Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:46 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7863
#KOTW7863
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 17, 2012
எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியர்களின் புத்துணர்வு முகாம்! திருச்செந்தூர் தோப்பில் இன்பச் சிற்றுலா!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4634 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தொடர்ச்சியாகக் கிடைத்த அரசு விடுமுறையை உற்சாகமாக கழித்திடும் பொருட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள், திருச்செந்தூரிலுள்ள தோட்டத்தில் புத்துணர்வு முகாம் என்ற பெயரில் சிற்றுலா சென்று வந்தனர்.

இன்று காலையில் துவங்கி மாலை வரை நீடித்த இப்பயணானுபவம் குறித்து, பயண ஏற்பாட்டாளரான - அப்பள்ளியின் ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி தெரிவித்துள்ளதாவது:-

வகுப்பறை, மாணவர்கள், புத்தகம், தேர்வு, வினாத்தாள் என்று எந்நேரமும் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கைச் சூழலில், தொடர்ச்சியாகக் கிடைத்த பொங்கல் விடுமுறையின் ஒரு தினத்தை சற்று ஓய்வாக கழிக்கும் வகையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் குழுமத்திற்கு புத்துணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று காலை 08.00 மணியளவில் பள்ளியில் ஒன்று கூடிய ஆசிரியர்கள், வாகனம் மூலம் திருச்செந்தூரிலுள்ள பசுமை படர்ந்த தோப்பிற்கு சிற்றுலா சென்றனர்.

அனைவருக்கும் காலை சிற்றுண்டி அங்கேயே ஆயத்தம் செய்து பரிமாறப்பட்டது. “கற்றுக்கொடுப்பார் கரண்டியும் பிடிப்பார்” என்ற புதுமொழிக்கேற்ப - சமையல் ஏற்பாடுகளைச் செய்திடும் பொருட்டு ஆசிரியர்களே கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினர்.



இவர்களின் கைவண்ணத்தில், காயல்பட்டினம் ஸ்பெஷல் களறி சாப்பாடு மதிய உணவாக சமைத்துப் பரிமாறப்பட்டது.



தொழுகை நேரம் வந்ததும், முஸ்லிம் ஆசிரியர்கள் கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுகையை நிறைவேற்றினர்.



காலையில் தோட்டத்திற்குள் நுழைந்தது முதல், மாலையில் வெளியேறும் வரை - சூட்டைத் தணிக்க தண்ணீர் தொட்டியில் சுகமான குளியலில் ஈடுபட்ட ஆசிரியர் குழுவினர், சில மணித்துளிகளில் சிறுபிள்ளைகளாக மாறி ஓடியாடி உற்சாகமாக விளையாடத் துவங்கிவிட்டனர்.



பள்ளி நடவடிக்கைகள் பற்றியும், மாணவர் நலன்கள் பற்றியும், அவ்வப்போது வெளியாகும் அரசு உத்தரவுகள் பற்றியும் மட்டுமே பேசிக் களைத்துப் போன ஆசிரியர்கள், இப்புத்துணர்வு முகாமில் - அதைத் தவிர அனைத்து அம்சங்கள் குறித்து அரட்டையடித்து ஒய்ந்தனர்.

முற்றிலும் ஒரு மன நிறைவான சூழலில் பயனுள்ள பல தகவல்களை தமக்குள் பரிமாறிக் கொண்ட ஆசிரியர்கள், பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர் - அடுத்த தொடர்விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக!



இந்த முகாம் ஆசியர்களுக்கு மிகவும் புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.


இவ்வாறு, எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by சாளை S.I. ஜியாவுதீன் (அல்கோபார்.) [17 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16010

ஹாய்... இதுவும் நன்றாக இருக்குதே..

தொடர்ந்து இதுமாதிரி புத்துணர்வு டூர் சென்று டென்சனை குறைத்து, மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொடுங்கள்.

அம்மா அவர்கள் முதுமலையில் புத்துணர்வு முகாம் ஏற்படுத்தி கொடுத்ததின் பாதிப்போ..!!

ஆசிரியர்களுக்கும் வீடு, பள்ளிக்கூடம், மாணவர்கள், பாடங்கள், டியூஷன் என்று வாழ்க்கையே ஒரே கோட்டில் தான் செல்லுகிறது. ஒரு மாற்றம் தேவை தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by ATC ABUBACKER (Dubai) [17 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16011

எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை பார்த்த சந்தோசம்.. வெகு நாட்களுக்கு பிறகு..

எனது தந்தை (புஹாரி சார்) பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றாலும் முன்பு ஒன்றாக வேலை செய்த ஆசிரியர்களுடன் சுற்றுலா வந்திருப்பதை கண்டு ரொம்ப மகிழ்ச்சி..

தொடர்ந்து விடுமுறை வந்தால் கொண்டாட்டமாகதான் இருக்கும்.. ஆனால் லீவு முடிஞ்சி வேலைக்கு போனா சும்மா போர் அடிக்கும் பாருங்க..... அய்ய்ய்யய்ய்யோ..

சமையல் எப்படி இருந்ததுன்னு தெரியல... களரி சாப்படா... சும்மா கம கமனுதன் இருந்திருக்கும்..

ஓகே .. ஓகே.... Book, Pen ... அப்படி இருந்துட்டு.. இது கொஞ்சம் Relaxthan... Enjoy.......

S.M.B. முஹம்மது அபூபக்கர்.
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சூட்டைத் தணிக்க தண்ணீர் தொட்டியில் சுகமான குளியலும் (மார்கழி,தை மாதம் எங்கே சூடுங்கோ???) குளித்தும்,
posted by சட்னி ,செய்யது மீரான்,, (ஜித்தா.....சவுதி அரேபியா.) [17 January 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16013

அஸ்ஸலாமு அலைக்கும்...

பயண ஏற்பாட்டாளர் அருமைத்தம்பி,
ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி அவர்கள்
சட்டையை கழற்றி சட்டியில் பொறுப்புடன்
நின்று சமையல் செய்வது காண சிறப்பு...

கற்றும்கொடுப்போம், கம்பையும் எடுப்போம்
கண்டிப்புடனும் இருப்போம், கச்சையும் கட்டுவோம்
அத்தோடு கரண்டியும் பிடிப்போம்
என்பதை காட்டிவிட்டிர்கள் ஆசான் பெருமக்களே பாராட்டுக்கள் ..

வகுப்பறை, மாணவர்கள், புத்தகம், தேர்வு, வினாத்தாள் மற்றும் டியூஷனும் என சேர்த்தும் எந்நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஒரு மாற்றத்திற்கு புத்துணர்வு முகாம் பசுமை படர்ந்த தோப்பிற்கு சிற்றுலா சென்றும், காயல்பட்டினம் ஸ்பெஷல் களறி சாப்பாடு மதிய உணவாக தாங்களாக சமைத்துப் சாப்பிட்டும், சூட்டைத் தணிக்க தண்ணீர் தொட்டியில் சுகமான குளியலும் (மார்கழி, தை மாதம் எங்கே சூடுங்கோ???) குளித்தும், சிறிது நேரம் சிறுபிள்ளைகளாக மாறி ஓடியாடி உற்சாகமாக விளையாடியும், அனைத்து அம்சங்கள் குறித்து அரட்டையடித்து கொண்டும் சிறப்புடன் நிறைவு செய்து திரும்பியதும் மகிழ்ச்சி...

ஐயாமார்களா நீங்க மகிழ்ச்சியாக இருந்தால்தானே உங்களிடம் நாங்க படிக்க அனுப்பும் எங்க பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருப்பங்கோ சாரே ... வாழ்க வளமுடன்...எல்லா ஆசரியர்களும்......

உங்கள் இந்த அணியில் எங்கள் அன்பு தம்பிமார்கள் புது மாப்பிள்ளைகள் எம்.எம்.எஸ்.ஹனிபா சார், சூபி சார் இருவரும் இல்லையே மேலிடத்தில் விடவில்லையோ????

அண்மையில் மணவிழா கண்ட உங்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்... பாரக்கல்லாஹ் ஹைரா. ஆமீன்...

மனமார்ந்த வாழ்த்துக்களுடன்....என்றும் மாறாத அன்புடன் ....
சட்னி ,செய்யது மீரான்,,
ஜித்தா.....சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புத்துணர்வை அளிக்கும் சுற்றுலாதான்!!
posted by Rayyan's Dad!! (USA) [17 January 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16014

உண்மையிலேயே ஆசிரியர்களுக்கு இது ஒரு புதிய தெம்பு அளிக்கும் சுற்றுலாதான். அன்று, பிரம்பும் கையுமாக நான் கண்ட ஆசிரியர்களை இங்கே உல்லாச குளியலில் காண்கிறேன். எனக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்கள் சிதம்பரம், ரவூப், ஜெபராஜ் மற்றும் நண்பன் மீராவையும் இங்கே பார்க்கும் பொழுது மனதிற்க்கு சந்தோசமாக இருக்கிறது.

என்னதான் நயாகரா சாரலில் நனைந்தாலும், குற்றால அருவியில் நீராடினாலும்... நமது தோப்பு குளியலில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனி அலாதிதான். ஆசிரியர்கள் சுற்றுலா, முதன் முறையாக நான் கேள்விபடுகிறேன். நல்லதொரு முயற்சி... மனம் விட்டு சந்தோசத்தை சக ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்கும் & மனதிற்க்கு புத்துணர்வை தரும் அம்சம். மற்ற பள்ளிகூட ஆசிரியர்களும் "புத்துணர்வுட்டும்" சுற்றுலா சென்று வாருங்களேன்!!

முன்பெல்லாம் "மாணவர்கள் சுற்றுலா" என்று ஒன்று உண்டு. நான் பயின்ற பள்ளிகூடத்தில், பக்கத்திலே (ஐந்து மணிநேர பயண தொலைவிற்குள்) எங்கேயாவது கூட்டி கிட்டு போவார்கள். ஆனால் நமது முஹிய்யதீன் மெட்ரிகுலேசனில் 'வட நாடு' சுற்றுலாவெல்லாம் சென்று வருவார்கள். எங்களுக்கு பொறாமையாக இருக்கும்.

எது எப்படியோ, மாணவப் பருவத்தில் சென்று வந்த சுற்றுலாக்கள் அதிலும் குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஊரான பாஞ்சாலங்குறிச்சி, கொக்கிரகுளத்தில் உள்ள அறிவியல் மையம் (பள்ளி கூடத்தில் கூட்டிகிட்டு போயிருக்கவில்லையெனில் இங்கேயெல்லாம் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்குமோ என்பது சந்தேகமே), கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு சென்று வந்தது இன்றும் மனதில் மறையாமல் இருக்கிறது.

சமீபத்தில் கூட பல்லாயிரம் வருடம் பழமை வாய்ந்த மலைக்குகைக்கும் (Caverns ), மிருகக்காட்சி சாலைக்கும் என் மகனோடு சென்று இருந்தபோது, அங்கே பள்ளி மாணவர்களை கும்பலாக கண்ட பொழுது என்னுடைய மாணவப் பருவ சுற்றுலாக்கள்தான் நினைவுக்கு வந்தது.

இப்பொழுதெல்லாம் நமதூரில் "மாணவர்கள் சுற்றுலா" என்று ஒன்று இருக்கிறதா என்றே எனக்கு தெரியவில்லை. படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அறிவை வளர்க்கும்... மனதை ஆசுவாசப்படுத்தும் "மாணவர்கள் சுற்றுலா" எக்கால கட்டத்திலும் தேவை. மாணவப்பருவ சுற்றுலாக்கள் என்றும் மனதை விட்டு மறையாதது.

ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதோடு நின்று விடாமல் மாணவர்களையும் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா கூட்டிக்கிட்டு போங்கள். ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் மாணவர்களை ஊக்குவித்து அழைத்து சென்று வர வேண்டும்.

அடுத்த முறை... முடிந்த வரை எல்லா ஆசிரியர்களையும் அழைத்து செல்லுங்கள். என்றும் தொடரட்டும் ஆசிரியர்களின் இனிய சுற்றுலாக்கள்!!

சாளை முஹம்மது முஹ்யித்தீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by Haddadh (Thrissur) [18 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16017

எங்களுக்கு படித்துகொடுக்க, சமையல் செய்ய சாப்பிட, நீந்த, ஒற்றுமையுடன் பழக, இறைவனை துதிசெய்யவும் தெரியும். வாழ்த்துக்கள்..................

ஹத்தாத் - மலையாளம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சிக்ஸ் பேக் ..!!!!
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [18 January 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16021

தனி மரம் தோப்பாகாது என்பார்கள் அது போல் எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் தோப்பாகி தோப்பிற்கு சென்றதை காணும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது.

முன்பு எல்லாம் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பார்கள் ஆனால் இங்கு படிப்பிப்பவர்களே அடுப்பூதி ஆனந்தமாய் இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி.

மீரா தம்பி காக்கா ( மீரா காக்கா உங்களை சார் எல்லாம் சொல்ல மாட்டேன் எங்களுக்கு எப்பவும் நீங்க காக்காதான் - பெயருக்கு பின்னாடி தம்பியும், காக்காவும் சேர்ந்து கிடைக்குற ஒரே ஆளு நீங்கதான் ...) அவங்க சமையல் பத்தி சொல்லவே தேவையில்லை. நான் பல தோப்புல அவங்க சாப்பாட சாப்பிட்டிருக்கேன் மிகவும் அருமையாக இருக்கும்.

இதுவரை எங்கள் ஆசிரியர்களின் அறிவு வளர்ச்சியையும், அனுபவ முதிர்ச்சியையும் கண்டு ரசித்த எங்களுக்கு இந்த புகைப்படங்கள் மூலம் அவர்களுடைய சிக்ஸ் பேக் வளர்ச்சியை காண வாய்பளித்த மீராத்தம்பி காக்கா அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH-K.S.A.) [18 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16024

நல்ல சூப்பர்.. டூபர் பிக்னிக்.... தான்............என்ஜாய்...

இது வாவு பல தோட்டமா...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [18 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16025

மிக நல்ல ஏற்ப்பாடு. பாராட்டுக்கள்.... ஆசிரியர்களிடம் ஒரு "குருபக்தி" வேண்டும் என்பதால் எங்கள் கால ஆசிரிய மாணவர் இடையே ஒரு அனுசரிக்கப்பட்ட இடைவெளி காணப்படும். ஒரு ஆசிரியர் மாணவரிடம் சற்று சிரித்து பேசி விட்டாலே அது பெரும் பாக்கியமாக கருதப்படும்.

ஆனால் இன்றைய ஆசிரியர்கள் மாணவர் உறவு "நண்பர்கள்" உறவு போலவே அறியப்படுகிறது. இது கற்பதற்கு ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி தரும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோர் இளைய வயதினர். கல்லூரியில் கற்றுவிட்டு ஒரு பி.எட் பட்டமும் வாங்கி விட்டு நேரடியாக ஆசிரிய பணிக்கு வந்து விடுகின்றனர். ஒரு பிளஸ் டூ படிக்கும் மாணவனின் வயதைக்காட்டிலும் ஒரு நாலோ ஐந்தோ வயது அதிகமானவராகத்தான் அந்த வகுப்புக்கு ஆசிரியராக வருகிறார். எனவே வயது இடைவெளி குறைவதால் பழகும் இடைவெளியும் குறைகிறது.

இதுபோன்ற சுற்றுலாக்கள் இதன் காரணமாகவே இனிமையாக அமைந்து விடுகின்றன.

எல்.கே பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by Mafasz (Chennai) [27 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16251

சார் எங்கள விட்டுட்டு போய்டீலே!?!?!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [27 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16254

அன்பின் MAFASZ அவர்களே,,,, இவ்வளவு லேட்டா வந்தா விட்டுட்டு போகாம எப்படி கூப்பிட்டு போக முடியும்,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved