Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:33:52 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7861
#KOTW7861
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 17, 2012
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4694 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்துள்ள அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா, ஹிஜ்ரீ 1433, ஸஃபர் மாதம் 18, 19, 20 (13.01.2012 முதல் 15.01.2012 வரை,) வெள்ளி - சனி - ஞாயிறு கிழமைகளில்,
உலகம் போற்றும் உத்தம நபியின் உதயதின விழா,
மாமறையை மனதிலேற்றிய மகளிருக்கு ‘ஹாஃபிழா‘ பட்டமளிப்பு விழா,
தீன் ஞானம் கற்றோருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது வழங்கும் விழா,
தஃப்ஸீருல் குர்ஆன் - அருள்மறை விளக்கவுரை குறுந்தகடு வெளியீட்டு விழா,
கல்லூரியின் 29ஆம் ஆண்டு துவக்க விழா
ஆகியவற்றை உள்ளடக்கி ஐம்பெரும் விழாவாக, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் நடைபெற்றது.

முதல் இரு தினங்களில், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை உட்பகுதியில் பெண்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் சன்மார்க்க நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு), தஃப்ஸீருல் குர்ஆன், வினாடி-வினா (Aroos Quiz), பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இறுதி நாளான 15.01.2012 ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ச்சிகள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் முன்புற சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

காலை அமர்வு 10.30 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ இவ்வமர்விற்குத் தலைமை தாங்கினார். மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ‘லுத்பில் இலாஹி‘ என்ற இறைவேண்டற்பாவை அனைவரும் நின்று ஓதினர். பின்னர், ஹாஜி எஸ்.ஏ.ஷெய்க் சுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சி தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, மத்ரஸாவின் வரலாற்றுச் சுருக்கவுரையை அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து, பட்டம் பெறும் மாணவியரை வாழ்த்தி மார்க்க அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

பன்னூலாசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் துஆவுடன் காலை அமர்வு நிறைவுற்றது.

காலை நிகழ்ச்சிகளனைத்தையும் ஹாஜி ஏ.எல்.முஹம்மத் நிஜார் நெறிப்படுத்தினார்.

அடுத்த அமர்வு மாலை 05.00 மணிக்குத் துவங்கியது. மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் காரீ எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ, ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய நிறுவனங்களின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து, ‘யா ஸெய்யிதீ யா ரஸூலல்லாஹ்‘ என்ற நபிகளார் புகழ்பா அனைவராலும நின்றோதப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில் - குடும்பப் பெண்களுக்காக, அக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ நடத்தி வரும் தஃப்ஸீருல் குர்ஆன் விளக்கவுரை வகுப்புகளின் ஒலிப்பதிவுகளடங்கிய குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் குறுந்தகட்டின் முதல் பிரதியை வெளியிட, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அதனைப் பெற்றுக்கொண்டார். அடுத்த பிரதியை ஐக்கியப் பேரவை செயலர் ஹாஜி பிரபு சுல்தான் வழங்க, ஹாஜி எஸ்.அப்துல் கஃப்ஃபார் பெற்றுக்கொண்டார். மூன்றாவது பிரதியை ஹாஜி உமர் லெப்பை வழங்க, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ அதனைப் பெற்றுக்கொண்டார்.



பின்னர், அக்குறுந்தகடு வெளியீடு பற்றிய அறிமுகவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ வழங்கினார்.



இடையிடையே, பெருமானார் புகழ்பாடும் பாடல்கள் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களால் பாடப்பட்டது.



பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரையாற்றினார்.



பெற்றோரின் கடமைகள், பிள்ளைகளின் பொறுப்புகள், சமுதாயத்தின் மீது பொதுமக்களின் கடமை, மார்க்க அறிஞர்களின் கடமை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய அவரது விரிவான உரை அமைந்திருந்தது.

பின்னர் ஸனது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டம் பெறும் மாணவியரின் பெயர் பட்டியலை நிகழ்ச்சி நெறியாளர் ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ வாசிக்க, பெண்கள் பகுதியிலிருந்து கல்லூரியின் கண்காணிப்பாளர்கள் (ரக்கீபாக்கள்) மாணவியருக்கு ஸனது - பட்டங்களை வழங்கினர்.



‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது - சான்றிதழில் இடம்பெற்றிருந்த அரபி மொழியிலான வாசகங்களை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி, ஜாவியா அரபிக்கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஐ.முஹம்மத் அப்பாஸ் காஷிஃபீ தமிழாக்கம் செய்து விளக்கிப் பேசினார்.



பின்னர், காயல்பட்டினத்தைச் சார்ந்த - திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) செய்து முடிக்கும் மாணவ-மாணவியருக்கு ஊக்கப் பரிசு வழங்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், இக்கல்லூரியில் பயின்று ‘ஹாஃபிழா‘ பட்டம் பெற்ற 6 மாணவியருக்கு தலா ரூ.2,500 பணப்பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஆகியோரிணைந்து பணப்பரிசுகளை வழங்க, மாணவியரின் சார்பில் - கல்லூரி நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் அவற்றைப் பெற்றுக்கொண்டு, அம்மன்றத்தின் மார்க்க சேவைக்கு கல்லூரியின் சார்பில் நன்றி தெரிவித்தார்.



குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் நன்றி கூற, ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய நிறுவனங்களின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் துஆவுக்குப் பின் ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.



நிகழ்வுகள் அனைத்திலும், நகரப் பிரமுகர்கள், ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்கள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை உட்புறத்திலிருந்தவாறு நிகழ்ச்சிகளை அவதானித்தனர்.



நிறைவு நாள் நிகழ்ச்சிகளனைத்தும், www.kayal.tv (காயல்.டிவி) வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டது.

கல்லூரியில் மூன்றாண்டு கற்றுத் தேர்ந்து, ‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது - பட்டம் பெற்ற 35 மாணவியர் பெயர் பட்டியல் பின்வருமாறு:-











கல்லூரியில் திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு, ஹாஃபிழா ஸனது - பட்டம் பெற்ற 6 மாணவியரின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-



தகவல்:
கல்லூரி நிர்வாகம் சார்பாக,
A.L.முஹம்மத் நிஜார் B.A.,
விழாக்குழு பொறுப்பாளர்,
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி,
தீவுத்தெரு, காயல்பட்டினம்.


படங்கள்:
பிரபு முபாரக்,
மற்றும்
ஹாஃபிழ் பிரபு முக்தார் இப்றாஹீம்,
தீவுத்தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பட்டதை பெற்ற தீன்குல மங்கையர்களே அல்லாஹுவின் அருளும் சாந்தியும் உங்கள் மீது உண்டாகட்டுமாக... ஆமின்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [17 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16005

மாமறையை மனதிலேற்றி தீன் ஞானம் கற்று அதற்க்குரிய பட்டதை பெற்ற தீன்குல மங்கையர்களே அல்லாஹுவின் அருளும் சாந்தியும் உங்கள் மீது உண்டாகட்டுமாக... ஆமின்..

பட்டம் பெற்ற உங்கள் அனைவர்களுக்கும் மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் உஸ்தாது மார்களுக்கும் காயல்பட்டினம் ஸ்டார் ரெடிமேட்ஸ் மற்றும் அதன் பங்குதாரர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மார்க்க அறிவு மங்கையர் தமக்கு அவசியம்...!!!
posted by M.N.L.முஹம்மது ரபீக்,ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்) [17 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16009

மார்க்க அறிவு மங்கையர் தமக்கு அவசியம் காரணம்,அவர்கள் தாம் ஓர் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் முதற்படி. வீட்டிலிருந்தபடியே தமது கணவன், பிள்ளைகள், தாய், தந்தை மற்றும் சகோதர சகோதரிகளுக்கு தீன் நெறியைப் புகட்டும் மாபெரும் வாய்ப்பை பெற்றவர்கள்!

எனவே, பட்டம் பெற்ற ஆலிமாக்கள் ஏதோ கடமைக்காகப் படித்தோம் என்றில்லாமல், சன்மார்க்கத்தின் சத்திய போதனைகளை பிறர்க்கு எத்திவைப்பதில் தமது முழு கவனத்தையும் செழுத்தி மார்க்கம் தழைக்க பாடுபட வேண்டும்! இன்ஷா அல்லாஹ்!!!

மத்ரஸ்ஸாவின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ அவர்களுக்கும், எங்கள் அன்பின், சொல் வேந்தர்-அல் ஹாஜ்,என்.டி.முஹம்மது இஸ்மாயீல்(அல்-ஃபத்தாஹ்) மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும், பாடுபடும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும், படிக்கும் மற்றும் படித்து பட்டம் பெற்ற அனைத்து மாணவியர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [17 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16012

இறை மறையாம் திருக்குரானை மனதில் ஏந்திய ஹாபிழாகளுக்கும் ஆலிமா அரூஸிய பட்டம் பெற்றுள்ள ஆலிமாகளுக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் கல்வி ஜானத்தை மென்மேலும் அதிக படுத்துவானாக.

இம்மாணவிகளை உருவாக்கிய அரூஸுள் ஜன்னாஹ் மத்ரசதுன் நிஸ்வான் ஆசிரிய பெருமக்கள், நிருவாகிகள், பெற்றோர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி கலந்த வாழ்த்துக்கள், துவாக்கள்.

இம்மகளிர் கல்லூரி மேன்மலும் வளர்ந்து வய்யமும் சிறக்க வாழ்த்துகிறோம் .

M .E .L .நுஸ்கி முஹம்மது ஈஸா லெப்பை
M .N .T .ஜமால் முஹம்மத்
ரியாத் சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by T.M.Rahmathullah(72) (Kayalpatnam 04639280852) [18 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16015

ஃஅறூஸுல் ஜன்னஹ் மத்றஸா வின் விழா நிகழ்ச்சிக்கு KPM.COM க்கு கமண்ஸ்17ஜன2012

அஸ்ஸலாமு அலைக்கும். வ றஹ்மத்துல்லாஹி வ பறக்காத்துஹு.

அல்ஹம்து லில்லாஹ்.! மாஷா அல்லாஹ்!!

மிகவும் பொருத்தமாக ஒரு இண்டர் நேஷனல் றிப்போர்ட்டர் போலவும், ஒரு புறஃபெஷ்ஷனல் போட்டோ கிறாஃபர் போலவும் படங்களை தத்ரூபமாகவும் AtoZ அழகாகவும் செய்திகளை வெப்ஸைட்டில் அமைத்த மொடரேட்டர் ஜனாப்.எஸ்.கே ஸாலிஹ் அவர்களுக்கு நன்றி, நன்றி,

தென்னாட்டிலென்ன, உலகிலேயே இப்படி மத்ரஸா நிஸ்வான் பட்டமளிப்பு விழா அமைப்பு பார்த்ததே இல்லை.. அவ்வளவு அழகாக, பொருத்தமாக பல பிரயோஜனங்களையும் பெற்று, அமைந்திருந்தது. அல்ஹம்து லில்லாஹ்., வ ஷுக்றன் ஜஸீலா.

இதெற்கெல்லாம் காரணம் இறையருள் பெற்று ,மத்ரஸாவின் நிறுவனர், நிர்வாகிகள். றக்கீபாக்கள். மாணவிகள், உஸ்தாது மார்கள்.,அனைவரும் முறையான மஷூறாக்கள் பல செய்தும், இஃகுலாஸாகவும், தினசரி இஸ்திஃகாரா தொழுது வேண்டுதல்கள் பண்ணியும், இல்மு திக்றுடன் தேட்டத்துடனும், தஃவத்தின் நோக்கங்களோடும் உஸூல் முறைகளை பின்பற்றியும் சுமார் இரண்டு மாதங்களாகவும் உடல், பொருளால் பாடுபட்டதே காரணம் என்று சொன்னால் அது கையாகாது.

காரணம் இதன் பலனாக குறிப்பாக ஃபாஸி, மஹ்ழரி, காஷிஃபி, தேவ்பந்தி, மன்பயீ, றஹ்மானி, ஹாமிதி, மிஸ்பாஹி, அறூஸிய்யா, ஜமாலி ஆகிய பத்து வகை மானிக்க நிகர் உயர் மத்ரசாக்களின் பட்டம்பெற்ற உலமாக்களால் சிறப்பித்து சீர்பெற்றது இம்மாபெரும் விழா அல்லவா?

”MAN JADDHA VAJADHA“ என்று கண்மனி நாயகம் (ஸல்) சும்மாவா சொன்னார்கள். அல்லாஹ்வும் அவன் அருளைச்செய்தான்.

எனவே நம்மக்கள் யாவரும் 1983=1403ல் உருவான இம்மத்ரஸதுந் நிஸ்வான் நோக்கத்தின்படி, ஊர், உலக மக்கள் ஆனைவருக்கும் இதன் மூலம் நம்மனைவருக்கும் ஹிதாயத் என்னும் நல்லருள் பாக்கியம் தந்தருள்வானாக. ஆமீன்,

இவ்வண்: தைக்கா றஹ்மத்துல்லாஹ்,
அறூஸியா ஹதீது மஜ்லிஸ்,
59, தீவுத்தெரு, காயல்பட்டணம்.
Email. rahmathullahtm38@hotmail.com
Pls. visit.www.aroosuljannah.8m.com.
=======================================
100. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 -புகாரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by S.A. புஹாரி (smb) (makkah) [18 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16019

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாமறையை மனதிலேற்றி தீன் ஞானம் கற்று அதற்க்குரிய பட்டதை பெற்ற ஹாஃபிழாகளுக்கும் ஆலிமாகளுக்கும் எல்லா வல்ல அல்லாஹ் அவர்களின் கல்வி அறிவை அள்ளி கொடுத்து தாங்கள் கற்ற கல்விகளை தானும் பின்பற்றி பிறருக்கும் கற்றுக் கொடுத்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்.

வாழ்த்துகிறோம்
புஹாரி,
இம்தியாஸ்,
ஆயிஷா ஜின்னிரா.
மக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852a) [19 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16036

இதனைப் பார்த்துவிட்டு மற்றவருக்கும் கொடுங்கள் Please.

எங்கள் ஆலிமா, ஹாஃபிழா, றக்கீபா மற்றும் றவ்ழத்துல் ஜன்னாஹ் மாணவிகள் யாவருக்கும் அன்பான ஒரு வேண்டுகோள்!

அதாவது பயான் அல்லது, நஸீஹத்து பண்ணும்போது “ஹம்து ஸலவாத்து “ க்கு பொருள் கூறும் சமயம் நாயகம் (ஸல்) அவர்களை துயர்ந்தோர் என கூறிவிடாதீர்கள். துடர்ந்தோர் அல்லது தொடர்ந்தோர் எனக் கூறுங்கள். துயர்ந்தோர் என்றால் துயரப்பாட்டவர் என பொருள் ஆகிவிடுமென்று பன்னூலாசிரியர் மற்ஹூம் MRM.அப்துர்றஹீம் (றஹ்) அவர்கள் நமது முதல் வருட தஹ்ஸீலுக்கு (2-10-1987=8-2-1408 வெள்ளி) தமிழ் தர்ஜமாவை எடிட் செய்யும் சமயம் என்னிடம் இதனை வலியுறுத்தி, குறிப்பிட்டுச் சொன்னார்கள். அல்லாஹும்மங்ஃபிர் லஹூ வற் ஹம் ஹூ. இதனை அவசியம் குறிப்பெடுத்து வையுங்கள்.( துயர்தல்- என்பது துன்பப்படல்- என்பது பொருள்.-கழக தமிழ் அகராதி.)

இவ்வண்
தைக்கா றஹ்மத்துல்லாஹ்
இப்னு தைக்கா முத்துவாப்பா ஆலிம்,
(அல்லஹும் மங்ஃபிற் லஹுமா)
நிறுவனர். அறூஸுல் ஜன்னஹ் மத்றஸதுந் நிஸ்வான்.

(முஹிப்புர் றஸூல் ) 12-ஸஃபர் 1433 ஞாயிறு 07-ஜன 2012- = இதனைப் பார்த்துவிட்டு மற்றவருக்கும் கொடுங்கள் Please.
காயல்பட்டனம்.ஃபோன்.280852..
Please Visit www.aroosuljannah.8m.com

இந்தப்பக்கத்தில் காணுவது ஹிஜ்ரி 1408 ஸஃபற் 8 ஞாயிற்றுக் கிழமை 2 –அக்டோபர் 1987 அன்று அறூஸுல் ஜன்னஹ் மத்றதுந் நிஸ்வான் முதல் பட்டமளிப்பு நடந்தபோது வழங்கப்பட்ட “தஹ்ஸீல்” ஆகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved