Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:36:43 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15111
#KOTW15111
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 30, 2014
DCW ஆலையை நோக்கி எஸ்.டி.பீ.ஐ. நடத்திய முற்றுகைப் போராட்டம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!! 700 பேர் கைது!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5640 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் DCW ஆலையை இழுத்து மூடக் கோரியும், ஆலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யக் கோரியும், இன்று (டிசம்பர் 30) ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

திட்டமிட்ட படி, இன்று 11.00 மணியளவில், காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகில் - வள்ளல் சீதக்காதி திடலில் மக்கள் திரண்டனர். துவக்கமாக, DCW ஆலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களைக் கண்டித்தும், அந்த ஆலையை இழுத்து மூடக் கோரியும் - திரண்டிருந்த பொதுமக்கள் ஒரே குரலில் முழக்கங்களை எழுப்பினர். கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பு தலைவர் மவ்லவீ அஷ்ரஃப் அலீ ஃபைஜீ தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் அறிமுகவுரையாற்றினார்.

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், அதன் நிர்வாகி முகிலன், எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவீ, கூடங்குளம் போராட்டக் குழு மகளிரணி நிர்வாகி சுந்தரம்மாள், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் – பொதுமக்களையும், சுற்றுச்சூழலையும் பாதித்து வரும் DCW ஆலைக்கெதிராக கண்டன உரையாற்றினர்.















பின்னர், DCW ஆலையை நோக்கி முற்றுகைப் பேரணி கண்டன முழக்கங்களோடு துவங்கியது. காயல்பட்டினம் பெரிய தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தபோது, திருச்செந்தூர் டி.எஸ்.பி. எஸ்.கோவிந்தராஜ் தலைமையில், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், ஆத்தூர் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோரடங்கிய காவலர்கள் DCW ஆலையை முற்றுகையிட பேரணியாகச் சென்ற பொதுமக்களைக் கைது செய்தனர். சுமார் 25 வாகனங்களில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் தனி வாகனங்களில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

















பெண்கள் உட்பட மொத்தம் 708 பேர் கைது செய்யப்பட்டதாகவும், ஆறுமுகநேரியிலுள்ள வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், ரத்னா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், பேச்சாளர்களும், காயல்பட்டினம் நகர பிரமுகர்களும் திருமண மண்டபங்களிலும் எழுச்சியுரையாற்றியதாகவும், 17.10 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் எஸ்.டி.பீ.ஐ. மாநில செய்தி தொடர்பாளர் உஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் உயிர் - உடல்நலனுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டும் என்றும், அந்த ஆலை குறித்து, தமிழக சட்டமன்றத்தில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இக்கோரிக்கைகள் மீது விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்காவிடில், நாட்டிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் திரட்டி - தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

DCW ஆலை முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு, எவ்வித வேண்டுகோளும் விடுக்கப்படாத நிலையிலும் - காயல்பட்டினம் பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், பேருந்து நிலைய வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







இப்போராட்டத்தில் எஸ்.டி.பீ.ஐ. மாநில செயற்குழு உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான உஸ்மான் கான், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாஃபர் உஸ்மானீ, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜுல்ஃபிகார் அலீ, காயல்பட்டினம ்நகர தலைவர் கிரசண்ட் ஷேக், செயலாளர் அப்துர்ரஹ்மான் உள்ளிட்ட - கட்சியின் நிர்வாகிகள், அங்கத்தினர், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கள உதவி: A.R.ஷேக் முஹம்மத்

படங்களுள் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்


[கூடுதல் படங்களுடன், விரிவான தகவல்கள் விரைவில்...]

எஸ்.டி.பீ.ஐ. தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. DCW போராட்டம்
posted by KM MOHAMMED RAFEEK (Kozhikode/kerala) [30 December 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38672

அஸ்ஸலாமு அலைக்கும் . DCW என்ற புற்று நோய்க்கு எதிரான நமது போராட்டம் ஒரு துவக்கமே.

மனித குல அழிவிற்கு எதிரான இந்த போராட்டத்திற்கு வல்ல அல்லாஹ் நிச்சியம் வெற்றியை தருவான் ஆமீன். இந்த மாபெரும் போராட்டத்தை முன் நின்று நடத்திய SDPI க்கு வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் - காயல்பட்டினம்.. (KAYALPATNAM ) [31 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38673

காயல்பட்டினம் நகர்மன்றத்தில் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் இந்த நச்சு ஆலைக்கு நகராட்சியால் முறைகேடாக வழங்கப்பட்ட ஆலையின் விரிவாக்க கட்டிட அனுமதியை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு இரு உறுப்பினர்களை தவிர்த்து எதிர்ப்பு தெரிவித்த 16 உறுப்பினர்களை இந்நகர் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்...!

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல உள்ளதை உள்ளபடி பதிகிறேன் சுட்டி காட்டுகிறேன்.. இவர்களுக்கு நினைவோட்டும் எண்ணத்திலேயே..!

கூடங்குளத்தின் அணுவுலை போராளி உதயகுமார் அவர்களுக்கு இருக்கும் மக்கள் நலன் மீதுள்ள அக்கறை இந்நகரின் நகர்மன்ற உறுப்பினர்கள் 18 நபர்களில் 16 உறுப்பினர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் போனது ஏனோ..! நம் சொந்த பந்தங்கள் புற்று நோயால் அவதி படும் குடும்பங்களின் அழுகுரல் இந்த 16 உறுப்பினர்களுக்கும் செவியில் கேட்கவில்லையா..? இறைவா இந்த 16 உறுப்பினர்களுக்கும் அடுத்து நடைபெறும் நகர்மன்ற கூட்டத்தில் நல்ல முடிவை எடுக்கும் நல்ல ஹிதாயத்தை வழங்குவாயாக... ஆமின்..

ஆளும் அரசும் / இது முன் ஆண்ட அரசும் நகர் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை - தேர்தல் நேரத்தில் காயல் மக்களின் அவர்களின் வாக்கு ஒன்றே குறிக்கோளாக எதிர்பார்த்து அரியணையில் அமர்ந்து வந்துள்ளனர்..! காயல் நகர மக்கள் மன நிலையில் இந்நிலை இனி மாற வேண்டும் அன்று தான் நமது எதிர்பார்ப்பு நிறைவடையும்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சீறிப்பாய்ந்த சிங்கங்களாய்.....
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [31 December 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38675

மாஷா அல்லாஹ்! பார் சிறுத்ததோ,படை பெருத்ததோ என்ற பழமொழிக்கேற்ப காயலின் ஆர்வமுடைய அத்தனை அடலேறுகளும் வீதியை அடைத்துக்கொண்டு ,சீரிப்பாய துடிக்கும் சிங்கங்களாய்,பீரிப்பாய்ந்த வெள்ளமென பீடுநடைப்போட்டுவரும் காட்சியே காணக்கறியா காட்சி!

இது அந்த நச்சுஆலையின் மூச்சு நிற்கப்போவதற்க்குறிய மிகப்பெரிய சாட்சி!

அன்பிற்க்குறிய பெண்டிலர் கூட்டங்களைப்பார்த்து என் மெய் சிலிர்த்துவிட்டது. இதுவரை எந்த போராட்டங்களிலும் நம்மூர் மாதர்கள் இதுபோன்ற ஒரு பெரிய படை எதிர்ப்பை காட்டியதை நான் கண்டறியவில்லை.வீதிக்கு வந்து போராடவேண்டுமென்ற வைராக்ககியமானது அவர்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் பாதிப்பின் பிரதிபலிப்பே, வேதனையின் வெளிப்பாடே,.வீட்டிலுள்ள உயிர்களையும், உற்றார் உறவினர்களையும் இழந்து தவித்து துடித்ததின் உச்சகட்டம்!

கொதிப்பினால் கொந்தலித்தெலுந்து கூட்டத்தோடு இணைந்து நம் மனம் நொந்துகொண்டிருக்கின்ற உணர்வை கொட்டி தீர்க்க வேண்டும், காவல்துறை கைது செய்தாலும்,கம்பி எண்ணவும் தயார் என்ற வெறியில் வீரமங்கைகளின் ஆவேசமிகு பேரணியை பார்த்து பிரமித்து விட்டேன்.உங்களுக்குள் இவ்வவளவு சோகச்சுமையா? சோகத்தை சுமந்துகொண்டு வந்த உங்கள் வருகையைப் பார்த்து என்னிரு கண்களும் செந்நிற நீராய் நிரம்பி பாய்ந்தது!

என்னைப்பொறுத்தவரை எந்த பெண்ணும் வீதிக்கு வந்து போராடத்தேவையில்லை என்ற கொள்கையில் உடன்பாடு உடையவன்!

ஆனால் உங்களின் வேகத்தையும் வெறியையும் பார்த்த எனக்கு நீங்கள் எப்படிப்பட்ட பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது.ஆனந்தமாக கைதாகும் நீங்கள் நீங்களிழந்த ஆத்மாக்களுக்கு செய்யும் சிறிய கைமாரோ.

அன்பு தாய்க்குலமே உங்களை வாழ்த்த எனக்கு வார்த்தையும் வரவில்லை,ஓசையின்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் என் உள்ளமும் ஓர் நிதான நிலையை எட்டவில்லை!

ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன்.இந்த நச்சு ஆலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், என்னருமை சகோதரிகளே உங்களின் உயரிய எண்ணத்தினால் வீதிக்கு வந்து போராடிய உங்களனைவர்களின் பொற்பாதங்களையும் இதுவரை நில்லாத என்னிரு கண்களின் கண்ணீரால் கழுவ துடிக்கிறேன்.ஆனால் கடல் கடந்தல்லவா இருக்கிறேன். கண்ணியமிகு மங்கையர் திலகங்களே மறைதந்த அந்த இறையோனின் கிருபையினால் நீங்களனைவர்களும் நெடுநாட்கள் நீடொழி வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்தோங்குவீர்களாக ஆமீன்!.

இப்புண்ணியபோரில் கலந்துகொண்ட அத்துனை அன்புள்ளங்களுக்கும், குறிப்பாக இரவு பகல் பாராமல் பம்பரமாக சுழன்று பணியாற்றி போற்றுதலைப்பெரும் SPDI அமைப்பிற்கும்,சகோதரர் சுப உதயக்குமார் சகோதரர் சுந்தரராஜன் மற்றும் பல அமைப்புகளின் சகோதர சகோதரிகளுக்கும் என்னிதையம் பொங்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் தூய எண்ணங்களுக்குறிய நற்கூலியை கூடியவிரைவில் கொடுத்தருள்வானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Fareed (Dubai) [08 January 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38815

Assalammu Alaikkum

I am agreeing Tamilan Mr.Muthu Ismail statment. All the non cooperating counsellors to be bring infornt of publics, their friends and relatives and force them to support this noble works (to stop DCW further expansion and Stop polluting our environment)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாழ்த்தவா? வசவவா?? (?!)  (31/12/2014) [Views - 4012; Comments - 8]
நேற்று நள்ளிரவில் இதமழை!  (31/12/2014) [Views - 2571; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved