matta madrasakkal posted byLANDMARK RAVANNA ABULHASAN (chennai)[23 February 2018] IP: 171.*.*.* India | Comment Reference Number: 46021
Mr. Nizar, you have mentioned about Lalpettai Madhrasa. But I have visited many other madhrasas in Tamilnadu.Many Other Madhrasas also having same system of giving food daily by village people.
Re:... posted byvilack sma (Jeddah)[15 November 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45905
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் ... இது நடைமுறையில் உள்ள ஒரு சொல்வழக்கு . ஆனால் இங்கு சொல்லப்பட்டிருப்பது வருடம் முழுவதும் மதரஸாவில் படிக்கும் மாணவர்களுக்கு உணவளிப்பதுபற்றி . நல்ல காரியம்தான் . ( ஒருவேளை அந்த மதராசாவிற்கு மாணவர்களை பராமரிக்கும் அளவிற்கு போதிய வருமானம் இல்லாமல் இருக்கலாம் . )
பொதுவாக மார்க்க கல்வி பயில மதராசாவிற்கு வரும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது . உலக கல்வி பயில லட்சங்களை லஞ்சமாகவும் , ஆயிரங்களை கட்டணமாகவும் கொடுக்கும் நாம் , மார்க்க கல்வி பயில இலவசத்தை எதிர்பார்க்கிறோம் . கட்டணம் கொடுத்து மார்க்க கல்வி பயிலும் மதரசாக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை .
பள்ளிவாசல்களில் வெளியூர்களில் இருந்து வந்து வேலைபார்க்கும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு அந்தந்த ஜமாத்தை சார்ந்த வீடுகளில் இருந்து உணவு கொடுப்பது நடைமுறையில் உள்ளதுதான் . இன்றும் நமதூரில் இது நடைமுறையில் உள்ளது .
அதுபோன்றுதான் லால்பேட்டையில் உள்ளது . புதுமை இல்லை .
மாஷா அல்லாஹ் நாம் நம்கண் காணக்கண்ட மாமேதை பல பழுதில்லாத சிகரங்களை விழுதுகளாகத்தந்து விடைபெற்ற விருட்சம் நமது பேஷ் இமாம்
ஷைக் அப்துல்லாஹ் ஆலிம் பெருந்தகையவர்கள் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ஒருமுறை மத்ரஸா ஹாமிதியா விழாவில் புதிதாக இணைந்த அருள்மறை புனித குர்ஆன் மனனப்பிரிவுக்கு மாணவச்சிறார்களுக்கு அவர்களை சுண்டியிழுக்க தூண்டிலில்லாது வாண்டுகளை எடுத்துவைத்த அறிவுரையின் ஒருபகுதி
இதோ.
குர்ஆனை மனனம் செய்யும் ஹாஃபிழீன்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அல்லாஹ் இம்மையிலும் இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையிலும் எப்படி கண்ணியப்படுத்துவானென்பதை மிகத்தெளிவாக விளக்கியது
ஒருமலர் தென்சொட்ட,ச்சொட்ட வாய்மலர்ந்தது போலிருந்தது அன்று அந்த சக சிறுமானாக்களோடு வாய்பார்த்ததில் நானும் ஒருவன் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அது ஒருகொடுப்பினை அல்ஹம்துலில்லாஹ் அப்படியிருக்கும் நம் பேஷ் இமாமின் அணுகுமுறை தீனாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அழகாக தேனாக வெளிவந்து விஷயத்தை எடுத்துவைக்கும் மாஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் அந்த உயர்வான கிரீடங்களையும் மகுடங்களையும் தீன்வழியில் பயணிக்கும் அனைவருக்கும் சூட்டி மகிழ்விப்பானாக ஆமீன்
இந்தக்கட்டுரையால் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ நம்மை இறையடிசேர்ந்துவிட்ட பேஷ் இமாம் அவர்களின் நினைவுகளோடு ஒரு அழகான பயணத்தைத்தந்திருக்கிறார்கள்
ஜஃஜாக்கல்லாஹ் ஹைர் மச்சான்
உங்களிடம் நிறைய நல்ல,நல்ல விஷயங்களும் நகைச்சுவை நிறைந்த விஷயங்களிருக்கிறதென்பது நம்மில் நிறையபேருக்குத்தெரியும் அதையும் படைப்புகளாக இத்தளத்தில் பதியுங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றியைத்தருவான் ஆமீன்
ஏக நாயன் ரஹ்மான் அவனுடைய நேரான நம் இமாம் அவர்கள் கற்றுத்தந்த வழியில் சென்று அவர்களைப்போன்ற இமாம்கள் நம்மில் உருவாக்கவும் நம்மால் உருவுவாக்கவும் அந்த வழியில் அவனைஅடையவும் நமக்கும்,நம்சந்ததிகளுக்கும் அருளிபாலிப்பானாக ஆமீன்
மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமல்களையும் ஏற்று அறிந்தோ,அறியாமலோ செய்த பாவ,பிழைகளை பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா நாளைமறுமையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரையோடு அவனுடைய காட்ச்சியுடன் மேலான சுவனத்தில் அவர்களோடு நம்மையும் இருக்கச்செய்வானாக ஆமீன்
அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையையும்,அமைதியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.
Re:...இறைவா இதை விட மெளனத்தை எங்களுக்கு தா posted bymackie noohuthambi (kayalpatnam )[10 February 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45216
மருமகன் ஹாஜா முஹிய்யித்தீன் மஹ்லரி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக மறைந்த ஷேய்க் அப்துல்லாஹ் ஆலிம் மாமா அவர்களை பற்றிய சிறப்புக் கட்டுரை சிறப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள். 96 வருடங்கள் ஒரு நிறைவான வாழ்வு வாழ்வு வாழ்ந்து விட்டு சென்றிருக்கும் மாமா அவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.
ஆனால் அவர்கள் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று அரசியல் தலைவர்கள் சொல்வது போல் நாம் சொல்லக் கூடாது.ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்றும் சொல்லக் கூடாது. அப்படியானால் எப்படித்தான் அவர்கள் மறைவைப் பற்றி சொல்வது என்றால் அதற்கு ஸஹாபாக்கள் வாழ்க்கையில் ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது.
அபூ ஸலமா உம்மு ஸலமா என்று ஒரு தம்பதிகள். இவர்கள் வாழ்ந்தது போல் வாழ வெண்டும் என்று ஆசைப் படுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படி ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்த தம்பதிகள். அபூ ஸலமா அவர்கள் வபாத்தாகிறார்கள். உம்மு சலாமா அவர்களுக்கு பெரிய கவலை. இனி என்ன செய்யப் போகிறோம். இப்படி ஒரு கணவர் இப்பூவுலகில் கிடைக்க மாட்டார்கள் என்று பெருந் கவலையில் இருந்த போது அவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்கள் கேட்க சொன்ன து ஆ நினைவுக்கு வருகிறது.
நாக்கு பிரியமான ஒன்றை இழந்து விட்டால், யா அல்லாஹ் இதைவிட மேலான ஒன்றை எனக்கு தருவாயாக என்று து ஆ கேட்கவேண்டுமாம். அதெப்படி சாத்தியம் என்று அவர்கள் நினைத்தபோது, நபியவர்கள் சொன்னால் அது பொய்யாகாது என்ற அழுத்தமான நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த ஒரே காரணத்துக்காக நபியவர்கள் சொன்னார்கள் ஓதுகிறேன் அல்லாஹ்விடம் கேட்கிறேன் என்ற நிய்யத்துடன் அவர்கள் து ஆ கேட்கிறார்கள்.
நாட்கள் ஓடுகின்றன,, திடீரென்று ஒரு தூது வருகிறது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸலமா அவர்களை மணமுடிக்க விரும்பும் தூது அது. உம்மு ஸலமா அவர்களுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. அவர்கள் காதுகளில் சொல்லப் படும் செய்தி எவ்வளவு இனிமையானது, அல்ஹம்து லில்லாஹ் அவர்கள் பூரண சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஆம் அல்லாஹ்வின் ஹபீப் உம்மு ஸலமா அவர்களின் ஹபீபாக ஆகிறார்கள். இந்த செய்தியை உங்களை போன்ற உலமாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
எனவே நிரந்தரமாக ''பேஷ் இமாம்'' என்றே மரணத்துக்கு பிறகும் நாம் அழைக்கின்ற பாசத்துக்குரிய மாமா அவர்களைவிட மேலான ஒருவரை அல்லாஹ் நமக்கு தரவேண்டும் என்று உங்களுடன் நானும் சேர்ந்து பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.
Re:... posted bymoinudeen (kayalpatnam)[13 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44446
மேற்கூறப்பட்ட கட்டுரையில் சில விடயங்கள் உண்மையானாலும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ... தியாகம் தான் வாழ்க்கை ... இறைவன் அமைத்து வைத்து அப்படிதான்.. பெண் மக்களுக்கு வீடு கொடுப்பது மார்க்கமா இல்லையா என்று நான் சொல்ல வரவில்லை...ஒரு வேலை மருமகன் வீடு கொடுக்க வேண்டும் என்றாலும் பிரச்சனை தான் ... எல்லாரும் பணக்காரர்கள் இல்லை வீடு கேட்டுவதற்கு ... மாமியார் வீட்டில் மருமகள் தங்குவதும் மார்க்கம் அல்ல... மஹ்ரம் பிரச்னை எழலாம் ...மாமியார் கொடுமை நடக்கலாம் ... இங்கு சகிப்பு தன்மையோடு சூழ்நிலைகளை அறிந்து நாம் செயல் படவேண்டும் ... ஒழுங்கான மார்க்க சிந்தனை இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை... தேவைகளை குறைத்து கொள்வதும் தன்னிறைவு அடைந்த மனமும் இருந்தால் போதும்..இவைகள் ஒரு பெரிய விடயமே அல்ல..
Re:...காயல் கலாச்சாரம் சரிதானா? posted byMuhammathu Salih (Chennai)[16 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44044
இஸ்லாமிய பார்வையில் நமதூர் கலாச்சாரம் சரிதானா? என்பதை அறிந்து கொள்ள ஒரு ஆலிமிடம் கேட்டேன். அதற்க்கு அவர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவிமார்கள் வீட்டில் தானே தங்கினார்கள் என்றார் அவர். பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டில் தானே குடும்பம் நடத்தினார்கள் என்றேன். சரியான பதில் இல்லை. சஹாபாக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள். நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களை எவ்வாறு வாழ போதனை செய்தார்கள் என்பவற்றை எல்லாம் மறு ஆய்வு செய்து ஷரியதிர்க்கு உட்பட்டு காலத்திற்கேற்றவாறு நம் ஊரில் மாற்றம் கொண்டுவர காழிகளும்ஆலிம்களும் ஊர்பெரியவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த விசயத்தில் ஒரு பாதையில் செல்லும்போது நமதூர் ஏன் இப்படி? நான்கு பெண் குழந்தைகள் பிறந்தால் நான்கு வீடுகள் என்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.
Re:.பெண்வீட்டு கலாசாரத்தை காயலில் திருத்தப்போவது யார்..? திருந்தப்போவது யார்..? posted byAnbinalA (jaipur)[16 June 2016] IP: 101.*.*.* India | Comment Reference Number: 44043
கைக்கு கைமாறும் பணமே - உன்னை
கைபற்ற நினைக்குது மனமே...
சொந்தத்தை விட சொத்துக்குத் தான் மதிப்பு
பந்தத்தை விட பணத்துக்குத் தான் முதல்விரிப்பு...
அட...வாப்பா எங்கீந்து வாரா..?
பொண்டாட்டி வீட்டில் இருந்து - இப்போ
எங்கே போரா..? - உம்மா வீட்டுக்கு - ஆக..!
காயலில் ஆண்மகனுக்கு வீடில்லை..? ஆனால்..!
ஆண்களின் உழைப்பு மட்டும் கல்லிலும், மண்ணிலும் கலங்காலமாய்...
எல்லாத்துக்கும் இஸ்லாத்தை தூக்கிப்பிடிக்கும் காயலில் பெரும்பகுதி மக்கள் ஏன்..? இந்த பெண்வீட்டில் இருக்கும் கலாசாரத்தை வெக்கம்யின்றி தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பது இன்னும், இன்றும் திருத்தப்போவது யார்..? திருந்தப்போவது யார்..? என்ற கேள்வி வளைந்தே வனுயர எழுந்து நிற்கிறது...17
Re:... posted byAhamed Mohideen Bin Farook (Hong Kong)[16 June 2016] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 44042
அருமையான மற்றும் சிந்திக்கக்கூடிய பதிவு.. கட்டுரையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஹலாலான முறையில் சம்பாதித்து பெற்றோர்களை கண்ணியமான முறையில் வைத்து காப்பாற்றுவதற்கும் இக்ஹ்லாஸ் ஆன பிள்ளைகளை வார்த்து எடுப்பதற்குரிய பாக்கியத்தை அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்து அருள்புரிவானாக..ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross