Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:31:17 PM
ஞாயிறு | 5 மே 2024 | துல்ஹஜ் 1739, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்03:30
மறைவு18:28மறைவு15:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9551
#KOTW9551
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 4, 2012
சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்! தற்காலிகமாக மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2730 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சுலைமான் நகர் என்றழைக்கப்படும் மாட்டுக்குளம் மற்றும் அதனையொட்டியுள்ள சல்லித்திரடு பகுதிகளில், அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக, மழை நீர் தேங்கி, குடிசைப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது.

தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவது குறித்து 26.10.2012 அன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியிலுள்ள தமக்குச் சொந்தமான நிலப்பரப்பின் மீது எதுவும் செய்யக்கூடாது என தனியார் நில உடமையாளர்கள் சிலர் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால், அங்கு நிவாரணப் பணிகண் எதுவும் செய்யப்படவில்லை.

28.10.2012 அன்று, அப்பகுதி மக்களின் முறையீட்டைத் தொடர்ந்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தனியார் உடமையாளர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தம் நிலங்களின் மீது தற்காலிகமாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ள இசைவு தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.

அதனையடுத்து, நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் ஆகியோருடன் அன்று மாலை 05.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்து, பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி, சாத்திமான வழிகளில் தேங்கிய மழை நீரை அகற்றிட ஆவன செய்யப்படும் என்று கூறிச் சென்றனர்.

தினமும் நீர்த்தேக்கத்திற்குள் அல்லல் படும் நிலையில் உடனடி தீர்வு கிடைக்காததாகக் கூறி, 01.11.2012 அன்று காலை 10.30 மணியளவில், சுலைமான் நகர் பகுதி மக்கள் காயல்பட்டினம் நகராட்சி நுழைவாயிலின் முன் திரண்டமர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தம் பகுதியில் தேங்கிய மழை நீரை வெட்டிவிடும் வரை அவ்விடத்தை விட்டும் அகலப்போவதில்லை என்று அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அன்று மதியம் 03.00 மணியளவில், திருச்செந்தூர் வட்டாட்சியர் சங்கரநாராயணன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் அஷோக் குமார், குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், காயல்பட்டினம் வடபாகம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல், நில அளவீட்டாளர் செந்தில் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் பேசினர்.







அப்பகுதி மக்களின் முரண்பட்ட கருத்துக்களை ஒருமுகப்படுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள் கடும் முயற்சி செய்தனர்.



நிறைவில், மோட்டார் பம்ப் செட் மூலம் - தேங்கிய மழை நீரை தற்காலிகமாக அகற்றிட முடிவு செய்து, சில நிமிடங்களில் பணி துவக்கப்பட்டது. நகர்மன்ற அவசரக் கூட்டத்தை அன்றே கூட்டி நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். அதனையடுத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

படங்களில் உதவி:
M.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangok) [04 November 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 23479

அஸ்ஸலாமு அழைக்கும்

இவர்களும் முஸ்லிம் கல்தான் , இவர்கள் வசதி அட்ரவர்கள் இந்த இடத்தில் ஒரு வசதி படைத்தவர் இல்லை செல்வாக்கு உள்ளவர் இங்கு குடி இருந்தால் இப்படி தான் செய்வீர்களா

இங்கு தண்ணீர் கட்டி பசி படிந்து பச்சை நிறமாக மரி விட்டது

இந்த தண்ணீருக்கும் DCW கழிவு நீருக்கும் யன்ன வித்தியாசம் DCW தண்ணீர் செய்ம்மன் கலராக இருக்கிறது , இது பச்சை கலராக இருகின்றது , அதில் இருந்து கேய்மிகள் கலக்கின்றது இதில் மிருககளின் அசுத்தம் கலக்கின்றது

காயல் பட்டினத்தில் பிறந்த அனைவரும் பெருநாள் சந்தோசமாக கொண்டாடி விட்டோம் , அந்த சிறப்பு நாளில் இவர்கள் எப்படி இருந்து இருப்பார்கள் , அனைவரும் அல்லாஹுக்கு பதில் சொல்லியா ஆகா வேண்டும் ,

ஏன் ஆலிம்கள் இதை jummah பயானில் சொல்ல கூடாதா

கொடி பிடித்தால் தான் தீர்வு வருமா , ஏன் இந்த வார்டு மெம்பெர் எங்கே சென்று விட்டார்

அட்மின் உங்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன் வார்டு மெம்பெர் இங்கு வர வில்லை அவர்களுடைய பெயரையும் இங்கு சேர்த்து விட்டீர்கள் தயவு செய்து வராத நபர்களின் பெயரை இங்கு போடா வேண்டாம் இது ஏன் பணிவான வேண்டுகோல்

ஊரு தலைவர் அவர்களே
Dangu Fever எங்கு இருந்து வருகின்றது என்று விளக்கமாக சொல்லி விட்டு இதை எல்லாம் பார்த்து விட்டு கண்டு கொள்ளாமல் இருந்து விட்டீர்கள் , கொடி பிடித்த பின்பு தான் முடிவு செய்து இருக்கு றீர்கள் ,

வசதி படைத்தவருக்கு ஒரு நியாயம் , வசதி அட்ட்ரவர்களுக்கு ஒரு நியாயமா

அல்லாஹ் நம் அனைவரையும் மன்னி பானக ஆமீன் இப்படிக்கு

Seyed Mohamed Sayna
Kayal Ikiya Mandram
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. குளத்துலெ வீடு கட்டினா குடியிருப்பாயிடுமா...?
posted by M.N.L.முஹம்மது ரபீக் (புனித மக்கா.) [06 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23518

முந்தைய கருத்தாளரின் ஆதங்கம் புரிகின்றது. அவர்களும் நம்மவர்தான் மறுக்கவில்லை. உங்க வீட்டு வெட்டையில் அல்லது வேறு நபர் மனையில் அனுமதியின்றி குடியேறி விட்டு ஆபத்து வரும் போது அப்பாடா! அம்மாடான்னா என்ன அர்த்தம்?

இது குடியிருபே அல்ல! குளம்! அல்லது குட்டை!மழைக்காலங்களில் மழை நீர் அங்கு தான் தேங்கும். தெரிந்தே குடியேறியது தமக்குத் தாமே இழைத்துக் கொண்ட இன்னல்கள்தாம்! தயவு செய்து விபரம் தெரிந்து கருத்தெழுதுங்கள். மேலோட்டமாக அல்ல!-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved