Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:30:40 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9613
#KOTW9613
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 12, 2012
எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற அலுவலர் முருகன் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4642 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி பணியாற்றி, பணி நிறைவு பெற்ற - காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த முருகன் என்ற சுப்பிரமணியன், கடந்த பல நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் - அண்ணாமலை தம்பதியின் மகனும்,

செண்டு என்பவரின் கணவரும்,

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் எஸ்.சிதம்பரம் (கைபேசி எண்: +91 94428 34774), எஸ்.ஆழ்வார், எஸ்.லக்ஷ்மி எஸ்.அண்ணாமலை ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரின் உடல், இன்று மாலை 04.00 மணியளவில், காயல்பட்டினம் பப்பரப்பள்ளி இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

காலஞ்சென்ற முருகனின் இயற்பெயர் சுப்பிரமணியன். தனது 19ஆம் வயதில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்து, 41 ஆண்டுகள் பணியாற்றி, பணி நிறைவுபெற்றுள்ளார்.

அவர் பணியில் சேர்ந்தபோது, எல்.கே.மேனிலைப்பள்ளியின் நிறுவனர் மர்ஹூம் ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி - அவரை நேர்காணல் செய்கையில், ‘சுப்பிரமணியன்’ என்றாலும், ‘முருகன்’ என்றாலும் ஒரே பொருள் கொண்ட பெயர்தான்... எனவே, உன்னை பணி நிமிர்த்தம் அடிக்கடி அழைக்க வேண்டியிருப்பதால் ‘முருகன்’ என்றே அழைக்கிறேன்” என்று கூறியதன் அடிப்படையில், அன்று முதல் அவர் ‘முருகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

தகவல்:
ஹிட்லர் M.சதக்


[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 08:55 / 12.11.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆழ்ந்த அனுதாபங்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [12 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23753

எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற அலுவலர் முருகன் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சமீப காலமாக நமதூரில் கல்வி, பாடசாலை, சம்பந்தப்பட்டவர்களின் மரணம் அதிகரித்து வருகின்றது.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [12 November 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23759

அண்ணன் சுடலை நீ முன்னே போ நான் பின்னால் உடனே வருகிறேன் என்ற முருகன் அவர்களின் மரணம் அதிர்ச்சியை தருகிறது.

நாங்கள் எல்கே பள்ளியில் படிக்கும் சமயம் எல்கே மாமா அவர்கள் ஒழுக்கத்திற்கு மிகுந்த முன்னுரிமை கொடுப்பார்கள் . அந்த சமயம் எல்கே மாமா அவர்கள் மறைந்த சுடலை அண்ணன் அவர்களயும் முருகன் அண்ணன் அவர்களையும் ஆறுமுகநேரி, திருசெந்தூர் சினிமா தியட்டர்களில் பள்ளி நேரத்தில் வராமல் கட்டடித்து செல்லும் மாணவர்களை கண்காணித்து வர சொல்லுவார்கள். எங்களுக்கே தெரியாது மறைந்து கண்காணித்து எல்கே மாமா அவர்களிடம் பெயர் வாரியாக சரியாக சொல்லி அடி வாங்கி தருவார்கள்.

அந்த நேரத்தில் கசந்தாலும் இப்போது அதன் அருமை தெரிகிறது. மற்றுமல்ல எல்கே பள்ளி தம் சொந்த வீடு போல் கட்டிகாத பெருமை தியாக மனப்பான்மை மறைந்த சுடலை அண்ணன், முருகன் அண்ணன் இவர்களை சாரும்.

அண்ணன் முருகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

M .E .L .நுஸ்கி
முன்னாள் மாணவன்
எல்கே பள்ளி
ரியாத்
சவுதிஅரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஆழ்ந்த அனுதாபங்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [12 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23763

நாங்கள் எல்கே ஸ்கூலில் படித்துக்கொண்டிருக்கும் போது LK அப்பா (Correspondant ) ரூமிற்கு எங்களை கூப்பிடுவது சகஜமான ஒன்றாய் இருந்தது காரணம் நாங்கள் ரொம்போ நல்ல பிள்ளைகள் (?????) லிஸ்டில் இருந்தோம்.

எப்போ ரூம் உள்ளே இருக்கும் போதும், LK அப்பா எதையாவது மறந்தாலும் உடனேயே "முருகா முருகா" என்று கூச்சல் போடும் அளவிற்கு அவர்களின் நம்பிக்கைக்கு பாத்தியமானவர்.

அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

சாளை ஷேக் ஸலீம் & குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by syedahmed (GZ, China) [12 November 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 23770

Both Mr.Sudalai and Mr.Murugan fetched kind & love among all the L.K.school students and also the kayalties with very proud of services.

May his soul rest in peace


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இரங்கல்
posted by NIZAR AL (kayalpatnam) [12 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23772

எங்கள் பள்ளியின் ஓய்வுபெற்ற அலுவலர் முருகன் அண்ணன் மறைவு முன்னாள் மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகும்.

மாணவர்களின் அன்பையும், மரியாதையும் பெற்ற முருகன் அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANPU) [12 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23777

அண்ணன் முருகன் அவர்களின் மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.அன்னாரை பிரிந்த துயரில் வாடும் குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்!

எங்கள் அன்புக்குறிய L .K .மாமா அவர்கள் மிக சுகக்குறைவாக இருந்த நேரத்தில் அவர்களை நலன் விசாரிக்க சென்றபொழுது எங்களை பர்ர்த்தவுடன் கண்ணீர் மல்க வரவேற்று வாஞ்சையுடன் ஒவ்வொருவரையும் நினைவுக்கு கொண்டுவந்து உரிமையுடன் அவர்களின் வாப்பா வரைக்கும் பெயர்சொல்லி விசாரித்த L .K . மாமா அவர்கள், அட நம்ம முருகன் எப்படி இருக்கிறான் என்று தன் ஊழியரையும் விசாரித்தார்கள்! அந்த அளவிற்கு L .K மாமா இதயத்தில் இடம் பிடித்திருந்தார் முருகன் அவர்கள்!

உண்மை ஊழியனை ஊரே போற்றும் என்பதற்கோர் அருமையான உதாரணம் அழகன் என்ற பெயர்பொருளில் பொதிந்திருக்கும் முருகன் அவர்கள்!

பள்ளி நினைவுகளுடன்,
L .K .மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ தலைவன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by AM.NOORMOHAMEDZAKARIYA (KAYALPATNAM) [12 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23783

அனுதாபங்கள்...!

ஆழ்ந்த அனுதாபங்கள்...! அண்ணன் முருகன் அவர்களின் மரணத்தால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

மாணவர்களின் மரியாதையும் அன்பையும் பெற்ற அண்ணன் முருகன் அவர்கள் என்றென்றும் மாணவர்களின் மனதில் நீங்காது இடம் பெற்றவர் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மறக்க முடியாது,,,
posted by MOHAMMED LEBBAI MS (DXB) [13 November 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23804

முருகன் அண்ணன் அவர்கள் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை அவர்தம் குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்,, எங்கள் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாதவர்களில் முருகன் அண்ணன், சுடலை அண்ணன் மற்றும் சபியா கம்மா ஆகியோரும் முக்கியமானவர்கள்,,,,

காரணம் இவர்கள் day நேரத்தில் மட்டுமல்லாது night study யிலும் எங்களோடு நல்ல ஒத்துழைப்பு தந்தவர்கள் ,, பள்ளிக்காக உழைத்தவர்கள்,,, நன்றி,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [13 November 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23810

சில நாட்களுக்கு முன்பு சுடலை அண்ணன் அவர்களின் மறைவு மனதில் இருந்த பல நினைவுகளை வெளியில் கொண்டு வந்ததது.

இப்பொழுது முருகன் அண்ணன் அவர்களின் மறைவு, மீதம் இருக்கும் நினைவுகளை அசை போட வைத்து விட்டது.

முருகன் அண்ணனின் குடும்பத்தார் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கும் என்னுடைய அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.

* இன்றைய காலத்தில், பள்ளிகூட நிகழ்வுகள் என்பது படிப்பு, டியூஷன் என்று சிறு வட்டத்தில் முடிந்து விடுகிறது. ஆனால், எல். கே அப்பா காலத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன.

* மாணவர்களின் ஒழுக்கம், தூய்மை, படிப்பு, கண்டிப்பு என்று பல பரிணாமங்களை அன்று எல்.கே. அப்பாவிடம் கண்டோம்.

* பள்ளிக்கூடத்தில் அனைத்து மாணவர்களின் கை நகங்களையும், பல்லையும், உடைகளையும் பார்த்து.. பார்த்து ரேங்க் கார்டு கொடுத்து கண்டித்து, பாராட்டி, அரவணைத்து, லரபு கொடுத்து பக்குவப்படுத்திய ஒரு நல்ல மாமனிதர் LK அப்பா அவர்கள்.

* ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு சினிமா அரங்கில் மாணவர்களை கண்காணிக்கும் பணி, ரமலான் காலங்களில் தராவிஹ் தொழாத, சேட்டைகள் செய்யும் மாணவர்களை கண்டு பிடிக்கும் பணி... என்று அவர்களின் சமூக தொடர்புகள் இறக்கை விரிக்கும்.

## எங்கள் பகுதிக்கு மறைந்த செய்துல்லாஹ் சார் அவர்களும், முருகன் அண்ணன் அவர்களும் தான் இன்டெர்போல் அதிகாரிகள்.

ஒரு சமயம் எங்கள் குருப், பெண்கள் தைக்காவில் தராவிஹ் தொழவைக்கும் லெப்பைக்கு வைத்து இருந்த பண்டங்களையும், ஹல்வா பாலையும் ஆட்டையை போட்டு வரவும், லெப்பை சலாம் கொடுக்கவும், அவர் சப்தம் போடவும், பெண்கள் அலறவும், நாங்கள் பண்டங்களோடு ஓடவும், இன்டர்போல் அதிகாரிகளின் டார்ச் லைட் சரியாக எங்களின் முகங்களில் அடிக்கவும்.. அப்ப்பாப்ப அனைத்தும் ஒன்றாகவா நடக்கனும்.

அப்புறம் என்ன.. LK அப்பாவிற்கு புகார் சென்று விட்டது. தராவிஹ் தொழாமல் இருந்ததாலே லரபு செமத்தியாக கிடைக்கும்.. எங்கள் செயலோ.. பாக்தாத் திருட்டு செயல் அல்லவோ. அப்பா செம டென்ஷன்.

அடுத்த நாள்.. பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு கிளாசுக்கும் முருகன் அண்ணன் வந்து, எலே.. நீ வா..லே.. , எலே.. நீ வா..லே.. என்று சரியாக அனைவர்களையும் அள்ளிக்கொண்டு LK அப்பாவிடம் கொண்டு சென்று விட்டார்.

ஒவ்வொருவர்களுக்காக வளைகாப்பு நடந்துதே பாருங்க.. உன் உம்மாவை தெரியும், வாப்பாவை தெரியும் என்று அடி பின்னி எடுத்து விட்டார்கள்.(இந்த காலத்தில் பசங்களை தொட முடியுமா..!)

அடுத்து நான் உள்ளே போகணும்..அடி வாங்க. அந்த சமயம் முருகன் அண்ணா. சொன்னார்..

" இந்தா பாரு.. LK அப்பா.. ஒரு அடி அடித்தவுடன் கத்தி கதறி வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து விடு.. அப்பதான் அடுத்த அடி விழாது.. இல்லை..அம்புட்டு தான்.. பார்த்துக்கோ..!!"

சென்றேன், பிளாஸ்டில் பைப்பால் ஒரு அடி வாங்கினேன், கதறி சுருண்டு விழுந்து விட்டேன்,

முருகா.. முருகா இவனை பாரு என்று அப்பாவும் அலற,

முருகன் அண்ணன் வந்து என்னை வெளியில் கொண்டு வந்து விட்டார்.

## முருகன் அண்ணன் எனக்கு செய்த உதவிக்கு சூட்சுமம், என்றுமே ஸ்டார்ட் ஆகாத LK அப்பாவின் காரை தினமும் தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ண உதவுவது நாங்க தானே.##

எல்லாம் சுகமான நினைவுகள். அந்த அடிகளிலும் சுகங்கள் இருந்தன.

இன்னும் பல சம்பவங்கள் உள்ளன.. கருத்து பகுதி.. கட்டுரை பகுதியாக மாறி விடக்கூடாது.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.A.SEYED ALI (KAYALPATNAM) [13 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23818

முருகனின் மறைவிற்கு முதலில் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டு அவர் பற்றிய ஒரு புதுமை தகவலை இங்கு என்னால் பரிமாறாமல் இருக்க முடியவில்லை.நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது என்று நினைக்கிறேன் அதாவது 1961 -62 பள்ளியில் புதுபுது ஆசிரியர்கள் அப்போதுதான் நியமனம் ஆனார்கள்,தலைமை ஆசிரியர் ஞானையாஅவர்கள் உட்பட.அப்போதுதான் பியூனுக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தார்கள்.

ஸ்கூலுக்கு வெளியே நிதமும் ஐஸ் விற்க போட்டி போட்டுக்கொண்டு இரு ஐஸ் வியாபாரிகள் வருவார்கள்.அன்று ஒருநாள் இந்த வியாபாரப்போட்டியில் ஒருவருக்கு படுதோல்வி.தோல்வியடைந்தவர் இனி தான் ஐஸ் விற்க மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு சிலரின் ஆலோசனை படி நேராக ஸ்கூலுக்குள் வந்து எல்கே மாமாவை சந்தித்து முறை படி மனு செய்து பியூனாக சேர்ந்தார்.அவர்தான் முருகன்.தோல்வியே வெற்றியின் ஏணிப்படி என்பதை நிரூபித்துக்காட்டினார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. கடமையே கண்ணென வாழ்ந்தவர்...
posted by S.K.Salih (Kayalpatnam) [13 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23837

மதிப்பிற்குரிய முருகன் அண்ணன் அவர்கள் கடமையே கண்ணென வாழ்ந்தவர்...

பொதுவாக இவரும் சரி, சுடலை அண்ணனும் சரி... சுகவீனமுற்ற நேரங்களிலும் பள்ளிக்கு வருவதைத் தவிர்த்ததில்லை... (மிகவும் இயலாமற்போனாலே தவிர!)

முருகன் அண்ணனின் மகனார் எங்கள் ஆசிரியர் சிதம்பரம் அவர்கள் எங்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருப்பார்... அப்பா முருகன், அலுவலக உதவியாளராக அவரிடத்தில் அவ்வப்போது சுற்றறிக்கைக்கு கையெழுத்து பெற்றுச் செல்வார்... அந்நேரத்தில் நாங்கள் அவரை உற்று நோக்குவோம்... பெற்ற பிள்ளை உயர்வான இடத்தில் இருக்க அவனிடம் கையெழுத்து பெறும் நிலையாகிவிட்டதே என்ற ஆதங்கம் அவர் கண்களில் வருகிறதா என்று! ம்......ஹும்! ஏமாற்றமே எங்களுக்கு மிஞ்சும்! வீட்டில்தான் உறவே தவிர - பள்ளிக்கு வந்துவிட்டால் பணி நிமிர்த்தமான சந்திப்புதான் - பேச்சுதான் - செயல்தான்!

இன்றிருக்கும் அலுவலர்களும் ஒரு சுடலையாக, முருகனாக பணியில் சிறந்து மிளிர எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, முருகன் அண்ணனின் பிரிவால் துயருற்றுள்ள என் ஆசிரியர் சிதம்பரம் சார் உள்ளிட்ட குடும்பத்தினர் பொறுமை காக்க அன்புடன் வேண்டுகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தலைக்கு மேலே தாய்நாடு! (?!)  (12/11/2012) [Views - 4210; Comments - 14]
பாத்துப் போங்க! (?!)  (11/11/2012) [Views - 3507; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved