Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:18:45 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9539
#KOTW9539
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 2, 2012
நவ.02ஆம் தேதியன்று (இன்று) காயல்பட்டினம் கடலின் காட்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3051 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.

02.11.2012 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் பதிவு செய்யப்பட்ட - காயல்பட்டினம் கடலின் காட்சி:-









கடலின் - நவம்பர் 01ஆம் தேதி காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.PARTHIPAN (TUTICORIN) [02 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23387

உங்க ஊரிலே இருக்கிற டிசிடபிள்யூ தொழிற்சாலை ஒரு வருடகாலமாக சேர்த்து வைத்திருந்த தொழிற்சாலையின் நஞ்சுக்கழிவுகளை எல்லாம் மழைக்காலத்தின்போது கடலில் பாசன வடிகால் வாய்க்கால் மூலமாக கலந்துவிடுவது வாடிக்கையான ஒன்றுதானே. அந்த தொழிற்சாலையால் உப்பு உற்பத்தி, சுற்றுப்புறசூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் புற்றுநோய் போன்ற நோய்களும் பரவி வருகிறது.

நீங்க தினம் தினம் கடலோட படத்தை போட்டு என்ன செய்ய, இதமாதிரி சூழல் அடுத்தாண்டாவது வராமல் தடுக்க என்ன வழி என்பதை யோசிங்க, அதற்கான பணிகளை செய்யுங்க, அதைவிட்டு விட்டு படத்தை போட்டு மக்களையும் மற்றவர்களையும் மிரட்டாதீங்க, உங்களோட ஆதங்கம் அதற்கு தீர்வு காணட்டும். இறைவனும், உங்கள் மக்களும் உங்களுக்கு துணை நிற்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
எம்.பார்த்தீபன், தூத்துக்குடி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இதுவே எங்களின் குப்பை தொட்டி...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM ) [02 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23388

தினமும் நச்சு கழிவுகளை கடலில் கலக்கத்தான் செய்வோம்... காரணம் ..? இதுவே எங்களின் குப்பை தொட்டி...! தட்டி கேட்க திராணி அற்ற...! நாதி இல்லாத நகரில் கடல் அமைந்துள்ளது... இதுவே எங்களுக்கு கிடைத்த வரபிரசாதம்... குட் பை... அதிகார வர்க்கம் எங்களின் கைகளில்...! யாரும் எங்களை _____ ங்க முடியாது,,,!

மக்கள் எழுச்சி பெறும் வரை எங்களை நாங்கள் மாற்றி கொள்ள மாட்டோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Red sea
posted by Zainul Abdeen (Dubai) [02 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23389

காயல்பட்டினம் கடலின் காட்சி என்பதற்கு பதிலாக காயல்பட்டினம் செங்கடலின் கட்சி என்பதே பொருந்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [02 November 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23391

பாபநாசம் அணையின் இன்றைய நீர்மட்டம் என்று தினமும் செய்தி வருவதைப்போல , இது காயல்பட்டனத்து கடல் செய்தி .

இந்த நுரையை பார்க்கும்போது , சாதாரணமாக கடல் அலையால் வரும் நுரை போன்று தெரியவில்லை . ஏதாவது Detergent கலந்திருந்தால்தான் இதுபோன்று வரும் . KEPA !!!!! என்ன நடவடிக்கை ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [02 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23399

சுகாதாரதிர்க்காக சுகமான கடல் காற்றை தேடி கடற்க்கரைக்குச் சென்றால் நோயை விற்பனை செய்யும் நச்சு காற்றை தான் சுவா சிக்கனும் போல !!! இதை தட்டி கேட்கும் உரிமை இல்லா நிலைநிலே காயல் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mauroof (Dubai) [02 November 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23400

சகோ. M. பார்த்திபன் அவர்களின் கருத்து சிந்தனைக்குரியது. அவர் குறிப்பிட்டுள்ள ஆலை நிர்வாகம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான ஆலைகளின் நிர்வாகங்களும் சுற்றுப்புறச் சூழல் நாசமடைய தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாசகார வேலைகளை செய்கிறார்கள். இந்நிலை தொடர முக்கிய முதல் காரணியாக இருப்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என்ற வரைவிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தில் பொதுமக்களால் அமர்த்தப்பட்டவர்கள், அமர்ந்ததுமே லஞ்ச லாவண்யத்திற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து பொதுமக்கள் மற்றும் இயற்கையின் அழிவிற்கு வித்திடும் இதுபோன்ற நாசங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக லட்சங்கள், கோடிகள் என அவரவர் அதிகாரத்திர்க்கேற்ப பெற்று மௌனியாக இருக்கும் அதிகார வர்க்கம்.

இரண்டாவதாக பொதுமக்களின் அறியாமை மற்றும் பொறுப்பற்ற தன்மை. இவ்விரண்டில் இரண்டாவது குறிப்பிட்டது மாற்றம் பெற்றால் இது போன்ற நாசாகர வேலைகளுக்கு முடிவுரை எழுதுவதென்பது அவ்வளவு பாரதூரமான காரியமாக இருக்காது. CHANGE, WE CAN என்று மட்டும் கூறி உண்மையான இயற்கை ஆர்வலர்களோடு இனைந்து பொதுமக்களாகிய நாம் போராட வேண்டும். இது விஷயத்தில் "KEPA" அமைப்பு தனது பங்களிப்பை விரைந்து செலுத்தி காயல்பட்டிணம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது குறிப்பாக மழை காலங்களில் கடல்நீர் மாசடைவது குறித்து ஆராய்ந்து உண்மை நிலையை வெளிக்கொணரும் என்று நம்புகிறேன்.

காயல்பட்டிணம் நகராட்சி இது விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். காயல்பட்டிணத்தின் பொறுப்புள்ள மீடியாக்களில் ஒன்றாகத் திகழும் Kayalpatnam.com தனது பங்களிப்பிற்கு இச்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதோடு நின்றுவிடாது சம்பந்தப்பட்ட துறைகளை "RTI" மூலம் அணுகி தேவையான தகவல்களை வெளிக்கொணர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நெஞ்சு பொறுக்குதில்லையே....?
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [03 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23411

கோகுல் எர்த்லெ போய் சாட்லைட் பிக்ச்சரில் காயல்பட்டினத்தைப் பார்த்தேன். அடப்பாவிகளா அநியாயத்துக்கு DCW வின் கழிவு நமதூர்கடலில் கலக்கும் காட்சி என் மனதை உலுக்கியது. செங்கல் நிறத்தில் ஒரு ஆறு போன்று அது நம் கடலில் கலக்கின்றது. இக்கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு விடிவு காலமே வராதா?

ப்ளீஸ் அந்த சாட்லைட் படத்தை டவுன்லோட் செய்து இத்தளத்தில் போடவும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வர ஒரு காரணியாக அமையும்.

சகோதரர் திரு பார்த்திபன் அவர்களது கருத்து முற்றிலும் உண்மையே! நமதூர் மக்கள் மீது அவர் வைத்துள்ள மரியாதைக்கும் பாசத்திற்கும் என் உளம் கனிந்த நன்றி...! போர்க்கால அடிப்படையில் இந்த ஆலைக்கு எதிராக நாம் நம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராட முனைய வேண்டும். பொறுத்தது போதும்! இனி பொங்கி எழுவதுதான் புத்தி!

காயலர் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது இணைய தளம் இதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி செயல்பட வேண்டிய காலத்தின் கட்டாயமும், கடமையும் உள்ளது. இனியும் நம் மக்களை இந்த ஆலை அரக்கனுக்கு காவுகொடுக்கக் கூடாது.

ஊரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நம் முன்னோர்கள் இரயில் நிலையம், பிரேத பரிசோதனைக்கூடம், திரையரங்கம், காவல்நிலையம் ஆகியவற்றை ஊர் எல்லைக்கு அப்பால் தடுத்து நிறுத்தி வைத்தனர். ஆனால் இந்த உயிர்க்கொல்லி ஆலையின் உத்வேகம் தெரியாமல் இடம் கொடுத்த சிறு தவறுதான் இன்று, மாபெரும் அச்சுறுத்தலாக நம் மக்களுக்கு தீரத தலைவலியை உண்டாக்கி வருகின்றது. நாளுக்கு நாள் அதன் பரப்பளவும், உற்பத்தியும் அதிகரித்து வருகின்றதே ஒழிய சனியன் விட்டுத் தொலைந்த பாடில்லை!

மகாராஷ்ட்ரா பணம் காய்ச்சி மரம் இன்று வேர் பிடித்து விஷ விருட்சமாக வளர்ந்து நம்மைக் கொல்கின்றது. சத்தமின்றி ஓர் கூடங்குளம் சாகுபுரத்தில் உருவாகி வருவதை யாராலும் மறுக்க இயலாது. இனி காயல்பட்டினமும் ஓர் இடிந்தகரையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை...!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பாத்து!!! (?!)  (2/11/2012) [Views - 3313; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved