Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:05:08 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8684
#KOTW8684
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 6, 2012
“நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது!” -சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2012 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவி சுஷ்மிதா பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4776 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது” என, சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012 கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, ப்ளஸ் 2 மாநிலத்தின் முதன்மாணவி எஸ்.சுஷ்மிதா தெரிவித்துள்ளார். விபரம் பின்வருமாறு:-

காயல்பட்டினம் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனை செய்திடத் தூண்டும் நோக்குடன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு, கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில், கலந்துரையாடல் - பரிசளிப்பு என இரண்டு அமர்வுகளாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



சாதனை மாணவ-மாணவியருடன் காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியரைக் கலந்துரையாடச் செய்யும் கலந்துரையாடல் நிகழ்ச்சி காலை 10.00 மணிக்குத் துவங்கியது. இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.எல்.ஷெய்க் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் வாஸிம் அக்ரம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ கல்வி கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், சாதனை மாணவி குறித்து அறிமுகவுரையாற்றினார். கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நெறிமுறைகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் விவரித்தார்.





பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது. 2011-2012 கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.சுஷ்மிதா, இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, காயல்பட்டினம் நகரின் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ சாதனை மாணவியை நேர்காணல் செய்தார்.





அன்றாடம் படிக்க வேண்டிய முறைகள், நேர ஒழுங்கமைப்புகள், சிறப்பு வகுப்புகள், சிறப்புத் தேர்வுகள், அன்றாட பழக்கவழக்க்களை முறைப்படுத்தி அமைத்துக்கொள்ளல், தேர்வு எழுதும்போது மனதை ஒருநிலைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, நேர்காணல் செய்தவரும், அனைத்துப் பள்ளிகளின் மாணவ-மாணவியரும், பார்வையாளர்களும் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சாதனை மாணவி எஸ்.சுஷ்மிதா விளக்கமாக விடையளித்தார்.





இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தெரிவித்த “கனவு காணுங்கள்!” என்ற முழக்கம் குறித்து சாதனை மாணவியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, “உறக்கத்தில் காண வேண்டியதல்ல உங்கள் கனவு! மாறாக, நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது!!” என்று தெரிவித்தார்.

தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அடிமைப்பட்டுக் கிடப்பதைத் தவிர்க்குமாறு தெரிவித்த அவர், “நாம் தொலைக்காட்சியைப் பார்க்காவிட்டால்தான் நம்மை அனைவரும் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

இடையிடையே மாணவ-மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில் சாதனை மாணவியின் தாய், தந்தை, இளைய சகோதரி ஆகியோரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.





நண்பகல் 12.15 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. இடைவேளையின்போது - நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் குளிர்பானமும், சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. மதியம் 01.00 மணியளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நன்றியுரை - நாட்டுப்பண் - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் அனைத்துப் பள்ளிகளின் பல்வேறு ஆசிரியர்களும், ஆசிரியையரும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கல்வி ஆர்வலர்களும், அபூதபீ காயல் நல மன்ற செய்தித் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உள்ளிட்ட உலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள் - செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களும், மாணவ-மாணவியரின் பெற்றோரும் திரளாகக் கலந்துகொண்டனர்.







கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது முதல் நிகழ்ச்சி நிறைவுறும் வரை, இடைவேளையைத் தவிர அனைத்து நேரங்களிலும் மாணவ-மாணவியர் மிகுந்த அமைதியுடனும், முழு கவனத்துடனும் நிகழ்ச்சிகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், அதன் மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அங்கத்தினரான எஸ்.அப்துல் வாஹித், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான பி.ஏ.புகாரீ, எஸ்.எம்.ஐ.ஜக்கரிய்யா, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு, வள்ளியூரில் இயங்கி வரும் பெட் பொறியியல் கல்லூரி நிர்வாகம் முழு அனுசரணையளித்திருந்தது. அக்கல்லூரியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஷாஹுல் ஹமீத், சாதனை மாணவியையும், இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளையும், அதற்கு முதுகெலும்பாக இருக்கும் உலக காயல் நல மன்றங்களையும் வாழ்த்திப் பேசியதுடன், பெட் பொறியியல் கல்லூரியின் செயற்பாடுகள், சேவைத் திட்டங்கள், முஸ்லிம் மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு வசதிகள் குறித்து விளக்கிப் பேசினார்.



கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர், சாதனை மாணவி எஸ்.சுஷ்மிதாவை, காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவியர் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் அளவளாவினர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by izzadeen (chennai) [06 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19870

saalam,realy super work,thanks to iqra .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [06 July 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19871

பயனுள்ள நிகழ்வில் இந்த நிகழ்வும் ஒன்று.

ஒரு பத்து மாணவர்களை ஒன்று சேர்த்து, ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பதே ஒரு சாதனை. ஆனால் இந்த நிகழ்விலோ ஜே.ஜே என்று அனைத்து பள்ளிகளின் மாணவ மாணவிகள் அரங்கு நிறைய இருந்ததை பார்த்ததும் வயிற்றில் ஒரு புளி கரைத்ததை உணரமுடிந்தது, ஆனால் நிகழ்ச்சி முடியும் வரை அவ்வளவு ஒரு அமைதி, அவ்வளவு ஒரு ஒழுக்கம். கடைசியில் கரைத்தது புளி அல்ல, வயிற்றில் பால் வார்த்த மாதிரி ஆகிவிட்டது.

பல பல கேள்விகள், வித்தியாசமான பதில்கள் என்று சிறப்பாக அமைந்தன. பலருடைய உழைப்புகளை பிரதிபலித்து வெற்றியாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. அனைவர்களுக்கும் நன்றிகள் பல.

பெண்கள் பகுதியில் வாலண்டியர்ஸ் ஆக உதவி புரிந்த பெண்களின் சுறுசுறுப்பும், கனிவான உபசரிப்பும், தங்கள் வீட்டு வைபவம் போன்று நடந்து கொண்ட நடவடிக்கைகள் கூடுதல் மன நிறைவு. இரவு நிகழ்ச்சி முடிந்து அனைவர்களும் சென்றதும், அவர்கள் பகுதியில் அனைத்து சேர்களையும் அவர்களே அடுக்கி வைத்து சென்றதையும் காண முடிந்தது. ஸ்பெஷல் தேங்க்ஸ் சகோதரிகளே.

அடுத்த வருடம் இந்த மேடை முழுவதும் காயல் கண்மணிகளால் அலங்கரிக்க வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்திய சாதனை மாணவி உடைய ஆவலை வல்ல ரஹ்மான் அங்கீகரிப்பானாக...!! இன்ஷா அல்லாஹ்.

அப்புறம், அங்கு பரிமாறப்பட்ட ஐஸ் மோரும்,நேர்காணல் செய்த ஹாஜி எஸ்.ஐ.புகாரீ அவர்களும் கூடுதல் கலக்கல்.

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கனவு மெய்ப்பட வேண்டும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [06 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19875

காயல்பட்டினம் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனை செய்திடத் தூண்டும் நோக்குடன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது பெருமைக்குரியதே! எப்படியாவது நமதூருக்கும் மாநிலத்தின் முதல் மாணவர் எனும் அந்தஸ்து கிடைத்து விடாதா? எனும் முயற்சியில் களப்பனியாற்றிவரும் காயல்ஃபஸ்ட் ட்ரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்விச்சங்கத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். விரைவில் உங்கள் முயற்சி கைகூடும். இன்ஷா அல்லாஹ்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by Kader K.M (Dubai) [07 July 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19879

எங்கள் இறைவனே! எமது ஊர் கண்மணிகளும் மார்க்க கல்வியிலேயும் உலக கல்வியிலேயும் மனிதநேயத்திலேயும் சிறந்து விளங்க நீயே அருள்புரிவாயாக! சகோதரி சுஸ்மிதா அவர்களுடைய மொழிகள் பொன்மொழிகளே! வாழ்த்துக்கள்! தாங்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் ! இவ்வளவு சிறப்பை இறைவனால் பெற்ற நீங்கள் குர்-ஆனையும் எடுத்து படியுங்கள் அந்த வல்ல இறைவன் (நாடினால்) சிறப்பிற்கு சிறப்பு சேர்ப்பான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by Mohamed Salih (Bangalore) [07 July 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 19882

மாஷா அல்லாஹ்..

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க .. இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடை பெருவதருக்கு உருதுணையாக இருந்த எல்லோருக்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் ...

இன்ஷா அல்லாஹ் கூடிய சிக்கிரம் நம்ம ஊரு மாணவர்கள் மாநிலத்தின் முதல் மாணவராக வருவார்கள் ..

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [07 July 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19883

"முதன்மாணவி சுஷ்மிதா பேச்சு"

''நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது!'

''நாம் தொலைக்காட்சியைப் பார்க்காவிட்டால்தான் நம்மை அனைவரும் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்”

இந்த இரண்டு வார்த்தைகளும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்....இரண்டுமே உண்மை - Excellent SUSMITHA......

Special thanks to The Kayal first trust - M.S. Saleh, B.A. Buhari and I. Zakariya & Salai Nawas & the students and the participants....

Request to the parents closely monitor your son/daughter's access on the Internet - especially - Facebook - SKYPE - TWITTER - YM - MSN and others sites, Freedom been given with some extent within the principles of Islam.....

நமது ஊர் " மாணவர்கள் நாளை இதே மேடையை அலங்கரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்....

S.A. Ayesha Hannan - Riyadh


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [07 July 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19884

Greetings

First of all my hearty wish to the state first rank candidate.Really this meeting provide encourage and awareness for our students.Inshallah our students will acheive oncoming examinations.

Best regards
Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by omar (Maraikkar Palli street) [07 July 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19887

NOT TO BE A BOOKWORM ,

NEED TO GET THE KNOWLEDGE FROM THE ALL THE SOURCE INCLUDING INTERNET WITH LIMITED ACCESS , JUST MUGUP THE SUBJECT WIIL NOT HELP FOR THE FEATURE CHALLENGE , LEAD YOU TO ONLY A SCOREBANK .

TRY TO SPEND FEW HOURS FOR THE EXTRA PHYSICAL ACTIVITY ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [07 July 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19892

அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல வரவேற்கதக்க செயல். நம் ஊர் பிள்ளைகளும் மாநிலதிலேயே முதல் '''' ரேங் '''' மாணவ / மாணவிகளாக வர வேணும் என்பது தான் . எங்களுடைய ஆசை. வல்ல நாயன் இந்த நம்முடைய ஆசையை இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நிறைவேற்றி தருவானாகவும் ஆமீன்.

மாநிலத்தின் முதன்மாணவி சுஷ்மிதா அவர்களின் பேச்சின் இரு கருத்துகளும் அருமையானவை ( NO. 1 .... “உறக்கத்தில் காண வேண்டியதல்ல உங்கள் கனவு ........ மாறாக, நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது!!”

NO.2.... T.V. முன் நாம் அடிமைப்பட்டுக் கிடப்பதைத் தவிர்க்குமாறு தெரிவித்த அவர், """' “நாம் தொலைக்காட்சியைப் பார்க்காவிட்டால்தான் ....... நம்மை அனைவரும் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்ன அருமையான வாசகம் .... நிச்சயமாக நம் மாணவ / மாணவிகளும் இதை பின் பற்றினாலே கண்டிப்பாக வருகின்ற வருடம் முழுமையான வெற்றி நம் ஊர் பிள்ளைகளுக்கே . நம் ஊர் பிள்ளைகளிடம் நல்ல திறமை உள்ளது.இவர்களிடம் உள்ள முழு திறமைகளை வெளி கொண்டு வருவது நம் ''' இக்ர '''' போன்ற நல்ல அமைப்புகளில் தான் உள்ளது. மேலும் இக்ரவுக்கு நம் ஊர் .... வெளி நாடு வாழ் & உள் நாடு வாழ் காயல் நற்பணி மன்றகளின் முழுமையான சப்போட் கண்டிப்பாக வேண்டும்.

எங்களின் .... DAMMAM காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஜனாப். சாளை ஜியாவுத்தீன் அவர்களும் இதில் கலந்து முழு ஒத்துழைப்பு கொடுத்ததை நினைக்கும் போது இன்னும்.... DAMMAM காயல் நற்பணி மன்றத்துக்குதான் பெருமையாக உள்ளது. நம் ஊருக்கே '''' தாய் வீடு அல்லவா இந்த DAMMAM காயல் நற்பணி மன்றம் .....அல்ஹம்துலில்லாஹ்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by Mohamed Salih (Chennai) [08 July 2012]
IP: 111.*.*.* India | Comment Reference Number: 19893

மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கலந்து கொண்ட நிகழ்ச்சி அற்புதம் . ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள் அவருடைய பேச்சு இடம் பெற்றிருந்த காணொளி காட்சியை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வீடியோ பதிவை பதிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

Mohamed Salih
Chennai
Mob: 7845836140


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [08 July 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19896

-சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2012 கலந்துரையாடல் நிகழ்ச்சி நமதூரில் மிக சிறப்பாக நடந்தேறியதை இணையதளம் மூலமாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

நம் ஊர் பிள்ளைகளும் மாநிலதிலேயே முதல் '''' ரேங் '''' மாணவ / மாணவிகளாக வர வேணும் என்பது தான் . எங்களுடைய ஆசை. வல்ல நாயன் இந்த நம்முடைய ஆசையை இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நிறைவேற்றி தருவானாகவும் ஆமீன்.

நம் ஊர் பிள்ளைகளிடம் நல்ல திறமை உள்ளது.இவர்களிடம் உள்ள முழு திறமைகளை வெளி கொண்டு வருவது நம் ''' இக்ர '''' போன்ற நல்ல அமைப்புகளிடம்தான் உள்ளது. நம்முடைய மாணவர்களில் சிலர் டியுசன் செல்ல வசதி இல்லாமல் இருக்கிறார்கள் இன்னும் சிலரோ வெட்க சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் அதாவது தங்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களை ஆசிரியர்களிடம் போய் கேட்க வெட்கப்படுகிறார்கள் .எனவே நம் இந்த இக்ரா போன்ற அமைப்புகள் ஆசிரியர்களை கொண்ட ஒரு டீமை (Physics ,Chemistry ,Biology ,Maths ) உருவாக்கி ,அந்த டீமின் மூலமாக ஊரின் அனைத்து பள்ளியின் முதல் ஐந்து மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோச் கொடுத்து அந்த மாணவர்களுடைய சந்தேகங்களை எல்லாம் தெளிவு படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தால் இன்ஷா அல்லாஹ் நடப்பு கல்வி ஆண்டில் நமதூர் மாணவர்களை மாநிலத்தின் முதல் மானவராக்க அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள் .இன்ஷா அல்லாஹ் இறைவன் வெற்றி தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam) [09 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19907

பொதுமக்களின் பொதுபுத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்றை அதிலிருந்து நீக்குவது பெரும் சிரமத்திற்கு உரிய ஓன்று. இந்த முதல் மாணவர் ,முதல் பரிசு சமாச்சாரம் அதில் ஓன்று. எல்லோரும் பாராட்டும் ஒரு விஷயத்தை இவன் என்ன இப்படி பார்கிறான் என எண்ண வேண்டாம்.

நாமக்கல் பள்ளிகளில் எவ்வாறு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்தவர்கள் யாரும் இவர்களை பாராட்ட மாட்டார்கள். அங்கு "கல்வி "கற்று கொடுப்பதில்லை. தேர்வில் எவ்வாறு முதலிடம் பிடிப்பது என்பதற்குரிய பயிற்சிதான் கொடுக்கப்படுகிறது. பிளஸ் டூ வகுப்பின் முதல் வருட பாடங்களை இங்கு நடத்தவே மாட்டார்கள். இரண்டு வருடமும் இரண்டாம் வருட கல்வி மட்டுமே இங்கு போதிக்கப்படும். மாணவி சொல்வது உண்மைதான். "உறக்கம் வராது."ஏனெனில் உறங்க விடமாட்டார்கள். சகோதரர்களே....தானாக பழுக்கும் கனியின் ருசி வேறு. அடித்து கணியவைக்கப்படும் கனியின் ருசி வேறு.

கல்வி எனபது ஐந்து நிமிடங்களில் நடந்து முடியும் ஓட்டப்பந்தயமோ, டி. வி களில் நடத்தப்பெறும் அதிர்ஷ்ட்டபோட்டியோ அல்ல. அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் விழும் பூட்டான் மாநில லாட்டரி பரிசோ அல்ல. 12 வருட உழைப்பில் மலரும் கனி அது. இதில் புரிந்து படித்தவர்கள் குறைய மார்க் வாங்குவதும், நெட்டுரு போடுபவர்கள் அதிக மார்க் வாங்குவதும் சகஜம். முதல் மார்க் வாங்குபவர்கள் பெரும்பாலும் நெட்டுரு கேஸ்கல்தான்.

நிறைய கல்விசார்ந்த அமைப்புகள் இதுபோன்ற விழாக்களை நடத்துவதால் மாணவ சமுதாயம் ஊக்கம் பெரும் என்று கருதியே மிகுந்த பொருட்செலவில் இவ்வாறு நடத்துகிறார்கள். மாணவர்களின் உளவியல் தெரிந்தவர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது 50 மார்க் எடுத்தவன் தெம்மாடி, 51 மார்க் எடுத்தவனே கெட்டிக்காரன் என்று மாணவ சமுதாயத்தை கூறு போடுவதாகும். இவரளவுக்கு நாம் உழைத்தும நமக்கு இந்த யோகம் கிட்டவில்லையே..... என்று இன்னொரு மாணவனை வருந்த வைப்பதாகும். இது எந்த அளவுக்கும் மாணவ சமூகத்திற்கு துணை புரியாது.

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இதெல்லாம் தேவைதான் என சிலர் வாதிடலாம். வாழ்வை நிறைவாக வாழ்ந்திட எப்போதும் வியர்வை வழியும் ஓட்டம் தேவையில்லை. சமச்சீரான நடையே போதும்.

யாரையும் நான் இதில் விமர்சிக்கவில்லை. எனது கருத்தையே எழுதியுள்ளேன். எனவே கணம் அட்மின் கத்தரி போட்டுவிட வேண்டாம்.

இன்றளவும் ஒரு மாணவனாக உணரும்....
கே. எஸ் முஹம்மத் ஷூஐப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:“நீங்கள் காணும் கனவு உங்க...
posted by mackie noohuthambi (colombo) [10 July 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19924

வாழ்த்துக்கள்.

நேர்காணல் செய்த புகாரி அவர்களின் கன்னி தமிழ், கன்னி முயற்சி என் கருத்தை கவர்ந்தது. மாற்றி யோசித்து பழக்கப்பட்டவர்கள். நேர்காணல் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நபர்தானா என்று அலுத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு ஒரு புதிய திருப்பம்.

உன்னால் முடியும் தம்பி என்ற உதயமூர்த்தி அவர்களின் அறிவுரையை எண்ணிப்பார்க்கிறேன் . இந்த சமயம் ஊரில் இருந்து இந்த நிகழ்ச்சியை காண முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாக உள்ளது. சாதனை மாணவியின் வைர வரிகள் உள்ள்லத்தில் பதிந்து விட்டது.

சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் அந்த எண்ணம் உங்களை தூங்க விடாது என்பதும் தூங்கினால்தானே கனவு காண்பதற்கு என்ற அசத்தலான பேச்சும், தொலைக்காட்சியை நீங்கள் பார்ப்பதை தவிர்த்தால் உங்களை எல்லோரும் தொலைகாட்சியில் பார்ப்பார்கள் .......அட்டகாசமான அரங்கம் அதிர கை தட்டுக்கள் இருந்திருக்க வேண்டும். நமதூர் மாணவிகள் நன்கு கவனித்திருப்பார்கள்..

எல்லா பள்ளிக்கூடங்களிலும் இந்த வைர வரிகளை எழுதி வையுங்கள். எல்லோர் கண்களிலும் எப்போதும் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். திருக்குறளையும் திருவாசகத்தையும் தாண்டிய ஒரு இருபத்தி ஓராம் நூற்றாண்டு சிந்தனை சிற்பியின் வாசகங்கள் சுஸ்மிதா!

நீங்கள் காயல்பட்டினத்துக்கு வந்ததால் உங்களுக்கு பெருமையா, அல்லது உங்களை காயல்பட்டினம் அழைத்து கவ்ரவிததால் காயல்பட்டினத்துக்கு பெருமையா?

பார் சிறுத்தலின் படை பெருத்ததோ அன்றி படை பெருத்தலின் பார் சிறுதததோ என்ற புறநானூற்று பாடல் நினைவுக்கு வருகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகளை சான்றோர் எனக்கேட்ட தாய். மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி இவள் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்.

பெருமையாக இருக்கிறது. இக்ரா கல்வி சங்கம் ஒரு மதுரை தமிழ் சங்கமாக மாறியுள்ளது. காயல்பட்டினம் மாணவ மாணவிகள் விழித்துக்கொள்ளுங்கள். வீணான அரட்டைகள், நம்மிடையே பிளவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைக்குரிய விசயங்களை பட்டி மன்றம் போட்டு விவாதிக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சுஸ்மிதா அறிவுக்கண் திறந்த ஊற்றாக உருவெடுத்தால் ஒவ்வொரு வீடும் ஒரு பல்கலைக்கழகமாக மாறும்.

இஸ்லாமிய உணர்வுகள் நிறைந்த ஆயிஷாகள் உருவாகினால் ஒவ்வொரு வீடும் ஒரு மஸ்ஜிதுன் நபவி யாக மாறும் . அந்த நல்ல சூழலை உருவாக்கிகொடுக்க நமது காயல்நல மன்றங்கள் களம் அமைத்து தந்து வருகிறார்கள். எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளகிறேன். இந்த நிகழ்த்தி தொகுப்பின் குறுந்தகடு தெருவெங்கும் விற்பனைக்கு வையுங்கள். போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.புதிய தலைமுறைக்கு மட்டுமல்லாமல் முதிய தலைமுறையும் கேட்டுப்பயன்பெற வேண்டிய அற்புதமான நிகழ்ச்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved