Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:45:53 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9619
#KOTW9619
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 13, 2012
மாவட்ட ஆட்சியருடன் KEPA நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4003 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு புதிதாகத் துவக்கப்பட்ட அமைப்பு KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்து வருவதுடன், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் KEPA கொண்டுள்ளது.

அதனடிப்படையில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA) சார்பில், அதன் செயலாளர் அப்துல் காதர் நெய்னா, துணைச் செயலாளர் முஜாஹித் அலி, பொருளாளர் ஏ.ஆர்.இக்பால், செயற்குழு உறுப்பினர்கள் என்.எஸ்.இ. மஹ்மூத், எஸ்.கே.ஸாலிஹ், எம்.எஸ். ஸாலிஹ், சமூக ஆர்வலர் ஹாமீத் ரிபாய் ஆகியோரடங்கிய குழு 12.11.2012 திங்கட்கிழமையன்று (நேற்று) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை மீண்டும் சந்தித்து. காயல்பட்டினம் கரையையொட்டி அமைந்துள்ள கடல் மீண்டும் செந்நிறமாக மாறியுள்ளது குறித்த நிழற்படங்கள், அசைபடங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் இச்சந்திப்பின்போது மாவட்ட ஆட்சியரிடம் காண்பிக்கப்பட்டது.

அத்துடன், கடந்த மாதம் 29ஆம் தேதியன்று, அமைப்பின் சார்பில் அவரைச் சந்தித்து அளித்த புகார் மனு குறித்தும் அவரிடம் நினைவுகூரப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பொறுமையுடன் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குழுவினரிடம் தெரிவித்தார்.

முன்னதாக, KEPA ஏற்பாட்டில் - 04.11.2012 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 08.30 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட - DCW தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியில், கடலில் கலக்கும் கழிவுநீர் ஓடையை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் நகரின் பொதுநல அமைப்பினர் நேரில் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Abu Rushda (Dubai) [13 November 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23817

The team is doing a bold and commending job. Let God Almighty be with you in your endeavors. It is high time for us to make a pledge to support this team with personal, professional and financial assistance to the maximum extent possible. Without such a support, they cannot sustain their fight against such a big monster.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நிதி நிலை
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23820

சென்று வந்தவர்கள் ஆட்சி தலைவரை சந்தித்த செய்தியையும் ஆட்சி தலைவர் அந்த குழுவினருக்கு அளித்த கண்ணியத்தையும் மரியாதையையும் சொன்னார்கள்.

ஆஷிஷ் குமார் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு மக்களுக்கு பயனளிக்கும் விஷயங்களை ஊக்குவிக்கவும் மக்களுக்கு ஊறு விளைவிக்கும் விஷயங்களை களையவும் துணிச்சலுடன் செயலாற்றுகிறார் என்று பரவலாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்த அடிப்படையில் நமது மக்களின் கோரிக்கைகளையும் அவர் நல்லவிதம் கவனித்து ஆவன செய்வார் என்று எதிர்பார்க்கலாம். நம்பிக்கை ஒளி தெரிகிறது.

KEPA இயக்கத்துக்கு இந்த முயற்சிகளை முன்னெடுத்து செல்ல, அவர்கள் பல அதிகாரிகளையும் சந்திக்க வேண்டி இருப்பதால் பொருளாதார நிதி ஆதாரங்கள் தேவைப்படுமே, இதை அவர்கள் மக்கள் மத்தியில் சொல்லி அதற்கான நிதியை கேட்டால் மக்கள் தயக்க மின்றி கொடுக்கவேண்டும்......நிச்சயம் தருவார்கள். அப்போது தான் அவர்களும் உற்சாகமாக பணி புரியமுடியும். அதற்கான வியூகங்கள் வகுத்து மக்களை சந்திக்கும்படி KEPA அமைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன். பொதுவாழ்வில் இருந்து காயல்நல மன்றங்களில் பணி புரியும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களாலேயே இதனை இங்கு பதிவு செய்கிறேன். அல்லாஹ் இந்த முயற்சிக்கு நல்ல பலனை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தாழ்மையான வேண்டுகோள்
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [13 November 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 23829

அன்பான KEPA நிருவாகிகள் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி. இந்த சூடோடு சமூக போராளிகள் திரு வைகோ, திரு.திருமாவளவன், தோழர் நல்ல கண்ணு, பேராசிரியை பாத்திமா பாபு போன்ற வர்களையும் சந்தித்து நமது நிலையை தெரிவு படுத்தினால் DCW வெறியன் கொஞ்சமேனும் பயபடுவான் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

ஒரு கை மட்டும் ஓசை எழுப்பினால் சப்தம் வராது அரசு தொழிற்சாலைக்கு ஒரு சார்பாக தான் அமையும். இனி தவறு வராது என்று ஈசியாக கேடுகட்டட DCW நிருவாகம் மாவட்ட ஆட்சி தலைவருக்கு பதில் அளிக்கும். அந்த பதிலை மட்ட ஆட்சி தலைவர் நமக்கு தருவார். இதுதான் நடக்கும்.

அகவே நமது போராட்த்தை விரிவு படுத்தினால் நன்று. எனது கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. உங்கள் நல் முயற்சி வெற்றி அடைய பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [13 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23830

இந்த நகர் நலன் முயற்சிக்கு இன்ஷா அல்லாஹ் பலன் கிடைக்க துவா செய்வோமாக...

நகர் நலன் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க சொந்த பல வேலைகளுக்கு மத்தியிலும் நகர் நலனே முக்கியம் என்று ஆட்சியரை சந்தித்து பேசி வந்த நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களுக்கு வல்ல இறைவன் அதற்குரிய நற்கூலியை கொடுப்பானாக.. ஆமின்..

உங்கள் நல் முயற்சி வெற்றி அடைய பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. களத்தில் இறங்கும் நேரம் வந்து விட்டது..
posted by சொளுக்கு.M.A.C.முஹம்மது நூகு (சென்னை) [13 November 2012]
IP: 203.*.*.* India | Comment Reference Number: 23832

சொல்வதை உரக்கச் சொன்னால் மட்டுமே உலகத்திற்கு கேட்கும். நுஸ்கி காக்கா சொன்னது போல செய்யலாம் இல்லை எனில் நமதூரில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் பொது நல மன்றங்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டம் நடத்தலாம்.

கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்களின் போராட்டத்தை நினைத்து பாருங்கள். அது ஒரு மத்திய அரசின் திட்டம் மேலும் அது போல ஒரு திட்டம் நம் நாட்டுக்கு அவசியம் தேவையானது அதனை எதிர்த்தே இவ்வளவு நாளாக போராட்டம் நடைபெறுகிறது என்றால் DCW ஒரு தனியார் தொழிற்ச்சாலை ஒரு தனி நபருக்கு மட்டுமே லாபம் தரக்கூடிய நிறுவனம் அதனை நாம் ஏன் எதிர்த்து போராடி வெற்றி காணக்கூடாது.

பொதுவாக ஒரு தொழிற்ச்சாலை ஒரு ஊரில் அமைகிறது என்றால் அந்த தொழிற்ச்சாலை நிர்வாகமானது தான் இருக்கும் இடத்தையும் தன்னை சுற்றி உள்ள இடத்தையும் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவிற்க்கு நடந்து கொள்ள வேண்டும் மேலும் அத்தொழிற்சாலை அமைந்துள்ள ஊர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். இது இரண்டையுமே செய்யாத ஒரு நிறுவணத்தை எதிர்த்து நாம் கட்சி, மதம் பாகுபாடின்றி , ஈகோ மற்றும் சுயநலம் ஒரு துளி கூட இல்லாமல் நிச்சயம் போராட வேண்டும். எப்பொழுதுதான் இதற்கு விடிவு காலம் வருமோ.

கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டே விரலை வலியாக்கி கொண்ட இந்த ஊர் எப்போதுதான் அநீதிக்கெதிராக கையை தூக்கப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [13 November 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23836

அஸ்ஸலாமு அலைக்கும்

>>KEPA << தங்களின் உழைப்பிற்கு வல்ல இறைவன் நல்ல பலனை தருவான் ..இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ....தங்களின் குழு அடிக்கடி நம் மாவட்ட கலைக்டரை சந்திப்பது ரொம்பவும் நல்லதும் / அவசியமும் கூட.....அடிக்க ...அடிக்க ...தான் ...அம்மியும் ...நகரும் என்று நம் முன்னோர்கள் சொல்வது போல.....நம் மாவட்ட கலைக்டர் அவர்களின் .மனசும் / எண்ணமும் ...படிப்படியாக மாறி நிச்சயமாக நம் ஊர் மக்களின் உயிர்... நலன் பேனி பாதுகாப்பார் என்பது நிச்சயம்.

அடுத்த தடவை ( KEPA ) தங்களின் அமைப்பு . நம் மாவட்ட கலைக்டர் அவர்களை சந்திக்க செல்லும் போது நம் ஊரின் முக்கியமான அமைப்பான ....ஐக்கிய பேரவை & நம் ஊரின் மற்ற ஒரு சில அமைப்புகளையும் / நம் ஊரின் முக்கியமான ஜமாத்தின் தலைவர்களையும் / நம் ஊரின் முக்கியமான பெரியவர்களையும் / நம் ஊர் அரசியல் கட்சி தலைவர்களையும் / தேவை பட்டால் நம் ஊர் நகர் மன்ற உறுப்பினர்களையும் / நம் தலைவி அவர்களையும் கூட அழைத்து சென்று பேசலாமே .........அப்பொழுது தான் நம் செயல் பாடு விரிவடையும் .... நமக்கு வெற்றியும் கிட்டும்.....

>>>>> நாம் முழுமையான வழுவுடன் செல்வது தான் சால சிறந்ததும் ...+ வழிமையும் கூட. <<<<

நாம் நம் பக்கத்து ஊரான ....கூடங்குளம் ....மக்களின் ஒற்றுமையுடன் சேர்ந்த ...வழிமையான போராட்டத்தை நாம் டெய்லி பார்த்தும் / கேட்டும் ....வருகிறோம் ........அதனால் தான் மாநில அரசும் / மத்திய அரசும் இவர்கள் பக்கம் முழு கவனத்தை திருப்பியது....இல்லையா....அது போல் .நாமும் ( கூடங்குளம் ) இது போன்று மிகவும் வலிமையுடன் ஒற்றுமையாக கடும் போராட்டதில் இறங்கினால் தான்.நாம் நம் ஊரை இந்த சனிய பிடித்த '' காட்டேரி >> D.C.W. << விடமிருந்தும்.நம் ஊர் மக்களை. நாம் கண்டிப்பாக காப்பாற்ற முடியும்.

நாம் ..ஒற்றுமையாக இருப்போம் ... ஒற்றுமையாக செயல் படுவோம் ...ஒற்றுமையின் வேகத்தில் .....வெற்றியும் பெறுவோம் ..........இன்ஷா அல்லாஹ்.. இது நடப்பது நிச்சயம் .....

நம் ஊர் மக்களே நமக்கு இந்த சனிய பிடித்த தொழிற்சாலையை வைத்து ...என்னதான் பிரோசனம் இருக்கிறது ....நம் ஊர் மக்களின் மன நிம்மதியை தான் கெடுத்து வருகிறது ...& நம் மக்களின் உயிரை குடித்தும் வருகிறது ........ வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by seyed mohamed sayna (Bangkok) [14 November 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 23839

Comment Reference Number: 23829

அன்பு சகோதரர் அடிக்கடி வைகோ வைகோ என்று சொல்லுகிறார்கள்,
மறந்து விட வேண்டாம் அன்று வைகோ அவர்கள் இது விசயமாக courtil கேஸ் போடா போகிறார் யன்று சொன்னார்கள், ரொம்ப சூடாக நம் காயல்பட்டினத்தில் சொல்லிவிட்டு சென்றார்கள் விடிவு காலம் பொறந்து விட்டது என்று நினைத்தேன், விடிவு காலம் வைகோ அவர்களுக்கு பிறந்தது போல தெய்ரிஎகின்றது அதோடு முடித்து விட்டார்கள்,

இந்த விஷயத்துக்கு எந்த அரசியல் கட்சியும் தேவை இல்லை மக்கள் கட்சி போதும் வெற்றி நமக்கு கிடைக்கும்

நம் காயளர்கள் நன்கு படித்தவர்கள் பல துறைகளிலும் பொறுப்பில் இருக்கீறார்கள், பல நாடுகளிலும் இருக்கீறார்கள் நம் காயாளர்கள் நினைத்தாள் இதுக்கு வெற்றி கிடைக்கும் இன்சா அல்லாஹ

அரசியல் வாதிகளை கூபிட்டு அவர்களை வசதி காரர்களை ஆக்கி விடாதீர்கள். நாம் தனித்து இதில் செயல் பட்டாள் நாம் நேரில் சென்று சந்திக்கலாம். அரசியல் வாதிகளை இணைத்து கொண்டால் அவர்களிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் மற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது என்னோட கருத்து பிழை இருப்பின் திருத்தி கொள்கிறான்

இப்படிக்கு
Seyed Mohamed Sayna
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok - Thailand!!--SKS-->


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தலைக்கு மேலே தாய்நாடு! (?!)  (12/11/2012) [Views - 4214; Comments - 14]
பாத்துப் போங்க! (?!)  (11/11/2012) [Views - 3511; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved