Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:33:27 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11539
#KOTW11539
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 9, 2013
நோன்புப் பெருநாள் 1434: குவைத் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2620 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குவைத் நாட்டில் ஆகஸ்ட் 08ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

அங்குள்ள காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்திக்குறிப்பு:-

குவைத் நகரில் 28ஆம் நோன்பு திறந்த உடன் அந்த இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது, ஏனெனில், அந்த இரவே பெருநாள் இரவாக அமையுமோ என்று பெரும் வருத்ததுடன் அனைவரும் காணப்பட்டனர். குவைத் மற்றும் சஊதியில் இருந்து வந்த செய்திகள் எல்லாம் - நாம் நோன்பு பிடித்தது ஒருநாள் தாமதம் என்றும் இன்று 29 முடிந்து இன்று இரவே பெருநாள் என்றும் பரவலாக செய்திகள் பரவ ஆரம்பித்தது.

28 நோன்புகளோடு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒரு நோன்பு "கழா" செய்து பெருநாள் முடிந்த உடன் பிடித்து கொள்ள வேண்டும் என்று டிவி மற்றும் பத்திரிகைகள் முலமும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. எனவே, 28ஆம் நோன்பு திறந்து விட்டு பெரும் கவலையோடு நமது காயலர்களும் சரியான தகவலுக்காக காத்து இருந்தனர்.

அல்லாஹ்வின் பேரருளால், இரவு சுமார் 08.00 மணி அளவில் இஷா தொழுகைக்கு முன்பாகவே, “இன்று நோன்புதான்! பெருநாள் இல்லை!!” என்று செய்தி குவைத் மற்றும் சஊதியில் இருந்து வந்தது.

நமது காயலர்கள் மட்டுமின்றி அனைவருமே பெரும் மகிழ்ச்சியோடு இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்காக விரைந்தனர்.

குவைதில் வாழும் காயலர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி என்னவெனில், மராமத்து பணிகள் செய்து கொண்டு இருந்த காரணத்தினால் கடந்த ஆண்டு தராவீஹ் தொழுகை நடைபெறாமல் இருந்த குவைத் பெரிய பள்ளியான - மஸ்ஜிதுல் கபீரில், இவ்வாண்டு மிகப்பிரமாண்டமாக, அழகிய வடிவமைப்புகளுடன் கட்டி முடித்து, திறந்து இருப்பதுதான்.

இந்த பள்ளியை, உள்பள்ளி மற்றும் வெளி பள்ளி என்று பெரிய அழகிய வடிவமைப்புடன் கட்டி முடித்திருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள இந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தொழும் வசதியுடன் அமைந்துள்ளது. தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகையின்போது பள்ளி மக்கள் திரளால் நிரம்பி வழிகிறது. நமது காயலர்களும் இந்தப் பள்ளிக்கு சென்று இறையை வணங்கி மகிழ்கின்றனர்.







மேலும் குவைதில் அதிகமான காயலர்கள் இருக்கக்கூடிய மாலியாவில் உள்ள முத்தண்ணா காம்ப்ளெக்ஸ் அருகில் பழமை வாய்ந்த ஒரு பள்ளி உள்ளது. அதில் 80 வயதுக்கும் மேலான சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவர் (நம்மூர் பாஷையில் “அப்பா”) இமாமாக உள்ளார்கள், அவர்கள் சுறுசுறுப்புடன் தராவிஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுக வைப்பதைப் பார்பதற்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். நமது காயலர்கள் இந்தப் பள்ளியிலும் தராவிஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுது இறையை வணங்கி மகிழ்கின்றனர். அன்பாக இந்த பள்ளியை “அப்பா பள்ளி” என்று அழைக்கின்றனர்.

மற்ற பகுதியில் உள்ள நமது காயலர்கள் ஆங்கங்கே உள்ள பள்ளிகளில் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுது இந்த புனித நோன்பை சிறப்பாக நிறைவுபடுத்தினார்கள்.

புதன்கிழமை நோன்பு 29 முடிவில் சுமார் 07.00 மணியளவில், ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பெருநாள் என்று அறிவிக்கப்பட்டது.

அது முதல் நமது காயலர்களிடம் பெருநாள் கொண்டாட்டம் களை கட்டியது. வியாழன் காலை 06:30 மணி அளவில், ஷர்க் எனும் இடத்தில் உள்ள "மஸ்ஜிதுல் முதவ்வா''வில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் நமது காயலர்களில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தொழுகையைத் தொடர்ந்து தமிழ் பயான் நடைபெற்றது.



அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி, ஒருவரையொருவர் கட்டித் தழுவி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.









பின்னர், அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி பெருநாள் காலை உணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது. சுவையான கறி, பரோட்டா, கோலியாப்பம், இடியாப்பம், ஜவ்வரிசி, வட்டிலியாப்பம் ஆகியன அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

மதிய உணவாக சுவையான நெய்ச்சோறு, கறி, கத்திரிக்காய் - மாங்காய் பருப்பு, சிக்கன் 65 ஆகியன சூடாகவும், சுவை - மணத்துடனும் பரிமாறப்பட்டன.




இவ்வாறு, குவைத் காயலர்கள் மூலம் பெறப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
Al-ghanim MT Abul Hassan
Exchange MKT Mohideen Ibrahim Sahib


படங்கள்:
Heisco Mohideen Thamby
KOC Buhary


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved