Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:52:40 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: இலக்கியம் குறித்த கருத்துக்கள்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
கருத்துக்கள்
எண்ணிக்கை
69
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
இலக்கியம் :இருபதும் - அறுபதும்! [ஆக்கம் - எஸ்.ஐ.புகாரீ] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தன் செவிகள் பாழானாலும் என் கவிகள் பாழாகாமல் காத்த ராசாத்தி
posted by mackie noohuthambi (colombo) [07 December 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46321

கவிதை தந்த புகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இளமையில் வராத புது கவிதை இது. தத்துவங்கள் சொல்லியே பழகிப் போன தமிழன்.

இடுக்கண் வருங்கால நகுக என்ற திருக்குறள் இந்த காலத்துக்கு பொருந்தாது. இடுக்கண் வருங்கால் பொறுமையாக இரு என்ற திருமறை வசனம் எப்போதும் பொருந்துகிறது.

முதுமையடைந்தவர்களை இளைய தலைமுறையினர் எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த திருமறையே சொல்கிறது. எனவே இளமையும் முதுமையும் என்ற கவிதையை இறைவனின் திருமறை நபிகளின் வழிமுறை நபி தோழர்களின் நெறிமுறை இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி எல்லோரும் நடந்து கொண்டால் இளமையை முதுமை சாடாது முதுமையை இளமை ஏளனம் செய்யாது.

காவோலையை பார்த்து சிரித்ததாம் குருத்தோலை ..ஆனால் குருத்தோலையை பார்த்து காவோலை சிரிக்கிறது என்ற உண்மை விளங்குவதில்லை.

நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும் என்ற ஒரு கவிஞன் பாடுகிறான்.

மனசுக்கு வயசு இல்லை என்கிறது ஒரு புதுக்கவிதை.. இளமை புதுமை இனிமை இவற்றைக் கடந்து வந்து முதுமை அடைந்தாலும் அப்படி இளமையாகவே இருக்க முடியும்.

மனித உடலில் ஒரு சதை துண்டு உண்டு. அது கெட்டுவிட்டால் எல்லாமே கெட்டுவிடும். அது சீராக இருந்தால் எல்லாமே சீராக இருக்கும். அறிந்து கொள்ளுங்கள் அதுதான் இதயம் என்ற நபிமொழியை மனதில் கொண்டு வாழ்ந்தால் முதுமையும் சுகமே...வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :நிழல் செய விரும்பு..! [ஆக்கம் - எஸ்.ஐ.புகாரீ] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Sri Lanka ) [29 January 2018]
IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45993

நல்ல கருத்து. நல்ல வரிகள். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :சென்று வா காதலே! சென்று வா!! [ஆக்கம் - ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ் B.E.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யஹ்யா காக்காவிற்கு....
posted by பா.சா. அஹ்மது ஸாலிஹ் (ஹாங்காங்) [28 June 2017]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 45635

உயர உயர பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகா
பல மரமது கண்ட தச்சனோ
ஒரு மரமும் வெட்டிட மாட்டான்

பழ மொழிகள் பகர்வதையே
பலமாக நீர் உரைத்தீர்
பல பேர்கள் பகர்ந்திடினும் (யான்)
முனைந்ததுவும் புதுமைன்யன்றோ

பாடுவதில் அறை குறை நான்
பாவம் அதை செவி மடிப்போர்
துறை மாறி சென்றவுடன்
பெரு மூச்சு விடுகின்றார்

உம் சொத்து மட்டுமிலை
என் அப்பன் பாட்டன் சொத்து
உமக்கு வந்த தைரியம் தான்
எமக்கும் வந்ததுண்மையன்றோ

கவிக்கோவின் கண்ணசைவில்
கவி மகனின் தூண்டுதலில்
கவி புனைய துணிந்தேனே
களிப்பினிலே திளைத்தேனே

தேனூறும் தமிழ் மொழியில்
பானூறு படைத்திடுவீர்
பாவம் இந்த சது வரிகள்
பயல் எனக்காய் விட்டு விடும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :சென்று வா காதலே! சென்று வா!! [ஆக்கம் - ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ் B.E.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்பான முறையீடு!
posted by YAHYA MOHIADEEN (Dubai) [27 June 2017]
IP: 31.*.*.* Romania | Comment Reference Number: 45628

குரலாலே தமிழுலகை
குறிவைத்து தாக்கிய நீர் - இன்று
விரலாலே எம் பிழைப்பில்
வீணே நுழைகின்றீர்

உம் வணிகம் எது அதுவோ
உவகையுடன் நீர் செய்யும் - அஃதன்றி
இத் தொழிலை நீர் செய்தால்
எம்பிழைப்பு எனவாகும்?

உம் தொழிலை என்றேனும்
யாம் இங்கு செய்தோமா
செய்தால் தான் மக்களெமை
மனதார ஏற்பாரா?

பெட்டிக்கடை போலசிறு
தொழில் செய்து வருமெமக்கு
போட்டியாய் நீர் வணிகம்
செயதுணிச்சல் வந்ததுவோ?

நற்குணமாய் நானுமக்கு
நயமுடனே வேண்டுகிறேன்
எக்கணமும் இதுபோன்ற
காரியத்தில் இறங்காதீர்!

இதயத்தின் ஓரத்தில்
ஈரம் சிறு வைத்திருந்து
இதுபோன்ற செயல்களிலே
இனிமேலும் இறங்காதீர்

கவிக்கோவின் கண்ணயர்வில்
கவியெழுத துணிந்தீரோ?
கவிமகனார் களத்தினிலே
கம்பீரமாய் நிற்கின்றார் - எச்சரிக்கை

யாம் எழுதி தந்த தந்த கவி உம்
கருவரையில் இனுமிருக்க
நீர் சுயமாய் இயற்றுவது
நியாயமாய் படுதாமோ?

சென்று வா காதலே! சென்று வா!!
உம் கவியழகை கண்டேன்
எம் குழுவில் இளந்தம்பி நீ
இணைந்ததால் மன மகிழ் கொண்டேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :பிப்ரவரி பதிநாளில்... [ஆக்கம் - குளம் ஷெய்க் அப்துல் காதிர்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [15 February 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45232

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

நிச்சயமாக உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை

நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான் அல்ஹம்துலில்லாஹ்

வானவில் என்பது நீர்த்துளியில் ஊடுருவிய சூரியக்கதிரின் பிரதிபிம்பமே மாறாக நீர்த்துளியல்ல

நீர்த்துளிகள் ஆவியானாலும் அதுமீண்டும் இந்த பூமியைவந்தடையும் அது நிரந்தரம்

வானவில் அந்தரம் வந்துபோகும் நிரந்தரமல்ல

நான் கடந்துவந்த பாதைகளில் என்னையும் உரசிச்சென்றதுதான் அந்த வானவில் நான் அது வானவில்தானென்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டேன் எல்லாப்புகழும் இறைவனுக்கே.

நாம் எப்பொழுதும் உறவுகளையு,ஊரையும்,உலகையும் காதலிக்கிறோம் அதனால் கூடியபட்சம் வலிகளில்லாமல் இந்தவரிகளை தரமுடிந்தது அல்ஹம்துலில்லாஹ் ஜஃ ஜாக்கல்லாஹ் ஹைர்

சகோ ஷேக்னா லெப்பை அவர்களே

உண்மைதான் சூப்பர் மச்சான் உங்கள் மை சொல்வது உண்மைதான் நீங்களும் உங்களைப்போலும் அநேகர்கள்தந்த ஊக்கம்தந்த தாக்கம்தான் எனது இந்த ஆக்கத்தை இத்தளத்தில் பதியமுடிந்தது இத்தளத்திற்கும் ஊக்கம்தந்த அனைவருக்கும் ஜஃஜாக்கல்ல்லாஹ் ஹைர்

பயனுள்ள ஆக்கங்கள் தரஇனியும் ஊக்கம்தாருங்கள் இன்ஷா அல்லாஹ் ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :பிப்ரவரி பதிநாளில்... [ஆக்கம் - குளம் ஷெய்க் அப்துல் காதிர்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [14 February 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45229

"அஸ்ஸலாமு அலைக்கும்."
கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!

கம்பன் வீட்டு கட்டு தரியும் கவி பாடும் என்று கேள்விப்பட்டேன். ஆனால், இன்று மாறாக குளத்தார் வீட்டு குயிலும் கவிதை பாடி உள்ளது. மீண்டும், தொடர்ந்து முயற்சி செய்து நாளைய தலை முறையினருக்கு எழுதுங்கள். அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்பது உணர்த்தி விட்டீர்கள். (உங்கள் ஆசான் நான், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தேன், இன்று நடத்தி காட்டி விட்டீர்கள். மகிழ்ச்சி உண்மையில்.

அன்புடன் உங்கள் சின்ன மச்சான்.,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :பிப்ரவரி பதிநாளில்... [ஆக்கம் - குளம் ஷெய்க் அப்துல் காதிர்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Saudi Arabia) [14 February 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45228

அருமையான வார்த்தைகள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :பிப்ரவரி பதிநாளில்... [ஆக்கம் - குளம் ஷெய்க் அப்துல் காதிர்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by SHEIKNA LEBBAI (DUBAI) [14 February 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45226

அருமையான அறவழி அறிவுரை கவிதை வடிவில் .இன்றைய இளைய தலைமுறைக்கு வாழ்த்துக்கள் சகோ

காதல் என்றும் தோற்பது இல்லை
சில காதலர்கள் தான் தோற்கிறார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :தாக்கிப் பொழிந்த வான் [ஆக்கம் - கவிஞர் இளம்பிறை] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:
posted by A.R.Refaye (Abudhabi) [06 December 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42373

மதம் பிடித்த மழையே நீ போட்ட கணக்கு தவறு, உன் வழி தடுத்தோம் அதற்காக இப்படியா எம்மை தன்டிப்பது,உன் கொடூர மழை மதத்தை அடக்க நாங்கள் மதத்தால் இனைந்தோம இதை கண்டபிறகும் நீ உன் வழி செல்ல மனமில்லையோ!!போய் வா

வெடித்திருக்கும் பூமி உன்னை வரவேற்க்க காத்திருக்கிறாள் உடனே மதம் தனிந்து இதமாய் மழையே சென்றுவா சென்(அன்னையை)காப்பாற்ற கரங்களை உயர்த்திகிறோம்.

Refaye


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :தாக்கிப் பொழிந்த வான் [ஆக்கம் - கவிஞர் இளம்பிறை] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வான் வழித் தாக்குதல்...
posted by kavimagan kader (BAHRAIN) [06 December 2015]
IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 42371

​நினைந்து நினைந்தே
ஞாபகம் செய
உள்ளம் முழுதும்
வெள்ளம் சூழ​​
நடையாய் நடந்தே
இடர்கள் கடந்த
முன்னோர் வாழ்வைச்
சொன்னாய் மழையே...

​அற்புதமான சிந்தனை தாங்கிடும் அருமையான வரிகள் இவை.... ஆடம்பர வாழ்க்கைக்கு ஏங்கிடும் இன்றைய தலைமுறையினருக்கு, பண்டைய நம் முன்னோரின் வாழ்வியல் போராட்டத்தை பிரதிபலித்த விதம் அருமை...

மனிதன் அத்து மீறும்போது வரங்கள் சாபங்களாக மாறிவிடுவதை ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கும் தாயக்குடி இளம்பிறை அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துக்கள்... ​


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
69
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved