Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:26:49 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9558
#KOTW9558
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 5, 2012
ஸீ-கஸ்டம்ஸ் சாலை - சொளுக்கார் தெரு சந்திப்பில் நாற்புறமும் வேகத்தடை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3721 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - சொளுக்கார் தெரு - முத்துவாப்பா தைக்கா தெரு சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அப்பகுதி மக்களால் சிமெண்ட் மூலம் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது..











இந்த வேகத்தடைகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், தமது வாகனங்கள் அவற்றைக் கடந்து செல்கையில் சேதத்திற்குள்ளாவதாகவும், இரவு மின்தடை நேரங்களில் இது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் பொதுமக்கள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், பலமுறை நகராட்சியிடம் முறையிட்டும் இன்றளவும் நகராட்சியால் வேகத்தடை அமைக்கப்படாத நிலையிலேயே தாங்கள் அமைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரிடம் வினவுகையில், நகரெங்கும் இதுபோன்று விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க முந்தைய கூட்டமொன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், சொற்பமான செலவுத்தொகையைக் கொண்ட இதுபோன்ற பணிகளை தனிப்பணியாக எடுத்துச் செய்வதற்கு ஒப்பந்தக்காரர்கள் எவரும் முன்வரவில்லை என்றும், அதன் காரணமாக விரைவில் நகரில் புதிய சாலைகள் அமைக்கப்படும்போது இப்பணியையும் சேர்த்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பொதுமக்களின் அச்சத்தைப் போக்குமளவுக்கு வேகத்தடையின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கள உதவி:
ஹாஃபிழ் H.A.அப்துல்லாஹ் (மும்பை)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by salai s nawas (singapore) [05 November 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23486

முந்தைய கூட்டமொன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், சொற்பமான செலவுத்தொகையைக் கொண்ட இதுபோன்ற பணிகளை தனிப்பணியாக எடுத்துச் செய்வதற்கு ஒப்பந்தக்காரர்கள் எவரும் முன்வரவில்லை

" ஏன் வரவில்லை? நம் ஊரில் சிறிய மற்றும் பெரிய ஒப்பந்தம் எடுக்கும் அளவுக்கு பணம் இல்லையா அல்லது தகுதி இல்லையா? யார் யாரோ இந்த ஊரில் வந்து ஒப்பந்தம் எடுத்து பணமழையில் புரளும் போது, நிறைய இளைஞ்சர்கள் தகுதி இருந்தும் இன்னும் வேலை இல்லாமல் ஏழ்மை நிலையிலே உலாவி கொண்டிருக்கின்றனர்.

எங்கே போய் சொல்லுவது........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (Hao Duong , Saigon) [05 November 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 23487

இவர்கள் கோரிக்கையை நகராட்சி கண்டுகொள்ளவில்லை என்பதற்காக, இவர்களாகவே வேகத்தடை அமைத்துள்ளது முறையற்ற செயல். இவர்கள் அமைத்திருக்கும் வேகத்தடையின் உயரத்தினால் விபத்துகள் மேலும் அதிகரிக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3.
posted by M.S.Kaja Mahlari (Singapore) [05 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23490

சலாம். வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துக்களை தவிப்பதற்கு "வேகத்தடை " அமைப்பது அவசியம்தான்.

அதே நேரத்தில் அதனை முறையோடு அமைப்பது அவசியம்.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் வாகனங்களை உதிரிப் பாகங்களை சேதப்படுத்தக்கூடாது . ஏனோ தெரியவில்லை? நமதூரில் அமைக்கப்பட்ட பெரும்பான்மையான வேகத்தடைகள் நடுரோட்டில் அமைக்கப்பட்ட "ஒரு ஆலடி சுவர்" போல்தான் தெரிகிறது!

திருநெல்வேலி ,தூத்துக்குடி போன்ற நகரங்களில் அமைக்கப்பட்ட முறைப்படி நமதூரிலும் அமைக்கலாமே !

ஏன் ஒவ்வரு முறையும் அமைப்பதும், பிறகு குறைப்படும், நீக்குவதும் இப்படி வீண்விரயங்கள், சிரமம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

அரசாங்க பணமானாலும், நகராட்சி பணமானாலும் மொத்தத்தில் அனைத்தும் மக்களின் பணமே !

ஆகவே ! தலைநகரங்களில் அமைக்கப்பட்ட "முன்மாதிரிகளைப் போன்று " நமதூரிலும் அமைக்க வேண்டும் என வேண்டுகிறேன் ! நகராட்சி மன்றமும், உஊர் மக்களும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி இது போன்ற நற்காரியங்கள் புரிய வேண்டுமென வேண்டுகிறேன்! நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [05 November 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23491

* இப்படி ஆள் ஆளுக்கு அவர்கள் தெருவில் வேகத்தடை அமையுங்கள்.

* அதுவும் சீனப் பெருஞ்சுவர் ரேஞ்சுக்கு அமையுங்க.

* சும்மாவே மின் தடை காரணமாக தமிழகமே இருண்டு கிடக்கின்றது, இருட்டில் எருமை மாடு தெருவில் படுத்து கிடக்கின்ற மாதிரி வேகத்தடை இருந்தால் ஆபத்து கூடுதல். பைக்கில் செல்பவர்கள் அறியாமல் விழுந்து, பத்து போடாமல் இருந்தால் சரி,

- மக்களே கொஞ்சம் சூதானமாக இருங்கப்பா..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...வேகத்தடை...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23492

வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் நகராட்சி செய்யவில்லை என்பதற்காக நாமே அதை செய்வது என்பது விவேகமாக தெரியவில்லை. வேகத்தடையின் உயரம்,. நீண்டகால பயன் போன்றவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தன்னிச்சையாக நம்மிடம் பணம் இருக்கிறது என்று நாம் செய்ய ஆரம்பித்தால் இனிமேல் ஊரில் எந்த தேவையையும் நிறைவேற்ற நகர்மன்றம் என்ற ஒரு அமைப்பே தேவை இல்லை அவரவர்கள் இஷ்டப்படி செய்து கொள்ளலாம் என்று வந்து விடும். அப்போது ஒரு கூட்டம் இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்வார்கள் இன்னொரு கூட்டம் இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்வார்கள். கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும்.

எனவே நகர் மன்றத்துக்கு நெருக்குதல் கொடுத்து, சாலை மறியல் செய்தல், நகர்மன்றத்தை முற்றுகை இடுதல் போன்ற சாத்வீக போராட்டத்தின் மூலம் இதை சாதித்துக்கொள்ளலாம். என்பது எனது தாழ்மையான கருத்து.

வேகத்தடை நமது விவேகத்துக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடாது. அந்த ஏரியாவில் உள்ள ஜமாத்தார்கள் இதில் கவனம் செலுத்தி இளைஞர்களை சமாதானபடுத்தி ஆவன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Cnash (Makkah ) [05 November 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 23495

தெருவில் உள்ள குப்பை அள்ள நகராட்சிகிட்டே கோரிக்கை வைப்போம்.. நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றால் பேசமால் எத்தனை ஆண்டுகளானாலும் போட்டே வைப்போம்!! ஊர் நல விரும்பிகளான நம் அதில் இறங்கி செய்ய மாட்டோம். அதே போலவே இன்னும் எத்தனையோ காரியங்கள் நாம் அரசாங்கத்தையும் நகராட்சியையும் நம்பி இருப்போம்!

ஆனால் வேக தடை விஷயத்தில் மட்டும் இவ்வளவு வேகமாக இறங்கி போட்டு விட்டோம்!! தெருவுக்கு தெருவு என்பது போய் இன்று வீட்டுக்கு வீடு வேகத்தடை போட ஆரம்பிச்சாச்சி .. ஏற்கனவே அந்த சி- கஸ்டம்ஸ் ரோட்டில் இருக்கும் வேகதடைக்கு பைக்லே இருந்து இறங்கிதான் போகணும்.. இப்போ எக்ஸ்ட்ரா ரெண்டு ...பைக் ல போறவங்கள் வேகதடைக்கு பயந்து சைடுலே ஓட்டுகிறார்கள் .. அப்போ கரையில் நடக்கும் பாதசாரிகள் முடுக்கு வழி தேடி போகவேண்டியதுதான். சட்டத்தை எல்லோரும் கையில் எடுத்து வீட்டுக்கு ஒரு பைப்லைன் போல வீட்டுக்கு ஒரு வேகத்தடை போடுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மன்னிக்க வேண்டுகிறேன் !
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [05 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23500

பழைய செய்தியை இதில் போட்டதிற்கு என்னை மன்னிக்கவும்.
by
முஹம்மது ஆதம் சுல்தான்

30/04/2012.
”வேகத்தடை நினையூட்டல்”

மக்கள் குறை தீர்க்கும் முதல் கூட்டத்திலேயே அலியார் தெரு மக்கள் சார்பாக ,ஆய்ஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி அருகிலுள்ள நான்கு திசை வழி செல்லும் சந்திப்பில் வேகத்தடை அமைத்துதரும்படி விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பித்த அடுத்த நாளே அச்சந்திப்பில் இரு வாகன விபத்துக்கள் நடைபெற்றன. ஒரு விபத்து சற்று அபாயகரமாகவே அமைந்தது.

அல்லாஹ் காப்பாற்றினான். உயிருக்கும் உடலுக்கும் பெரும் சேதமில்லாமல் தப்பித்தார்கள். இதை அறிந்தும் , அந்த வார்டு உறுப்பினர் முதல் நகராட்சி வரை உடனடியாக வேகத்தடை அமைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இன்று வரை இல்லை.

ஊரில் ஒன்றிரண்டை தவிர அனைத்து தெருவிலுள்ள அனைத்து வேகத்தடைகளும் அதிகாரிகளின் ஆணையும், அனுமதியும் பெறாமல் அவரவர் விருப்பபடி முறையற்ற முறையில் வேகத்தடை அமைத்திருக்கிறார்கள்.இதில் சில வேகத்தடை, வேகத்தை குறைப்பது போல் அல்ல, உயிரை பறிப்பது போல் அமைந்து இருக்கிறது. .

இப்படிப்பட்ட முறையற்ற வழியை பின்பற்ற கூடிய சூழ்நிலையைத்தான் நமதூரின் பெரும் பகுதியில் பார்க்க முடிகிறது. .

இப்படிப்பட்ட வழியை நானும் பின்பற்றினால் விதிகளுக்கும் ஒழுக்கத்திற்கும் முரணாக நடக்கும் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆகிவிடும்

ஆகவே ,நகராட்சியில் இத்துறை சம்பத்தப்பட்டவர்கள் என்னுடைய அணுகுமுறையை புரிந்துகொண்டு நினையூட்டல் விண்ணப்பதிற்கு வேலை வைக்காமல் ,இம்மக்கள் மன்றத்தில் நான் தரும் இந்த விளக்கத்தையே நினயூட்டலாக எடுத்து கொண்டு உடனடியாக வேகத்தடை அமைத்து தருமாறு வேண்டுகிறேன் .அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்

இவண்
முஹம்மது ஆதம் சுல்தான்

பின்குறிப்பு:
இந்த செய்தியை kayapatnam.com இணயதளத்திற்கு அனுப்பி அவர்கக்ளும் உடனடியாக veb-ல் போட்டு விட்டார்கள். இந்த செய்தி போட்ட அடுத்தநாளே என் தங்கக்சி மகன் நாலு வயது பாலகன் பைக்கில் அதே இடத்தில அடிபட்டு KMT மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசென்று இன்று வரை சிகிச்சை எடுத்து கொண்டு இருக்கிறோம்.

இதற்கு மேலும் இவ் விசியத்தில் உடனடி நடவடிக்கை நிர்வாகம் எடுக்க தவறினால் இதயம் இல்லாத நிர்வாகம் மட்டுமல்ல ஏதுமில்லாத நிர்வாகமென்ற முடிவுக்கு தான் வரவேண்டும்.

BY
MOHD.ADAM SULTAN.
BEHALF ALIYAR STREET PEOPLE
45/177.ALIYAR STREET
MOBILE:9962274669


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Need Speed Breaker but. not in this speed
posted by Jahir Hussain VENA (Bahrain) [05 November 2012]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 23503

நாமே வேகத்தடை அமைத்தது விவேகமாக தெரியவில்லை....

ஜமால் மாமா ROOM இல் , நாமத்தான் வாட்டர் மீட்டர் பிக்ஸ் பண்ண சொல்லி கொண்டுதான் இருகொரோமே ....என்ன செய்ய...

அது அப்படித்தான்..

ஜாகிர் ஹுசைன் VENA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...வேகத்தடை
posted by NIZAR AL (kayalpatnam) [05 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23506

வேகத்தடை என்பது இந்த பகுதிக்கு மிக அவசிய தேவையாக இருக்கிறது. ஏனனெனில் கடற்கரை செல்வர்கள் இந்த பகுதியை அடைந்தே போவதால், வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் இந்த பகுதியினர் வேறு வழியின்றி இந்த வேகத்தடையை அமைத்து இருக்கிறார்கள்.

இங்கே போகும் பைக்கின் வேகத்தை சொல்லிமுடியாது, இதில் போட்டி போட்டு கொண்டு நம் ஊரு பிள்ளைகளே செல்கிறார்கள். எந்த பெரியவர் அறிவுரையும் ஏற்கும் நிலையில் அவர்கள் இல்லை. நகராட்சிக்கு ஒப்பந்தகாரர்கள் கிடைத்து அதன் பிறகு போட்டுத்தருவார்கள் என்று எவ்வளவு நாள் பொறுக்கமுடியும். எனவே போடக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை.

அதில் இருக்கும் உயரம் போன்ற குறைகளை சுட்டிக்காட்டி அதை சரிசெய்ய இது சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது. நிச்சயம் அவர்கள் அதை விரைவில் சரிசெய்வார்கள்.

YOURS,
NIZAR,
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. என்னங்க கமெண்ட்ஸ்???????
posted by MOHAMMED LEBBAI MS (DXB) [05 November 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23507

முறையற்ற செயல்,,,, சீனப்பெருஞ்சுவர்,,, எருமைமாடு தெருவில் படுத்துகிடக்க மாதுரி,,,விவேகமாக தெரியலை,,, பணம் இருக்கிறது என்று செய்ய ஆரம்பித்தால்??????? என்னங்க கமெண்ட்ஸ்??????

இந்த கமெண்ட்ஸ் கொடுத்த சகோதர்கள் சாயங்காலம் 5 மணியிலிருந்து 8 மணிவரை அந்த இடத்தில் நின்னு பாருங்க???? அப்ப தெரியும் போட்டது சரியா? தவறா? என்று...

பெட்டிசன் மேல பெட்டிசன் கொடுத்து இதுவரை செய்யபடலை????? இனி எப்ப போடுவாங்க???? தெரியாது???? கமெண்ட்ஸ் அடித்த சகோதர்கள் சொன்ன மாதிரி சீனபெருஞ்சுவரோ அல்லது எருமை மாடோ அல்ல,,, பல பேரை பழிவாங்காம இருக்க அந்த மக்களால் போடப்பட்ட கப்ருஸ்தானை நினைவுபடுத்த கூடிய நினைவுசின்னமாக வைத்துகொள்ளுங்களேன்??????

குறிப்பு....

வேகத்தடை முறையான அளவில் அதாவது வுயரத்தில் அகலத்தில் போடவேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்>.... கமெண்ட்ஸ் யாரையும் புண்படுத்த கூடாதல்லவா???? அதற்க்க்காகத்தான் இந்த விளக்கம்,,,, தவறு இருந்தால் வருந்துகிறேன்,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [05 November 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23513

சகோ. MOHAMMED LEBBAI மஸ் அவர்களின் ஆதங்கம் புரிகின்றது. இருந்தாலும் அனுபவித்தால்தான் வலி புரியும்.

நான், வழமையாக ஹைவேய்ஸ் இல் கூட 50 கி.மி க்கு அதிகம் செல்லமாட்டேன். நான்கு மாதங்களுக்கு முன்பு ஊர் வந்த போது , இரவில், கரண்ட் கட்டான ஒரு சமயம் , ஸ்பீட் ப்ரேக்கர் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாமல், ஸ்லோவாக பைக்கில் வந்த நான், அடித்து விழ, காலில் பயங்கர காயம் ஆகி, பல தையல்கள் போட்டு, விடுமுறை முழுவதும் நொண்டிக்கொண்டே இருந்தது யார் தவறு.

- உயரமாக வேகத்தடை அமைத்தது தவறா..

- வேகத்தடை இருப்பதே தெரியாத அளவு அமைத்தார்களே அது தவறா.

- மெதுவாக வண்டி ஓட்டி வந்து, அடித்து விழுந்து காயம் அடைந்தேனே..!! இது தவறா..

- ஸ்பீட் ஆக போவதை விடுங்க, நடந்து செல்பவர்கள் தடுக்கி விழுந்தும், பெரியவர்கள் அதை தாண்டி செல்ல கஷ்டப்படுவதையும், கீழே விழுந்ததையும் கண்டது உண்டா..

செய்வதை ஒழுங்காக செய்யத்தான் அனைவர்களும் சொல்லுகிறார்கள்.

ஆக, பட்டால்தான் உங்களுக்கு புரியுமோ, சகோதரரே.

புதிய செய்தியில் அவர்கள் வேகத்தடையை சீர் செய்வதை அறிந்து மிக்க சந்தோசம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [06 November 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23519

ஜியா பாய் , பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது . உயரத்தை குறைத்து விட்டார்களாம் . இன்ஷா அல்லாஹ் , அடுத்த விடுமுறையில் நீங்கள் ஊர் வரும்போது நொண்டி நொண்டி நடக்காமல் , சீராக சுகமாக நடக்கலாம் . மேலும் இனிமேல் அனைவரும் அவரவர் வீட்டுமுன் , உயரம் குறைந்த வேகத்தடையை அமைத்து கொள்ளலாம் . ஏனெனில் ஊரில் உள்ள அத்தனை வேகத்தடைகளும் , உயரம் குட்டையோ , நெட்டையோ , நகராட்சியால் அனுமதிக்கப்பட்டவை இல்லையே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பட்டால்தான் புரியுமோ>>>>>>>>>
posted by MOHAMMED LEBBAI MS (DXB) [07 November 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23557

பட்டால்தான் புரியுமோ?????????

சகோதரர் ஜியாக்கு நாங்க எல்லாம் பைக் ஒட்டாத மாதிரியும் சகோதரர் மட்டும்தான் ஓட்டுற மாதிரி எழுத கூடாது??????? வார்த்தையில் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் என்றுதான் சொன்னேன்,,,

இது புரியாம பட்டால்தான் புரியணும் என்றால்?????????

ஆம் சகோதரரே அந்த இடத்தில் எங்கள் குழந்தைங்க மற்றும் பெரியவங்க,,, ஆட்டோ காரங்கனாலேயும்,,, பைக் காரங்கலாலேயும் அடிபட்டு,,, அடி பட்டு புரிந்தனால்தான் எழுதினேன்,,,, அதற்க்காக் ஸ்பீட் ப்ரேக் இல்லாத இடங்களில் உங்க குழந்தைங்க பட்டால்தான் தெரியும் என்று எனக்கு சாபம் இடத்தெரியாது????????

குறிப்பு,,,, ஸ்பீட் ப்ரேக் அளவான முறையில் போடவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [07 November 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23558

சகோ. MOHAMMED LEBBAI அவர்களே,

இங்கு கருத்து பதிவு செய்தவர்கள் அனைவர்களும் வேகத்தடை அமைத்ததை குறை கூறவில்லை, முறையாக அமைக்கவில்லை என்று தான் கூறுகின்றார்கள்.

வேகத்தடை அமைக்கனும் என்றால் அதற்க்கு பல அம்சங்களை கடைபிடிக்கனும். குறிப்பாக அளவு, மஞ்சள் வர்ணம் பூசுதல், அறிவிப்பு பலகைகள் போன்றவைகளும், கூடுதலாக நகராட்சியின் முன் அனுமதியும்.

- உங்கள் கூற்றுப்படி கடற்கரைக்கு வரும் வாகனங்கள் வேகமாக வருகிறார்கள், பிள்ளைகள் அடிபடுகிறார்கள் அதனால் அமைத்தோம் என்று. சரி.

அப்படி என்றால் ஷீ கஸ்டம்ஸ் சாலையில் (மெயின் ரோட்டில்) மட்டும் அமைத்தால் போதுமே. ஏன் நான்கு புறமும் அமைக்கனும்.(சொளுக்கார் தெரு - முத்துவாப்பா தைக்கா தெரு ). ஆக அதி வேகமாக வருபவர்கள் யார் என்று புரியவில்லை.

- இனி, சின்ன நெசவு தெரு, KTM தெரு, பெரிய நெசவு தெரு, பேய் மாதிரி செல்லும் மீன் வண்டிகளை கட்டுப்படுத்த நெய்னா தெரு, கீழ நெய்னா தெரு, குத்துக்கல் தெரு போன்ற தெருக்களில் அவரவர்கள், அவர்கள் நோக்கப்படி வேகத்தடை அமைத்துக்கொள்ளலாம். மிக்க சந்தோசம்.

** மீண்டும் கூறுகிறேன், வேகத்தடை, வேகத்தை தான் தடை செய்யனுமே தவிர, வண்டியையோ மக்களையோ கீழே விழ வைத்து மொத்தமாக அவர்களை நடமாட முடியாமல் தடை செய்வது அல்ல.

- மக்களுக்கு நன்மை தரக்கூடிய நல்ல செயல்களை நன்றாக செய்யுங்க, அதிகம் அதிகம் செய்யுங்க, மீண்டும் மீண்டும் செய்யுங்க.. அதுவும் முறையாக செய்யுங்க. இது தான் அனைவர்களின் விருப்பம்.

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved