Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:42:33 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15114
#KOTW15114
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 31, 2014
வாழ்த்தவா? வசவவா?? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4011 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் இது திருமண சீஸன். பள்ளிவாசல்கள், திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள் ஒருபுறமிருக்க, வழமை போல நகரின் பல பகுதிகளில் சாலைகளை அடைத்து பந்தல் போட்டு திருமணம் நடத்தும் வழமையும் இருந்தே வருகிறது.

இப்பழக்கம், நகர மக்களுள் பெரும்பான்மையோரால் சகித்துக்கொள்ளப்பட்டதுதான் என்றாலும், இவற்றால் ஆதங்கப்படுவோரும் இருக்கவே செய்கின்றனர்.

சாலைகளில் பந்தல் போட்டு திருமணம் நடத்துவோர் பலர், குறைந்தபட்சம் ஒரு ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனமேனும் கடந்து செல்ல பக்கவாட்டில் பாதை விட்டிருப்பர். அதுபோல, திருமண நிகழ்ச்சிகள் நிறைவுற்ற உடன், பணியாட்களைத் துரிதப்படுத்தி சாலையை அடைத்திருக்கும் பந்தல் கீற்றை உடனடியாக அகற்றி, போக்குவரத்துக்கு வழிவிடுவர். ஆனால், சில இடங்களில் இந்த நடைமுறையும் மீறப்பட்டு வருகிறது.

காயல்பட்டினம் குறுக்கத் தெரு ஒரு குறுகிய தெருவாகும். வாகனங்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் பல்வேறு தேவைகளுக்காக இந்த முக்கிய தெருவைக் கடந்தே செல்ல வேண்டிய நிலையுள்ளது. இன்று (டிசம்பர் 31 புதன்கிழமை) இத்தெருவின் மேற்கு - கிழக்குத் திசைகளிலுள்ள இரு முனைகளிலும் திருமணப் பந்தல் அமைத்து, சாலையும் தென்னங்கீற்றுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒரேயொருவர் மட்டும் கடந்து செல்லும் வகையில் சிறிய பாதை விடப்பட்டுள்ளது.









எந்த நிகழ்ச்சியும் நடைபெறாத நிலையிலும், 13.00 மணி வரை - சாலையை அடைத்த நிலையில் இப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவ்வழியே கடந்து செல்ல வந்த வாகன ஓட்டிகள், திருமண வீட்டாரை வசைபாடியவர்களாக வேறு பாதையில் திரும்பிச் சென்றனர்.



பந்தல் கோளாறு குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [31 December 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38683

மணமக்களின் வீடு வசதி பற்றகுறையே, தெருவை அடைக்க காரணம். குறைசொல்ல ஒன்றும் இல்லை. திருமண நிகழ்வு நேரம் மற்றும் தானே, எல்லா நாளிலும்மா? மணமக்களை வாழ்த்துவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack sma (jeddah) [01 January 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38687

இன்று ஊரில் ,அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் சிறிய பெரிய அளவிலான பள்ளிவாசல்கள் , பெண்கள் தைக்காக்கள் , திருமண மண்டபங்கள் பல உள்ளன. இப்படி தெருவை அடைத்து அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுப்பதைவிட , தகுதிக்கு ஏற்றாற்போல் பொது இடங்களை பயன்படுத்தலாம் .

நகராட்சி , முகதாட்சண்யம் பாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலொழிய இதற்கு தீர்வே வராது .

தெருவை அடைத்து விருந்து வைப்பது திருமண வீட்டாரின் தவறு .

அடைப்பை எடுத்தபின்பும் , சில நேரங்களில் பந்தல் அப்படியே பல நாட்களுக்கு இருக்கும் . இது யார் தவறு என்ற ஆராய்ச்சியில் கிடைத்த தகவல் .... பந்தல்காரன் அடுத்தடுத்து சுமார் ஒருவார இடைவெளியில் நடக்கும் இரு வீட்டாரின் நிகழ்வுகளுக்கு ஆர்டர் எடுத்திருப்பான் . ஒரு வீட்டு நிகழ்வு முடிந்தபின் , அந்த பந்தலை கழற்றி அவனுடைய ஊர்ருக்கு கொண்டுசென்று , மீண்டும் கொண்டுவர ஆகும் செலவினங்களை மிச்சப்படுத்த , பந்தலை அப்படியே விட்டு விடுவாராம் . நகராட்சி இதுபோன்ற சமயங்களில் பந்தல் பொருட்களை அபகரித்தால் அவனுக்கும் புத்தி வரும் .

திருமண வீடு மட்டுமல்ல , கந்தூரி விழாக்களின்போதும் தெருமுழுக்க பந்தல் போடுவார்கள் , ஊர் முழுக்க ஒலிபெருக்கியை கட்டி அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு ........... இந்த ஜென்மத்தில் வராது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by A.B.Samu (Dubai) [01 January 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38688

நாளை நம்ம வீட்டிலும் கல்யாணம் நடக்கணும் என எண்ணுபவர்கள் வாழ்த்துவார்கள். காயலில் இது தான் norm . குறைய சொல்லுமுன் alternative தீர்வை சேர்த்து சொன்னால் நல்லது.

கல்யாண வீட்டு பண்டல் வரை photo போட்டு நெட் ல விமர்சனம் பண்ணுவது சம்பத பட்ட வீட்டுகாரர்களை காய படுத்தும் செயல். Please avoid that.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack sma (jeddah) [01 January 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38689

AB Samu அவர்களின் எண்ணங்கள் முற்றிலும் தவறு . இன்றைய சூழ்நிலையில் நமதூரில் அவரவர் தகுதிக்கேற்ப பள்ளிவாசல்களில் இடங்கள் நிறைய உள்ளது . பந்தல்காரனுக்கு கொடுக்கும் தொகையில் பாதியளவிற்குகூட பள்ளிவாசல் ஜமாத்தில் வசூலிக்க மாட்டார்கள் . பிறகு எதற்கு பந்தல்காரனுக்கு அதிக தொகையை கொடுத்து தெருவை அடைத்து அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்கணும் ?

நீங்கள் எந்த பகுதியை சார்ந்தவர் என்று தெரியவில்லை . பல வருடங்களுக்குமுன் எங்கள் பகுதியில் நடந்த சம்பவம் . பஜாரிலிருந்து வருபவர்கள் கோமான் தெரு செல்ல வேண்டுமென்றால் , குத்துக்கள் தெரு , சதுக்கை தெரு , நெய்னார் தெரு இந்த மூன்று தெருக்கள் வழியாக மட்டுமே செல்ல முடியும் . அன்று ஒரு திருமண விருந்து . குத்துக்கள் தெரு மெய்தீன் பள்ளியில் ஒரு அடைப்பு . பெரிய சதுக்கை அருகில் ஒரு அடைப்பு . பெரிய பள்ளி அருகில் ஒரு அடைப்பு .கோமான் தெருவிற்கு செல்பவர்கள் இந்த மூன்று திருமண வீட்டாரையும் வசைபாடி சென்றார்கள் . இது தேவையா ?

நானும் அந்த வழியாக வந்தேன் , சதுக்கை தென்புறம் செல்ல வேண்டும் .முடியவில்லை . ஜாபர் சாதிக் டாக்டர் முடுக்கில் நுழைந்து வந்தேன் . உள்ளே இருந்த வீட்டு பெண்மணிகள் ஒரே சத்தம் , ஆண்கள் எதற்காக இங்கே வரவேண்டும் என்றார்கள் . நானும் காரணத்தை சொன்னேன் . இருப்பினும் என்மீது வசைப்பாட்டு . இத்தனைக்கும் அந்த வீட்டு பெண்கள் அத்தனைபேரும் எனக்கு தெரிந்தவர்கள்தான் .

இப்போது சொல்லுங்கள் , இப்படிப்பட்ட திருமண வீட்டாரை வாழ்த்தவா அல்லது வசைபாடவா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஊர் நலன் நாடும் உன்னத குணம்!!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [01 January 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38690

சில வீட்டு பந்தல்களால் மட்டுமல்ல பல மாதங்கள் நடக்கும் பல நிகழ்ச்சிகளாலும் (விவரிக்க விரும்பவில்லை) பல விதத்திலும் பாதிப்புக்குள்ளாகிறோம்.

வீட்டில் வயது முதிர்ந்த முதியோர்கள்,நோயாளிகள்,பள்ளி மாணாக்கள், படுத்துறங்கும் பச்சிளம் குழந்தைகள் வரை ஒலிபெருக்கி வதைப்பிலிருந்தும், வீத்யில் உண்டாகும் இரைச்சல், கரைசல்களாலும் எந்த அளவிற்கு தொந்தரவுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் மௌனமாக மனம் நொந்து வாழ்ந்து கொண்டிருக்க்றோம் என்பதை விவரிக்க வார்தைகள் இல்லை.

இது இந்த ஊரின் காலத்தின் கட்டாயமோ அல்லது கலாச்சாரத்தின் கெடுபிடியின் கட்டாயமோ தெரியவில்லை!

பந்தல் போடக்கூடாது என்ற நோக்கில் இந்த இணையதளத்தாரின் செய்தியுள்ளதாக நான் நினைக்கவில்லை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போட்டால் நல்லதல்லவா,பொதுமக்களும் முணு,முணுத்துக்கொண்டு போகிறார்களே என்கின்ற எதார்த்தத்தை முன்னிலைபடுத்தி இருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன்!

வீத்யில் அமைக்கும் கல்யாணப்பந்தலை ஒரு சிறிய இடைவெளியிட்டு இரு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு அமைத்து நிகழ்ச்சி முடிந்தவுடன் உடனே அவிழ்த்து போக்குவரத்திற்கு உதவி செய்தால் நல்லது!

விருந்து போன்ற சமயங்களில் ஒருசில மணித்துளிகள் ரோட்டை அடைப்பது தவிர்க்க முடியாததுதான்,அதை பொது மக்களும் நமதூர் வடிவமைப்பை புரிந்து கொண்டவர்களாகவும்,அந்த வீட்டு கல்யாண நிகழ்வுக்கு நாமும் சற்று ஒத்துழைப்போம் என்ற பெருந்தன்மையிலும் பொருத்து கொள்ளத்தான் வேண்டும்!

ஒரு உதாரண உண்மை நிகழ்வு:--என் நண்பன் வீட்டு திருமணம் மற்றும் விருந்து முடிய நடுஇரவு ஒருமணிக்கு மேலாகிவிட்டது (அ.ப.தெரு) தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. திருமண நிகழ்வு எல்லாம் முடிந்தவுடன் என் நண்பன் வேலையாட்களை கூப்பிட்டு பந்தலை பிரிக்க சொன்னான்,மணி இரண்டுக்கு மேலாகி விட்டது காலையில் வந்து பிரிக்கிரோமே முதலாளி என்றார்கள்,இல்லை இல்லை உடனே பிரித்து விடுங்கள் காலையில் பள்ளிக்கூட வாகனம் இந்த வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது, அப்பிள்ளைகள் போக கஷ்ட்டப்பட்டால் என் திருமண சந்தோசம் எல்லாமே பறிபோய்விடும்,நீங்கள் மாட்டேன் என்றால் நானேதான் செய்யவேண்டியது வரும் என்று சொன்னவுடன் அந்த வேலையாட்கள் வேலையில் இறங்கினார்கள்!

என் உற்ற நண்பனை ஒருமுறை ஏற இறங்க உற்று நோக்கினேன்,ஒருவேளை குடிநீருக்காக ஏங்கிய காலத்தில் எவரும் எதிர்பாரா வண்ணம் பல்லாயிரக்கணக்கான பெரிய தொகை பணதைகொடுத்து குடிநீர் தேக்கத்தொட்டி கட்ட உதவிய ஊர்நல வள்ளல் குடும்பத்தின் நேரடி வாரிசான என் நண்பனிடமும் ஊர் நலன் பேணும் ஒரு சில துளி கண்ணியக்குருதி குதித்தோடிக்கொண்டிருப்பதை என் உணர்வலையால் உணர்ந்து உள்ளம் மகிழ்ந்தேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பெண் வீடியோ பதிவாளர் துணை .......
posted by Aarif O.L.M (Kayalpatnam) [03 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38712

அந்த திருமண வீட்டாரிடம் இது பற்றி விசாரித்தேன். நாங்கள் பள்ளிவாசல்ல தான் வைக்க ஆச பட்டோம், ஆனா நம்ம வீட்டு பொம்பளைங்க தான் ரோட்ல வைங்கோ வீடியோ எடுக்கணும். பள்ளிவாசல்ல அதெல்லாம் விட மாட்டங்களே, அப்படின்னு எனது நண்பர் மிக கவலையுடன் சொன்னார். அல்லாஹு ஆலம்

என்ன ஹதீஸ், என்ன பயான், யாருக்கு இதெல்லாம் என்ற மனபோக்குடன் இன்னும் நமதூர் இளைஞர் முதல் மூத்த பெருசு வரை ஒரே மென்டாளிடில இருக்கும் வரை சீர்திருத்தம் எதுவும் எடுபடாது.

அல்லாஹ் நம் வருங்கால சமுதாயத்த பாதுகாப்பானாக ......... ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Vilack sma (jeddah) [04 January 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38735

வீடியோ எடுக்ககூடாது என்று சொன்னதெல்லாம் அந்தகாலம். இப்போது அனுமதிக்கிறார்கள் .

இதெல்லாம் ஒரு காரணமாக தெரியவில்லை . பெண்களுக்கு எல்லா விசேடங்களையும் தெருவில் வைத்து கூத்து பார்க்க வேண்டும் . பள்ளியில் ஒருசில எல்லைமீறி அனுமதிக்க மாட்டார்கள் .இதுதான் காரணம் .

இவர்கள் கூத்து பார்க்க வேண்டும் என்பதற்காக தெருவை அடைத்து அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்கலாமா ? வீட்டில் உள்ள ஆண்கள்தான் அவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஆறுதலான வார்த்தையை அடையாளம் காட்டி இருக்கலாம்! ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 January 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38744

சகோதரர் Vilack sma அவர்களுக்கு, உங்களோடு உரிமையோடு உங்கள் கருத்தை சற்று திருத்த நினைக்கிறேன் என் சிற்றறிவுக்கு எட்டியவாறு. மன நெருடல் ஏற்படுமாயின் மனம் பொறுத்திடுக1

தாங்கள் குறிப்பிட்ட வார்த்தையானது பெண்கள் கூத்துப்பார்க்க பிரியப்படுவதால் ரோட்டில்திருமண மேடை போடவேண்டுமென வற்புறுத்துகிறார்கள் என்று குரிபிட்டிரின்தீர்கள்."கூத்து பார்க்க"என்ற வார்த்தை மிகவும் ஒரு மனவேதனையான வார்த்தையாக நினைக்கிறேன்,

தொட்டில் குழந்தை வயதிலிருந்து ,தாலாட்டி சீராட்டி வளர்த்த தன் பிள்ளைக்கு வாழ்கையில் ஒருதடவை மட்டும் நடக்கப்போகும் மிகப்பெரும் நிகழ்ச்சியான திருமண நிகழ்வை எந்த தாயும் அதை சந்தோஷமாகவும்,மனம் குளிரும்படியும் ஆனந்த கண்ணீர்மல்க அகமகிழ்வுடன் பார்க்கவேண்டும் என்று தான் ஆசைபடுவாள் மணகோலத்தில் இருக்கும் மணமகனோ, தன் தாய் இந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டார்களா, தன் சகோதரி,தன் பெறுமா,கம்மா, சாச்சி என்று தன் குடும்பத்தார்கள் நம்மை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று அந்த மணாளன் நினைக்கும்பொழுதே அத்திருமண ஆனந்தத்தில் அரைவாசியை அடைந்துவிடுகிறான்!

அவனுடைய நிலையில் இருந்து உணர்பவர்களுக்குதான் இந்த உன்னத பாசஏக்கத்தின் வலிமை தெரியவரும்.. ஆகவே இந்த நிகழ்வுக்கு கூத்து பார்க்க துடிக்கிறார்கள் என்ற வார்த்தை ஏதோ எனக்குள் ஒரு மனவருடல் வலியை கொடுப்பதுபோல் இருந்ததால் இதை எழுததக்கூடியவனாகி விட்டேன்!

உங்கள் கருத்தும் கண்ணோட்டமும் எனக்கும் புரிகிறது மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் எந்த நிகழ்ச்சியும் நடுதுங்களேன் என்பதுதான் உங்கள் உள்நோக்கம் அந்த நோக்கத்தை புரிந்தவர்களாக நமதூர் சகோதர சகோதிரிகள் எதிர்காலத்தில் செயல்பட வல்ல அல்லாஹ் உதவி புரிய நீங்களும், நானும் மற்றும் ஊர்நலன் நாடும் அத்தனை இதயங்களும் துவா செய்வோமாக! !அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்று நள்ளிரவில் இதமழை!  (31/12/2014) [Views - 2571; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved