Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:03:37 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7456
#KOTW7456
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 29, 2011
எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 11215 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (40) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களான தேவராஜ் (ஆங்கிலம்), எம்.ஏ.புகாரீ (வணிகவியல்) மற்றும் ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் ஆகியோர் அண்மையில் பணி ஓய்வு பெற்றனர். அவர்களுள், ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் உடல்நிலை சரியின்மை காரணமாக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி வழியனுப்பும் முகமாக, கடந்த 14.10.2011 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.





பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி எல்.டி.இப்றாஹீம் முன்னிலை வகித்தார். அரபி மொழி ஆசிரியர் ஜுபைர் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பின்னர், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வாழ்த்துரை வழங்கினார்.



ஆசிரியர் தேவராஜ் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்... சுமார் முப்பது ஆண்டு காலம் இப்பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ள அவர், நானறிந்த வரை வகுப்பிற்கு ஒருபோதும் தாமதமாகச் சென்றதில்லை...

அதுபோல, வகுப்பறையிலுள்ள ஆசிரியர் நாற்காலியிலோ, தேர்வு நடக்கும் அறையிலுள்ள் பார்வையாளர் நாற்காலியிலோ அவர் அமர்ந்து பணியாற்றியதாகவும் நான் ஒருபோதும் கண்டதில்லை... தனது பொறுப்பை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றியவர் அவர்...

தலைமையாசிரியராக எனது கடமையை ஆற்றுவதற்கு மனதில் எந்த வேறுபாடும் காண்பிக்காமல் அவர் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.

அதுபோல, ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்கள், 1978ஆம் ஆண்டு சிறிய ஊதிய அடிப்படையில் Vocational Group ஆசிரியராக பணியில் இணைந்தார். 1989ஆம் அண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியரானார். நான் இப்பள்ளியில் ஆசிரியராக வருவதற்கு முன்னரே இவர் ஆசிரியராகிவிட்டார்.

பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா, விளையாட்டு விழா, ஒரு காலத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த மீலாத் விழா என எந்த விழாவானாலும் அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை ஏவாமலேயே தானாக முன்வந்து செய்து தந்தவர்... எனது நீண்ட நாள் நண்பர்...

இப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த திரு.ஞானய்யா அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர், அடுத்து நான் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டேன். அக்காலத்தில், ஆசிரியர் குழுமத்திற்குள் மனவேற்றுமையை ஏற்படுத்த சிலர் முனைந்தபோது, அவர்களின் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி, அன்று முதல் இன்று வரை தலைமையாசிரியராக எனது பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருபவர்...

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் - ஆசிரியர்களுக்கிடையில் ஒரு இணைப்புப் பாலமாக இருந்து செயலாற்றியவர்...

அடுத்து, ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் அவர்கள் இப்பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்ட பின்னர் சிறிது காலம் மட்டுமே பணியாற்ற முடிந்தது. அவரால் வகுப்பில் பாடம் நடத்த இயலாத அளவுக்கு தொண்டை பாதிக்கப்பட்ட நிலையில், நீண்ட காலம் மருத்து விடுப்பில் இருந்தவர்...

எனினும், உடல்நிலை சரியாகி மீண்டும் பாடம் நடத்த வருவார் என ஆவலோடு நாம் எதிர்பார்த்திருந்தோம்.. ஆனால் இறைவன் நாடவில்லை. எனவே அவர் பணி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

ஓய்வுபெற்றுள்ள ஆசிரியர்கள் மூவரும் தமது எஞ்சிய வாழ்நாளை தம் குடும்பத்தாருடன் மனநிம்மதியோடு கழித்திட நான் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்...


இவ்வாறு தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உரையாற்றினார்.

அடுத்து, பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை உரையாற்றினார்.

ஆசிரியர் தேவராஜ் அவர்கள் தனது பணியில் மிகுந்த கண்டிப்புடன் கடமையாற்றியவர்... தனது சொந்தப் பிரச்சினைகள் எதையும் பணியில் ஒருபோதும் காண்பிக்காதிருந்தவர்...

இயற்கையிலேயே இவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர் என்பதால், தமிழ் மொழியில் பேச வராத காலகட்டத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்த இவரிடம் கற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியைப் பெற முடிந்தது.

அடுத்து, உடல் நலக் குறைவால் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

ஆசிரியர் புகாரீ அவர்கள் இப்பள்ளியில் மிகுந்த ஈடுபாட்டுடன் அனைத்து காரியங்களையும் செய்து தந்து, நிர்வாகத்திற்கு உற்ற துணையாக இருந்தவர்... எனது பெரியப்பா ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி என்ற எல்.கே.அப்பா அவர்கள் காலத்தில், அவர்களால் பணியமர்த்தப்பட்ட கடைசி ஆசிரியர் புகாரீ சார்தான்.

ஓய்வுபெறும் ஆசிரியர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி விடைபெறுகிறேன்...


இவ்வாறு டாக்டர் முஹம்மத் லெப்பை உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து, சக ஆசிரியர்கள் செய்யித் அஹ்மத், முஸ்தஃபா, டேவிட் செல்லப்பா, முன்னாள் மாணவர்கள் சார்பில் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.





இப்பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் சார்பில் தங்க நாணயம் வழங்கப்படுவது வழமை. அந்த அடிப்படையில், அடுத்து ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ஆசிரியர்கள் டேவிட் செல்லப்பா, ஜெபராஜ் ஆகியோர், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



பின்னர் பள்ளி ஆசிரியர் சிரோன்மணி, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர், பள்ளியின் சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசுகளை பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி காக்கா, எல்.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் வழங்கினர்.







நிறைவாக, ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். துவக்கமாக ஆசிரியர் ப்ரின்ஸ் ஐஸக் உரையாற்றினார். அடுத்து ஆசிரியர் தேவராஜ் ஏற்புரையாற்றினார்.





1979ஆம் ஆண்டில், எல்.கே.அப்பா அவர்களின் காலத்தில் நான் இப்பள்ளியில் ஆசிரியராக இணைந்தேன். எல்.கே.அப்பா அவர்களின் நிர்வாகம் ஓர் அருமையான நிர்வாகம். அவர்களின் காலத்தில் நியமிக்கப்பட்ட மூத்த ஆசிரியர்களில் நானும், என்னுடன் ஓய்வு பெறும் புகாரீ சாரும், அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள தலைமையாசிரியர் ஹனீஃபா சாரும் மட்டுமே எஞ்சியவர்கள்.

அப்போது தலைமையாசிரியராக இருந்த திரு.ஞானய்யா அவர்கள், Our school is second to none என்று அடிக்கடி சொல்வார். அது இன்றளவும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அன்று ஒரு வகுப்பில் 71 பேர் இருந்தனர். என்றாலும் Pin drop silence என்று சொல்லுமளவுக்கு அமைதி நிலவும். ஆனால் இன்றோ, மாணவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அன்று போலில்லாமல், இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஒருபுறம் அதிகமாகிக்கொண்டே செல்ல, மறுபுறம் பெற்றோர் தம் பிள்ளைகளைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது மிகவும் குறைந்துகொண்டே வருகிறது என்பதை நான் விடைபெறும் இந்த நேரத்திலும் வேதனையுடன் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இம்மாணவர்களை அன்றிருந்த மாணவர்கள் போல மேம்படுத்த வேண்டுமானால் அதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதற்கும் மேலாக, பணியாற்றும் ஆசிரியர்கள் தமது பொறுப்பில் மிகுந்த ஈடுபாட்டுடனும், கடமையுணர்வுடனும், நேர்மையுடனும் பணியாற்றினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

இவ்வாண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளிவரும்போது நான் மீண்டும் இங்கு வருவேன்... மாணவர்களின் முன்னேற்றத்தையும், அதற்கு ஆசிரியர்கள் அளித்த உழைப்பையும் நிச்சயம் பார்க்கும் ஆவலோடு வருவேன்...

“கேரளாவிலிருந்து இங்கு வந்து நீங்கள் பணியாற்ற காரணமென்ன?” என்று என்னைக் கேட்டவர்கள் உண்டு. அதற்கு ஒரே காரணம், இங்கு லஞ்சம் பெறாமல் நான் பணியமர்த்தப்பட்டதுதான். இப்பணியில் நான் நிலைத்ததற்குக் காரணம், இப்பள்ளி நிர்வாகிகளின் தன்னலமற்ற குணநலன்கள்தான்.

நான் இப்பள்ளியில் ஆசிரியராக இணைந்தபோது மலையாளம் மட்டுமே எனது தாய்மொழியாக இருந்தது. இன்று நான் ஓய்வுபெற்று உங்களுடன் விடைபெறும் இப்பொழுதில், தமிழையும் இணைத்து இரண்டு தாய்மொழிகளைக் கொண்டவனாக வெளியாகிறேன்.

என்னை வாழ வைத்த இப்பள்ளியையும், இந்த ஊரையும் நான் ஒருபோதும் மறவேன்.


இவ்வாறு ஆசிரியர் தேவராஜ் உரையாற்றினார்.

அடுத்து, ஓய்வுபெறும் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ ஏற்புரை வழங்கினார்.



பெருமதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய தாளாளர் அவர்களே... ஆட்சி மன்ற உறுப்பினர்களே... பாசமிகு தலைமையாசிரியர் அவர்களே... என்னுடன் பணியாற்றிய அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே... அலுவலக சகோதரர்களே... உங்களனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், ஸலாமையும் தெரிவித்து மகிழ்கிறேன், அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைத்தும் படைத்துக் காக்கின்ற எல்லாம்வல்ல இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இப்பள்ளியில் 33 ஆண்டு காலம் உடல் ஆரோக்கியத்தோடு பணியாற்றி முடிக்க அருள் புரிந்த அந்த வல்லோனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்கி, எனது ஏற்புரையை துவங்குகிறேன்...

வரலாற்று சிறப்புமிக்க இந்த காயல் பதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் “காயலில் கல்லாமை இல்லாமை” ஆக்க வேண்டும் என்ற உயர்ந்த - உன்னதமான நோக்கத்தோடு துவக்கப்பட்ட நமது எல்.கே.பாடசாலை, நமதூருக்கும், நமது மாவட்டத்திற்கும் மிகப்பெரிய புகழை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

எல்.கே.பாடசாலை எனும் மிகப்பெரிய ஆலமரத்தின் நிழலிலே வந்தமர்ந்து, அதன் கல்வியறிவென்னும் கனிகளை உண்டு மகிழ்ந்து, சாதனையாளர்களாகப் பறந்து சென்றோர் பலர். அந்த ஆலமரத்தின் நிழலில் வந்தமர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை எண்ணிப்பார்த்து பேருவகையடைகிறேன்...

மாணவனாக எனக்கு 1960இலிருந்து 1971 வரை 11 ஆண்டுகள் அடித்தளக் கல்வியை எனக்கு அமுதாய் ஊட்டியது இப்பள்ளி...

அடுத்து, கல்லூரிப் படிப்பை முடித்து நான் வெளிவந்தபோது, அம்மரம் தாயன்போடு மீண்டும் என்னை அரவணைத்து, “நீ எங்கும் செல்ல வேண்டாம்! என் அன்பிணைப்பில் பிணைந்திடு!!” என்று நான் கற்ற பள்ளியிலேயே என்னை ஆசிரியராக நியமித்து, 1978இலிருந்து, இன்று 2011 வரை அழகு பார்தது.

அத்தோடு நின்றுவிடாமல்,
முன்னாள் மாணவர் மன்ற உதவிச் செயலாளராக...
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக...
ஆசிரியர் - மாணவர் கூட்டுறவு பண்டகசாலை செயலாளராக...
சுற்றுலா அமைப்பாளராக...
சாலைப் பாதுகாப்புப் படை பொறுப்பாசிரியராக...

எஸ்.எஸ்.எல்.சி. அரசுப்பொதுத் தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக...
கலை, இலக்கிய போட்டிகளின் அமைப்பாளராக...
பள்ளித் தேர்வுகள் நடத்தும் பொறுப்பாசிரியராக...
அசெம்ப்ளி கன்வீனராக...
தலைமையாசிரியர் பொறுப்பு பணியாளராக...

பள்ளி விளையாட்டு விழா - ஆண்டு விழாக்களில் பரிசுப்பொருள் பொறுப்பாசிரியராக...
இலக்கிய மன்ற அமைப்பாளராக...
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக...
சிறந்த பேச்சாளராக... பாடகராக...
இன்னும் எப்படியெப்படியெல்லாம் என்னை உருமாற்றி - உயர்வாக்கியது இப்பள்ளி...? இதனை என்னால் மறக்க முடியுமா...? (கண்ணீர் விட்டு கதறியழுகிறார்...)

இதற்கு வழிகாட்டியவர்களையும், ஆர்வமூட்டி ஆதரித்தவர்களையும் இந்நேரத்தில் நினைவுகூர்வது எனது நன்றிக்கடனாகும். அந்தப் பெருமக்கள்,
மர்ஹூம் ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி அவர்கள்,
மர்ஹூம் ஹாஜி ஏ.கே.செய்யித் அஹ்மத் அவர்கள்,
மர்ஹூம் ஹாஜி கே.எம்.இஸ்மத் அவர்கள்,
ஹாஜி பி.மஹ்மூத் அவர்கள்,
மர்ஹூம் ஜனாப் எல்.கனி காக்கா அவர்கள்... மற்றும்

தற்போதைய தாளாளர் ஜனாப் டாக்டர் முஹம்மத் லெப்பை அவர்கள்,
தலைவர் ஜனாப் டாக்டர் முஹம்மத் அஷ்ரஃப் அவர்கள்...

முன்னாள் தலைமையாசிரியர் திருமிகு டி.ஞானய்யா அவர்கள்...
இந்நாள் தலைமையாசிரியர் ஜனாப் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அவர்கள்...

இவ்வனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

என்னுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் - இந்நாள் சக ஆசிரியர்கள், சக அலுவலர்கள் என் மீது காட்டிய அன்பை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை...

அன்பார்ந்த சகோதரர்களே!

உங்களிடமிருந்து பிரியாவிடை கேட்கின்ற இத்தருணத்தில், பிரிவைத் தாங்கிக்கொள்ள எனது இதயத்தை சற்று கல்லாக்கிக்கொள்ள முயல்கின்றேன்... ஆனால் முடியவில்லை. (மீண்டும் தேம்பித் தேம்பி அழுகிறார்...)

உங்களின் அளப்பரிய அன்பிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்... ஒத்துழைப்பு வழங்கிய என் அன்பிற்குரிய முன்னாள் மற்றும் இந்நாள் மாணவமணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி.

மாணவனாக 11 ஆண்டு காலம்...
ஆசிரியராக 33 ஆண்டு காலம்...
மொத்தம் 44 ஆண்டுகள் இப்பள்ளியோடு உண்டான தொடர்பு, ஓய்வு எனும் உருவத்தில் வந்து விடை தர துடிக்கிறது... காலம் சுழலத்தான் செய்கிறது....

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்டதாய்”

என்ற வள்ளுவனின் வாய்மொழிச் சொல்லுக்கேற்ப, நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய பெருமைகளையும், பாராட்டுகளையும், கவுரவிப்புகளையும், மரியாதைகளையும் என்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கு எனதன்புக் காணிக்கையாக்குகிறேன்...

இறுதியாக, உங்களனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொண்டு, ஓய்வுபெறும் எங்களது நீண்ட ஆயுளுக்காகவும், நிறைவான சுகத்திற்காகவும், எங்கள் கல்விச் சேவை மென்மேலும் தொடர்வதற்காகவும் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டு, எனது ஏற்புரையை இத்துடன் நிறைவுசெய்கிறேன்.

வ ஆகிர் தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்...

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...


இவ்வாறு ஆசிரியர் எம்.ஏ.புகாரீ உரையாற்றினார்.

அத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாளாளர், நிர்வாகக்குழு அங்கத்தினர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் இணைந்து குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.



ஓய்வுபெற்ற ஆசிரியர்களை, பள்ளியிலிருந்து அவர்களின் இல்லம் வரை சென்று வழியனுப்புவது இப்பள்ளி ஆசிரியர்களின் வழமை. அந்த அடிப்படையில், துவக்கமாக உள்ளூர் ஆசிரியர்களான எம்.ஏ.புகாரீ, ப்ரின்ஸ் ஐஸக் ஆகியோர் அவர்களின் இல்லம் வரை சென்று வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் ஆசிரியர் குழுவினர், ஓய்வுபெற்ற ஆசிரியர் தேவராஜ் அவர்களின் சொந்த ஊரான கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு ஒருநாள் சுற்றுலா சென்றனர். அங்கு, ஆசிரியர் இல்லத்தில் உணவருந்திய அவர்கள், அந்நகரிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இன்பமாக பொழுதைக் கழித்தனர்.











சுற்றுலா சென்ற ஆசிரியர் குழுமத்துடன், பள்ளி முன்னாள் மாணவர் மூஸா என்ற கட்டா காக்காவும் உடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:-

ஆசிரியர் தேவராஜ்: +91 94428 34766
ஆசிரியர் எம்.ஏ.புகாரீ: +91 98427 89817




தகவல் & படங்களில் உதவி:
அஹ்மத் மீராத்தம்பி,
இளநிலை ஆங்கில ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கண்ணீர் கொப்பளிக்கிறது...
posted by Shaik Dawood (Hong Kong) [29 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12450

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

நான் கற்றது முகைதீன் மெட்ரிக் பள்ளியில் என்றாலும்... அன்பு நிறைந்த ஆசிரியர்களில் புகாரி சாரை சில வருடங்களாக பழக்கம்... ஹாஜி அப்பா பள்ளியில் தொழ வருவார்கள்... அப்பொழுது அவர்களின் கனிவான பேச்சை மறக்க முடியாது... ஆசிரியர் அவர்களின் பேச்சை நேரில் கேட்டது போல கண்ணீர் கொப்பளிக்கிறது...

எல்லாம் வல்ல அல்லாஹ் ஆசிரியர் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை கொடுத்து ஈமான் சலாமத்துடன் வாழ்ந்து அதே நிலையில் மரணிக்க தௌஃபீக் செய்வானாக ஆமீன்...

அப்புறம்... மச்சான் மீரா தம்பி சார் ஊட்டுல ஒரு புடி புடிச்சிட்ட மாதிரி தெரியுது... ? மஜா கரோ பாய்...

அன்புடன்
தாவூது பின் ஷாபிஈ
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by ABDULAZEEZ (Guangzhou) [29 October 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 12452

பிரியா விடை பொறும் அன்பு ஆசிரியர் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Mahmoodh Hasan SMS (Guangzhou) [29 October 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 12453

Teaching is the profession that teaches all the other professions.

அட, சீரியஸ் ஆக போயிகொண்டிருந்த செய்தியை கடைசியில் காமெடியா முடிசிடீங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. send off party..........
posted by kulam kabeer (chennai) [29 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 12454

I am very much happy to say i am the student of our beloved asst.headmaster devarajan.. for the two years. He is a great inspiration to the student and student friendly and also the well wisher.......

i am very much proud to say my father also the student of him........ the upcoming student community miss u sir..... may god will give you good health and wealth..............miss u sir!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Abu Misbah (Jeddah) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12455

பணிவிடை பெரும் எங்களது ஆசிரியர்கள் திரு தேவராஜ் & புஹாரி சார் அவர்களுக்கு, உங்களின் வாழ்நாளின் மீதி நாட்களை நல்ல சரீர சுகத்தோடும் நற் பாக்கியங்களோடும் கழிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக.

81 ஆம் வருடம் தேவராஜ் சார் எங்களுக்கு ஆங்கில வகுப்பை எடுத்த விதம் எங்கள் கல்லூரி வாழ்க்கையில் மிகவும் உதவியாக இருந்தது. என் வாழ்நாளின் மறக்க முடியாத ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர் சார்.

என்றெறேன்றும் உங்கள் மாணவன்
குளம் அஹமது முஹியதீன்
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Mohamed Cnash (Makkah ) [29 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12456

Kind Respects to our honorable Teachers Mr. Devaraj Sir and Mr. Buhary Sir.

Dear Devaraj Sir,

You have been a great influence and always been an admirable knowledge provider as you have gone beyond the line of textbooks to feed us knowledge and vocabulary. I do recall so many instance of my luckiest association as your student in 11th and 12th. Thanks for everything.

என்னை வாழ வைத்த இப்பள்ளியையும், இந்த ஊரையும் நான் ஒருபோதும் மறவேன்.

The heart touched above words of yours has brought our tears out … In fact you have given life to some thousands of your pupils as me and we are always grateful to you. Your Malayalam blended Tamil inflection still rhyming in our ears. May I seize this moment to beg your pardon for our mischievous behaviours and naughtiness while we were your student.

Sir, wish you for the peace and happiness in your retirement period .

Dear Buhary Sir, I didn’t have fortune as some of the lukiest of student of you......... but I know this great man for his modesty and decorum. May Allah grant all the happiness to you and your family and peaceful retirement too.

Mercy and blessings of Allah be on your sides for the years to come.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [29 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12461

காலங்கள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன.

நேற்றுதான் என்னுடய ஆசான் உயர்திரு. தேவராஜ் அவர்களின் திருமணத்திற்கு கேரளா சென்ற மாதிரி இருந்தது.. (திரும்பி வரும் சமயம் ஐயப்ப பக்தரர்களால் ட்ரெயின் நிரம்ம்பி வழிந்து, திருநெல்வேலி வரை ஒற்றைக்காலில் பயணம் செய்த அனுபவம் - நினைத்தாலும் சுகம் தான்). அதற்குள் பணி ஓய்வு வந்து விட்டதா.!! ( நான் இதுவரை கலந்து கொண்ட ஒரே கேரளா திருமணம் இந்த திருமணம்தான்).

இவர்களுக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் நடத்திய ஒரே ஆசிரியர் இவர்தான். ஆங்கிலத்தில் சற்று ஆர்வமும், விருப்பமும் வந்தது இவர்களால் தான்.

இவர்கள் கூறியது போல இன்றைய காலத்தில் மாணவர்களை எங்கு கண்டிக்க முடிகின்றது. LK அப்பா காலத்தில், நாங்கள் ஆசிரியரை கண்டால் இல்லை.. இல்லை.. அங்கு வேலை செய்யும் சுடலை அண்ணன், முருகன் அண்ணன் ஆகியோரை கண்டாலே பயப்படுவோம். இன்றோ நிலைமை பரிதாபம்.

(சென்ற மாதம் ஒரு மாணவன் ஒரு ஆசிரியரை வீதியில் மிரட்டிய சம்பவமும், இதுவரை அவருடைய பைக்கில் இருந்து காற்றை பிடுங்கிக்கொண்டு இருப்பதும் நடந்துக்கொண்டு இருக்கின்றது-இறைவனுக்கு பயந்துக்கொள்ளுங்கள்)

மரியாதைக்குரிய ஆசிரியர் புஹாரி அவர்களின் பேச்சை வாசித்ததும் என்னை அறியாமலே கண்ணீர் கசிந்து விட்டது.

இவர்கள் அனைவர்களுக்கும் வல்ல ரஹ்மான் நோயற்ற ஆரோக்ய வாழ்வையும், மன நிம்மதியையும், சந்தோசத்தையும் கொடுக்கட்டும்.

அன்பு மாணவன்,
சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12464

எங்களின் அறிவு வளர்ச்சிக்கு உரம் கொடுத்து ஓய்வு பெரும் ஆசிரிய பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் - நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நல்ல சுகத்தோடு வாழ வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம் - வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
(முன்னாள் மாணவன் எல்.கே பள்ளி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Ahamed Mohideen (Chennai) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12467

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்மனைவர் மீதும் உண்டாவதாக...

ஓயவே அறியாமல் உழைத்த நல்ல ஆசிரியர்களுக்கு உங்கள் மாணவனின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டுகிறேன். அருமையான நிகழ்வுகளை தொகுத்து அளித்த நண்பர் ஆசிரியர் மீரா தம்பிக்கு நன்றிகள் பல :-)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by IZZADEEN (CHENNAI) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12468

காலம் எப்படி ஓடுது, இன்று சேர்த்தது போல் உள்ளது, சுடலை அண்ணனுக்கு எப்ப உபசரீபு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Ahamed Mohideen (Chennai) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12470

மூசா காகா தான் டூர் co-ordinator ஆ? சூப்பர் :-)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஓய்வு பெற்றாலும், ஓய மாட்டார்கள்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [29 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12473

யார்? எவ்வளவு பெரிய பட்டதாரியா இருந்தலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும், துள்ளிக் குதித்து ஓடி விளையாடிய பள்ளிப் பருவத்தை ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள்! அதிலும் நமதூர் பள்ளிகள், வாப்பா, மகன், பேரன் எனப் பல தலைமுறைகளுக்குத் தாய் வீடாக திகழ்ந்துள்ளது என்பது பெருமைக்குரியதே!

அன்றைய காலகட்டத்தில் நம் மூதாதையர்களும், கல்வித் தந்தைகளும் கட்டியெழுப்பிய கோட்டைச் சுவர் தான் இன்று, காயலர்க்கும், அதைச் சார்ந்த ஊரார்க்கும் ஓர் அரணாக மாறி அறியாமையின் ஆணிவேர் சமூகத்தில் ஊடுருவாமல் தடுத்து நிற்கின்றது.

பள்ளிப் பருவத்தின் பசுமை மாறா நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், பக்கங்கள் போதாது! ஆசிரியர் பணி ஓர் புனிதமான பணி! நாளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை இன்றே உணர்ந்து ஆரோக்கியமான அறிவைப் புகட்டி வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் தியாகிகள்!!! ஓய்வு பெற்றாலும், ஒரு போதும் அவர்கள் ஓய மாட்டார்கள்...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13.
posted by S.M.B. MOHAMED ABUBACKER (DUBAI) [29 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12475

Dear Dad, BUHARY SIR (அன்பு தந்தையே),

உங்கள் கருத்துகளை படிக்கும்போது எனக்கு கண்ணீர் வந்து விட்டது. எனக்கு வீட்டில் நல்ல தந்தையாகும், L.K. பள்ளியில் +1,+2 வகுப்பில் நல்லதொரு வகுப்பு ஆசிரியராகும் இருந்து என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தீர்கள். Alhamdullilah..

இன்று நம் குடும்பம் நல்லதொரு நிலைக்கு வந்திருக்கு என்றால், நீங்கள் படித்து கொடுத்த மாணவர்களின் துஆ தான்.

நீங்கள்தான் கற்ற கல்வியை பிறருக்கு கற்று கொடுத்து மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒளி விளக்காய் திகழ்ந்தீர்கள்..

தங்களது "தாய்வீடு" எது என்று கேட்டால் "பள்ளிக்கூடம்" தான் என்று சொல்வீர்கள். இது உங்களுக்கு கல்வி மீது உள்ள அக்கறையை காட்டுகிறது.

இன்று L.K. பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றாலும், உங்கள் கல்வி பணி தொடர்ந்து செயல்பட இறைவன் நீண்ட ஆயுளையும், உடல் வலிமையும், அதிக பரக்கத்தையும் தருவானாக என்று தொழுது துஆ கேட்கிறேன்.வஸ்ஸலாம்.

என்றும் அன்புடன்
உங்கள் மகன்
அபூபக்கர், துபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Samu.A.B (Dubai) [29 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12478

It is so hard to miss these dedicated teachers who tirelessly served the student community of kayalpatnam.

I vividly remember Devaraj Sir’s classes; evergreen memories, just the thought took me twenty years back in a wink. Their contribution to the upliftment of education in kayalpatnam will always be remembered.

May Allah Almighty bless their future with pristine health and happiness.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by M.H.Abdul Gaffoor (kayalpatnam) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12481

அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டு வருடங்கள் தேவராஜ் சாரிடம் படித்து, நான்கு வருடங்கள் சாருடன் ஒன்றாக ஆசிரியராக பணிபுரிந்தது என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு காலமாகும்.

தேவராஜ் சாரிடம் இருந்து பாடத்தை மட்டுமல்லாது நேரம் தவறாமை, தேர்வு அறையில் எவ்வாறு விழிப்புடன் இருப்பது உள்ளிட்ட எண்ணற்ற பாடங்களை கற்றோம்.

தேவராஜ் சாரின் வீட்டுக்கு சென்றதும் அங்கு எங்களை அவர்கள் உபசரித்ததும் என்றும் எங்கள் (ஆசிரியர்கள்) நினைவில் இருக்கும்.

தேவராஜ் சாரின் ஓய்வு காலம் அமைதியாகவும், அவர்களின் கல்வி சேவை என்றும் தொடர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழாவில் கலந்துகொண்டு இன்றைய மாணவர்களின் நிலையை அழகாக எடுத்து கூறிய ஸாலிஹ் காக்காவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Mohammed Noohu (Dhaka) [29 October 2011]
IP: 123.*.*.* Bangladesh | Comment Reference Number: 12482

I would like to extend my gratitude to these wonderful teachers, specially Mr.Devaraj , in spite of his personal sorrows, he stood firm and brave enough to continue his profession for long long years. I am, one proud student of his and thank him for his contribution.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Missing those days...
posted by shaik abdul cader (bangalore) [29 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12490

Dear Devaraj sir,

you may leave the school since time doesn't allow you to serve our students because of the age but the foot prints you left on us in the form of education will remind you every moment.you are such a wonderful person for all of us(2006 batch).As Haneefa sir mentioned i have never seen you sitting on chairs while teaching such a dedication and attention you had on your profession.We miss you all the time sir may allah make your life prosperous and healthy by all means.

regards,
shaik abdul cader


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [29 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12491

LK SCHOOL .... I NEVER FORGET IN MY LIFE..I HAD MY SCHOOLINGS FROM KUTTIYAAPPU TO 12TH STANDARD IN THIS GREAT SCHOOL.LK SCHOOL IS THE ONE OF THE FACTOR BEHIND MY SUCCESS... MR BUHARY,MY RELATIVE .. THOUGH IN DIFFERENT FIELD, I ADMIRE HIS SINCERITY...

தேவராஜன் சார் நான் அதிகம் விரும்பும் எனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவர்.. நான் 12 படித்த போது, எனக்கு அதிகம் ஆர்வம் ஊட்டியவர்.. அவர்களின் ஒவ்யு நாள் அமைதியாக எல்லா நலமும் பெற்று திகழ வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Zubair Rahman (Qatar-Doha) [29 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12493

பணி விடை பெற்ற கல்வி வழிகாட்டிகளுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by ABU HURAIRA (Abu Dhabi) [29 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12494

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்புள்ள ஆசிரியர்கல் புஹாரி சார் மற்றும் தேவராஜ் சார் ஆகியோரிடம் நான் 1994 -1996 ஆண்டு இவர்களிடம் நான் கல்வி கற்றேன் . இருவருமே நல்ல ஒரு ஆசிரியராக திகழ்ந்தார்கள்.

எங்களுக்கு அன்போடும், பாசத்தோடும் பாடங்களை கற்று கொடுத்தார்கள். மேலும் ஒழுக்கம், மரியாதை போன்றவைகளும் சொல்லி தந்தார்கள். எல்லாம் வல்ல நாயன் அந்த 3 ஆசிரியர்களின் ஆயுளை நீளமாக்கி வைப்பானாக. நன்றி. அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Abdul Razak (Chennai) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12497

Dear Devaraj Sir,

Have a peaceful life in the rest of your days. You lighted the English Knowledge to us after our dear Akbar sir. Also you gave me many advices even at the times of my in obiedience to all teachers. We counted your "vandhu"(in tamil) in our notes.But you show kindness to me.I got lots and lots of advices regarding obeying teachers in your staff room.thanks a lot.



Thanks,
Abdul Razak

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. பசுமையான பள்ளிப் பருவ நினைவுகள்
posted by W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை) [29 October 2011]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 12498

உங்களில் சிறந்தவர் யாரெனில் "தானும் கற்று அதனை பிறருக்கு கற்றுக் கொடுப்பவரே (ஆசிரியர்)" என்ற வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத பொன்மொழிக்கேற்ப சிறப்பான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் ஆசிரியர் திரு. தேவராஜ் மற்றும் என் பால்ய அன்பு நண்பன் முஹம்மது அபூபக்கரின் தந்தை மதிப்பிற்குரிய புஹாரி சார் ஆகியோர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இவர்களைப் பற்றி நினைக்கும் பொழுது என் மனம், அந்த பசுமையான மேல்நிலை பள்ளிப் பருவ நாட்களை எண்ணி அசைபோட 19 ஆண்டுகள் பின்னோக்கி செல்கின்றது.

தேவராஜ் சார் அவர்கள் - எவ்வித தங்கு தடையின்றி தெளிவான உச்சரிப்புடன் மிக சரளமாக ஆங்கில பாடம் நடத்தும் நேர்த்தியே தனி அழகு தான். புஹாரி சார் அவர்கள் - இன்முகத்துக்கு சொந்தக்காரர், இன்று வரை எப்போது சந்தித்தாலும் மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பன்முக ஆற்றல் ஒருங்கே அமையப் பெற்றவர். இவரின் கல்விப் பணி மென்மேலும் சிறப்புற்று விளங்கி நமதூருக்கு சிறந்த கல்விச் சேவையாற்றிட, அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் கொடுக்க மனமுவந்து துவா செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [29 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12500

என் மரியாதைக்குரிய ஆசான்கள் தேவராஜ் சார், புஹாரி சார் இவர்களிடம் நாங்கள் பயின்ற காலத்தை எண்ணி மகிழ்கிறோம்.

ஆசிரியர்களுக்கு மரியாதை இப்பொழுதும் எங்கள் ஆசான்களை கண்டால் ஒரு பயம் கலந்த மரியாதை . அப்படி ஒழுக்கமாக வழிகாட்டியவர்கள் மறைந்த கல்வி தந்தை L .K .அப்பா அவர்களும் ஜானய்யா சார் அவர்களும், சினிமா தியட்டரில் சென்று படம் பார்த்து வந்தால் கூட கண்டித்து நெறி படுத்தியவர்கள். தேவராஜ் சார் சொல்லியது போன்று இபோது வுள்ள மாணவர்கள் வொழுக்கம் மட்டு பட்டு வருகிறது என்பதை வேதனை யாக கூறி இருக்கிறாகள்.

மறைந்த பீட்டர் சார், ஜானய்யா சார் போன்றவர்கள் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் தொப்பி அணியாமல் இருக்க கண்டால் என்ன தம்பி வுன்னை பார்த்தால் காயல்பட்டினத்து காரன் போல் தெரிய வில்லை. ஏன் இப்படி தொப்பி அணியாமல் ஊர் கலாச்சாரத்தை மாற்றி விடாதே என்று கண்டிப்பார்கள் . இப்படி ஒழுக்கத்துடன் கல்வி புகுத்திய காரணத்தினால் தான் என் போன்ற மாணவர்கள் நன்றாக இருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ்.

என் அன்பு ஆசிரியர் புஹாரி சார் அவர்கள் வணிகவியல், ACCOUNTANCY , பாடத்தை எளிமையாக புரிய வைத்து அதிக மதிப்பெண் எடுக்க எனக்கு மிகவும் துணை புரிந்ததை எந்நாளும் மறக்க இயலாது . அதே போன்று தேவராஜ் சார் அவர்கள் ஒழுக்கத்தில் மிகுந்த கண்டிப்பு உடையவர்களாக திகழ்ந்தார்கள். இப்படி பட்ட ஆசிரிய பெருந்தகை களிடம் கல்வி பயின்றதை எண்ணி எண்ணி மகிழ்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் இவர்களின் ஓய்வு காலத்தை நல்ல முறையில் அமைந்து நீடுழி காலம் நோயின்றி வாழ துணை புரிவானாக. ஆமீன் என்றும் மாறாத அன்புடன்

L .K .பள்ளியின் முன்னாள் மாணவன்
M .E .L .நுஸ்கி
ரியாத் சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by D.SEYED ISMAIL (HONGKONG) [30 October 2011]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 12508

அஸ்ஸலாமு அலைக்கும்

(இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர்கள் மீதும் உண்டாவதாக)

பணி ஓய்வு பெரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்ததுக்கள். தாங்களனைவரும் சரீர சுகத்தோடும் மன அமைதியோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக. மறைந்த பின்னும் நன்மையை தேடித்தரும் தங்களின் தன்னலமற்ற கல்விப்பணியை இறைவன் பொருந்திக்கொள்வானாக.

I was a student of Dervaraj sir at Higher secondary school. After Akbar sir at high school, he was very initiative to learn english language. His way of teaching is unique and very impressive. I can't forget the nice moments of Devaraj sir's class, especially with friends s.h.mohideen & Dawood.

புஹாரி சாரின் பேச்சு மனதை நெகிழச்செய்து விட்டது.

இந்த வழியனுப்பு விழாவை முற்கூட்டியே அறிவிப்பு செய்து முன்னாள் மாணவர்களும் பங்கு கொள்ளும் விதம் நடத்தியிருந்தால் நன்றாக இருக்கும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் ஹனிபா சாரின் வழியனுப்பு விழாவில் இந்த முறையை பின்பற்றுமாறு நிவாகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [30 October 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 12509

May Almighty's blessing be upon you all !

They are memorable days of my entire school life with Elkay.

I am the student of all of you whom I had seen in the photographs. I am remembering the fumbling days with Mr. Prince Isac in Science stream. We had never seen he raised his voice in the Classroom while elaborate.

No words to say the preachings of Mr. Devaraj. Still I can remember the "Seven Stages of Man" by William Shakespeare during our Higher Secondary.

Mr. Buhary I wasn't studied under his roof. But we know him by other extra curricular.

You are all our ladders to achieve our heights. May Allah grant you all success in future endeavors.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. மூசா காக்கா சவூதி அரேபியாவுக்கு ஒரு டிக்கட் கிடைக்குமா .....??
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [30 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12524

இந்த செய்தியை பார்த்ததும் என்னுடைய பள்ளி பருவ கனகாலம் என் மனதை வருடி என் கண்களை குளமாக்கி செல்கின்றது . இத்தனை வருடங்களில் எத்தனை மாற்றங்கள் , எதனை இழப்புக்கள் . இருப்பையும் இழப்பையும் கணக்கிட்டு பார்த்தல் எஞ்சி இருப்பது இழப்புகள் மட்டுமே .....

அன்று மனதளவில் வெள்ளையாக இருந்தவர்கள் எல்லாம் இன்று வயதளவில் தலை வெள்ளையாகி காட்சியளிக்கின்றார்கள் . அதுமட்டுமல்லாமல் நம் பள்ளியிலேயே படித்து ஆசியராகி இருக்கும் எங்கள் சீனியர் மீரா தம்பி காக்கா அவர்களையும் , என்னுடைய ஜூனியர் ஹனிபா சார் அவர்களின் புதல்வர் கபூர் அவர்களையும் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாகவும், சிறிது பொறாமையாகவும் இருக்கத்தான் செய்கின்றது காரணம் இவர்கள் போல் படித்து ஆசிரியராகி இருந்தால் இந்த பள்ளி வாழ்க்கை திரும்பவும் கிடைத்திருக்குமே என்று ...

தேவராஜ் சாரிடம் நான் இரண்டு வருடம் ஆங்கிலம் கற்றேன் , மிகவும் அருமையான மனிதர் . எந்தவித ஆடம்பரமோ ,ஆணவமோ இல்லாத மனிதர். அவரிடம் கல்வி பயின்ற காலத்தை எண்ணி பெருமை படுகிறேன் . நான் படித்து முடித்து கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கின்றேன் என்று தெரிந்ததும் நல்ல படிச்சு நான் ஓய்வு பெரும் பொழுது நீ என் இடத்திற்கு வர வேண்டும் என்று கூறுவார். என்னுடைய விளையாட்டு புத்தியால் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். ஐய்யா தங்களுடைய ஓய்வு காலம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

பிரின்ஸ் ஐசக் சார் அவர்களுக்கு நாங்கள் தான் முதல் செட் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு முதன் முதலில் ஆறாம் வகுப்பில் ஆங்கில பாடம் எடுத்தது அவர்கள் தான். மிகவும் அமைதியான மனிதர். அவருடைய உடல் நல சரியாகி. ஓய்வு காலம் நிம்மதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

புகாரி சார் அவர்களுடன் நான் பயிலவில்லை என்றாலும் அவர்களிடம் எனக்கு எப்பொழுதும் தொடர்பு உண்டு, அவர்கள் ஒருவகையில் எனக்கு சொந்தமும் கூட. இவரது புதல்வரிடம் நான் படித்துள்ளேன். தங்களின் உரை என் கண்களின் நீர் வீழ்ச்சியை வரவைத்து விட்டது... தங்களின் ஓய்வு நல்ல படியாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்கின்றேன்.

மற்ற என்னுடைய எல்லா ஆசானுக்கும் என்னுடைய வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன்

அப்புறம் மூசா காக்கா சவூதி அரேபியாவுக்கு ஒரு டிக்கட் கிடைக்குமா .....??

செய்யது முஹம்மது புகாரி (எ ) முத்துவாப்பா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. என் பழைய பொற்க்காலம்...
posted by A.R.Refaye (Abudahbi) [30 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12538

என் வாரிசு நிகழ்காலம் இதோ!!!!!!!!!!!!!!!!

மக்களை ஸ்கூலில் சேர்ப்பதற்காக டிஸம்பரில் இருந்தே அலைச்சல் ஆரம்பமாகி விட்டது.அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்க க்யூவில் காத்திருந்து எங்கள் முறை வந்த பொழுது டேபிளின் முன் அமர்ந்திருந்த பெண் “பைவ் ஹண்ட்ரட் ருபீஸ்” என்றார்.மெலிதான அதிர்ச்சியுடன் சட்டை பையில் இருந்து எடுத்துக்கொடுத்த பொழுது அடுத்த அதிர்ச்சி.”திங்கள் கிழமைக்குள் சப் மிட் பண்ணிட வேண்டும்.சப்மிஷன் பீஸ் 5500.நாட் ரீஃபண்டபிள்” ext................''''''' எம் மக்களின் போர்க்களம்!!!!!!!!!!!

என் பழைய பொற்க்காலம்!!!!!!!!!!!!!!!!

கிளாஸ் ரூமுக்கு மெர்குரி லைட் போட்டாற்போன்ற ஒரு வெளிச்சம்...நெடிய ஒல்லியான உருவம்,ஆளை அசரடிக்கும் பளீர் என்ற அப்பொழுதுதான் சலவை செய்து வந்தாற்போன்று அசத்தலான நிறம்,பெரிய கருப்புநிற பிரேம் இடப்பட்ட அழுத்தமான மூக்கு கண்ணாடி,கைதேர்ந்த ஓவியன் போல் ஒருவர், உருவத்தைப்போன்றே அமைதியான குணம்,பரிவான வாஞ்சை,சட்டென்று புரியும் படி பாடம் நடத்தும் பாங்கு,அதே நேரம் அதீத கண்டிப்பு என்ற பல் கலவையுடன் பரிவாய் இருந்த ஆசான்கள்,வாழ்க்கை சக்கரம் உருண்டோடிய வேகத்தில் எங்களுக்கு கல்விக்கு துணையாய் வந்த ஆசிரியர் அனைவர்களையும் மனதில் மகிழ்வோடு நினைக்கும் தருணம் இது,

வாழ்வில் எத்தனை,எத்தனை மாற்றங்கள்,நிகழ்வுகள் ஆனாலும் இப்பொழுதும் ஆசிரியர்கள் அதே பாசத்துடன் என் பெயர் கூறி அழைத்து வாஞ்சையை பறிமாறும் பொழுது நான் மனம் நெகிழ்ந்து போவேன்.ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் நான் அவரை சென்றுபார்த்து வர மறந்தாலும் என்னை அவர்கள் குசலம் விசாரிக்கும் மறவாது பாசத்துக்கு விலை ஏது?

கடல் தாண்டி பொருள் ஈட்டுவது எங்கள் கீர்த்திதான்,என்றாலும் பொறியாளர்கள்,மருத்துவர்கள்,கல்வியாளர்கள்,தொழிலதிபர்கள் போன்றோர் உருவாக காரணியாக இருந்து,மாணவர்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் ஆசிரியர்கள் தலை முறைகள் கடந்தாலும் வாழ்த்த பட வேண்டியவர்கள்.

நீங்கள் எமக்கு போதித்த உண்மை பேசு,நன்மை செய்,தீமை அகற்று,பொய்மை மற,தூய்மை பேணு,பொறுமை அவசியம்,கடமை தவிரேல்,முடியாமை என்றில்லை,திறமை வெளிக்கொணர்,திறமை வளர், மடமை அகற்று,கொடுமை செய்யாதே,ஆமை போல் இராதே,தெரியாமை என்பது மதியீனம்,அறியாமை என்பது பலகீனம், முடியாமை என்பது முயற்சி இன்மை, கல்லாமை நன்றன்று................

எமது புகழுக்கும்,பெருமைக்கும் நீங்கள்தான் காரணம் மறுப்பதற்கு இல்லை நீங்கள் ஓய்வு பெற்றாலும் இன்னும் பல்லாண்டு நோய் நொடியின்றி, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எல்லா ஆசிரியர்களையும் மனப்பூர்வமாக வாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றேன்.

உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் என்றுமே நான் மாணவன்தான்

A.R.Refaye-Abudhabi(1-12 வரை படித்த மாணவன்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. பிரியா விடை...அளிக்கிறோம்....
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (jeddah-K.S.A.) [30 October 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12543

பணிவிடை... பெரும்... எனது... அன்பு.. ஆசிரிய... பெருந்தகைகளுக்கு... வாழ்த்துக்கள்....

நீங்கள்... பணிவிடை பெறுவது... எங்கள் பள்ளிக்கும்... இளைய... தலைமுறைக்கும்... ஒரு.. பெர்ரிய.. இழப்பாகும்.. என்ன பண்ண.. காலத்திற்கும் பதில்.. சொல்லவேண்டும்.. அல்லவா...

ஆசிரியர்.. திரு.தேவராஜ்..., ஜனாப் புஹாரி, ..மற்றும் அசிரியர்களுக்க்காக.. வல்ல இறைவனிடம்...பிராத்திக்கிறேன்... நானும்... எனது.. நண்பர்கள்... vocational குரூப்..1985 -1987 , திரு... தேவராஜ்.. அவர்களிடம்... ஆங்கிலம்... படித்தோம்.. மிகுந்த... மரியாதைக்கு உரியவர்.. கண்ணிய்யமாணவர்.........

அன்புடன் வாழ்த்தும் முன்னால் மாணவர்கள்..

The Royal vocational group batch - 1985 -87 .....
HABEEB MOHAMED NIZAR,
S.A. SYED AHAMED
A.M. SYED AHAMED
ABU KHAJA
ABDUL GAFFOR
KHAJA
SYED LEBBAI
FIROZ
KANNI RAJAN
M.T. SYED IBRAHIM.
A.SADAKATHULLAH, AND OTHERS......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Kaleel (Chennai) [30 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12556

புஹாரி சார் , பிரின்ஸ் சார் அவர்களிடம் நான் பாடம் படிக்க இல்லை. இருப்பினும் இருவரும் எப்பொழுதுமே அமைதிதான்..

தேவராஜ் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை, நேரம் தவறாமை என்று சொல்லி கொண்டு போகும் அளவுக்கு தகுதியுடையவர்.

அவர் மீது தவறு சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளமாட்டார். நமது ஊர் பெற்றோர் / மாணவர்களை பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார்.

நமது கேள்விகளை மதித்து பதில் தருவார். மாணவர்களின் கல்வி தேவைக்காக தனது சுய தேவைகளை காலம் கடத்துபவர்.

ஓயுவு பெரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் !!....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Minhaj (Riyadh) [30 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12570

Assalamualaikum,

Feeling very nostalgic to see our beloved Sirs , once they were off our current age retiring.

Elkay school, it was full of energy filled with Sirs of great qualities. School provided all the nutrition to face the current competitive atmosphere.

I could not identify the David Chellapa Sir though in the pictures, may be i could not recollect him now after 21 years. His house was like our second home.

Dear Sirs,
God bless you all.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by syedahmed (Kayalpatnam) [30 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12578

First and foremost, I wish the retired honourable sirs to have a bright and peaceful retired life with their families living as eternal happy life. And , I remembered my school life as gloomy with splendid well coach given by Buhary Sir & Devaraj Sir.

Their motive and ambition was only to pick up the students to come in forth as in higher level. That dreams became true and absolutely most of the students were tracking now in well position because of their boosting study in good and super coaching. Also, both sirs had earned the good name and fame in an around with our kayal people and the students.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. நம் பள்ளியில் தேவராஜ் சார் மற்றும் புஹாரி சார் இருவரிடமும் கல்வி கற்று இன்று ஆசிரியர் & அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்..........
posted by M.H.Abdul Gaffoor (kayalpatnam) [30 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12587

Mr.S.chidambaram
Mr.P.Anandakoothan
Mr.M.M.S.Abdul Mannan
Mr.M.Maharajan
Mr.S.A.N.Ahamed meera thamby
Mr.M.H.Abdul gaffoor
Mr.S.Mohaideen ahamed ali
Mr.K.paramasivan
Mr.K.Thangaramalingam
Mr.Sinda mather
Mr.T.Janet raj


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by SHAIK DAWOOD (MALDIVES) [30 October 2011]
IP: 124.*.*.* Maldives | Comment Reference Number: 12594

+2 படிக்கும் போது English essay வை மனனம் செய்து படித்த என்னை அதை புரிந்து படிக்க தனியாக ஸ்பெஷல் கிளாஸ் வைத்து கற்றுத்தந்த எனது ஆசிரியர் தேவராஜ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Riyaz Mohamed S H (Thaikka Street) [31 October 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12615

இரு பெரும் ஆசிரியர்களுக்கும் எனது முதற்கண் வணக்கம் இவ்விரு ஆசிரியர்களும் தனது கடமையை முறையே செய்து இருக்கிறார்கள் ஆசிரியர் ஹனீபா அவர்கள் சொன்னது போல். இவ்விருவருமே தலைமை ஆசிரியர் ஆவதற்கு தகுதி ஆனவர்களே இருந்தும் பெருந்தன்மையோடு இது நாள் வரை ஒத்துழைத்து இருக்கிறாகள் என்றால் இறைவன் அவர்களுக்கு மென்மேலும் சரீர சுகத்தையும் அவனது அருளையும் கொடுப்பானாக ஆமீன்.

இவ்விருவரும் எனக்கு +1 & +2 பாடம் நடத்தியவர்கள். புஹாரி சார் மூலம் படித்ததால் accounting job பண்றேன் , திரு தேவராஜ் அவர்கள் மூலம் நல்ல முறையில் இலக்கணத்தோடு ஆங்கிலம் கற்க முடிந்தது.

இவர்கள் இருவரையும் புகழ்ந்து கொண்டே போகலாம் ..

FINALLY MY GREAT SALUTE AND PRAYERS TO THEM .

OLD STUDENT FROM LKG TO +12 (YEAR 1983 + 1987)

Riyaz Mohamed S H
Thaikka Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by T.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam 04639280852) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12618

34. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில்
”இரு பெரும் ஆசிரியர்களுக்கும் எனது முதற்கண் வணக்கம்”:

Riyaz Mohamed S H (Thaikka Street) [Monday, October 31, 2011 IP: 118.*.*.* HONG KONG | Comment Reference Number: 12615

-----------------------------------------------

அஸ்த்தங்ஃபிருல்லா......ஹ்.

அவ்வல் கலிமா தையிபு லா இ லாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் றஸூலுல்லாஹி

வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை அல்லாஹுத்த ஆலா வைத்தவிர .முஹம்மதுர் றஸூலுல்லாஹி (ஸல்ல்லாஹு அலைஹி வ ஸல்லம்)அல்லாஹ்வின் திருத்தூராய் இருக்கும் என்று 2 வயதில் சொன்ன கலிமாதையிபாவை இறுதி மூச்சு வரை மறக்காமல் இருக்க நம் எல்லோருக்கும் கிருபை செய் யா அல்லாஹ் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by N.ABDUL KADER (COLOMBO) [31 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12622

அஸ்ஸலாமு அழைக்கும்.......

என் உடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.... என் பள்ளி பருவம் தான்....... அதிலும் ஹனிபா சார்,புஹாரி சார்,தேவராஜ் சார், இவர் போன்ற சார் களினால் தான் நான் இப்போது நல்ல நிலையில் இருகுரின்........ எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்ஹாலுக்கு நீண்ட அயுல்லி கொடுப்பணஹாக..... அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Mohamed Ali (Master Computer Academy) (Kayalpatnam) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12623

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஓய்வு காலம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் ‎இருக்க ‎எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

ஆங்கில ஆசிரியர் ‎தேவராஜ் அவர்கள் ‎சொல்லித் தந்த Grammar இன்றும் மனதில் பசுமரத்தாணி ‎போல் பதிந்திருக்கிறது ‎என்றால் அது மிகையாகாது.

உதாரணத்திற்கு Direct to ‎Indirect Speech ஆக ‎மாற்றுவதற்கு அவர் சொன்ன Formula SON / 123 S -> Subject ‎O -> Object -> No Change 1 -> 1st Person 2-> 2nd Person 3-> 3rd Person

ஆங்கில ‎‎ஆசிரியர்கள் யாராலும் சொல்லித் தரப்படாத ஒன்றாக இருக்கும் என்பது ‎என்னுடைய ‎எண்ணம். இது போன்று Grammar ல் எத்தனையோ சுலப ‎வழிமுறைகளை அவர்கள் ‎சொல்லிக் கொடுத்துள்ளார்கள். தற்போது ஆங்கில ‎பாடம் நடத்துபவர்களும் அந்த ‎Formula வை பயன்படுத்தினால் மாணவர்களால் ‎எளிதில் புரிந்து கொள்ள முடியும். ‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12629

நான் எல். கே. பள்ளியில் பயின்ற ( 1973 1977 ) நாட்களில் இவர்களில் யாரும் ஆசிரியராக பணிபுரியாவிட்டாலும் இந்த ஆசிரிய பெருமக்களுக்கு ஏன் இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்...!வாழ்க ...வளர்க...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Riyaz Mohamed S H (Thaikka Street) [31 October 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12636

அன்புள்ள TMR அப்பா அவர்களுக்கு, ஜசாகுமுல்லாஹ் ஹைரா, நான் இரு ஆசிரியரகளையும் கௌரவப்படுதவே வேறு வார்த்தை தெரியாததினால் தமிழில் எழுதி உள்ளேன், இதில் தவறு இருப்பின் அல்லாஹ் என்னை மன்னிப்பானாக.

உங்கள் அறிவுரைக்கும் மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. கனத்த இதயத்துடன் பிரியாவிடை...!
posted by L.A.K.BUHARY (Hong Kong) [31 October 2011]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 12651

வைர கிரீடத்தில் இருந்து இரு வைரங்கள் உதிர்ந்தன..! என்றால் அது மிகை ஆகாது..!

எங்கள் கண்ணியத்திற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஆசிரியப் பெருந்தகைகள் ஐயா திரு தேவராஜ் அவர்கள் (ஆங்கிலம்) & ஜனாப் M.A புஹாரி அவர்கள் (வணிகவியல்&Accountancy ) ,பணியிலிருந்து ஒய்வு பெறுகிறார்கள் என்று செய்தியை படிக்கும் பொழுது சுமார் 23 ஆண்டுகள் முந்தைய பசுமையான நாட்கள் மலரும் நினைவுகளாய் கண் முன் நிழலாடுகிறது..!!

அந்நாட்களில் அவர்கள் எங்களுடன் நட்புடன் பழகியவிதம், இனிமையாக பாடம் கற்று தந்த பாங்கு, அவர்களின் தியாக சேவையை நாமும் மறக்கமாட்டோம்..அது போல நம் பள்ளி வரலாறும் என்றென்றும் பறை சாற்றும்.

அத்துடன் ஐயா பிரின்ஸ் ஐசக் அவர்களும் உடல்நலம் காரணத்தினால் விருப்ப ஒய்வு பெறுகிறார்கள்.

தாங்கள் மூவரும் ஓய்வுபெறும் இந்த நாள்முதற்கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபையால் நல்ல ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும், நீடித்த ஆயுளுடனும், இந்த பள்ளியில் ஓய்வுபெற்றாலும், தங்களின் அனுபவம் நிறைந்த கல்வி பணியை வேறு எங்காயினும் தொடர்ந்து சேவையாற்றிட இருகரமேந்தி துவா செய்கிறோம்.

அரசாங்கத்தால் "நல்லாசிரியர் விருது" தங்களுக்கு கிடைத்ததோ இல்லையோ அது எனக்கு தெரியவில்லை.. தங்களிடம் பயின்ற என் போன்ற மாணவர்களுக்கு நீங்கள் என்றென்றும் நல்லாசிரியரே..!

ஆசிரியர் பிரின்ஸ் ஐசக் விரைவில் பூரண குணமடையவும் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5185; Comments - 16]
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3592; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved