Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:34:29 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10241
#KOTW10241
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 20, 2013
இன்று பொது வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3246 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வங்கிகள் தனியார் மயம், விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதன், வியாழன் (பிப்ரவரி 20, 21) ஆகிய இரு நாள்கள் (48 மணி நேரம்) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ், வங்கித் துறை, வருமான வரித்துறை, தபால் துறை, கலால், சுங்கம், கப்பல், பாதுகாப்புத் துறை, மத்திய கணக்குத் துறை, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தைத் தவிர பிற போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அனைத்தும் அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அனைத்து பஸ்களும் இயக்குவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த பொது வேலைநிறுத்தத்தில் ஆளும் கட்சி தொழிற்சங்கமான -அண்ணா தொழிற்சங்கப் பேரவை- மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போக்குவரத்துச் சங்க ஒரு பிரிவு, ஐ.என்.டி.யு.சி. ஒரு பிரிவு ஆகியவை தவிர பிற போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அனைத்தும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் 1.35 லட்சம் நடத்துநர், ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர். தொழில்நுட்ப ஊழியர்கள் மட்டும் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.

இதில் அண்ணா தொழிற்சங்க பேரவையில் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களைக் கொண்டு பஸ்களை இயக்கினாலும், மீதமுள்ள 85 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அந்தந்த தொழிற்சங்கங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. அவ்வாறு 85 ஆயிரம் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றால், தமிழகம் முழுவதும் பாதிக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்காத நிலை உருவாகும்.

சென்னையைப் பொருத்தவரை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 19,600 ஓட்டுநர், நடத்துநர்கள் உள்ளனர். தொழில்நுட்ப ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள 3,600 பஸ்களில், 2000 பஸ்கள் அளவுக்கு புதன், வியாழக்கிழமைகளில் இயங்காத நிலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது

இதுகுறித்து போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் கூறியது: அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட மேலும் சில சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதுபோல் எந்த சங்கத்திலும் சாராமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊழயர்கள் உள்ளனர். மேலும், விடுமுறையில் உள்ளவர்கள் மற்றும் ரிசர்வ் தொழிலாளர்கள் அனைவரையும் இரு நாள்கள் முழுமையாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், அதிக அளவில் பாதிப்பின்றி பெரும்பாலான பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றனர். சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்கள் எந்தவித பாதிப்புமின்றி இயங்கும் என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கும் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட வங்கி சீர்த்திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். கிராமப்புற வங்கி கிளைகளை மூடக்கூடாது. தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

அனைத்து வங்கிகளிலும் உள்ள மூன்று லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இவ்வாறு முதலீடு செய்யும்போது, அந்த தொகையை சுரண்டுவதற்கான வாய்ப்புள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சரவையில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு அனைத்து வங்கி தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்ட மசோதாவால் தனியார் வசம் வங்கிகள் செல்லக்கூடும். இதனால், கிராமப்புற மக்களுக்கு கிடைக்க வேண்டிய வங்கிச் சேவைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று தொழிற்சங்கத்தினர் கருதுகின்றனர்.

வேலை நிறுத்தம் காரணமாக மத்திய அரசு அலுவலகப் பணிகள் முடங்கும் ஆபத்து உள்ளது. வங்கிப் பணிகளும், இன்சூரன்ஸ் பணிகளும் கடுமையாகப் பாதிக்கும். ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட அனைத்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். காசோலை பரிவர்த்தனை, பணப் பட்டுவாடா, இதர வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

இதேபோல தபால் சேவை, தொலைத் தொடர்பு துறை சேவையும் பாதிக்கப்படக்கூடும். சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் ஊழியர்கள், கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள், மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வேலை நிறுத்தமா நாட்டின் முன்னேற்றம் நிறுத்தமா?
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25639

எல்லாம் விலா வாரியாக சொன்னீர்கள். ஆனால் இந்த வேலை நிறுத்தத்தால் இந்த நாட்டின் உயிர்நாடியான் முன்னேற்றம் எவ்வளவு பின் தள்ளிப் போகும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இந்த அரசுக்கு வருவாய் இழப்பு, எத்தனை மனித நாட்கள் இழப்பு இந்த இழப்புகளை சரி செய்ய இன்னும் எத்தனை கோடிக்கு இந்த அரசு புதிய வரிகளை விதிக்கும்.எத்தனை கோடி மக்கள் இதனால் இன்று அவர்கள் அன்றாட அலுவல்களை கவனிக்க முடியாமல் திண்டாடுவார்கள் என்பதையும் புள்ளி விவரத்துடன் சொல்லி இருந்தால் வேலை நிறுத்தம் செய்யும் அறிவு ஜீவிகள் புரிந்துகொள்வார்களே.

வேலை இல்லை, அதனால் அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லை என்று எத்தனை படித்த இளைஞர்கள் இந்த நாட்டில் கை பிசைந்து கொண்டு இருக்கிறார்கள் விரக்தியின் விளிம்புக்கு போய் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படி இருக்க, வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு சொகுசு பங்களாக்கள், வாகனங்கள், குளிரூட்டப் பட்ட அறைகள், தொலைபேசி வசதிகள், அறுசுவை உணவை நினைத்த இடத்தில நினைத்தமாதிரி உண்டு கழிக்க உணவகங்கள்..அப்பப்பா...இவ்வளவு வாய்ப்பை கொடுத்த இறைவனை அவனுக்கு நன்றி சொல்லாமல், இப்படி ஆட்டம் போட்டால் நாடு உருப்படுமா..உங்கள் நிலை கொஞ்சம் மாறினால் நீங்கள் எங்கே போய் விழுவீர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்ப்பார்களாக..

இஸ்லாம் மிக அழகாகவே சொல்கிறது. உங்களுக்கு வசதி வாய்ப்பில் மேலே உள்ளவர்களை பார்க்காதீர்கள் உங்களுக்கு கீழே உள்ளவர்களை பார்த்து நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினால் உங்களுக்கு அவன் இன்னும் அதிகமாகவே தருவான்..என்ன இரத்தின சுருக்கமான அறவுரை.

நாம் 22ம் நூற்றாண்டை நோக்கி வேக நடை போடுகிறோமா, 12ம் நூற்றாண்டை நோக்கி பின் செல்கிறோமா? இந்திரா காந்தி அவர்களின் emergency ஆட்சி காலத்தை நினைத்து பார்க்கிறேன். ஜனநாயகம் என்ற போர்வையில் இந்த அநீதி இந்த நாட்டில் நடக்க ஆட்சியாளர்கள் அனுமதிக்கலாம, நீதி மன்றங்கள் இவற்றுக்கு தடை போடவேண்டாமா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அழையா வழிபாடி! (?!)  (20/2/2013) [Views - 3452; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved