Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:12:54 PM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9512
#KOTW9512
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 30, 2012
காயல்பட்டினத்தை ஒட்டிய கடல் செந்நிறமாக இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3526 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலை கடலில் திறந்துவிட்டுள்ள கழிவு நீரினால் கடல் செந்நிறமாக மாறியுள்ளது குறித்து புகார் மனு ஒன்று KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA) சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் அக்டோபர் 29 வழங்கப்பட்டது.



மாவட்ட ஆட்சியகத்தில் பிரதி திங்கள் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அக்டோபர் 29 நடந்த கூட்டத்தில் KEPA அமைப்பின் துணைத் தலைவர் T.A.S. அபூபக்கர் தலைமையில் திரளானோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அவ்வேளையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவின் சாராம்சம் பின் வருமாறு:

DCW தொழிற்சாலை காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் வடக்கு பகுதியில் உள்ளது. பல ஆண்டுகளாக அத்தொழிற்சாலையின் சுற்றுப்புற சூழல் குறித்த விதிமீறல் காரணமாக இப்பகுதி மக்கள் கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான காயல்பட்டின மக்கள் கையெழுத்திட்ட மனு சமீபத்தில் - தமிழக அரசிடமும், மாவட்ட ஆட்சியகத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை மற்றும் தூத்துக்குடி அலுவலகங்களில் சமர்பிக்கப்பட்டது. இருப்பினும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் - DCW தொழிற்சாலை கடலில் கழிவு நீரினை திறந்து விடுகிறது. இதுகுறித்த பல ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் உள்ளன. இவ்வாண்டு - வடக்கிழக்கு பருவமழை அக்டோபர் 20 அன்று துவங்கியது. மழை துவங்கிய ஒரு சில தினங்களிலேயே - DCW தொழிற்சாலை கடலுக்குள் கழிவு நீரை திறந்து விட்டுள்ளது. அதனால் - காயல்பட்டினத்தை ஒட்டிய கடல் - செந்நிறமாக தற்போது மாறியுள்ளது. இதனால் மீன் வளமும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு விளக்கம் கூறும் DCW நிறுவனத்தின் பதில் விஞ்ஞான பூர்வமான பதிலாக இல்லை. செயற்கைக்கோள் புகைப்படம் மிகவும் தெளிவாக இந்த கழிவு நீர் DCW தொழிற்சாலை வளாகத்தில் இருந்து தான் வருகிறது என்று காண்பிக்கிறது.

ஆகவே - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக சிறப்பு குழு அமைத்து, DCW தொழிற்சாலையினை இந்த மழைக்காலம் முடியும் வரை முழுமையாக கண்காணிக்க வேண்டும். மேலும் - காயல்பட்டினம் நகராட்சி, DCW நிறுவனத்தின் கழிவு நீர், கடலினை அடையாதவாறு, தடுப்புசுவர் கட்டவேண்டும்.

DCW நிறுவனத்தினால் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்று நோய் உட்பட பல நோய்கள் இப்பகுதியில் பெருகுவதற்கு இத்தொழிற்சாலை காரணமாக இருக்கலாம் என மக்கள் ஐயப்படுகின்றனர்.

ஆகவே - மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர், இவ்விசயத்தில் உடனடி கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்ப்படி கேட்டுகொள்கிறோம்.


இச்சந்திப்பின்போது KEPA அமைப்பின் நிர்வாகம், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் N.S.E.மஹ்மூத், சாளை பஷீர், M.W. ஹாமீத் ரிபாய், M.M. முஜாஹித் அலி, S.A. நூஹு, A. தர்வேஷ் முஹம்மது, முஹம்மது மொஹிதீன், M.S. ஸாலிஹ், இப்ராஹீம், சாளை இல்யாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.





தகவல்:
KEPA


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [30 October 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23281

" தட்டுங்கள் , திறக்கப்படும் " . .ஆட்சியாளர்களை அவ்வப்போது சந்தித்து மனு கொடுத்தால் ஒருவேளை இதற்கு வழி பிறக்கலாம் . இல்லையேல் நீதிமன்றம் . ஊரில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தை அணுகலாமே !

முன்பு இதுபோன்றுதான் , தோல் தொழிற்சாலை கழிவுநீர் பெரும் பிரச்சினையாக இருந்தது . மக்கள் அரசிடம் முறையிட்டார்கள் . வழி பிறக்கவில்லை . சாதாரண ஒரு குக்கிராமத்து மக்கள் (ஆம்பூர் பக்கம்) நீதிமன்றத்தை அணுகினார்கள் . வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது , தொழிற்சாலை உரிமையாளர்கள் , எங்கள் தொழில் மூலம் நாட்டுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருகிறோம் என்றார்கள். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , இந்த கழிவு நீரின்மூலம் நாட்டில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகிறார்கள், அதுதான் எனக்கு கவலை . இனிமேல் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் , ஒரு சொட்டு நீர் கூட வெளியேறக்கூடாது என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தார். அன்றுமுதல் அனைத்து தோல் தொழிற்சாலைகளிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டாயமாக்கப்பட்டது. புதிதாக தொழிற்சாலை தொடங்குபவரும் முதலில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சான்றிதல் பெற்றபிறகுதான் மற்ற வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவும் வந்தது. உலகில் உள்ள அத்தனை தோல் தொழிற்சாலைகளுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . ஆக , சாதாரண ஒரு குக்கிராமத்து மக்கள் செய்த வேலை , மாபெரும் புரட்சியாக மாறியிருக்கிறது

சமூக ஆர்வலர்கள் இப்போதே நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு , கீழ் கோர்ட் , மேல் கோர்ட் என்று பல படிகளை தாண்டி சுப்ரீம் கோர்ட் செல்ல எப்படியும் ஒருசில வருடங்கள் ஆகலாம் . ஒருவேளை தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் , அதன் பிறகாவது நமது சந்ததிகள் நலமாக இருப்பார்களே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by nizam (india) [30 October 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23283

KEPA மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்னும் சில சுற்றப்புற சீர்கேடுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காக பல வியாதிகளை தடுக்கும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்ட கரபகவிருட்ச மரம் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் திட்டமிட்டு அழிக்கபடுகிறது.

அதுபோல ஊருக்கு வெளியே தாரளமாக இடமிருந்தும் குடியிருப்பு பகுதிகளில் புற்றிசல் போல செல் போன் டவர்கள் கதிர்விச்சை பரப்பி கேன்சர் போன்ற வியாதிகளுக்கு முக்கிய காரணிகளாக விளங்கிறது. இந்த இரண்டு விசயங்களிலும் KEPA கவனம் எடுத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இணையதளத்திற்கு பாராட்டுக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [30 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23286

என்னடா இந்த தடவை செந்நிற கடல் புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியிட்டும் எந்த கருத்துக்களும் பதிவுசெயயப்படவில்லையே !! நமது மக்கள் மறதி மிக்கவர்களே, புகைப்படங்களை பார்த்ததும் கொஞ்சம் ஆவேச பதிவுகள் வரும் பின்னர் அப்படியே முடங்கிப்போய் விடுமே என்று கவலை கொண்டிருந்த எனது நெஞ்சிற்கு KEPA எடுத்த நடவடிக்கைகள் மீண்டும் புதுபொலிவை தந்திருக்கின்றன.

நல்ல முயற்சிகள் ! முதலாவதாக இந்த நிகழ்வை திருப்பி திருப்பி கஷ்டம் பார்க்காமல் வெளியிட்டு மக்களிடம் எப்படியாவது விழிப்புணர்ச்சியை எற்ப்படுத்திவிட முனைந்த இந்த இணைய தளத்திற்கு கோடானு கோடி பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் சமுதாயப்பணிகள். இரண்டாவது இதில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்.

வெளிநாடு வாழ் காயலர்களும் தத்தம் இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களையும் சுட்டிக்காட்டியிருக்கலாமே ?

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:.
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [30 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23289

சகோதரர் vilack S M A அவர்களுடைய கருத்து மிக ஆழமானதும் உண்மையானதும் கூட .!!" தட்டுங்கள் , திறக்கப்படும் " .என்பதும் ஒருவேளை தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் , அதன் பிறகாவது நமது சந்ததிகள் நலமாக இருப்பார்களே !என்பதும் ஒரு தொலை நோக்கு பார்வை..!! மட்டுமல்லாமல் ஒரு ஏக்கமும் கூட .!!

சகோதரர் nizam சுட்டிகாட்டிய செல் போன் டவர்கள் மற்றும் கரபகவிருட்ச மரம் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் அழிக்கப்படுவது ஆகிய இந்த இரண்டு விசயங்களிலும் சமூக ஆர்வலர்கள் கவனம் எடுத்துக்கொண்டால் நல்லதுதான்....

சிலோன் பேன்சி காழி ,
ஜித்தாஹ் ,
சவுதி அரேபியா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 October 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23291

பல கல் விட்டும் பழம் கீழே விழ மாட்டேன் என்கிறதே.

ட்ரை பண்ணிக்கொண்டே இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள். என்றைக்கு தான் நல்ல விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை.

ஒருவேலை, இந்திய எல்லையான இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா என்பதை, "செங்கடல்" என்று மாற்ற முயற்ச்சி நடக்கின்றதோ..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...நல்ல துவக்கம்
posted by NIZAR AL (kayalpatnam) [30 October 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23293

அல்ஹம்துலில்லாஹ் இது ஒரு நல்ல துவக்கம்,இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அணைத்து சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெர்விதுகொல்கிறேன்,இன்ஷா அல்லாஹ் தொடரும் முயற்சிகளில் நம் ஊரு மக்கள் பேராதரவு தருவார்கள் என்பது நிச்சயம்,தொடர்ந்து முயற்சிப்போம்,மக்களிடையே இன்னும் இதைப்பற்றி விளுப்புனர்வை ஏற்படுத்துவோம்.

YOURS,
NIZAR AL.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [30 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23298

சகோதரர் சாளையாரே ( ஜியா ) !,

பழம் இன்னும் பழுக்கவில்லை போலும்... அதனால் தான் பல கல் அடி பட்டும் கீழே விழ வில்லை ,!!! ஒரு வேளை "கார்பைடு கல் " கொண்டு அடிக்கணும் போலும் ..!!!!

சவுதி அரேபியாவில் செங்கடல் கூட Normal ஆக தான் உள்ளது.

ஆனால் நமதூரில் நார்மலான வங்காள கடல் இரசாயன கழிவுகளால் சிவப்பாக மாறி உள்ளது.இது ஒரு வேதனையான விசயம்தான்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நமது நகரில் விளையாட்டு போட்டிகள் நடத்தஇங்குள்ள அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் விருந்துண்ணும் உணவு விடுதியாகவும், பயண களைப்பின் போது தங்கி செல்லும் பங்களவாகவும்,
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM ) [30 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23301

நகர் மக்களின் நலனுக்காக தங்களின் சொந்த வேலைகளை எல்லாம் பின் வைத்து விட்டு இந்த நல்ல காரியத்தில் ஈடுப்பட்டு இணைந்து சென்ற நல் உள்ளங்களுக்கு எனது பாராட்டுக்கள்... நகர்மக்களின் நல் துவாக்கள் உங்களுக்கு உண்டு...

சாளை சலீம் அவர்கள் குறிப்பிட்டது போல் மாவட்ட ஆட்சியரிடம் வெளிநாடு வாழ் காயலர்கள் அங்கு இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களையும் இணைத்து கொடுத்து இருக்கலாம்...! காட்டியிருக்கலாமே என்கிற ஆவல் - சாளை சலீம் அவர்களின் ஆலோசனை வரவேற்க்ககூடியது...

காயலர்கள் அங்கு இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களின் நகல் KEPA க்கு பார்வைக்கு அனுப்பி வைக்காமல் இருந்து இருக்கலாம்... இனி இது சம்பந்தமான மனுக்கள் எங்கு கொடுக்கப்பட்டாலும் அதன் நகலை அவரவர்கள் பரிமாறி கொள்வது மிக நன்று...

நமது நகரில் விளையாட்டு போட்டிகள் நடத்தஇங்குள்ள அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் விருந்துண்ணும் உணவு விடுதியாகவும், பயண களைப்பின் போது தங்கி செல்லும் பங்களவாகவும், இந்த D C W தொழிற்சாலையை பயன்படுத்தும் போது..! இங்குள்ள நகர மக்கள் புற்று நோயால் செத்தால் என்ன..! அவதி பட்டாள் என்ன...! இவர்கள் மூலம் நமக்கு எங்கே நியாயம் கிடைக்க போகிறது....?

மக்கள் கொதிக்க வேண்டும்... அணைத்து சமுதாய மக்களின் விழிப்புணர்வு மூலம் சாலையில் இறங்கி D C W தொழிற்சாலையின் முன் நின்று போராட்டம் - ஆர்ப்பாட்டம் என்று நடத்த வேண்டும்... மேலும் சர்வ தேச கடல் சார்ந்த பிரச்சனையாக இதை கொண்டு போக வேண்டும்... இது நடக்காத வரை ஒரு சிறு மாற்றமும் D C W வில் நடக்க போவதல்ல... இதுவே எனது கருத்து...

கூடங்குளம் ஊரே நமக்கு ஒரு உதாரணம்...
போராட்டம்...போராட்டம்...போராட்டம்... இதுவே தீர்வு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [30 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23314

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த '' KEPA ''அமைப்பின் மனுவால் நம் ஊருக்கு சிரமத்தை தந்து கொண்டு இருக்கின்ற ....இந்த நாசமா போன >>.D.C.W. <<<<<வுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்.

பெரு நாள் நேரமும் அதுவும் பாருங்களேன் .....நம் கடற் நீரின் தண்ணீரை பார்த்ததுமே ..நமக்கு கொதிப்பு அடைகிறது.இந்த நச்சு தன்மை கொண்ட நீராலும் + D.C.W. மூலம் வெளிபடுகின்ற நச்சு காற்றாலும் நம் ஊரின் முழு தன்மை கேட்டு / நம் ஊர் பொது மக்களாகிய நாம் பாதிக்க படுவது என்பது நிச்சயம் ........

இதை நாம் ஒழித்து கட்டுவது தான் முக்கியமான குறிக்கோளாக கொண்டு ....படு தீவிரமாக '' களம் '' இறங்கி முழுமையாகவே போராட வேணும் ....

என்னப்பா இது ....நம் ஊர் மக்கள் இந்த கடல் செந்நிறமாக மாறி இருப்பது கூடவா தெரியாமல் ....சந்தோசமாகவே கடலில் குளித்து கொண்டு இருக்கிறார்கள் ......போட்டோவை பார்க்கவே நமக்கு மனதுக்கு சங்கடமாகவே இருக்கிறது .....

இந்த நம் ஊர் அமைப்பு >>> KEPA <<<< இந்த மனு கொடுத்ததுடன் நிற்காமல் ...முழு மூச்சாகவே களம் இறங்கினால் தான் ....நமக்கு வெற்றி கிடைக்கும் ...>>> KEPA << அமைப்புடன் .நம் ஊரில் உள்ள அணைத்து ...ஜமாத்துக்களும் / பொது நல தொண்டு நிர்வனங்களும் / நம் ஊரில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் / நம் ஊர் முக்கியமான பெரியவர்களும் / நம் ஊர் பெரும் தலைகளும் / நம் நகர் மன்ற அனைத்து உறுப்பினர்களும் .....ஒன்றாகவே போராட களம் முழுமையாக இறங்கினால்தான் ......இந்த கேடு கேட்ட >> D.C.W. << என்கிற தொழிற்சாலையை அடியோடு இழுத்து மூட முடியும் .நமக்கு வெற்றியும் கிடைக்கும்.........

நம் ஊர் நகர் மன்றத்தால் ஒன்றுமே செய்திட முடியாதா .....என்னா ???? அல்லது நகர் மன்றத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ் நிலைமையா ????

நம் பக்கதில் உள்ள .....கூடங்குளம் .....பொது மக்களின் ஒற்றுமையான போராட்டத்தை நாம் பார்த்தாவது .....நாம் யாவர்களும் .....கொஞ்சம் உணர்ந்து கொண்டாள் ......சரி தான் .

எல்லா வல்ல இறைவன் நாம் எடுக்கின்ற அனைத்து எல்லா முயற்சிகளிலும்....முழு வெற்றியை தந்தருள்வானாகவும் ஆமீன்......

நம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவோடு நிற்காமல் ..பெரிய அளவில் நாம் அரசியல் கட்சிகள் மூலமாகவும் ....தீவீரமாகவே செயல் பட்டால் தான்...நம் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும்.

நம் ஊர் அனைத்து ''' மக்கள் கையெழுத்திட்ட மனு மீதான நடவடிக்கை.....நம் மாவட்ட ஆட்சியர் அவர்களோ OR தமிழக அரசு அதிகாரிகளோ ... ஏதும் இன்று நாள் வரை எடுத்ததாக தெரிய வில்லையே ???? காரணம் என்ன ??

நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேணும் .....நம் ஊரில் உள்ள ஒரு சில பள்ளிகளில் >>>> நம் ஊர் மக்களின் உயிறை எடுக்கின்ற ....டெலிபோன் டவரை ....கூட நம் ஊரின் மைய பகுதியில் இருந்து அப்புற படுத்தினாலே ..( .நம் மக்களின் உயிரை ) நியாயமான மக்களை காப்பாற்ற முடியும் ...ஒரு சில ஜமாத்தார்கள் ஏன் ....ஊர் மத்தியில் இந்த டெலிபோன் டவரை வைத்து உள்ளார்கள் என்றே நமக்கு தெரிய வில்லை ........

பொது மக்களின் உயிரை விட ....அவர்கள் தரும் பணம் பெரியதோ என்னமோ ....தெரியவில்லை ....

இந்த டெலிபோன் டவரால் பாதிப்பு உண்டு என்று முன்பு ....சவுதி அரேபியா நாட்டில் .. ..வெளி வருகின்ற...அரபு நியூஸ் ஆங்கில பத்ரிக்கையில் வாசகம் வந்து இருந்தது.

நம் ஊர் அனைத்து மக்களின் >>> ஒற்றுமையில் தான் நம் பலமே உள்ளது <<<<<<<<<<<<<

வஸ்ஸலாம்.

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சங்கு ஊதி ஷட்டௌன் பண்ணுங்க...சாவு குறையும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.) [31 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23318

இதெல்லாம் அந்த நாசமாப்போன ஆலைக்கு செவிடன் காதில் ஊதிய சங்குதான்! எத்தனை பேர் கான்சர்லெ செத்தாலும், தண்ணீர் செந்நீரா மாறினாலும், தான் உண்டு தன் உற்பத்தி உண்டுன்ணு அது, அது பாட்டுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறது. ஆறுமுக நேரிகாரங்க எதிர்தபோது அவங்க பல பேருக்கு வேலை ஆலையில் ஆயுள் கால வேலை கொடுத்து ஆஃப் பண்ணியாச்சு..நீங்க காயலர்கள் உள்ளூர் கம்பெனியிலெயெல்லாம் ஒரு நாளும் வேலை பார்க்க மாட்டிங்கப்பா...! உங்களை சரிகட்டணுன்னா நாலு அரசியல்வாதிகள் அல்லது ரெண்டு பெரிய மணுஷன்( எனும் போர்வையில் உள்ளவர்) களை சரியா கவனிச்சா சங்கதி க்ளோஸ்! பழம் விழும் என எதிர்பார்த்து கல்லெறிவதெல்லாம் வேலைக்கு ஆகாது! மரத்துக்கு மேலெ ஏறி கையாலெ பறிக்கணும். இல்லெ அதற்கு சரியான கொலுக்கியெப் போட்டு இழுக்கணும் அப்பதான் அது கொத்தோடெ விழும். மயிலெ..மயிலேன்னா அது இறகு போடாது. அப்ப என்ன செய்யணும்....? *****ங்கணும். இன்னும் ஒரு கூடங்குளமாக காயல்பட்டினம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை! அல்லாஹ் பாதுகாப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [31 October 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 23347

DCW குஜராதில மூடி டான்கலாமே
சும்மா தொறந்து வச்சி இருகன்கலாம்
நம்ம ஊரு பக்கத்துல இருக்கிற DCW ல அங்க உள்ள உற்பத்தியையும் சேர்த்து இங்கு பன்னுரன்கலாம்

இப்படிக்கு,
Seyed Mohamed Sayna
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved