Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:06:23 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9221
#KOTW9221
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 26, 2012
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தென்னக ரயில்வே அதிகாரியுடன் சந்திப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3611 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தென்னக ரயில்வே மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் அஜித் குமாரை - மதுரையில் செப்டம்பர் 17 அன்று சந்தித்து - காயல்பட்டினம் ரயில்வே நிலையம் சம்பந்தமாக கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர். அது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

நமதூர் இரயில்வே நிலைய அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி 17.9.2012 அன்று நமது ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் அவர்கள் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் முத்து ஹாஜி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஹாஜி எஸ்.எம். ஹசன் மரைக்கார், ஹாஜி பிரபு தம்பி ஆகியோர் மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் திரு அஜித் குமார் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.



திரு. அஜித் குமார் அவர்கள் மலையாளி. தமிழ் படிக்கத் தெரியாததால் மனுவில் குறிப்பிட்டிருந்த கோரிக்கைகளை அரைமணிநேரம் அவசரப்படாமல், அமைதியாக, கோரிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கேட்டறிந்து, ஐக்கியப் பேரவையால் கொடுக்கப்பட்ட ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்றுக்கொண்டு, அவைகளை நிவர்த்தி செய்து தருவதற்கு உத்தரவு பிறப்பித்தார், குறிப்பிட்ட பணிகளை, செய்யவேண்டிய அதிகாரிகளை, தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு விரைவாக செய்து முடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.





திரு அஜித் குமார் அவர்களின் கடமையுணர்வு சென்றிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவர்களது கடமையுணர்வை பாராட்டி, அவர்தம் பணிசிறக்க வாழ்த்தி விடைபெற்றனர்.

விரைவாக தீர்கப்படவிருக்கும் குறைபாடுகள்:

மின்விளக்கு வசதி, குடிநீர் பாதுகாப்பு, நிலைய நிரந்தர பணியாளர் நியமனம் மற்றும் நடைமேடை நீளத்தை, உயரத்தை கூட்டுதல், தற்போதுள்ள நடைமேடை ஒன்பது இரயில்பெட்டிகள் நிறுத்தப்படும் அளவுக்கே நீளம் உள்ளது. மேலும் ஒன்பது பெட்டிகள் நிறுத்தப்படும் அளவுக்கு நடைமேடையின் நீளம் கூட்டப் பட உள்ளது.நடைமேடையின் உயரத்தை இரயில்வே துறை மூன்று பிரிவுகளாக முறைபடுத்தி வைத்திரிக்கிறது. தாழ்நிலை, நடுநிலை, உயர்நிலை. மேலும் ஒன்பது பெட்டிகள் நிறுத்தப்படும் அளவுக்கு கூட்டப்படும் நடைமேடையின் உயரம், நடுநிலை அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது. தற்போதுள்ள நடை மேடையின் உயரமும் மிக விரைவில் உயர்த்தப்படும் என்ற உத்தரவாதத்தையும் கூடுதல் கோட்ட மேலாளர் திரு அஜித்குமார் அவர்கள் தந்துள்ளார்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [26 September 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 22433

நமதூர் மக்களுக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் ஐக்கியப்பேரவையின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [26 September 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 22434

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரிக்கைகளை ஏற்று மதிபளித்து துரித நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்த தென்னக ரயில்வே அதிகாரி திரு அஜித் குமார் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். ( எல்லா அதிகாரியும் இப்படி தங்களின் பணிகளை சரியாக துரித சமயத்தில் செய்துவிட்டால் மிக நன்றாகத்தான் இருக்கும் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ரயில்வே பணி துரிதமாக நடைபெற - எடுக்கும் முயற்சி ....
posted by கே .வி .ஏ . டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை (Qatar - Doha) [26 September 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22435

கே .வி .ஏ . டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை

நல்ல முயற்சி ...
பாராட்டுகள் .

K .V .A .T . புஹாரி ஹாஜி அறக்கட்டளை .
கத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [26 September 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22437

நல்ல முயற்சி விரைவில் நடைபெற வாழ்த்துக்கள்.

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்

Moderator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [26 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22438

நமதூர் இரயில்வே நிலையத்தின்அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற இருக்கும் தென்னக ரயில்வே அதிகாரி திரு அஜித் குமார் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்! மனமார்ந்த நன்றிகள் ! ஐக்கியப்பேரவை நமதூர் மக்களுக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாக கொண்டுஇருப்பதை நினைத்து மிக்கமகிழ்ச்சி ! எடுக்கும் முயற்சி தொய்வு இன்றி துரிதமாக நடைபெற வாழ்த்துக்கள் !!! நமதூர் ஐக்கியப்பேரவையின் இந்த முயற்சிக்கு அகங்கனிந்த ஜஜாகள்ளாகுல் ஹைரா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:..PLATFORM
posted by NIZAR AL (kayalpatnam) [26 September 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 22440

முஸ்லிம் ஐக்கிய பேரவையின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். காயல்பட்டணம் இரயில் நிலையத்தில் பல தேவைகள் இருந்தாலும் மிக முக்கியமான தேவையாக இருப்பது நடைமேடையே .குறைந்த பெட்டிகளை கொண்ட திருநெல்வேலி செல்லும் இரயிலுக்கு மட்டுமே போதுமான நடைமேடைதான் தற்போது உள்ளது. தினமும் வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் பாதி இரயில் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது. இதனால் நம்ம மக்கள் மிகுந்த கஷ்டம் அடைகிறார்கள், முட்கள், மிகுந்த உயரத்தில் இருந்து இறங்க முடியாமல் அரை கிலோமீட்டர் தூரம் வந்து வாகனத்தை அடைகிறார்கள்.

ஒரு எக்ஸ்பிரஸ் இரயில் நிற்கும் மட்டுமல்லாமல்,அதிக பயனாளிகளை கொண்டுள்ள நம் நிலையத்தை மதுரை கோட்ட அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவது மக்களை வெருப்புக்குலாக்கிறது. இந்த ராஜ்குமார் நல்லது செய்வார் என நம்புவோம்,இல்லையனில் அணைத்து அமைப்புகள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டம் நடத்துவதுதான் இதற்கு நல்ல தீர்வை ஏற்படுத்தும்.

YOURS,
NIZAR AL
DEEVU STREET,
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நன்மைகள் தொடர் வண்டிபோல் தொடரவேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [26 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22441

ஊர் நன்மைக்காக முயற்சித்துள்ள இந்த நற் காரியத்திற்குறிய கூலியை வல்ல அல்லாஹ் தந்திடுவானாக!

எவராக இருந்தாலும், எந்த நன்மையான காரியங்களை எந்த பாகுபாடின்றி திறந்த மனசோடு செய்பவர்களை அந்த நன்மையை பெரும் மக்கள் மட்டுமல்ல,மறையளித்த இறைவனும் மனமார பொருந்திகொள்வான்! ஆமீன்!

உங்களின் ஊர் நன்மையான கர்ரியங்கள் இந்த தொடர்வண்டி நிலையத்தோடு நின்று விடாமல், தொடர் வண்டிபோல் தொடர்ந்து கொண்டே இருக்க, தனியோனாம் அந்த இறையோனை வேண்டி என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும் யான்போ "காயல் ஹௌசின்" ஹாஜி கலவா அபூபக்கர் அவர்களுடன் வசிக்கும் காயல் சகோதரர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பாராட்டுக்கள்
posted by முஹம்மது புகாரீ (Chennai) [27 September 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 22446

ஐக்கியப் பேரவையின் முயற்சிகள் பாராட்டத் தக்கவை. நிர்வாகிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

இதற்கென ஒரு குழு அமைத்து இரயில் நிலையத்தில் பணிகள் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். followup இல்லாவிட்டால் நம் அரசு மெத்தனமாகவே இருந்துவிடும். நமது கோரிக்கைகள் நிறைவேற வல்ல ரஹ்மான் துணை நிற்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொது செயலாளர் ஜனாப் அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்க வேண்டும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [27 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22447

ஐக்கிய பேரவையின் இந்த கோரிக்கை பல ஆண்டு காலமாக தொடர்வண்டி துறைக்கு முன் வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.. பாராட்டுக்குரியவர்கள்... இது வரை நமதூர் தொடர்வண்டி நிலையம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்களிக்க பட்டே வருகிறோம்...

எந்த கட்சி ஆட்சியானாலும் காட்சி ஒன்றே தான்..

அணைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் மற்றும் புற நகர் கிராம நல சங்கங்கள் அனைத்தையும் ஓன்று திரட்டி தொடர்வண்டி நிலையம் முன் நமது கோரிக்கைகளை முன் நிறுத்தி மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த பட வேண்டும்..

முஸ்லீம் லீக் கட்சியின் சமுதாய சேவகர், நகர் நல நடுநிலைவாதி மாநில பொது செயலாளர் ஜனாப் அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கி ஐக்கிய பேரவை பெரியவர்கள் முன்னிலை நடத்தி மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by V.S.M.HASSAN (DUBAI) [27 September 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22448

உங்கள் பனி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபைசெயவனாக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அனைவரும் பாடுபட வேண்டும்.!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [27 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22449

ஐக்கிய பேரவையின் சேவைகள் நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அழுவுற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பார்கள். அதுபோல பிள்ளைகளான (பொதுமக்கள் ) நாம் அழுதால்தான் தாயாகிய (அரசாங்கம் ) பால் ஊட்டுவாள். நமது கோரிக்கைகளை நாம் கேட்டால்தான் கிடைக்கும் என்ற சூழ்நிலை உண்டாகி விட்டது.

ஆகவே ! நமதூருக்கு என்ன என்ன வசதிகள் தேவையோ அவைகளை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஊர் நன்மைக்காக யார் பாடுபட்டாலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் உதவியாக, ஒத்தாசையாக இருக்கவேண்டும். வஸ்ஸலாம் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by PSA,Seyed Ahamed (HONG KONG.) [27 September 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 22450

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரிக்கைகளை ஏற்று மதிப்பளித்து துரித நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்த தென்னக ரயில்வே அதிகாரி திரு அஜித் குமார் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்! எடுக்கும் முயற்சி தொய்வு இன்றி துரிதமாக நடைபெறவும் வாழ்த்துக்கள்!!

ஊர் நன்மைக்காக முயற்சித்துள்ள இந்த நற் காரியத்திற்குறிய கூலியை வல்ல அல்லாஹ் தந்திடுவானாக! இது போல மற்ற பல காரியங்களிலும் திறந்த மனதுடனும் எந்த விதமான பகுபாடற்ற விதத்திலும் சேவைகள் புரிய வல்ல இறைவன் அருள் புரிவானாக!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [27 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22451

பார்க்க படிக்க மிக்க மகிழ்ச்சி.

மக்களுக்காக தூய உள்ளத்துடன் உழைக்கும் உங்கள் அனைவர்களுக்கும் வல்ல ரஹ்மான், ரஹ்மத் செய்வானாக.!

நம் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை இன்னும் தீவிரமாக களத்தில் இறங்கி, அனைத்து மக்களின் அன்பையும், நம்பிக்கையும் பெற்று, ஒரு வலுவான பேரவையாக மாறி மக்களுக்காக சேவை ஆற்றிட பிராத்திக்கின்றேன்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும், ரயில்வே அதிகாரி அவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

கண்டு கொள்ளப்படாத ரயில் நிலையம் என்றால், அது நம் ரயில் நிலையம் தான்.

- அவசரத்துக்கு ஒன்னுக்கு போகணும் என்றால், உடனே ரயில்வே பள்ளிவாசலுக்கு தான் ஓடனும்.

- ஒரு மழை வந்தால் ஒதுங்க முடியாது.

- முதல் முதலில் இந்த வழித்தடத்தில் ரயில் விட்ட சமயம், எப்படி இருந்ததோ அதே மாதிரி, அதே இருட்டடைந்து தான் உள்ளது.

- ட்ரெயினில் ஏற மக்கள் பிளாஸ்டிக் சேர் கொண்டு வரும் அவலமும் இங்கு காணலாம்.
++++++++++++++++++++++++++++
** இந்த விடுமுறையில் குடும்பத்தாரை சென்னை அனுப்ப சென்று இருந்தேன்.

- ஏசி கோச் எங்கு நிற்கும் என்று, நிலைய அதிகாரியிடம் வினவியதும், அவர் வாசலுக்கு நேராக நிற்கும் என்றார்.

- நின்றோம், வண்டி வந்தது. வந்த ஸ்பீடை பார்த்தால் நம் ஊரில் நிற்காது போல என்று நினைத்தேன். நின்றது. ஏசி கோச் எங்களை தாண்டி இரண்டு நிமிடம் சென்றது.

ஓடினோம்... ஓடினோம்.. அடைந்தோம்.. பாவம் என் சிறிய கம்மா.. அவர்கள் பட்ட பாட்டை விவரிக்க முடியவில்லை.

சரி, வண்டியில் ஏறலாம் என்றால்.. ஊஹூம்... வாசலை அண்ணாந்து பார்த்த எனக்கே கழுத்து வலித்தது. ஒரு வழியாக அனைவர்களையும் ஏற்றி விட்டாச்சு... அப்படியே ஊர்பட்ட சாமானையும் உள்ளே தள்ளியாச்சு… கம்மா..!

தேமே.. என்று மூச்சு வாங்கி, முதல் நாள் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தையை போல நின்றுக்கொண்டு இருந்தார்கள்.

வண்டியும் ஊளையிட ஆரம்பித்து விட்டது. ஒரே கூச்சல்.. கம்மா ஏறுங்க, பெருமா ஏறுங்க...சாச்சி ஏறுங்க... முடிகிறதா அவர்களுக்கு.

கடைசி படியைக் கூட அவர்களால் தொட முடியவில்லை... டென்சன்.. டென்ஷன். டென்ஷன்.

வண்டி மறுபடியும் தொடர் ஊளை.

பின்னால் இருந்த ஒரு சகோதரர் பிளாஸ்டிக் சேரை தர, நான் கம்மாவை அப்படியே அலேக் ஆக தூக்கி, சேரில் ஏறி, மேலே உள்ளவர்கள் தூக்க.. ஒரு வழியாக ஏற்றி விட, வண்டி நகர, நான் சரிய, பின்னால் இருந்த சகோதரர் தாங்கி பிடிக்க...ஐயோ..! நல்ல அனுபவம்.

கிடைத்த கூடுதல் அனுபவங்கள்.

** ஆளை வழி அனுப்ப செல்லுபவர்கள் கொண்டு செல்ல வேண்டியவைகள்

# தண்ணீரும், ஜொக்கும் கொண்டு செல்லுங்கள்.

# கூடவே ஒரு பிளாஸ்டிக் சேரும்.

# நாயை விரட்ட ஒரு கம்பு.

# டார்ச் லைட் ஒன்று.

## முக்கியமாக, உங்களின் கோச் எங்கு நிற்கும் என்றும் விசாரியுங்கள். வாசலுக்கு நேர் என்றால் ஸ்டேஷன் வாசலா, மெயின் கேட் வாசலா, வீடுகள் உள்ளதே.. அவங்க வீட்டு வாசலா என்று விபரமாக விசாரியுங்கள்.

ஆக மொத்தம், எனக்கு ரயில்வே மீது கோபத்தை விட மகிழ்ச்சிதான் கிடைத்தது. காரணம், என் கம்மாவை தூக்கும் பாக்கியம் கிடைக்கச்செய்தது இந்த ரயில்வே தானே.!!!

நம் ரயில்வே நிலையத்திற்கு, விடிவு காலம் என்று வருமோ..!! நம்பிக்கையுடன் காத்து இருப்போம். இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [27 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22452

Good step taken by Muslim United Council.Really appreciated.

Best Regards
Salai Syed Mohamed Fasi
AL khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [27 September 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22469

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாம் மனமார பாராட்ட கூடிய நல்லதோர் செயல் பாட்டை தான்.நம் ஊர் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் செய்துள்ளார்கள்.மாஷா அல்லாஹ் இந்த பெரிய வயதிலும் கூட சிறம்மம் பாராது.நம் ஊர் மக்கள் நலனுக்காக எந்த ஒரு பிரதி பலனும் இல்லாமல் உழைக்கிறார்கள் அல்லவா .......

இவர்களை பார்த்தாவது நம் நகரமன்றத்தினர். நம் ஊர் நலனுக்காக உழைக்கலாம் அல்லவா ????

இன்னும் நம் ஊர் ரயில்வே ஸ்டேசனுக்கு வர கூடிய பல நல்ல .....நல்ல திட்டக்களை தென்னக ரயில்வே நிர்வாகம் செய்து தருவார்கள் என்கிற முழு நம்பிக்கையுடன் எதிர் பார்த்து மிகுந்த ஆவலுடன் காத்து உள்ளோம்.

நம் ஊர் பெரிய மனிதர்களை எல்லாம் மனம் குளிர வரவேற்று நம் கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக வாக்கு சொன்ன அதிகாரி அவர்களையும் நாம் மனதார பாராட்டுவோமாக.

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved