Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:07:49 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11540
#KOTW11540
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 9, 2013
நோன்புப் பெருநாள் 1434: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5160 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை, காலை 07.30 மணியளவில் நடத்தப்பட்டது. ஏ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் தொழுகையை வழிநடத்தினார்.















அதனைத் தொடர்ந்து, “நோன்பின் படிப்பினைகள்” எனும் தலைப்பில், ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ உரையாற்றினார்.

நிகழ்வுகள் அனைத்திலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட - நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஹாஜி தாஹா, ஹாஜி எஸ்.எம்.மூஸா, மரைக்கார் ஆலிம், ஹாஜி எல்.எஸ்.அன்வர், டாக்டர் அபுல்ஹஸன் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

தொழுகை நிறைவுற்ற பின்னர், ஏழைகள் துயர்துடைக்கும் நலநிதிக்காக ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 33 ஆயிரத்து 565 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 41 ஆயிரத்து 815 தொகையும் என மொத்தம் 75 ஆயிரத்து 380 ரூபாய் தொகையும், தங்க மோதிரம் ஒன்றும் நன்கொடையாகப் பெறப்பட்டது.





தகவல்:
S.ஷம்சுத்தீன்
தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை


[கூடுதல் தகவல், படங்கள் இணைக்கப்பட்டன @ 15:04 / 09.08.2013]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Wuji , Hebei.) [09 August 2013]
IP: 61.*.*.* China | Comment Reference Number: 29333

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29337

அனைவர்களுக்கும் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

கிருபை உள்ள வல்ல அல்லாஹ், நம் அனைவர்களின் பாவங்களை மன்னித்து, நம்முடைய நோன்பை அங்கீகரித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்திற்கு அல்-ரய்யான் என்ற வாயில் வழியாக நுழையும் பாக்கியத்தை அருள்வானாக.

கடந்த ரமலான் மாதம் முழுவதும் பல நன்மையான காரியங்களும், அதிக வணக்கங்களும், குரானின் தொடர்பும், தான தர்மங்கள் செய்தும், வீணானா விசயங்களை தவிர்த்தும் வந்தோம். இதை வல்ல ரஹ்மான் ஏற்றுக்கொண்டு, இந்த நல்ல செயல்களை மற்ற காலங்களிலும் ஆயுள் வரை தொடர அருள் புரிவானாக.

பல அம்மணிகளின் சில ஆதங்கங்கள்.... தொழுகையை அதிகம் நீட்டாமல் சிறிய சூராக்களை ஓதும் படியும், இயலாத பெண்மணிகளுக்காக சேர்கள் ஏற்பாடு செய்யும் படி கூறுகின்றார்கள்.

இன்றைய தொழுகையில் நீண்ட சூரா, அதிக நேரம் நிற்க முடியாமல் கஷ்டம், அதிக சூடு, குழுந்தைகளின் அழுகுரல்கள் என்று சிரமம் இருந்ததாமே? கவனத்தில் கொள்ளவும். அனைத்தையும் வல்ல ரஹ்மான் நன்கு அறிந்தவன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29342

பெருநாளும் ஒரே நாள்தான், பெருமையும் ஒரே நாளில்தான். ஈத் திருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...நோன்புப் பெருநாள் தொழுகை
posted by Ismail Sufi (Muscat) [09 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29345

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சார்பில் நமதூர் கடற்கரையில் இன்று காலை பெருநாள் தொழுகை நடந்த காட்சிகளை தங்கள் இனைய தளத்தின் மூலம் பார்த்தேன்.

அதில் ஐந்தாவது புகைப்படத்தில் சிலர் செருப்புகளை தங்கள் தலை பாகத்திற்கு முன்பாக வைத்து சுஜூது செய்யும் காட்சியை கண்டேன். இது தவிர்க்கப்பட வேண்டும். (ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம்.)

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார், சவுதி அரேபியாவில் இருந்து தெரிவித்த கருத்துகளையும் கவனத்தில் எடுத்து கொள்வது நல்லதுதான். நன்றி.

அனைவருக்கும் ஈது பெருநாள் வாழ்த்துக்கள்.

தகவல்
இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by தேக் (kayalpatnam) [10 August 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 29371

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சாளை S.I.ஜியாவுத்தீன் காக்க அவர்களுக்கு வழமையாக நாம் தொழுகைக்கு விரிக்கும் விரிப்பை விட அதிகமான விரிப்புகள் விரித்தோம் சேர்கள் அதிகம் போடப்பட்டது மக்கள் அதிகம் வந்ததால் பற்றாக்குறை குறைகள் எதுவாக இருந்தாலும் மனிதர்கள் என்ற முறையில் எங்களை சேரும் புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் வரும் காலங்களில் கூடுதல் கவனம் எடுத்துகொள்வோம் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Cnash (Kayalpatnam) [11 August 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 29385

ஈத் முபாரக்! அல்ஹம்துலில்லாஹ் நானும் இக்கூட்டத்தில் ஒருவனாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றினேன். சகோ. ஜியாஉதீன் காக்கா சொன்னது போல் கண்ணியத்திற்குரிய இமாம் அவர்கள் தொழுகையில் kaaff சூராவையும் இரண்டாம் நிலையில் இக்தரபா சூராவையும் மிக நீண்ட நேரம் நீட்டி தோழா வைத்து ஒரு சுன்னத்தை நடை முறை படுத்துகிறேன் என்று பின் நின்று தொழுத பலரை குறிப்பாக பெண்கள் குழந்தைகள் வயோதிகர்கள் எல்லோரையும் கடுமையான வெயிலில் 20 நிமிடங்கள் தொழுகையில் நிற்கவைத்து சிரமம் கொடுத்ததை நாங்களே உணர்ந்தோம். பெண்கள் பகுதியில் ஒரு பெண் மயக்கமிட்டு விழுந்ததாகவும் கேள்விப்பட்டோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இமாம் பின் நின்று தொழும் மமூம்களின் நிலையையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஓதும் போது எண்ணற்ற இடங்களில் குலைவு ஏற்பட்டது அதை சரி செய்யவே பல நேரங்களை எடுத்து கொண்டார். பின்பு குத்பா உரை யாற்றியவர் இந்த சூராக்களை ஓதுவது நபி வழி என்று சொன்னாரே தவிர .. அதே நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழ வைக்கும் போது குழந்தையின் அழு குரல் கேட்டு தொழுகையில் ஒத வேண்டியதை அக்குழந்தையின் தாயின் மனநிலையை கருத்தில் கொண்டு சுருக்கிய நடைமுறையையும் ஒரு சஹாபி ( பெயர் தெரியவில்லை) இது போன்று தொழ வைத்ததை மக்கள் புகாராக சொன்னபோது தொழவைத்த அந்த சஹாபியை பார்த்து நீகள் மார்க்கத்தில் குழப்பம் செய்கிறீர்களா என்று கண்டித்த சம்பவங்களை ஏனோ சொல்ல தவறிவிட்டார் . இஸ்லாம் எளிய மார்க்கம் என்று நாம் பிரச்சாரம் செய்து விட்டு நாமே சிரமமாகுவது போல் உள்ளது. உரியவர்களின் கவனதிற்கு எடுத்து செல்லுங்கள் அல்லாஹ் அருள் புரிவான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved