Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:15:04 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11671
#KOTW11671
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013
மேஸ்திரி மேவாவ கொஞ்சம் ஏத்திட்டாம்பா... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நோன்புப் பருவம் நிறைவுற்றுவிட்டதையடுத்து, காயல்பட்டினத்தில் திருமண நிகழ்ச்சிகள் பரவலாக பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சிகளையொட்டி தொடர்ச்சியாக விருந்துபசரிப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

விருந்துகளில், காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி - இறைச்சி, கத்திரிக்காய் பருப்பு, புளியானம், வெண்சோறு ஆகியன பெரும்பாலும் பரிமாறப்படும்.

காலை மற்றும் மதிய நேரங்களில் விருந்துண்பவர்கள், உண்ட மயக்கத்தின் காரணமாக, அப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களையொட்டியிருக்கும் சதுக்கைகளிலும், சங்கங்களிலும் காற்று வாங்கியவாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அயர்ந்துறங்கி, பின் எழுந்து வீடு செல்வர்.

நேற்று (ஆகஸ்ட் 24) மதியம் 01.00 மணியளவில் காயல்பட்டினம் அப்பா பள்ளி சதுக்கையில் அதுபோன்று காணக்கிடைத்த காட்சிகள்:-




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சங்கமும் தங்கமும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [25 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29689

இங்கே சங்கத்தில் மேஸ்தரி மேவாவ ஏத்திட்டதான்பா என்று சொல்லி தூங்குகிறார்கள். அங்கு கல்யாண வீட்டில் என்ன நடக்குது தெரியுமா.

பெண் வீட்டில் மாப்பிள்ளை வீடு கேட்கிறார்கள். "பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள்?"

"30 பவுன் போடுவோம், நீங்கள் என்ன போடுவீர்கள்?" இது பெண் வீடு.

"நீங்கள் போடும் நகையை நாங்கள் எடை போடுவோம். சொன்னதற்கு குறைவாக இருந்தால் உங்களுடன் சண்டை போடுவோம்" இதுதான் மாப்பிள்ளை வீட்டு பதில்.

இன்னொரு வீட்டில், மாப்பிள்ளையின் தாயார் சொல்கிறார், "சம்பந்தி, உங்கள் மகளை தங்க தாம்பாளத்தில் வைத்து பூ போல பாதுகாப்போம்".

" ரொம்ப சந்தோசம்மா"...இது பெண்ணின் தாயார் பூரித்து போனார்.

"அதனாலே, சீர் அனுப்பும்போது மறக்காமல் தங்க தாம்பாளமும் அதில் கொஞ்சம் பூவும் வைத்து அனுப்ப மறந்து விடாதீர்கள்"..இது மாப்பிள்ளையின் தாயார்.

இப்போது பெண்ணின் தாய் பூரி மாவை போல் கை பிசைந்து நிற்கிறாள். இந்த நிலையில் கல்யாண வீட்டில் யார் தூங்குவார்கள்.

இது காயல்பட்டினத்தில் நடக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் இந்த அவலம் நிலவுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஆளுக்கு ஒரு தூண்...?
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [25 August 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 29692

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [25 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29694

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற வழக்கு மொழியை நினைவு படுத்துவதாக அமைகின்றது இந்த புகைப்படங்கள்.

வாயிற்றுக்குள் உணவு சென்ற உடனே அதை செரிமானம் செய்து, நைட்டுக்கு புராட்டா, இடியாப்பம், கறி சாப்பிட தோது செய்யணும் அல்லவா, அதற்காக செரிமான செயலுக்காக வயிற்று பகுதிக்கு அதிகம் இரத்தம் சப்ளை செய்யப்படுவதால், பிற பகுதிகளான மூளை போன்ற உறுப்புக்கு, தேவையான இரத்தம் குறைவாக கிடைக்கும். ஆக, சாப்பிட்டவுடன் ஒரு வித அயர்வும் தூக்கமும் வரும்.

இதுவே மேஸ்திரி மேவாவ- விற்கு பதிலாக வேறு ஏதும் கலந்தால் கீழ்வா திறந்து விடும்.

இதாவது பரவாஇல்லை, ஒருமுறை ஜலாலியாவில் சாப்பிட சென்றபோது லுஹர் பாங்கு ஒலித்து விட்டது, தொழுக சென்றேன், செல்லும் போதும், முடித்து வரும் போதும் ஒரு பெரும் கூட்டம் திண்ணைகளில் அமர்ந்து கொண்டும், பலர் உறங்கிக்கொண்டும் இருந்தார்கள். என்ன கொடுமை இது. பள்ளியில் குளு.. குளு குளிர்சாதன வசதியை உண்டுபண்ணியும் பிரயோஜனம் இல்லையே..!!

இவர்களுக்கு ஜமாஅத் தொழுகையின் அருமை தெரியாததால் இப்படி இருக்கின்றார்களா..!!..? . தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, பள்ளிக்கு பள்ளி, பயான் பயான் என்று பிரச்சாரம் பண்ணி என்ன பயன்.

சௌதி அரேபியா மாதிரி தொழுகைக்கு பாங்கு சொன்னவுடன் அனைத்தையும் நிறுத்தனும் என்ற சட்டத்தை கொண்டுவரனும். அட்லீஸ்ட் சாப்பாட்டை நிறுத்தனும்..!!

வல்ல அல்லாஹ் அனைவர்களுக்கும் நல்ல வழியை காட்டுவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [25 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29695

முகம் தெரியாத நண்பர்கள் சரவணன், விஜயகுமார் (இந்த வலைதளத்தை வழமையாக பார்ப்பவர்களாம்) அவர்களுக்கு,

உங்கள் மெயில் கிடைத்தது. உங்களுக்கும், காயல் வார்த்தைகளை புரியாத நண்பர்களுக்கும் இந்த பதிவு.

அருஞ்சொற்பொருள்:-

1. மேவா - பாதம், பிஸ்தா, முந்திரி, தேங்காய், கசக்கசா ஆகியவற்றை மொத்தமாக குறிக்கும் வார்த்தை.

2. மேஸ்திரி - நீங்கள் குறிப்பிடும் கட்டிட மேஸ்திரி அல்ல, இங்கு சமையல் மேஸ்திரி.

3. புளியானம் - புளி ரசம்.

4. கீழ்வா - கீழ் வாய் , அதாவது... ..! புரிந்து இருக்கும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. kayal kalari
posted by Hameed sulthan (Abudhabi) [26 August 2013]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 29703

ulagathil engu senraalum kayalkalarikku eidu kidayathu


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.M.I.Zakariya (chennai) [26 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29705

கலரி சாப்பாட்டுக்காக நம்ம ஊரில் ரிஸ்க் எடுக்கிறவங்க பலபேர். அங்கே ஒன்று இங்கே ஒன்று என உலகத்தை விட்டு போனவங்க பற்றி நியூஸ் வந்தாலும் என்ன நடந்தாலும் அதை பற்றி கொஞ்சமும் கவலை படாமல் ஜோடியை தேடி கண்டு பிடித்து சாப்பாட்டிற்கு கிளம்பும் நம்மவர்களை நினைத்து கவலை படுவதா இல்லை இதுவெல்லாம் நம்மவூரின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வுகளில் ஒன்று என்று மார்தட்டிகொல்வதா புரியவில்லை

சிலநேரங்களில் வெளியூர் நண்பர்களோடு இருந்து கலரி சாப்பாட்டின் மகத்துவத்தை பற்றி பேசும்போது என்னப்பா வெறும் சோறுக்கா இவ்வளவு BUILD UP கொடுக்கிறீங்க என்றால் நாம் களரியின் மகத்துவத்தை விளக்க எவ்வளவு நேரம் எடுத்தாலும் நம் விடுவதா இல்லை

பெரும்பாலும் கலரி சாப்பாட்டை கல்யாண வீட்டிலேயே இரவில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

மக்கி நூஹுதம்பி காக்கா அவர்கள் சொல்வது போல் மற்ற ஊர்களில் வேணுமென்றால் நடக்கலாம் நம்ம ஊரில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் குறைவு. வீடு வேணும் என்கிற கருத்தை தான் அத்தனை மக்களும் கையில் எடுக்கிறார்கள் என்பது தான் வருத்த படவேன்றிய ஒன்று. இன்ஷா அல்லா காலப்போக்கில் இதுவும் மாறலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...அப்பா பள்ளி சதுகைய தனி தான்
posted by b.a.buhari (chennai) [26 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29714

இந்த சதுகைல் கீழ் இருக்கும் பெஞ்சின் வயது 100 கு மேல் இருக்கும், இதில் உட்காரும் சுகமே தனிதான். அதுலாப் மச்சான் சிரிப்பும் தனிதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மயக்கும் மேவா,,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [26 August 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29715

இதை போன்ற கல்யாண சாப்பாடு சாப்பிட்ட பின் வீட்டில் அடைபட்டு செயற்கை காற்று பெறுவதை விட இதை போன்ற சங்கங்களில் கிடைக்கும் வேப்ப மர காற்றுக்கு சொக்கும் சுகம் வேரதிலும் கிடைப்பதில்லை.

இப்பலான் என்ன மேவாங்க, அப்பா ஒரு போதை மேவாதான் முக்கிய அயிட்டம், அதாங்க கசகசா, ஐயோ அந்த காலத்தில் சாப்பிட்ட பின் எத்தனை கிறக்கம், எத்தனை மயக்கம், அதுக்கு இப்போ எவ்வளவோ தேவையில்லைங்க.

மொத்தத்தில் பலமான விருந்துக்கு அப்புறம் இதை போன்ற திறந்த வெளி இடங்களில் அமைந்திருக்கும் சவுக்கையில் கிடைக்கும் குட்டி தூக்கத்தில் கிடைக்கும் மன அமைதியை சொல்ல வார்த்தையில்லை எனலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை_86) [26 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29729

திண்டமயக்கம் தின்னையைதேடும் உண்டமயக்கம் உறங்க தோன்டும் இது இயல்பு. நமது நகரத்தில் பல சங்கம்கள் குருத்த மணல் /ஓலைகூரை மரங்களின் நிழல் உடன் இருக்கும். இன்றோ காங்கிரட்சீலிங் சிமென்ட் தரை மரங்களும் இல்லை படுத்தால் உறக்கமும் வருவதில்லை.

வெளியூரில் இருந்து வரும் நபர்கள் படும் கஷ்டமும் அதிகம். அவர்கள் வீட்டு படிகளில் அமர்ந்து இருப்பதை பார்க்கும் மனதுக்கு சங்கடம் வீடுகள் அவர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்படுகின்றன இருந்தாலும் தனது குடும்பத்தார் வரும் வரை (பெண்கள் பந்தி முடிந்து) வீட்டுப்படிகளில்தான் காத்து இருக்கின்றனர் புதிய ஊர் புது இடம் என்ற கூச்சசுபாவமும் கூட.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...உண்ட மயக்கம்
posted by SEYED ALI (ABUDHABI) [30 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29868

ஆஹா நெய்ச்சோறும்,கத்தரிக்காய் மாங்காயின்,சிறு புளிப்புடன் காயல் களறி கறியையும், பிசைந்து போடு சோற்றையும் விட்டுவைக்காமல் போட்டு வாசமும் மணமுமாக உண்ட களைப்புடன் வேப்ப மர காற்றில் சுகம் காணும்,வெள்ளை வேட்டி மஹா ஜனங்களே உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.ஆமா MASTER OF EMINENT HEALTH EDUCATION & RESEARCH (MEHER ) அலி அவர்கள் ஏன் கால்களை நீட்டி தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்கள்?உறங்கவில்லையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தொல்லை எக்ஸ்ப்ரஸ்...? (?!)  (27/8/2013) [Views - 3238; Comments - 7]
மீண்டும் படையெடுப்பு! (?!)  (24/8/2013) [Views - 3439; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved