போட்டதைவிட பலமடங்கு பயன் தரும் என்பது என்னுடைய கணிப்பு! அதுதான் உண்மையும் கூட! ஆனால் நம்ம மக்களில் ஒரு குறிப்பிட்டு விரல் விட்டு என்னும் அளவு மக்களுக்கு வார்த்தைகளை எப்படி வெளிக்கொணர்வது என்பது தெரிந்தும் தமிழில் பிழை வரதான் செய்கிறது. மழை காலங்களில் நீரை எப்படி சேகரிக்க வேண்டும் & வெளியேற்ற வேண்டும் என்பதை ஆராய வேண்டுமே தவிர சிமெண்ட் ரோடே தேவை இல்லை என்று சொல்வது அழகல்ல.

சிமெண்ட் ரோடு போட்டு 2 வருடம் ஆகிவிட்டால் அதன் பயன் சொல்லிக்கொள்ளும்படி உள்ளதா என்றால் அதற்கு பதில் கேள்விகுறிதான் (?).

நகர்மன்றத் தலைவர் அவர்களே சிந்திப்பீர்! செயல்படுவீர்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முக்கூடலையும் வென்றுவா மகளே...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [28 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12386

இந்தப் பக்கத்தை இது வரை 1345 பேர் பார்த்திருக்காங்க(நெட்ல மட்டும்) இதுலேர்ந்து என்ன தெரியுது? ஆபிதாம்மா உன் செயல்பாட்டை எதிர்பார்த்து ஆயிரமாயிரம் கண்கள் விழிப்போடு இருக்கின்றன!

ஊர் நலனில் உன் பங்கை உரிய நேரத்தில் செய்து, புற நகர் வென்றதைப்போல், இம்முக்கூடலையும் (மூன்று தெருக்களின்) வென்று மக்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற இச்சிறியவன் வாழ்த்துகின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பெரிய சதுக்கை சுற்றுப்புற...
posted by Mahmoodh Hasan SMS (Guangzhou) [29 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12392

சகோதரர் Sayna Seyed Mohamed அவர்களே

நீங்கள் புதிதாக வந்துள்ள தலைவியை வாழ்த்துங்கள், அது வரவேற்கத்தக்கது.

ஆனால் இதற்கு முன்பு உள்ள தலைவர்களை விமர்சிப்பது நாகரீகம் அல்ல. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. தேவை இல்லாத மன கசப்பை தவிர்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பெரிய சதுக்கை சுற்றுப்புற...
posted by Zainul Abdeen (DUBAI) [29 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12400

இந்தப் பக்கத்தை இது வரை 1345 பேர் பார்த்திருக்காங்க (நெட்ல மட்டும்) இதுலேர்ந்து என்ன தெரியுது?

1345 பேர் பார்த்திருக்காங்க என்பது அதன் அர்த்தம் கிடையாது , மாறாக 1345 தடவை இந்த செய்தி திறந்து பார்க்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கும்.

THIS IS FOR INFORMATION


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தேவை இல்லாத மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள்..........
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [29 October 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 12406

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் Sayna Seyed Mohamed அவர்களே ! நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் எத்தனையோ நல்ல செயல்கள் நமதூருக்கு அவர்களின் ஆட்சி காலத்தில் செய்துள்ளார்களே! என்பது தாங்களுக்கு தெரியாதோ!!!!!!!! உங்களின் இந்த செயல் நாகரீகமான செயலாக இல்லை.........

அட்மின்:
அட்மின் சார் என்ன தனிப்பட்ட ஒரு நபரை தாக்கி எழுதும் கமெண்ட்ஸ்க்கு அனுமதியுன்டோ!!!!! உங்களின் வளைத்தளத்தில்.............

Moderator: கருத்தாளர் பொத்தாம்பொதுவாக விமர்சித்திருந்ததால் கருத்து அனுமதிக்கப்பட்டது. எனினும், இது தனிநபரைக் குறிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுவதால், அக்கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இது தான் செய்தி சேவையின் தர்மமா!!!
posted by Mukthar (Hong Kong) [29 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12431

அஸ்ஸலாமு அலைக்கும்...

Dear அட்மின்.,

சகோதரர் அவர்கள் என்ன கடந்த 30 , 50 வருஷத்துக்கு முன்னாள் உள்ள நிகழ்வை சொல்கிறாரா??? அல்லது 10 , 15 வருஷத்துக்கு முன்னாள் இருந்த பெண் தலைவர்களை குறிப்பிடுகிறாரா???

யாரை குளிர் காய விடுகிறீர்கள்???

நீங்களும் முடிந்த அளவில் நீதமாக நடக்க முயற்சி செய்யுங்கள். பொத்தம் பொதுவாக குறிபிட்டார் என்று சொல்லாதீர்கள். இறைவன் யாவையும் அறிந்தவன் இறுதி நாளின் அதிபதியும் அவனே அனைவர்களும் அவனிடத்தில் தாங்கள் செய்த செயல்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

வருஷம் 365 நாளுமா இடைஞ்சலா இருந்துச்சு... ஏதோ சொல்லணும் பதியனும் என் பதற்காக பிறரை சாடாதீர்கள். சகோதரர் சாடுவதையேல்லாம் சாடிவிட்டு தவறு இருந்தால் மன்னிக்கவும் திருத்தித்தாருங்கள் ஏற்று கொள்கிறேன் என்று குறிப்பிடுகிறார்... அது எல்லா சந்தர்பத்தில்லும் சரியான வார்த்தை கிடையாது...

50 -50 யாக செயல்படுங்கள்... ஒரு தலைபட்சமாக செயல் படாதீர்கள்... (Comment Reference Number: 12391 கருத்தை edit பண்ணியதர்க்கும் மிக்க நன்றி )

வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பரந்த சிந்தனையை ஏற்படுத்துவானாக.... ஆமீன்...

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பெரிய சதுக்கை சுற்றுப்புற...
posted by saha (Chennai) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12442

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் Sayna Seyed Mohamed அவர்களே

தவறு இருக்கிறது

நீங்கலாகவே கேள்வி கேட்டுவிட்டு நீங்கலாகவே பதில்தந்து உள்ளிர்களே பின்னர் தேவை இல்லாத கமெண்ட்ஸ் எதர்கு நேரம் போகவில்லை என்றா

இன்னும் அல்ல என்றும் நம்மலுடைய ஊர் பெண்கள் ஒழுக்கமாக நன்றாகவே இருக்கிறார்கள்.
அடுபன்கரையில் காலத்தை போகவில்லை, கல்வி என்னும் கடலில் மிதக்கிறார்கள்

தவறு இருப்பின் மண்ணிக்கஉம் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:பெரிய சதுக்கை சுற்றுப்புற...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok - Thailand ) [29 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12458

அஸ்ஸலாமு அழைக்கும்,

Dear Admin,
Please post this comments
Thanks

அன்பு சகோதரர் அனைவருக்கு எனது முதல்கண் சாலம் ,

Mahmoodh Hasan சம்ஸ்,A.W.Abdul Cader Aalim bukhari ,Mukthar , saha

தாங்கள் அனைவர்களும் நான் குடுத்த கமெண்ட்ஸ்சை சுட்டி காட்டியமைக்கு நன்றி ,

தவறு இருகின்றது என்று சொல்லி இருந்தீர்கள் திருத்தி கொள்கிறேன்,

கேள்வியும் கேட்டுவிட்டு , பதிலும் சொல்லி இருக்கிறேன் என்று ஒரு சகோதரர் சொல்லி இருந்தார்கள் ,

இனொரு சகோதரர்கள் நம் பிள்ளைகள் படிகீரர்கள் என்று சொல்லி இருதார்கள் , படித்த பின்பு என்ன செய்கிறார்கள் அதை தான் அடுபன்கரை என்று சொல்லி இருதேன் ,

நான் கமெண்ட்ஸ் இல் சொல்லி இருந்தது நான் அநுபவித்தது வேறு யாருடைய பைக் தள்ளி விட்டு செல்ல வில்லை , அது என்னுடைய பைக் கை தான் , ஆதாரம் இல்லாமல் நான் இங்கு பதிய வில்லை , அதே பெரிய மனிதர் தான் போஸ்ட் ஆபீஸ் யதுதபில நடந்த sambavathilum சந்தித்தேன்

இருபினும் என்னுடைய உடன் பிரவ சகோதரர் Hongkong இல் இருந்து என்னுடைய கமெண்ட்ஸ்சை பார்த்து தொலைபேசி மூலம தொடர்பு கொண்டு மனவேதனை அடைந்தார்கள், உடனே அட்மினுக்கு நான் தொடர்பு கொண்டு இந்த கமெண்ட்ஸ்சை யடுத்து விடுங்கள் , பிரச்னை வருகிற மாதிரி தெரிகிண்டறது என்று சொல்லி இருதேன் admin@kayalpatnam.com என்ற முகவரிக்கி மெயில் அனுப்பி இருதேன் ,

எனக்கு யாருமீதும் பகைமை இல்லை, யாரையும் குளிர் காய வைக்க வேண்டிய அவசியம் இல்லை, குளிர் காய வைபவர்களுக்கு தான் எப்படி குளிர் காய வைக்க வேண்டும் என்பது theyreeum ,

ஆலிம் அவர்களுக்கு நிறைய நல்லதும் செய்து இருக்கீறார்கள் அதும் இந்த வளைய தலத்தில் வந்து இருகிறது, அவர்கள் seytha nallathai நான் சுட்டி kaata வில்லை , அங்கு தான் நான் தவறு செய்து இருகிறேன் , இன்சா அல்லாஹ வரும் காலங்களில் , இது போன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன் ,

நான் peyarai sollamal verum தலைவரு என்று சொன்னது key இப்படி , இதுலயும் குறை கண்டு பிடிச்சி கமெண்ட்ஸ் போட்டு ராதிங்க , உங்க ஆட்டத்துக்கு நான் varalaingooooooooooo ஆளா விடுங்க , நான் கிளபுறேன்

மாசலம்
இப்படிக்கு
Seyed Mohamed ( Seyna )
Bangkok Ikiya Mandram - Bangkok - Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3606; Comments - 6]
காணவில்லை! (?!)  (27/10/2011) [Views - 4737; Comments - 30]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved