Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:58:55 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7439
#KOTW7439
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 26, 2011
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்! நகர்மன்ற புதிய அங்கத்தினருக்கு வாழ்த்து!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3001 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்ற பொதுக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழு 21.10௦.2011. வெள்ளியன்று சகோதரர் பாலப்பா அஹ்மதுவின் இல்லத்து நீண்ட உள்ளரங்கில் மக்ரிப் தொழுகைக்குப்பின் நடந்தேறியது.

சகோதரர்.நஹ்வி அபூபக்கர் அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைக்க - இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் பாலப்பா அவர்களின் பாலகன் யூசுப் சாஹிப்அழகான முறையில் வரவேற்புரை நிகழ்த்தி வந்தோர் அனைவரையும் வியக்க வைத்தார்.





தலைவர் முன்னுரை:


அடுத்து தலைவர் முன்னுரையில் டாக்டர் . இத்ரீஸ் அவர்கள் இந்நாள் வரையில் நற்பணி மன்றம் செவ்வனே நடந்தேற ஒன்றுபட்ட கருத்துக்களுடன் உறுதுணையாய் நின்ற அனைத்து சகோதரர்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.,.மேலும் சிறப்பு விருந்தினராக மலேசியாவில் இருந்து வந்து கலந்து கொண்ட மலேசிய தமிழ் மேம்பாட்டு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாப். அன்வர் ஹுசைன் அவர்களுக்கும், நம் இஸ்லாமிய சமுதாய முன்னேற்றத்துக்காக தன் இள வயது முதல் இடையராது பாடு பட்டு வருபவரும் நம் தலைவர் டாக்டர் அவர்களின் பால்ய நண்பருமாகிய ஜனாப் இப்னு சவூத் அவர்களுக்கும நன்றியை தெரிவித்துக்கொண்டு , மன்றம் தோன்றிய நாள் முதல் இன்று வரை நடந்தேறிய பணிகள் குறித்து அவர்களுக்கு அறிமுக உரையாற்றினார்.

ஜனாப் நூஹு ஆலிம் அவர்களின் பேருரை:


இறை மறையில் என்னென்ன நற்காரியங்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகள் ..மற்றும் ஏழை மக்களின் நலன் காப்போருக்கு இறைவன் அளிக்கும் எண்ணற்ற பரிசுகளும் பலன்களும் குறித்து அழகாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தியது நெஞ்சத்தில் நிம்மதியையும் நெகிழ்வையும் உண்டாக்கியது.

பொதுச்செயலாளர் உரை:
அடுத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் , உதவி கேட்டு வந்த மனுக்களைப் பரிசீலித்து அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்தும், நம் மன்ற உறுப்பினர்களில் கூடுதல் ஊதியம் பெரும் அங்கத்தினர்கள் பங்கு கொண்டு ""ஸ்பெஷல் ப்ராஜெக்ட்""என்ற ஒரு விசேஷமான அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக நம் காயல் மக்களில் நலிந்தோருக்கு இது நாள் வரை ஆற்றியிருக்கும் பணிகள் ( கல்வி மேம்பாடு,மருத்துவப்பணி ,பழுதடைந்த வீடுகள் செப்பனிடுதல் ) குறித்தும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார் .

சிறப்பு விருந்தினர் உரை:
இந்நிகழ்ச்சியில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட ஜனாப். அன்வர் ஹுசைன் அவர்களது உரையில் நம் மன்றத்தின் பணிகள், செயல்பாடுகள் குறித்தும் எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைக்குளருபடிகள் இல்லாத உள்ளன்போடு கூடிய உறுப்பினர் அனைவரின் ஒற்றுமை குறித்தும் மிகவும் பாராட்டி பேசினார்.. மேலும் நம் மன்றத்தின் சேவைகள் தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்தார் .



அடுத்து சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஜனாப் இப்னு சவூத் அவர்கள் , நம் மன்றத்தின் சேவைகள் குறித்து பாராட்டிப் பேசியதுடன் , நம் சமுதாய மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பலதரப்பட்ட கல்வி உதவித் தொகைகள் குறித்து விவரமாக எடுத்துரைத்து இது பற்றிய விழிப்புணர்வை நமதூர் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமும் அவசரமுமான கடமை என்று கேட்டுக்கொண்டார் .



நகர்மன்றத் தலைவிக்கு வாழ்த்து:
நடைபெற்று முடிந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி,.ஆபிதா சேக் அவர்களுக்கும் மற்றும் நகரின் 18 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நம் தம்மாம் காயல் நற்பணி மன்றத்து ஒட்டுமொத்த உறுப்பினர்களின் உளங்கனிந்த உவகை மிகுந்த நல்வாழ்த்துக்களை டாக்டர்.இத்ரீஸ் அவர்கள் தெரிவித்ததோடு தேர்தல் களத்தில் குதிக்குமுன் அறுதியிட்டுக்கூரிய அத்தனை நற்பணிகளையும் உறுதியுடன் நிறைவேற்றித்தந்து நம் காயல்பதியின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் அதற்கான உள்ள நலத்தையும் உடல் பலத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் வானாக என்ற துஆவுடன் தன் உரையை முடித்தார்... .

மருத்துவ சந்தேகங்கள்:
அடுத்து நடைபெற்ற மருத்துவ கேள்வி பதில் நிகழ்ச்சியில் நம் மன்ற உறுப்பினர்களின் மருத்துவ சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு ( சர்க்கரை வியாதி,இரத்த அழுத்தம் கொழுப்பு கூடுதல்.,குடல் புண் ) தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் டாக்டர்.இத்ரீஸ் அவர்கள் விளக்கம் அளித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்....

உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பின் தேநீர் சிற்றுண்டிகள் சுவையான கறிக்கஞ்சி வழங்கப்பட்டது . இறுதியாக தலைவரின் நன்றியுரையில் திருமறையை ஓதி முடித்த அருமை மகனாரின் மகிழ்ச்சியினைக்கொண்டாடும் விதமாக கறிக்கஞ்சி வழங்கிய சகோ.அப்துல் பாரி , திருமணம் முடித்த களிப்பினை உணர்த்த இனிப்பும் காரமும் பகிர்ந்த சகோ.செய்யது அப்பாஸ்...மன்ற நிகழ்ச்சிகள் எதுவாயினும் எத்தனையாயினும் திறந்த கதவுகளை மூடாத பரந்த மனம் கொண்ட பாலப்பா , மற்றும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்தேற தங்களின் உழைப்பை நல்கிய யாவருக்கும் மன்றத்தின் சார்பாகத் தன் நெஞ்சு நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்..

இறைமறை துஆவுடன் இனிதே நிறைவுற்றது பொதுக்குழு ..

வஸ்ஸலாம் ...








இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
B.A.முத்துவாப்பா,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தம்மாம் காயல் நற்பணி மன்ற...
posted by S.Ahmadu Kabeer (Al Khobar) [27 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12332

அஸ்ஸலாமு அழைக்கும்.

கண்ணியத்திற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைமை யாளர்களுக்கும் மற்றும் சகோதர உறுபினர்களுக்கும் தங்களின் மேலான கவனத்திற்கு உங்களின் ஊரின் அருகாமை இல் அமைந்து இருக்கும் சிறிய ஊரான தெற்கு ஆத்தூர் முஸ்லிம் ஜமாத்தின் பிரதி என்ற நிலையில் அல்லாஹ்விற்கு பயந்தவனாக இன்த பதிவை எழுதி உள்ளேன்

சகோதரர் அனைவருக்கும் எண்களின் ஜமாத்தின் ஏழ்மை நிலை காரணமாக எண்கள் ஊரில் பள்ளிவாசலில் ஏற்பட்டு உள்ள பழுது காரணமாக இன்த மலை காலங்களில் மிக ஒழுக்கு ஏற்பட்டு உள்ளது

ஊரில் உள்ள உங்களின் காயல் ஜமாஅத் நண்பர்கள் அநேகம் பேர்கள் எண்கள் பள்ளிக்கு வந்து தொழுது செல்வதற்கு வசதியாக சாலை ஓரத்தில் அமைந்து இருக்கும் எங்களது பள்ளி ஹவ்லில் இருந்து ஒழுஹு எடுக்கமுடியாமல் மேல் தளத்தில் இருந்து மலை நீர் கொட்டுகிறது.

இதன் விவரம் அடங்கிய ஒரு ஒரிஜினல் நகல் மனு ஒன்றை எங்களது ஜமாத்தின் தலமை முலம் எனக்கு வர பெற்று எண்களின் ஜமாத்தின் சார்பாக நான் Dr.இத்ரிஸ் அவர்கள் வசம் கொடுத்து உள்ளேன்,

அன்பு சகோதரர்கல் அனைவரும் தங்களின் அல்லாஹ்வின் பள்ளிவசளுக்காக தன்களின் காயல் நற்பணி மன்றதின் முலமாக இன்ஷா அல்லா தங்களால் முயன்ற ஏற்பட்டுகளை செய்து தாருங்கள்.

இன்த உலகத்தில் நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு பள்ளி அமைத்தால், பங்கு அளிக்கும் நம் அனைவருக்கும் சுவர்கத்தில் ஒரு பள்ளி அமைப்பதாக அல்லாஹ்வின் வாக்காக ஹதிஸ் இருக்கிறது இன்ஷா அல்லாஹ் நம் அனைவருக்கும் உரிய நன்மைகள் உண்டாகட்டுமாக ஆமீன்

அன்புடன் ச.அஹ்மது கபீர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காணவில்லை! (?!)  (27/10/2011) [Views - 4731; Comments - 30]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved