Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:13:49 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7454
#KOTW7454
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 29, 2011
தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மூப்பனார் ஓடையைக் காப்பாற்றுமாறு நகர்மன்றத் தலைவரிடம் பொதுமக்கள் முறையீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3381 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மழைக்காலங்களில் காயல்பட்டினம் மேற்குப்பகுதி, வடமேற்பகுதி ஆகிய பகுதிகளில் தேங்கும் நீர், தாயிம்பள்ளி வளாகத்தின் தென்பகுதியில், பெரிய நெசவுத்தெருவை நோக்கிச் செல்லும் குறுக்குச் சாலையில் அமைந்துள்ள மூப்பனார் ஓடை என்றழைக்கப்படும் ஓடை வழியாக கடந்து சென்று, சல்லித்திரடு வழியாக கடலில் கலக்கும்.





இந்த மூப்பனார் ஓடை, நெசவுத்தெரு ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளிவாசலின் கிழக்குப்பகுதி சுற்றுச்சுவரையொட்டி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மழைக் காலத்தின்போது இப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டபோது, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இப்பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.



மூப்பனார் ஓடையின் ஒரு குறிப்பிட்ட பகுதி தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவ்வழியே செல்லும் மழை நீர் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 27.10.2011 அன்று நகரில் மழை நீர் தேக்கப்பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நகர்மன்றத் தலைவர் ஆபிதாவிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர்.



இந்த மூப்பனார் ஓடை அமைவிடத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் ஓடை வடிகால் பகுதியைப் பாதிக்காத அளவிலேயே கட்டப்பட்டுள்ளதாகவும், ஆண்டாண்டு காலமாக பேணப்பட்டு வந்த இந்த நடைமுறை பேணப்படாமல், ஓடை பாதையை தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும் பொதுமக்கள் அப்போது தெரிவித்தனர்.













மூப்பனார் ஓடை தொடர்பான முழு விபரங்களைப் பெற்று, ஆய்ந்தறிந்த பிறகு, அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, நியாய அடிப்படையில் ஆவன செய்யப்படும் என அப்போது அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

தனியார் ஆக்கிரமிப்பு என்று ஒருபுறம் கூறப்படும் இந்த ஓடையின் உட்பகுதியை, சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்களே குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி வருவது வேதனைக்குரிய உண்மை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தனியார் ஆக்கிரமிப்பிலிருந...
posted by Muthu Magdoom (Kayalpatnam) [29 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12440

சவுதின்னா கிங் அப்துல்லாஹ். kayalpatnam.com ன்னா? Very good. என்ன ஸாலிஹ் காக்கா என்னாச்சு உங்களுக்கு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தனியார் ஆக்கிரமிப்பிலிருந...
posted by Noohu Amanullah (Makkah) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12463

ஸாலிஹ் காக்காவிற்கு இனிதான் வேலை ஆரம்பம்.. இனி காக்காவின் நகர்வலம் படுஜோராக இருக்கும் காத்திருந்து பாருங்கள்.

பொது மக்களின் கோரிக்கை

காப்பாற்று காப்பாற்று மூப்பனார் ஓடையை காப்பாற்று

மூப்பனார் ஓடையை தனியாரிடம் இருந்து காப்பாற்று காப்பாற்று

அரசியல் உண்ணாவிரதம் இப்படி பண்ணனும் அப்போ தான் ஜெய்க்க முடியும்

காப்பற்றுவர்களா இந்த மூப்பனார் ஓடையை
பொறுத்து இருந்து பார்க்கலாம் .

நல்லதாக இருந்தால் ஏற்றுகொள்ளுங்கள் ;தவறாக இருந்தால் திருத்துங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மூப்பனார் ஓடையின் குறிப்பிட்ட சில பகுதி தனியாருக்கு சொந்தமானதே அரசு ஆவணங்களுடன் உள்ளது..
posted by Habeeb (Doha - Qatar) [29 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12499

இதுபற்றி நகரின் பெரும்பாளான மக்கள் கருத்து தெரிவிக்கையில் தனியார் ஆக்கிரமிப்பு என்று கருதப்படும் அப்பகுதி அந்த தனிநபருக்கு சொந்தமானது எனவும், அவர்கள் தண்ணீர் செல்வதற்கு வசதியாக மூப்பனார் ஓடை கட்டப்பட்டு இருக்கும் அகலத்தைவிட கூடுதலாகவே தங்களது சொந்த செலவில் பாதை அமைத்து உள்ளதாகவும் தெரித்தவர்கள், இப்பகுதியை திறந்து விடும் பட்சத்தில் அந்த தனிநபர் வீடு அமைந்துள்ள பகுதிக்குள் அப்பகுதி வழியாக நாய்கள் செல்வதாகவும், எனவே கம்பிகள் வைத்து தண்ணீர் வரும் பகுதியை அமைப்பதாகவும், இக்கம்பிகள் வைத்து அடைப்பதின் மூலம் குப்பைபை மற்றும் நாய்கள் உள்ளே வருவதை தடுப்பதற்காகவே இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். இப்பகுதி கம்பிகளால் அடைத்திருப்பதின் மூலம் தண்ணீர் செல்வதற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேலும் அந்த நிலத்திற்காகான அரசு ஆவணங்கள் அனைத்தும் சட்டப்படி தனிநபரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தனியார் ஆக்கிரமிப்பிலிருந...
posted by MOHAMED ISMAIL (Chennai) [30 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12552

இதுபோன்று நமதூரில் பெண்கள் பயன்பாட்டிற்கு என்று "நாராச ஓடை" முன்பு ஒருகாலத்தில் பழக்கத்தில் இருந்துவந்தது. தெருக்களுக்கு நேர் இணையாக பின்புறத்தில் பெண்கள் மாத்திரம் நடந்து செல்வதர்க்கென்றே இது போன்ற அமைப்பை முன்பு ஊர் பெரியவர்கள் எற்படுதிதந்திருன்தனர். ஆனால் இப்போது இதுபோன்ற அமைப்பை அங்கங்கே அவரவர்கள் இஷ்டத்திற்கு வளைத்து போட்டு கொண்டுள்ளனர். இதில் ஊர் பெரியவர்கள், கண்ணியவான்கள் என்று சொல்லப்படும் "நல்லவர்களும்" இதில் உண்டு. பெரிய நெசவுத்தேருவில் கட்டப்பட்டுள்ள ஒரு "Shopping Complex" இந்த நாரச பாதையை வளைத்துப்போட்டு காட்டப்பட்டுள்ளது ஊர் மக்களுக்கு தெரியாது. இவர்கள்தான் ஊர் கண்ணியவான்கள், பெரியவர்கள், ஊர் நலனில் அக்கறை கொண்டவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5194; Comments - 16]
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3602; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved