Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:36:36 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9031
#KOTW9031
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012
நோன்புப் பெருநாள் 1433: உலக கா.ந.மன்றத்தினருடன் இணைந்து கத்தர் - துபை - ரியாத் கா.ந.மன்றங்கள் நடத்திய நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல்! நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4242 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நோன்புப் பெருநாளுக்காக தம் சொந்த ஊரான காயல்பட்டினம் வந்திருந்த அனைத்துலக காயல் நல மன்றத்தினருடன் இணைந்து கத்தர் - துபை - ரியாத் காயல் நல மன்றங்கள் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை, 22.08.2012 புதன்கிழமை மாலையில் நடத்தியுள்ளன.

இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

பல்வேறு நாடுகளில் தத்தம் பணி நிமித்தமாக பரவி வாழும் காயலர்கள், தாய் மண்ணின் நல்வாழ்விற்காக காயல் நல மன்றங்களை உருவாக்கி, தன்னிகரற்ற பல சேவைகளை செய்து வருவது நாம் யாவரும் அறிந்த ஒன்றே!

அப்படிப்பட்ட காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்து, ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்து முகமான ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை அண்மையில் காயல் மாநகரில் நடந்து முடிந்தது.

கத்தர் காயல் நல மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில் துபை, ,ரியாத், ஹாங்காங் மன்ற நிர்வாகிகளும் கைகோர்த்து, கடந்த புதன்கிழமை (22-08-2012) அன்று, காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள - தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் அவர்களின் ஜெம் பேலஸ் தோட்டத்தில் வைத்து இனிதே நடத்தின.



இந்த விழாவில் உலக காயல் நல மன்றங்கள் பலவற்றைச் சேர்ந்த முப்புதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மகிழ்வுடன் பங்கேற்றனர்.

மாலை ஐந்து மணிக்குத் துவங்கிய இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன் என்ற மம்மி ஹாஜியார், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். தவிர்க்கவியலாத அலுவலில் இருப்பதாகக் கூறி, இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களான ஏ.லுக்மான், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் ஆகியோர் நிகழ்ச்சி சிறக்க தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தனர்.



இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். கத்தர் நல மன்றத்தை சேர்ந்த கனிமுஹம்மத் இறைமறையை இனிது ஓதி, அருமையான நிகழ்வினை அழகுற துவங்கி வைத்தார். கவிமகன் காதர் கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

துவக்கமாக, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், இந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு மன்றங்களின் பொறுப்பாளர்களது பெயர்களை வாசித்து அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்ய, அப்பொறுப்பாளர்கள் தத்தம் பெயர் வாசிக்கப்படும்போது உற்சாகமாக கூட்டத்தினரை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ந்து ஸலீம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர்.

பின்னர் சிற்றுரையாற்றிய துபை காயல் நல மன்றத்தின் மூத்த நிர்வாகி ஹாஜி துணி உமர், வெளிநாட்டு மன்றங்களைச் சேர்ந்தவர்கள், தத்தம் விருப்பத்திற்கேற்றவாறு பல்வேறு கொள்கை அமைப்புகள், கட்சிகளை சார்ந்தவர்களாக இருப்பினும், ஊர் நலனைப் பொருத்த வரையில், ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். இந்த ஒன்றுகூடல், முழுக்க முழுக்க வெளிநாட்டு மன்றங்களால் நடத்தப்படுவதே என்றும், இதில் உள்ளூர் அமைப்புகள் எதற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக. துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்புரையாற்றினார்.

ஆண்டியானாலும், அரசன் ஆனாலும் அவரவர் கடமையை சரிவர செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் மார்க்கம் கற்றுத் தந்திருப்பதை தனதுரையில் சுட்டிக் காட்டிய அவர், அனைத்துலக காயல் நல மன்றங்களைச் சேர்ந்த நமது மக்களை, இந்த விழா மூலமாக ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக இறைவனுக்கு நன்றி கூறினார்.

பூமியில் இருப்பவர்கள் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு, வானத்தில் இருந்து அன்பு பரிமாறப்படுகிறது என்றும், நாம் பிறந்த இந்த பூமிக்கு நன்றி செலுத்த, மனமாச்சர்யங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

ஏழைகள் மீது காட்ட வேண்டிய அன்பு குறித்து அவர் பேசுகையில், ஏழைகள் அதிகமதிகம் சொர்க்கவாசிகளாக இருப்பதாகத் தெரிவித்தார்.

நகரில் பல்வேறு சேவைகளைத் திறம்பட செய்து வரும் வெளிநாட்டு காயல் நல மன்றங்கள், இந்த நகரத்தின் ஒற்றுமைக்காக என்றென்றும் பாடுபடும் என்று அவர் உறுதிபட கூறினார்.

அடுத்ததாக, நிகழ்வின் தலைவரும் - இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) தலைவருமான ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.

பல முறை இந்த நகரத்திலும், மண்டலத்திலும் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகள் இருந்த நிலையிலும் தான் போட்டியிட மறுத்துவிட்டதாகத் தெரிவித்த அவர், வணிக ரீதியாக கடந்த நாற்பது ஆண்டுகாலம் இலங்கையில் வசிப்பதைச் சுட்டிக்காட்டி, அக்கரையில் வாழ்ந்தாலும் இக்கரையில் தங்களுக்கு எப்போதும் அககறை உண்டு என்று கூறினார்.

வாழ்வின் பல்வேறு நிலைகளை, பணிகளை ஆகாய விமானத்துடன் ஒப்பிட்டுக் கூறிய அவர், எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், தாய்மண்ணில் தரை இறங்கித்தான் ஆகவேண்டும் என்றும், அப்படிப்பட்ட தாய் பூமியை சீரும் - சிறப்பானதுமாக காணும் ஏக்கம் ஒவ்வொரு காயலனுக்கும் உண்டு என்றும் கூறியதோடு, அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற நகர்மன்ற நண்பர்கள், தமது பங்களிப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.

தொடர்ந்து கத்தர் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த கவிமகன் காதர் நன்றி கூற, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எஸ்.ஷேக்.தாவூத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



விழாவின் நிறைவில், கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது. காயல் நல மன்றங்களைச் சேர்ந்தோரும், காயல்பட்டினம் நகர்மன்றத்தைச் சேர்ந்தோரும் உவப்புடன் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.





நீண்ட நாட்கள் கழித்து ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிட்ட அனைத்துலக காயல் நல மன்றத்தினர் தமது மகிழ்ச்சிப் பெருக்கை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர்.

விழா அரங்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் - கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவர் மின்ஹாஜ் ஆகியோரது மேற்பார்வையில், காயல்பட்டினம் ஸ்டார் ரெடிமேட்ஸ் உரிமையாளரும், துபை காயல் நல மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான முத்து இஸ்மாஈல் சிறப்புற செய்திருந்தார்.

இந்நிகழ்வில்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன், அதன் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ், அதன் அங்கத்தினரான எம்.ஷேக் அப்துல் காதிர், எஸ்.எஸ்.முபாரக், எம்.எஸ்.ஷேக் தாவூத், எம்.எம்.எஸ்.ஷேக் மொகுதூம், ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன், பி.எம்.ஐ.ஃபைஸல்,

கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினரான - சோனா முஹ்யித்தீன், ஏ.ஏ.செய்யித் முஹ்யித்தீன், ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், ஹாஃபிழ் ஏ.எம்.எஸ்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்,

துபை காயல் நல மன்ற அங்கத்தினரான - ஹாஜி டி.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், எச்.எஸ்.மூஸா நெய்னா, எஸ்.ஏ.கே.அப்துர்ரஸ்ஸாக்,

ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ, அதன் அங்கத்தினரான ஹபீப் முஹம்மத் முஹ்ஸின், எம்.ஆதம் அபுல்ஹஸன்,

ஜித்தா காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன்,

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை,

தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) பொருளாளர் எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ்,

இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் அங்கத்தினரான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ (48),

தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ,

மலேஷியாவில் வசிக்கும் எஸ்.செய்யித் அஹ்மத், ஜப்பானில் வசிக்கும் எம்.பி.எஸ்.செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




இவ்வாறு, நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் அனைத்துப் படங்களையும் தொகுப்புக் காட்சியாகக் காண இங்கே சொடுக்குக!

தகவல்:
கவிமகன் காதர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒற்றுமைக்கோர் பாலம்!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [28 August 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21541

அஸ்ஸலாமு அழைக்கும்.

இந்த ஏற்பாடு மிகவும் பாராட்ட கூடிய ஒன்று. இது உலக காயல் மன்றங்களின் உணர்வுகளை காயலின் நகர்மன்ற மக்கள்பிரதிநிதிகளுக்கு உணர்த்தும் ஓர் அழகிய ஏற்பாடு.

ஒரே அணியில் நகர்மன்றம் செயல்பட பல கொள்கைகள் [மார்க்கம், அரசியல் மற்றும் பல] இருந்தபோதிலும் ஏழை இல்லா, கல்வி சாதனை கொண்ட காயல் உருவாக தன் சொந்த பந்தங்களை விட்டு கடல் தாண்டி தான் வியர்வை சிந்தய உழைப்பில் ஓர் சிறு பகுதி காயலின் முன்னேற்றத்திற்கு சந்தா என்று கொடுத்து பல சாதனைகளை செய்யும் உலக காயல் நல மன்றங்களின் செயல்பாடுகள் நமது நகர்மன்ற பொறுப்பாளர்களுக்கு ஒற்றுமையுடன் நான் என்று இல்லாமல் நாம் என்ற நாமத்துடன் சரியான முறையில் செயல்பட இது ஓர் தகுந்த படிப்பினை.

ஓர் சிறிய சந்தாவினாலையே காயல் நகர்மன்றங்கள் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது என்றால் அராசால் வழங்க படும் அனைத்து நலத்திட்டங்களையும் நகர்மன்றத்தின் அனைத்து கடமைகளையும் மிக சரியாக செய்ய நமது உறுப்பினர்கள் ஒரே அணியில் ஒற்றுமையுடன் பாடுபட்டால் மாநிலம் மற்றும் பாரதத்தின் தலைசிறந்த நகர்மன்றம் என்ற பரிசை தட்டிப்போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவன்,
M.E. முகியதீன் அப்துல் காதர்,
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உணர்வுபூர்வமான உள்ளம்களிப்புறும் உன்னத நிகழ்ச்சி!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yenbu) [28 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21544

மாஷா அல்லாஹ்! உணர்வுபூர்வமான உள்ளம் களிப்புறும் உன்னத நிகழ்ச்சி,

ஓரிரு நாளைக்கு முன்னாள் நம்மூரில் நடுவீதியில் நடந்த நிகழ்ச்சியால் மனசொர்வுற்ற நம் சகோதரர்களுக்கு,

உண்மையான ஒற்றுமையின் உறைவிட விழாவாகிய இந்த காட்சியை காணும் அனைவர்களின் அன்புள்ளமும் அணையுடைத்த வெள்ளமாய் பாய்கிறது அல்ஹம்துலில்லாஹ்!

50 ஆயிரம் அடிக்கு மேலே பறந்து அக்கரசீமையில் பொருள் தேட செல்லும் புண்ணியவான்களாகிய காயல் கண்மணிகள் தன் குடும்பத்தார்களுக்கு மட்டுமின்றி, நம் மண்ணின் மைந்தர்களாகிய ஏழை எழியோர், நோய் நொடியுடையோர், ஏழை மாணவ பருவங்களுக்கு வாழ்வழி என்று வல்லநாயகனின் வாக்குறுதியாகிய "வறியவர்களுக்கு உதவுங்கள்" என்ற உத்தம வாக்கின் உதாரணபுருசர்களாக வெளிநாட்டில் வாழ்ந்து, இன்று ஊருக்கு வருகைபுரிந்துள்ள வனப்புடைய மாணிக்கங்களே!

உங்களின் உண்மையான உள்நோக்கம் வறியவர்களுக்கு உதவவேண்டும் என்பதுமட்டுமல்ல, நம்மூர் மக்கள் ஒற்றுமை என்ற கைற்றை பற்றிபிடித்து, ஒருதாய் மக்களாக உண்மை உணர்வுடன்வாழ வேண்டும் என்ற வைர எண்ணத்தில் வலம் வரும் உங்களை ,

கொள்கையை காட்டி, தனிப்பட்ட கூட்டமொன்று மார்க்கமெனும் மாயை போர்வையை வீசி, வேருபடவைக்கும் சில வீணர்களின் வலையில் வீழ்ந்துவிடாமல், காயல்நகர மக்கள் அனைவரும் எங்கள் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற உங்கள் ஆலமர உறுதியின் அத்தாட்சிதான் இந்த அகம்மகிலும் பெருமையைகுறிய பெருநாள் ஒன்றுகூடல்!

இந்த காட்சியை பார்க்கும் எங்களுக்கு உணர்சி மிகுதியால் வாழ்த்த வார்த்தை வரவில்லை, காரணம் இந்த இனிய நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவியுடன் அத்தனை அருமை நகரமன்ற உறுபினர்களும் தங்கள் அன்பொழுகும் முகமலர்ச்சியால் மலர்ந்திருக்கும் மாட்சிமை மிகுந்த இந்த காட்சிக்காகத்தான் கடல் கடந்து வாழும் காயளர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்!அக்கனவு இதோ நினைவலையாக நீச்சல் அடித்து கொண்டிருக்கிறது.

வர முடியாத இரு உறுப்பினர்களும் தங்களின் உளம் மிகுந்த வாழ்த்து செய்தியை அனுப்பியது மேலும் ஒரு மகுத்துவ முன்னுதாரணமே!

எல்லாம் வல்ல அல்லாஹ இப்படிப்பட்ட உண்மையான ஒற்றுமை நிகழ்வை நம் ஊரில் நிறைய நடக்கும்படி செய்து, அதற்கு துணை நிற்போருக்கு தூணாகவும், அதற்கு வினையாய் நிற்போருக்கு, அவர்களின் மனதிலுள்ள வினையை விட்டொழித்து, வேறுபட்ட எண்ணத்திலிருந்து ஒற்றுமையின் எண்ணத்திற்கு மாற்றிவிடு யா அல்லாஹ! நீ அறியாதது ஒன்றும் இல்லை!

அல்லாஹ அனைத்தையும் அறிந்தவன் !

ஊர் ஒற்றுமையே உயிர் மூச்சாய் வாழத்துடிபவர்களில் ஒருவன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நிகழ்காலம் பத்திரிக்கை வெளிவருவது மகிழ்ச்சி தருகிறது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [28 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21558

இது ஓர் அரிய - அருமையான ஒன்றுகூடல் என்பதை, இதன் ஏற்பாட்டுப் பணிகளைக் கவனிக்கும்போது கண்டுகொண்டேன்.

வழமையாக, நமதூரைச் சேர்ந்த வெளிநாட்டு மக்கள் பெருநாட்களில் ஊருக்கு வருவார்கள், போவார்கள். இப்படியொரு ஒன்றுகூடல் நடத்தி, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டது இல்லை.

இந்த ஒன்றுகூடலின் நோக்கம் வேறொரு நல்லதுக்காக இருந்தாலும், இதுபோன்ற ஒன்றுகூடல், நம் வெளிநாடு வாழ் காயலர்களுக்காக, ஆண்டுதோறும் நோன்புப் பெருநாள் - ஹஜ் பெருநாட்களில் நடத்தப்பட வேண்டும் என்பது எனது அன்பான ஆசை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [28 August 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21561

அஸ்ஸலாமு அலைக்கும்

ரொம்பவும் அருமையான ஏற்பாடு. இந்த ஒன்றுகூடல் மூலம் நம் ஊரின் ஒற்றுமையும் + நம் ஊரின் முன்னேற்றமும் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் சிறப்பாக செயல் பட முழுமையாக இருக்கும். முக்கியமாக நம் ஊர் நகர்மன்றத் தலைவர் & துணைத்தலைவர்+ உறுப்பினர்கள் பங்கேற்பு இதுவே இந்த ஒன்றுகூடலுக்கு முதல் வெற்றி தான்........
நம் அருமை சகோதரர் ஒருவர் கூறிய வாசகம் உண்மையானது தான் >>>>> நாம் எங்கெங்கோ பறந்து திரிந்தாலும்..... நம் ஊர் தாய்மண்ணில் தரை இறங்கித்தான் ஆகவேண்டும்..... ஆதலால் நாம் நம் ஊர் தாய் மண்ணுக்கு நல்லது செய்யவே நாம் யாவர்களும் நினைத்து.நம் மனதில் உறுதி கொள்ள வேணும் + நாம் ஒற்றுமையை கடைபிடிக்க வேணும்..........

கடேசியில் அருமை சகோதரர் ஒரு சூப்பர் வேண்டு கோளும் வைத்தார் அருமை ஐயா....அருமை ..... >>> நம் நகர்மன்ற நண்பர்கள். தமது பங்களிப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார் . நிச்சயமாக செய்வார்கள் என்று நாம் அனைவர்களும் நம்புவோமாக...... நம் நம்பிக்கை கண்டிப்பாக வினாகாது.

இன்ஷா அல்லாஹ் இது போன்ற ஒன்றுகூடல் வருகின்ற ஹஜ்ஜு பெருநாள் சமையம் உலக காயல் நல மன்ற தலைவர்கள் + நம் ஊர் முக்கியமான சிறப்பு விருந்தினார்களையும் அழைத்து நடதினால் சிறப்புதான். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...உலக காயல் நலமன்ற உறுப்பினர்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21564

இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் சாலை சலீம் அவர்கள் என்னை அழைத்ததின் பேரில் நானும் கலந்து கொண்டேன்.

நான் தம்மாம் காயல் நல மன்றத்தின் செயலாளராகவும், ரியாத் காயல் அலையன்ஸ் கமிட்டி துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளேன். தற்போது இலங்கை காவாலங்கா அமைப்பில் சாதாரண உறுப்பினராக உள்ளேன். பல முதிய முகங்களையும் பல புதிய முகங்களையும் இங்கே காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.

உலக காயல் நல மன்றங்களில் வசூலாகும் பணம் ஊரின் பல நலத்திட்டங்களுக்கு இங்குள்ள இக்ரா கல்வி சங்கம் மூலம் விநியோகிக்கப்படுவதால் அவர்களில் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்குள்ள சிரமங்களை பகிர்ந்துகொண்டிருக்க செய்திருக்கலாம். அவசரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் இது சாத்திய படாமல் போயிருக்கலாம்.

நாங்கள் சந்தித்து வரும் சவால்கள் இரண்டு. ஒன்று சந்தா வசூல் (நானே எனது சந்தாவை முழுமையாக செலுத்திவிட்டேனா என்று ஞாபகம் இல்லை)

மற்றது கருத்தொற்றுமை. திட்டங்களை அறிமுக படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து,. சில நேரங்களில் தட்டிக்கொடுத்து, வேறு சில சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகளை உரிய விளக்கம் சொல்லி அவரது மனம் புண்படாமல் பேசி அவரை சரி காண வைத்திருக்கிறோம் அல்லது உரிய திருத்தங்களை செய்து தீர்மானங்களை வெற்றிகரமாக செயல்படுதியிருக்கிறோம்.

நான் இந்த மன்றங்களின் நடவடிக்கைகளில் இருந்து கற்றுக்கொண்டவை இரண்டு விஷயங்கள்.

ஒரு பிரச்சினையை என்னால் தீர்க்க முடியா விட்டால், அந்த பிரச்சினை தீராமல் இருக்க நானும் ஒரு காரணம்.

அடுத்தது

எல்லா பிரச்சினைக்கும் ஒரு தீர்வு எப்போதும் உண்டு.

ஆங்கிலத்தில் இப்படி சொல்வார்கள்.IF YOU CANNOT SOLVE A PROBLEM. THEN YOU ARE PART OF THAT PROBLEM.

EVERY PROBLEM HAS A SOLUTION.

எனவே நாம் ஒவ்வொருவரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றபோது இந்த இரண்டு கேள்விகளுக்கும் நம் மனசாட்சியை தொட்டு விடை கேட்டால் கட்டாயம் விடை கிடைக்கும் என்பதை இந்த இணைய தளத்தின் மூலம் அடக்கத்துடன் பதிவு செய்கிறேன்.

எங்கள் காவாலங்கா தலைவரை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வைத்து கவ்ரவித்ததற்கும் செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி அவர்களுடன் என்னையும் அழைத்து கவ்ரவித்ததற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

காயல் நல மன்றங்களின் பணிகள் தொய்வின்று நடந்து நமதூர் மக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நவ மணிகளை ஒன்றுகோர்த்த நல்லதோர் மாலை...ரத்தினச் சோலை...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [28 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21569

அருமையான ஒன்றுகூடல்! சிறந்ததோர் முயற்சி!

காயல் மக்களின் கண்ணீரைத் துடைக்க ஒன்றுபட்டு அனைத்து நல மன்றங்களும் ஒருங்கிணைந்து செயல் பட அடித்தளமாக அமைந்த அழகான நிகழ்வு! ஏற்பாடு செய்த அனைத்து காயல் நல மன்றத்தினருக்கும் பாராட்டுக்கள்.

இதில் நகராட்சி உறுப்பினர்களையும் அழைத்து விருந்தோம்பல் நடத்தி உறவுப் பாலத்தை உறுதி செய்தது பெருமை! அவசர ஏற்பாடுதான் எனினும் அற்புதமாக அமையப் பெற்றது அல்லாஹ்வின் கருணை!

இனி வருங்காலங்களில் இது போன்ற ஒன்றுகூடல்கள் மூலம் நம் மக்களுக்கு நன்மைகள் கிடைக்க ஏதுவாக அமையட்டும். வாழ்த்துக்கள்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பிறந்தது ‘நிகழ்காலம்’!  (28/8/2012) [Views - 4650; Comments - 25]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved