Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:57:00 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10113
#KOTW10113
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 3, 2013
மாவட்ட ஆட்சியர் காயல்பட்டினத்திற்கு மேற்கொண்ட வருகை குறித்து நகர்மன்றத் தலைவி விளக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3746 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஸ் குமார் IAS பிப்ரவரி 1 அன்று காயல்பட்டினத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வந்திருந்தார். அது குறித்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!

இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஸ் குமார் IAS அவர்கள் பிப்ரவரி 1 அன்று காயல்பட்டினத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வருகை புரிந்தார்.

காயல்பட்டினம் வந்தடைந்தவுடன், எரிவாயு கலன் அமைக்க - நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடந்த நகர்மன்ற கூட்டத்தின் கூட்டப்பொருள் 75 இல் இடம்பெற்ற - காயல்பட்டினம் வட பாகம் சர்வே எண் 8 (24 ஏக்கர்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 524/1 (8.5 ஏக்கர்) (தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனம் இடம்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 237BB/1 (22 ஏக்கர்) (மத்திய அரசின் உப்பு இலாக்கா இடம்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 46 (13 ஏக்கர்) - ஆகிய இடங்கள் குறித்து அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டார்.

நெடுஞ்சாலை அருகில் அமைந்திருக்கும் காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 524/1 இடத்தை மட்டும் நேரடியாக சென்று பார்த்தார். அவ்விடம் குறித்த விபரங்களை ஒரு வார காலத்திற்குள் தனக்கு அளிக்கும்படி தாசில்தாரிடம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.



கடையக்குடி (கொம்புதுறை) அருகே காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் அவர்கள் தருவதாக கூறியுள்ள 5 ஏக்கர் நிலத்தினையும் காண மாவட்ட ஆட்சியரை நான் வேண்டினேன். ஒரு வழிப்பாதை குறித்த ஆய்வு, கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) சுனாமி குடியிருப்புகள் குறித்த ஆய்வு ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் - நேரம் இல்லாத காரணத்தால், பிப்ரவரி 13 அன்று இப்பகுதிக்கு மீண்டும் வரவேண்டி இருப்பதாகவும், அப்போது தான் அந்த இடத்தை கண்டிப்பாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் - அவ்விடம் குறித்த வரைப்படங்களை தயார் செய்து வைக்கும்படியும், அதிகாரிகளுக்கு ஸ்தலத்திலேயே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இது தான் நடந்தது. இது குறித்து உண்மைக்கு மாறாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், மேலதிக விபரம் தேவையெனில் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai S Nawas (singapore) [04 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25339

சரியான நேரத்தில் விளக்கம் அளித்த தலைவிக்கு நன்றி.

-மண்ணின் மைந்தன்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [04 February 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 25344

தலைவியின் இந்த பதில் முலம் செய்திதான் உள்ளதே தவிர மக்களின் ஐயங்களுக்கான விடையில்லை- விளக்கமில்லை.

கேள்வி என்னவெனில் ஆட்சியர் திடுதெப்பென்று வந்தாரா- அறிவித்து விட்டு வந்தாரா?

நிச்சயமாக வரும் முன் வருவதற்கான நோக்கத்தையும் அறிவித்து விட்டே வந்திருப்பார். அப்படியெனில் மன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கக் கூடாது என ஏதும் வழிகாட்டல் உண்டா?

மற்ற இணைய தளங்கள் ஆட்சியர் BIO-GAS திட்டத்திற்கான 3 - 4 இடங்களைப் பார்க்கப் போனதாக செய்தி போட்டுள்ளனர். நீங்களோ ஒரு இடத்தை மட்டும் பார்வை இட்டதாகவும் அதுவும் பனை வாரியத் திற்கான இடமென்றும் சொல்கிறீர்கள்.

ஐக்கியப் பேரவை மூலம் கிடைக்க விருக்கின்ற இடத்தை முதலில் நீங்கள் பரிந்துரை செய்து அங்கு அழைத்துச் சென்றிருக்கலாமே என்பதுதான் அனைவரின் ஆதங்கம். நீங்கள் அதை ஏன் செய்யவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியும்.

இதைத் தெளிவுப் படுத்துங்கள். தெளிவில்லாத ஒரு பதிலைத் தந்து விட்டு மேலும் விபரம் தேவைப் படின் என்னை தொடர்பு கொள்ளவும் என்று போட்டிருப்பது பொறுப்பான பதிலாக இல்லை. முழுமையான தகவலைத் தந்தாலே போதுமானது.

M.S. செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [04 February 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25346

தலைவி அவர்களின் விளக்கத்திற்கு நன்றிகள் பல.

நீங்கள் உங்களின் மனசாட்சிக்கும் இறைவனுக்கும் பயந்து மக்கள் தொண்டு ஆற்றி வாருங்கள். மற்றவர்களின் ஜல்லி அடிக்கும் அவதூறுகளுக்கு தலை சாய்க்க வேண்டாம்.

மக்களும் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. அவதூறுகளையும், நகராட்சி செய்திகளையும் படித்து படித்து பழகிவிட்டது.

இந்த மாதிரியான செய்திகளை கண்டதும், ஒரு பழைய ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.

ஒருவன் ஒரு ஜோதிடரிடம் சென்று, தனக்கு இவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், மன நிம்மதி இல்லாமல் இருப்பதை எல்லாம் பட்டியலிட்டானாம்.

உடனே.. ஜோதிடன்.. கூடிய விரைவில் அனைத்தும் சரி ஆகிவிடும் என்றானாம்.

- அப்படியா.. மிக்க சந்தோசம் ஜோதிடர் ஐயா...அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா.!!??

-இல்லை.. இல்லை.. அனைத்தும் உனக்கு பழகிவிடும். என்றாராம்.

இது மாதிரிதான் அவதூறு செய்திகள் எங்களுக்கு பழகி விட்டது.

அனைத்தையும் நன்கு அறிந்தவன் வல்ல ரஹ்மான்தான். அவன்தான் நம் ஊருக்கு நல்ல வழியை காட்டுவான். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விளக்கம் தேவை
posted by Salai Sheikh Saleem (Dubai) [04 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25349

சகோதரி ஆபிதா அவர்களின் சமயோசித விளக்கத்தால் பலர் மனங்களில் குடியிருந்த சந்தேகங்கள் நீக்கப்பட்டிருக்கலாம். நன்றிகள் பல. இதே போல் நிறைய விஷயங்கள் உங்களின் நேர்மைக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஒரு சில விஷமிகளால் இணையதளத்தில் ஆதாரமில்லா பல செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதனை தெளிவுபடுத்தும் முகமாக தயவுசெய்து இதுபோல் ஒரு சிறு விளக்கம் கொடுத்தால் போதுமானது.

அதே போல், இந்த மாவட்ட ஆட்சியாளர் வருகை ஏனைய மன்ற உறுப்பினர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்றும் சகோதரர் சம்சுதீன் மட்டும் எப்படி உங்களுடன் ஒன்றாக இருந்தார் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளதாக அறிகிறேன், விளக்கம் தேவை.

உங்களின் தலைமையில் காயல் நகராட்சி பல சாதனைகள் புரிய எங்களின் துஆவுடன் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [04 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25351

மரியாதைக்குரிய நகராட்சி தலைவி அவர்களே! மாவட்ட ஆட்சியர் நம் நகருக்கு வருகை தருவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டதா? அடியில் படித்த வாசகத்திற்கு தங்கள் விளக்கத்தில் தெளிவு இல்லையே!

Moderator: பிற தளங்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [04 February 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25354

உண்மை நிலவரத்தை அறிய விரும்பும் குடிமக்களுக்கு இது போதுமான விளக்கம். எனவே, இதற்கு மேலும் வீண் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் தலைவியவர்கள் பதில் கூறிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. இது உங்களது நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்க இவர்கள் எடுக்கும் முயற்சி.

நகராட்சி என்பது ஃபஸாது மடமல்ல! அது மண்ணுக்கும் மக்களுக்கும் உழைக்கும் இடம்!! ஒரு பிரதிபலனும் எதிர்பாராது யார் உழைக்கிறார்கள் என்பதை மக்கள் நன்றாகவே அறிந்துள்ளார்கள், இறைவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

பயோ காஸ் திட்டத்திற்கு இடம் கேட்டு, சென்ற ஆகஸ்ட் மாதம் நகர்மன்றத் தலைவர் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் கடிதம் எழுதினார். ஊடகங்களிலும் இது செய்தியாக வந்தது. அந்நேரத்தில் இடம் தருகிறோம் என்று யாரும் சொல்லவில்லை.

பின்னர் அரசுத் துறை இடங்கள், நவம்பர் மாத கூட்டத்தில் ஆய்வுக்கு முன் மொழியப்பட்டது. அதன் பிறகே, ஐக்கியப் பேரவை சார்பாக டிசம்பர் இறுதியில் இடம் தர இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவல் கூட தலைவிக்கு முறையாக கொடுக்கப்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, ஆணையருக்கும் எழுத்துப்பூர்வமாக இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஐக்கிய பேரவை மூலம் வழங்க விரும்புவதாகக் குறிப்பிடப்பட்ட இடம் கடலுக்கு அருகில் உள்ளது என்றும், CRZ விதிகள்படி ஒப்புதல் கிடைக்க சிரமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இங்கு ஏன் உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பபட்டுள்ளது. கள ஆய்வு செய்வதற்குத்தான் மாவட்ட ஆட்சியர் வந்தாரே தவிர, விழாவில் கலந்துகொள்வதற்காக அல்ல!

கள ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாக ரீதியாக விளக்கம் கொடுக்க ஆணையர் அங்குள்ளார்! துறை ரீதியாக விளக்கமளிக்க அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளனர்!! நகர்மன்றத்தின் சார்பில் நகர்மன்றத் தலைவரும் அங்குள்ளார்!! இது போதும் அவருக்கு!

18 உறுப்பினர்களும் அங்கு இருக்க வேண்டும் என்பது அர்த்தமற்ற எதிர்பார்ப்பு. இவர்கள் அங்கிருந்தாலும் இல்லாவிட்டாலும் மாவட்ட ஆட்சியரின் பணி ஒன்றும் நின்று விடப்போவதில்லை.

தங்களது ஈகோவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, நகர்மன்றக் கூட்டத்தில் கூச்சலிடாமல் ஒழுங்காக இவர்கள் செயல்பட்டாலே போதும். அதுவே நகர் நலனை விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னும் 3 1/2 ஆண்டுகள் காட்சிகள் தணிக்கை செய்யாமலே
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [04 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25361

மிக தெளிவாக நகரமன்ற தலைவர் விளக்கம் தந்துள்ளார்கள்...! மேலும் சாளை பஷீர் அவர்களின் கருத்து பலரை விழிப்புணர செய்கின்றது...! இதில் அரண்டவன் கண்ணுக்கு எல்லாமே இருண்டதாகவே தெரியும்..! அவன் எதை அந்த இடத்தில் எதை உணர்கிறோனோ அதுவே...! அதை மாற்ற இயலாது அவன் கண்டது ஒரு மாய தோற்றமே...

இன்னும் மிக மிக தெளிவான விளக்கத்தை இவர்கள் ஐக்கிய பேரவை பெரியவர்களிடமே அறிந்து கொள்ளவது மேலும் நல்லது...

இதுவரை ஐக்கிய பேரவை சார்பாக எந்த பெரியவர்களும் இது சம்பந்தமாக தங்களது வாதத்தையோ எதிர்ப்பையோ நகராட்சி தலைவரிடமோ, ஆணையரிடமோ முன் மொழியவில்லை என்பது குறிப்பிடதக்கது...

சும்மா எதை எடுத்தாலும் தலைவர் மீது குறை - அது தவறு - இது தவறு என்று இப்படியே கருத்து எழுதி சிலர் சந்தோஷ பட்டு கொள்கிறார்கள் - சிலரை சந்தோஷ படவும் வைக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது...

எல்லா விசியதிற்க்கும் உறுப்பினர்களை அழைத்து போக வேண்டும் என்று நகராட்சி சட்ட விதிமுறைகள் சொல்லவில்லை... ஆகையால் தலைவரோ ஆணையரோ தகவல் சொல்லி இருக்க மாட்டார் என்பதை தெளிவு படுத்துகிறது...!

மேலும் ஐக்கிய பேரவை கொடுக்க முன் வந்த இடத்தை பற்றி ஏன் ஆய்வு நடத்த படவில்லை என்பதை நம்மை விட அதிக அக்கறை கொண்ட பேரைவை பெரியவர்கள்.. நன்கு விபரம் தெரிந்தவர்கள் தலைவரிடமும், ஆணையரிடமும் நடப்பு விபரம் கேட்டு தெரியாமலா இருக்க போகிறார்கள்...?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [04 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25363

சகோதரர் பஷீர் அவர்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. விரைவில் ஆட்சியர் ஆப்பு வைப்பது உறுதி....
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [04 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25366

எனது கருத்து தொடர்கிறது....

விரைவில் ஆட்சியர் ஆப்பு வைப்பது உறுதி.... மாவட்ட ஆட்சியர் காயல்பட்டினத்திற்கு மேற்கொண்ட வருகை குறித்து செய்தி தந்தமைக்கு நன்றி... நன்றி...

Moderator: பிற ஊடகங்கள் குறித்த விமர்சன வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:..உண்மையின் குரல்வளை ஒருநாளும் நசுங்காது! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (YANBU) [04 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25372

தலைவி அவர்கள் அனைத்து உறுப்பனர்களையும் ஏன் அழைக்கவில்லை என்று முதலில் நான் கூட சற்று குழப்பம் கலந்த சந்தேகத்தில் இருந்தேன். நண்பர் பஷீர் அவர்களின் தெளிவான பதிலில் இருந்து தலைவியின் உண்மை செயல்பாட்டை புரிந்து கொண்டேன்!

எப்படியாவது தலைவி மாட்ட மாட்டார்களா என்று ஏங்கி தவமிருப்போருக்கு இது ஒரு சந்தோஷ செய்தியென்று சதிராட்டம் போட்டார்கள் முடிவில் "சங்கு" செய்தியாகிவிட்டது!

ம்ம்ம்ம்..... மறுபடியும் மறுபடியும் முருங்கை மரத்தில் விருட்டென்று ஏறும் வேதாளம் போல் ஏறுகிறார்கள் விடை என்னவோ, வழுக்குகளில்தான் வீழ்கிறார்கள்!

உண்மையை உரசிப்பார்க்க உலகளாவிய தங்கத்தாலையும், வைரத்தாலையும் முடியாது. முடிவு நாளின் முதலோனுக்கு பயந்து முழு மனதை அர்ப்பபணித்தவனிடம் தான் அந்த ஆயிதம் இருக்கிறது!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohmedyounus (muscat) [05 February 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 25375

பொது மக்களிடம் நகராட்சியின் செயல்பாடுகள் பற்றி விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகத்தான் தொடங்கப்பட்ட ஊடகங்கள் இன்று.... ஜெயா டி.வி , சன் டி.வி ரேஞ்சில் சென்று கொண்டு இருக்கின்றது. ஊடகங்கள் இல்லாத கடந்த நகராட்சியில் கூட இந்த அளவுக்கு பிரச்சனை பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...அழகான விளக்கம்தான் ஆனால்...
posted by OMER ANAS (DOHA QATAR.) [05 February 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25378

தலைவி அவர்களின் விளக்கம் அழகானதுதான். ஆனால் பல்வேறு சச்சரவு உள்ள இந்த சமுதாயத்தில்,எதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும், யாருக்கு முன்னுரிமை முதலில் கொடுக்க வேண்டும் என்ற அனுபவ முதிர்ச்சி இல்லா தலைவியின் சிறு தவறுகளால்,வந்ததுதான் இந்த சர்ச்சை!

ஒரு குடும்பத்தில்,சில சர்ச்சைகள் எழும்போது,நாளை இவர்கள் வீட்டு விசேசங்களில் முதலில் நம்மைதான் அழைக்க வேண்டும் என்று சிலர் எதிர் பார்ப்பார்கள்.அப்படி முதலில் இவர்களை அழைப்பதுதான் முறை. இதுதான் சர்ச்சைக்கு நல்ல தீர்வும் ஆகும்.

நமதூருக்காக நல்ல செயல்களை தவிர வேறு எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் என்றும் போல் இன்றும் நமதூர் நன்மைக்காக மார்க்கம் பாராமல் அக்கீதா பாராமல்,மதம் பாராமல் செயல் படும் நல்ல பெரியோர்களின், நற்செயல்களை மனமார பாராட்டுவோம். இதுதான் நம் தந்தையை போன்றோருக்கு நாம் செய்யும் கைம்மாறு.

அவர்கள்தான் இன்றும், இடக்கரம் அறியாமல்செய்யும் வலக்கர கொடை வள்ளல்கள்! தயவு செய்து யாரும் அவர்களை வஞ்சிக்காதீர்கள். வம்புக்கு இழுத்து விடாதீர்கள் உங்கள் சச்சரவினுள், ,,,,,,,,,,நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பஸாது-க்கான களம் மாறியுள்ளதே தவிர குணம் மாறவில்லை ?
posted by Salai.Mohamed Mohideen (USA) [05 February 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25386

உறுப்பினர்களுக்கு தலைவி தகவல் தெரிவிக்காதது ஏன்?

ஐக்கிய பேரவை தருவதாக தெரிவித்திருந்த இடத்தினை மாவட்ட ஆட்சியரிடம் காண்பிக்காதது ஏன்?

இவ்விரு " நியாயமான " கேள்விகளை (இதில் மாற்று கருத்து இல்லை) அவ்வழியே வந்த உறுப்பினரோ, மற்ற உறுப்பினர்களோ நேரடியாகவோ, அலைபேசி வாயிலாகவோ, இணைய தளங்களோ அல்லது கருத்துக்கள் மூலம் வாசகர்களாகிய நாம், தலைவியிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம்.

அதை விட்டு, ஐக்கிய பேரவையின் பெயர் வரக்கூடாது என்று தலைவி எண்ணுவது போல நாமே கற்பனை கொள்வது, நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் என்று இருவருக்குள் சிண்டு முடிவது, சந்தேகப்படுவது, கண்டனம் தெரிவிப்பது, & பஸாது பரப்புவதுதான் நம்முடைய எண்ணமேன்றால் .... பஸாது பேசுவதற்க்கு "களம்" தான் (தெரு/சங்கம் -> இணையதளம்) மாறியிருக்கின்றதே தவிர, நம்முடைய குணம் மாறவில்லை.

நமது மனதிற்குள் மறைத்து வைத்திருக்கும் சுய விருப்பு - வெறுப்புகள், பொதுநலத்தை உரசிப்பாக்கின்றதோ என்று எண்ண தோணுகின்றது. அது மட்டுமன்றி சிறு விடயங்கள் கூட இன்று நமதூரில் ஒரு சிலரால் வேண்டுமென்றே (?) அரசியலாக்கப் படுகின்றது... அதற்கு ஊடகமும் வாசர்களின் கருத்து சுதந்திரமும் ஒரு வகையில் காரணமோ என்ற அச்சமும் ஏற்படுகின்றது.

நகர்மன்ற (குறிப்பாக தலைவி) விடயங்களில் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவதில் அப்படி என்னதான் ஒரு ஆனந்தம்? இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே தலைவிக்கும் ஐக்கிய பேரவைக்கும் கொளுத்தி போட்டு அதில் குளிர் காய போகின்றனர் என்று தெரியவில்லை. கொளுத்தியது என்னமோ ஒரு சிறு தீக்குச்சிதான்! ஆனால் அது குடிசை (ஒற்றுமையை) எரிக்க பயன்பட்டதா அல்லது இருளை நீக்கி சமுதாயத்திற்கான விடியலை தரும் ஒளியாக பயன்பட்டதா என்பது அவரவருக்கு தெரியும். தலைவிக்கும் ஐக்கிய பேரவைக்கும் நல்லதொரு இணக்கத்தை ஏற்படுத்த இவர்களில் ஒருவர் கூட முயற்சி செய்திருப்பார்களா என்று தெரியவில்லை.

இதோ அறிக்கை அக்கப்போர் தொடங்கிவிட்டது. உண்மையிலேயே இது ஒற்றுமையை ஏற்படுத்த போகின்றதா அல்லது சிறு விடயங்களை பூதாகரமாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியா என்பது ரப்புல் ஆலமீனுக்கே வெளிச்சம்.

இது போன்ற குழப்பம் விளைவிக்கும் “நம்பத்தகுந்த வட்டார செய்திகள்”, அறிக்கைகள் கருத்துக்கள் அனைத்தும், ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் நமது சமுதாய ஒற்றுமையை சரிபடுத்த கண்ணியமிக்க நமதூர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் & முஸ்லிம் கட்சியின் செயலாளர் உட்பட பலர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக தான் இருக்குமே தவிர முட்டுகொடுக்க உதவாது என்பதனை உணருங்கள்.

இதுபோன்று நம்மை நாமே ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வதை விட, ஊர் ஒற்றுமைக்காக நம் சகோதரர்கள் / பெரியவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் வெற்றி பெற துஆ செய்வோம். தனி நபர் விருப்பு - வெறுப்பு ஈகோக்களை, மார்க்க மற்றும் அனைத்து கருத்து வேறுபாடுகளை மறந்து, நமக்குள் விட்டு கொடுத்து சகோதரத்துவம் மேம்பட செய்வோம் & ஊர்/பொது விடயங்களில் ஓரணியில் திரள்வோம். அதற்காக நமதூர் இணைய தளங்கள் பாடுபடட்டும் !

" Apologizing doesn’t mean that I'm wrong, and u r right… It means that I value our relationship much more than ego ! "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved