Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:33:21 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6885
#KOTW6885
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 8, 2011
ஹிஃப்ழு முடிக்கும் காயல்பட்டினம் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் ரூ.2000 ஊக்கத்தொகை! சிங்கை கா.ந.மன்ற செயற்குழு அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2683 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு கல்வியாண்டு முதல் திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) முடிக்கும் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு அறிவித்துள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 06.08.2011 அன்று 16.00 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. மன்றத்தின் ஆலோசகர் முனைவர் முஹம்மத் லெப்பை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சிங்கப்பூர் அப்துல் கஃபூர் பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகை நடத்த வருகை தந்திருக்கும் ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, சிங்கப்பூரில் தராவீஹ் தொழுகை நடத்த வருகை தந்திருக்கும் காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் கிராஅத் ஒதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துவக்கமாக நன்றி தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு:
பின்னர் மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரையும் மனதார வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விவரித்த மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத், காயல்பட்டினத்தில் வறுமை நிலையிலுள்ள 38 குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி வழங்கப்பட்ட விபரம் குறித்தும் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.

வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.

மாதாந்திர சந்தா தொகை நிலுவையிலுள்ள மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை விரைந்து வழங்குமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

எஸ்.கே.ஸாலிஹ் உரை:
பின்னர், சிறப்பு விருந்தினர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.

‘அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டம்‘, ‘ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை‘ என புதுப்புது திட்டங்களை காலத்திற்கேற்ப அறிமுகப்படுத்தி செயல்படுத்துவதில் சிங்கப்பூர் காயல் நல மன்றம் உலக காயல் நல மன்றங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.

அத்துடன், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம் காலத்தின் கட்டாயம் என்றும், அதே நேரத்தில் உழைக்கும் நிலையிலுள்ள மக்களை சோம்பலுறச் செய்திடாதிருக்கும் பொருட்டு தகுதியான பயனாளிகளை அந்தந்த பகுதி ஜமாஅத்தின் அத்தாட்சியுடன் தேர்ந்தெடுப்பது அவசியம் என்று தனதுரையில் அவர் தெரிவித்தார்.

அவரது ஆலோசனையை கருத்திற்கொள்வதாகவும், வருங்காலங்களில் இத்திட்டத்தை இன்னும் முறைப்படுத்தி செயல்படுத்த ஆவன செய்வதாகவும் அப்போது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மவ்லவீ ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ உரை:
ஆலிம்களுக்கும் ஊக்கத்தொகை...




பின்னர், சிறப்பு விருந்தினர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ உரையாற்றினார். திருக்குர்ஆனை மனனம் செய்து முடிக்கும் காயல்பட்டினம் மாணவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க மன்றம் முடிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், வரவேற்கக் கூடிய நல்லதொரு திட்டம் அது என்றும் தனதுரையில் புகழ்ந்துரைத்த அவர், ஆலிம் கல்வி பயிலுவதற்கு காயல்பட்டினம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் ஏழு ஆண்டுகள் ஆலிம் கல்வி கற்கும் காலங்களில் குறிப்பிட்டதொரு தொகையை அவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கடற்கரை கண்காணிப்பு...
காயல்பட்டினத்தின் கண்ணியமிக்க கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், காயல்பட்டினம் கடற்கரையில் சமூகத் தீமைகள் நடைபெறாது கண்காணிக்கும் பொருட்டு, கடற்கரையை நகரின் ஒவ்வொரு ஜமாஅத்திலிருந்தும் தினம் மூவர் வீதம் கண்காணிப்பு செய்து, அவர்களின் கருத்தை கடற்கரைக்கருகிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (ஒய்.யு.எஃப்.) பதிவேட்டில் தினமும் பதிவு செய்ய வேண்டுமென்றும், அப்பதிவுகளை மாதமொருமுறை நகரின் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதற்கான முன்முயற்சியை சிங்கப்பூர் காயல் நல மன்றம் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

பெண்கள் தைக்காக்களில் சமூக நலப்பணிகள்...
அதுபோல, நகரின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பெண்கள் தைக்காக்கள் ரமழான் காலங்களில் மட்டுமே உயிரோட்டத்துடன் இருப்பதாகவும், இதர காலங்களிலும் தைக்காக்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் பொருட்டு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைப் பரிசோதிக்கும் கருவிகளை காயல் நல மன்றங்கள் தைக்காக்களுக்கு வாங்கிக் கொடுத்து, அங்குள்ள படித்த மாணவியர் சிலருக்கு முறையான பயிற்சியளித்து, அந்தந்த தைக்காவைச் சுற்றியுள்ள மக்களுக்கு வாரந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யலாம் என்றும், இயலா நிலையிலுள்ளோருக்கு அவர்களின் இல்லம் சென்று பரிசோதனை செய்யலாம் என்றும், இவ்வாறு செய்வதால் இந்நோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வை பொதுமக்கள் அதன் துவக்க நிலையிலேயே பெற்றுக்கொண்டு, பேராபத்துகளைத் தவிர்த்திடவியலும் என்றும் அவர் தனதுரையில் ஆலோசனை வழங்கினார்.

கல்வி, மருத்துவ உதவிகள்:
கல்வி, மருத்துவ உதவி கோரி நகரிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து மன்றச் செயலர் கூட்டத்தில் விளக்கினார். பின்னர், இவ்வகைக்காக ரூபாய் ஐம்பதாயிரம் நிதியொதுக்கீடு செய்ய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதுடன், அத்தொகையை நடப்பு ரமழான் மாத இறுதிக்குள் வினியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூர் பிரதிநிதி:
மன்றத்திற்கு உள்ளூர் பிரதிநிதியை நியமிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிறைவில், அடுத்த செயற்குழுவில் இதுகுறித்து இறுதி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

வீடு புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு:
காயல்பட்டினத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள வீடொன்றைப் புனரமைப்பதற்காக உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பம் குறித்து இக்கூட்டத்தில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், இவ்வகைக்காக ரூ.1,50,000 நிதியொதுக்கீடு செய்வதெனவும், நடப்பு ரமழான் மாதம் நிறைவுற்றதும் கட்டிடப் பணியைத் துவக்குவதெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், இவ்வகைக்காக உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை தாராளமாகத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஹாஃபிழ்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை:
எந்த மத்ரஸாவிலேனும் ஓதி திருக்குர்ஆன் மனனத்தை (ஹிஃப்ழு) முடிக்கும் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்றத்திற்கு நன்றி:
‘சேவைச் செம்மல்‘விருது பெற்ற காயல்பட்டினம் ஹாமிதிய்யா முதல்வருக்கு கடந்த 25.07.2011 அன்று காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி அருகில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியின்போது, மும்மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதல் மூன்றிடங்களை வென்ற காயல்பட்டினம் மாணவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கவும், வருங்காலங்களில் திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) முடிக்கும் மாணவ-மாணவியருக்கான மன்றத்தின் பரிசுத் திட்டத்தை அறிவிக்கவும் வாய்ப்பளித்தமைக்காக, விழா ஏற்பாட்டாளர்களான ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்றத்தினருக்கு கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

வேலைவாய்ப்பு பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து:
சிங்கப்பூரில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ள காயல்பட்டினத்தைச் சார்ந்த ஜக்கரிய்யா, நிஃமத்துல்லாஹ் ஆகியோருக்கு இக்கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றிடுவதற்காக ஒத்துழைப்புகளை வழங்கிய மன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு பெற்றதையடுத்து அவ்விருவரும் இனி மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஹஜ் பயணம் செல்லும் உறுப்பினர் குடும்பத்திற்கு வாழ்த்து:
இவ்வாண்டு தன் குடும்பத்துடன் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக மன்ற செயற்குழு உறுப்பினர் ஸூஃபீ ஹுஸைன் கூட்டத்தில் தெரிவித்தார். இதற்காக அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களது ஹஜ் கிரியைகள் அனைத்தும் அல்லாஹ்வால் முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட கூட்டம் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தது.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு:
காயல்பட்டினம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கூட்டம் வன்மையாகக் கண்டித்தது. இத்திட்டத்தால் நகரின் சுற்றுப்புறச் சூழல் இன்னும் மாசுபடும் என்பதைக் கருத்திற்கொண்டு, இத்திட்டத்தைக் கைவிடுமாறு இது தொடர்பான துறை அதிகாரிகளுக்கு மன்றத்தின் சார்பில் கடிதம் மூலம் கேட்டுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இத்திட்டத்திற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்த நகர்மன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், ஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன், 17.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஹிஃப்ழு முடிக்கும் காயல்ப...
posted by mak.jainulabdeen(president,safehands welfare association) (hongkong) [08 August 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 6733

அஸ்ஸலாமு அலைக்கும். சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் எல்லா செயல்பாடுகளும் மற்ற காயல் நல மன்றங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிரது. அல்லாஹ் அவர்களுடைய எல்லா செயல்பாடுகளுக்கும் இம்மையிலும்,மறுமையிலும் கூலியை கொடுப்பானாக.ஆமீன்.

ஸுஐப் ஆலிம் சொன்ன கருத்துக்களை எல்லா காயல் நல மன்றங்களும் சேர்ந்து செய்ய முயற்சி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.அதற்கான எல்லா ஒத்துழைபையும் எங்களது காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் செய்ய தயாராக உள்ளோம். இந்த எல்லா நல்ல முயற்சிகளையும் வல்ல நாயன் நிறைவேற்ற அருள் புரிவானாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஹிஃப்ழு முடிக்கும் காயல்ப...
posted by ABDUL WADOOD (jaipur) [09 August 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6740

அன்புள்ள சிங்கபூர் காயல் நல மன்ற நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றி உங்களின் மார்க்க விஷயங்களை ஊக்குவிக்கும் முறை மிக்க மகிழ்ச்சி தருகின்றது. ஒரு காலத்தில் நம்ம ஊரில் ஆலிம்கள் ஹாபிழ்கள் நிறைந்து இருந்தார்கள். இதனால் தான் நம் ஊருக்கு சிறு மக்கம் என்ற புகழ உலகமுழுவதும் நிறைந்த ஒரு சிறப்பு.

நம் ஊர் மார்க்க கல்வி மிக குறைந்து அடியோடு கற்பவர்கள் இல்லாமலாகிவிட்டது. அதனால் தயவூ செய்து இரு உலக நன்மையையும் பெற இந்த முயற்சி தொடர்ந்து நல்ல ஊக்கத்துடன் செய்து நீங்கள் செயல்பட்டு மற்ற உலக காயல் நல மன்றங்களும் இதை பின்பற்ற வேன்டுமாய் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டு நிறைவூ செய்கின்றான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மற்ற காயல்நலமன்றம் ம‌ட்டும் இந்த‌ விஷ‌ய‌த்தில் சும்மாவா இருக்கும்!!!!!
posted by அல்ஹாஃபிழ் A.W.முஹம்மது அப்துல் காதர் ஆலிம் புஹாரி (Mumbai) [09 August 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 6744

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சிங்கப்பூர் காயல்நல மன்றத்தின் இந்த அதிரடியான பம்பர் (ஹாஃபிழ்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை) பரிசு திட்டம் பாராட்டப்பட‌ வேண்டிய ஒன்று.

சரி மற்ற காயல்நலமன்றம் ம‌ட்டும் இந்த‌ விஷ‌ய‌த்தில் சும்மாவா இருக்கும்!!!!! இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் அதனுடைய‌ திட்ட‌த்தையும்..

மெள‌லவி அல்ஹாஃபிழ் சுஅய்ப் நூஹ் ஆலிம் அவ‌ர்க‌ளின் கோரிக்கையையும் ப‌ரிசீல‌னை செய்யுங்க‌ள்.இதன் மூலம் ஈருலக‌ நன்மையையும் பெறுவீர்கள். இந்த முயற்சி தொடர்ந்து நல்ல ஊக்கத்துடன் செய்து நீங்கள் செயல்பட்டு மற்ற உலக காயல் நல மன்றங்களும் இதை பின்பற்ற வேன்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

வ‌ருங்கால‌ ஹாஃபிழீன்க‌ள்,ஆலிம்க‌ள் கொடுத்து வைத்த‌வ‌ங்க பா!!! அப்ப‌டியே எங்க‌ளைப் பொன்ற இளம் ஆலிம்க‌ளுக்கும்,ஹாஃபிழ்களுக்கும் உங்க‌ளுடைய‌ திட்ட‌த்தில் கொஞ்ச‌ம் இட‌ம் இருக்குமா என்று பாருங்க‌ள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved