Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:38:00 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9941
#KOTW9941
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 10, 2013
முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.3000/- வீதம் பரிசுத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு! 2011-2012 கல்வியாண்டு மாணவர்களும் இப்பரிசினை பெறலாம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2383 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.3000/- வீதம் பரிசுத்தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு:

நடப்பாண்டு முதல் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய / பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/- வீதம் பரிசுத்தொகை வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

எனவே, மார்ச் 2012-இல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களில் 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் 1168 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்று, சாதிச்சான்று மற்றும் தற்போது பயிலும் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றுகளின் நகல்களுடன் அவர்கள் +2 பயின்ற மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பிற்படுத்தப்ப்டடோர் நல இயக்குநர்


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [10 January 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24968

இன்ஷா அல்லாஹு , இந்த வருடம் அதிக மதிபென்கள் பெற்று மாநிலத்தின் முதல் மாணவ அல்லது மாணவியாக நமது காயல் நகர மாணவ, மாணவி கண்மணிகளில் ஒருவர் வர வேண்டும் என்று வல்ல நாயனிடம் துவா செய்கிறேன் .

மேலும் , இந்த வருடம் அறிவித்து உள்ள பரிசு தொகைகளை நமது ஊரில் நிறைய மாணவ , மாணவி கண்மணிகள் பெறவும் நான் மனமார வாழ்த்துகிறேன் .

நமது மாணவ , மாணவி கண்மணிகள் , இன்றே படிப்பில் அதிக கவனம் செலுத்தி , உங்களது இலச்சிய பாதையில் வெற்றி நடை போடா எனது நல்வாழ்த்துக்கள் . ( ஆல் தி பெஸ்ட் விசேஷ்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பேராசைதான்..!! ஆனாலும் சாத்தியமே.!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 January 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24969

முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றிகள்.

சா.ச்.ச. ..ச்..சா, நாங்கள் படிக்கும் காலத்தில், இப்படி எல்லாம் பரிசு மழை அறிவிக்கவில்லையே..!! அறிவித்து இருந்தால்..!..??

இன்ஷா அல்லாஹ்.. வரும் ஆண்டில் இந்த 500 இடத்திற்கான பரிசுகள் அனைத்தும் நம் காயல் பிள்ளைகளுக்கே கிடைக்கட்டும்.

பேராசைதான்..!! ஆனாலும் சாத்தியமே.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பரிசு தலைவி
posted by mackie noohuthambi (Kayalpatnam) [11 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24978

புரட்சி தலைவி அவர்கள் விலையில்லா அரிசி சீனி கணினி என்றெல்லாம் அறிவித்து கலக்குவதுபோல் பொங்கல் பரிசு என்று அதிரடியாக அறிவித்து இப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசு தொகை வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது . புரட்சி தலைவிக்கு "பரிசு தலைவி" என்று பட்டம் கொடுக்கலாம்.

ஆனால் அவர்கள் இந்த பரிசுகளை வழங்குவதெல்லாம் அரசு பணம்தான். இன்னும் சொல்லப்போனால் டாஸ்மாக் என்ற சாராயக் கடை வருமானத்தில் இருந்துதான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். எல்லா மதங்களும் மதுவை எதிர்க்கின்றன. எல்லா மதங்களும் நாம் சம்பாதிக்கும் பொருள் நேர்மையான வழியிலிருந்து பெறவேண்டும் அதை செலவழிப்பதும் நேர்மையான வழியில் செலவழிக்க வேண்டும் என்றுதான் சொல்கின்றன. ஆனால் இந்த சாராய தொழிலை அரசே நடத்தி அதிலிருந்து கிடைக்கின்ற பணத்தை இப்படி நல்ல காரியங்களுக்கு செலவளித்தால் அது ஏற்புடயதுதானா? IT IS A MILLION DOLLAR QUESTION. இந்த பரிசை பெறுவதற்கு எதனை ஆபீசுக்கு அலையை வேண்டுமோ யார் யாரை பார்க்கவேண்டுமோ, சிரமம் இல்லாமல் தகுதியானவர்களுக்கு உடனடியாக கிடைத்தால் நல்லதுதான். சிவப்பு நாடா முறை RED TAPISM அரசியலில் நிறைய உண்டு.

நமதூர் மக்கள் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நம் மக்களுக்கு வழங்கும் கல்வி பரிசும் ஊக்கத்தொகையும் எப்படி என்பதை சற்று யோசித்து பாப்போம்.நமதூர் மக்கள் கொடும் வெயிலிலும் கடும் குளிரிலும் இரவு பகல் பாராது குடும்ப சுகங்களை இழந்து தங்கள் உடல்நலத்தையும் தியாகம் செய்து பெறும் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை நம்மூர் மக்கள் கல்விக்காக செலவு செய்து வருவதை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம் அனுபவித்து வருகிறோம். அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் பிரார்த்திக்க கடமை பட்டிருக்கிறோம்.

" உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்று வள்ளுவம் சொல்கிறது. நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அன்நன்றி என்று தரும்கொல் என வேண்டா நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரை தலையாலே தான் தருதலால்.என்று அவ்வை சொல்கிறாள். தன்னலமற்ற, சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் உதவிகளும் பரிசுகளும் பாராட்ட தக்கவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [13 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25008

சிறுபான்மை மாணவ,மானவியாரை ஊக்கபடுத்த அதிகம் அக்கறை கொண்டவர் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதாதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved