Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:48:28 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10110
#KOTW10110
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 3, 2013
காயல்பட்டினம் அரசு நூலகத்தில் விரைவில் கம்ப்யூட்டர் ப்ரவ்ஸிங் பிரிவு துவக்கப்படும்! 100 புரவலர்கள் இணையும் விழாவில் மாவட்ட நூலகர் தெரிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4164 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அரசு நூலகத்தில் விரைவில் கம்ப்யூட்டர் ப்ரவ்ஸிங் பிரிவு துவக்கப்படும் என, 100 புரவலர்கள் இணையும் விழாவில் மாவட்ட நூலகர் தெரிவித்துள்ளார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் கிளை நூலகத்தின் நூலக புரவலர்களாக 100 பேர் இணையும் நிகழ்ச்சி, 02.02.2013 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நூலக வாசகர் வட்ட தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நூலக அபிமானிகளான ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி டாக்டர் செய்யித் அஹ்மத், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், நூலக புரவலர் காயல் கருப்பசாமி, ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நூலக புரவலரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ க.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நூலக வாசகர் வட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியருமான மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதோடு, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர், நிகழ்ச்சித் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார். காயல்பட்டினம் கிளை நூலக கட்டிட விரிவாக்கப் பணியில், வாசகர் வட்டத்துடன் இணைந்து பணியாற்ற தனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளை அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.

பின்னர், தனி மனிதராக முயற்சிகள் மேற்கொண்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த நூறு பேரை - ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி நூலக புரவலர்களாக இணையச் செய்த எல்.டி.இப்றாஹீம் அவர்களுக்கு நிகழ்ச்சியில் பொன்னாடை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.

பின்னர், அதிகளவிலான ஆர்வலர்களை நூலக புரவலர்களாக இணையச் செய்யக் காரணமான நிகழ்வுகளை எல்.டி.இப்றாஹீம் விளக்கிப் பேசினார்.



அடுத்து உரையாற்றிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நூலக கட்டிட விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலையில், காயல்பட்டினம் ரிஸ்வான் சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் - அங்குள்ள குறுகிய இடத்தில் நூலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருவதையும், அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் புத்தகங்கள் கடந்த மழைக்காலத்தில் நீரில் நனைந்துவிட்ட நிலையில், நூலகர் முஜீப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் அவற்றைப் பாதுகாத்த நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி, புதிக கட்டிடத்தில் நூலகம் செயல்படத் துவங்கும் வரை நகரிலுள்ள யாரேனும் தனி நபர்களோ, பொது நல அமைப்பினரோ பாதுகாப்பான இடத்தை தற்காலிகமாக நூலகத்திற்குத் தந்துதவுமாறு கேட்டுக்கொண்டார்.



பின்னர், பரமன்குறிச்சி கிளை நூலகர் ராஜதுரை, காயல்பட்டினம் கிளை நூலக அபிமானிகளான ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், டாக்டர் செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.





அதனைத் தொடர்ந்து, நூலகத்தில் புதிதாக புரவலர்களாக இணையும் 100 பேரின் புரவலர் சந்தா தொகையான ஒரு லட்சம் ரூபாயை, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட எல்.டி.இப்றாஹீம், நூலக வாசகர் வட்டத் தலைவர், நகர்மன்றத் தலைவர் ஆகியோரிணைந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் க.மந்திரம், காயல்பட்டினம் கிளை நூலகர் அ.முஜீப் ஆகியோரிடம் வழங்கினர்.



புதிதாக புரவலர்களாக இணைந்த 100 பேரின் விபரப் பட்டியல் வருமாறு:-







அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு வாசகர் வட்டம் சார்பில் அதன் நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கினர்.



பின்னர், சிறப்பு விருந்தினர் க.மந்திரம் உரையாற்றினார்.



ஒரே நேரத்தில் 100 பேர் இந்நூலகத்தில் புரவலர்களாக இணையும் நிகழ்ச்சி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது மாலையுடன் நிறைவுறும் நூலக நேரத்தை காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை - 12 மணி நேரம் செயல்படத்தக்கதாகத் தரம் உயர்த்த பொது நூலக இயக்குநரிடம் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியரை வைத்து விமரிசையாக நடத்த முதலில் கருதியதாகவும், நூலக கட்டிட திறப்பு விழா நடைபெறுகையில் அவரை அழைத்து நகர மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்த ஆவண செய்வதாகவும் தெரிவித்தார்.



காயல்பட்டினம் கிளை நூலகத்தில், கணினி வசதி செய்யப்படும் என்றும், இன்டர்நெட் ப்ரவ்ஸிங் பிரிவு துவக்கப்படும் என்றும், நூலகத்தில் பெண்களுக்குத் தனிப்பிரிவு அமைக்க பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், புதிய கட்டிடம் செயல்படத் துவங்கிய பிறகு, மின்தடை நேரங்களை சமாளிக்க தேவைப்படும் இன்வெர்ட்டர் கருவிக்கும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

பின்னர், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சிறப்பு விருந்தினருக்கும், கிளை நூலகர் முஜீபுக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.



இறுதியாக, நூலகர் அ.முஜீப் நன்றி கூற, நூலக புரவலர் எஸ்.கே.ஸாலிஹ் இறைப்பிரார்த்தனை செய்ய, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



இந்நிகழ்ச்சியில், காயாமொழி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, பிச்சிவிளை ஆகிய பகுதிகளின் அரசு நூலகர்கள், புதிதாகப் புரவலர்களாக இணைவோர், நகரப் பிரமுகர்கள், நூலக வாசகர் வட்ட அங்கத்தினர், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.







[கூடுதல் தகவல் மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 21:58 / 03.02.2013 – தகவல் உதவி: L.T.இப்றாஹீம்; படங்கள் உதவி: A.K.இம்ரான்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பயனுள்ள நிகழ்ச்சி பலன் தர வாழ்த்துக்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [03 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25333

நமதூர் அரசு நூலகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நூலகர் சகோதரர் முஜிப் அவர்களின் ஆர்வமும் ஆவலும் பாராட்டுக்குரியதே! இரு தினங்களுக்கு முன் என் கைபேசியில் தொடர்பு கொண்ட அவர், என்னை இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படி மரியாதை நிமித்தம் எனக்கு அழைப்பும் விடுத்தார். நான் சிக்கன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளான காரணத்தால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை!

மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசித்தலின் ஆர்வத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தி நூலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சகோதரர் முஜீப் மற்றும் நூலக புரவலர்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்! விரைவில் நூலக கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு எல்லோருக்கும் பயம்படும் விதத்தில் அது பயனுள்ளதாக அமைந்து மாநிலத்திலேயே தரமான நூலகங்களில் ஒன்றாகத் திகழ வாழ்த்துக்கள். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நூலகம் !!
posted by Salai. Mohamed Mohideen (USA) [05 February 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25387

நல்லதொரு நிகழ்ச்சி. மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது. நூலக மேம்பாட்டு விடயமாக சகோதரர் முஜீப் அவர்களிடம் நான் இருமுறை பேசியபோது, நமது நூலகத்தை மேம்படுத்த வேண்டுமென்ற அவருடைய தனியா ஆர்வத்தை உணர முடிந்தது. அதற்கு உறுதுணையாக இன மத பேதமின்றி அனைத்து சகோதரர்களும் சமூக ஆர்வலர்களும் நகராட்சி தலைவி அவர்களும் சீரிய சிந்தனை மிக்க நமதூர் பெரியவர்களின் வழிகாட்டுதலில் வெற்றியும் கண்டு அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணித்து வருகின்றார்கள். எல்லாம் வெற்றியாக அமைய இறைவன் அருள் புரிவாக !

நமது நூலகம் முழுமையாக பயன்படுத்த படவேண்டும் என்ற ஆவலும் நமதூர் மக்களால் நிறைவேற்ற படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved