Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:48:28 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7440
#KOTW7440
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 26, 2011
குழுப்பணியாற்றி நல்ல நகர்மன்ற நிர்வாகத்தைத் தருவோம்! துளிர் கேரளங்கில் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சூளுரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5040 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குழுப்பணி (Team Work) ஆற்றி, நல்லதொரு நகர்மன்ற நிர்வாகத்தை நகர மக்களுக்கு வழங்குவோம் என, கடந்த 22.10.2011 அன்று, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி கேளரங்கில் நடைபெற்ற - புதிய நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆபிதா பேசினார்.

அவரது உரை பின்வருமாறு:-

எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!



இந்த புதிய நகர்மன்ற திட்டமிடல் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, நல்ல பல ஆலோசனைகளைத் தரக் காத்திருக்கிற - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவியர் நாச்சி தம்பி, அ.வஹீதா அவர்களே! நகர்மன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று வந்திருக்கின்ற எனது மரியாதைக்குரிய சகோதர, சகோதரிகளே! என்றும் எனது மதிப்பிற்குரிய அனைத்து சமுதாய பெரியோர்களே...

நல்லவை நடக்க வேண்டும்... அல்லவை அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கையில் எந்தவொரு பாகுபாடோ, வேறுபாடோ பாராமல் ஒன்றுபட்டு உழைத்து, உண்மையை மட்டும் விரும்பும் - நன்மையை நாடும் நல்ல உள்ளங்களே! உங்களனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!



இறைவனுக்கு நன்றி...
நடைபெற்று முடிந்துள்ள நகராட்சித் தேர்தலில் நம் நகரின் அனைத்து மக்கள் மூலமாக மகத்தான தீர்ப்பைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்... அல்ஹம்துலில்லாஹ், தேங்க் யூ அல்லாஹ்! நான் இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக மேலான ஆதரவையும், ஒத்துழைப்பையும் மனமுவந்து வழங்கிய அனைத்து மக்களுக்கும் முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



பாரபட்சமின்றி பணியாற்றுவோம்...
நகராட்சி தலைமை மற்றும் உறுப்பினர் பொறுப்பேற்று நுழைகின்ற அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த நாம், தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஊரின் ஒட்டுமொத்த நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஒன்றுபட்டு கடமையாற்றினால், நமதூரை அனைத்து நகரங்களுக்கும் முன்மாதிரி நகரமாக்கிக் காட்ட இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் உண்மையாகப் பிறக்க வேண்டும்.



உளத்தூய்மை...
நம் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், நம் வாக்கிலும், நம் செயலிலும் அது பிரதிபலித்து, அதன் மூலம் நமதூருக்கு நல்ல வழி உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

நமதூர் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக நகராட்சிக்குள் செல்கின்ற நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வைக் கூற விரும்புகிறேன்...



முன்மாதிரி தமிழர்...
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு கிராமத்தில் பிறந்த தமிழர் ராஜன். இவர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“ஏதோ ஒரு நாட்டில், எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த உங்களுக்கு இந்தப்பதவி எப்படி கிடைத்தது?” என அவரிடம் கேட்கப்பட்டது.

“என் மீது மற்றவர்களின் விமர்சனங்கள் எதுவானாலும், அது எப்படிப்பட்டதானாலும் அதை இயல்பான ஒன்று என்றே எடுத்துக்கொள்வேன்...

நமக்கெதிராக செயல்படுபவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என எப்போதும் நினைப்பேன்...

எனக்கெதிராக யாரேனும் செயல்படும்போது உணர்ச்சிவசப்படாதிருப்பேன்...

எதிராக செயல்படுவோர் பற்றி என்னிடத்தில் மற்றவர்கள் குறைகூறும்போதும் கூட அவற்றைக் காது கொடுத்துக் கேட்காதிருப்பேன்...

எதிராக செயல்படுவோரிடம் எனது சுய கவுரவத்தைப் புறந்தள்ளிவிட்டு, நானாகவே நேரில் சென்று பேசுவேன்...

எதிராக செயல்படுவோருக்கு இயன்றளவு என்னாலான உதவிகளைச் செய்வேன்...

அவர்களின் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்பேன்... அவர்களின் திறமைகளை அங்கீகரிப்பேன்...

இவ்வாறெல்லாம் செய்படுவது நான் எடுத்துக்கட்டி செய்யும் காரியமல்ல... மாறாக, இயற்கையாகவே எனக்கு அப்படி செய்ய வேண்டும் என்ற மனது அமைந்துவிட்டது.

நேர்மை, கடும் உழைப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்...

அனைத்து தரப்பு மக்களிடமும் எந்தவொரு பாகுபாடோ, பாரபட்சமோ பாராமல் ஒற்றுமையாகப் பழகுவேன்...

என நாம் ஒவ்வொருவரும் மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்ள வேண்டிய முத்தான கருத்துக்களை உதிர்த்துள்ளார் அந்த அமெரிக்க தமிழர்.



மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்பட வேண்டும்...
அன்பிற்குரியவர்களே... நகர்மன்றத் தேர்தல் மூலம் தமது பிரதிநிதிகளாக நம்மைத் தேர்ந்தெடுத்துள்ள மக்கள், நம்மை அவர்கள் வீட்டு சொந்தப் பிள்ளைகளாக... நம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னிற்பவர்களாக... அவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் உறுதிமிக்கவர்களாகப் பணியாற்றுவார்கள் என்ற அபரிமிதமான நம்பிக்கையோடும், மனம் நிரம்பிய எதிர்பார்ப்புகளோடும்தான் நம்மை இந்த ஐந்தாண்டு கால அளவைக் கொண்ட பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நாமும், நமது பிரச்சார காலங்களில் அவர்களிடம் வாயாற பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளோம்...



கால நிர்ணய அடிப்படையிலான செயல்திட்டம்...
நமது நகர்மன்றத்தின் மூலம் மக்களுக்கு நாம் செய்ய நினைக்கும் செயல்திட்டங்களை நல்ல முறையில் திட்டமிட்டு, தகுந்த கால அளவை நிர்ணயித்து, அதன்படி நிறைவேற்றித் தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்...



அனைவரின் ஒத்துழைப்பு...
ஊழலற்ற சிறந்த உள்ளாட்சி அமைந்திட மிகவும் அவசியமானது சிறந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு... சிறந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு... சிறந்த அலுவலர்களின் ஒத்துழைப்பு... பொதுநல அமைப்புகளின் சிறந்த ஒத்துழைப்பு... சிறப்பான பொதுமக்களின் ஒத்துழைப்பு...



இவையனைத்தும் ஒன்றிணைந்து கூட்டாக செயல்பட்டால் மட்டுமே ஒரு சிறந்த நகர்மன்றத்தை இன்ஷாஅல்லாஹ் நாம் மக்களுக்கு வழங்கிட இயலும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

முதல்வரின் பொன்மொழி...
“உள்ளாட்சி அமைப்புகள்தான் ஜனநாயகத்தின் தொடக்கப்பள்ளிகள்” என்ற நம் தமிழக முதல்வரின் அமுத மொழியை மனதிற்கொண்டு, சிறப்புற செயலாற்றினால் நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை நாம் பெற்றிடலாம்...



குழுப்பணி அவசியம்...
நான் இதுவரை சொன்ன அனைத்தையும் குறைவின்றி நிறைவேற்ற வேண்டுமானால், வெறும் தலைவர் மட்டுமோ, அல்லது உறுப்பினர்கள் மட்டுமோ செய்ய நினைத்தால் முடியாது. அது நமது குழுப் பணியாக - டீம் ஒர்க்காக இருக்க வேண்டும்.

நீங்கள் புரிந்துகொள்வதற்காக நான் இங்கு ஓர் அம்சத்தை விளக்கிக் கூறுகிறேன்...

நமதூரில் நிறைய நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட தேதி அத்தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் மக்கள் பார்வைக்காக எழுதி வைக்கப்பட வேண்டும்.

இப்போது, ஒரு தொட்டியை சுத்தம் செய்ய நகர்மன்றத் தலைவராக நான் உத்தரவிட்டு விடலாம்... ஆனால் அதை அதிகாரிகள் சிரமேற்கொள்ள வேண்டும்... அதற்கான ஊழியர்களை உடனடியாக அனுப்ப வேண்டும்... அந்த ஊழியர்கள் அவற்றை சரிவர சுத்தம் செய்ய வேண்டும்... அப்பகுதியைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் அப்பணியை மேற்பார்வையிட வேண்டும்... அங்குள்ள பொதுமக்கள் சுத்தப்பணி நடந்ததற்கு சாட்சிகளாக இருக்க வேண்டும்...

இத்தனையும் ஒருசேர அமைந்தால்தான் ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் திட்டம் நிறைவேறும். இப்படித்தான் நகர்மன்றத்தின் ஒவ்வொரு பணியும்.

எனவே, நம்மை நம்பியிருக்கிற அனைத்து சமுதாய மக்களின் நன்னலன் கருதி இவற்றை நாம் கருத்திற்கொண்டு செயல்படுவோம்... ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...

நமது காயல்பட்டினம் நகராட்சியை நம் யாவரின் குழுப்பணி மூலம் தமிழகத்திற்கே... ஏன், இந்தியாவிற்கே முன்மாதிரி நகராட்சியாக்கிக் காட்டுவோம்...

வல்ல இறைவன் அதற்குத் துணை செய்வானாக...


இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா உரையாற்றினார். இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் (06, 11, 12, 15 ஆகிய வார்டு உறுப்பினர்களைத் தவிர) அனைத்து உறுப்பினர்களும், முன்னாள் தலைவியரான கே.எம்.இ.நாச்சி தம்பி, அ.வஹீதா ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த நகரின் அனைத்துப் பகுதி பிரமுகர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.







களத்தொகுப்பில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்.

படங்கள்:
செய்யித் இப்றாஹீம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்லதொரு தொடக்கம்...
posted by Mohamed Buhary (Chennai) [26 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12258

நகர்மன்றத் தலைவரின் உரைவீச்சு வரவேற்கும்படியாக இருப்பதுடன், தெளிவாகவும் உள்ளதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். அல்லாஹ் அவருக்கும் அவருடன் உள்ள ஏனைய உறுப்பினர்களுக்கும் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றிட அருள்வளம் பொழிவானாக! எனப் பிரார்த்திக்கிறேன்.

நகர்மன்றத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இதன் மூலம் அவர்களுக்கு பயன் ஏற்படும் என நம்புகிறேன்.

உங்களுக்கு வழங்கப்பட்ட இப்பொறுப்பு அல்லது இப்பதவி ஏக இறைவனால் அளிக்கப்பட்ட ’அமானத்’ (கையடைப் பொருள்) என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இப்பதவி உங்களை அலங்கரித்துக்கொள்வதற்காக அல்ல. மாறாக, மக்களை நீங்கள் அலங்கரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே...

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எவ்வாறு மக்கள் பணியாற்றினார்கள் எனும் வரலாற்றை நீங்கள் அவசியம் படித்துணர வேண்டும். அவற்றில் நமக்கு ஏராளமான படிப்பினைமிகு சம்பவங்கள் உண்டு. உண்மையை உரத்துப் பேசினார்கள். பொய்மையைப் பொசுக்கித் தள்ளினார்கள்.

நீதி, நேர்மை, நியாயத்திற்காக சற்றும் தயங்காமல் முழங்க வேண்டும். அது நமக்கு நெருக்கமானவர்களாக இருப்பினும் சரியே... அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

ஒரு சாரார்மீது (உங்களுக்கு) ஏற்பட்ட பகைமையானது, எல்லை மீறி நடப்பதற்கு உங்களை ஒருபோதும் தூண்டிவிட வேண்டாம். நன்மைக்கும் இறையச்சத்துக்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள். பாவத்துக்கும் எல்லை மீறலுக்கும் துணைபோய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். (அல்குர்ஆன், 5:2)

இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செயல்படுவோராகவும் நியாயத்தின் சாட்சிகளாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை, (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்தங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன், 5:8)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை நீங்கள் மக்கள் பணியாற்றுவதற்குத் தாரக மந்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

மக்கள் பணியில் ஈடுபடுகின்றபோது உங்களை புகழ்ச்சிகளும் வந்தடையும். இகழ்ச்சிகளும் வந்தடையும். அவற்றை மிக நிதானமாகவும் சாதுர்யத்தோடம் எதிர்கொள்ள வேண்டும். புகழில் மயங்கிவிடாதவாறு நடந்துகொள்வது மிகவும் முக்கியமானதொரு அம்சம். போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மெத்தனப் போக்கும் வரவேற்கத் தக்க செயலன்று.

”நம் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், நம் வாக்கிலும், நம் செயலிலும் அது பிரதிபலித்து, அதன் மூலம் நமதூருக்கு நல்ல வழி உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை” என்ற தங்களது உரை வீச்சில் உள்ளதோர் அம்சம். அல்லாஹ் அதை கபூல் செய்வானாக.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாக வேண்டுமென்றால் ‘இறையச்சம்’ எனும் தக்வா மேலோங்கியதாக இருக்க வேண்டும். இறையச்சத்தை மேலோங்கச் செய்ய அடிப்படைக் கடமைகளான வணக்க வழிபாடுகளிலிருந்து ஒருபோதும் நழுவிவிடக் கூடாது. அவற்றில் நழுவுகின்ற உள்ளங்கள், நிச்சயமாக இறைவனால் உதாசீனப்படுத்தப்பட்ட இறையுதவி கிட்டாத உள்ளங்களாக மாறிவிடும். இது மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.

கடந்த கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும்போது, ”அவர்கள் பகலில் குடிமக்களுக்காக உழைத்தார்கள்; இரவில் இறைவனை நினைத்து அழுது தொழுதார்கள்“. அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கிட்டியது.

வரலாறு படைத்த மனிதர்களின் வரலாறு நமக்கு ஒரு பாடத்தை எடுத்துச் சொல்லும்: சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர் என்பது வெற்றி வரலாற்றுக்குச் சொந்தமானவர்களின் பின்னணி.

நீங்கள் தேர்தல் காலங்களில் சந்தித்த சோதனைகளைவிட இனி எதிர்வரும் காலங்களில் நகர்மன்றத் தலைவராக பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும். அந்த சோதனைகளையெல்லாம் சாதனைக்கான படிக்கட்டுகளாக எண்ணி, அதை பொறுமையுடன் எதிர்கொள்ள பழக வேண்டும்.

உங்கள் வாழ்வில் இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க இறையை அதிமதிகம் நினைவுகூர்வதுடன் இறைமறையுடனும் உங்கள் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் இம்மைக்கும் வெற்றி மறுமைக்கும் வெற்றி.

رَبَّناَ آتنا فى الدنيا حسنة وفى الآخرة حسنة وقنا عذاب النار

வாழ்த்துகளுடன்
முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by Abu Misbah (Jeddah) [26 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12260

ஒரு பொறுப்புள்ள நல்ல தலைவியின் பேச்சு, சிந்திக்க தூண்டிய கருத்துக்கள். உங்களை விமர்சித்தவர்களையும் விமரிசையாக கொண்டாட வையுங்கள்.

தலைவி அவர்களுக்கு மக்களே நீங்களும் ஒத்துழைத்தால் நல்ல முன்மாதிரியான நகராட்சியை தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். வரவேற்போம் வாழ்த்துவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் தலைவி அவர்களுடைய எல்லா நற்காரியங்களிலும் அருள் பாலிப்பானாக. ஆமீன்.

குளம் அஹமது முஹியதீன்
ஜெத்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by SUAIDIYA BUHARI (chennai) [26 October 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 12262

assalamualikam

அருமையான & தெளிவான உரை, தலைவி சொன்னது போண்டு மக்களாகிய நாமும் டீம் வொர்க் பண்ணுவது அவசியம், என்பதை முதலில் நாம் மனதில் உறுதி எடுகவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [26 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12268

நானும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். மிகவும் அருமையான பேச்சு.

சகோதரி அவர்களின் அனைத்து பிரச்சார பேச்சுகளையும் கவனித்ததில் ஒரு தேர்ந்த, தெளிவானா, வள.. வளா..கொல.. கொலா என்று இல்லாமல், நிதானமாக, விவரமாக இருந்தது. எங்குமே நிதானம் தவறவில்லை. (ஒரு இடத்தில மட்டும் பேசும் போது சற்று கண் கலங்கினார்கள்).

பிரச்சார நேரம் முடியும் தருவாயில் கூட நாங்கள் டென்ஷன் ஆனோமே தவிர, அவர்கள் சற்றும் டென்ஷன் ஆகாமல் நச்சு என்று பேசி முடிப்பார்கள்.

பாராட்டுக்கள் உங்களின் சூளுரைக்கு, இதே பாராட்டுக்கள் உங்களின் துடிப்பான சேவைக்கும் தொடர பிராத்தனை செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12273

அழகான கருத்துக்கள் வரவேற்கத்தக்க அணுகுமுறைகள் இவை அனைத்தும் ஆழமாக செயல்படும் போதுதான் அல்லது ப்ராக்டிகல் ஆகும்போதுதான் காயல்மா நகரம் அதன் தனிதன்மையை அடையும்.

அப்போதுதான் காயல் மக்கள் மட்டுமல்லாது மற்ற நகர மக்களும் அதன் அருமையை உணர்ந்து சிறந்த தலைமையுடன் கூடிய ஒட்டு மொத்த டீமையும் ஏன் காயலையே பாராட்டுவார்கள்.

அந்த சிறப்பான result யை, வெற்றியை அடைய உயர்ந்த குறிகோளுடன் கூடிய சிறந்த தலைமையும் அதை செயலாற்ற கூடிய உயர்ந்த உள்ளங்களான அணைத்து உறுப்பினர்களும் நமக்கு கிடைத்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகது.

இவர்களுடன் நன்மக்கள், பொதுநல விரும்பிகள், அனுபவத்தால் அறிவால் பெரியவர்கள் ஆகிய அனைவரும் ஆதரவு கொடுத்து பொது நலம் என்ற ஒரே குறிக்கோளுடன் அல்லாஹ்வை பயந்து ஒற்றுமையுடன் செயல் பட்டால் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் தேவைகளையெல்லாம் நிறைவேற்றி அருள்புரிவான்.

நன்மையை நாடுபவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் நல்லதையே நாடுவான். எனவே நாம் அனைவரும் ஒத்துளைபோமாக. நிச்சயம் ஓன்று பட்ட ஊழலற்ற காயலை காணுவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by D.SEYED ISMAIL (HONGKONG) [27 October 2011]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 12274

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் புகாரியின் கமெண்ட் மக்கள் ஊழியர் அனைவருக்கும் சிறந்த அறிவுரை.

அனைத்து மக்களும் அறிவதற்கு நல்லதொரு விழிப்புணர்வு செய்தியாக நாளை ஜூம்மாவில் நோட்டீஸ் ஆக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by D.SEYED ISMAIL (h) [27 October 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 12275

fyi - dear amin,

assalamu alaikum - re : my earlier comment for this news. just to be more clear pls. update with this revised one. i have also informed relevant people to print this news as notice in tmrw. jumma.

regards / d.s.ismail

அஸ்ஸலாமு அலைக்கும்

நகர்மன்றத் தலைவி ஆபிதாவின் பேச்சு மற்றும் சகோதரர் புகாரியின் கமெண்ட் அனைத்து மக்கள் ஊழியருக்கும் அவசியமானது.

தலைவியின் உரையை அணைத்து மக்களும் அறிவதற்காக ஒரு விழிப்புணர்வு செய்தியாக நாளை ஜூம்மாவில் நோட்டீஸ் ஆக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

இந்த குழுவின் பணி ஊருக்கும் அனைத்து மக்களுக்கும் தேவையான வளர்ச்சிப்பணியாக அமைய வாழ்த்துக்கள்.

இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by Aarif O.L.M (Lanka) [27 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12283

Br. Buhary நல்லவைகளை எடுத்து வைத்தீர்கள்.

நீதி, நேர்மை, நியாயத்திற்காக சற்றும் தயங்காமல் முழங்க வேண்டும். அது நமக்கு நெருக்கமானவர்களாக இருப்பினும் சரியே... அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

யாவும் முடிந்த பிறகு Who is the Black Sheep என்று ஒவ்வர்தறையா சந்தேகம் கொண்டு பார்ப்பதை விட முன்பதாகவே தான் யாவரையும் அவர்களது கல்வி அறிவு, திறைமை, நடைமுறை, ஆற்றல், செயல்பாடு மற்றும் உண்டான தகமைகளை இனம் கண்டு உறுதியுடன் தீர்மானங்கள் எடுத்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

We Know U R Innocent , BUT.........

Your initial step was Excellent with the elders. It will take time for them to Cool Down. So do not hesitate to get parently advices from them also.

ஆபிதாவே ஆ பிதாக்களையும் அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்,,,,, ஐந்தாண்டு காலத்தை தங்களுக்கும், காயல் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கும் சிறப்பாக்கி செளிப்பாக்கியருல்வானாக ஆமீன்

Keep it up AAABIDAAA

Wassalaam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [27 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12306

வாழ்த்துக்கள் காயல் நகர் மன்ற தலைவியரே!

தங்கள் உரையில் கோடிட்டு காட்டியதை போல் கூட்டாக செயல் பட்டு நம் நகரை எல்லா விசயத்திலும் முன்னேற்ற வல்லோன் துணை புரிவானாக - ஆமீன்

தாங்கள் உதாரணம் காட்டிய நீர்தேக்க தொட்டிகளை முதலில் போர்கால அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டும்.

இது நடைபெற்றால் நமது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவ மனைகளை நோக்கி படையெடுப்பது குறையும் என்பது திட்டவட்டம்.

தங்கள் தலைமயிலான அமைச்சரவை கூட்டாக செயல் பட்டு இதனை முதலில் நிறைவேற்றுவீர்கள் என்ற நல்ல எதிர்பார்ப்புடன்
- சாதிக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by P.S.ABDUL KADER (jeddah) [27 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12320

நகர்மன்றத் தலைவி பேசியதை kayal tv போட்டு காட்டினால் என்னை போல் வெளிநாட்டவர் கண்டு அறிவர்., காண ஆவலுடன் இருக்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by Jahir Hussain VENA (Bahrain) [27 October 2011]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 12322

Dear Respected Chairman,

We hope and all your dreams will convert to Reality...

Jahir Hussain VENA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by Shahul Hameed (Al Jubail) [29 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12408

Assalamu Alaikkum.

We appreciate the chairman's dreams. Insha Allah, Allah will help you to implement your system.

During your period, kindly develop Green Kayal Town ( GKT) and by putting your hard work on Eradication of water problems and electricity.

Request put your milestone in Kayal History.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காணவில்லை! (?!)  (27/10/2011) [Views - 4731; Comments - 30]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved