Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:36:33 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7234
#KOTW7234
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 17, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக் குழுவில் இடம்பெறும் 25 பிரதிநிதிகள் வாக்களிக்க மாட்டார்கள்: ஐக்கியப் பேரவை அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3395 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் சம்பந்தமாக காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப்பேரவை ஏற்பாட்டில் செப்டம்பர் 8 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 4 - குறித்து கேள்விகள் பலரால் எழுப்பப்பட்டன. தேர்வுக்குழுவில் இடம்பெறும், ஐக்கியப்பேரவையினால் தேர்வுசெய்யப்படவுள்ள 25 பிரமுகர்களுக்கு, வாக்களிக்கும் உரிமை கிடையாது என ஐக்கியப் பேரவை சார்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலை முன்னிட்டு 08.09.2011 அன்று ஜலாலிய்யாவில் பேரவையால் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்புக்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் தலைவர் தேர்வுக் குழு பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில், தலைவரைத் தேர்வுசெய்யும் குழுவில், ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புக்களின் பிரநிதிகளோடு ஐக்கியப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படும் 25 நகரப் பிரமுகர்களும் இடம் பெறுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தலைவர் தேர்வுக் குழு தீர்மானம் குறித்து அவசியப்பட்டால் பரிசீலித்து, பின்னர் விளக்கமாக அறிவிக்கப்படும் எனவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

25 நகரப்பிரமுகர்கள் தலைவர் தேர்வில் வாக்களிப்பார்கள் என்று பேரவையிடம் ஊர்ஜிதம் செய்யாத ஒரு செய்தி வெளியானதால், சிலர் இத்தீர்மானம் குறித்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

நகரப்பிரமுகர்கள் 25 நபர்கள் உட்பட, அக்குழுவில் பங்கேற்கும் அனைவருமே சுமூகமான முறையில் தகுதியான தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமென்பதே பேரவையின் விருப்பமாகும். இது சம்பந்தமான விளக்கங்களை ஜலாலிய்யாவில் நேரடியாகவும், இணையதளம் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் பேரவையால் சொல்லப்பட்டுள்ளது.

இத்தேர்தல் பணியில் ஐக்கியப் பேரவைக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் கீழ்கண்ட முடிவை ஊர்மக்களுக்கு பேரவைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

தலைவர் தேர்வுக் குழு சம்பந்தமான தீர்மானத்தின் தெளிவான இறுதி விளக்கம்:

தலைவராகத் தேர்வு பெற வேண்டி அளிக்கப்படும் விருப்ப மனு மற்றும் சிபாரிசு மனுக்களை பரிசீலித்து, ஏக மனதாக தகுதியான தலைவரைப் பரிந்துரை செய்ய கீழ்கண்டபடி தேர்வுக் குழு அமையும்.

ஒவ்வொரு ஜமாஅத்தின் சார்பில் இரண்டு பிரதிநிதிகளும், பொதுநல அமைப்பு ஒவ்வொன்றிலிருந்து ஒரு பிரதிநிதியும், பேரவையால் தேர்வு செய்யப்படும் 25 நகரப் பிரமுகர்களும் இக்குழுவில் இடம் பெறுவர்.

இக்குழுவினர் மனுக்களை பரிசீலித்து ஏகமனதாக ஒருவரைத் தேர்வு செய்வர். வாக்களிப்பதன் மூலமே தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மேற்குறிப்பிட்ட 25 நகரப் பிரமுகர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள்.

ஜமாஅத்துக்கள் மற்றும் பொது நல அமைப்புக்களிலிருந்து தலைவர் தேர்வுக் குழுவில் இடம் பெற வாய்ப்பில்லாத, பொது வாழ்க்கையோடு தொடர்புடைய, அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதே இக்குழுவில் நகரப் பிரமுகர்களை இடம் பெறச் செய்வதன் நோக்கமாகும்.

எனவே மேற்கண்ட விளக்கத்தை ஏற்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் இத்தேர்தலை சந்திப்போம். எல்லாம் வல்ல இறைவன் நமது நன்நோக்கங்கள் நிறைவேற அருள்புரிவானாக! ஆமீன்.

வஸ்ஸலாம்.

இவண்,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை,
60/118, KTM தெரு,
காயல்பட்டினம்.

தேதி: 17.09.2011
தொலைபேசி: 04639- 285200
மின் அஞ்சல்: kayalpatnamperavai@gmail.com


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
காயல் S.E. அமானுல்லாஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Ibrahim Ibn Nowshad (Salem) [17 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8333

தெளிவான குழப்பம்.. நன்றி!

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. STILL REFINE MORE :...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [17 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8339

தேர்வுக் குழுவில் இடம்பெறும் 25 பிரதிநிதிகள் வாக்களிக்க மாட்டார்கள்: ஐக்கியப் பேரவை அறிவிப்பு...அஸ்ஸலாமு அழைக்கும் ...

ஐக்கிய பேரவை அனேகமான ஒட்டு மொத்த ஊர் மக்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து இந்த முடிவு எடுத்து உள்ளது வரவேற்க தர்க்கது ///.. ஆனால் இன்னும் பேரவை, தனது தாராள , தாள குணத்தால் தன்னை refine செய்ய வேண்டும் என்பதே நம்மூர் நலம் விரும்பிகளின் ஆவல்..

ஐக்கிய பேரவை என்பதே ஊர் ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்பின் ஒட்டு மொத்த representative என்று இருக்கும் போது , , நகரமன்ற தேர்வு குழுவுக்கு தனியாக ஐக்கியப் பேர சார்பில், கலந்து ஆலோசிக்க கூட , தனியாக 25 பேர் தேர்வு செய்ய படுவது, ஐக்கிய பேரவை தன்னை, மற்றற்ற மற்ற ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்பில் இருந்தும் , சட்ட்று மேலோங்கி , தன்னை வல்லரசாக நினைப்பதை போல் தொன்றுக்கியது.. கிட்டத்தட்ட அமெரிக்க , UN இல் இருப்பது போல்.. மனதில் உள்ளதை இறைவன் ஒருவனே அறிவான்.. எனது கருத்தில் தவறு யுந்தால் மன்னிக்கவும்.. எனவே, ஐக்கிய பேரவை, தன்னல மில்லாமல், ஊருக்காக மட்டும் உழைக்கும் அமைப்பு எனப்தால், விதி 4 முழுவதுமாக தளத்தி, ஜமாஅத் மற்றும் நல அமைப்பு பியதி நிதிகள் மட்டும் பைடத்து, தேர்வு குழு மைப்பது தான் அனைவருக்கும் நல்லது..

இன்னும் ஒரு படி மேல் போய் ஐக்கிய பேரவை தன்ன super refine பண்ண வேண்டும் என்றால், ஐக்கிய பேரவை என்றாலே, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு என்று prove பண்ணும் வித மாக, பேரவை தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைத்து ஜமாஅத்தினரால் தேர்வு செய்ய பட்ட வராக இருக்க வேண்டும்.., நிரந்த தலைவர், நிரந்தர நிவாகிகள் என்ற நிலையை மாற்றி , இனி வரும் காலங்களில், அனைத்து ஜமாஅத் முடிவுடன், காலத்திற்கு ஏற்ப பதவியை மாற்றி, இளைஞ்சர்களுக்கு வாய்பளித்து, , பேரவைக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்.. இது இந்த தேர்தல் நேரத்தில் கூறி குழப்புவதாக என்ன வேண்டாம்.. தேர்தலுக்கு பின் , கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்..

வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும், பொருளாதாரத்திலும்,, பொது சேவையிலும், BROAD MINDEDNESS லும், தன்னலமற்ற தொண்டிலும் , என்னை விட அதிகம் உள்ள, ஐக்கிய பேரவை நிர்வாகிகளை, புண்படுத்த வேண்டும் என்று எண்ணத்தில் இதை எழுத வில்லை ..புன்படித்தி இருந்தால் மன்னிக்கவும்ம். ஊர் நலனில் அக்கறையுடன் முடிக்கிறேன்..

வஸ்ஸலாம்

டாக்டர் முஹம்மது கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Shahul Hameed (Hong Kong) [18 September 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 8350

டாக்டர் அவர்களே ! நம் ஊர் ஒற்றுமைக்காகதான் ஐகிய பேரவை பாடுபடுகிறது. உங்களால் ஊர் ஒற்றுமை அடையும் என்றால் ஐகிய பேரவை தேவையில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam) [18 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8351

ஒரு சமுதாயம் தன்னை மாற்றிக்கொள்ளாத வரை இறைவன் அதை (அந்த சமுதாயத்தை) மாற்றுவதில்லை. (அல்-குரான்) (வசன எண் ஞாபகத்தில் இல்லை)

08 -09 -2011 அன்று "ஆலோசனை கூட்டம்" என்ற பெயரில் ஜலாலிய நிகாஹ் மஜ்லிஸில் நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டபோது இந்த விளக்கத்தை அளித்திருந்தால் இவ்வளவு விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியதில்லை.

A positive move.

( இன்னும் பல பள்ளிகளில் ஜமாஅத் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் ஐக்கிய பேரவை சார்பில்15 - 09 - 2011 அன்று வெளியிடப்பட்ட நோட்டிசில் கூட இந்த விளக்கம் தரப்படவில்லை. மாறாக தங்களது 11 தீர்மானத்தையும் எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி ஒரு image ஐ வெளிப்படுத்தினார்கள்.)

"கேள்வி கேட்காத சமுதாயம் முன்னுக்கு வருவதில்லை". இது எங்கேயோ கேட்ட குரல்.

(பல கேள்விகளுக்குப் பிறகுதான் ஐக்கிய பேரவை தனது தொலை பேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஐ வெளியிட்டுள்ளது)

Anyway, It is a good development. I think, now we can move on.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Fuad (Singapore) [18 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8353

அஸ்ஸலாமு அலைக்கும். உள்ளாட்சித் தேர்தல் தேர்வுக் குழுவில் இடம்பெறும் 25 பிரதிநிதிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஐக்கிய பேரவையின் முடிவு பாராட்டத்தக்கது. அதனால் அந்த 25 பேர் கொண்ட குழுவை கலைத்து விட்டு, ஜமா அத்துகள் மற்றும் பொது சேவை நிறுவங்களின் உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வார்டு உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர் ஆகியோரை ஐக்கிய பேரவை சார்பில் மக்களுக்கு அறிவிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்க ஒற்றுமை !!
posted by M. Sajith (DUBAI) [18 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8358

ஐக்கிய பேரவையின் நடவடிக்கையை, அதில் உடன்பாடு இல்லத ஏதாவது ஒரு கருத்தை சுட்டிக்காட்டினால் ஊருக்கு துரோகம் செய்வது போலவும், ஊர் ஒற்றுமையை குழிதோண்டிப் புதைப்பது போலவும், உணர்ச்சிவசப்பட்டோ அல்லது காழ்ப்புணர்ச்சியுடனோ நடந்து கொள்வதாக ஒர் புதிய மாயயை உருவக்க துடிக்கும் விவேகமான நம்மவர்களுக்கு டாக்டர் கிஷார், மற்றும் புவாது மாமா அவர்களின் இந்த வேண்டுகோளும் அது போல தெரிந்தால் ஆச்சர்யமில்லை.

25ல் உள்ள பிடிவாதம், என்னைப்போல விவேகமில்லாதவருக்கு இன்னும் புரியவில்லை -இதுபோல பலரும் இருக்கத்தானே செய்கிறார்கள் கேள்வியா கேற்கவா செய்கிறர்கள் ஊர் ஒற்றுமைக்காக பொத்திக்கொன்டுதானே இருகிறார்கள் - நாமும் இருப்போம்.

(அன்புச்சகோதரர் அபுதாபி அப்துல்காதர் ஆலோசனை படி இதுவரை நான் போஸ்ட் செய்த கமென்ட் எல்லாம் படித்த பின்னரும் அவர் சொல்லும் என் தன்மை புரியவில்லை - ஞாணம் போதவில்லை போலும்!! )

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இந்த பேரவை துவங்கப்பட்டது நம்மில் பலரும் அறிவோம் - அதில் அனைவருக்கும் ஒத்த கருத்து இருந்தது வெற்றிகரமாக நடந்தேரவும் செய்தது. அதுவே முழு அங்கீகாரம் என துவங்கி இன்று ஊரில் உள்ள ஆண்டாண்டு காலமாக பொதுச்சேவை நிருவனங்களுக்கு எல்லாம் சுப்ரீம் அமைப்பாக்கும் முயற்சி - மிகச்சிறப்பாக அரங்கேற்றப்படுகிறது. - கருத்து ஏதும் தயவுசெய்து சொல்லாதீர்கள் - GOOGLE ERA வில் உலகுக்கே தெரிந்துவிடும்.

விட்டுப்போன ஆதிக்கத்தை தக்கவைக்கும் சுப்பர் முயற்சி செய்யும் இந்த அமைப்பும் சமீபத்தில் வந்ததுதான் என்பது கட்டாயம் மறந்தே ஆக வேண்டும் - இந்த நிர்வாகம் ஊரில் உள்ள பொதுமக்களா தேர்ந்தெடுத்தார்கள்? நிர்வாக தேர்தல் எப்போ நடக்கும்? இந்த அமைப்பின் 'பைளா' என்ன? - அதெல்லாம் தெரியக்கூட ஆசைபடக்கூடாது - இதெல்லாம் சமூக குற்றம் பெரியவர்களை, சிறந்தவர்களை, தனவந்தர்களை அவமதித்தவர்களாகிவிடுவோம்.

ஊர் ஓற்றுமை பாதிக்கும் - GOOGLE ERAவில் நமது WEAKNESS தெரிந்துவிடும்.

வாழ்க ஒற்றுமை !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mackienoohuthambi (kayalpatnam) [18 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8362

ஐக்கிய பேரவையின் தீர்மானத்துக்கு எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள செய்தி நிம்மதி தருகிறது.

ஜமாத்களில் இருவர், பொதுநல அமைப்பில் ஒருவர், ஐக்கிய பேரவையில் இப்போது அங்கம் வகிக்கும் உறப்பினர்கள் இவர்கள் கூடி விருப்ப மனுக்களைப் பரிசீலித்து ஏக மனதாக ஒரு முடிவை மக்களுக்கு அறிவிக்கலாமே. மெகா, ஓமேகா, ஒருங்கிணைப்பு கமிட்டி எல்லோரும் இந்த ஜமாத்களில் அடங்குவார்கள் என்பதால் கருத்து வேறுபாடுகள் களையப்பட வாய்ப்புண்டு.

ஐக்கிய பேரவை ஈமெயில் தொலைபேசி குறிப்பிடப்பட்ட latest அறிக்கை ஒன்றை உடனடியாக மக்களுக்கு கிடைக்க செய்தால் நல்லது. எல்லா ஜமாத்களின் கூட்டமைப்பு என்பதை இப்போது ஊர்ஜிதப்படுதலாம் எனபது எனது தாழ்மையான கருத்து.

தகவல் அறியும் உரிமை, வெளிப்படைத்தன்மை என்று நாட்டு நடப்புகள் இப்போது வெட்ட வெளிச்சமாக அடித்தட்டு மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் இருப்பதால் எல்லா அமைப்புகளும் எதையும் மக்களிடம் மறைக்க தேவை இல்லை.

ஒற்றுமையை நாடுவோர் விட்டுக்கொடுக்க தயாராக வேண்டும். ஊர் நன்மையே மேலோங்கி நிற்கவேண்டும். இக்லாசுடன் இருதய சுத்தியுடன் செயல்பட்டால் அல்லா நமக்கு வெற்றியய்தருவான். இல்லையேல் நம்மை எதிரிகளின் கையில் சிக்க வைத்து சோதிப்பான். இதுதான் கடந்த கால கசப்பான உண்மைகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.) [18 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8366

நல்ல முடிவுதான், அந்தந்த ஜமாத்தார்கள் அந்த பகுதியின் தகுதியானவர்களைதான் தெரிவு செய்வர், அப்படிஇருக்கும்போது ஐக்கிய பேரவை மூலம் 25 பிரதிநிதிகள் என்பது சர்ச்சையை ஏற்படுத்தும்போது அதை தவிப்பதுதானே நல்ல ஜனநாயகத்திற்கு அடையாளமாகும். அப்படி மக்கள் நலமும், மனநிலையும் அறிந்து செயல்பட்டால் ஊரில் இன்னும் புதிய புதிய இயக்கங்கள், அமைப்புகள் உருவாகாமல் இருக்கும், நமது ஐக்கியம் மேலோங்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Salihu (New Delhi) [18 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8406

25 பிரதிநிதிகளுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால் நாங்கள் அவர்களை தேர்வு செய்யத்தான் செய்வோம். என்பது "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போலுள்ளது.

8 ம் தேதி அன்று ஜலாலிய நிகாஹ் மஜ்லிஸில் நடந்த கூட்டத்தில் இந்த விளக்கம் தரப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை இப்போதாவது விளக்கம் தரப்பட்டதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.A. CADER (KAYALPATNAM) [18 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8409

The latest decision by peravai will be welcomed by most people who were having contrary opinions about the intensions of peravai in selecting 25 people of their choice and then trying to influence the decision of the town jamat representatives. Still many of the jamats have not responded to their decision yet. At least from this let us learn the lesson and in the future whenever they convene any such meetings they must allow the representatives to discuss and put forward counter aurguments before finalising any decision. Prepared resolutions and forcing them on the people is not only undemocratic but also will be counterproductive.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. சகோதரர் ஷாகுல் ஹமீதுக்கு..
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [18 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8410

சகோதரர் ஷாகுல் ஹமீது (ஹாங் காங்)

அஸ்ஸலாமு அழைக்கும்..

என்னுடைய கருத்தில் எந்த இடத்திலும், ஐக்கிய பேரவை பற்றியோ அல்லது அதன் நிர்வாகிகள் பற்றியோ குறைத்து கூற வில்லை.. I HAVE HIGH REGARDS AND ESTEEM FOR MEMBERS OF ஐக்கிய பேரவை FOR THEIR BROADMINDED SERVICE TO KPM .

நானும் ஐக்கிய பேரவை ஊர் ஒற்றுமைக்காகத்தான் உழைக்கிறது என்று , ஆணித்தரமாக கூறியுள்ளேன். என் கருத்துக்கள், இன்னும் ஐக்கிய பேரவையை இன்னும் மேழுகூற்ற ,இன்னும் பிரகாசிக்க , மிகுந்த தாழ்மையுடன் தான் தெரிவித்து உள்ளேன்.. மீண்டும் என் கருத்தை படித்து பார்க்கவும்..எந்த இடத்திலும் ஐக்க பேரவை வேண்டாம் என்று குறிப்பிடவே இல்லை..

இறுதியில், என் கருத்துகள், ஐக்கிய பேரவை பெரியோர்களை காயபடுத்தி இருந்தால் அதற்க்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன்....கருத்தை கவனமாக படித்து விட்டு எதிர் கருத்து தருமாறு சகோதரை கேட்டு கொள்கிறேன்.

வஸ்ஸலாம் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abu Rushda (Dubai) [18 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8414

Well said Dr.Kizar. Your statement reflects the pulse of (being a doctor) kayalyts who loves equality and self respect.

It is sad to note, in most of the Muslim organizations, whether it is social or political we prefer to have leaders unto death. Leadership, which comes as a responsibility latter become privilege to them and the result is well known.

Peoples with financial and political clout should come forward to render their service to the society without a prerequisite of ornamental positions. Lacking that, their service will stand negated at the sight of Almighty.

Moderator: சகோ. அபூ ருஷ்தா அவர்களே... தயவுசெய்து தங்களது அசல் பெயரையும், விரும்பினால் புனைப்பெயரை அடைப்புக்குறிக்குள்ளும் இணைத்து இனி வருங்காலங்களில் கருத்துப் பதிவு செய்து ஒத்துழைக்கவும். சில நிர்வாக வசதிகளுக்காக இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ஐக்கியப் பேரவை பெரியோர்களுக்கு எமது பாராட்டுகள்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [19 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8448

ஐக்கியப் பேரவை தேர்வுக் குழுவில் இடம்பெறும் 25 பிரதிநிதிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அறிவிப்பு ஊர் மக்கள் அனைவர்களும் பாராட்ட கூடியதாக உள்ளது.. ஐக்கியப் பேரவை பெரியோர்களுக்கு எமது பாராட்டுகள்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி சி கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by N.M. MOHAMED ISMAIL (Dubai) [26 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8787

டாக்டர் கிஸார் எழுதிய கருத்து பொதுவான கருத்து ஒரு முழுமையான அமைப்பு கடைபிடிக்க வேண்டிய செயல்கள் அனால் இந்த நேரத்தில் இந்த மாதிரி கருத்தை தவிர்க்கலாம் சேவையே குறிக்கோளை கொண்டு ஆரம்பிக்க பட்டது ஐக்கிய பேரவை என்பதில் எந்த ஐயமும் இல்லை let them continue their services its a better oportunity for our kayal welfare.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved