காயல்பட்டினத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் மாத இரவுகளில் தராவீஹ் - சிறப்புத் தொழுகையின்போது திருமறை குர்ஆனின் வசனங்கள் பகுதி பகுதியாக ஓதப்பட்டு, ரமழான் 27 அல்லது 29ஆம் நாளில் முழு குர்ஆனும் ஓதி தமாம் செய்யப்படும்.
இந்த தமாம் நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பள்ளிகளில் அடுத்தடுத்த தினங்களில் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு தயாரிக்கப்பட்டு, ஸஹர் - நோன்பு நோற்பு உணவாக அந்தந்த ஜமாஅத் மஹல்லாவாசிகளுக்கு விருந்துபசரிப்பு செய்யப்படும்.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் சார்பில், இன்று (ஆகஸ்ட் 08) நள்ளிரவில் தமாம் சாப்பாடு எனும் ஸஹர் உணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது.
அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு பரிமாறப்பட்டது.
![](/newsimg/98201319298.jpg)
![](/newsimg/98201319312.jpg)
![](/newsimg/98201319323.jpg)
![](/newsimg/98201319335.jpg)
![](/newsimg/98201319348.jpg)
![](/newsimg/98201319361.jpg)
ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகத்தினர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |