Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:17:00 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9499
#KOTW9499
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 28, 2012
ஹஜ் பெருநாள் 1433: பெருநாள் மாலையில் கடற்கரையில் சூதாட்டக் கடை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4036 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் 27.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பின்னர் குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

பெருநாள் தொழுகையையடுத்து, காயலர்கள் தம் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆண் - பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நண்பர்களுடன் தெருப்பகுதிகளில் ஒன்றுகூடி, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

ஹஜ் பெருநானை முன்னிட்டு, நேற்று மாலை 04.30 மணி முதல் கடற்கரையில் காயலர்கள் தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திரண்டனர். பொதுமக்கள் வருகையைக் கருத்திற்கொண்டு பல்வேறு நடைபாதைக் கடைகள் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது.

ராட்சத பலூன்:
கடந்த நோன்புப் பெருநாளைப் போல நடப்பு ஹஜ் பெருநாளின்போதும் எவ்வித முன்னனுமதியும் பெறப்படாத நிலையில் கடற்கரையில் ராட்சத பலூன் நிறுவப்பட்டுள்ளது.





(இப்படங்கள் கடந்த நோன்புப் பெருநாளின்போது பதிவுசெய்யப்பட்டவை.)

ஜெனரேட்டர் துணையுடன் இயக்கப்படும் இந்த பலூனில் ஏராளமான குழந்தைகள் கட்டணம் செலுத்தி ஏறி விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஒரு குழந்தைக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மாலை 06.30 மணியளவில் திடீரென ஜெனரேட்டர் இயக்கம் நின்று போனதால், பலூனில் அடைக்கப்பட்டிருந்த காற்று முற்றிலுமாக வெளியேறியது. அதனைத் தொடர்ந்து, அதில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.



சூதாட்டக் கடை:
அதுபோல, கடற்கரையின் ஒரு பகுதியில் சூதாட்டக் கடை அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு பொருட்கள் விரிப்பில் கிடத்தப்பட்டிருக்கும். கட்டணம் செலுத்திய பின்னர், வாடிக்கையாளர் கையில் ஒரு சில வளையங்கள் கொடுக்கப்படும். அவற்றை அவர்கள் பரத்தப்பட்டிருக்கும் பொருட்களின் மீது வீச வேண்டும். சரியாக பொருளின் மீது விழுந்தால் அப்பொருள் அவருக்குச் சொந்தம். விழவில்லையெனில், வாடிக்கையாளருக்கு எந்தப் பொருளும் கிடைக்காது. ஆனால் கடை உரிமையாளருக்கு கட்டணக் காசு சொந்தமாகிவிடும். இதுவே இக்கடையின் வாடிக்கையாளர் விதிமுறை.



இக்கடையைக் கண்ணுற்ற சிலர் கடை உரிமையாளரிடம் கடையை அகற்றுமாறு வலியுறுத்தினர். எனினும் அதனால் எந்தப் பலனும் விளையவில்லை.

கடந்த காலங்களில் இதுபோன்ற கடைகள், மக்கள் திரண்டிருக்கும்போது கடற்கரைக்கு கொண்டு வரப்படும் யானை - குதிரை உள்ளிட்ட விலங்குகள், மீனவர்கள் நடத்தும் பாதுகாப்பற்ற படகு சவாரி உள்ளிட்டவற்றை அன்றைய பெரியவர்கள் வலிமையுடன் தடுத்து அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

காயல்பட்டினம் கடற்கரையில் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி - நினைத்த நேரத்தில் கடைகளை அமைக்கப்படும் வழமை உள்ள நிலையில், இதற்காக நகர்மன்றக் கூட்டத்தில் முறையான வரையறைகளை தீர்மானமாக்கி, நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அவற்றை செயல்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்பது நேற்று கடற்கரைக்கு வந்த சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இந்த நோய்
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23172

அதிர்ச்சியாக உள்ளது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனையே கடிக்க வந்த கதை இது. முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் .

கடற்கரை உபயோகிப்பாளர் சங்கம் என்று நம்மூரில் ஆரம்பிக்கப்பட்டு, அது பதிவு செய்யப்பட ஒரு இயக்கமாகவும் இருக்கிறது என்று அறிந்தேன். மருமகன் ஸாலிஹ் அவர்களும் அதில் ஒரு உறுப்பினராக இருப்பார் என்பது எனது நினைவு. எனவே இந்த சீரழிவில் இருந்து மக்களை குறிப்பாக சிறுவர்களை இளைஞர்களை காப்பாற்ற இன்றே களம் இறங்குங்கள். முற்கூட்டியே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால் நல்லது. இல்லாவிட்டால் இந்த நாட்டு சட்டங்கள் நம்மையே திருப்பி பிடிக்கும்.

இந்த சூதாட்டத்துக்கு ஆதரவாகவும் சிலர் பேசுவார்கள்.என்ன செய்வது. கடற்கரை அழகு படுத்துவது என்று ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் கண்காணிப்புக்கு என்று KAYALPATNAM BEACH USERS ASSOCIATION ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக இதனை தடுத்து நிறுத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நகராட்சி
posted by NIZAR AL (kayalpatnam) [28 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23179

செய்தியாளர் தந்திருக்கும் இந்த செய்தி முற்றிலும் உண்மையே. நான் ஜம்போ பலூனை மற்றும் தான் பார்த்தேன், மற்ற விளயாட்டு என்று போட்டுல்லாரே அதை பார்க்கவில்லை, இருந்தாலும் இப்படிப்பட்டவைகலை நிறுத்த கூடிய அதிகாரம் நகராட்சிக்குதான் உள்ளது.

நகராட்சி அனுமதி பெறாமல் எதையும் செய்ய கூடாது என்பதில் சம்பந்தபட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கடுமையாக இருக்க வேண்டும், பொதுமக்கள் போனால் அவ்வளவு மக்கள் கூட்டத்தில் அசாதர்ண சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

ஆனால் கடற்கரையில் நகராட்சி தலையிடுவதே இல்லை ,யாரும் எந்த கடையும் போடலாம் ,என்ன சட்ட விரோதமான விளையாட்டுகளும் போட்டாலும் கண்டுகொள்ளாத சூழ்நிலையும், பெருநாள் முடிந்தவுடன் குப்பைகள் மலைபோல் குவிந்துவிடும், அதற்காக கூடுதல் பணியாளர்களை அனுப்பி கடற்கரையை சுத்தம் செய்வதுமில்லை, புதிய நகர தலைவி இந்த விசயத்தில் கவனம் செலுத்துமாறு வேண்டுகிறேன்,

YOURS,
NIZAR AL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [28 October 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23180

கடற்கரை உபயோகிப்பாளர் சங்கம் ??????? எங்கே போனார்கள் ? மக்கி காக்கா சொன்னதுபோல் காவல்துறை மூலம் அணுக வேண்டும் . இல்லையேல் இந்த நாட்டின் சட்டம் நம்மையே திருப்பி அடிக்கும் .

தலைவியே ! நகரமன்ற உறுப்பினர்களே ! தயவுசெய்து உங்களின் அடுத்த நகரமன்ற கூட்டத்தில் , கடற்கரையில் என்னென்ன கடைகள் அமைக்கலாம் , எங்கு அமைக்கலாம் , இரவில் எவ்வளவு நேரம்வரை அந்த கடைகள் , விளையாட்டுக்கள் இருக்கலாம் என்பதற்கு ஒரு வரைமுறையை கொண்டுவாருங்கள் . இல்லையேல் , நம் குழந்தைகள் இதுபோன்ற சூதாட்டத்தில் சிக்கி சீரழிவார்கள் . மேலும் பாதுகாப்பற்ற விளையாட்டுக்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம் .

உணவுக் கடைகளையும் ஒரே இடத்தில் அமையுமாறு வரைமுரைப்படுத்துங்கள் .

கடற்கரைக்கு வரும் மக்களுக்கு நல்ல கழிப்பிட வசதிகளை , இதில் நகராட்சிக்கு எந்த வருவாயையும் எதிர்பாராமல் , அமைத்து தாருங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...சீரழிவை நோக்கி நம் சமுதாயம்.
posted by OMER ANAS (kayal patnam.) [28 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23214

காயளர்கள் அனைவர்களுக்கும், ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!

பெருநாளில் ஊரில் இருப்பது என்பது எல்லோருக்கும் உள்ள மகிழ்ச்சியே என்போன்றோருக்கும்.

அதிலும், சமூக ஆர்வலர்கள், கண்ணியவான்கள் பலரின் சந்திப்பும் வான்மழை சாரலில் மணமணக்க வைத்தது இரண்டாம் நாள் இரவு. என்ன பூரிப்பு அப்பப்பா..!

யா அல்லாஹ் இந்த மகிழ்ச்சியையும் ஒற்றுமையினையும் எங்களுக்கு என்றென்றும் தந்தருள் என்று பிராத்தித்த வண்ணம், ஒரு சில சமுதாய சீர் அழிவுக்கு காரணமான நிகழ்வுகளும், அதை கண்டும் காணாமல் சென்று விடும் நம் சமுதாய மக்களும், அட இதை தட்டிக் கேட்டால் நம்மை இழிவு படித்தி விடுவார்களோ என்று ஒதுங்கிச் செல்லும் கன்னியவான்களும் இதையே காரணமாக வைத்து சர்வசாதாரணமாக சுற்றித்திரியும், கயவர்களையும், சூதாட்ட நிகழ்வுகளையும், ராட்சஸ பலூன் என்ற போர்வையில் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் முட்டித்திரியும் காட்ச்சிகளையும் நேரில் கண்டு மனம் பதைபதைக்கத்தான் செய்கிறது!

இங்கே கடற்க்கரை பயனாளிகள் சங்கம் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்க் கிடக்கின்றதுதான் வேடிக்கை! அப்படி ஒரு சங்கம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. விட்டில் பூச்சிபோல் வந்து போகும் எங்களுக்கும் இதற்கு விடைகாணத் தெரியவில்லை.

மாதக் கணக்கில் நிற்ப்போர் சில வழிமுறைகளை ஏற்ப்படுத்தி விட்டு வான் கப்பலில் சென்ற சில நாட்க்களிலேயே இங்கே மானம் தலைக்குனிவு எனும் கப்பலில் ஏறிக்கொள்கிறது.

எங்காவது ஓரிடத்தில் கடற்க்கரை பயனாளிகள் சங்கம் உறங்கிக் கொண்டு இருந்தால், இனியாவது விழித்தெழுந்து வந்து குறைந்த பட்சம் வார நாட்க்களில் இங்கே தங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து மக்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி தரவேண்டும். டாஸ் மாஸ்கோ என்ன எளவோ இதற்குக் கூட காலநேரம் உண்டு. நம் கடற்கரையில் எந்தவித கால நேர நிர்ணயமும் இல்லை. இனியாவது செய்வார்களா?

இல்லையேல் நம் சமூகம் சீரழிவு எனும் புற்று நோயால் தாக்கப் பட்டுவிடும்! நிச்சயம் நாளை நாம் காப்பாற்ற நாதியற்று போய்விடுவோம்! நவூது பில்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Cancer.....
posted by Jahir Hussain VENA (Bahrain..) [28 October 2012]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 23218

மீண்டும் ஒரு புற்று நோய் ... நம் கலாச்சாரத்தை நோக்கி.. ..

Who will save our own culture from this type of cancer?

1) Our Panchyath.. Chariman..
2) Welfare Associations?
3) Kayal Beach Welfare Associations?
4)Public
5)None of above


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. عيد مبارك
posted by M.S.Kaja Mahlari (Singapore) [28 October 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23221

அனைவருக்கும் எனது அன்பின் ஹஜ்ஜுபெருநாள் நல்வாழ்துக்கள்!

நமதூர் கடற்கரையில் பெருநாட்களை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே வந்து செல்லும் நிலைமை இருந்தது. பிறகு பெண்களும் வர ஆரம்பித்தார்கள். கடைசியில் பெண்களுக்கென தனியிடம், தனி பாதை என அமைக்கப்பட்டது.

இன்று நிலைமை தலைக்கீழ் ! ஆண்கள் வரும் அதே வழியிலேயே பெண்களும் வந்து போகிறார்கள். ஆண்களும், பெண்களும் எந்த இடத்தில் ஒன்றறக் கலக்கிறார்களோ அது அனாட்சாரம்தான்! தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு கடற்க்கரை ஒன்றும் விதிவிலக்கில்லை!

இந்த விசயத்தில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். சூதாட்டம் என்பது எந்த உருவத்தில் வந்தாலும் அதனை அனைவரும் சேர்ந்து தடுக்கவேண்டும். இதற்கு முன்பு நாங்கள் எங்கள் நண்பர்களோடு பெருநாள் தினத்தில் கூடியிருக்கும் போது சில சூதாட்ட வியாபாரிகள் (சக்கரம், கிளிஜோசியம் போன்றவை) அங்கு கடைவிரித்த போது அதனை நமது சிறுவர்கள் ,மாணவர்கள் வந்து சொன்னபோது, நண்பர்களோடு நேரிலே சென்று அதனை நடத்தவிடாமல் செய்தோம்,

ஆக தவறு எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை முறைப்படி தடுப்பது நம் அனைவரின்மீதும் கடமையாகும்.

நகர்நல மன்றமும் இது விசயத்தில் ஒரு தீர்கமான முடிவெடுக்கவேண்டும். ஏனெனில் நமது நகர் நலமன்ரம் இஸ்லாமிய ஒழுக்கம், கல்வி ,கலாச்சாரம் நிறைந்த ஒரு மன்றமாகும், கடற்கரை பயனாளிகள் சங்கமும் இது விசயமாக ஒருவரைமுரையை உருவாக்கவேண்டும். இல்லையெனில் அந்த சங்கம் பெயரளவிலேயே சங்கமாக மாறிவிடும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மார்க்கம், ஒழுக்கம், கலாச்சாரம் அனைதையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் துணை செய்வானாக ! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Muzammil (Dubai) [29 October 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 23224

அஸ்ஸலாமு அலைக்கும்

இது மாதிரியான சூதாட்டங்களை முளையிலே கில்லி எரிய வேண்டும். இல்லையெனில் இது மாதிரி கூடுதலாக பெருகிவிடும். இதில் சம்பத்தப்பட்ட நபர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிற்காலத்தில் இது மாதிரியான செயல்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கும் படி மிக அன்புடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [29 October 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23242

அஸ்ஸலாமு அலைக்கும்

அடா ...எனப்பா இது வர,வர, நம் ஊர் கடற்கரையா என்று நம்மாலேயே கண்டுபிடிக்கவே முடியாது போல் தெரிகிறது ....குமுதத்தில் ஆறு வித்தியாசம் கண்டுபிடி என்று போடுவார்கள்.....அது போல் நாமும் இணையதளத்தில் நம் ஊர் கடற்கரையின் போட்டோவை போட்டு ....இது எந்த ஊர் கடற்கரை என்று கண்டு பிடியுகள் ....என்று போட வேண்டியதுதான்.......

நம் ஊர் கடற்கரையில் '' சூதாட்டக் கடை '' என்கிற செய்தியை முதலில் படித்ததுமே நம் மனம் வேதனை பட்டது....

நம் ஊர் கடற்கரை முன்பு ஒரு காலத்தில் ஒழுக்கத்தில் பெயர் பெற்ற கடற்கரை .....இன்று அப்படியே மாறி வருவதை நினைத்து நம்மால் தாங்கவே முடிய வில்லை ?? மனம் வேதனை அடைகிறது .....

ஒரு பக்கம் இந்த >>> D.C.W.<<< வைத்து நமக்கு தலைவலி ....மறு பக்கம் ...வர .. முறை அற்ற ...செயல்பாடுகள்.நம்மால் நினைக்கவே பயமாக உள்ளது .

நம் ஊர் அழகான கடற்கரையை பாதுகாப்பதும் / அதை ஒழுங்கு படுத்தி பொது மக்களுக்கு வழி வகுப்பதும் தான் நம் நகர் மன்றதின் கடமை ....வருகின்ற நகர் மன்ற கூட்டத்தில் கண்டிப்பான முறையில் ஒரு தீர்மானம் போட்டு ...நம் அழகிய கடற்கரையை பாதுகாப்பது தான் முக்கியமானது ......

ஒரு அவசரத்துக்கு நம் பெண்கள் மழை வந்தால் ஒதுங்க எந்த ஒரு வசதி வாய்ப்பும் சுத்தமாகவே கடற்கரையில் இல்லை.... போன வருஷம் பெரு நாள் அன்று மாலை நேரம் மழையால் பட்ட கஷ்டத்தை .... நான் என் கண்னால் நேரில் ( நம் பெண்கள் பட்ட ) கஷ்டத்தை பார்த்து வேதனை பட்டேன் .....நம் நகர் மன்றம் இது போன்ற விசியத்திலும் கண்டிப்பாகவே முழு கவனம் செலுத்த வேணும் ...................

இந்த இணைய தள நிருபர் ஏன் இந்த ஹஜ்ஜு பெரு நாள் கடற் கரை போட்டோகளை போடாமல் .... பழைய போட்டோக்களை போட்டு உள்ளார்? நம் சொந்தபந்தகளை இது சமையதில் பார்க்கலாம் என்று பார்த்தால்.... நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்களே ....... இது நியாயமா .........
வஸ்ஸலாம்

Moderator: இச்செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், 27.10.2012 அன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளே! ராட்சத பலூன் காட்சிகள் மட்டும், கோப்புப் படங்களிலிருந்து தரப்பட்டுள்ளது. இம்முறை தெளிவான படங்களை அந்நேரத்தில் பதிவு செய்ய வாய்ப்பற்றுப் போனது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [29 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23255

அஸ்ஸலாமு அலைக்கும் عيد مبارك

அனைவருக்கும் எனது அன்பின் ஹஜ்ஜுபெருநாள் நல்வாழ்துக்கள்! !அன்பான நகரமன்ற தலைவியே ! நகரமன்ற உறுப்பினர்களே !இது மாதிரியான சூதாட்டங்களை முளையிலே கில்லி எரிய வேண்டும்..ஏன் என்றால் நாளை மறுமையில் ;............. குல்லுகும் ரா இன் வ குல்லுகும் மஸ்ஊழுன் அன் றைய்யதிஹி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved