Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:04:20 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11672
#KOTW11672
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 26, 2013
ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணக்கூடாதா...? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5853 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் திருமண நிகழ்ச்சிகளின்போது, திருமண வீட்டார் இல்லங்களின் முன்பகுதியிலுள்ள சாலையில் பந்தல் அமைக்கப்படும் வழமை இருந்து வருகிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளபோதிலும், உட்தெருக்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்குமென்பதால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனினும், என்றாவது அப்பகுதியில் தீ விபத்தோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படுமாயின் அந்நேரத்தில் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.

அதுபோல, திருமண விருந்து நிகழ்ச்சிகளின்போது பந்தல்கள் அடைக்கப்பட்டு விருந்துபசரிப்பு நடைபெறும். சில பந்தல்களில் இரு சக்கர வாகனம் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்திற்காக என 2 முதல் 3 அடி அகலத்தில் சிறிய பாதை விடப்பட்டிருக்கும். இதர பந்தல்களில் அதுவும் இருப்பதில்லை. இருந்தபோதிலும், திருமண விருந்து நிகழ்ச்சியும் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் முடிவடைவதால், அதன் பாதிப்பும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும்.

நகர வழமைப் படி, திருமண நிகழ்ச்சியையடுத்து வரும் மாலையில், மணப்பெண்ணை அலங்கரித்து பந்தலில் அமர்த்துவர். உறவினர், மணப்பெண்ணின் தோழியர் என ஏராளமானோர் மணப்பெண்ணைப் பார்த்துவிட்டுச் செல்வர்.

இவ்வாறு மணப்பெண்ணை அலங்கரித்து வைப்பதற்காக, மணப்பெண் வீட்டையொட்டிய வெட்டைப் பகுதி (வீடுகளல்லாத காலிமனை) பயன்படுத்தப்படும். ஆனால், இன்று நகரில் பெரும்பாலும் வெட்டைப் பகுதிகளில் இல்லை என்ற நிலை உள்ளது.

அதுபோல, விசேஷ நிகழ்ச்சிகளின்போது பந்தல் அமைப்பதற்காகவென, நகரில் புதிதாக வீடுகள் கட்டப்படும்போதே, அவற்றின் மொட்டை மாடிகளில் எல்லா பக்கங்களிலும் வளையங்கள் பதிக்கப்பட்டிருக்கும். திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களின்போது, அந்த வளையங்களில் பந்தல் கால்களைச் சொருகி, பந்தல் அமைத்து, அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணை அதில் அமர்த்தி வைப்பர். இன்றளவும் இந்த அமைப்பு, நகரின் பல வீடுகளிலும் இருந்து வருகிறது,









எனினும், அவற்றைப் பயன்படுத்தும் மனப்பதிவு மக்களிடம் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். திருமண வீடுகளில் ஆங்காங்கே தொங்கும் பட்டுச் சேலைகள், ஆபரணங்களை சிலர் திருடிச் சென்றுவிடுவதால், தங்களுக்கு மட்டும் ஏற்படும் அந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, தெரு பந்தலை அடைத்து மணப்பெண்ணை அலங்கரித்து வைக்கும் பழக்கம் சில ஆண்டுகளாக அதிகளவில் உள்ளது.

மாலை சுமார் 04.00 மணியளவில் அடைக்கப்படும் பந்தல்கள், இரவு 10.00 மணி வரையிலும் கூட அடைக்கப்பட்டே இருக்கும். பொதுநலன் முற்றிலும் மறக்கப்பட்ட திருமண வீடுகளில், “அதான் இரவாயிடுச்சே... பந்தல்காரனை எங்கு போய்த் தேடுவது...? நாளை காலையில் பந்தலைத் திறந்துகொள்ளலாம்...” என அலட்சியத்துடன் அப்படியே விட்டுவிடும் நிலையுமுள்ளது.

இம்மாதம் 24ஆம் தேதியன்று ஒரு திருமண வீட்டில், மாலையில் நடைபெறும் அழைப்பு (ரிசப்ஷன்) நிகழ்ச்சிக்காக காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலின் இரு முனைகளிலும் கயிறு கட்டி அடைக்கப்பட்டிருந்தது. அன்று சனிக்கிழமை விடுமுறை நாளென்பதால், கடற்கரைக்கு அதிகளவில் வந்த பொதுமக்கள் அவதியுற்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 25ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை) காலையில் திருமண விருந்திற்காகவும், மாலையில் மணப்பெண்ணை அமர்த்துவதற்காகவும் நகரின் பல தெருக்களில் பந்தல்கள் அடைக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலையில் மட்டும், காயல்பட்டினம் குறுக்கத் தெரு, ஆறாம்பள்ளித் தெரு, (கீழ) சித்தன் தெரு - தீவுத்தெரு சந்திப்பு, சித்தன் தெரு - ஆஸாத் தெரு குறுக்குச் சாலை உள்ளிட்ட பல இடங்களில், ஒரு தனி மனிதர் கடந்து செல்வதற்குக் கூட வழி விடப்படாமல், திருமணப் பந்தல்கள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது.











இவற்றின் காரணமாக, அவசர வேலையாகச் சென்ற பலர் பெரும் அவதிக்குள்ளாயினர். வாகனப் போக்குவரத்து பெரிதும் தடைபட்டது. ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள், பல தெருக்களைச் சுற்றி - தேவையுடையோரை வந்தடைய தயக்கம் காட்டினர்.

மொத்தத்தில், இந்த பந்தல் அடைப்புகள் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமளித்தன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எனக்கு ஏன் வம்பு...! நான் போறேன் மாற்று பாதையில்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29704

நகராட்சியே இதற்க்கு பொறுப்பு...! நீ சொல்லி நான் என்ன கேட்பது...? வேறு மாற்று வழியை (பாதையை) பாரு...? எனக்கு ஏன் வம்பு...! நான் போறேன் மாற்று பாதையில்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்ல ஒற்றுமை தொடர வாழ்த்துக்கள் !!!!!!!
posted by Seyed Ibrahim (Tuticorin) [26 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29706

Assalamualaikum

பந்தல் போட்டு ரோட்டை அடைப்பதில் பணக்காரன் நடுத்தரவாதி என்ற வித்தாயசம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையை நிலை நாட்டி உள்ளார்கள். ( இதில் சிரமத்திரிக்கு வருந்துகிறோம் என்று சிறிய போர்டு வேறு ஒரு எடத்தில்).

ரெண்டு நாள்களாக மக்கள் பட்ட சிரமம் ஏன் புரிவதில்லை ???? தொடருவது வாடிக்கை ஆகிவிட்டது.

எல்லோராலும் நிகாஹ் மஜ்லிஸில் வைக்க முடியாதுதான். பெண்கள் நிகழ்ச்சியை தைக்காகலில் வைக்கலாமே !!! (வீணான விளையாட்டுக்களும் தவிர்க்கப்படலாம்)

ஹஜ் முடித்து வரும் பெண்களை தைக்காகளில் வரவேற்கும் வழமை நம்மில் உண்டு.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் .

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack SMA (shiqiao ,Guangzhou) [26 August 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 29707

சென்ற வாரம் நான் ஊரில் இருந்த சமயம் , குத்துக்கள் தெரு , சதுக்கை தெரு , அம்பலமரைக்காயர் தெரு , மூன்று இடங்களிலும் பந்தல் போட்டு இரண்டு நாட்களாக தெருவை அடைத்திருந்தார்கள் .அன்று இரவு இரயில் நிலையம் செல்வதற்காக , என் மகனை பைக்கில் ஏற்றிக்கொண்டு , முக்கியமான இந்த தெருக்களின் வழியாக சுலபமாக செல்ல முடியாமல் , ஊரை சுற்றி , நான் இதுவரை ஊரில் பார்த்தே இராத தெருக்களைஎ ல்லாம் சுற்றி வந்து , இரயில் நிலையம் அடைவதற்குள் இரயில் வந்து , ஓடும் இரயிலில் தொற்றிக்கொண்டு ஏறினான் என் மகன் .

அன்றைய தினம் காலையில் , சதுக்கை தெருவில் உள்ள திருமண வீட்டாரிடம் , ஏன் இப்படி பந்தல் போட்டு தெருவை அடைத்து அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன் . அதற்கு அவர் வெட்டை இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க என்றார் . பள்ளிவாசல் இருக்கிறது , பெண்கள் தைக்காக்கள் இருக்கிறது அங்கு வைத்து உங்கள் காரியங்களை செய்யலாமே என்றேன் . திருமண வீடு என்பதால் மேலும் பிரச்சினைகள் வரகூடாது என்று நகன்றுவிட்டேன் .

யாரால் இந்த பிரச்சினை ?

--------------------------------------

திருமண வீட்டார்தான் இதற்கு முக்கிய காரணம் என்று யோசிக்கையில் இன்னொரு தகவலும் வந்தது . ஊரில் ஒரே ஒரு திருமணம்தான் நடக்கிறது , அதன்பிறகு சமீபத்தில் வேறு எங்கும் திருமணம் இல்லை என்றால் அந்த " ரோடு அடைப்பு , பந்தல் " ஒரு நாளைக்குள்ளாகவே அகற்றப்பட்டுவிடுமாம் .

ஆனால் அடுத்தடுத்து , இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒருவார இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் திருமணம் வந்தால் பந்தல் காரர் (வெளியூர் காரர்) முன்பிருந்த பந்தலை அவ்வளவு சீக்கிரம் கழற்ற மாட்டாராம் . ஏனெனில் கழற்றினால் பொருட்கள் அத்தனையும் தன் ஊருக்கு கொண்டு சென்று திரும்ப கொண்டுவர செலவு ஆகுமாம் . அதனால்தான் முதலில் போட்ட பந்தல் ரோடு அடைப்பு அப்படியே இருக்கும் .

இதற்கு தீர்வுதான் என்ன ?

---------------------------------------

நகராட்சி , திருமண நிகழ்சிகள் , பொது விழாக்கள் போன்றவற்றிற்கு தெருவில் பந்தல் போட மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் . ரோட்டை அடைத்து செய்யும் காரியங்களுக்கு கண்டிப்பாக , முகதாட்சண்யம் பாராமல் , ஏழை பணக்காரன் என்று பாராமல் அனுமதி கொடுக்கவே கூடாது .

சில வருடங்களுக்கு முன் ........ குத்துக்கள் தெரு , சதுக்கை தெரு , நெய்னார் தெரு ( பெரியபள்ளி அருகில் ) ஒரே நேரத்தில் ரோட்டை அடைத்து விருந்து. கோமான் தெருவுக்கு செல்லும் ஒருவர் , செல்ல முடியாமல் அவதிப்பட்டு , மணமக்களையும் அவர்கள் வீட்டாரையும் சபித்துக்கொண்டு சென்றார். இது தேவையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by nizam (india) [26 August 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 29708

டேக் டைவர்சன் எடுத்து விவேக் திருப்பதி போன கதைதான்.

ரோடு அளவு சுருங்கியதுதான் முக்கிய காரணம் பைக் போகும் அளவுக்கு இடம் விட்டு பந்தல் கட்டவேண்டும் என்றால் அந்த பந்தலில் மாப்பிள்ளை மட்டும்தான் உட்காரமுடியும். இதற்கான தீர்வு பெருகி வரும் ரோட்டை ஆக்கிரமித்து வீடு போல படி சாக்கடை கட்டும் கலாச்சரத்தை ஒழித்து கட்டவேண்டும். எதிர்காலத்தில் மின்கம்பங்களை நீக்கி மின்கம்பிகளை பாதாளத்தில் பதிக்கும் திட்டம் நீரைவேற்ற பட வேண்டும். மற்ற சமூகத்தினரை போல ரிசப்சன் கல்யாணம் பெண் ஜோடிப்பு போன்றவற்றை கல்யான மண்டபங்கள் கட்ட பட்டு (ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்கள் முதலீட்டை இதில் செய்யலாம்)அதில் நடத்தினால் இந்த பிரச்சினைகள் குறையும்.

மன்னிக்கவும் இதோடு திருமணம் சம்பதப்பட்ட ஆனால் இந்த செய்தியோடு சம்பந்தபடாத ஒரு விசயத்தை கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். நமதூரில் பாரம்பரியமாக இரண்டு பேர் இருந்து சாப்பிடும் வழக்கம் நல்ல முறை அதனால் சமத்துவம் தோழமை வளர்கிறது. அது தொடர வேண்டும் அதே சமயம் நமதூர் வாசிகள் பெரும்பாலும் வெளிநாடு வெளியூர் தொழில் வேலை என்று இருப்பதால் அவர்களுக்கு பழைய நண்பர்கள் பழக்கமானவர்கள் தொடர்பில் இருப்பது இல்லை. தாங்கள் பல காலம் கழித்து உள்ளூர் வரும் கல்யாண விருந்து அழைப்பு கூட ஒரு ஆள் (அதுவும் சொல்லி வந்த ஆளாக இருக்க வேண்டும்) கிடைக்காத சந்தர்பத்தில் அந்த விருந்தை அட்டண்ட் பண்ண முடியாத சூழ்நிலை ஏற்பாடுகிறது. அப்படி சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு தனியாக பரிமாறும் ஏற்பாடும் அதை பற்றிய குறிப்பை அழைப்பு அட்டையிலும் வெளியிடும் செய்ய வேண்டும். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் அப்படி தனியாக வந்தவர்கள் வெளியூர் விருந்தினர் பகுதியில் (விதிவிலக்காக சிலர் இருக்கலாம்) அமரமுற்பட்டபோது அவமானபடுதியதை நான் கண்டு வேதனைப்பட்டேன்.

நபி (ஸல்) மொழிகிறார்கள் விருந்திலே மோசமான விருந்து பாரபட்சம் காட்டப்படும் விருந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...EVERY PROBLEM HAS A SOLUTION
posted by mackie noohuthambi (kayalpatnam) [26 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29709

EVERY PROBLEM HAS A SOLUTION. IF YOU CANNOT SOLVE A PROBLEM, THEN YOU ARE PART OFTHAT PROBLEM.

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. ஒரு பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், அந்த பிரச்சினைக்கு நீங்களும் ஒரு காரணம்.

RECEPTION IS AN UNWARRANTED FUNCTION WHICH BRINGS UNNECESSAARY TENSION.

நபி வழி என்று சொல்வதற்கும் இல்லை. சஹாபாக்கள் வழி என்று சொல்வதற்கும் இல்லை. நம் முன்னோர்கள் வழி என்று சொல்வதற்கும் இல்லை. இது நமது தனி வழி. தெரு வழியில் நடக்கும் ஒரு புது வழி.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு போகாவிட்டால், என்ன உங்களை RECEPTION இல் காணோமே என்று கேட்கிறார்கள், முகம் சுளிக்கிறார்கள். என்ன RECEPTION போக வில்லையா உங்கள் இருவருக்கும் ஏதும் பிரச்சினையோ என்று உணர்வுகளை உசுப்பி விடுகிறார்கள். போவோம் என்று புறப்பட்டால் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தொங்கலில் இருக்கிறது. மேடும் பள்ளமும் நிறைந்த தெருக்களில் ஆட்டோ, 2 WHEELER படும் பாடு, அங்கே போனால் ஒரு ரூபாய் பெறுமதியான சாக்லேட், ஆட்டோ செலவு 60 ரூபாய்.

நண்பர்களே சிந்தித்து பாருங்கள், இந்த RECEPTION வேறு எந்த ஊரிலும் இல்லை. திருமண நிகழ்சிகளை அல்லாஹ்வின் பள்ளிவாசலில் நடத்துவதுதான் நபி வழி. இப்போது பள்ளிவாசல்கள் விரிவாக்கப்பட்டு, திருமணம் வலீமா நிகழ்சிகள் நடப்பதற்கு தோதாக இருக்கின்றன. பொண்ணை சோடிச்சு வைக்கிறோம் என்று தெரு வழியில் வைக்க தேவையா, வீட்டில் வைத்தால் யாரும் வந்து பொண்ணை பார்க்கமட்டார்களா..

எனவே இவ்வளவு பந்தல் செலவுகள், ரோடு மறிப்புகள் எல்லாவற்றுக்கும் மண வீட்டார்கள்தான் பொறுப்பு. சமூக சிந்தனை மாற வேண்டும்.

தேவை இல்லாத பட்டி மன்றங்கள், கருத்தரங்கங்கள் நடத்துகிறோம். இந்த சிறிய விஷயத்தை நாம் சரி செய்து யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் நமது திருமணங்களை நடத்த எவ்வளவோ மாற்று வழிகள் இருக்கின்றன. எல்லோரும் சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம். .

INNALLAAHA LA YUGHAYYIRU MAA BI QAWMIN HATHTHAA YUGHAYYIROO MAA BI ANFUSIHIM என்று அல்லாஹ் சொல்வதாக உலமாக்கள் சொல்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...மனசாட்சி & பொதுநல சிந்தனை....??
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [26 August 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 29710

நகராட்சி தான் பொறுப்பு. என்ற போதிலும் நமக்கும் கொஞ்சமாவது பொது நல சிந்தனை வேண்டும். செய்தியாளர் கூறியுள்ளது போல் (என்றாவது அப்பகுதியில் தீ விபத்தோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படுமாயின் அந்நேரத்தில் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.) (அல்லா நம் யாவரையும் காக்கட்டும்) முட்டிய பின் குனிவதை விட முட்டாமல் குனிந்து செல்வது புத்திசாலி தனம்.

என்றாவது அப்பகுதியில் தீ விபத்தோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படுமாயின் அந்நேரத்தில் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...தனக்கு தனக்கு,,என்று
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [26 August 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29711

முந்தைய தினம் குற்றால சுற்றுலா முடித்துவிட்டு இரவு குடும்பத்தாருடன் ஊருக்குள் 10 மணிக்கு நுழைந்தால், தீவுதெரு அடைப்பு சித்தன் தெருவழியா வந்து கீழதெரு போக திரும்புனா நடுவுல அடைப்பு. நேரா நெய்னா தெருபோயி, ரைட்டாக்க ஒடிச்சி லெப்டாக்க திரும்பி ஆட்கள அங்க இறக்கிப்போட்டு மறுதெரு வந்தா அங்கேயும் அடைப்பு.

ஒன்னரை மணிநேரமா வீடு வீடா சிரமப்பட்டு ஆட்களை இறக்கிவிட்டு போட்டு வாடகை கொடுக்க டிரைவர் முகத்தை பார்த்தேன். மூன்று நாளா இல்லாத கடுப்பு அவன் முகத்தில். ஈ ஆடவில்லை! சொன்ன வாடகைக்கு மேல் கையூட்டு கொடுத்து அனுப்ப வேண்டியதாகிப்போச்சு.

என்ன வசதி இருந்தாலும் இவர்கள் மாறப்போவதில்லை. நாளை இவர்களுக்கு இதே நிலை வருபோது ஊரை திட்டிதீர்ப்பார்கள். மொத்தத்தில் தனக்கு தனக்கு என்று வரும்போதுதான் இவர்கள் மனது கிடந்து படக்கு படக்கு என்று அடிக்கும் போலே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [26 August 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 29713

பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று நபி (ஸல்) கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.

புஹாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சிறிய இடம்,பெரிய தர்மம்,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [26 August 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29716

ஒக்க சிரிச்சா வெக்கமில்லை என்பது போல, இந்த விசயத்தில் எல்லாரும் ஒத்துபோறாங்க.

அடுத்தவன் செய்யும்பொழுது வேதாந்தம் பேசுபவன், தன வீட்டு கல்யாணம் வந்தவுடன் மாறிவிடுவது இயல்பான விஷயம். வேறு வழி இல்லை என்பது தாங்களே செய்தியில் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

முடிந்தவரை ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு இடம் விட்டு மேடை பந்தல் அமைத்து கொள்வதே இப்பொழுது சாத்தியகூராகும். சில வீடுகளில் பாதை முழுவதையும் அடைப்பதை தவிர்த்து மக்கள் நலன் கருதி, அவசர கால நிலைமைகளை மனதில் கொண்டு சிறு இடம் விட்டு அடித்தால் பெரிய தர்மமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by mohmedyounus (Muscat) [26 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29720

விசியம் என்ன இருந்தாலும் நெடு நாள் புதிர் ஒரு முடிவுக்கு வந்தது. எங்கள் பழைய வீட்டு மாடியுளும் எப்படி வளையங்கள் இருந்துது. இதுக்குத்தானா? தெளிவுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. சிந்திப்பீர் !!! செயல்படுவீர் !!!
posted by Umar Rizwan Jamali (Singapore) [26 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29721

இம்மாதம் சில நாட்கள் ஊர் வந்திருந்தபோது நானும் இந்த இடையூறை அனுபவித்தேன்.

நம் மாநகராட்சி இதற்கொரு ஒழுங்கு முறையை உருவாக்கி மக்களின் சிரமத்தை போக்க வழி செய்தால் மிக நன்று.

அத்துடன் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் இதையும் உங்கள் கவனத்தில் எடுத்து முறைப்படுத்தினால் மிக மிக நல்லது.

"பாதையில் இடராக கிடக்கும் ஒன்றை அகற்றுவது ஈமானின் கடைசி பகுதி" என்ற நாயகக் கண்மணியின் வார்த்தை இருக்க, பாதையையே இடராக மாற்றுவது எவ்வகை என்பதை புரிந்தால் நீங்களே உங்களை மாற்றுவீர்கள்.

இரு உள்ளங்கள் இன்பகரமாக வாழ வழி அமைக்கும் இத்திருமனத்திற்காக நமது இல்லங்கள் செய்யும் இந்த செயலினால் பல உள்ளங்கள் பாதிக்கும் என்றால் இது அவசியமா?

சிந்திப்பீர் !!! செயல்படுவீர் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இவைகள் நபி வழி திருமணம்?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [26 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29723

அஸ்ஸலாமு அலைக்கும் வாசகர்களே,

பாதையில் அமர்வதால் அது பாத சாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்ப்படும் என்பதை கருத்தில் கொண்டு அப்படி அமராதீர்கள் என்றும், வழியில் இடைஞ்சல் உண்டாக்குவது தவறு போன்ற ஹதீஸ்கள் உள்ளதாக பாமரனான நான் அறிகிறேன். இது பற்றியெல்லாம் நம்ம மார்க்க அறிந்த ஆலீம்கள் அறியாமலா இருப்பார்கள்?

நாம் அதிகம் அதிகம் விரும்பும் அல்லாஹுவின் பரக்கத்து கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு திருமணங்கள் குறைந்த சிலவில் நடக்கணும் என்ற நபி மொழி இருப்பதாகவும் பாமரனான நான் அறிகிறேன். இது பற்றியெல்லாம் நம்ம மார்க்க அறிந்த ஆலீம்கள் அறியாமலா இருப்பார்கள்?

இது போன்ற திருமணங்களுக்காக வழியை அடைத்து மக்களை இடைஞ்சல் செய்யும் விஷயங்களை பற்றி நம் மக்களை நம் ஆலீம்கள் தான் விழிப்படைய செய்ய வேண்டும். ஆலீம்கள் நிறைந்த நம்ம ஊரில் இப்படியான செயல்கள் நடப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான்.

வீடுகளில் இடமில்லை, வெட்டைகள் இல்லை, எல்லோருக்கும் கல்யாண மண்டபங்களில் நடத்த முடியுமா? இது போன்ற சாக்கு போக்குகளை இந்த இணையதளமும் சேர்ந்து சரி காண்பதும் வேதனைக்குரிய விஷயம்தான்.

நபி வழி படி திருமணங்கள் நடத்தினால் நிச்சயமாக இந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்பதே என்னுடைய கருத்து.

செய்தியில் குறிப்பிட்ட படியுள்ள திருமணங்களுக்கு, அது நபி வழிக்கு மாற்றமாக இருப்பின், நம்மால் அதை தடுக்க இயலவில்லை என்றாலும் அதில் பங்கெடுக்காமல் இருப்பதே மேலானது என்பதே என்னுடைய கருத்து.

இப்படி நிறைய பேர்கள் பங்கெடுக்காமல் ஒதுங்கும்போது தான் இந்த மாதிரியான திருமணங்கள் குறையும். அதை விட்டு விட்டு திருமணத்திற்கும் பங்கெடுத்து, நல்லா சாப்பிட்டும் விட்டு, பிறகு இது மாதிரியான செய்திகள் என்பது வேடிக்கையாக தான் உள்ளது.

நபி வழி திருமணங்கள் அதிகமதிகம் நடை பெற பிரார்த்தித்த வண்ணம்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல் சாலை,சென்னை-86) [26 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29728

எத்தனை எழுத்தாளர்கள் எழுதினாலும் துண்டு பிரசுரங்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான்.

நகராட்சி ஊழியர்க்கு தாளம் சோறு தணமும் கொடுத்தால் முளு ரோட்டையும் அடைத்துவிடலாம் என்ற அவல நிலையும் உள்ளது. நம்மிடமும் குறைகள் உள்ளன. தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனோபவம்.

மற்ற ஊர்களைப் போல் பள்ளிகளிலும் திருமண மண்டபத்திலும் திருமணம்கள் நடந்தால் தவிற இந்த பிரச்சினைக்கு தீர்உ கானமுடியும் இனி வரும் காலங்களில் இரண்டு/மூண்று சக்கரவாகனம் களுக்காவது வழிவிட்டு பந்தல் அமைப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அனைவருக்கும் இதில் பொறுப்பு உண்டு !!!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [27 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29732

நமதூரில் தற்போது நடைபெற்றுவரும் திருமணங்கள் பெரும்பாலும் ரோட்டில்தான் நடைபெறுகிறது . அவ்வாறு நடைபெறும் போது ரோட்டின் இருபக்கமோ , பலபக்கமோ அடைத்து , நிகாஹ் மஜ்லிஸ், வலீமா விருந்து , பெண் ஜோடிப்பு, கைபிடித்துவிடல் ,தாலிகட்டு போன்ற நிகழ்சிகள் நடைபெறுகிறது .

ரோட்டில் நடைபெருவதர்க்கான காரணம் தற்போது முன்னைய காலங்களை போல் வெட்டைகள் இல்லை . எல்லாமே வீடுகளாக ஆகிவிட்டது என்ற காரணங்கள் கூறப்படுகிறது . இவைகள் முற்றிலும் உண்மையே ! அதே நேரத்தில் பள்ளிகளில் இவ்வித நிகழ்சிகள் அனைத்தையும் நடத்த முடியாது . அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் !

நிகாஹ் நிகழ்ச்சியை வைக்கலாம் , வலீமா விருந்துகளை வைக்கலாம் . எல்லாப் பள்ளிகளிலும் விசாலமான இடவசதி இருக்கும் என சொல்லமுடியாது .

அடுத்து பள்ளிவாசலில் இவ்வித நிகழ்சிகள் வைக்கும்போது பள்ளிக்குரிய (ஹுர்மத் ) கண்ணியங்கள் பேணப்பட வேண்டும். உள்பள்ளியில் வைக்கும்போது இன்னும் கவனமாக அதன் ஒழுங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் .

நிகாஹ் மஜ்லிஸ் நடக்கிறது என அங்கு ஊர் பலாயிகளை, சிரிப்பு, தமாஸ்களை பேசிக்கொண்டு இருக்கக்கூடாது !

உள்பள்ளி (வக்ப்) ,வெளிபள்ளி (வக்ப் அல்லாத ) என்ற அழகிய முறையை நமதூரில் செயல்படுத்தியது சரஹுப்புலி , மாதிஹுர்ரசூல் அல்லாமா அஸ் செய்கு சதகதுல்லாஹ் அப்பா காஹிரி அவர்கள்தான் என்பது வரலாற்று உண்மையாகும் !

நிகாஹ் மஜ்லிஸ் பள்ளிவாசலில் வைத்து நடத்துவது சுன்னத் வழிமுறைதான்! ஆனால் பள்ளிவாசலின் கண்ணியங்கள் பேனப்படும்போதுதான் அந்த சுன்னத் செயல்படும்

அதற்கு மாறாக இருந்தால் பள்ளியைவிட மற்றைய இடங்கள்தான் (ரோடு , மண்டபம், இதரவை) சிறந்தது .

ஆனால் வருங்காலங்களில் இன்னும் இட நெருக்கடி ஏற்படுவது உண்மை ! ஆகவே ! ரோட்டில் தான் நமது நிகழ்ச்சிளை நடத்த வேண்டும் என நினைப்பவர்கள் பாதைக்குரிய உரிமையை கண்டிப்பாக பேண வேண்டும் !! இதில் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக்கொள்ள வேண்டும் !

எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய பேனுதல்களை நம் யாவருக்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. makkalay theeirvu
posted by Hameed sulthan (Abu dhabi) [27 August 2013]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 29733

ITHARKU MAKKALAY MAKKALUKAGA THEEIRVU KAANA VENDUM.

ALLAH NAMAKU OTRUMAYAI ATHIGAPADUTHUVANAGA AAMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. மனமிருந்தால் மார்ர்கமுண்டு.
posted by Abdul Wahid S. (kayalpattinam) [27 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29743

நான்கு வருடங்களுக்கு முன் மரைக்கார் பாளி தெருவில் இரண்டு வீடுகளில் கல்யாணம். இரண்டு வீட்டாரும் அவர்கள் வசதிகேற்ப இரண்டு பக்கமும் ரோட்டை அடைத்து விட்டார்கள். இரண்டு வீட்டிற்க்கும் நடிவிலுள்ள ஒருவீடைச் சார்ந்த ஒரு வயதான பெண்மணிக்கு தீடீரென்று மாரடைப்பு. K M T மருத்துவமனைக்கு போன் செய்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆனால் ரோடு இருபக்கமும் அடைபட்டிருந்த காரணத்தினால் உயிருக்காக போராடும் அந்த மூதாட்டி வீடு வரை ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை.

வேறு வழியில்லாமல் சொளுக்கார் தெருவிற்கு ஆம்புலன்சை வரச் சொல்லி அந்த மூதாட்டியை Stretcher யில் தூக்கி முடுக்கு வழியாக 5-6 வீட்டைக் கடந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினோம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது.

--------------------------------------------

அரசாங்கமே சட்டம் போட்டு தீர்க்க முடியாத இந்த பிறர்ச்சனையை ஒரே நாளில் தீர்த்து விடலாம் ஆலிம்கள் நினைத்தால். இவர்கள் ஒன்றுபட்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும். என்ன அந்த அபூர்வ தீர்மானம்?

"பந்தல் போட்டு ரோட்டை அடைக்கின்ற கல்யாணங்களில் நாங்கள் கலந்து கொண்டு நிகாஹ் செய்து வைக்க மாட்டோம்".

செய்வார்களா இவர்கள்?

மனமிருந்தால் மார்கமுண்டு.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. சிக்கன திருமணங்கள் நடைபெற வேண்டும்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [27 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29745

ஊர் பெரிதாகிவிட்டது. மக்கள் தொகை அதிகரித்து விட்டது. எனவே திருமணத்திற்கு அழைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. நம் ஊரில் இவ்வாறு தெருவை அடைப்பது இன்று நேற்று நடப்பதல்ல. காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அப்போது குறைந்த வழிப்போக்கர்கள். அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே இடையூறாக தெரியவில்லை. இப்போதோ அதிகமான வழிப்போக்கர்கள். அதிகம் பேருக்கு இடையூறாக தெரிகிறது.


முன்பு குறைந்த மக்கள் தொகை, குறைந்த அழைப்பாளர்கள். அதிக வெட்டை வெளிகள். எனவே வீட்டு மாடிகள் மற்றும் அருகாமையில் உள்ள வெட்டை வெளிகளை பயன்படுத்தியும் , சிலர் குறுகிய நேரத்திற்கு ரோட்டை அடைத்தும் தங்கள் திருமண நிகழ்சிகளை முடித்துக்கொண்டனர்.

தற்போது நேர் எதிர்மறை. அதிக மக்கள் தொகை. அதிக அழைப்பாளர்கள். குறைந்த வெட்டை வெளிகள். நெருக்கடி நிறைந்த சாலைகள். அதிக நேரம் அடைக்க வேண்டிய சூழ்நிலை. அதனால் அதிக மக்களின் பொல்லாப்பு. இதுதான் காரணம்.

முன்பு திருமணங்களில், நிகாஹ் நிகழ்ச்சியில் பெரும்பாலானவர்களுக்கு பொட்டலம் போடும் பழக்கமும், குறைந்த எண்ணிக்கையிலான மிக நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே விருந்துண்ணவும் அழைப்பு இருக்கும். இப்போது பெரும்பாலான திருமணங்களில் பொட்டலம் போடும் பழக்கம் முற்றிலுமாக நின்று, அனைவருக்கும் நிகாஹ் முடிந்த கையோடு சாப்பாடு.. விளைவு, அதிக இடநெருக்கடி. பெரும் பணச்செலவு.

முன்பு 500 பேர்வரை விருந்து பரிமாறும் தகுதிபடைத்த திருமணங்கள், இப்போது 4000/ 5000 பேர்வரை அழைக்கும் நிலை. இவைகள்தான் இட / பண நெருக்கடிக்கு காரணங்கள்.

ஒரு சகோதரர் குறிப்பிட்டதுபோல, உள்ளூர் வெளியூர் மக்கள் என திருமண வீட்டார் பாகுபாடு பார்ப்பதில்லை. வெளியூர் நபர்களுக்கு நம் ஊரின் (இருவர் / மூவர் ஒரே தாளத்தில் அமர்ந்து சாப்பிடும்) சூழல் பழக்கமிருக்காது என்பதால், அந்த ஏற்பாடு. மேலும் உள்ளூர்/ வெளியூர் மக்கள் சாப்பாட்டில் ஏற்படும் கூட்டு (பங்கு சேருதல்) மாற்றம் காரணமாகவும் இந்த நிலைமை. இது பாகுபாடு காரணமாக அல்ல.

மக்கட்தொகை / விருந்தாளிகளின் அதிகரிப்பின் காரணமாக, நம் பள்ளிவாசல்கள் இந்த அதிக எண்ணிக்கையிலான விருந்துண்ணுபவர்களை கையாள முடியாத நிலை. இதன் காரணமாக மிகுதியான திருமணங்கள் பள்ளிவாசலில் தற்போது நடைபெறுவதில்லை.

இதற்க்கு மாற்றுவழி திருமண மண்டபங்கள்தான். நமது ஊரில் போதிய எண்ணிக்கையில் நடுத்தர திருமணம் மண்டபங்கள் இல்லை. தற்போதுள்ள திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் , அதிக அளவு நபர்கள் கையாளக் கூடியதாக இருக்கிறது. நடு வர்கத்தினருக்கு இது உகந்ததாக இல்லை. காரணம் அழையா விருந்தாளிகளும் அதிகம் வருகை புரிவாதால், அதிக சாப்பாட்டுச் செலவாகிறது. எனவே செல்வந்தர்கள் முன்னுதாரணமாக குறைந்த செலவில் திருமணங்கள் நடத்தி, எளியவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதைபார்த்து எளியவர்களும் வெட்கப்படாமல் சுருக்கமாக திருமணங்களை நடத்த முனைவர்.

முடிந்தவரை , பள்ளிவாசல்களிலும், நிகாஹ் மஜ்லிஸ்களிலும் திருமண வைபவங்களை நடத்தி முடிக்க வேண்டும். திருமணத்திற்காக வீதிகளை அடைப்பதை தடை செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் நாம் ஆலிம்களை இழுக்கக்கூடாது. ஆலிம்களை நாம் குறை சொல்லக்கூடாது. ஏனெனில் அவசியமான மார்க்க விஷயங்களுக்கே நாம் அவர்களை மதித்து அழைப்பதில்லையே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by omar abdullatheef (kayal) [27 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29749

our municipality can pass the law (if it is possible by municipality autonomous) to strictly impliment to ban this attrocites functional activity , violation can be treated with heavy fine (failure can cause to cut water, electricity connection)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by T.S.A.Aboothahir (chennai) [28 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29757

சமூகக் குற்றங்களை சட்டங்களால் களைய முடியாது. மனமாற்றமே தேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தொல்லை எக்ஸ்ப்ரஸ்...? (?!)  (27/8/2013) [Views - 3237; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved