Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:30:22 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15109
#KOTW15109
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 29, 2014
கடையக்குடியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு கொடுக்க முயற்சி???
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3117 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்குட்பட்ட கடையக்குடி (கொம்புத்துறை) பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் எதிர்புறத்தில் குடிநீர் வினியோகக் குழாய் அமைந்துள்ள இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததை, இம்மாதம் 24ஆம் நாளன்று காண முடிந்தது.









சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர், புதிதாகக் கட்டப்பட்டு வரும் தன் வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கடந்த அக்டோபர் மாதம் டெப்பாசிட் - வைப்புத்தொகை கட்டியதாகத் தெரிகிறது. இருப்பினும், நகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு செய்து புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கான சென்டேஜ் தொகையைக் கட்டச் சொல்லும் அனுமதியை அதுவரை வழங்கவில்லை என்றும் தெரிகிறது.

அனுமதி பெறாமலேயே, அவ்விடத்தில் 3 பேர் பணி செய்ததும், மெய்ன் லைன் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்க முயற்சித்ததில், அக்குழாய் உடைபட்டதும், அதன் காரணமாக, அப்பகுதி மக்களுக்கு இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டதும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, நகராட்சியின் முறையான அனுமதியைப் பெறாமல் அப்பகுதியில் சாலையைத் தோண்டி குடிநீர் இணைப்பு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், விசாரிப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயல்பட்டினம் நகராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அவற்றைத் தாண்டி, நூற்றுக்கணக்கான இணைப்புகள் அதிகாரப்பூர்வமற்றவையாகவும், பல இணைப்புகள் - வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் வினியோகக் குழாய்க்குப் பகரமாக, நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குத் தண்ணீர் அனுப்பப்படும் மெய்ன் லைன் இணைப்புகளில் சட்டத்திற்குப் புறம்பாக தண்ணீர் பெறும் இணைப்புகளாகவும் பல ஆண்டுகளாக முறையற்ற வகையில் இருந்து வருகிறது. இதனை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சில மாதங்களுக்கு முன் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கிய அறிக்கையும் உறுதி செய்கிறது.

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுபோன்ற முறையற்ற பல இணைப்புகள் - நகராட்சி அதிகாரிகளுக்குத் தெரிந்தே வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வு குறித்து, 01ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃபிடம் காயல்பட்டணம்.காம் வினவியபோது, சம்பந்தப்பட்ட வீட்டினர் முறையாக பணம் செலுத்தி, புதிய குடிநீர் இணைப்பு பெற அனுமதி பெற்றுள்ளதாகவும், குடிநீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டியபோது வினியோகக் குழாயில் எதிர்பாராதவிதமாக பழுது ஏற்பட்டுள்ளதாகவும், விரைவாக அது சரிசெய்யப்பட்டதாகவும் கூறினார்.

காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸாரிடம் வினவுகையில், தான் ஒரு வார காலமாக விடுமுறையில் இருந்ததாகவும், அக்காலத்தில் பாஸ்கர் என்ற ஊழியர் பொறுப்பிலிருந்ததாகவும் கூறினார்.

நகராட்சிக்குத் தெரியாமலேயே இந்நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும், தற்போது அது கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறிய அவர், இதில் தொடர்புடைய ப்ளம்பர் பணியாட்களும், வீட்டு உரிமையாளரும் மன்னிப்புக் கேட்டு கடிதம் தருவதாகக் கூறியிருப்பதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மெய்ன் லைன் உடைப்பு தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

மெய்ன் லைன் மூலமாக இணைப்பு பெற முயற்சித்தமைக்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜிடம் வினவியபோது, நகராட்சியில் தனக்குக் கீழுள்ள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்நிகழ்வு தொடர்பானவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நீயுமா ப்ரூட்டஸ்?
posted by mackie noohuthambi (kayalpaattinam) [30 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38656

தவறு நடந்திருக்கிறது என்று உறுதி செய்யப்பட பின்னரும் அதற்காக மன்னிப்பு கோருவதை விடுத்து தவறை நியாயப் படுத்த புதிய 1வது வார்டு உறுப்பினர் சகோதரர் அஷ்ரப் தவறு செய்தவருக்கு துணை போகிறார் என்ற செய்தி கசக்கிறது, மனம் கனக்கிறது. எவ்வளவு பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் ஆளும் கட்சியின் வானளாவிய பணபலத்துக்கும் அதிகார பலத்துக்கும் எதிராக நின்று போராடி மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்.

ஒரு முறை யோசித்துப் பாருங்கள். உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டியது உங்கள் தார்மீக கடமை. ஆனால் சட்டத்தின் துணையுடன் அதை செய்ய வேண்டுமே தவிர சட்டத்துக்கு புறம்பாக செய்தால் உதவி செய்த நீங்களும் உதவி செய்யப் பட்டவரும் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள். நடந்த சம்பவம் உண்மையானால் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதில் தவறில்லை.

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று, தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ,

தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக்கோ.

ஜூலியஸ் சீசரை அவரது உற்ற நண்பனே கொலை செய்ய முயற்சித்தபோது சீசர் கேட்ட கேள்வி, YOU , TOO , BRUTUS ! நீயுமா ப்ரூட்டஸ்? ஆம் நீங்களுமா அஷ்ரப் என்று உங்களைப் பார்த்து நீதிவான்கள் கேட்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தவறு யார் செய்தாலும் தவறுதான்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [30 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38664

சகோதரர் அஷ்ரபு அறிவது, இந்த சம்பவம் தங்களுக்கு தெரிந்து நடந்ததோ, அல்லது தெரியாமல் நிகழ்ந்ததோ அது எங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் கூறும் காரணம் ஏற்ப்புடையதாக இல்லை!

சம்பந்தப்பட்டவர்களே தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் தர முன்வரும்போது, தாங்களும் இந்த தவறை ஒப்புக்கொண்டுவனாக எதிர்காலத்தில் இதுபோன்று நடவா வண்ணம் பார்த்துகொள்கிறேன் என்பனவாகத்தான் உங்கள் வாக்குமூலம் அமைந்திருக்கவேண்டும்.

மாறாக இது ஏதோ ஒரு சாதாரண நிகழ்வுபோல் சொல்லிருக்கிறீர்கள்!

உங்களிடமிருந்து நேர்மையான நடுநிலையை எதிர்பார்த்து அதன் மேல் நம்பிக்கைகொண்டுதான் ஒட்டுமொத்த ஊர் ஜமாத்தும் உங்களை ஆதரித்து வெற்றிபெற வைத்தோம். அந்த நம்பிக்கையை தயவு செய்து தகர்த்து விடாமல் காப்பாற்றுங்கள். எதிர் காலத்திலாவது!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாழ்த்தவா? வசவவா?? (?!)  (31/12/2014) [Views - 3999; Comments - 8]
நேற்று நள்ளிரவில் இதமழை!  (31/12/2014) [Views - 2566; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved