Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:12:19 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9171
#KOTW9171
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 18, 2012
அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! சீதக்காதி திடலில் நடைபெற்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2626 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) கட்சியின் காயல்பட்டினம் கிளை சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 104ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 17.09.2012 திங்கட்கிழமை இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கட்சியைச் சேர்ந்த என்.எம்.அகமது தலைமை தாங்கினார். என்.பி.முத்து, பி.அந்தோணி, எஸ்.எம்.அப்துல் காதர், பி.மனோகரன், எஸ்.எம்.ஜின்னா, எஸ்.எம்.ஜீனத், என்.அருணாச்சலக்கனி, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜெயலலிதா பேரவையின் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அதிமுக இளைஞரணி இணைச் செயலாளர் சதன் என்.பிரபாகர், தலைமைக் கழக பேச்சாளர் ஆர்.சிராஜுத்தீன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மு.இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இக்கூட்டத்தில், எம்.எஸ்.எம்.ஷாபி, டெய்லர் முத்து, என்.எஸ்.நெய்னா, எஸ்.எம்.தைக்கா, எம்.கே.ஜெ.அலி, எஸ்.எம்.தைக்கா, எம்.சமுத்திரக்கனி, எஸ்.எல்.ஜெய்த்தூன், சைக்கிள் அப்துல் காதர், என்.டி.இஸ்ஹாக், எம்.செந்தமிழ்ச்செல்வன், எம்.எஸ்.டில்லி ஹாமீது, எம்.இ.எல்.புஹாரி, என்.எம்.சுலைமான், இ.அய்யங்கண்ணு, இ.காசிலிங்கம், அ.இல்லங்குடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22248

நான் கூட்டத்துக்கு போயிருந்தேன். புதிதாக ஒரு செய்தி கிடைத்தது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 இல் அமோக வெற்றி ஈட்டி ஆட்சி அமைத்தபோது கலைஞர் அவர்களின் திறமையை பாராட்டி ஒரு மோதிரம் அணிவிதார்கலாம். புரட்சி தலைவர் எம்ஜீயார் அவர்கள் நானும் ஓடி உழைத்து கழகம் வெற்றிபெற பாடுபட்டேனே, எனக்கு நீங்கள் ஒரு மோதிரம் அணிவிக்கவில்லையே என்று அண்ணாவிடம் கேட்டாராம். அதற்கு அண்ணா அவர்கள், நீயும் முன்கூட்டியே ஒரு மோதிரம் வாங்கித்தந்து எனக்கு அணிவியுங்கள் என்று சொல்லி இருந்தால் நான் உனக்கும் மோதிரம் அணிவிதிருப்பேன் என்று சொன்னாராம். கேட்பதற்கு சுவாரஸ்யமான செய்தியாக இருந்தாலும் ஆழ்ந்து யோசிப்பவர்கள் அண்ணாவை குறையாக நினைக்க மாட்டார்களா?

"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று" என்று வள்ளுவம் கூறுகிறதே, பேசுகிறவர்கள் தமாசுக்காக எதையும் சொல்லலாம், ஆனால் அண்ணாவின் பெயருக்கு களங்கம் கற்பிக்கலாமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah) [18 September 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22255

மக்கி காக்கா, நானும் இந்த மோதிர சம்பவம் கேள்வி பட்டு இருக்கிறேன்.. பேச்சாளர் நகைச்சுவைக்காக சொன்னது அல்ல... இந்த சம்பவத்தை கவிஞர் கண்ணதாசன் அவருடைய வனவாசம் என்ற நூலில் சொல்லி இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் அல்ல .. சென்னை மாநகராட்சி தேர்தல் .. சம்பவம் நடந்தது எம்ஜிஆர் க்கு அல்ல.. கண்ணதாசனுக்கு ... சம்பவம் பொய்யா? மெய்யா? என்பது இருவருக்கும் இறைவனுக்கும் தான் வெளிச்சம் ...

சென்னை மாமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்ற சமயம் அண்ணா தலமையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறுகின்றது. வெற்றிக்காகப் பாடுபட்டவர்களின் பெயர்கள் அழைக்கப்படும் போது அந்தத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்த தனக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது கண்ணதாசன் மேடைக்குக் கூட அழைக்கபடுவதில்லை. மேலும் அண்ணா, கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்துக் கவுரவம் வேறு செய்கின்றார். பெரிதும் ஏமாற்றமடைந்த கண்ணதாசன், நேராக அண்ணாவிடம் சென்று, “என்ன அண்ணா! இப்படி சதி செய்து விட்டீர்கள்?” என்று கேட்க, அவரோ, “அட, நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு; அடுத்த கூட்டத்தில் போட்டு விடுகின்றேன்” என்று சொல்ல, ‘இதென்ன தில்லாலங்கடி’ என்று திகைத்து நிற்கின்றார்.

நூல்: வனவாசம்
ஆசிரியர்: கண்ணதாசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22258

வனவாசம் தகவல் தந்த சகோதரர் அவர்களுக்கு நன்றி.

கடவுளே இல்லை என்ற கண்ணதாசன் பின்னர் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். தன் கவிதையை மாற்றிப்பாடினார்.

இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்..., இல்லை ஒரு தெய்வம் என்று சொல்லவில்லை என்றான்.....என்று பாடினார்.கவிஞர் சொன்னதும் பொய்யே பொய்யே.....இதுவும் அவர் எழுதியதுதான்.

இதெல்லாம் அரசியலில் சகஜம், அப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M Sajith (DUBAI) [18 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22267

சென்ற வருட பிறந்ததனால் விழா கொண்டாட்டச் செய்தியில் ஒரு நண்பர் பதித்த கருத்து ஞாபகம் வருகிறது...

"ஆதிமுக வில் அண்ணா கொடியில் பறக்கிறார் அம்மாவோ கொடிகட்டி பறக்கிறார்"

கட்சி பெயரில் இருக்கும் அண்ணாவை வருடம் ஒருமுறையாவது நினைக்கிறார்களே.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [19 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22282

மோதிர விஷயம் நண்பர் சினாஷ் சொல்வதே சரி. கண்ணதாசனின் "வனவாசம் "நானும் படித்திருக்கிறேன். அதில் மேற்குறித்த சம்பவம் இருக்கிறது.

வனவாசம் மட்டுமல்ல,"மனவாசம் "என்றும் கவிஞ்சர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதை நண்பர் சினாஷ் படித்துள்ளாரா..? என தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved