Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:14:56 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11679
#KOTW11679
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013
காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு வழக்கைத் தொடரல், ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3728 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று (ஆகஸ்ட் 27) காலையில் நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில், கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு வழக்கை தொடரவும், ஒருவழிப்பாதையான பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம், இன்று நண்பகல் 12.00 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.

கலந்துகொண்டோர்:

இக்கூட்டத்தில்,

02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,

08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,

14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்

ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டப் பொருட்கள்:

இக்கூட்டத்தின் பொருட்களை நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் வாசித்தார்.

துவக்கமாக, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் அரசால் கட்டப்பட்டு வரும் 169 தொகுப்பு வீடுகள் தொடர்பான கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டப் பொருள் வருமாறு:-



169 தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்கெதிராக, 2011ஆம் ஆண்டில் - அப்போதைய நகர்மன்றத் தலைவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை, தொடர்ந்து நடத்திட தற்போதைய நகர்மன்றத் தலைவருக்கு அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட 14 உறுப்பினர்களில், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி தவிர அனைவரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அடுத்து, காயல்பட்டினம் ஒருவழிப்பாதையான பெரிய நெசவுத் தெருவில், தாயிம்பள்ளியிலிருந்து - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எல்.கே.லெப்பை தம்பி சாலை, புதிய பேரூந்து நிலையம் வரை புதிய சாலை அமைப்பதற்கான மதிப்பீடு ரூபாய் 35 லட்சம் தொகைக்கு நகர்மன்ற அனுமதி வேண்டி மேசைப்பொருள் கொண்டு வரப்பட்டது. மேசைப்பொருள் வருமாறு:-



இத்தீர்மானத்திற்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!

நகர்மன்றத் தலைவர் அமெரிக்கா பயணம்:

கூட்டத்தின் நிறைவில் நகர்மன்றத் தலைவர் பேசினார். அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் அமெரிக்க அரசின் செலவில் அந்நாட்டிற்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து உறுப்பினர்களும் கரவொலியெழுப்பி அவருக்கு வாழ்த்து கூறினர்.

இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!

அண்ணா விருது பெற்ற காவல்துறை ஆய்வாளருக்கு பாராட்டு:

கூட்டத்தின் நிறைவில், காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, அண்மையில் தமிழக முதல்வரிடம் அண்ணா விருது பெற்றுள்ள ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் டி.பார்த்திபனுக்கு கூட்டத்தில் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனைப் பாராட்டிப் பேசினார்.



நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் அவருக்கு சால்வை அணிவித்தார்.



அனைவரும் கரவொலி எழுப்பி, தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!

தொடர்ந்து பேசிய அவர், இன்று போல என்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, நகர்மன்றத் தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் முழு ஒத்துழைப்பளித்து, இந்நகரை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!

கூட்டத் துளிகள்...

>> கூட்டம் துவங்குகையில், கூட்டப் பொருள் வாசிக்கப்படுவதற்கு முன்பாக, நகராட்சியில் ரூபாய் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை, நகராட்சி அலுவலர்களால் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பியும், நகராட்சி ஆணையரிடம் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சியின் தற்காலிகப் பணியாளர்களான இருவர் மீது மட்டும் நகர்மன்றத் தலைவர் நடவடிக்கை கோரியிருப்பது குறித்து உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சி தற்காலிகப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நகர்மன்றம்தான் தீர்மானிக்க வேண்டுமென்பதாலேயே தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். நகராட்சியின் நிரந்தர அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், தானும் அவர்களிடம் தகவலளித்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களது நடவடிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

>> ஏற்கனவே நடைபெற்ற நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதுவரை செயல்வடிவம் பெறாதமை குறித்து நகராட்சி பொறியாளர் சிவகுமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி ஆகியோரிடமும் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அவர்களும், ‘வழமை போல’ பல காரணங்களைக் கூறினர்.

>> சொந்தக் காரணங்களுக்காக நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கடிதம் அளித்திருந்த 01ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் செய்யித் முஹம்மத் அலீ உட்பட பலர் இக்கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



கூட்டரங்கை விட்டும் அனைவரும் வெளியேறிய பின்னர், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் மற்றும் உறுப்பினர்கள் சிலர் முன்னிலையில், 04ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா - அண்ணா பதக்கம் பெற்ற காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனுக்கு சால்வை அளித்தார். கே.வி.ஏ.டி. அறக்கட்டளை தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் உடனிருந்தார்.



படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:40pm/2.9.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [27 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29751

நகரமன்ற தலைவி மீது நம்பிக்கை இழந்து வெளியேறிய அனைத்து வார்டு உறுப்பினர்கள் இன்று திடீர் என தலைவியை முன்வைத்து நம்பிக்கை கொண்டு அவசரகூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியது வியப்பின் சரித்திரம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (Shijiazhuang , Hebei .) [28 August 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29756

தீர்மானங்கள் நிறைவேறினால் போதுமா ? செயல்பாடு எப்போது ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மக்கள் விரும்பும் அழகிய மாற்றங்கல்,,,,,,,,,,,,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [28 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29761

இந்த செய்தியும், புகைப்படங்கள் பார்க்கும் பொழுது உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் வயிற்றில் பால் வார்த்ததுபோல் உள்ளது எனலாம். ஆரம்பித்து சில மணி நிமிடங்களில் வெளியேற்றம் நடைபெறும் இந்த நகரமன்ற வழக்கம். இன்று ஒற்றுமையுடன் உண்மையிலே மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்ட இந்த அவசர கூட்டம் மக்களால், என்னை போன்ற நடுநிலையாளர்களால் மிகவும் வரவேற்பும், வாழ்த்துக்குரியதாகும்.

பழைய கசப்பான விஷயங்களை மறந்து தேங்கி கிடக்கும் நகராட்சி பணிகளை துரிதமாக செயல்படுத்தவேண்டும். கடற்கரை தொகுப்பு வீடு விசயத்தில் அனைவரும் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் மிகவும் எதிர்பார்ப்பான ஒரு வழிச்சாலையை துரிதமாக ஏற்படுத்தி மதுரை பேருந்துகள் மாற்று வழிகளில் செல்வதை தடுக்க வழி செய்யவேண்டும்.

எப்படியோ நகரமன்ற உறுப்பினர்கள், தலைவி மத்தியில் நிலவி வந்த அசாதாரண சூழ்நிலைகள் மாறும் நல்ல காலம் கனிந்து உள்ளது என எண்ணுகிறேன். காலம் கனிந்து உள்ளது என எண்ணுகிறேன்.

அண்ணா பதக்கம் பெற்ற காவல் துறை ஆய்வாளரை நகர்மன்றம் வாழ்த்தியது கண்ணியம் நிறைந்த நிகழ்வு எனலாம். நகர்மன்றம் நிறைவான சேவை செய்ய வளமான வாழ்த்துக்கள்,,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கூடினார்களா ? கூட்டப்பட்டார்களா ?
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [28 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29763

இந்தக் கூட்டம் வேறு யாரோ சொல்லி நடைபெற்ற மாதிரி தெரிகிறது.

இந்த தலைவி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை (அதற்காக கொடுத்த மனுக்கான பதில் வரும் வரை) வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறியவர்களுக்கு திடீரென்று இப்போது மட்டும் எப்படி நம்பிக்கை வந்தது. அதே தலைவிதானே இப்போதும் பதவியில் இருக்கிறார்.

இதைக் கேட்டால் ஊர் நலனுக்காக ஒன்று கூடுகிறோம் என்பார்கள். அதைத்தானே ஊர் மக்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்தார்கள், எதிர்பார்கிறார்கள்?

உங்களுக்கும் தலைவிக்கும் 1000 பிரச்சினைகள் இருக்கலாம். அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். அல்லது நீங்கள் அவரை பதவி இறக்க முயற்சித்திருக்கலாம். அந்த வழக்குகளை நீதிமன்றம் and or அரசு பார்த்துக்கொள்ளும். அதனை காரண காட்டி வெளிநடப்பு செய்ததினால் பாதிப்பு யாருக்கு? ஊர் மக்களுக்குத்தான் பாதிப்பு என்று உங்களுடைய பகுத்தறிவு சொல்லவில்லையா?

உண்மையில் நீங்கள் ஊர் நலனில் அக்கறை கொண்டிருப்பவர்களாயின் போன வாரம் அல்லது அதற்க்கு முந்திய மாதத்திலோ வெளிநடப்பு செய்வதற்கு முன் குறைந்த பட்சம் நெசவு தெரு விசயத்திலாவது தீர்மானத்தை நிறைவேற்றிய பின் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்.

நெசவு தெரு ரோடு விசயமாக தீர்மானம் நிறைவேற்ற உங்களுக்கு இரண்டு சந்தர்பங்கள் கிடைத்தது. அப்போதெல்லாம் நிறைவேற்ற நினைக்காத அந்த தீர்மானத்தை இந்த அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றியிருக்குறீர்கள் என்றால் Something wrong. நீங்களாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. நிறைவேற்றும்படி நிர்பந்தப் படுத்தப்பட்டிருக்குறீர்கள்

ஆக மொத்தத்தில் இந்த அவசரக் கூட்டம் நீங்களாக சுயபுத்தியுடன் கூடவில்லை. கூட்டப்பட்டிருக்குறீர்கள் என்பதே. உண்மை.

முந்தய நகராட்சியில் குடிசை மாற்று வாரிய (சுனாமி) குடியிருப்பு சம்பந்தமான விசயத்தில் நடந்த குளறுபடிகளை சரி செய்வதற்காக கூட்டப்பட்டிருக்குறீர்கள். அப்படி கூட்டவைத்தவர்களின் வறபுருத்தளின் படி நெசவு தெரு ரோடு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [28 August 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29774

இந்தக் கூட்டமும் தலைவி அவர்களால் அவசரமாக கூட்டப்பட்ட கூட்டம்தான். ஊரின் நன்மை கருதி ஒற்றுமையாக தீர்மானம் நிறைவேற ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி!

இதே ஒற்றுமை ஊரின் மற்ற நலத்திட்டங்களுக்கும் தொடர வேண்டும். (மற்றவர்கள் தலையீடு இன்றி) யூகங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட ஒற்றுமைக்கு குரல் கொடுப்போம். துஆச்செய்வொம்! ஆமீன்!

தலைவி அவர்களின் அமெரிக்க விஜயத்துக்கும் வாழ்த்துக்கள்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohmedyounus (muscat) [28 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29776

எப்படியோ ஒரு கனிவான சூழ்நிலை உருவாகி உள்ளது. பல்வேறு யூகங்களை கூறி இதற்கு எந்த சாயமும் பூச வேண்டாம். சகோதரர் நிஜார் உட்பட என் போன்ற நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பது இதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. யார் குத்தினால் என்ன ?????
posted by Salai Sheikh Saleem (Dubai) [28 August 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29779

அன்புள்ளம் கொண்டவர்களே, யார் குத்தினால் என்ன ? நமக்கு சுத்தமான அரிசி கிடைத்தால் போதும் தானே ?

இனியும் கிடப்பில் போடப்பட்டுள்ள தீர்மானங்களை விரைவில் மன்ற கூட்டம் கூட்டியோ அல்லது கூட்டப்பட்டோ நிறைவேற்றுங்கள்.

முதல்வர் பதக்கம் பெற்ற காவல்துறை ஆய்வாளருக்கும் உலகத்தை தனது அரசியலால் கட்டிப்போட்டுள்ள அமெரிக்காவிற்கு அரசாங்க விருந்தாளியாக செல்லவுள்ள நமது சகோதரி, நமது மாநகராட்சி தலைவி ஆபிதா அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by M.Jahangir (kayalpatnam) [28 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29784

பெரிய நெசவுத் தெரு ஒருவழிப்பாதைக்கு புதிய சாலை அமைப்பது என்பது இந்த அவசர கூட்டத்தில் யாரும் முன்கூட்டியே பிளான் செய்து கொண்டுவந்த அஜன்டா இல்லை. இது கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மட்டும் அல்ல, பார்வையாளர்களாக கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் தெரியும்.

அங்கு நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் ஒரு வழிப்பாதைக்கு சாலை அமைக்கும் அஜன்டாவை மேஜை பொருளாக கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டது. அந்த அஜன்டா தயார் செய்வதற்காக கூட்டம் துவங்குவதற்கு நீண்ட நேரம் ஆனதையும் அனைவரும் அறிவார்கள்.

"நெசவு தெரு ரோடு விசயமாக தீர்மானம் நிறைவேற்ற உங்களுக்கு இரண்டு சந்தர்பங்கள் கிடைத்தது. அப்போதெல்லாம் நிறைவேற்ற நினைக்காத அந்த தீர்மானத்தை இந்த அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றியிருக்குறீர்கள் என்றால் Something wrong. நீங்களாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. நிறைவேற்றும்படி நிர்பந்தப் படுத்தப்பட்டிருக்குறீர்கள்" C&P.

இப்படி கூறுபவர்கள் இருக்கும் வரை, ஊரை குழப்பிக் கொண்டேதான் இருப்பார்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...பாராட்டுக்கள்
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை_86) [28 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29788

நடந்து முடிந்த நகராட்சி அவசர கூட்டம் ஒற்றுமையுடன் நடந்தமைக்கு ஒத்துலைத்த உறுப்பினர்கள் / தலைவி அனைவருக்கும் எனது சார்பிலும் ஊர்மக்கள் சார்பிலும் நன்றி பாராட்டுக்கள்.

இதுபோல் எல்லா கூட்டத் தொடர்களும் ஒற்றுமையுடன் வெற்றி பெற எல்லாம் வல்லநாயன் அல்லாஹ் அருள்புரிவானக ஆமீன்.

தமிழக அரசின் அண்ணாபதக்கம் பெற்றஆறுமுகநேரி காவல்துரை ஆய்வாளர் பார்திபன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தலைவியின் அமேரிக்கப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வல்லோனின் நாட்டப்படியே எல்லாம் நடக்கும்...
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [28 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29791

பொது வாழ்வில் யாரும் யாருக்கும் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரியுமில்லை.

இனி தலைவியின் தலைமையில் நம்பிக்கையில்லை மண்டல நிர்வாக அதிகாரியிடமிருந்து பதில் வரும் வரை நாங்கள் இந்த தலைவியின் தலைமையில் கூட மாட்டோம் என வெளிநடப்பு செய்து ஒரு வாரத்திற்குள் பெரும்பாண்மை உறுப்பினர்கள் ஒன்றுகூடி தலைவியின் ஒத்துழைப்போடு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்கள். அல்ஹம்ந்து லில்லாஹ்! இது இறைவனின் செயல்.

யார் யார் என்ன நினைத்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

ஊர் நன்மைக்காக ஒருமித்த கருத்தில் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனும் முதுமொழியை மெய்பிக்க நகர் மன்ற தலைவரும் உறுப்பினர்களும் முன் வர வேண்டும்.

இனியாவது காழ்ப்புணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு வெளிநடப்புகளுக்கு இடம் தராமல் ஊர் மக்களுக்காக உழைத்து பேரும் புகழோடு நகர்மன்றம் நல்ல முறையில் செயல்பட முன் வாருங்கள். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Cnash (Makkah) [28 August 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 29794

இந்த ஒற்றுமை இனி வரும் காலங்களிலும் தொடர வாழ்த்துவோம். ஊர் நன்மையை நாடி எதிர் காலங்களிலும் நீங்கள் ஒன்றிணைந்து நல்ல பல திட்டங்களை நிறைவற்ற தலைவிக்கு உறுதுணையாய் இருங்கள்.. இது நம்ம ஊரு!! திட்டம் நம் மக்களுக்கு!! இதை மட்டும் மனதில் கொண்டு படைத்தவன் பார்த்துகொண்டிரிகிறான் என்ற பயத்துடன் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற செய்யுங்கள், அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான்.. தேவை இல்லா யூகங்களுக்கும் மனதில் தோன்றினாலும் அதை புறந்தள்ளி விட்டு நல்லதை நினைப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஞானோதயம் ஒரு தீர்மானமானது.
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [28 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29798

"அங்கு நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் ஒரு வழிப்பாதைக்கு சாலை அமைக்கும் அஜன்டாவை மேஜை பொருளாக கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டது. அந்த அஜன்டா தயார் செய்வதற்காக கூட்டம் துவங்குவதற்கு நீண்ட நேரம் ஆனதையும் அனைவரும் அறிவார்கள்." (C&P)

நெசவு தெரு ரோடு (One-way) விஷயம் என்னைக்குத் தெரிந்து பிப்ரவரி மாதமுதல் விட்டு விட்டு Agenda வில் வந்துகொண்டிருக்கிறது. இந்த கூட்டம் சுனாமி (குடிசை மாற்று வாரியம்) குடியிருப்பு விசயமாக அவசரமாகக் கூட்டப்பட்டது. இதில் இந்த விசயத்தை மட்டும் கூட்டப் பொருளாக சேர்த்ததன் அவசியம் அல்லது மர்மம் என்ன?. எத்தனையோ கூட்டப்பொருள் உங்களின் ஊர் நலன் கருதிய (சரித்திரப் புகழ் வாய்ந்த பொன்னான) வெளிநடப்புகளால் தேங்கிக்கிடக்கின்றன.

அவைகளெல்லாம் உங்களுக்கு முக்கியமாகத் தெரியவில்லையோ? சரி நெசவு தெரு விஷயம் எல்லாவற்றையும்விட முக்கியமானது என்று நேற்று, அதுவும் அவசரக் கூட்டத்தில்தான் (ஞானோதயம் ஏற்பட்டு) கூட்டுப்போருளாக சேர்க்கவேண்டும் என்று தோண்டியதோ?.

புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்று படித்திருக்கிறோம். இவர்களுக்கு அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்போதுதான் ஞானம் பிறக்கும் போல.

பெருநாளுக்குப் பிறகு நடந்த மாதாந்திர் கூட்டத்தில் இந்த One-way விஷயம் கூட்டுப்போருளில் இருந்தது உங்களுடைய கண்களுக்குத் தெரியவில்லையா?

ஒருவேளை சுனாமி விசயமாக இந்த அவசரக் கூட்டம் கூட்டப்படாமல் போயிருந்தால், நெசுவு தெரு ரோடு விஷயம் பற்றி என்ன பண்ணியிருப்பீர்களாம்? அது சரி கிடப்பில் கிடக்கும் மற்ற முக்கிய கூட்டுப் பொருள்கள் மீது எப்போது விவாதிக்கப் போகிறீர்கள்.

தலைவி அழைத்துதான் கூட்டத்திற்கு சென்றோம், Outsiders தலையீடு இல்லை, பிறர் எங்களை கூட்டத்திற்கு போகும்படி வற்புறுத்தவும் இல்லை என்று கூற வருகிறார்களா? அப்படி என்றால் அதை வரவேற்க வேண்டும். மாதக் கூட்டங்கள் வெளிநடப்பில்தான் முடிகிறது. அதனால் அடிக்கடி அவசரக் கூட்டம் போடுங்கள். அப்போதொதாவது ஊருக்கு நல்லது நடக்கும்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. மாஷால்லாஹ்
posted by SALMAN (YANBU) [28 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29808

மாஷால்லாஹ் .... சபாஷ்

இது நம்ம காயல்பட்டணம் நகரமன்றமா ?? என்று சந்தேகம் உள்ளது ......... தலைவியுடன் எல்லா கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து இருப்பதை பார்பதற்கு ரொம்பவும் சந்தோசமாக இருக்கின்றது :

இன்ஷால்லாஹ் வருகின்ற எல்லா நகர்மன்ற கூட்டத்திலும் இதை போன்று ஒற்றுமையாக இருந்து நமது ஊர் மக்களுக்காக பாடு படுங்கள் என்று அன்பும் பாசமும் நிறைந்த வார்டு உறுப்பினர்களுக்கு இந்த சிறியவனின் அன்பு வேண்டுகோள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஒட்டுமொத்த ஒற்றுமை நம்ஊர் நலனுக்காக .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [28 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29810

நோன்பு பெருநாளையும் (2 ஓ 3 ஓ தெரியாது) ஹஜ்ஜிப்பெருநாளையும் சேர்த்து கொண்டாடக்கூடிய குதுகூலம் போல் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது! அல்ஹம்திளில்லாஹ்!

எப்படி கூடினாலும்,கூட்டப்பட்டாலும் ஒரு கொள்கைமுடிவாக வெளியாகி அது ஊருக்கு நன்மையை தருகின்ற இந்த தங்கமான தீர்மானத்தை (ஒரு நபர் தவிர மற்றைய) அனைத்து அங்கத்தினர்களும்,அக்கறையுயுடன் நிறைவேற்றி இனி வரும் காலங்களிலும் எங்களின் ஒட்டுமொத்த ஒற்றுமை நம்ஊர் நலனுக்காக செயல்படுவோம் என்பதையும் இக்கூட்டம் மூலம் எங்களுக்கு மானசீக மனதுடன் உறுதி அளித்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
நாளைய நம்பிக்கையுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. சகோதரரே...! அதுவும் இல்லாமல் இதுவும்மில்லாமல் திரும்பவும் ............... முருங்கை மரம் ஏறிவிட கூடாது.... அது தான் முக்கியம் சகோதரரே...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 August 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29811

தலைவியின் தலைமையில் திடீரென நம்பிக்கை பிறந்து தலைவி கூட்டிய கூட்டத்தில் பங்கு எடுத்து நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற ஒத்துழைத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... முக்கியமாக நெசவு தெரு சாலை... தீர்மானம் நிறைவேற்றம்...

இனி தலைவியின் தலைமையில் நம்பிக்கையில்லை என்றும் இனி தலைவியின் தலைமையில் கூட மாட்டோம் என்றும் சொல்லி இனி வெளிநடப்பு செய்ய மாட்டார்கள்..!

இக்கூட்டத்தின் மூலம் தனது நடவடிக்கையை நமது பெரும்பாண்மை உறுப்பினர்கள் நகர் மக்களுக்கு (உறுப்பினர்களின் தொடர் வெளிநடப்பு) இனி இருக்காது என்று இக்கூட்டத்தின் வாயலாக தெரியபடுத்தி உணர்த்தி விட்டார்கள்... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..!

இனி வரும் அடுத்த அடுத்த கூட்டங்கள் மிக சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை நகர மக்கள் மத்தியில் மலர தொடங்கி உள்ளது...!

இந்த நம்பிக்கை முழுமை பெற வேண்டும்...!

கூடினார்களா ? கூட்டப்பட்டார்களா ? அது தான் நகர்மக்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசியம் தானே பின்பு அது கருத்தில் வேறு பதியனுமா...? கூடினார்களா ? கூட்டப்பட்டார்களா ? இன்று நமக்கு அது முக்கியமல்ல..!

சகோதரரே...! அதுவும் இல்லாமல் இதுவும்மில்லாமல் திரும்பவும் ............... முருங்கை மரம் ஏறிவிட கூடாது.... அது தான் முக்கியம் சகோதரரே...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by syed ahamed (KAYALPATNAM ) [28 August 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29814

இனி நல்லபடி நடப்பு ஆண்டுகளில் கூட்டம் வெளிநடப்பு இல்லாமல் நடந்தால் சந்தோசமே.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [29 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29829

காயல்பட்டினம் நகராட்சி கூட்டம் என்றால் அனைவர்களுக்கும் தெரிந்தது இரண்டு மட்டும்தான்.

ஒன்று தலைவி ஒரு மூலையில் அமர்ந்து இருப்பார், ஒரே ஒரு உறுப்பினர் அருகில் இருப்பார், இந்த புகைப்படம் தவறாமல் இடம்பெறும்.

அல்லது, டைரக்டர் அருகில் இல்லாமல் திரைப்பட சூட்டிங் நடைபெறுவது மாதிரி வவுந்து விடுவேன், தொலைத்து விடுவேன் என்ற வீர வசன காட்சிகளும், வாடி போடி என்ற சீரிய வசன காட்சிகளும், என்னை பார்த்து முறைக்கின்றான், சிரிக்கின்றான் என்ற காமடி காட்சிகளும், கேமரா முன்பு தலையை கோரமாக காட்டி பயமுறுத்தும் திகில் சீன்களாக இருக்கும்.

ஆனால், இந்த நிகழ்வை காணும் போது எவ்வளவு ஆனந்தம். அல்ஹம்து லில்லாஹ். இதே ஒற்றுமை, இதே ஊர் நலனில் அக்கறை ஆகியவை தொடரட்டும். உங்கள் அனைவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

அப்துல் வாஹித் காக்கா, யார் குத்தியோ நெல் அவலாக மாறுகின்றதா..! சரி தான்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தொல்லை எக்ஸ்ப்ரஸ்...? (?!)  (27/8/2013) [Views - 3238; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved