Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:59:20 PM
சனி | 11 மே 2024 | துல்ஹஜ் 1745, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2003:3806:3307:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:42
மறைவு18:28மறைவு21:49
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4505:1105:37
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5119:1619:42
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9549
#KOTW9549
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 3, 2012
உள்ஹிய்யா 1433: ஒவ்வோர் இடத்திலும் உள்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் மொத்த எண்ணிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3233 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.

ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.

அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் 27.10.2012 முதல் 30.10.2012 வரை நான்கு நாட்கள் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டது.

ஒவ்வோர் இடத்திலும் உள்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:-




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னும் இருக்கணுமே?.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [03 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23452

இது முழுமையான கணக்கா?
இல்லை, தொடரும் தானே??

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாஷா அல்லாஹ்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [04 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23454

மாஷா அல்லாஹ்! இவ்வளவு கூடுதலாக நம் மக்கள் உள்ஹிய்யா கொடுத்திருப்பது மகிழ்ச்சியே! வருங்காலத்தில் இன்னும் அதிகமாக கொடுத்து ஏழை எளியோர்க்கு பயன்படும் விதத்தில் செயல்பட வாழ்த்துகின்றேன். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...கோழி கொடுக்கலாமா ?
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23457

அதிர்ச்சி தரும் செய்தி. நம்மவர்களை அல்லாஹ் பொருளாதாரத்தில் எவ்வளவு மேன்மை ஆக ஆக்கி வைத்துள்ளான் எனபது அவரவர்கள் நெஞ்சை தொட்டு பார்த்தல் தெரியும். 249 மாடுகள் அதாவது 1743 பேர்கள் பங்கு சேர்ந்து குர்பான் கொடுத்துள்ளார்கள். 16 ஆடுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முடிக்கும் ஒவ்வொரு நன்மை என்று ஹதீதுகள் சொல்கின்றன. மாடு கொடுப்பதை விட ஆடு கொடுப்பதே சிறப்பானது என்ற செய்தியும் சொல்லப்படுகிறது. ஏழைகளும் அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனுமதி வழங்கப்பட்ட மாடு குர்பான் கொடுக்கும் விஷயம். இந்த loophole லில் வசதி படைத்தவர்கள் நுழைந்து கொண்டு எல்லோரும் மாடு கொடுப்பது என்று ஆரம்பித்து விட்டோம். நீங்கள் பலியிடும் மிருகங்களின் இரத்தமோ இறைச்சியோ நம்மை வந்தடைவதில்லை. அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்ய தயாரா என்பதை தான் அல்லாஹ் பார்கிறான் என்ற உப தேசங்கள் நிறைய கேட்கிறோம்.

நமது வீட்டு திருமணங்கள் பெயர் சூட்டும் வைபவங்கள், சுன்னத் நிகழ்சிகள் மற்றும் புதிதாக இறக்குமதியாகியுள்ள அந்நிய கலாசாரம் பிறந்த நாள் விழா , காத்து குத்தும் விழா, அன்பு மகள் வயதுக்கு வந்து விட்டால் அதற்கு என்று ஒரு விழா, இப்படி எத்தனை விழாக்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம். எங்கு எப்படி கடன் வாங்கி நாலு பேர் போற்றும் அளவுக்கு பணத்தை வாரி இறைக்கிறோம். சற்று தனிமையில் உட்கார்ந்து சிந்திப்போம். அல்லாஹ் நமக்கு தந்துள்ள உடல் ஆரோக்கியத்துக்காக, பண வசதிக்காக, மனைவி மக்களை தந்து நம்மை நிம்மதியாக வாழ வைத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்கு கிடைத்த அறிய சந்தர்ப்பமான இந்த குர்பான் நிகழ்ச்சியை எவ்வளவு சீப்பாக ஆக்கிவிட்டோம். நல்ல வேலை. கோழி குர்பான் கொடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட வில்லை. அப்படி வழங்க பட்டிருந்தால் அதிலும் 7 பேர் பங்கு சேரலாம் என்றிருந்தால் அதைதான் நாம் தேர்ந்து எடுத்து இருப்போம். இனி வரும் காலங்களில் உலமாக்கள் கிடாய் கொடுப்பதை அதிகம் வலியுறுத்தி மக்களிடம் சொல்ல வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. நமது குர்பான்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.நாம் அள்ளிக் கொடுத்தால் அல்லாஹ் அள்ளி தருவான். நாம் கிள்ளிக் கொடுத்தால் அவனும் கிள்ளி தருவான்.இதை உணர்ந்து அல்லாஹ்வின் பாதையில் அதிகம் செலவு செய்வோம்.

INNAMAL AUMAALU BINNIYYAATH. எண்ணம்போல் வாழ்வு. வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளது அனையது உயர்வு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [04 November 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23461

மாஷா அல்லாஹ். மகிழ்வாக உள்ளது.

மற்ற பள்ளிகளின் கணக்கையும் போட்டால் இன்னும் அதிகம் வரும்.

அதுவும் இல்லாமல் தனிப்பட்ட மக்கள் வீடுகளில் கொடுக்கும் உள்ஹிய்யா-வையும் சேர்த்தால், ஆச்சரியமான விடை கிடைக்கும். அவ்வளவு உள்ஹிய்யா வல்ல ரஹ்மானுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கை எடுப்பது மிகவும் சிரமம்தான்.

சரிங்க.. இதில் ஒரு சுவராசியமான விசயம் ஒன்று உள்ளது.

** நம் மார்க்க விசயங்கள் நமக்கு அதிகம் தெரியுமா அல்லது கிடாய் உறிக்க வரும் குப்பன், சுப்பன், பரமேஸ்வரனுக்கு அதிகம் தெரியுமா?? இவிங்க நமக்கு சொல்லித்தருவாங்க பாருங்க..

கிடாய் அறுக்கும் முன்.

- யாருங்க உள்ஹிய்யா கொடுக்கின்றீர்கள்..?

- எங்க பெரும்மா..ப்பா.

- அவர்களிடம் உத்தரவு வாங்கியாச்சா.?

- ஆமாம்ப்பா..அது என்ன உத்தரவு வாங்கியாச்சா...!.

- இல்லைங்க., உள்ஹிய்யா கொடுப்பவர்கள், கிடாயை அருப்பவரிடம் உத்தரவு கொடுக்கணும். அவர்களிடம் இந்த கத்தியை கொடுத்து, உத்தரவு வாங்கீட்டு வாங்க..

கிடாயை அறுக்கும் போது,

- இப்படி திரும்புங்க, அப்படி திரும்புங்க, கிடாயின் தலையை மேற்கு பக்கம் திருப்புங்க.

- பெருநாள் தக்பீர் தொடர்ந்தது கூறினால், கிடாய் அறுக்க ஒரு தடவை சொன்னால் போதுமுங்க என்று அட்வைஸ் வரும். ( பெரிய தக்பீர் எல்லாம் கூறி முடிப்பதற்குள் அவருக்கு பொறுமை இருக்காது, அடுத்த அறுப்புக்கு செல்லனும் அல்லவா.)

அறுத்த பின்பு.

- யப்பா.. கறி எவ்வளவு எடை உள்ளது என்று பாருப்பா.

- முதலாளி.. உள்ஹிய்யா கறியை எடை போடக்கூடாதுங்க.!

கறியை கொத்தும் போது.

- இந்தப்பா. அந்த முல்லை ( எலும்பை) கொத்தி போடுப்பா.

- சும்மா இருங்க முதலாளி. இந்த எலும்பை எல்லாம் அப்படியேதான் போடனும், தறிக்ககூடாதுங்க..(வெட்டக் கூடாதுங்க).

அப்பப்பா.. இவர்கள் பண்ணுகின்ற அலப்பரை இருக்கே.. இதை எல்லாம் எங்கு இருந்தது கற்றார்கள். நம்மிடம் தானே.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...குர்பான்
posted by hylee (colombo) [04 November 2012]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 23462

அல்ஹம்துலில்லாஹ்.வெளியூரில் உள்ள முஸ்லிம் மக்களுக்கும் அடுத்த முறை ஒரு பங்கு வைத்தால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...உல்ஹியா
posted by NIZAR AL (kayalpatnam) [04 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23469

மக்கி நூஹு தம்பி மாமா ஆடு மேலேயே கன்னாக இருக்கிறார்கள், தங்களுடைய தொடர் கருத்துபதிப்பில் மாட்டை தவிர்த்து ஆடுகொடுங்கள் என்பதையே பிரதானமாக மக்களுக்கு சொல்கிறார்கள், மற்றொரு கருத்தில் மாட்டுகரியா என மக்கள் ஏளனமாக நினைப்பதாகவும் அதனால் ஆட்டுக்கறி கொடுத்தால் மதிப்பாக இருக்கும் என்ற கருத்தில் சொன்னீர்கள்.

என்னுடைய கணிப்பில் நீங்கள் மாட்டுகரியை தொட மாட்டீர்கள் என எண்ணுகிறேன். இன்று மாட்டுக்கறி விலை ஆட்டுக்கறியை துரத்துகிறது எனலாம். உல்ஹியா ஆடு கொடுக்க எல்லோருக்கும் ஆசைதான். எல்லோருக்கும் அது முடியுமா? அவரவர் தகுதிக்குட்பட்டு உல்ஹியா கொடுக்கிறார்கள், மாட்டுக்கு ஒரு பங்கு 800, 1000 என்று இருந்தது இப்பொழுது 2000 இரத்தை தொட்டுவிட்டது, இதற்கே மலைத்து நிற்கும்பொழுது ஆட்டுக்கு எங்கே போவார்கள். அதெல்லாம் குள்ளதைனி தாண்டி வரும்பொழுது செய்வார்கள்.

மாட்டுக்கறி ஒன்னும் யாரும் சும்மா விடவில்லை. இன்ன்றோ, நாளையோ உப்புகண்டமாக வீடுமாடியில் கொடியேற்றுவார்கள். காய்ந்தவுடன் அது உலகமெங்கும் பறக்கும். இங்கே செய்தியாளர் தந்திருக்கும் 16 ஆடுகள் என்பதும் மாடுகள் கணக்கும் நிச்சயம் இருதிசெய்யபட்டவை அல்ல என்பதை அவர் தந்திருக்கும் கணக்கில் மூலம் விளங்குகிறது, எங்கள் குடும்பத்தில் மட்டும் 15 மாடுகள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட கிடாய்கள் கொடுக்கப்பட்டன செய்தியாளர் தந்த கணக்கில் தனியார் குடுத்த கணக்குகள் மேலும் மத்திய காயலின் பள்ளிவாஸல், தனியார், பொதுஅமைப்புகள், என எந்த கணக்கும் இல்லை. எனவே இது நிறைவான கணக்கு இல்லை என்பதை விளங்கமுடிகிறது.

YOURS,
NIZAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23497

சகோதரர் நிஜார் அவர்கள் கருத்துக்கு நன்றி. நான் உங்களை போல என்னைபோல ஏழைகளை சொல்லவில்லை. கிடாய் 7 ஆயிரம் 8 ஆயிரம் ரூபாய் விலைகொடுத்து வாங்க தகுதி படைத்தவர்களும் மாடு கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே என்ற ஆதங்கம்தான். மற்றப்படி எவ்வளவோ பேர் அன்று வீடுகளில் கிடாய் குர்பான் கொடுத்து இருக்கிறார்கள்.. கிடாய் கொடுப்பதை அதிகமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்புதான். வேறு தவறான கண்ணோட்டத்தில் இந்த கருத்து பதிவை எண்ணாதீர்கள்.

எனது கருத்து பதிவில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது அபிப்பிராயம் அவ்வளவுதான். உங்கள் எண்ணமும் தவறானதல்ல.

அல்லாஹ் நம் எல்லோரது உள்ளங்களையும் விரிவாக்கி வைப்பானாக....RABBISHRAHLEE SADHREE VAYASSIR LEE AMREE ...... ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. விடுபட்டு உள்ளதா ?
posted by Habeeb Mohamed (Chennai) [06 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23523

இதுதான் நமது ஊரில் கொடுக்கபட்ட உளுஹியா எண்ணிகையா or இதில் எதாவது பள்ளிகள் விடுபட்டு உள்ளதா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பாத்து!!! (?!)  (2/11/2012) [Views - 3322; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved