Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:34:33 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8080
#KOTW8080
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 29, 2012
கணனி மயமாக்கப்படும் அரசு மருத்துவமனைகள்! காயல்பட்டினம் அரசு மருத்துவமனையும் கணனி மயமாக்கப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3227 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் சேவைகளும் கணனி மயமாக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சேவைகளும் சில தினங்களுக்கு முன் கணனி மயமாக்கப்பட்டு, அங்குள்ள அலுவலர்களுக்கு கணனியையும், மென்பொருளையும் பயன்படுத்தும் முறைகள் குறித்து 3 நாட்கள் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

HMS மென்பொருள்:
தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், “மருத்துவமனை மேலாண்மைத் திட்டம் - Hospital Management System (HMS)” என்ற பெயரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, அதனுள், மருத்துவமனைகளின் அனைத்து சேவைகளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.



செய்முறை:
கணனி மயமாக்கப்பட்ட சேவைத்திட்டத்தின் கீழ், மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளி ஒருவர் துவக்கமாக புறநோயாளிகள் பதிவுப் பிரிவில் (Out Patient Registration) தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அங்குள்ள அலுவலர் அவரது பெயர், பாலினம், வயது அகளிட்டவற்றை கணனியிலுள்ள HMS மென்பொருளில் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்குவார்.





பின்னர், அந்நோயாளி மருத்துவர் அறைக்குச் சென்று, தனது அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். அதிலுள்ள பதிவு எண்ணைக் கொண்டு அவரது விபரப் பக்கத்தை மருத்துவர் திரை முன் வைத்திருப்பார். அவரிடம் தனக்குள்ள நோய் குறித்து தெரிவிக்க வேண்டும். விபரம் கேட்டறிந்த மருத்துவர் அதற்காக அவரளிக்கும் சிகிச்சை முறைகள், அளிக்க விரும்பும் மருந்து - மாத்திரைகள், ஊசி மருந்துகள் அகளிட்டவற்றை HMS மென்பொருளில் பதிவு செய்வார்.





நோயாளியை அகநோயாளியாக (In Patient) அனுமதிக்கும் நிலை ஏற்படின், அது குறித்த விபரங்களையும் மருத்துவர் HMS மென்பொருளில் பதிவு செய்வார்.

பின்னர் அந்நோயாளி புறநோயாளியாக இருந்தால், தனது அடையாள அட்டையை மருந்து - மாத்திரைகள் கொடுக்குமிடத்திலும், ஊசி மருந்து அளிக்குமிடத்திலும் கொடுக்க, அவர்கள் HMS மென்பொருளில் மருத்துவர் அளித்துள்ள மருத்துவக் குறிப்பின் அடிப்படையில் மருந்து - மாத்திரைகளையும், ஊசி மருந்துகளையும் அளிப்பர்.



அவர் அகநோயாளியாக இருந்தால், அகநோயாளிகள் பிரிவில் அவர் தனது அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். அவர்கள் மருத்துவரின் குறிப்புகளைப் பார்வையிட்டு, நோயாளியை அகநோயாளியாக அனுமதித்து, அதற்கான சிகிச்சைகளை வழங்குவர்.

நன்மைகள்:
HMS மென்பொருள் மூலம் கணனியில் பதிவு செய்யும் இச்சேவைத் திட்டம் குறித்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் தெரிவித்துள்ளதாவது:-

*** இந்த HMS மென்பொருள் மூலம் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு, ஒருவர் தமிழ்நாட்டிலுள்ள கணனி மயமாக்கப்பட்ட எந்த ஒரு மருத்துவமனையிலும் சென்று தனக்கான மருத்துவ சிகிச்சையை, பழைய மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் சீராகப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் அவர், ஊருக்கு வந்துதான் சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை இல்லாமற்போகிறது...

*** ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி பதிவேடுகள் வைத்து, ஒவ்வொரு முறையும் எழுதி பாதுகாக்க வேண்டிய நிலை இதனால் தவிர்க்கப்படுகிறது...

*** இம்மருத்துவமனையில் சேவைகள் கணனி மயமாக்கப்படும் முன்பு வரை நோயாளிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் புறநோயாளிகள் பிரிவில் சென்று பதிவு செய்து வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது HMS மென்பொருள் மூலம் வழங்கப்படும் அடையாளச் சீட்டை லேமினேஷன் போன்ற முறைகளில் முறையாகப் பாதுகாத்து நோயாளிகள் கொண்டு வந்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமிராது...

*** HMS மென்பொருள் பயன்பாடு மூலம், ஒரு மருத்துவர், அலுவலர் பணிக்கு வரும் விபரம், அவரது பணி விபரம், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புறநோயாளிகள், அகநோயாளிகள் எண்ணிக்கை, அவர்களில் ஆண்கள் - பெண்களின் தனித்தனி எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தையும் நினைக்கும் நேரத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தால் கண்காணிக்க இயலும்... எனவே, முறைகேடுகள் நடைபெற வாய்ப்பற்றுப் போகிறது...


இவ்வாறு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் தெரிவித்தார்.

நடைமுறை சிக்கல்கள்:
*** கணனி மயமாக்கப்படுவதற்கு முன்பு மருத்துவமனையில் பணியாற்றியவரிடமே கணனி மயமாக்கப்பட்ட மருத்துவ சேவைகளைப் பதிவு செய்யும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதால், கணனி பயன்படுத்தும் அறிவைப் பெற்றிராத அலுவலர்கள் - குறிப்பாக மருந்து - மாத்திரைகளை வழங்கும் அலுவலர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

*** கணனி மயமாக்கப்படுவதற்கு முன்பு வரை ஒரு நோயாளியின் சீட்டை வாங்கி, அவருக்கான மருந்துகளை உடனுக்குடன் வழங்கிவிட்டு, அடுத்த நோயாளியின் சீட்டை வாங்குவர். இதனால் வேகமாக மக்கள் திரள் குறையும். ஆனால் கணனி மயமாக்கப்பட்ட பின்பு, ஒரு நோயாளியின் சீட்டை வாங்கி, அவருக்கான மருந்துகளை அளித்த பிறகு, அளிக்கப்பட்ட மருந்து - மாத்திரைகள், அவற்றின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்கள் HMS மென்பொருளில் பதிவு செய்த பின்னரே அடுத்த நோயாளியின் சீட்டைப் பெற இயலும்.

இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையுள்ளது. பழைய முறைப்படி சேவைகளைப் பெற்று வந்த நோயாளிகள் பொறுமையிழந்து, அலுவலர்களுடன் கோபிக்கவும், தர்க்கம் செய்யவும் வாய்ப்பேற்படுகிறது. (அலுவலர்கள் புதிதாக கணனியைப் பயன்படுத்துவதால் இந்நிலை அனுதினமும் பலமுறை நிகழ்கிறது.) *** இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு இம்மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகளை நகரின் அனைத்து தரப்பினரும் கூடுதலாக பயன்படுத்தி வரும் நிலையுள்ளது. இவர்களுக்கு வாரந்தோறும் திங்கள், புதன் கிழமைகளில் மருந்து - மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தினங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும். இதுபோன்ற சமயங்களில், மருந்துகளை அளிக்கும் அலுவலர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

தீர்வு:
*** ஒரு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்களின் எண்ணிக்கை, அலுவலர்களின் எண்ணிக்கையை குறைக்காமல், சரியான அளவில் பணியமர்த்தினால், பணிகளைப் பிரித்து செய்ய வாய்ப்பேற்படும்.

*** புதிதாக கணனியைப் பயன்படுத்தும் அலுவலர்களுக்கு கூடுதல் பயிற்சியை முறையான கால அளவுப்படி அளிக்கலாம்.

இவ்வாறு செய்வதால், HMS மென்பொருள் மூலம் மருத்துவ சேவைகள் நன்னிலையில் நீடிக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [29 February 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 17282

நல்ல திட்டம்தான் . ஒருவேளை நோயாளிகள் இருக்கும்போது , கம்ப்யூட்டர் repair ஆகிவிட்டால் , technician வந்து பார்க்கும்வரை நோயாளிகள் காத்திருக்க வேண்டுமோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்ல திட்டம் எல்லாம் வரும் ஆனால் நடைமுறையில் பல ஆண்டுகள் நீடிக்காது...! இதான் நமது நாட்டின் தலை எழுத்து...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM) [29 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17297

நல்ல முன்னேற்றேமான விசியம்.. ஆனால் இந்த திட்டம் சில நாட்களுக்கு உபோயகமான முறையில் நடைபெறலாம்.. பின்பு இந்த கணினி முறை பழுதின் காரணமாக கிடப்பில் கிடக்கும்.. பழைய தொண்டு சிலிப் முறை திரும்ப நடைமுறையில் இயங்கும்..!

நல்ல திட்டம் எல்லாம் வரும் ஆனால் நடைமுறையில் பல ஆண்டுகள் நீடிக்காது...! இதான் நமது நாட்டின் தலை எழுத்து...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மிகவும் அற்புதமான திட்டம், பாராட்டுக்கள். வாழ்க தமிழக...அரசு.
posted by சட்னி.செய்யது மீரான்.. (ஜித்தா....சவுதி அரேபியா ) [29 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17300

அஸ்ஸலாமு அலைக்கும்..

மிகவும் அற்புதமான திட்டம்...
ஏழை,எளிய மக்களுக்கு உபயோகமான
நல்லதோர் திட்டம்..பாராட்டுக்கள்.வாழ்க தமிழக அரசு...

முதலில் கொஞ்சம் தடுமாற்றமும், தாமதமும் ஏற்பட தான் செய்யும் பின்னர் எல்லாம் சரியாகும்..

எல்லோரும் கணினியை முழுமையாக கற்று விடு(வரு)வதில்லை.
போக போக அவர்களாகவே பயின்று கொள்வார்கள்..

இவ்வளவு செலவு செய்து செயல்படுத்தும் திட்டத்தின் பயனும், பலனும் முழுமையாக பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் அரசும் நல்லதோர் பயிற்சி வழங்குவார்கள்..

மக்கள் மருத்துவர் பவநாச குமார் அய்யா அவர்கள்
கருப்பு கண்ணாடி போட்டு கலக்குறாங்க வாழ்த்துக்கள்..

இது போன்ற கணினி மயமான திட்டம் நமது கே.எம்.டி.மருத்துவமனையிலும் உள்ளதா???

புதிதாய் பதவி ஏற்றுள்ள நிர்வாக குழுவினர்கள் மற்றும் மதிப்புமிகு தலைவர் மருத்துவர் அஷ்ரப் அவர்கள் செயல் படுத்துவார்கள். எங்களது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்..

என்றும் மாற அன்புடன்
சட்னி.செய்யது மீரான்
ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [29 February 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17305

மாஷா அல்லாஹு.

நாம் முதலில் நமது காயல்மா நகருக்கு இதை தந்த நமது தமிழ் நாடு அரசுக்கும் & நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் நமது ஊர் மக்கள் யாவர்களும் நன்றி சொல்ல வேண்டும்.

நம் ஊர் மக்கள் யாவர்களும் இனி நமது காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை, நிச்சயம் பயன் படுத்துவார்கள் என்று நெனைக்கிறேன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by Jahir Hussain VENA (Bahrain) [29 February 2012]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 17308

Much appreciated…If concern persons will response on Comment No:3


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE) [01 March 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17311

அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த கணனி முறை எல்ல அரபு நாடுகளிலும் உள்ளது. எந்த பிரச்சனை இருந்தது மாதிரி எனக்கு தெரியவில்லை. இந்த பிரச்சனை எதில் இருந்து ஆரம்பமாகிறது என்று சற்று சிந்தித்தால் மின்சாரம் துண்டிக்கும்போதுதான் இது எல்லாம் உருவாக்கப் படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by V D SADAK THAMBY (KAYALPATNAM) [01 March 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 17317

நல்ல முன்னேற்றம் . கணினி ஒன்றும் பழுதாகி விடாது. பழுது ஏற்பட்டாலும் மாற்று ஏற்பாடு உண்டு . அணைந்து நாடுகளிலும் எப்போதோ இது நடைமுறைக்கு வந்துவிட்டது. நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இன்னும் குறைகூறிக்கொண்டிருந்தால் நாம் எதிலும் பின்தங்கிதான் இருப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by Sayna (Bangkok ) [02 March 2012]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 17322

Dear Admin,
Only one dout ,
கணனி or கணினி

Sayna


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by ahmed meera thamby (makkah) [02 March 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17326

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் முத்து இஸ்மாயில் குறை கூறவில்லை, இப்ப நம்நாட்டின் நடப்பு அப்படித்தானே இருக்கு,இது நல்ல முறையில் நடந்து நாம் எல்லோரும் பயன் அடையவேண்டும் பாதியில் நின்று விட கூடாது என்ற ஒரு மன உளைச்சலில் ஜனாப் இஸ்மாயில் அவர்ஹல் குறிப்பிட்டு இருக்கிறார் இது புரிபவர்ஹளுக்கு புரியும் என நினைக்கிறேன்

வஸ்ஸலாம்
அபூ முனவ்வரா அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ் அல்சுஹதா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கணனி மயமாக்கப்படும் அரசு ...
posted by mohamed noohu thamby (trichy ) [02 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17341

அஸ்ஸலாமு அலைக்கும்.

I like the command No:3


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved