Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:20:37 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8680
#KOTW8680
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 4, 2012
நகராட்சியின் குடிநீர் வினியோகக் குறைபாடு, நிர்வாக சீர்கேடு, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்கள் பேச்சு! சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியருக்கு ம.சே.கரங்கள் கோரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4676 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் வினியோகக் குறைபாடு, நிர்வாகச் சீர்கேடு, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்கள் சிலர் பேசிய பேச்சு ஆகிய சீர்கேடுகளை சரிசெய்து நடவடிக்கை எடுக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, காயல்பட்டினம் மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

02.07.2012 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், அவ்வமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி இதுகுறித்து அளித்துள்ள கோரிக்கை மனுவின் வாசகங்கள் பின்வருமாறு:-

காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியில் மக்கள் குறை தீர்க்கவும், விண்ணப்பங்கள் வேண்டியும் மனு அளித்து வருகின்றனர். அவற்றுக்கு 3, 4 மாதங்களாகியும் குறைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. அரசுப் பணிகளும் மிகவும் கால தாமதமாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் காலப்போக்கில் மறைந்து misplace ஆகிவிட்டது எனக்கூறி, மீண்டும் மனு அளிக்கும்படி வேண்டப்படுகிறது.

நிர்வாக சீர்கேட்டினை நிவர்த்தி செய்வதற்கும், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிர்வாகத்தினை சீராக்க - திருச்செந்தூர் கோட்ட வட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) மூலம் விசாரணை மேற்கொண்டு, நிர்வாகத்தை சமச்சீர் செய்து ஆள்வதற்கு தங்களிடம் பணிவுடன் வேண்டுகின்றோம்.

மேலும் குடிநீர் வழங்கல் சரிவர பராமரிக்கப்படவில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் ஒரு சில விஷமிகள் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர். பொதுமுக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, தாங்கள் இது விஷயத்தில் சீரான நிர்வாகம் நடைபெறுவதற்கு, திருச்செந்தூர் கோட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டுகின்றோம்.

மேலும், உறுப்பினர்கள் இரண்டு நபர்கள் நகராட்சி நிர்வாகத்தில் ஊழலை ஊக்குவிக்கும் பொருட்டு, கலந்துரையாடிய சி.டி. (குறுந்தகடு) காயல்பட்டினத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது. இது விஷயத்திலும் தங்கள் நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்தி, நிர்வாகத்தை சீர்தூக்கி, ஆட்சியை சீராக்கித் தரும்படி மெத்த பணிவுடன் வேண்டுகிறோம். (Please refer www.kayalpatnam.com)


இவ்வாறு, மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி, மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகராட்சியின் குடிநீர் வின...
posted by P.S.ABDUL KADER (jeddah) [04 July 2012]
IP: 204.*.*.* United States | Comment Reference Number: 19836

ஊர் நலன் விரும்பும் மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி காக்காவை வாழ்த்தி வரவேற்கிறேன்.

பாலப்பா ஜலாலி காகாவின் துணிசளன இந்த கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியர் துரிதமாக ஆய்வு செய்து, நகராட்சி நிர்வாகத்தை சீர்கேடு உண்டுபண்ணும் உறுபினர்களை அடையலாம் கண்டு பதவியை பறிக்கவும், ஊழலை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்கள் பேசியதை மக்கள் மத்தியில் (பேசிய உறுபினர்ரை அடையலாம் காட்டி) சீர் செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியாரை வலியுறுத்தி வேண்டுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சங்கே முழங்கு....!!!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [05 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19838

|Comment Reference Number: 19789.]
சற்றே பொறுத்திருங்கள்...! சங்குகள் காத்திருக்கின்றன. தக்க சமயத்தில் அது ஊதப்படும். அன்று அடங்கும் இவர்களின் அணவ ஆட்டங்களும், அதிகார கொட்டங்களும். சட்ட ரீதியாக காய் நகர்த்த நகர்நலம் நாடும் வல்லுநர்கள் தயாராகி விடனர்- இது, நான் கடந்த வாரம் பதித்த கருத்து!

நகர்நலம் நாடும் வல்லுநர்களில் முதல் ஆளாக, சைலண்ட் கேம் பிளேயர்-பாலப்பா ஜலாலி அவர்கள் முதல் சங்கை எடுத்துள்ளார்கள். அதன் சத்தம் முத்துநகர் என்ன? முதலமைச்சரின் காது வரை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆடியோ நாயகர்கள் ஆடிப்போயிருப்பாங்களே...? ஆப்பு என்பதற்கு அழுத்தமான அர்த்தம் இது தாங்க...!!!
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஐயா... முஹம்மது ரபீக் அவர்களே... மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் அல்ல...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [05 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19843

அதன் சத்தம் முத்துநகர் என்ன? முதலமைச்சரின் காது வரை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! என்று M.N.L.முஹம்மது ரபீக் அவர்கள் கருத்து பதிகிறார்..!

ஐயா... முஹம்மது ரபீக் அவர்களே... மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் அல்ல... சென்னையில் தமிழகத்தின் அணைத்து நகராட்சிகளின் தலைமை பீடமாக இயங்கி வரும் தமிழ் நாடு நகராட்சி தலைமை துறைக்கும் C M செல்லுக்கும் மாவட்ட ஆட்சியருக்கு என்ன மனு கொடுக்கபட்டதோ அதன் C C காப்பி மற்றும் உறுப்பினர்கள் உரையாடிய ஆடியோ சி டி உட்பட அனைத்தும் இணைத்து அனுப்பி விட்டதாக தகவல்..!

இதை திசை திருப்ப என்ன... என்ன.. தந்திரங்கள்..! இந்த மனு மீதான வீரியத்தை வலு இழக்க யார்.. யார்.. ஓன்று கூடி களத்தில் கால் வைக்க போகிறார்கள் பொறுத்து இருந்து பார்போம்...!

நல்லவைகளுக்கு உதவி செய்யுங்கள்..! துணை செய்யுங்கள்...!

கடந்த சில நாட்களுக்கு முன் ஊரின் குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்க டேங்கர் லாரியில் தெருவாரியாக தண்ணீர் சப்ளை செய்ய ஆரம்பத்தில் (ஒரு ட்ரிப்புக்கு) உறுப்பினர்கள் பலர் முன்பு ரூபாய் 1900 பேசி முடிக்க பட்டதாகவும் (சாட்சி:- 13 வது வார்டு உறுப்பினர் ஜனாப் சம்சுதீன்) பின்பு தண்ணீர் பல ட்ரிப்பு (சுமார் 50 TRIP) அடித்த பின்பு தலைவர் இடம் PER TRIP ரூபாய் 2,300க்கு பில் வந்ததாகவும் தலைவர் அவர்கள் பில்லுக்கு காசோலை தர மறுத்ததாகவும் சில வாக்குவாதாங்களுடன் ஆணையர் அவர்களிடம் சென்று காசோலை பெற்று சென்றதாகவும் தகவல்...

குறிப்பு:- நல்லூரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்யதான் இந்த ரூபாய் 1900 - ஆனால் அதற்க்கு மாற்றமாக ஊரில் உள்ள கிணத்தில் சில ட்ரிப் எடுத்து தண்ணீர் கொடுத்ததாகவும் தகவல்... ஆரம்பத்தில் பேசுவது வேறு கடைசியில் (பணம் வாங்குவது) முடிவது வேறாக உள்ளது...

நமது பாகெட் நிறைந்தால் போதும்.. சும்மா பேருக்கு மக்கள் சேவை பொது சேவைக்கு உறுபினராக வந்துள்ளேன்.. பொது நிதி எவனுக்கு அக்கறை... எப்படி போனால் என்ன... அப்படித்தானே...

நகராட்சியில் உள்ள நல்ல உறுப்பினர்கள் சிலரை தவிர மீதம் உள்ளவர்களுக்கு அரசு மேலிடத்தால் நடவடிக்கையும் மற்றும் மெகா மாபெரும் மக்கள் சக்தியால் களை எடுக்க படும் நேரம் வெகு விரைவில்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி சி கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகராட்சியின் குடிநீர் வின...
posted by sulaiman (abudhabi) [05 July 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19846

02.07.2012 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், அவ்வமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி இதுகுறித்து அளித்துள்ள கோரிக்கை மனுவின் வாசகங்கள் பின்வருமாறு:-

காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியில் மக்கள் குறை தீர்க்கவும், விண்ணப்பங்கள் வேண்டியும் மனு அளித்து வருகின்றனர். அவற்றுக்கு 3, 4 மாதங்களாகியும் குறைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. அரசுப் பணிகளும் மிகவும் கால தாமதமாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் காலப்போக்கில் மறைந்து misplace ஆகிவிட்டது எனக்கூறி, மீண்டும் மனு அளிக்கும்படி வேண்டப்படுகிறது.

நிர்வாக சீர்கேட்டினை நிவர்த்தி செய்வதற்கும், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிர்வாகத்தினை சீராக்க - திருச்செந்தூர் கோட்ட வட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) மூலம் விசாரணை மேற்கொண்டு, நிர்வாகத்தை சமச்சீர் செய்து ஆள்வதற்கு தங்களிடம் பணிவுடன் வேண்டுகின்றோம்.

அஸ்ஸலாமு அழைக்கும் ,சகோதரர் ஜமாலி அவர்களின் புகார் மனுவின் ஒரு பகுதி நான் மேலே எடுத்துக்காட்டி உள்ளேன்.இதன் கடைசி பகுதில் 2 உறுப்பினர்கள் பேசிகொண்ட ஆடியோ பற்றிய புகாரும் இருக்கிறது.

இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபடுமேயானால். (வாங்கிய மனுக்கள் மீது 4 மாதம் ஆகியும் எந்த நடவடிகையும் எடுக்கப்படவில்லை , மற்றும் நிர்வாக சீர்கேட்டை நிவர்த்தி செய்வதுக்கும் ). இந்த புகாருக்கு சகோதரி ஆபிதா மீதுதான் நடவடிக்கை எடுக்கபடும்.

இந்த புகாரை பொறுமையாக படித்து இதன் தாற்பரியத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாமல். தங்களது அறியாமையை கருத்துகளாக எழுதுகிறார்கள் ,வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள், நமது நகராச்சி மன்ற தலைவி அவர்களின் புகழ் பாடிகளில் சிலர் . இவர்களின் நிலைமையை நினைக்கும் போது பாவமாகவும் ,வேதனையாகவும் இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சியின் குடிநீர் வின...
posted by VSM.HASSAN (DUBAI) [05 July 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19851

என் பாலிய நண்பர் ஜலாலி எடுத்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.ஆனால் இத்தனை மாதமாக நம் தலைவி என்ன செய்துகொண்டு இருந்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகராட்சியின் குடிநீர் வின...
posted by nizam (kaayal) [05 July 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 19855

ஜனாப் சுலைமான் அவர்களுக்கு

தாங்கள் திருமதி ஆபிதா அவர்கள் கட்சி நடத்துவது போலவும் ஜனாப் ரபீக் மற்றும் தமிழன் அவர்கள் புகல்பாடிகளாக எழுதுவது போலவும். கூறியிருக்கிறிர்கள். உண்மை சொல்வதனால் நானோ மேற்கூறிய நபர்களோ மற்றும் திருமதி ஆபிதவை ஆதரித்து எழுதும் கயலர்களோ திருமதி ஆபிதாவின் உறவினர்களோ அல்லது தலைவியின் செல்வாக்கை பயன்படுத்தி காண்டிராக்ட் தொழில் செய்பவர்களோ அல்ல.

காரணம் என்ன? சொல்கிறேன். கடந்த தேர்தலுக்கு பிறகு நகராட்சியின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை பொதுமக்கள் காண்கிறார்கள். அத்தாட்சி அண்மையில் அப்பா பள்ளி தெருவில் சாக்கடை குடிநீரோடு கலந்த விஷயமாகட்டும் சித்தன் தெரு கான்க்ரீட் ரோடு சம்பவமாகட்டும் பெண்கள் சுயதொழில் விஷயமாகட்டும் உறுப்பினர்களை அழைத்து கொண்டு சென்னையில் அதிகார வர்க்கத்தை சந்தித்து நமதூர் முக்கிய பிரட்சினைகளை முறையிட்டு தீர்வுநிலைக்கு கொண்டு வந்த விஷயமாகட்டும். இந்த ஊரின் அப்னா ஆத்மி திருப்தி அடைந்திருக்கிறான்.

எனக்கு் வயது 44 ஆகிறது. நான் எனது வாழ்நாளில் இது போன்ற நகராட்சி தலைவரை கண்டதில்லை. அதற்காக முந்தைய தலைவர்கள் எதையுமே செய்யவில்லை என்று கூறவில்லை. செதுரக்மான் ஹாஜியார் அவர்கள் நமதூர் குடிநீர் திட்டத்துக்காக சொந்த நிலத்தை கொடுத்த விஷயத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி உவைஸ் அவர்கள் மின் திட்டத்துக்காக பாடுபட்டதை போற்றாமல் இருக்க முடியாது.

நான் கேள்விப்பட்ட விஷயத்தை சொல்கிறேன். திருமதி ஆபிதா வர அவர்களின் குடும்பம் ஒன்றும் செல்வ செழிப்பான குடும்பம் அல்ல. அப்படிப்பட்ட சுழ்நிலையில் அவர்களது தாயார் வாழ்த்தும்போது நேர்மையாக செயல்படவேண்டு என்று.

இறுதியாக நாம் எல்லோரும் விரும்புவத துய்மையான நிர்வாகம் என்பதுதான். அதைவிட்டுவிட்டு கோஷ்டி வார்த்தைகள், ஆப்பு, புகல்பாடிகள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது வெறுப்பை வளர்த்து நமத குறிக்கோளை அடைய தடங்கலாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகராட்சியின் குடிநீர் வின...
posted by Zubair Rahman (Doha-Qatar) [05 July 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19856

நிஜாம் காக்கா அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

நீங்கள் மேற்கோள் காட்டியது போல நிறைய தன்னார்வா கருத்து சிங்கங்கள் இருக்கிறார்கள் . எதற்க்கெடுத்தாலும் எதிர்மறைக்கருத்து.

ஒன்று மட்டும் புரிகிறது, ஏதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு எதிர் கருத்து என்கிற பாணியில் ஒரு தலை பட்ச தாக்குதலை இனம் புரியாத வகையில் பதிக்கிறார்கள் . செய்தியின் திசையிலிருந்து வேறு திசைக்கு கருத்தை திருப்பி வீண் மன உளைச்சலுக்கு தானும் ஆளாகி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

கருத்தை பாதிக்கும் அன்பான சகோதரர்களே, எந்த செய்தியானாலும் அதற்க்கு கருத்து பதியும் முன்னர் தங்களால் ஊர்ஜிதம் செய்யப்படாத நிலையில் ஏதோ ஒரு போட்டி மனப்பான்மையில் தரிகிட கருத்தை பதிய வேண்டாம் .

எந்த விசயமானாலும் பிறர் மனதை புண் படுத்தாத வகையில் அழகான முறையில் ஆதாரத்துடன் கருத்தை பதியவும். நாம் சொல்லும் ஒரு சில வார்த்தைகள் உண்மை இல்லாத நிலை ஏற்ப்பட்டு அதன் மூலம் அந்த நபர் மனது வருத்தப்படுமேயானால் சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை படைத்தோன் உங்களை மன்னிக்க மாட்டான் .

குறிப்பு:- நீண்ட இடை வெளியாகிறது எந்த செய்தியிலும் கவிமகன் காதர் காக்கா அவர்களின் கருத்தை காணோமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகராட்சியின் குடிநீர் வின...
posted by hasbullah (dubai) [06 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19860

சமூக சேவர் என்று சொல்லும் சகோதரர் ஜலால் அவர்கள், collector இடம் சென்று வேண்டுதல் செய்கிறார் நடப்பில் உள்ள காரியம் ஒன்றும் சரியில்லை என்று, ஆனால் தலைவியால் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் இதே kayal வெப்சைட் இல் வெளியிடப்பட்டது தெரிந்திருக்கலாம் என நினைக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும் கலெக்டர் என்ன முடிவெடுப்பார் என்று சற்று சிந்தனைக்கு எடுத்து விட்டு உங்கள் கண்மூடி தனமான ஆதாரமில்லாத மக்களிடம் பேர் வாங்குவதற்காக இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவது தங்களின் வீணான பொழுது போக்கு அம்சமாக தெரிகிறது.

குடி தண்ணீர் விஷயமாக எடுக்கப்பட்ட தெளிவான விஷயங்கள் பொய்யானவையா என்பதை தெளிவு படுத்துங்கள் .

பின்னால் இருந்து தூண்டக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்

இப்போது collector நான்கு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் collector மேல் case போடலாமே?

வேற நகராட்சி வந்தால் உடன் தண்ணீர் கிடைத்து விடுமா?

மனதில் உள்ள எண்ணங்களை அல்லாஹு நன்கறிந்தவன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகராட்சியின் குடிநீர் வின...
posted by hameed Rifai (Yanbu (KSA)) [06 July 2012]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19861

நண்பர் ஹஸ்புல்லாஹ் இச்செய்தியை தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்று நினைக்கிறேன்.

ஜலாலி காக்கா அவர்கள், மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த மேல் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரித்தபோது, அதிகாரிகள் மனு misplace ஆனதாகவும், புதிதாக மனு தருமாறும் கேட்டதாகத்தான் சொல்கிறார். அவரது அனைத்து கோரிக்கைகளும் அந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவே தெரிகிறது.

எனவே, அவசரப்பட்டு வார்த்தைகளை வெளியிடாமல் நண்பர் தவிர்த்திருக்கலாம்.

அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நாடுநிலையா ? அப்படி ஒன்னு இருக்கா !!
posted by M Sajith (DUBAI) [06 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19867

தங்களின் கண்ணோட்டங்களுக்கு மாற்றமான கருத்துக்கள் எல்லாமுமே எதிரணியின் கருத்து என்ற நிலைப்பாட்டில் ஒரு முடிவுடன் இருக்கும் எவருக்கும் விளக்கங்களும் ஆதாரங்களும் பயனளிக்கப் போவதில்லை...

எதை சொன்னளாலும் ஒரு 'சார்பு' சாயம் பூசிவிட்டு தங்கள் கண்களை முடிக்கொள்வதையும் அவர்களுள் சிலர் தனி நபர் விமர்சனத்தில் (வாதிக்க வழியில்லை என்றாகும் போது) இறங்குவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில் - நடுநிலை என்பது இருக்கவும் செய்கிறதோ ?

ஜலாலி காக்காவின் கோரிக்கைகள் நியாமானவை என்பதைவிட சரியானவை என்பது தான் சரி - நிர்வாக சீர்கேடுகள் இருந்ததால் களையப்படவேண்டும். ஆட்சியரும் முயற்சி செய்து சீர்கேட்டின் காரணம் கண்டறிந்தால் அது நல்லதை விரும்புவோருக்கு நல்லது...

ஆடியோ விவகாரம் அப்படியே அமுங்கிவிட்டது என 'சந்தோசத்தில்' இருப்பவர்களுக்கு இது விரும்பத்தகாத செய்தி... இதில் கலக்டர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்து ஒரு (PIL - Public Interest Litigation) file செய்தால் அவரையும் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்க இயலும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved