Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:19:15 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8682
#KOTW8682
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 6, 2012
நகராட்சி சார்பில் மீன் விற்பனைக்காக பொது சந்தை அமைக்கப்பட வேண்டும்! அதுவரை தற்போதைய நடைமுறை தொடரும்!! மீன் விற்பனையாளர்கள் சமாதானக் கூட்டத்தில் முடிவு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4188 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் விரைவில் பொது மீன் சந்தையை அமைக்க ஆவன செய்யும்படியும், அவ்வாறு அமைக்கப்படும் வரை, தற்போதைய நடைமுறைப்படி பரிமார் தெரு, வண்ணார்குடி கடைத் தெருக்களிலுள்ள இரண்டு சந்தைகளிலும் மீன் விற்பனை செய்யலாம் என்றும், திருச்செந்தூர் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்படிக்கை செய்யப்பட்டது. விபரம் பின்வருமாறு:-

காயல்பட்டினம் வண்ணார்குடி கடைத் தெருவில் - எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது காயல்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை. இங்கு காய்கறி, மீன் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





இந்த சந்தையில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், காயல்பட்டினம் கடைப்பள்ளிக்கு சொந்தமான பரிமார் தெரு மீன் சந்தையில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டுமென்றும் கூறி, காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

நாளுக்கு நாள் இப்பிரச்சினை பல்வேறு வடிவங்களில் முற்றி வந்ததையடுத்து, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகும் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, காயல்பட்டினம் வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்திருக்கும் ஜெயபால், அங்கு மீன் வணிகம் செய்து வருவோரை ஒரு தரப்பினராகவும், காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கத்தைச் சார்ந்தோரை மற்றொரு தரப்பினராகவும் கொண்டு, திருச்செந்தூர் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று (05.07.2012) மாலை 04.30 மணிக்கு சமாதானக் கூட்டம் நடைபெற்றது.





சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் காமாட்சி தாசன் தலைமையில் நடைபெற்ற இந்த சமாதானக் கூட்டத்தில், மண்டல துணை வட்டாட்சியர் செல்வி, ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், சட்டம் ஒழுங்கு உதவியாளர் பாலசுந்தரம் என்ற பாலா ஆகியோர் சங்கமித்திருந்தனர்.



துவக்கமாக, இரு தரப்பினரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. பின்னர், பல்வேறு வழிகளில் சமாதானத்திற்கான முறைமைகள் முன்வைக்கப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின், பின்வருமாறு சமாதான உடன்படிக்கையை, சட்டம் ஒழுங்கு உதவியாளர் பால சுந்தரம் என்ற பாலா வாசித்தார்:-







சமாதானக் கூட்ட நடவடிக்கைகள்:
திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டணம் தென்பாகம் கிராமத்தில் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் மீன் வியாபாரம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று (05.07.2012) மாலை சுமார் 04.30 மணியளவில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் (ச.பா.தி), திருச்செந்தூர் தலைமையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கண்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

1. ஆணையாளர், இரண்டாம் நிலை நகராட்சி, காயல்பட்டணம்
2. தலைவர், இரண்டாம் நிலை நகராட்சி, காயல்பட்டணம்
3. காவல் ஆய்வாளர், ஆறுமுகநேரி
4. திரு.அப்துல் அஜீஸ், தலைவர் காயல்பட்டணம் அனைத்து மீன் சில்லறை வியாபார தொழிலாளர் சங்கம், காயல்பட்டினம்
5. திரு.ஜெயபால், த-பெ.அந்தோணிமுத்து, வன்னார்குடி கடைத்தெரு, காயல்பட்டினம்
6. திருமதி.பிரின்சி, புன்னக்காயல் (நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தை மீன் வியாபாரிகள் சார்பாக)

மேற்படி சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
தற்போது இயங்கி வரும் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் (25 கடைகள் கொண்டது) ஏற்கனவே வியாபாரம் செய்து வரும் திருமதி.பிரின்சி, புன்னக்காயல் மற்றும் 9 நபர்களும், அது தவிர காயல்பட்டினம் அனைத்து மீன் சில்லரை வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அவர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்ததின் அடிப்படையில் 10 நபர்களும் நகராட்சியின் சார்பாக புதிய பெரிய சந்தை தேர்ந்தெடுத்து செயல்படும் வரை இதே நகராட்சி சந்தையில் மீன் வியாபாரம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.

மேலும் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி சார்பாக அனைத்து மீன் வியாபாரிகளும் வியாபாரம் செய்ய போதுமான இடம் தேர்வு செய்யப்பட்டு சந்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மூன்றுமாத காலத்திற்குள் முடிவு செய்யுமாறு ஆணையாளர், காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேற்படி இடம் தேர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து பொதுவான இடத்தினை தேர்ந்தெடுக்க காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி தலைவி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இதற்கான செயல்பாடுகள் நகராட்சியின் அவசரக்கூட்டம் மூலம் மேற்கொள்ள நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவி இருவரும் மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதுவரையில் இருதரப்பினரும் எவ்வித பிரச்சனைகளுமின்றி இரு சந்தைகளிலும் மீன் வியாபாரம் செய்யலாம் எனவும், பொதுவான சந்தை நகராட்சியால் அமைந்த பின்னர் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி எல்லைக்குள் வேறு எங்கிலும் மீன் சந்தையோ, கடைகளோ அமைக்ககூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இம்முடிவினை ஏற்று அனைத்து தரப்பினரும் இதில் மனப்பூர்வமாக கையொப்பமிடுகிறோம்.


இவ்வாறு சமாதான உடன்படிக்கை இரு தரப்பினராலும் ஏற்கப்பட்டு, கைச்சான்றிடப்பட்டது.





பின்னர், இதுகுறித்த அறிக்கை பின்வருமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது:-

திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டணம் தென்பாகம் கிராமத்தில் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் மீன் வியாபாரம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று (05.07.2012) மாலை சுமார் 04.30 மணியளவில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் (ச.பா.தி), திருச்செந்தூர் தலைமையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:-

தற்போது இயங்கி வரும் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில் (25 கடைகள் கொண்டது) ஏற்கனவே வியாபாரம் செய்து வரும் திருமதி.பிரின்சி, புன்னக்காயல் மற்றும் 9 நபர்களும், அது தவிர காயல்பட்டினம் அனைத்து மீன் சில்லரை வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அவர்கள் எழுத்துப்பு+ர்வமாக உறுதி அளித்ததின் அடிப்படையில் 10 நபர்களும் நகராட்சியின் சார்பாக புதிய பொpய சந்தை தோந்தெடுத்து செயல்படும் வரை இதே நகராட்சி சந்தையில் மீன் வியாபாரம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.

மேலும் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி சார்பாக அனைத்து மீன் வியாபாரிகளும் வியாபாரம் செய்ய போதுமான இடம் தோவு செய்யப்பட்டு சந்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மூன்றுமாத காலத்திற்குள் முடிவு செய்யுமாறு ஆணையாளர், காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேற்படி இடம் தோவு தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து பொதுவான இடத்தினை தோந்தெடுக்க காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி தலைவி கேட்டுக்கொள்ளப்பட்டார். இதற்கான செயல்பாடுகள் நகராட்சியின் அவசரக்கூட்டம் மூலம் மேற்கொள்ள நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவி இருவரும் மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதுவரையில் இருதரப்பினரும் எவ்வித பிரச்சனைகளுமின்றி இரு சந்தைகளிலும் மீன் வியாபாரம் செய்யலாம் எனவும், பொதுவான சந்தை நகராட்சியால் அமைந்த பின்னர் காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி எல்லைக்குள் வேறு எங்கிலும் மீன் சந்தையோ, கடைகளோ அமைக்ககூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவினை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் வேறு சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகராட்சி சார்பில் மீன் வி...
posted by P.S ABDUL KADER (jeddah) [06 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19863

இரு சந்தை தற்போதைய நடைமுறையில் இருக்கும் போது மீன் விற்பனையாளர் நியாய விலைக்கே மீன்களை விற்கக்கூடும்.

மீன் விலை நிர்ணயம் ஏற்றம் சந்தைக்கு சந்தை இனி இருக்காது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சுமூகமான தீர்வு...சமூகத்திற்கு நன்மை..!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [06 July 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19877

வட்டாட்சியரின் முடிவு சிறப்பானதாக இருக்கின்றது. இரு தரப்பினருக்கும் மோதல் வெடிப்பதைத் தவிர்க்க இது விஷயத்தில் நம் நகர்மன்றத் தலைவரும் அதிக கவனம் செலுத்துவதோடு அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து விரைவில் பொது (மீன்)சந்தை அமைவதற்கு ஒத்துழைப்பைத் தர வேண்டும். அப்பா...சுணாமி மாதிரி வந்து...சுமூகமாப் போச்சே! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகராட்சி சார்பில் மீன் வி...
posted by Kader K.M (Dubai) [07 July 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19880

அப்பாடா! ஒரு வழியாக பள்ளி பராமரிப்புக்காக வந்து கொண்டிருந்த வருமானத்தை நிறுத்தியாச்சி இப்பதான் நிம்மதி! மீனின் அடைமொழி கொண்ட கருத்தாளரே சந்தோசமா? என்னா நகராட்சி சந்தை வந்தால் அந்த வருமானம் நமது நகராட்சிக்கு நல்லது தானே என்று முனுமுனுப்பது கேட்க்கின்றது! ஆனால் அந்த வருமானம் எங்கு செல்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே!

போங்க சார்! போயி நமது ஊருக்கு தடை இல்லாத தண்ணீர் வருவதற்கும், அனைத்து பஸ்களும் நமது ஊர் மார்க்கமாக செல்வதற்கும் ஆவணம் செய்ய சொல்லுங்கள்!காரணம் எல்லா வசதிகளும் தேர்வு நிலை பேரூராட்சிக்கு கிடைக்குமாம் இரண்டாம் நிலை நகராட்சிக்கு கிடையாதாம்! நல்லதாபோச்சி முருகன் கோபப்பட்டு நமது எல்லையில் குடி கொண்டதால் அங்கு ஒரு கோவில் ஏற்பட்டு நமக்கு பஸ் வசதியும் கிடைத்தது! இல்லையென்றால்?..........

வாங்க! வாங்க! ஏதோ ஒரு பள்ளி வளாகத்தில் கடை கட்டுகின்றார்களாம் நமது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தடுக்கமுடியுமானு பார்ப்போம்! வந்தாரை வாழவைக்கும் காயல்பட்டணம்! இருப்போரை இரக்க( பிச்சை எடுக்க ) வைக்கும் காயல்பட்டணம்! தமிழன் என்று சொல்வதைவிட முஸ்லிம் என்று சொல்லடா! முவ் வாழ்க்கையிலும் வெற்றிபெரடா ரப்பி ஜிதினி இல்மா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகராட்சி சார்பில் மீன் வி...
posted by KaderK.M (Dubai) [07 July 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19885

நன்றி அட்மின் அவர்களே! கத்திரி வைப்பீர்கள் என்று நினைத்தேன்! இது என் மண்ணின் மைந்தர்களின் குமுறல்களின் வெளிப்பாடு! மண்ணின் மைந்தர்கள் வசிக்க ஒருபிடி மண் அவர்களுக்கு சொந்தம் இல்லை! அவர்கள் புளுக்கின்றார் என்று ஒரு சகோதரர் பதிவு செய்துள்ளார்! மனவேதனையாக உள்ளது! புளுப்பது நமது ஊரில் புதிதல்ல!

அவர்கள் படிப்பு அறிவு இல்லாத காரணத்தால், அறியாமையினால் புளுக்கின்றார்கள்! படித்த நம் எத்தனை சகோதரர்கள்......அஸ்தஹ்பிருல்லாஹ்! நம் ஊர் நலமான்றங்கள் எத்தனை உள்ளது! என்றாவது அவர்கள் உதவி நாடியிருப்பார்களா? தனிப்பட்ட முறையில் சில நல்ல உள்ளங்களை சந்தித்து உதவி பெற்றுள்ளார்கள்!

காயலையும், காயலர்களையும் மேம்படுத்த உறுதி எடுத்த காயல் நல மன்றங்களே இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி அறிவு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உறுதி கொள்ளுங்கள்! சதக்கதுல் ஜாரியாவை பெற்றுக்கொள்ளுங்கள்! எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் பிரிவான்! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சி சார்பில் மீன் வி...
posted by SEYED ALI (ABUDHABI) [08 July 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19895

அது சரி. பள்ளி கூடம் பக்கத்தில் இருந்தால் மீன்கடைகளால் இரைச்சலும் நாற்றமும் மாணவர்களுக்கு போக வரவும் படிக்கவும் பெரும் தொல்லையாக இருக்கிறது என்று அன்று தொண்ணூற்று மூன்றில் பெரும் ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தார்களே, அதெல்லாம் இப்போது வெறும் புஸ்வானம் தானா?

மீன்கடை பொதுவில் கடைப்பல்லியில் இருப்பதுதான் சரி. மேல் பகுதியில் இருப்பவர்கள் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும் சமூக நலத்திற்க்காக. என் கீழ்பகுதியில் இருப்பவர்கள் பஜாருக்கு வரவும் பஸ் ஸ்டாண்ட், போஸ்ட் ஆபீஸ் முனிசிபாலிட்டி, இன்னும் பிற என்று சிரமப்படவில்லையா?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகராட்சி சார்பில் மீன் வி...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [08 July 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19898

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது நகராட்சி சார்பில் மீன் விற்பனைக்காக பொது சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது எல்லாம் ஓகே .தான்.

நம் நகராட்சிக்கு வருமானம்தானே. இந்த வருமானம் எல்லாம் நல்ல முறையில் நம் ஊர் மக்களுகாக உபையோகம் செய்தாள் சரி தான் .

இதெல்லாம் சரிதான்ப்பா நம் ஊரில் ஏன் மீன் விலையை மற்றும் கண்ட்ரோல் பண்ண இன்று வரை யாராலும் முடிய வில்லை.காரணம் என்னவாம்?????

நம் ஊரில் நல்ல மீன் வழம் கொண்ட கடற்கரை இருந்துமா ?? நமக்கு இந்த நிலைமை ???? யார் தான் இதை சரி செய்வார்கள்...... என்று ஒன்றுமே தெரியாமலே ....... நமது ஊரின் மீன் விலை தாறு...மாறாக ..... போய் கொண்டே இருக்கிறது.

நமது நகர் மன்ற தலைவி அவர்கள் தான் இந்த புதிய மீன் சந்தை அமைக்கும் போது..... மீனின் விலை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ண நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். வஸ்ஸலாம்.

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved