Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:24:40 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8674
#KOTW8674
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 3, 2012
நகராட்சி தினசரி சந்தையில் மீன் விற்பது குறித்து பரிமார் தெரு மீன் வணிகர்கள் - குத்தகைதாரரிடையே கருத்து வேறுபாடு! ஜூலை 05இல் சமாதானக் கூட்டத்திற்கு வட்டாட்சியர் ஏற்பாடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4814 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வண்ணார்குடி கடைத் தெருவில் - எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது காயல்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை. இங்கு காய்கறி, மீன் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





இந்த சந்தையில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், காயல்பட்டினம் கடைப்பள்ளிக்கு சொந்தமான பரிமார் தெரு மீன் சந்தையில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டுமென்றும் கூறி, காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இச்சங்கத்தின் தலைவராக அப்துல் அஜீஸ், துணைத்தலைவராக எஸ்.பீட்டர், செயலாளராக ஜெஸ்மின், துணைச் செயலாளராக கே.சுடலை மணி நாடார், பொருளாளராக ஷம்சு அலியார் ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

இன்று காலையில், காயல்பட்டணம்.காம் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த செயலாளர் ஜெஸ்மின்,

எங்கள் சங்கம் முறைப்படி அரசுப் பதிவு செய்யப்பட்டுள்ளது... கடைப்பள்ளிவாசலுக்கு சொந்தமான இந்த மீன் மார்க்கெட்டில், கடந்த 19 வருடங்களாக சாதி - மத வேறுபாடுகளின்றி நாங்கள் 110 வியாபாரிகள் இங்கு மீன் வணிகம் செய்து வருகின்றோம்... “காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கம்” என்ற பெயரிலான எங்கள் சங்கத்திலும் பல மதங்களைச் சார்ந்தோர் நிர்வாகிகளாகவும் இருந்து வருகின்றனர்.



முற்காலத்தில், பரிமார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள மீன் வியாபாரிகளும், வண்ணாக்குடி தெருவில்தான் மீன் வணிகம் செய்து வந்தோம்.... இன்றிருக்கும் - நகராட்சிக்குச் சொந்தமான தினசரி சந்தை கட்டிடம் அன்று இல்லை... எல்.கே.மேனிலைப்பள்ளியின் கோட்டைச் சுவருக்கு வெளிப்புறத்திலுள்ள சுற்றுப்புறத்தில்தான் நாங்கள் வியாபாரம் செய்து வந்தோம்...

அப்பள்ளியின் ஆசிரியர்களும், நிர்வாகிகளும், மாணவர்களும் - “உங்க பிள்ளைகளும் இங்குதானே படிக்கிறாங்க...? அவங்க நல்லா இருக்கனும்னு உங்களுக்கு ஆசை இல்லையா? அவ்வாறு இருந்தால், வேறு இடத்தில் மீன் வியாபாரம் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொள்ள, நாங்கள் அதற்கு உடனடியாக கட்டுப்பட்டு, அவ்விடத்தில் மீன் விற்பனை செய்வதை நிறுத்திக்கொண்டோம்...

ஆனால், வேறு சில வியாபாரிகள் தொடர்ந்து அதே இடத்தில் மீன் விற்பனை செய்ததையடுத்து பிரச்சினை முற்றி, 1993ஆம் ஆண்டு ஊர் கலவரம் வரை சென்றது.

பின்னர், கடைப்பள்ளி நிர்வாகத்திற்குச் சொந்தமான காலி நிலத்தில் - தற்போதிருக்கும் மீன் சந்தை கட்டித் தரப்பட்டது... அன்று முதல் இன்று வரை இந்த பரிமார் தெரு மீன் சந்தையிலேயே நாங்கள் மீன் விற்பனை செய்து வருகின்றோம்...

அதுபோல, வண்ணார்குடி கடைத் தெருவில், நகராட்சியின் சார்பில் தினசரி சந்தை அமைக்கப்பட்டது...

இந்நிலையில், வழமையாக கூட்ட நெரிசலுடன் காணப்படும் எங்கள் பரிமார் தெரு மீன் சந்தையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூட்டம் வெகுவாகக் குறைந்து எங்கள் வியாபாரம் மந்த நிலையை அடைந்தது... “நீங்க விக்கிறதை விட பல மடங்கு குறைத்து வண்ணார்குடி கடைத் தெரு சந்தையில் விற்பனை செய்றாங்க...” என்று பல வாடிக்கையாளர்கள் தெரிவித்ததையடுத்து நாங்கள் அங்கு சென்று பார்த்தபோதுதான், அங்கே ஒரு பெரிய மீன் சந்தையே இருப்பது தெரிய வந்தது...

மீன் விற்பனை கிடையாது என்பதால், வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள அந்த தினசரி சந்தையை பல ஆண்டுகளாக யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை... அதனையடுத்து, ஒரு இரும்பு வியாபாரி இரும்பு குடோனுக்காக அவ்விடத்தை எடுத்திருந்தார்... இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் ஒரு பெண் அந்த குடோன் காரரிடம் அனுமதி பெற்று, அதன் வாசல் அருகில் மீன் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்... இதனால் எங்களுக்கும் பாதிப்பில்லாததால் நாங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை... ஆனால், காலப்போக்கில், வியாபாரிகள் எண்ணிக்கை 20 முதல் 25 வரை அதிகரித்து, அவ்விடம் மீன் சந்தையாகவே மாறிவிட்டது... பிடிக்கப்பட்ட மீன்களை அவர்கள் நேரடியாகவே கொண்டு வந்து விற்பதால் எங்கள் வியாபாரம் பெரிதும் பாதித்துள்ளது...

உடனடியாக நாங்கள், எல்.கே.மேனிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினோம்...





அதனைத் தொடர்ந்து, அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு பின்வருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது...



அதுபோல, இந்த வெளியூர் மீன் வியாபாரிகளின் ஊர் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினோம்...







பின்னர், காயல்பட்டினத்தின் அப்போதைய நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில், பரிமார் தெரு மீன் மார்க்கெட்டைத் தவிர வேறெங்கும் மீன் விற்க தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்... இதுகுறித்து, அப்போதைய ஆணையருக்கு நாங்கள் எழுதிய கடிதம்...





அப்போதைய நகர்மன்ற உறுப்பினர்களான சுகு, எஸ்.ஐ.ரஃபீக் ஆகியோரும் அந்த அமர்வில் உடனிருந்தனர்...

எங்கள் கோரிக்கைக்கு பதிலளித்த தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள், “ஊர் பெருத்துவிட்டது... எனவே, 2 மீன் மார்க்கெட் அவசியமாகிவிட்டது... நகராட்சிக்கு பாத்தியப்பட்ட தினசரி சந்தையில் மீன் விற்பனை நிறுத்தப்பட்டால், நகராட்சியின் வருமானம் பாதிக்கப்படும்... என்று தெரிவித்துவிட்டார்...

பொதுமக்களைப் பொருத்த வரை, குறைந்த விலைக்கு எங்கு பொருள் கிடைக்கிறதோ அங்குதான் சென்று வாங்குவார்கள்... அவர்களுக்கு எங்களின் சிரமங்களை விளக்கிச் சொல்லாமல் தெரியப்போவதில்லை...

நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் மீன் விற்பனை செய்வோர் - ஆலந்தலை, அமலி நகர், புன்னைக்காயல், வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்... இவர்கள் சொந்தப் படகு வைத்திருப்போரின் குடும்பத்தினர் என்பதால், அவர்களால் மிகக் குறைந்த விலைக்கு மீன் விற்க முடியும்... ஆனால், நாங்களோ கடன் வாங்கி பணம் திரட்டி, ஏலத்தில் மீன் எடுப்பதால், அதற்கு மேல் எங்கள் உழைப்புக்கும் சேர்த்து மீன் விலையை அமைக்க வேண்டியுள்ளது... எனவே, பொதுமக்களுக்கு இது அதிகமான தொகையாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை...

பிறகு, எங்கள் வியாபாரம் தொடர்ந்து மந்தப்பட்ட நிலையிலேயே இன்று வரை மீன் விற்று வருகிறோம்...







இந்நிலையில், புதிய நகராட்சி பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக கடந்த மே மாதத்தில் ஒரு மனுவை பின்வருமாறு தலைவர், துணைத்தலைவர் மற்றும் 18 வார்டுகளின் உறுப்பினர்களுக்கும் அளித்தோம்...



நகராட்சி ஆணையருக்கும், சுகாதார ஆய்வாளருக்கும் பின்வருமாறு கடிதம் அனுப்பினோம்...



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் நாங்கள் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்...





அதன்பிறகு, கடந்த 28.06.2012 அன்று மதியம் 03.30 மணியளவில் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையரை சந்தித்து முறையிட்டோம். வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்திருந்த ஜெயபால் என்பவரும் அந்த அமர்வில் கலந்துகொண்டார். நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு உடன்பாடு எட்டப்பட்டது...



இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்று காலையில், பரிமார் தெருவைச் சார்ந்த 10 மீன் வியாபாரிகள் வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சியின் தினசரி சந்தைக்கு மீன் விற்க சென்றிருந்தனர். “இங்குள்ள வியாபாரிகளைத் தவிர வேறு எவருக்கும் இங்கு மீன் விற்க அனுமதியில்லை” என்று - ஒப்பந்தத்தை சிறிதும் மதிக்காமல், காவல்துறையினர் துணையுடன் குத்தகைக்காரர் ஜெயபால் எங்கள் வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து நாங்கள் பெரிதும் மனம் நொந்து போயுள்ளோம்...

அந்த தினசரி சந்தையை, பொது ஏலம் இல்லாமலேயே கூடுதல் தொகைக்கு அவர் மீண்டும் குத்தகைக்கு எடுத்திருப்பதுவும், நகராட்சி எப்படி அவருக்கு மீண்டும் குத்தகை வழங்கியுள்ளது என்பதுவும் எங்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளது...


இவ்வாறு, காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் ஜெஸ்மின் காயல்பட்டணம்.காம்-இடம் தெரிவித்தார்.

பின்னர், காலை 11.00 மணியளவில், திருச்செந்தூர் தாலுகா வட்டாட்சியர் சங்கர நாராயணன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் மற்றும் தலையாரி முனுசாமி ஆகியோர் பரிமார் தெரு மீன் சந்தைக்கு வந்து, மீன் வியாபாரிகளிடம் கருத்துக்களைக் கேட்டனர்.



பின்னர், காயல்பட்டணம்.காம்-இடம் பேசிய காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல், இம்மாதம் 05ஆம் தேதி வியாழக்கிழமையன்று மாலை 04.00 மணியளவில், திருச்செந்தூரிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சமாதானக் கூட்டத்திற்கு இரு தரப்பினரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

பரிமார் தெரு மீன் சந்தையை நிர்வகிக்கும் கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இன்று மதியம் காயல்பட்டணம்.காம் செய்தியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர்.

இப்பிரச்சினை காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச் சங்கம் என்ற அமைப்பிற்கும், வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சியின் தினசரி சந்தை குத்தகைதாரருக்கும் இடையிலுள்ள பிரச்சினையே தவிர, இதற்கும், கடைப்பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை...

“இந்த மீன் சந்தையில் இடம் இருக்கும் வரை, இங்கு வியாபாரம் செய்ய வரும் யாரையும் விரட்டாமல் இடம் கொடுக்க வேண்டும்” என்ற விதிமுறையின் அடிப்படையில், எங்கள் பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட பரிமார் தெரு மீன் சந்தையை ஆண்டுதோறும் நாங்கள் குத்தகைக்கு விடுவோம்... நடப்பாண்டில், பரிமார் தெருவைச் சார்ந்த ஜெஸ்மின் என்ற தனிநபர் குத்தகைக்கு எடுத்துள்ளார்... இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அவரது குத்தகைக் காலமாகும்...
என்று கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச் சங்க செயலாளர் ஜெஸ்மின் கூறிய கருத்துக்கள் குறித்து, வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் தினசரி சந்தை குத்தகைதாரரான ஜெயபாலிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு காயல்பட்டணம்.காம் பேசியது. அப்போது கருத்து தெரிவித்த அவர்,

இன்று காலையில் 10 வியாபாரிகள் வரவில்லை... 4 வியாபாரிகள் வந்தனர்... அவர்கள் யாரையும் நான் துரத்தவுமில்லை... காவல்துறையினர் யாரும் அப்போது சந்தையில் இருக்கவுமில்லை...

நீண்ட காலமாக இச்சந்தையில் மீன் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் இடத்தை பரிமார் தெரு வியாபாரிகள் கேட்டனர்... “உங்களுக்கு இதே சந்தையில் வேறு இடம் தருகிறேன்... இந்த இடம்தான் வேண்டுமென்று கேட்காதீர்கள்...” என்றுதான் நான் சொன்னேன்... அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், “நாங்க நகராட்சியில் பார்த்துக்கொள்கிறோம்...” என்று தெரிவித்தவாறு சென்றுவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அதே பரிமார் தெருவிலிருந்து வேறு 4 வியாபாரிகள் வந்து, நாங்கள் காட்டிய இடத்தில் அமர்ந்து, எந்த இடைஞ்சலுமின்றி வியாபாரம் செய்துவிட்டு சென்றனர்...

நகராட்சி தலைவி மற்றும் ஆணையர் முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இச்சந்தையில் வெளியூர் வியாபாரிகள் பத்து பேர், உள்ளூர் வியாபாரிகள் பத்து பேர் மீன் வியாபாரம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது... மொத்தமே 25 கடைகள் மட்டுமே உள்ள இச்சந்தையில் இதைத்தானே நாங்கள் செய்ய முடியும்...?
என்று கூறினார்.

“அவ்விடம் மீன் சந்தையல்ல; காலப்போக்கில் அப்படி மாற்றப்பட்டுவிட்டது” என்ற கருத்து குறித்து அவரிடம் வினவியபோது, “இது தினசரி சந்தை... இங்கு மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் விற்கப்படுவது போல மீன் வியாபாரமும் நடைபெற்று வருகிறது...” என்று தெரிவித்தார்.

தினசரி சந்தையை நடப்பாண்டில் குத்தகைக்கு எடுத்தது குறித்து கேட்கப்பட்டபோது, கடந்த 5 ஆண்டுகளாக அவர்தான் இந்த சந்தையை குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், கடைசியாக சென்ற ஆண்டு பொது ஏலத்தில் 91,000 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்ததாகவும், நடப்பாண்டில், 15 சதவிகித கூடுதல் தொகை கொடுத்து, 9 மாத காலத்திற்கு 78,458 ரூபாய்க்கு குத்தகை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகராட்சி தினசரி சந்தையில்...
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [03 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19815

நகராட்சி தினசரி சந்தை மேற்கு பகுதி மக்களுக்கு மீன் மற்றும் காய்கறி வாங்குவதற்கு ரொம்ப வசதியாக இருக்கும். அதே போல் கடைப்பள்ளி மீன் சந்தை கிழக்கு பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும்.மக்கள் ஏன் கடைப்பள்ளி சந்தைக்கு குறைவாக வருகிறார்கள் என்றால் ,நகராட்சி தினசரி சந்தையில் அவர்களை விட குறைவான விலையில் நல்ல மீன்கள் கிடைக்கிறது என்பது ஒரு காரணம். இதை கடைப்பள்ளி மீன் வியாபாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.மற்றொரு காரணம் கடைப்பள்ளி மீன் சந்தையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடம் மிக கடுமையாக பேசுகிறார்கள் அதாவது நம்ம ஊர் பாஷையில் புலுக்கிறார்கள் ஜெஸ்மின் ,அலியார் போன்ற ஓரிருவரை தவிர .என்று அநேகமான பொது மக்கள் தெரிவிக்கிறார்கள்.எனவே இரண்டு சந்தை ஊருக்கு தேவைதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகராட்சி தினசரி சந்தையில்...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [04 July 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19822

செய்தியின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, இரண்டு சந்தைகள் இருப்பதே சரியானதாக தோன்றுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகராட்சி தினசரி சந்தையில்...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [04 July 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19826

* தற்போது ஊர் மிகவும் விரிவடைந்துள்ளது. மஹ்லரா நகர், சாஹிப் தம்பி தோட்டம், தைக்க சாஹிப் நகர் போன்ற இடங்களில் ஒன்று இரண்டு என்று இருந்த வீடுகளின் எண்ணிக்கை இன்று மாறி, ஒவ்வொன்றும் புதிய புதிய ஊர் மாதிரி உள்ளது. இவர்கள் அனைவர்களும் தினமும் பளிமார் தெரு மீன் கடைக்கு சென்று வருவது மிகவும் சிரமமான ஒன்று.

* நாம் அடிக்கடி மீன் வாங்க இரண்டு சந்தைக்கும் செல்வது உண்டு. மீன் விலை கேட்டால் 150 ரூபாய், 200 ரூபாய் என்று பளிமார் தெரு சந்தையில் சொல்லுவார்கள். மிகவும் சீப் ஆக இருக்கிறதே என்று மீண்டும் விசாரித்தால், அவர்கள் சொல்லுவது கால் கிலோ-விற்காம்.(காய் கறிகள் நூறு கிராமுக்கு தான் விலை சொல்லுகிறார்கள்). மீன் விலையை குறைத்து கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து விடும். கஸ்டமரின் தராதரம் கண்டு வசவுகள் மாறுபடும்.

எனக்கு கிடைத்த வசவு "இந்த மீனை எல்லாம் கண்ணால் பார்த்து இருக்கின்றீர்களா..? , நாங்க என்ன கடல் மண்ணு மாதிரி அள்ளிக்கிட்டா வருகிறோம்..." போன்று. (ஒரு சில கண்ணியவாங்களும் உள்ளார்கள்)

உடனே LK ஸ்கூல் சந்தைக்கு சென்றால் " வாங்க சாச்சா.... இந்த மீனை வாங்குங்க சாச்சா.." என்று நம்ப முடியாத அளவு மிக மிக குறைந்த விலைக்கு தருகிறார்கள். மக்கள் இங்கு செல்லுவது இயற்கை தானே.( நான் பளிமார் தெருவில் கால் கிலோவிற்கு சொன்ன விலை உடைய அதே மீனை இங்கு 800 கிராமுக்கு வாங்கியது பல தடவைகள் உண்டு)

ஆக.. இதற்கும் ஆப்பு வைக்கும் முயற்ச்சி தொடர்கிறதா?

இந்த பிரச்சனையில் சில வினாக்களுக்கு விடை தெரியவில்லை.

* இந்த சந்தையில் மீன் விற்கக்கூடாதாம். பெரிய ஊருக்கு ஒரு மீன்கடை தான் இருக்கனுமாம். ..?

* நகராட்சி சந்தையில் மீன் விற்பவர்கள் பளிமார் சந்தைக்கும் வந்து விற்பனை செய்யக்கூடாதாம்?

* வெளி ஊர் மீன் வியாபாரிகள் சந்தைக்குள் விற்பனை செய்யக்கூடாதாம்.? (தலை சுமையாக விற்பனை செய்யலாமாம்..!!)

## உள்ளூர் வியாபாரிகள் பெரிய சதுக்கை அருகிலும், ஆசாத் தெரு முக்கிலும் நிரந்தரமாக கடை வைத்து இருப்பது வேறு விசயம். அப்படியே அனைத்து தெருவிலும் மீன் கடை வந்தாலும் வரலாம் ##

* சந்தை ஒப்பந்தக்காரர் நம் ஊர் மீன் வியாபாரிகளை மீன் விற்பனை செய்ய அனுமதித்ததாக சொல்லுகிறார், நம் ஆட்கள் அனுமதிக்கவே இல்லை என்று கூறுகிறார்கள்..உண்மை ??

** இதில் கூடுதல் ஒன்று.. பெண்கள் மீன் வாங்க செல்லுவது ஒரு அவஸ்தைதான். என்னதான் புர்கா போட்டு சென்றாலும் குனிந்து தான் வாங்கவோ, மீனை பார்க்கவோ முடிகின்றது. கழுகு கண்களுக்கு தப்புவது கஷ்டமே.. ( மீனை மற்றும் அல்ல..மற்ற தரையில் போட்டு விற்கப்படும் பொருள் அனைத்துக்கும் இது தான் ) **

அனைத்துக்கும் வல்ல ரஹ்மான் நல்ல முடிவை தருவானாக..

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகராட்சி தினசரி சந்தையில்...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [04 July 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19827

ஊர் ஒன்றும் சிறிய ஊர் இல்லை முன் போல் ஒரு சந்தை காணாது ஊர் தலைவர் 2 சந்தைகள் வர ஊருக்கு உதவி புரியும் படி ஊர் சார்பாக நடவடிக்கை எடுக்கவும். எந்த விசயத்திலும் உங்களுக்கு ஊரும் ஆதரவு தரும் அல்லாஹ் உதவி புரிவான் அமீன். யாருக்கும் பயம் வாண்டாம்.

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சி தினசரி சந்தையில்...
posted by NOWSHAD (YERCAUD) [05 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19849

நமதூரில் இரண்டல்ல மூன்று வந்தாலும் காணாது சாளை ஜியா குறிப்பிட்டதுபோல பெண்கள் சந்தைக்கு போவது சரியில்லைதான் வியாபாரிகள் நின்று கொண்டு விற்பனை செய்வதுபோலே ஸ்டால் அமைத்து கொடுத்தால் நல்லது பெண்களும் போய் வாங்கலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. விரைவில் தனியார் தினசரி சந்தை..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [05 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19853

நான் அடிக்கடி மீன் வாங்க இரண்டு சந்தைக்கும் செல்வது உண்டு.. போய் வாங்கி வர மிக சிரமமாகவே உள்ளது எங்கள் ஏரியாவில் சந்தை இல்லாததால் ரெம்ப தூரம் சென்று வர கடினமாக இருக்கிறது ஆகையால் மூன்றாவது தினசரி சந்தைக்கு எங்கள் ஏரியாவில் ஒரு தனியார் இடத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது அரசு மருத்துவமனை செல்லும் வழி ரிசுவான் சங்கம் அருகில் தனியார் இறைச்சி, மீன் மற்றும் காய் கனி தினசரி சந்தை விரைவில் உதயம் பெறலாம்...

நமதூர் மிகவும் விரிவடைந்து விட்ட காரணத்தினால் அங்குள்ள மக்கள் இந்த மூன்றாவது சந்தை உதயத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்...

எங்கு விலை குறைவோ..! எங்கு தரம் அதிகமோ அங்கு மக்கள் வாங்குவார்கள்...! வருவார்கள்...!

நமது ஜனநாயாக நாட்டில் முறைபடி யாரையும் வியாபாரம் செய்ய அனுமதிப்பதே... நல்லது...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved