Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:16:34 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10236
#KOTW10236
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 19, 2013
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்ட கால விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஏப்.02 அன்று கவன ஈர்ப்புப் பேரணி! இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2569 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை ஏற்று நாடு தழுவிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும்...

இந்தியா முழுவதும் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும்...

நீண்ட கால விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்...

என்ற முப்பெரும் கோரிக்கை களை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணிகளை நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 14.30 மணி வரை திண்டுக்கல் பேகம்பூர் மதுரை ரோட்டில் உள்ள வி.வி.ஆர்.காம்ப்ளக்ஸ் மதீனா பேலஸ் திருமண மஹாலில் நடைபெற்றது.

அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மவ்லானா கே.கே.ஓ.சுலைமான் மன்பஈ இறைமறை ஓதி, நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

பின்னர் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மவ்லவீ ஏ.எஸ்.எம்.முஹம்மது ஹாரூன் தாவூதி துஆ ஓதினார்.

வரவு - செலவு, ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்:

10-9-2009 முதல் 11-2-2013 வரையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கரும், 11.09.2010 முதல் 31.12.2012 வரையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் ஆகியோர் சமர்ப்பிக்க, கூட்டம் அவற்றை ஒருமனதாக அங்கீகரித்தது.



சட்டதிட்ட துணைவிதி குழு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட திட்டங்களை தமிழில் மொழிபெயர்க்க மாநில செயலாளர் வழக்குரைஞர் வெ.ஜீவகிரிதனை அமைப்பாளராகக் கொண்டு, மாநில துணைத் தலைவர் வடக்குகோட்டையார் வ.மு.செய்யது அஹமது, தி டைம்ஸ் ஆஃப் லீக் துணை ஆசிரியர் பேராசிரியர் கே.டி.கிஸர் முஹம்மது ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் இப்பணியை நிறைவு செய்யுமாறு அவர்களிடம் கூட்டம் வேண்டுகோள் விடுத்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில கிளைக்கு சட்ட திட்ட துணை விதிகள் தயாரிப்பதற்கு மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹானை அமைப்பாளராகக் கொண்டு, அக்கட்சியின் மூத்த தலைவர் எழுத்தரசு ஏ.எம்.ஹனீப், மாநிலச் செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.துராப்ஷா, நாகை வடக்கு மாவட்டத் தலைவர் கிளியனூர் அபுல்ஹசன், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கம்பம் சாகுல் ஹமீது ஆகியோரடங்கிய குழு அமைக்கப்பட்டது.

முஸ்லிம் யூத் லீக் - முஸ்லிம் மாணவர் பேரவை:

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மார்ச் 02, 03 தேதிகளில் நடைபெறவுள்ள முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை சென்னை மண்டல பயிலரங்கில் நிறைவேற்றப்பட்ட, `கல்விக் கடனை எளிமைப் படுத்த வேண்டும், மாணவர் கல்விக் கடனுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்பட வேண்டும், பயங்கரவாதம், மது, பாலியல் வன்கொடுமை, திரைப்பட தீவிரவாதம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுவிடாமல் இளைய சமுதாயத்தைக் காப்பதற்கு எம்.எஸ்.எஃப். விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல் - ஆகிய தீர்மானங்களை இக்கூட்டம் அங்கீகரித்தது.

பின்னர், அனைத்து மாவட்டங்களின் சார்பிலும், அவற்றின் நிர்வாகிகள் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்கட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப் தீர்மானங்களை முன்மொழிய, தக்பீர் முழக்கத்துடன் அனைவரும் தீர்மானங்களை அங்கீகரித்தனர்.



நிறைவேற்றப்பட்ட இயக்கத் தீர்மானங்கள் வருமாறு:-

கட்சியை வலிமைப்படுத்தல்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மத்திய அமைச்சர் இ. அஹமது சாகிப், பொதுச்செயலாளராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொருளாளராக பி. குஞ்ஞாலிகுட்டி ஆகியோரும் தேசிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டதற்கு இப்பொதுக்குழு மனமார்ந்த பாராட்டு தலையையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த சிறப்பான தேசிய தலைமையின் வழிகாட்டுதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலிமைப்படுத்தும் வகையில் அதன் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி அமைப்புக்களை தமிழகத்தின் அனைத்து ஊர் களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைத்திட வேண்டுமென அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

ஏப்ரல் 02-ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, கல்வி - வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு நாடு தழுவிய அளவில் வழங்க வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் முழுமையான மது விலக்கை அமல்படுத்த கோரியும், நீண்ட கால விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும் அனைத்து மாவட்ட, மாநில தலைநகர்களிலும் கவன ஈர்ப்பு பேரணிகளை வரும் ஏப்ரல் 02ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடத்துவது என்றும், இப்பேரணியின் முடிவில் மாநிலத் தலைமையால் தயாரித்து அனுப்பப்படும் மனுவை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பிப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்தது.

மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் நிறுவன தின விழா:

மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின மாகும், அன்றைய தினம் தமிழ கத்தின் அனைத்து ஊர் களிலும் பச்சிளம் பிறைக் கொடிகளை ஏற்றி விழா நடத்துமாறு அனைத்து பிரைமரிகளையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு, இயக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதர தீர்மானங்கள்:

அதன் தொடர்ச்சியாக, பருவ மழை பொய்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கல்,
வேகமாக உயர்ந்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தல்,
வன்முறை, பாலியல் வன்முறை, திருட்டு போன்ற பல்வேறு வகையான குற்றச் செயல்களுக்கும் அடிப்படையான மது ஒழிக்கும் வகையில், இந்தியா முழுக்கவும் - அதற்கு முன்மாதிரியாக துவக்கமாக தமிழகத்திலும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தல்,
திண்டுக்கல் - சபரிமலை வழித்தடத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அகல ரயில் பாதையை விரைவாக நிறைவேற்றல்,
தமிழக மீனவர்கள் நலன் காத்தல், தண்டனை வழங்கப்பட்டால் இருக்க வேண்டிய கால அளவை விட நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்தல்,
முஸ்லிம்களாக மதம் மாறியோரை பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைத்தல்
ஆகியவற்றைக் கோரியும்,

பாசிச சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட மதச்சார்பற்ற சக்திகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கட்சியின் மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும், www.muslimleaguetn.com என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சிறப்பான தீர்மானங்கள்..ஆனால்
posted by mackie noohuthambi (kayalpatnam) [19 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25620

தீர்மானங்கள் என்னவோ சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அவற்றை அமுல் படுத்த ஆட்சியாளர்களை அணுகுவதிலும் அழுத்தம் கொடுப்பதிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் அரசியல் கட்சிகள் இப்போது இருக்கின்றன. இதற்கு முஸ்லிம் லீக் விதி விலக்கு என்று என்னால் நினைக்க முடியவில்லை.

ஏனெனில் கலைஞர் 1971 இல் அரியணை ஏறியபோது அவர் அமர்க்களமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுதான் இந்த மது கடைகள். தொடர்ந்து வந்த ஆட்சிகளும் கலைஞருடைய திட்டங்களை முடக்கினாலும் அவர் ஆரம்பித்து வைத்த, ஏழைக் குடும்பங்களின் கண்ணீரை ஆறாக ஓட செய்கின்ற, இன்னும் ஓரடி மேலே சென்று சொல்வதானால் இன்று நாட்டில் நடக்கின்ற கொலை கொள்ளை வழிப்பறி பாலியல் பலாத்காரம் அதனால் ஏற்படும் உயிர் இழப்புக்கள் தற்கொலைகள் எல்லாவற்றுக்கும் ஆணி வேறாக ஊற்றுக்கண்ணாக திகழும் இந்த மதுவை ஒழிக்க முன்வரவில்லை. அரசுக்கு அதிக வருவாயை அள்ளித்தரும் இந்த டாஸ்மாக் கடைகள் ஒரு அட்சய பாத்திரமாகவே போற்றி வளர்க்கப்படுகிறது என்ற உண்மையை மறைக்க முடியாது.

இப்போது மதுவிலக்கு என்று நாம் உரத்து பேசினாலும் நாம் கூட்டணி அமைத்துள்ள தலைமை அது திமுகவானாலும் அதிமுக வானாலும் இந்த கோரிக்கையை அமுல்படுத்துவதாக தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்னால்தான் அவர்களுடன் கூட்டு என்று யாருமே துணிந்து சொல்வதில்லை சட்டமன்றத்தில் எத்தனை ஆசனங்கள் நமக்குக் கிடைக்கும் வெற்றி வாய்ப்புகள் உள்ள இடங்கள் எவை என்ற கணக்கு போட்டுதான் தங்கள் கூட்டணி வியூகங்களை வகுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு பாரம்பரியம் மிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகே தள்ளப் பட்டுள்ளது என்ற வேதனையான் நிதர்சன உண்மையை நான் இங்கு வெளிப் படுத்த விரும்புகிறேன்.

நாகரிகமான விமர்சனங்களை மிக உன்னிப்புடனும் பொறுப்புடனும் கவனித்து ஆவன செய்யும் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக சகோதரர் அபூபக்கர் அவர்களும் புதிய பொறுப்பேற்றிருக்கும் இப்ராஹிம் மக்கி அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்பதும் எனக்கு மன திருப்தியை தருவதால் இன்ஷா அல்லா நீங்கள் வடித்து எடுக்கும் தீர்மானங்கள் உள்ளபடியே செயல் வடிவம் பெற வேண்டும் என்றால் சற்று கடுமையாக உங்கள் கூட்டணி வியூகங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞரா, புரட்சி தலைவியா என்பதல்ல கேள்வி பூரண மதுவிலக்கு, சிறையில் வாடுபவர்களை உடனடியாக விடுதலை செய்வது இந்த இரண்டு அம்சங்களில் சமரசம் செய்யாமல் உங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் அவர்கள் உங்கள் காலடியில் வந்து விழுவார்கள். ஏனெனில் ஆட்சி அதிகாரங்களை தருவதும் அவற்றிலிருந்து ஒரு நொடியில் அவர்களை அகற்றுவதும் அல்லாஹ் தான் என்ற உறுதியான ஈமானில் நிலைத்து நிற்பவர்கள் நாம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக உங்கள் சிறப்பான தீர்மானங்கள் செயல்வடிவம் பெற அல்லாஹ் உதவி செய்வானாக. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Kader K.M (Dubai) [19 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25631

எங்கே போயிருந்தீர்கள் ? இத்தனை நாளா! இதில் ஏதோ சதி இருப்பதாகவே தோன்றுகின்றது! காரணம், சமீப காலத்தில் ஆரம்பித்த SDPI (popular front of india ) இந்தியாவில் வளர்ந்து வருவது அனைவர்களும் அறிந்ததே! அதனை முடக்குவதற்காக அரசியல் அரசர்கள் போட்ட திட்டமாக இருக்குமோ என்று தோன்றுகின்றது!

இல்லையென்றால், கட்சி தொடங்கி இத்தனை காலம் ஆகி இஸ்லாமியர்களுக்காக என்ன செய்தீர்கள்? சிறையில் வாடக்கூடிய என் மார்க்க சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்? இறை இல்லமாம் பாபரி மஸ்ஜித் ஐ தகர்க்கும் பொழுதும், தகர்த்த பின்னும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட என் சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்? சிறுபான்மையினர்கள் இட ஒதுக்கீட்டிற்காக என்ன செய்தீர்கள்? இன்னும் எங்கள் உள்ளத்தில் என்னெற்ற கேள்விகள், விடை அந்த வல்லோன் அறிவான்!

800 வருட காலம் ஆட்சி செய்த நாம், இட ஒதுக்கீட்டிற்காக, எவர்களை எல்லாம், வாழ்க! என்று சொல்லக்கூடிய அவலம்!காரணம் நம்முடைய ஈமானின் பலகீனம்! இன்று தொடங்கிய தே.மு.தி.க இன்றைய எதிர் கட்சி! என்றோ தொடங்கிய எம்தாய் சபை?.... எம்தாய் சபை சரி இல்லாததால்தான், பல இஸ்லாமிய கட்சிகள் நம் நாட்டில் தோன்றின! பலன் ஒற்றுமையும், ஓட்டுக்களும் சிதறின!

இன்றும், நம் நாட்டில் பிரித்தாளும் கொள்கை நடந்துக்கொண்டு இருக்கின்றது! இஸ்லாமிய (மார்க்க, கட்சி)தலைவர்களே! எங்களை அந்நிய சக்திகளிடம் அடகு வைக்காதீர்கள்!

நீங்கள் அனைவர்களும், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து உங்களுக்குள் ஒரு நல்ல முடிவை எடுத்து ஒரு குடையின் கீழ் வந்து, நம் இனத்திற்காகவும், நம் சகோதர சமுதாயத்திற்காகவும், பாடு பட்டால், இறைவன் நாடினால், நாளை நமதே! இந்த நாடும் நமதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அரசியல் விளையாட்டு
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [19 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25635

mackie noohuthambi காக்கா அவர்களின் கூற்று மிகவும் உண்மையே.

எப்படியும் ஏதாவது ஒரு கூட்டணியுடன் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் போட்டியிடுவார்கள். எந்த கட்சியினர் இந்த பொதுக்குழு தீர்மானத்திற்கு உறுதுணையாக இருப்பார்களோ அவர்களுடன் தான் இனி முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி கட்சியாக இருக்கும் என்று அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் தான் சமுதாய கட்சிக்கு சமுதாயத்தின் ஆதரவு இருக்கும். இல்லைன்னா இதெல்லாம் அரசியல் விளையாட்டாகவே கருதுவர் சமுதாய மக்கள்.

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by farook (jeddah) [20 February 2013]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25640

எங்கே போய் இருந்தீர்கள் என்று காட்டமா முஸ்லிம் லீகை கேள்வி கேக்கிறீர்? 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட SDPI ஒன்றும் பழைய இயக்கமில்லை? PFI இயக்கத்தின் ஒரு அங்கம் தான். PFI ஆரம்பிக்கும் முன்பும், பல இயக்கங்களை கண்டவர்கள். இவர்களுக்கும் இறை இல்லமாம் பாபரி மஸ்ஜித் ஐ தகர்க்கும் பொழுதும், தகர்த்த பின்னும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட என் சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்? சிறுபான்மையினர்கள் இட ஒதுக்கீட்டிற்காக என்ன செய்தீர்கள்? என்ற கேள்விகள் பொருந்தாதா?

உங்க கருத்துபடியே புதிய கட்சி தான் என்றால், இத்தனை நாள் இவர்கள் எங்கே இருந்தார்கள்? முஸ்லிம் லீக் சரியில்லை என்று தெரிந்து ஏன் சமுதாய பணிகளில் இவர்கள் அன்றே ஈடுபாடு கொள்ளவில்லை? கேரளத்தில் ஆரம்பிக்க பட்ட கட்சி, கேரளத்தில் நன்கு வளர்ந்த முஸ்லிம் லீகோடு நற்பு கொண்டு இருந்தார்களா?

இந்த தீமானத்தில் அப்படி என்ன சதி உள்ளது?காழ்புணர்ச்சி வேணாம்.

முஸ்லிம் லீக்தான் சரியில்லை என்றால் அதற்க்கு பின் எத்தனை இயக்கம் நாம் கண்டு வருகிறோம். ஏன் அவர்கள் ஒத்துமையா இருக்கமுடியவில்லை. சும்மா எதுகெடுத்தாலும் குறை சொல்லுவதை விட்டு விட்டு சமுதாயத்துக்கு நன்மை பயக்க நல்லது செய்ய முனைவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காழ்ப்புணர்ச்சி வேண்டாம்!
posted by kavimagan (qatar) [20 February 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25653

பிரச்சனைகளைக் கையாளுவதில் மாறுபட்ட அணுகுமுறைகள் இருக்கத்தான் செய்யும்.அதில் தாய்ச்சபையின் மிதவாத அணுகுமுறை, இந்திய முஸ்லிம்களுக்கு உகந்தது என்று என்னைப் போன்றவர்கள் கருதுகிறோம்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கத்தியின்றி கத்தலின்றி தாய்ச்சபை செய்துமுடித்த பணிகள் ஏராளம்.ஷாபானு வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நிலவிய அசாதாரணமான சூழ்நிலையில்,இந்திய முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைக்கு எவ்வித சேதாரமும் இன்றி,நமது உரிமைகள் நிலைநாட்டப் பட்டதற்கு பனாத்வாலா என்ற மாமனிதரின் புத்திபூர்வமான உரிமைக்குரல் காரணமாக அமைந்தது என்பதை வரலாறு அறிந்த எவரும் மறுத்திட நியாயம் இல்லை.

இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமைகளுக்கான முஸ்லிம் லீக்கின் களப்பணிகளை நாம் அறிந்து வைக்க வில்லை என்பதே உண்மை.அதை விடுத்து முஸ்லிம் லீக் நமக்கு என்ன செய்தது என்று எண்ணாமல்,முஸ்லிம் லீக்கிற்காக நாம் ஏதேனும் செய்வோம்.சகோதர மாநிலமான கேரளத்தை போல் இல்லையெனினும், குறைந்த பட்சம் திராவிட இயக்கங்களில் இருந்து வெளியேறி சமுதாயக் கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு தார்மீக ஆதரவையேனும் அளித்து விட்டு,பிறகு கேள்விகளைக் கேட்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அழையா வழிபாடி! (?!)  (20/2/2013) [Views - 3465; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved