Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:44:48 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9974
#KOTW9974
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 18, 2013
குடிநீர் கட்டணம் நிலுவையின்றி இருந்தால் மட்டுமே புதிய குடிநீர் வினியோக திட்டத்தின் கீழ் பகிர்மான குழாயில் இணைப்பு தரப்படும்! நகராட்சி அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2945 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குடிநீர் கட்டணம் நிலுவையின்றி இருந்தால் மட்டுமே புதிய குடிநீர் வினியோக திட்டத்தின் கீழ் பகிர்மான குழாயில் இணைப்பு தரப்படும் என காயல்பட்டினம நகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சியில் புதிய குடிநீர் வினியோக மேம்பாட்டுத் திட்டம் ரூ.29.67 கோடியில் மேற்கொள்ள வேலை உத்தரவு வழங்கப்பட்டு, பணி துவங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் உள்ள பகிர்மான குழாய்கள் மாற்றப்பட்டு, புதிய பகிர்மான குழாய் D.I.Pipe மூலம் மாற்றியமைக்கப்படவுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளுக்கான பழைய இரும்பு குழாய்கள் அகற்றப்பட்டு, புதிதாக இணைப்புகள் அனைத்தும் துருப்பிடிக்காத எம்.டி.பி.இ. (MDPE) குழாய்களைப் பயன்படுத்தி, நகராட்சியின் மூலம் மீண்டும் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

எனவே, குழாய் இணைப்புக்கு 31.03.2013 வரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக நகராட்சியில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

குழாய் இணைப்பை மீண்டும் பகிர்மான குழாயில் இணைப்பு ஏற்படுத்த, குடிநீர் கட்டணம் நிலுவையின்றி செலுத்திய ரசீது இருந்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும். தவறும்பட்சத்தில், குழாய் இணைப்பு வழங்கப்படாத்து மட்டுமின்றி, குடிநீர் வினியோக உபவிதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அனைவருக்கும் ஒரே சட்டம்.
posted by M.S.Kaja Mahlari (Singapore) [18 January 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25089

சரியான சட்டங்கள். அருமையான திட்டங்கள் . சாதக, பாதகமின்றி சரியாக நிறைவேற்றுங்கள் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மனசாட்சியை அடகு வைக்காமல் ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [19 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25116

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகராட்சியின் இந்த அறிவிப்பு என்னவோ நல்லதாக தெரிகிறது – ஆனால் செயலில் செய்து காட்ட வேண்டும் – அறிவித்ததோடு நின்றுவிடக்கூடாது.

மேலும் இப்போது சில தெருக்களுக்கு புதிதாக (சாலைகளை) ரோடு போடுகிறார்கள், இந்த புதிய ரோடுகள் போட்டு முடிந்தவுடனே அதை மீண்டும் தோண்டி இரண்டாவது பைப் லைனுக்கான வேலைகள் நடைபெறும், இப்படி வீணாக செலவும், சிறமமும் ஏற்படுவதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை செய்துக்கொள்வது நல்லது

----------------------------------------------------

“ நகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் உள்ள பகிர்மான குழாய்கள் மாற்றப்பட்டு, புதிய பகிர்மான குழாய் D.I.Pipe மூலம் மாற்றியமைக்கப்படவுள்ளது “ என்று ஆணையர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

பழுதடைந்த குழாய்கள் மட்டும் என்றில்லாமல் , பழைய குழாய்கள் எல்லாவற்றையும் மாற்றுவதுதான் நல்லது. ஏனெனில் மற்றக் குழாய்கள் எப்படியும் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் பழுதடையத்தான் செய்யும் – அதுமட்டுமல்ல பழையக்குழாய்கள் எல்லாம் தரம் குறைந்தவையாகவே உள்ளது.

ஆகையால் அத்தனை பழையக் குழாய்களையும் மாற்றுவதற்குண்டான ஏற்பாடுகளை நகர்மன்ற நிர்வாகத்தினர் செய்வது மக்களுக்கும் நகர்மன்றத்திற்கும் பல வகையிலும் நன்மையை தரும்

--------------------------------------------------

மேலும், இத்திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளுக்கான பழைய இரும்பு குழாய்கள் அகற்றப்பட்டு, புதிதாக இணைப்புகள் அனைத்தும் துருப்பிடிக்காத எம்.டி.பி.இ. (MDPE) குழாய்களைப் பயன்படுத்தி, நகராட்சியின் மூலம் மீண்டும் இணைப்பு வழங்கப்படவுள்ளது – என்றும் ஆணையர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக, துருப்பிடிக்காத குழாய்களாக அத்தனையையும் மாற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அந்த குழாய்களை மாற்றி மீண்டும் இணைப்புக் கொடுக்கும்போது அவர்களெல்லாம் முறையான அனுமதி பெற்றவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்த நகர்மன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவை நகர்மன்ற நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் – அப்போதுதான் முறையற்ற இணைப்புகள் தொடர்ந்து கொடுக்கப்படாமல் தடுக்க / தவிர்க்க இயலும்.

அப்படி ஒரு முறையான குழுவை அமைத்து செயல்படவில்லை என்றால் இன்று மக்களால் சொல்லப்படுகிற / நம்பப்படுகிற அனுமதி பெறாத இணைப்புகள் 4000 என்பது 8000 இணைப்புகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

----------------------------------------------

தெருக்களில் உள்ள பகிர்மான குழாய்களும், வீடுகளுக்கு கொடுக்கப்படும் இணைப்புகளும் பூமியின் மேல் மட்டத்திலிருந்து ஓர் அடி அல்லது ஒன்றரை அடி ஆழத்தில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது – அதனால் அடிக்கடி குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

நான்கு அடி ஆழம் அல்லது குறைந்தது மூன்றடி ஆழத்திலாவது குழாய்களை புதைக்க வேண்டும். மேலும் குழாய்களின் கனமும் கூடுதலாக இருக்க வேண்டும் – இப்போதுள்ள குழாய்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதாலும் அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாகிறது.

எனவே இது விசயத்திலும் நகர்மன்ற நிர்வாகம் கவனம் செலுத்தி புதிய திட்டத்தை உபயோகம் உள்ளதாக செயல்ப்படுத்த வேண்டும்

----------------------------------------------

என்னுடைய கணிப்பு நமது நகராட்சிக்கு மக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் பாக்கி ஏறக்குறைய 30,00,000 (முப்பது இலட்சம்) ரூபாய்கள் இருக்கும்.

ஆயிரம் இணைப்புகளுக்கு மேல் இரண்டு வருடமாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது தகவல்.

மக்கள் மனசாட்சியுடன் நடந்து கொண்டால் இவ்வளவு தொகை பாக்கி வராது – எனவே மக்கள் மனசாட்சியை அடகு வைக்காமல் விரைவாக குடிநீர் பாக்கியை கட்டி, தாங்கள் பருகும் நீரை தூய்மையாக்கிக்கொள்ளுங்கள்

-------------------------------------------------

நகராட்சி நிர்வாகமும் அறிவித்த தேதிக்குள் பணம் கட்டாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்குமா ? என்பதை மக்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. N S E மஹ்மூது காக்கா சொன்னதுபோல்
posted by M.Jahangir (kayalpatnam) [19 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25117

அன்புள்ள N S E மஹ்மூது காக்கா சொன்னதுபோல் அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புக்களை கண்டுபிடிக்கவும், அவைகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவும் அல்லாஹ்வால் நமக்கு தரப்பட்ட அருமையான நேரம் இது.

எனவே நகர்மன்றம் இந்த தருனத்தை தவறவிட உறுப்பினர்கள் என்ற முறையில் நாங்கள் விடமாட்டோம்.

எனவே ஏரேனும் அனுமதியில்லாமல் குடிநீர் இணைப்பு வைத்திருப்பார்கலேயானால் அவர்கள் முறையாக குடிநீர் இணைப்பை பெறுவதற்கு விண்ணப்பிப்பது சிறந்தது.

காலம் கடந்த பிறகு இதில் யாருக்கும் தயவுதாட்சனம் காட்ட நகர்மன்ற அதிகாரிகளை விடமாட்டோம் என்ற உறுதியை இந்த கருத்து பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved