Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:44:50 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10112
#KOTW10112
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 3, 2013
ஜனவரி மாத நகர்மன்றக் கூட்டத்தில், பல்வேறு நலப்பணிகளை நிறைவேற்ற தீர்மானம்! விரிவான செய்தி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3515 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் - ஜனவரி 29 அன்று நடந்தது. காலை 11:15 மணி அளவில் துவங்கிய கூட்டம் இரு அமர்வுகளாக நடந்தது. முதல் அமர்வு மதியம் 1 மணி அளவில் நிறைவுற்றது. இரண்டாம் அமர்வு, மதியம் 03:15 மணி அளவில் துவங்கி - மாலை 06.00 மணிக்கு நிறைவுற்றது.

நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை வகித்த இம்மாத கூட்டத்தில், வெளிநாடு சென்றுள்ள 02ஆவது வார்டு உறுப்பினர் தவிர 17 உறுப்பினர்களும், நகராட்சி ஆணையர் ஜி.அசோக் குமார் உட்பட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் கூட்ட நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்வதற்கு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று தீர்மானம் மன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், ஊடகங்கள் செய்தி சேகரிக்க எந்த தடங்கலும் செய்யக்கூடாது என உயர்நீதி மன்றத்தில் தடை வழங்கப்பட்டுள்ளது என்றும், நகராட்சி மூலம் வீடியோ பதிவு செய்ய அவசியம் இல்லை என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.



நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை 4 வாரங்களுக்கு மட்டும்தான் என்றும், அது நிறைவுற்றுவிட்டதாகவும் உறுப்பினர்கள் சிலர் கூறினர். [செய்தி ஆசிரியர்: இடைக்கால தடையை நீக்கும் வரை - தடை நீடிக்கும் என்பதே நீதிமன்ற வழிமுறையாகும்].

தற்போது நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்தும், அதில் கிடைக்கும் மண் யாருக்கு சொந்தம் என்பது குறித்தும் உறுப்பினர்கள் சிலர் - அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, கடந்த (டிசம்பர் 2012) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த கூட்டத்தின் பொருள் எண் 11 - ஊடகங்களை அனுமதிப்பது சம்பந்தமான நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் (RDMA) கடிதம் குறித்தது. இவ்விஷயத்தில் ஊடகங்கள் தங்கள் பத்திரிக்கை உரிமங்களை மன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி கோர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற உறுப்பினர்கள் கூறியிருந்தனர். தாங்கள் கூறியவாறு மினிட் புத்தகத்தில் ஏன் தீர்மானம் எழுதப்படவில்லை என உறுப்பினர்கள் வினவினர்.

அதற்கு பதில் அளித்த நகர்மன்றத் தலைவர், ஊடகங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குநர் மற்றும் வழக்கறிஞர் கூறியிருப்பதாகவும், ஆகவே உறுப்பினர்கள் தெரிவித்த வாசகப்படி தீர்மானம் எழுத முடியாது என்றும், “வழக்கின் தீர்ப்புப்படியே செயல்புரிவோம்” என்ற பொருளிலேயே தீர்மானம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

இறுதியாக, உறுப்பினர்கள் கூறிய வாசகப்படி தீர்மானம் எழுதப்பட்டு, நகர்மன்றத் தலைவரின் கருத்தும் தனியாக பதிவு செய்யப்பட்டது.

மதியம் 03:15 மணிக்கு ஜனவரி மாத கூட்டப் பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கூட்டப் பொருட்கள் வருமாறு:-









சாலையோர கழிவு நீர்த் தொட்டிகளை அகற்றல்:



மன்ற கூட்டப் பொருளில் கோரப்படும் கோரிக்கைகள் யாரால் முன்வைக்கப்பட்டது என்ற விபரம் அந்தந்த கோரிக்கையுடன் கூட்டப் பொருளில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கோரிக்கையை முன்வைத்தவரின் விபரம் இன்றி இப்பொருள் உள்ளதாக உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

பின்னர் சாலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர்த் தொட்டிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றிடுமாறு பொதுமக்களுக்கு பொது அறிவிப்பு செய்து, அக்காலக்கெடு நிறைவுற்ற பின்னர், அகற்றப்படாத கழிவு நீர்த் தொட்டிகளை நகராட்சியின் சார்பில் அகற்றி, அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட வீட்டாரிடமிருந்து பெற்றிடுவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

நீர்நிலைகளைத் தூர்வாறல்:



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

ஆறு - மாடு அறுப்புக் கட்டண உயர்வு:



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரித்ததையடுத்து தீர்மானம் நிறைவேறியது.

கடற்கரை கழிப்பறையை பழுது பார்த்தல்:



வெறுமனே பழுது பார்த்து, அப்படியே விட்டுவிட்டால் மீண்டும் பழுது ஏற்பட்டு, செலவுகள் வீணடிக்கப்படும் என்றும், முறையான - தொடரான பராமரிப்பும் அவசியம் என்றும் உறுப்பினர்கள் பலர் கருத்துக் கூறினர்.

கடற்கரை கழிப்பிடங்களை நகராட்சியின் சார்பில் பழுது பார்த்து, பின்னர் அதனைப் பராமரிப்பதற்கு ஒப்பந்தப் புள்ளி கோருவதென தீர்மானிக்கப்பட்டது.

குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்தல்:



உடைப்பு ஏற்படின் அதனை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டியது நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணி என்றும், அவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கு தனியாக தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூறினார்.

உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய போதிய பணியாளர்கள் தரப்படுவதில்லை என்றும், வெளியிலிருந்து பணியாளர்களைப் பெற்றால் அவர்களுக்கு கூலி கொடுக்க நிதி தேவை என்றும், எனவே தீர்மானம் இயற்றப்பட்டால் மட்டுமே அதற்கான நிதியை நகராட்சியிடமிருந்து பெற்றிட இயலும் என்றும் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் கூறினார்.

ரோஜா சுய உதவிக்குழுவின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள 14 தற்காலிகப் பணியாளர்கள் நிலை என்ன என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். இதுகுறித்து சிறிது நேரம் விவாதிக்கப்பட்ட பின்னர், அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

பேருந்து கால அட்டவணையை தனியார் நிறுவிட அனுமதி:



மன்றம் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

நகராட்சி இணையதளத்தில் தகவல் பதிவேற்றம்:



நகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டிய தகவல்களை முறைப்படி பதிவு செய்ய வேண்டியது அலுவலர்களின் கடமை என்றும், அதற்கு தனியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கூறினார். பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை ஆதரித்தனர். ஆதரித்ததால், இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

மீனவர் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல்:



வருவாய்த் துறை மூலம் கள ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

கற்புடையார் பள்ளி வட்டம் - ஈக்கியப்பா தைக்கா பாதையில் சாலை அமைத்தல்:



அவசர நேரங்களில் தீயணைப்பு வண்டிகள் செல்ல தற்போது வசதி இல்லை என்றும், ஆகவே இச்சாலை அவசியம் என்றும் 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி கூறினார். மற்றொரு தனி நபருக்கும் அப்பகுதியில் இடம் இருப்பதாகவும், வீடுகள் இல்லாத பகுதியில் சாலை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிற உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கள ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

புதிய சாலைகள் அமைத்தல்:



புதிய குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் துவங்க இருப்பதால் - புதிய சாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

புதிதாக தெரு விளக்கு அமைத்தல்:



கள ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

சுகாதாரப் பணி வாகன பராமரிப்பு:



அலுவலக குறிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய டயர்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டது.

வாகனங்களுக்கு பாதுகாப்பு அறை அமைத்தல்:



அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.

நகர்மன்றத் தலைவருக்கு வாகனம்:



நகராட்சியில் போதிய நிதி இல்லாத காரணத்தால், வாகனம் வாங்க தேவையில்லை என்று கருத்து கூறப்பட்டது.

வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம்:



6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கும், அதற்குப் பொருத்தமான ட்ராக்டர் எஞ்சினும் வாங்கிட தீர்மானிக்கப்பட்டது.

பொதுக் கிணறுகளைத் தூர்வாறல்:



நகராட்சி பொதுக் கிணறுகளைத் தூர்வார தீர்மானிக்கப்பட்டது.

கற்புடையார் பள்ளி வட்டத்தில் புதிதாக குடிநீர் வினியோகக் குழாய் அமைத்தல்:



அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத் துளிகள்...

கூட்டரங்கில் புதிய ஒழுங்குகள்...

கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வோர் அனைவரிடமும் தனியாக வருகை பதிவேட்டில் பெயர், முகவரி, தொடர்பு எண், கைச்சான்று ஆகியன பெறப்பட்டது.

இனி நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்பும் பார்வையாளர்கள், இந்த விபரங்களுடன், தமது அடையாள அட்டை ஒன்றின் நகலையும் கொண்டு வந்து, பார்வையாளர் பகுதியில் அமர அனுமதி பெற்றிடுமாறு நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

பணி மேற்பார்வையாளரின் அலட்சியமே நிர்வாகக் கோளாறுகளுக்குக் காரணம்...

கூட்டம் துவங்குமுன் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கை குறித்து, பணி மேற்பார்வையாளர்தான் (Overseer) விளக்கமளிக்க வேண்டும் என்றும், வெளிச்சென்றுள்ள அவர் வரும் வரை காத்திருந்து கூட்டத்தைத் துவக்கவும் முடிவு செய்யப்பட்டு, அவர் வந்த பின்னரே கூட்டம் துவக்கப்பட்டது.

நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பிலிருக்கும் நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் சரியாக செயல்படாததே பணிகள் நடைபெறாமைக்குக் காரணம் என்றும், அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் பேசினர்.

சேர்மனை மீடியா மிரட்டுகிறது...

பெருவாரியான உறுப்பினர்களின் கருத்தை மதித்து நகர்மன்றத் தலைவர் மீடியாவை கட்டுப்படுத்தத் தயங்குவது ஏன்? என ஒரு கட்டத்தில் சில உறுப்பினர்கள் கேட்டனர். “தலைவியை யாரோ மீடியா காரங்க மிரட்டியிருக்கிறாங்க... அதனால்தான் தலைவி பயப்படுறாங்க” என்று நகராட்சி ஆணையர் அஷோக் குமார் கூறினார்.

தன்னை யாரும் மிரட்டவுமில்லை, எந்த மிரட்டலுக்கும் தான் பயப்பட்டதுமில்லை என்று கூறிய நகர்மன்றத் தலைவர், வெளியாட்களின் மிரட்டல்களுக்கு மதிப்பளிக்காமல் ஆணையர் தன் பணியைச் செய்தாலே போதும் என்று கூறினார்.

“(ஊடக விஷயத்தில்) இப்படியே எவ்ளோ நேரம்தான் கூட்டத்தை இழுத்துக் கொண்டிருப்பீர்கள், மணி 1ஐ தாண்டிவிட்டதே...? சீக்கிரம் கூட்டத்தை முடியுங்க” என ஆணையர் கூறினார். கூட்டத்தில் இருக்க விருப்பமில்லையெனில் ஆணையர் வெளியே செல்லலாம் என்றும், நகர்மன்றத்திற்கு உத்தரவிடும் உரிமை ஆணையருக்கு இல்லை என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

‘ஜோக்கர்’

அரசின் சார்பில் நகராட்சியை நிர்வகிக்க வேண்டிய அதிமுக்கிய பொறுப்பிலிருக்கும் ஆணையர் தனது பொறுப்பில் கண்டிப்புடன் இருக்க வேண்டுமென்றும், ‘ஜோக்கர்’ போன்று செயல்பட்டால் மக்கள் கட்டுப்படுவதை எதிர்பார்க்க இயலாது என்றும் 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கூறினார்.

அதற்கு பதிலளித்த ஆணையர், ‘ஜோக்கர்’ என்று கூறுவதை தான் ஏற்பதாகவும், இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி ‘எஸ்கேப்’ ஆவது என ஜோக்கருக்குத்தான் சரியாகத் தெரியும் என்றும் கூற, அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

புது பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி பெறப்பட்டது

நகராட்சியில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு பணியாட்கள் நியமனம் செய்ய அரசு அனுமதி கிடைத்திருப்பதாக ஆணையர் கூட்டத்தின்போது தெரிவித்தார். நகர்மன்றத் தலைவர் அண்மையில் சென்னைக்கு சென்றிருந்த போது இது குறித்து அதிகாரிகளை சந்தித்தாகவும் ஆணையர் கூறினார்.

இன்ஷாஅல்லாஹ்! அனைத்தும் நிறைவேற்றப்படும்!!

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என ஆணையரிடம் உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பினர். ஒரு கட்டத்தில் எழுந்து பேசிய ஆணையர், “இன்ஷாஅல்லாஹ்! அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்படும்!!” என்று கூற, அனைவரும் சிரித்தனர்.

பார்வையாளர்கள்...

இக்கூட்டத்தில், ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்ற தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத், எழுத்தாளர் சாளை பஷீர் உட்பட சுமார் 20 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


[செய்தி திருத்தப்பட்டது @ 7:00am/4.2.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by salai s nawas (singapore) [04 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25340

தலைவியின் பதில் ஆணையருக்கு சாட்டையடி.

- மண்ணின் மைந்தன்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [04 February 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25352

இது நாள் வரை ஊடகங்களில்தான் நகர்மன்ற நடவடிக்கைகளை கண்டிருக்கின்றேன். ஒரு முறையாவது இதை நேரில் சென்று காண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

இந்த முறை நடந்த நகர்மன்ற கூட்டத்திற்கு நான் நேரில் சென்றிருந்தேன்.

ஊடகங்களிலும் அசையும் படக்காட்சிகளிலும் எழுத்திலும் நான் உணர்ந்தவைதான் என்றாலும், என்னதான் நடக்கிறது என்பதை திறந்த மனதோடு காண அங்கு சென்றென். அனைத்தும் ஒன்று விடாமல் உண்மை என்பது தெளிவாகியது.

கூச்சலும் குழப்பமும் சச்சரவும் நிறைந்து காணப்பட்டது. நாம் இருப்பது நகராட்சியா அல்லது மீன் கடையா ? என்ற அய்யமும் எழுந்தது.

நகர்மன்றத் தலைவியை அங்குலம் அங்குலமாக சொல்லுக்கு சொல் குற்றம் பிடிப்பதில் மிகத் தீவிரமாக இருந்தனர். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை விட தலைவியை செயல்பட விடக்கூடாது என்பதுதான் பெருவாரியான உறுப்பினர்களின் நோக்கமாகவும் இருந்ததை என்னால் அறிய முடிந்தது.

எடுத்துக்காட்டாக உறுப்பினர் பதுருல் ஹக் ஒரு கட்டத்தில் தலைவியைப் பார்த்து, “நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நாங்கள் மன்றத்தை நடத்திக் கொள்கின்றோம்” என்று கூறினார்.

ஊடகத்தினரின் ஒளிப்பதிவை ஒழித்துக் கட்டுவதையும் ஒரு நேர்ச்சைக் கடனாகவே பெருவாரியான உறுப்பினர்கள் கருதுகின்றனர். இதில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே விதிவிலக்கு.

சாதாரண விஷயங்களைக் கூட சண்டை போடுவது போல மிக உயர்ந்த குரலில் சொல்கின்றனர். இதில் அடிப்பது போல் வேறு கை நீட்டுகின்றனர். எந்த நிமிடமும் குஸ்தி, குத்து, சண்டை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகள் இலவசமாகவே காணக் கிடைத்து விடுமோ என அச்சமாக இருந்தது.

இவர்களின் வம்பிற்கு இழுக்கும் கூச்சலினாலும், வன்மையான கை சைகைகளினாலும் பார்வையாளர்களாகிய நமக்கு குருதி அழுத்தம் உயர்ந்து தலைவலித்ததுதான் மிச்சம். பாவம் தலைவி! எப்படித்தான் இவர்களை சமாளிக்கின்றாரோ?

நகர் மன்ற உறுப்பினர்களோ தலைவியை குறி வைத்து சண்டையிடுகின்றனர். இந்த சந்தடி சாக்கில் நகராட்சி அலுவலர்கள் தங்கள் கடமைகளில் மெத்தனமாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

உறுப்பினர்களே! நகர்மன்ற நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வதை தடுப்பதில் ஏன் இவ்வளவு மும்முரம் காட்டுகின்றீர்கள்? மடியில் கனம் உள்ளவர்கள்தானே அஞ்ச வேண்டும். நீங்கள் ஏன் இவ்வளவு பதட்டமடைகின்றீர்கள்?

ஊடகத்தினர் ஒன்றும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமான இடங்களுக்குள் வந்து படம் எடுக்கவில்லையே?குடிமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மன்றத்தில்தானே வந்து பதிவு பண்ணுகின்றனர்? தங்கள் பகுதி உறுப்பினர்களின் அழகிய செயல்பாடுகளை காயல்வாசிகள் கண்டு உணர வேண்டாமா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா??

இது போக, இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். ஊடக ஒளிப்பதிவைத் தடுப்பது உள்ளிட்ட சில நகர்மன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக RDMA, CMA , நீதிமன்றம் போன்ற உயர் நிர்வாக, நீதி அமைப்புகளின் வழிகாட்டுதல் &உத்தரவுகளை நாம் மீறிட இயலாது என தலைவி பொறுமையாகவும், அமைதியாகவும் விளக்கம் சொல்கின்றார். ஆனால் உறுப்பினர்களான மும்பை மெய்தீன், ஓடை சுகு, ஜஹாங்கீர் போன்றோர், “அப்படி என்றால் எங்களை வைத்து ஏன் நகர்மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்? RDMA, CMA, நீதி மன்றம் போன்ற அமைப்புகளை வைத்து கூட்டத்தை நடத்த வேண்டியதுதானே?” என தலைவியைப் பார்த்து கேட்கின்றனர்.

பொதுமக்களே! நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினர்களின் அறியாமையையும், ஆணவத்தையும், பகை உணர்வையும் கவனித்தீர்களா?

“ REGIONAL DIRECTORATE OF MUNICIPAL ADMINISTRATION { RDMA } , commissionorate of municipal administration ( CMA ) என்பன போன்ற தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் மேல் அமைப்புகளாலும், நீதிமன்றங்களாலும் எங்களின் செயல்பாடுகளில் தலையிட இயலாது.நீதிமன்றம் மூலமாக வேண்டும் என்றால் எங்கள் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள் “ என ஓடை சுகு உள்ளிட்ட பல நகர்மன்ற உறுப்பினர்கள் பலமுறை கூறினர் .

இவர்கள் தங்களை எந்த கேள்வி கணக்கிற்கும் அப்பாற்பட்ட வானளாவிய அதிகாரம் படைத்த அதி உயர் மனிதர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இதுதான் இவர்களின் உளவியல் சிக்கல்.

இந்திய அரசியல் சட்டத்தையும், அதனடிப்படையில் இயங்கும் அரசு நிர்வாகத்தையும், நீதிமன்றத்தையும் அவமதிக்க இந்திய குடிமகன் யாருக்கும் உரிமையில்லை என்பதை நம் நகர்மன்ற கனவான்களுக்கு யாராவது புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.

நமது நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நல்ல ஆன்மிக, ஒழுக்கவியல், உளவியல், சட்டவியல் , நிர்வாகவியல் பயிற்சி தேவைப்படுகின்றது. இல்லையென்றால் இவர்கள் எஞ்சியுள்ள 3 ¾ வருடத்தையும் இப்படித்தான் வீணடிப்பார்கள்.

தலைவி பிடிவாதமிக்கவர், ஆணவம் கொண்டவர் என்றெல்லாம் பல இடங்களில் விமர்சிக்கப்பட்டதுண்டு. அது உண்மையோ இல்லையோ, பண முதலைகளின் தலையீட்டுடன் கூடிய நடப்பு நகர்மன்றச் சூழலை சமாளிக்க, இவர்களிடம் தலைவி இப்படித்தான் நடக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Job opportunity in kayal panchyat
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [04 February 2013]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 25356

"நகராட்சியில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு பணியாட்கள் நியமனம் செய்ய அரசு அனுமதி கிடைத்திருப்பதாக ஆணையர் கூட்டத்தின்போது தெரிவித்தார்"

Copy and paste...

என்ன வேலை ... அத முதல்ல .. சொல்லுங்கோ.... ..அப்புறம் யோசிப்போம்.. BIO DATA.. அனுப்பவா அல்லது வேணாமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [07 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25425

தம்பி சாளை.பஷீர் அவர்களின் அனுபவம் முற்றிலும் உண்மையாகும். எனக்கும் இதே போன்ற அனுபவம்தான் முன்பு ஒரு முறை நான் நகராட்சி கூட்டத்தை காண சென்றபோது ஏற்பட்டது. அதுமுதல் நான் நகராட்சி கூட்டங்களை காண செல்வதில் விருப்பம் காட்டுவதில்லை.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved