Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:50:34 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7442
#KOTW7442
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 27, 2011
காணவில்லை! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4728 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பல நாட்களாக காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த 23.10.2011 அன்று அதிகாலையில் கனமழை பெய்தது. அதனையடுத்து நகர வானிலை குளிர்ச்சிமயமானது.

இந்நிலையில், நேற்று (24.10.2011) இரவு 09.00 மணிக்கு சாரலில் துவங்கி, நேரம் செல்லச் செல்ல கனமழையானது.

நள்ளிரவிலும் விட்டு விட்டுப் பெய்த மழை, 25.10.2011 அன்று காலை 09.30 மணி வரை நீடித்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் அன்றிரவு 09.00 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. நள்ளிரவு முழுக்க பெய்த மழை 26.10.2011 (நேற்று) காலை 09.30 மணிவாக்கில் நின்றது.

மீண்டும் நேற்று மாலையில் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்தது. இரவு கனமழையாக உருவெடுத்து, நள்ளிரவு முழுக்க மழைபெய்து, இன்று காலை 07.45 மணிக்கு நின்றது.

மழை பெய்யத் துவங்கிய 23.10.2011 தேதி முதல் நான்கு நாட்களாக சூரியனைக் காணவில்லை.

பெய்த மழை காரணமாக நகரின் தாழ்வான் பகுதிகளில் குளமாகவும், இதர பகுதிகளில் தேக்கமாகவும் மழை நீர் தேங்கியுள்ளது.

காட்டு தைக்கா தெரு தருவை பகுதியில் குடிசைகள் நீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளன. 26.10.2011 அன்று காலையில் (நேற்று) பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் பின்வருமாறு:-






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காணவில்லை! (?!)...
posted by சாளை நவாஸ் (singapore) [27 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 12278

இப்படி மொட்டையா காணவில்லைன்னு போட்டா எப்படி? தெளிவா சொல்லனும்ல. நானும் பதறி அடிச்சு தொறந்து பார்த்த சூரியனை காணவில்லையாமே!!! அங்கே அங்கே ஆறு மாசம் சூரியனை பார்க்காம இருக்கிராய்கிய, பெருசா சொல்லவந்துடாப்லே. பரவாயில்லை நமக்கும் மதுரை தமிழ் வருதுல்லா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இந்த மகிழ்ச்சிக்கு அல்லாஹ் ஒருவனே காரணம்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12281

புகை படத்தை பார்க்க பரிதாமாக தான் உள்ளது இவர்களின் கஷ்டத்தையும் சிரமத்தையும் இறைவன் சரி செய்வானாக.. ஆமீன்..

பல மாதமாக நமது ஊரில் வெப்பத்தின் தாக்கம் மிக கொடுமையாகவும் அதனால் பூமி சூடனதால் அம்மம் போன்ற பல நோய்கள் பரவலாக ஊரில் நடமாடியது....!

வயதில் மூத்த பெரியவர்கள் வீதியில் செல்லும் போது மயக்கம் ஏற்பட்டு ஆட்டோவில் ஏற்றி இல்லம் அனுப்பும் சம்பவம்களும் நடந்தன...!

நிலத்தடி நீர் இல்லாமல் தண்ணீருக்கு மிக தட்டுபாடான சூழ்நிலை உருவாக கூடிய காலத்தை நோக்கி நமது ஊரின் நிலைமை சென்று கொண்டு இருந்தன...!

அல்லாஹுவின் பெரும் கிருபையால் தற்போது மூன்று நாட்களாக இதமான சாரலுடன் மழை பெய்து வருவதால் பூமி குளிச்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் மேல பெருகிவருவது என்னை போன்று பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

இந்த மகிழ்ச்சிக்கு அல்லாஹ் ஒருவனே காரணம்...

ஊரில் தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் அணைத்து மக்களும் மகிழ்ச்சியாக ஊரில் வாழ நாம் அனைவர்களும் இறைவனிடம் துவா செய்வோமாக... ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காணவில்லை! (?!)...
posted by Zainul Abdeen (DUBAI) [27 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12282

இவிங்க எப்போவுமே இப்படித்தான் , எதாவது குதர்க்கமா தலைப்பு இடுவங்க .

காணவில்லை என்றதும் நானும் தேர்தலுக்கு அப்றோம எதாவது அமைப்பு , சங்கம் , அப்படி இப்படி என்று ஏதோ நினைத்துவிட்டேன் ...

காயல்டாட் காம் உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையா????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காணவில்லை! (?!)...
posted by Umar Rizwan Jamali (Singapore) [27 October 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 12284

காயலில் மட்டுமல்ல சிங்கையிலும் தான் காணவில்லை!?

இங்கும் பல நாட்களாக நல்ல மழை

அங்கு மழை பெய்ததால் சூரியனை...

இங்கு மழை பெய்த தண்ணீரை...

கவலை வேண்டாம்.
அது தானாக மீண்டும் உதிக்கும்.

வீணாக அதை தேடுவதை விட்டு விட்டு
கட்டிய தண்ணீர் ஓடுவதற்கு வழி செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காணவில்லை! (?!)...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok - Thailand ) [27 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12285

அஸ்ஸலாமு அழைக்கும்

இது எல்லாம் ஓவரா இல்லை,

ஆபீஸ்ல கொஞ்சம் வேலைய இருதேன் ,

காணவில்லை டூ செய்தியை செய்தி ரொம்ப அவசரமா தொறந்து பார்த்த , சூரியனை காணவில்லை டூ இருக்கு ,

Seyed Mohamed
Kayal Ikiya Peravai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காணவில்லை! (?!)...
posted by சாளை S. I. ஜியாவுதீன் (அல்கோபார் ) [27 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12286

ஆரம்புச்சுட்டாங்கய்யா....

அதான் மக்கள் சூரியனை துவைத்து, மஞ்சள் துண்டு போட்டு மூடி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டனவே. இலை தான் துளிர் விட்டுக்கொண்டு இருக்கின்றது.

ஆமாங்க.. தரவை குளத்தை தான் பிளாட் போட்டு விட்டாச்சே.. அப்புறம் தண்ணீர் கட்டுது, வீடு மூழ்கி விட்டது என்று புலம்பி என்ன பயன். இயற்கையுடன் விளையாடினால் இப்படிதான் நடக்கும். மழை நீர் எங்கு தான் செல்லும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காணவில்லை! (?!)...
posted by ரியாஸ் (Al Ain, UAE) [27 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12288

அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்,

காணவில்லை என்று சொன்னதும் நான் பயந்துவிட்டேன். காணவில்லை என்று சொல்லுவதை விட தெரியவில்லை என்று சொல்லி இருந்தால் அதன் பொருள் மெய்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கருணாநிதியும் இதை தான் தேடிட்டு இருக்காரு ....
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [27 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12291

அட போங்கபப்பா தலைப்பை பார்த்து என்னவோ ஏதோனு பதறி ஓபன் பண்ணினா.....

சூரியனை காணமாம் ....

தமிழ் நாட்டுல கருணாநிதியும் இதை தான் தேடிட்டு இருக்காரு ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காணவில்லை! (?!)...
posted by OMER ANAS (DOHA QATAR) [27 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12292

ஏற்க்கனவே பயந்து போய் இறக்கிறோம்!!! அப்பாஸ் வீட்டு ஆட்டை காணோம் என்று! இப்ப நீங்க வேறு சூரியனை காணோம் என்று சொல்றீங்கோ!

அதுதான் காணாம போய் குறைய மாசமாச்சே இப்ப காணாம போனதுன்னு சொல்றீங்களே? இப்படி குழப்பாதீங்கோ அட்மின்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. படிப்பினை மலை !!!!
posted by Aarif O.L.M (Lanka) [27 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12294

Br.Salih,,, Nice Heading !! நானும் என்னமோ ஏதோன்னு நினைத்துதான் கிளிக் செய்தேன் ...

இதில்,,, தலைவி ஆபிதா அவர்களே உங்கள் முதல் கட்ட வேலையை ஆரம்பியுங்கள், செல்வந்தர்களே நேசக்கரம் நீட்டி சதகா எனும் தருமம் செயுங்கள், பாதிக்கப் பட்ட சஹோதர சஹோதரிகளே சபூர் எனும் பொறுமையை கடைபிடியுங்கள் என்ற செய்தியை மிக சூசகமாக எடுத்து வைத்துள்ளீர்கள்.

Also , அல்லாஹ்விடம் நம் குழந்தைச் செல்வங்கள் " allahummaskinal gaitha warrahmatha ..... என்ற துஆவை கேட்டிருப்பார்கள் போல !!!

கரணம்,,, நமது பெரியவர்கள் ?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நல்ல கிளப்புறாங்க ......பீதியை..........
posted by musthak ahamed (mumbai) [27 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 12300

நானும் இப்ப உள்ள சூழ்நிலையை நினைத்து வேறு என்னவெல்லாமோ கற்பனை செய்து விட்டேன்.

நல்ல கிளப்புறாங்க ......பீதியை..........

கொஞ்ச நாளைக்கு முன்பு காயல்பட்டனம் கடற்கரையில் கலங்கரை விளக்கம் கட்டுன ஆட்கள் தானே ..............

கலக்குங்க.......... கலக்குங்க................

அப்படியே நிஜமான காணவில்லை செய்தியையும் தந்தால் நன்றாக இருக்கும். 2006 இல் ஹீரோ 2011 இல் ஜீரோ.......... கதையையும் செய்தியாக தந்தால் 2011 ஹீரோக்களுக்கு பாடமாய் இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காணவில்லை! (?!)...
posted by Mohamed Ali and Amanullah (Kuwait) [27 October 2011]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 12301

என்ன மொட்டையா காணவில்லை என்று போற்று இருகிறீங்க பதறி போய் விட்டேன்.

தற்போது தான் உள்ளாட்சி தேர்தல் நடந்து, மழை பெய்ந்து ஓய்ந்த மாதிரி இருக்கும் நேரத்தில் இப்படி காணவில்லை என்று போட்டு பீதியை கிளப்பி விட்டுடீங்க.

தேர்தலில் தோற்றவர்களோ, இல்லை ஒத்துழையாமை இயக்கத்தில் உள்ளவர்களோ ''அப்ஸ்கன்ட்'' ஆகி விட்டார்களோ என்று பயந்து போய் விட்டேன்.

தெளிவா போடுங்கப்பா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. கண்ணாம் பூச்சி ஏனடா.....? என் கண்ணா...?
posted by zubair (riyadh) [27 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12303

அஸ்ஸலாமு அலைக்கும். அட்மின் அவர்களே...... இதான்னா.... மேட்டரு. காணவில்லை என்றதும் நானும் பயந்து போயி நம்ம அட்மினுக்கு என்னமோ... , ஏதோண்டு நினைத்து டாக்டரிடம் போக சொல்லலாம்னு நினைத்தேன்.

இது எல்லாம் அவன் செயல் சுபுஹானல்லாஹ்.......
வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காணவில்லை! (?!)...
posted by abubacker (chennai) [27 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 12309

என்னது சூரியனை காணோமா? வடிவேலு கிணறு காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணது போல ஒரு சூப்பர் கம்ப்ளைன்ட் பண்ணுங்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காணவில்லை! (?!)...
posted by Noohu Amanullah (Makkah) [27 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12310

ஆமா எல்லோரும் குசும்பு பண்றீங்க கருத்துக்கள் கொடுத்து காயல்பட்டணம். காம் குசும்பு தனம் இதில் தெரிகிறது.. நம் ஊருக்கு இந்த மழை பிரயோஜனமான மழையாக அல்லாஹ் ஆக்கி அருள்பாலிப்பானாக!ஆமீன்

தாருத்திபியான் ஸாலிஹ் காக்காவின் குசும்பும் ஆரம்பம் ஆகி விட்டது..உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சிது ஒரு வகையா..

உண்மையை பளிச் பளிச் என்று எடுத்து சொன்ன காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்கு மிக்க நன்றி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காணவில்லை! (?!)...
posted by Umar Rizwan Jamali (Singapore) [27 October 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 12311

காயலில் மட்டுமல்ல சிங்கையிலும் தான் காணவில்லை

இங்கும் சிலநாட்கள் நல்ல மழை

மழையால்...

அங்கு காணாமல் போனது சூரியன்

இங்கு காணாமல் போனது தண்ணீர்

நேரத்தை அதை தேடி வீணடிக்காமல் கட்டிய தண்ணீர் ஓட வழி செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. எந்த சூரியனை?
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [27 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12312

தாங்கள் சூரியனை காணவில்லை என இரட்டை அருத்தத்தில் எழுதி யுள்ளீர் களோ?

இரண்டு சூரியனும் நமக்கு குறிப்பாக நம்மூருக்கு கட்டாயமுங்கோ! சூரியன் சுட்டாலும் மாலையில் மறைந்து இதம் தரும்.

நாம் இதம் தரும் என நினைத்தது மூன்று மாதத்திலேயே நமக்கு அதன் சுய ரூபத்தை காட்டுதுங்கோ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஹய்யா...!!! ஆரம்பிச்சிட்டீங்களா?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [27 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12313

நீண்ட ஓர் இடைவெளிக்குப் பின் சாலிஹ் காக்காவின் குசும்பு(?)

காணவில்லை! (?!)

ஹய்யா...!!! ஆரம்பிச்சிட்டீங்களா?

இனி கொண்டாட்டம் தான்,கும்மாளம் தான்,கொய்யாலெ..!!!

-ஹிஜாஸ்மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காணவில்லை! (?!)...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [27 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12314

நவாஸ் அஸ்ஸலாமு அலைக்கும்... ஒன்னும் பயபடாதே ..ஒத்துரும் காணபோவல்லை.. ..நீ சிங்கப்பூர் ல காணபோவாமே பத்திரமா இரு..கொஞ்ச நாளா உண்ட எழுத்து சேட்டை அதிகம் ..அந்த சேட்டை தான் காண போயிருக்கு .. அந்த எழுத்து சேட்டை காண போறது தான் நல்லது...சும்மா தப்பா எடுத்துகுராதே ...ஒரு கலாய்ப்பு தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. துரித நடவடிக்கை
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [27 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12317

அஸ்ஸலாமு அலைக்கும்.. சூரியன் காண போனதெல்லாம் இருக்கட்டும்.. நகரில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை நகரமன்ற தலைவர் சென்று பார்த்ததாக அறிந்தேன்..நல்ல தொடக்கம்.....

இச்சமயம், முக்கிய நடவடிக்கை, இது பருவ மழையின் தொடக்கம் என்பதால், இப்போதே கொசு உருவாவது, இனவிருத்தி பண்ணுவதை தடுத்தால், கொசு இல்லாத காயல்.. அதன் தாக்கமான மலேரியா , சிக்குன்குன்யா மற்றும் டெங்கு இல்லாத ஆரோக்கியமான காயலை உருவாக்கலாம..

மூன்று ஆண்டுக்கு முன் ஊரில் சிக்குன்குன்யா பரவி , ஒற்றை புரட்டி போட்டதையும், அதன் விளைவாக இன்னும் பலபேர், முட்டு வழியால் அவதி படுவதையும் மறக்க முடியாது..இது தொலை நோக்கு கொண்ட நோய் தடுப்பு முறை.. ஆவன செய்வாரா நல்ல தலைவர் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காணவில்லை! (?!)...
posted by Shahul Hameed (Hong Kong) [27 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 12323

சூரியன் உதித்தால் தான் தண்ணீர் வத்தும். பார்க்கலாம் இன்னும் ஒன்று, இரண்டு நாட்களில்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காணவில்லை! (?!)...
posted by Salai Sheikh Saleem (Dubai) [27 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12324

நானும் என்னவோ ஏதோன்னுதான் நானும் பதபதைசுட்டேங்க!

ஆனால் சூரியனைக்கானோமாம் ! இந்த இரண்டு மூணு நாளைக்கே இப்படி பினாத்துகிறீர்களே ! பொறுங்கள் இன்னும் ஐந்து வருடங்களுக்கு

உதயசூரியனின் பார்வையிலே
இந்த தமிழகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே

ஆனால் ஒரு உண்மையை நாம் சொல்ல மறந்து விட்டோமே

நம்மிடம்:

ஒற்றுமையை காணவில்லை
சகோதரத்துவத்தை காணவில்லை
கலாச்சாரத்தை தொலைத்து விட்டு சீரழிவின் சிகரத்தை எட்டி பிடிக்க போட்டா போட்டி.

பெரியோர்களிடம்

சமத்துவத்தை காணவில்லை
சகிப்புத்தன்மையை காணவில்லை
சமுதாய பொறுப்பை காணவில்லை
மறை காட்டிய நல்லொழுக்கங்களை காணவில்லை
மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு முன்மாதிரியைக் காணவில்லை

இளைன்ஜர்களிடம் நம்பிக்கையை காணவில்லை
மாணாக்கர்களிடம் ஒரு உத்வேகத்தை காணவில்லை
பெற்றோர்களிடம் பொறுப்புகளை காணவில்லை
ஆலிம்களிடம் உண்மைகளை காணவில்லை
அவர்களிடம் அது காணவில்லை
இவர்களிடம் இதைக்கானவில்லை என்று
ஏன் முகத்தையே நான் இழந்து
என்னையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்

என்னிடம் எல்லாம் காணமல் போய்விட்டது என்ற அவநம்பிக்கை என்று என்னுள் காணமல் போகிறதோ

அன்று எல்லோரிடத்திலும் எல்லாம் இருக்கும்

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:காணவில்லை! (?!)...
posted by Vilack SMA (Siacun) [27 October 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 12325

ஸாலிஹ் காக்கா , கொஞ்சம் பதறித்தான் போயிட்டேன் போங்கோ !

இனிமே இபுடிலாம் செய்திய போட்டு ஜனங்கள பயமுருத்தாதியோ.

(அட வாப்பா சாலீஹு , சூரியன் வருது , போவுது , இதுக்கு போயி " காணவில்லை " " கண்டு புடிச்சுட்டேன்" ன்னு செய்தியா? நம்ம சிங்கப்பூர் " மண்ணின் மைந்தன் " ரொம்பத்தான் பயந்துட்டாறு பாத்தியலா ! )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காணவில்லை! (?!)...
posted by Riyaz Mohamed S H (Hongkong) [27 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 12326

அல்லாஹ் மிகப்பெரியவன்

இது காணவில்லை ஒன்றும் இல்லை, சில பெரியவங்களோட துஆவும், அவங்களோட வெளில சொல்ல முடியாத கஷ்டத்த இறைவன் நமக்கு இப்படி காட்டி இருக்கான்.

மேலும் பெரியவங்களோட துஆ அவங்களோட மதிப்பும் என்றென்றும் குறையாமல் இருந்து நமது காயலும் மிக சிறப்போடும் செழிப்போடும் இருக்க நாமும் துஆ செய்து பெரியவங்களோட ஒத்துழைத்து இருப்போமாக.

இந்த மழை என்னோடு படித்த நண்பர் Dr D . Mohamed Kizar Irsath சொன்னது போல நம் மக்கள் கவனத்தோடு செயல்பட்டு நமது ஊருக்கும் நம் மக்களுக்கும் பயன் உள்ளதாக வல்ல நாயன் ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. கண்டுபிடித்த சந்தோசம் ...
posted by musthak ahamed (mumbai) [27 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 12341

எவ்வளவு கேலிகள்........ எவ்வளவு கிண்டல்கள்......... எவ்வளவு உற்சாகங்கள்................

கொஞ்ச நாட்களாக இருந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்றிய சீதோஷ்ண நிலை.

சந்தோசமாக இருக்கிறது
அல்ஹம்துலில்லாஹ்..................... கக டாக்டர் கிசாரை எங்கள் பழைய கிசாராய் பார்த்தது _கலாய்ப்பு - சந்தோசம். -இன்னும் நிறைய குசும்புகள், சேட்டைகள், கலாய்ப்புகள், நிறைய டாக்டரிடம் இருக்கிறது.... அவர் கொஞ்சம் முயற்சித்தால் மருந்து இல்லாமலே பல நோய்களை குணப்படுத்திவிடுவார். டாக்டர் பழைய கடி ஜோக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.......... மருந்துகளுக்கு இடையில் மறந்து விட்டீர்களா. கக எஸ்.கே . ஷாலிஹு, கடைசி வரைக்கும் அந்த பேகில் என்ன இருக்கிறது என்று சொல்ல மாட்டீர்கள் அப்படிதானே. வேறு யாராவது அல்லது காயல்பட்னம்.காமாவது கண்டுபிடித்து வெளியிட்டால் புண்ணியமாய் போகும். கக இன்னும் பல்வேறு சந்தோசமான சூழ்நிலைகளை வல்ல அல்லாஹ் நம்மிடையே நித்தியமாய் உருவாக்கிதரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. ஐயோ... ஐயோ......ஒரு நிமிஷம்..
posted by atc abubacker (Dubai) [27 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12349

என்னப்ப இது நான் தலைப்ப பார்த்த உடன் என்னமோ.. ஏதோன்னு பதறிபுட்டேன். சின்ன புள்ள தனமாலோ இருக்கு.. ஐயோ.. ஐயோ...

அரசியல்ல MLA தொகுதி பக்கம் காணம போறது சகசம்,

சூரியன இங்கே காணமமே... நல்லதுதானே.. கொஞ்சம் கரண்ட் பில்லாவது கம்மியா வரும்பா... எப்புடி...???

COOLA இருக்கும்ல A/C தேவை படாது...

ஸாலிஹ் kaka சூரியன கருணாநிதி மறைச்சி வச்சிபாரு.. அவர்கிட்ட கேளுங்க..

அப்படி இல்லேன்னா News Paperla ஒரு விளம்பரம் கொடுத்துடுவோமா...

சும்மா சொல்ல கூடாது தலைப்பு... ஐயோ.... ஒரு நிமிஷம்... அப்படின்னு கொடுத்து இருக்கலாம்.. இன்னும் கொஞ்சம் பதறி இருப்போம்.

இறைவன் தருகின்ற மழை நல்ல மழையாக, செழிப்பான மழையாக இருக்க துஆ செய்வோம். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. குளிர்விக்குமா?
posted by shahul hameed sak (malaysia) [27 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 12351

உச்சி வெயில் மண்டையை பிளந்தது,
ஊற்றும் வானம் உடலை குளிர்வித்தது,

'சிலருக்கு' உள்ளத்தையும் சேர்த்து குளிர்விக்குமா??????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:விசயத்திற்கு வருவோம்
posted by OMER ANAS (DOHA QATAR.) [27 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12353

அஸ்ஸலாமு அழைக்கும்!!! உற்ச்சாகத்தில், எனது மகனார், உமர் ரிழ்வான் அவர்களும் கருத்தை பதிவு செய்திட ஆரம்பித்து விட்டார். ஆனாலும், சிந்திக்க பதிந்து உள்ளார்!!! பாராட்டுக்கள்!

அது போல் மருத்துவர் கிஸார் அவர்களும் தனது பதிவில் மூட்டு வலி குனியாவை சொல்லி இருக்கின்றார்! உண்மைதான். இதற்க்கு நம் ஊரின் சுகாதாரம் ஒரு கேள்விக் குறி??? ஒரு காலத்தில் இதை விட அதிக மழை பொழிந்தும், ஏன் தெருவிலேயே மீன் பிடித்தும் வால் தவக்களை பிடித்தும் இருக்கிறோம். ஆனாலும் இந்த கொடிய நோய் நம்மை தாக்கியதில்லை. காரணம் பஞ்சாயத்தில் இருந்து தினமும் மருந்து தெளிக்கப் படும்.

ஆனால் அது இப்ப பதிவேட்டில் எழுதி சுரண்டப் பட்டதே தவிர செயல் பட வில்லை. இனி அது நடக்கக் கூடாது. எனக்கு ஒரு ஆலோசனை உள்ளது. அதாவது சவுதியில் AL HOTY என்ற கம்பெனியில் PEST CONDROL உள்ளது இதில் நம் பிள்ளைகள் வேலை செய்கிறார்கள். அவர்கள் மூலம் இது சம்பந்தமான EQUP களை குறைந்த விலைக்கு வாங்கி, வேலை அற்றோரை வைத்து புகை மூட்டம் மற்றும் சொட்டு மருந்து மூலம் நாம் இயற்கையின் அழிவில் இருந்து நம் மக்களை காப்பாற்றலாம்! இதற்கு ஆகும் சலவை எல்லா மன்றங்களும் பங்கு போடலாம்!!! என் கருது சரிஎன்றால் செயல் வடிவம் தாருங்கள்!!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. யாரை.........
posted by Noohu T (Maana Paana) [28 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12374

பாத்து பேரை வையிங்கப்பா , தலைப்புக்கு

நானும் யாரோடே பிள்ளையிங்க ஏதும் கனப்போச்சோ என்று பதரிவிட்டேயன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:காணவில்லை! (?!)...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12621

"சூரியன் போற்றுத்ம் சூரியன் போற்றுதும் "..."மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " எனபது சிலப்பதிகார பாடல்வரிகள். சூரியனை போற்றியபிரகுதான் மாமழையைபோற்றுகிறார் இளங்கோவடிகள்.

மழையும் வெயிலும் மனித வாழ்வுக்கு ஆதாரங்கள். மழை பெய்தும் கெடுக்கும். பெய்யாமலும் கெடுக்கும் ஏழைகளின் வாழ்வில் மழை தரும் துன்பங்கள் சில. அது நம் வருத்தத்திற்கு உரியதே. என்றாலும் மழை தரும் இன்பம் எல்லோருக்கும் பொதுவானது. எனவே இங்கு காணாமல் போனது சூரியன் மட்டுமல்ல. மழை இன்மையால் மக்களின் மனங்களில் இருந்த கசப்பு புழுக்கம் வெக்கை இவை போன்ற எல்லாமும்தான். வாழ்க.. மழை. வெல்க அது தரும் சந்துஷ்டி ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3602; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved