Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:57:07 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7714
#KOTW7714
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 14, 2011
ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாரின் அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6621 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (46) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செய்திகளும், அச்செய்திகளையொட்டி வாசகர்கள் பலரின் கருத்துக்களும், காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதைப் பார்வையிட்டோம்.

கருத்துப்பகுதியில் பலர் தெரிவிப்பது போல, நெசவு ஜமாஅத்தினர் நமதூரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்துவதை ஒருபோதும் எதிர்ப்பவர்களல்லர் என்றும், பூர்விகக் குடியிருப்பான நெசவுத் தெருவை ஒருவழிப்பாதையாக்க முயல்வதை மட்டுமே எதிர்க்கிறோம் என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். நாங்கள் தெரிவிக்க விரும்புவது யாதெனில், இந்த ஒருவழிப்பாதையை பெரிய நெசவுத்தெரு வழியாக அல்லாமல், ஏற்கனவே பலரால் அறிவுறுத்தப்பட்டபடி மாற்று வழியில் அமுல்படுத்த வேண்டுகிறோம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தீபக் டாமோர் அவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையை ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில், காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரை, 17.06.2008 தேதியில் வெளியான தினத்தந்தி நாளிதழின் நெல்லை பதிப்பில் செய்தியாக வெளிவந்துள்ளது.



மெயின் ரோட்டில் அரசு இடத்தில் தற்போது கட்டிடங்களைக் கட்டியிருப்பவர்கள் அல்லது ரோட்டை அகலப்படுத்த அரசு கேட்கும் இடங்களுக்கு உரிமைக்காரர்கள்தான் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுயநலத்துடன் பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

அடுத்து, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காயல்பட்டினம் பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டத்தின் ஆவணப் பரிந்துரையும் நிறைவேற்றத் தகுந்ததாகும் என்று கருதுகிறோம்.



ஆக, முற்காலங்களில் இதுபோல் அறிவுறுத்தப்பட்ட எந்தப் பரிந்துரையையும் கருத்திற்கொள்ளாமல், நமதூரிலுள்ள சில அமைப்புகள் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், எங்கள் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதை நாங்கள் மிகுந்த வேதனையுடன் கண்டிக்கிறோம். இதுகுறித்து எங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் இந்த அறிக்கை மூலம் பதிவு செய்கிறோம்.

கடந்த 19.08.2009, 11.06.2010, 27.11.2011 ஆகிய தேதிகளில், நமதூரின் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஒரு வழிப்பாதைக்கான பேருந்து போக்குவரத்து ஒத்திகையை எங்கள் பெரிய நெசவுத்தெரு வழியாக மேற்கொண்டனர். ஆனால் இதுகுறித்த எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு (நெசவு ஜமாஅத்தாருக்கு) வரவில்லை.

27.11.2011 அன்று, எங்கள் பெரிய நெசவுத் தெருவையும் உள்ளடக்கிய 11ஆவது வார்டின் உறுப்பினர் கூட அதில் கலந்துகொள்ளாத நிலையில், இதர உறுப்பினர்கள் பலரையும், எங்கள் பெரிய நெசவுத் தெருவைச் சாராத பொதுமக்கள் சிலரை முன்வைத்தே, திருச்செந்தூர் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி அவர்களை வைத்து ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்.

“ஊரின் பொதுநலன் கருதி... பொதுநலன் கருதி...” என்று தொடர்ந்து கூறுபவர்கள், எங்கள் தெருவில் நடக்கும் ஒருவழிப்பாதை எங்களுக்குத் தெரிவிக்கப்படாமலேயே இன்று வரை மர்மமாக நடத்தப்படுவதை அங்கீகரிக்கிறார்களா? இந்திய ஜனநாயக நாட்டில், எங்கள் தெருவை முன்னிறுத்தி செய்யப்படும் ஒரு திட்டத்தில் எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) அணுகாது, பிற தெரு மக்களைக் கொண்டு ஒருதலைப்பட்சமாகவே காய் நகர்த்தப்பட்டு வருகிறது. இந்தப் போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எங்களின் பெரிய நெசவுத்தெரு பூர்விகக் குடியிருப்பே! அது பேருந்து போக்குவரத்திற்கு எக்காலமும் உகந்தது இல்லை. பின்வரும் காரணங்களினால் ஒருவழிப்பாதை போக்குவரத்து இத்தெருவிற்கு ஆபத்தாக இருப்பதையும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு அறியத்தருகிறோம்:-

*** ஒருவழியாக்கப்பட்ட பாதையில் எல்.கே.துவக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகள் உள்ளன. அனுதினமும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பாதையைக் கடந்து செல்கின்றனர்.

*** பொது மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை தனியாக நடத்துவதற்கு இடவசதி இல்லாததால் எங்களுடைய திருமண மற்றும் சுப காரியங்களை இத்தெருவில்தான் பல்லாண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.

*** குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லாததால், அதற்கும் இத்தெருவைத்தான் எமது குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர்.

*** மூன்று திருப்பங்களைக் கொண்ட ஆபத்தான வளைவுகள் இத்தெருவையொட்டி உள்ளது.

*** முடுக்கு மற்றும் சந்து வசதி கொண்ட அமைப்பில் இத்தெருவில் கிடையாது.

*** மேலே தொங்கும் மின் கம்பிகள் அறுந்து விழும் ஆபத்தும் உள்ளது.

மேலும் எங்கள் ஜமாஅத்திற்குட்பட்ட சின்ன நெசவுத்தெரு ஏற்கனவே பேருந்து போக்குவரத்திற்கான சாலையாகத்தான் உள்ளது. எனவே, இந்த வலைதளத்தில் பல அன்பர்கள் கருத்து தெரிவித்துள்ள படி, கே.டி.எம். தெரு மக்களைப் போல நாங்களும் ஊர் நலனுக்காக தியாகம் செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

எங்கள் சின்ன நெசவுத் தெரு போன்றே துவக்கத்தில் கே.டி.எம். தெரு, மெயின் பஜார் சாலை, ஹாஜியப்பா தைக்கா தெரு ஆகியவைகளும் ஒரே மாதிரியான அகலமுள்ள சாலைகளாக இருந்தன. இச்சாலைகளை காலப்போக்கில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடங்களையும், கடைகளையும் உருவாக்கியுள்ள காரணத்தால்தான் சின்ன நெசவுத் தெரு தவிர்த்து மற்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆக, இந்தப் போக்குவரத்து நெருக்கடி பொது நிலத்தை அபகரித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களால்தான் ஏற்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

ஆகையால், எங்கள் தெருவை ஒருவழிப்பாதையாக்கும் திட்டத்தைத் தவிர்த்து, திரு.தீபக் டமோர் உத்தரவின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றியோ

அல்லது

1990இல் காயல்பட்டினம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று ஒருவழிப்பாதை திட்டத்தையோ பரிசீலித்து, அதன்படி செயலாற்றுமாறு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்வதுடன், இத்திட்டத்தை ஆதரிக்குமாறு ஊர் மக்களையும் நாங்கள் அன்பொழுக கேட்டுக்கொள்கிறோம்.

அனைவருக்கும் நன்மையான காரியங்கள் நடந்தேற வல்ல ரஹ்மானிடம் நாம் யாவரும் பிரார்த்திப்போமாக, ஆமீன்.

இவண்,
பெரிய நெசவு ஜமாஅத் சார்பாக,
-ஒப்பம்-
(பி.எம்.ஏ.ஜின்னா,
191/52, பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம்.)


இவ்வாறு, ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
அப்பாஸ்,
நெசவுத்தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by hasan (khobar) [14 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14550

நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே...

அது இப்பொழுது பஸ் செல்லும் ஹாஜி அப்பா தைக்கா தெரு, கே.டி.எம். தெருக்கும் பொருந்தும் தானே. காயல் மாநகரம் வளர்ந்து கொண்டே இருக்கும் இச்சமயத்தில் ஊர் நலனா , தெரு நலனா என்று பார்த்தல் ஊர் நலன் தான் முக்கியம் அன்பர்களே...

காரும் , பைக்கும் அதிகமாகி வரும் இச்சூழ் நிலையில் ஹாஜி அப்பா தைக்கா தெரு, கே.டி.எம். தெரு, மெயின் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிச்சல் சொல்லி மாளாது.

நீங்கள் சொல்வது போல ஹாஜி அப்பா தைக்கா தெருவில் ஆக்கிரமிப்பு எல்லாம் கிடையாது. அது எல்லாம் வீடுகள். உங்களைப்போல தற்போது பேருந்து செல்லும் தெருக்காரர்களும் சொன்னால் எப்படி இருக்கும்...

இப்போம் இல்லாவிட்டாலும் இது இன்ஷா அல்லாஹ் நடைபெற்றே தீரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. If There Is A Will, There Is A Way
posted by Mohamed Ismail (Chennai) [14 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14553

மேற்கூறப்பட்ட கரணங்கள் எதுவும் ஏற்புடையது அல்ல. நமதூரில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வழிவகை கண்டாகவேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. பஸ் ஊர்ந்து செல்வதற்கு சாலை வேண்டும். இதற்க்கு நம் கண்முன் உள்ள options மாத்திரமே கவனத்தில் எடுக்க முடியும். நீங்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் எல்லா ஊர்களுக்கும், அனைத்து தெருக்களுக்கும் பொருந்தும்.

பள்ளிகள் உள்ள மற்ற தெருக்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லையா? ஆபத்து பஸ் ஓடுவதால் மாத்திரம்தனா? ஏன் கே.டி.எம் தெருவில் வாழும் சிறார்கள் விளையாடுவதற்கு எங்கு செல்கிறார்கள்?

Divine providence is always there. இப்படி ஒருவரை மாற்றி ஒருவர் குறை காண்பது குற்றம் கற்பிப்பது ஊர் நலனை பின்தள்ளிவிடும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [14 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14554

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்த கருத்தில் நான் குறிப்பிடுவதை தயவு செய்து நெசவு தெரு ஜமாஅத் சகோதரர்கள் தவறாக எடுக்க கூடாது..சின்ன நெசவு தெரு, ,அற்றும் KTM தெரு வாசிகள், அரை நூற்றாண்டுக்கு மேலாக , தங்கள் தெருவில் பஸ் போக்கு வரத்தால், அதிகம் பாதிக்க பட்டு விட்டார்கள்..இன்னும் என் சிறுவயது, அனுபவம் எனக்கு மிகவும் கஷ்டத்துடன் மேலோங்கி உள்ளது..

அனைத்து தெரிவிலும் தெரிவில் விளையாடும் விளையாட்டுகளை, என் சிறுவயதில், நானும் என்னை போன்றோர்களும் இழந்தோம்..பிற தெருவில், தெருவில் எல்லா விளையாட்டு களும் விளையாடும், போது , நாங்கள் ஒரு பொறாமையுடன் தான் அதை பார்த்தோம்..சரி அடுத்த தெருவில் போய் விளையாடலாம், என்றால் வாப்பாவின் அனுமதி கிடைக்காது..இப்படி சிறு வயது சிறு சந்தோசங்களை ,ஊருக்காக இழந்தோம்..

சரி விளையாட்ட விடுவோம்.. பல சிறிய ஆக்சிடன்ட் ஏற்பட்டது.. தெருவில் பிள்ளைகளை வெளியை விட்டு விட்டு , தாய் மார்கள், வாசலில் நின்று உயிரை கையில் பிடித்து கொண்டு தான், மன படபடப்போடு காலம் தள்ளுகிறது..

ஏழு கல் மற்றும் கிச்சி கம்பு விளையாடும் போது, பஸ்ஸில் பந்தோ அல்லது கம்போ விழுந்து, அந்த பஸ் நின்று , எங்களை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திட்டியது மட்டும் இல்லாமல், வீட்டில் வந்து வாப்பா உம்மா விடம் பெற்ற அடி இன்னும் மறக்க முடியாது

எனவே, ஏரவது ஒருவர் விட்டு கொடுத்து, ஒரு வழி பாதை ஆக்கினால், எங்கள் தெரு சிரமம் சற்று குறையும்..நாங்கள் எங்கள் தெருவில் முழுவதுமாக, போக்கு வரத்தை நிறுத்த சொல்ல வில்லை..சற்று நெருக்கடியை குறைக்க சொல்கிறோம .. இதில் பரந்த மனப்பான்மை வேண்டும்..எங்கள் தெருவாசிகளும், பூர்வீக குடிருப்பு தான்..

ஆக்கிரமைப்பு அகற்றுதல் இருந்து எல்லாவற்றிலும் எங்கள் தெரு தான் பாதிக்க பட்டது..எங்கு தான் ஆக்கிரமிப்பு இல்லை. இதில் சுயம் நலம் பார்க்காமல், எங்கள் தெருவாசிகள் போல பொது நலம் கருதி , ஒரு வழிப்பாதைக்கு , விட்டு கொடுத்து வழி வகி செய்ய வேண்டும்..

இல்லாவிட்டால் சுழற்சி முறையில் ஊரில் உள்ள எல்லா தெருவையும் போக்கு வரதுக்கு பயன் படுத்தலாம். குழந்தைகள், விளையாடும் விஷயத்தை பற்றி குறித்து இருந்தீர்கள்.. அப்படி என்றால், KTM தெரு ,அற்றும் சின்ன நெசவு தெரு குழந்தைகள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் விளையாட்டை அர்பணிக்க அல்லது இந்த தெரு குழந்தைகள வேறு பொம்மை அல்லது கால் நடை களா....

எங்கள் தெருவிலும் கல்யாணம் போன்ற விசய்சங்களுக்கு இரட்டை செலவு.. வீட்டு முன் பந்தல்.. சங்கத்தில் ஒரு பந்தல்;...கல்யாண விசய்சங்களை ஒரு காரணமாக குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல. இப்போது ஒற்றில் அநேக கல்யாணங்கள் பொது சங்கத்தில் தான், அதுவும் மற்ற தெரு சங்ககளில் நடக்கிறது...

ஒரு வேண்டுகோள்.. ஊர் மக்களுக்கு.. இத்தனை ஆண்டுகளாக எங்கள் தெரு செய்த தியாகர்த்திர்க்கு , இந்த நன்றியாக, விசயச அந்தஸ்து வழங்க வேண்டும்..அரசி பனி மற்றும் கல்வியில் நலிவுட்டோர்க்கு தனி இடவொதுக்கீடு வழங்குவதை போல், ஊரில் எல்லா விசயங்களுக்கும் எங்கள் தெருவுக்கு அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும்..

நகராட்சி பனி, குடிநீர் விநியோகம், சுகாதார பணிகள், மற்றும் எல்லா வற்றிலும் அதிக பிரதிநிதுவமும், ,மற்றும் அதிக ஒதுக்கேடும் செய்ய வேண்டும்..பள்ளி admission போன்ற வற்றிலும் தியாகம் செய்த தெரு பிள்ளைகளுக்கு உடனடி சீட் தரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (KTM தெரு) (Makkah ) [14 December 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14557

அஸ்ஸலாமு அலைக்கும்,

ரெம்ப பரந்த மனப்பான்மையுண்டன், மிகுந்த பொது நல நோக்குடன் அறிக்கை விட்டு இருக்கிறார்கள்!! நல்ல வெளங்கும்!! இது போல மற்ற நாலு ஜமாத்துக்களும் நினைத்து இருந்து உங்களை போலவே பிடிவாதம் பிடித்து இருந்தால் இன்னைக்கு ரயில்வே ஸ்டஷனுக்கு போறமாறி பஸ் பிடிக்கவும் இன்னொரு மினிபஸ் புடிச்சி ஆறுமுகநேரிக்கோ, இல்லை அடைக்கலாபுரத்துக்கோ போக வேண்டி இருந்து இருக்கும்!! அப்படி எல்லாம் நடக்காமல் KTM தெரு, மெயின் ரோடு, ஹாஜி அப்பா தெரு மக்கள் எல்லாம் பெருந்தன்மையோடு ஒத்துகொள்ள போய்தான் இன்றைக்கு அறிக்கை விடுபவர் முதல் ஆதரிப்பவர் வரை பஸ் இல் ஈசியா போயிட்டு வந்துகிட்டு இருக்க முடியுது.

அப்படி அவர்கள் பெருந்தன்மையாக விட்டு கொடுத்ததற்கு பரிசாக அவர்கள் வீடு, கடைகளை இப்போ இடிக்க விட்டு கொடுத்து, ரோட்டை விரிவாக்கம் பண்ணனுமாம். இவங்க நோகாமே நொங்கு தின்பான்கலாம்!! நல்ல இருக்கு உங்க விவாதம்.

KTM தெரு, மெயின் ரோடு, மக்கள் வீட்டை இழக்கலாம் ஆனால் உங்கள் பிள்ளைகள் விளையாட ரோடு வேணும், உங்கள் கல்யாணத்துக்கு தெருவை அடைச்சி பந்தல் போட இடம் வேண்டும், இந்த தலையாய பிரச்சனைகளை விட்டு கொடுக்கமாட்டீங்க, ஆனால் மத்தவங்க தலையே போனாலும் உங்களுக்கு கவலை இல்லை.

அவர்கள் ஜமாத்தை சார்ந்த சின்ன நெசவு தெரு மக்கள் தியாகம் செய்து இருக்கிறார்களாம்....1975 முதல் (எங்களுக்கு தெரிந்து) பேருந்து போக்குவரத்து KTM தெரு வழியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது!! அந்த வேளைகளில் நீங்க சொன்ன சின்ன நெசவு தெருவில் மிஞ்சி போனா 4 ,5 வீடுகள் தான் அமைத்திருக்கும்... ஆனால் KTM தெருவும் மெயின் ரோட்டின் அமைப்பும் இப்போது இருந்தது போல தான் இருந்தது.... யாரும் அரசு நிலத்தையோ நெடுஞ்சாலை துறை நிலத்தையோ அபகரித்து வீடோ, கடையோ கட்ட வில்லை என்பது, 1970 துக்கு முன் கட்டபட்டு இன்றும் இருக்கும் வீட்டில் அமைப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மாறாக அரசே ஒரு வரம்பை நிர்ணயித்து நெடுஞ்சாலை துறைக்கு என்று பிற்காலத்தில் வரைமுறை வைத்தால் ..சில வீடுகளின் முகப்பு, சில கடைக்கள் என்று பலவற்றை ஊரின் நன்மைக்காக இழக்க வேண்டியது வந்தது!!

இன்னும் விரிவாக்கம் என்ற பேரில் இருக்கிற வீட்டை ஒட்டு மொத்தமாக இழக்க யாரும் தயாராக இல்லை!! போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான வசதிகள் ஒரு வழி பாதை மூலம் இருக்கும் போது இருக்கிற இடத்தையும் இன்னும் விட்டு கொடுத்து விட்டு தான் எங்கள் பெருந்தன்மையை காட்டனும் என்ற எந்த அவசியமும் KTM தெருவில் வாழும் எங்களுக்கு இல்லை.

பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்தி ஊர் நலனுக்காக கொஞ்சம் தூர நோக்கில் தயவு செய்து சிந்தியுங்கள்.. நீங்கள் சொல்லும் எல்லா காரணமும் எல்லா தெருவுக்கும் பொருந்தும்!! பெரிய நன்மைகள் கிடைக்கும் போது, தெருவை அடைத்து பந்தல் போடுவதும், பிள்ளைகள் ரோட்டில் விளையாடுவதும் ஒரு பொருட்டல்ல!! விட்டு கொடுத்தோர் கேட்டு போக போறதில்லை!! அதை போல குட்ட குட்ட குனிந்து கொண்டு நாங்களும் எங்கள் உரிமைகளை முழுவதுமாக விட்டு கொடுத்து விட்டால் KTM தெரு முன்வீட்டு மக்கள் இனி ஒரு அறை வீட்டில் தான் வாழ வேண்டும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14559

நெசவுத் தெரு ஜமாத்தார்களின் அறிக்கை அவர்கள் தெருவில் விளையும் ஆபத்துக்களை மட்டும் இன்றி பள்ளி சின்னஞ்சிறார்கள் நிலையினையும்,அதனால் விளையும் ஆபத்து தவிர்க்கப் பட வேண்டுமானால், நிச்சயம் ஆக்கிரமிப்பை அகற்றுவதே சரி என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவே பொதுவாகவும், விளையும் ஆபத்துக்களை தவிர்க்கும் முகமாக சிந்திபோர்களின் கருத்தாக அமையட்டும்!

சொந்த முடுக்கில் மற்றவர்கள் உபயோகப் படுத்துவதை விரும்பாத நாம் அடுத்தவர்கள் ரோட்டில் அதுவும்,அவர்கள் சம்மதம் இல்லாமலேயே பஸ் விட நினைத்தால், சம்மதிப்பாங்களா? அது மட்டும் இன்றி தகுந்த ஆதாரங்களையும் அவர்கள் வைத்தும் இருக்கிறார்கள்!

சுய நலத்திற்கு சொந்தக் காரர்களே!முதலில் அடுத்தவர் இடங்களை ஆட்டை போடுவதை விட்டு விட்டு, நீங்கள் ஆட்டை போட்டு வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி மக்களுக்கு வழி காட்டுங்கள்,புண்ணியம் கிடைக்கும்! இல்லையேல் போக்குவரத்து துறை அதை இடிக்கும்! அப்ப உங்கள் பிசாசு மனது கிடந்தது துடிக்கும்!!! இதில் எல்லோர்க்கும் விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Javed Nazeem (Chennai) [15 December 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 14562

கிஸார் மற்றும் சீனாவின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். KTM தெரு வாசிகளும் "எங்கள் தெருவுக்குள் பேருந்து வரக் கூடாது" என்று முடிவு செய்தால், நமதூர் மக்கள் ஆறுமுகநேரிக்கோ திருச்செந்தூருக்கோ ஆட்டோவில் சென்று தான் பஸ் பிடிக்க முடியும்.

அதே வேளையில் இது போன்ற உணர்ச்சிபூர்வமான விஷயங்களை வலைதளங்களில் விவாதிப்பதை தவிர்ப்பதே நல்லது. விவாதத்தை இங்கே யாரும் தொடர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நெசவு தெரு ஜமாத்தினரை அரவணைத்து ஒரு சரியான முடிவு எடுக்கப் பட வேண்டும். சில நியாயமான பயங்கள் தெளிவாக எடுத்துரைத்து மாற்றப்பட வேண்டும். நேரடி சந்திப்புகள் மூலம் மட்டுமே இதனைக் கொண்டு செல்ல வேண்டும்.

Dr. கிஸார் கருத்து:
>> ஊரில் எல்லா விசயங்களுக்கும் எங்கள் தெருவுக்கு அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும்..

உங்கள் தெரு மருமகள் சேர்மனாகவும், தெருவை சேர்ந்த மொஹிதீன் துணை சேர்மனாகவும் இருப்பதே KTM தெருவுக்கு சிறப்பு தானே!

இது போன்ற தெருக்களுக்கு, வரி விலக்குகள், குறைந்த வரிகள் போன்ற சலுகைகளையும் பரிசீலிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by kithuru mohideen (chennai) [15 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14567

சுய நலத்திற்கு சொந்தக் காரர்களே! முதலில் அடுத்தவர் இடங்களை ஆட்டை போடுவதை விட்டு விட்டு, நீங்கள் ஆட்டை போட்டு வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி மக்களுக்கு வழி காட்டுங்கள்,புண்ணியம் கிடைக்கும்! இல்லையேல் போக்குவரத்து துறை அதை இடிக்கும்! அப்ப உங்கள் பிசாசு மனது கிடந்தது துடிக்கும்!!! இதில் எல்லோர்க்கும் விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by MAHMOOD HASAN(mammaash) (qatar) [15 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14569

சூப்பர் அழகான காரணங்கள் ....!

1.அந்த தெருவுல மட்டும்தான் பிள்ளைங்கள் இருக்கு KTM தெருவுல ...இருக்கதுலம் அப்போ என்ன ...

2.அங்கே இருக்ரதுலாம் மின் கம்பங்களாம் அப்போ KTM தெருவுல இருக்கதேல்லாம் கொடிக்கம்பன்களா?

3 பாவம் அங்க மட்டும் விளையாட இடம் இல்லையாம்...மற்ற தெருவுல chepak staddium இருக்கு...!

குறுகிய வட்டதுலருந்து வெளிய வந்து கொஞ்சம் சிந்தித்து பாருன்கள்....எல்லாம் முடியும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
posted by S.A.Muhammad Ali (Dubai) [15 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14574

நெசவு தெரு ஜமாத்தார்கள் சொல்வது அவர்கள் பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் ஊர் நன்மை என்று வரும் பொழுது விட்டு கொடுக்க தான் வேண்டும்.

மெயின் ரோடு வழியாக செல்லும் 2 சக்கர மற்றும் 3 சக்கர மற்றும் தனியார் வாகனங்கள் நெசவு தெரு வழியாக சென்று வந்தால் ஓரளவு வாகன நெரிசலை தவிர்க்கலாம்.

KTM தெருவை விட நெசவு தெரு அகலமாகவும் உள்ளது. ஊர் நன்மைக்காக வேண்டி தாயிம் பள்ளி ஜமாஅத் தனது பள்ளியின் வளாகத்தினை இடித்து உள்வாங்கி கோட்டை கட்டியுள்ளதை நினைத்து பார்க்க வேண்டும்.

இடம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் இடம் இருப்பதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by mohamed abdul kader (dubai) [15 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14582

இடம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் இடம் இருப்பதில்லை.

அலி நம்மிடம் இரண்டுமே இருக்குடா அதனால் தான் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் பஸ்ஸில் போகமுடிகிறது. சில நபர்கள் எதுவும் எழுதலாம் என எழுதுகிறார்கள்.
Comment Reference Number: 14559

(அடுத்தவர் இடங்களை ஆட்டை போடுவதை விட்டு விட்டு, நீங்கள் ஆட்டை போட்டு வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி மக்களுக்கு வழி காட்டுங்கள்,புண்ணியம் கிடைக்கும்! )

ஆட்டை போட்டு வைத்ருப்பவான் யார்? Highways Depot மார்க்கிங் செய்த மறு மாததிற்குள்ளகவே தங்களது சொந்தசிலவில் வீடுகளில் உள்ள பல்கின்னி மற்றும் தெருவில் உள்ள குண்டு குழிகளையும் சரி செய்தது கே.டி.எம்.தெரு மக்களே.

கே.டி.எம்.தெருவில் இந்த சம்பவத்திற்காக ஒரு வீடாவது இடித்து கட்டி இருப்பார்கள் என்று வாய்ச்சொல் வீரர்க ள் யாராவது விரல் நீட்டி சொல்லமுடிஉமா.

அடுத்தவர் இடங்களை ஆட்டை போட்டர்கலாம்

கமான்ட் எழுதுவதற்கு முன்னால் தமது முதுகை திரும்பி பார்த்து விட்டு எழுதுங்கள்.

சும்மா இருப்பவர்களை சுரண்டி பார்ப்பதை ஒரு சிலர் வாடிக்கயாஹா கொண்டுள்ளனர் முதலில் மாற்றிகொள்ளுங்கள்.

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [15 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14586



இன்றுள்ள சூழ்நிலையில் எல்லா தெருவுக்கும் ஏதாவது ஒரு வகையில் இடையூறு இருக்கத்தான் செய்கிறது, அவற்றையெல்லாம் அவரவர்கள் தடுக்கவேண்டும் என சுய நலத்தோடு செயல் பட்டால், ஊருக்குள் ஆம்புலன்ஸ் வர முடியாது, பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் மினி பஸ் மற்றும் வேன்கள் வரமுடியாது, ஊருக்குள் சொந்த வாகனங்களோ, வாடகை வாகனங்களோ, வியாபாரம் நிமித்தம் வரும் பால் வண்டி மற்றும் வாகனங்களோ வர முடியாது, ஏழைகளின் ரதமாகிய ஆட்டோக்களில் ஊரில் வலம் வர முடயாது ஏன் அனைவருக்கும் பொதுவான கட்டட சாமான்கள் , மளிகை சாமான்கள் ஏற்றிவரும் ஒரு லாரியையும் அனுமதிக்க முடியாது (ஒருவீட்டில் சந்தோசம் என்றால் பல வீட்டிற்கு இடைஞ்சல்தான்)

இப்படி அவரவர் சுய நலத்தோடு செயல் பட்டு பழைய காலங்களில் பாதுகாப்பாக செயல் பட்ட மனிதனை மனிதனே சுமக்கும் காலத்திற்கு செல்ல வேண்டியதுதான்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Administrator (Chennai) [15 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14590

அஸ்ஸலாமு அலைக்கும்,

பிரச்சனையின் தன்மையை கவனத்தில் கொண்டு - ஆக்கப்பூர்வமான கருத்துக்களை, நளினமான வார்த்தைகளால் - பதிவு செய்யும்ப்படி கேட்டுகொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [15 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14591

நடக்காமல் இருக்கின்ற ஒன்றை நடத்துங்கள் என்று சொல்வதைவிட,,,,, எல்லாருக்கும் பளிச்சென்று தெரிகிற ஒருவழிப்பாதையே விட்டுகொடுப்போமே,,,,,

நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அதை நிறைவேற்றும் காலத்தில் நாம்யாரும் இருக்கமாட்டோம்,,, கொஞ்சம் இறங்கிதான் வாங்கலேன்,,,

விட்டுகொடுப்பார் கெட்டுபோவதில்லை,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 December 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14596

>>>>>எங்களின் பெரிய நெசவுத்தெரு பூர்விகக் குடியிருப்பே! அது பேருந்து போக்குவரத்திற்கு எக்காலமும் உகந்தது இல்லை. பின்வரும் காரணங்களினால் ஒருவழிப்பாதை போக்குவரத்து இத்தெருவிற்கு ஆபத்தாக இருப்பதையும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு அறியத்தருகிறோம்:-<<<<<<

>>>> பூர்வீக குடியிருப்பு என்றால் என்ன?

காரணம் 1.
>>>> எல்.கே.துவக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளி மாணவர்கள் KTM தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெரு, தைக்கா பஜார் வழியாக தான் இன்றுவரை பள்ளிக்கு வருகின்றனர் என்று இவர்களுக்கு தெரியாதா?

காரணம் 2.
>>>> KTM தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெரு மக்கள் இதுவரை பொது மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் எங்கு நடத்தினார்கள்?

காரணம் 3.
KTM தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெரு குழந்தைகள் எங்கே விளையாடுகின்றனர்?

காரணம் 4.
KTM தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெரு, தைக்கா பஜார்களில் வளைவுகள் இல்லையா?

காரணம் 5.
நகரில் உள்ள அனைத்து தெருவிலும், முடுக்கு மற்றும் சந்து, தெருக்களை போல் பொது சொத்து அல்ல, வீடு கட்டும்பொழுது அவர் அவர் விருப்பப்படி, தங்களின் சொந்த நிலத்தில் உருவாக்கியது தான், முடுக்கு மற்றும் சந்து, பெரிய நெசவுத்தெருவில் வீடு கட்டியவர்கள் முடுக்கு விடாததர்க்கு ஊர் பொறுப்பல்ல...

காரணம் 6.
நகரில் உள்ள அனைத்து தெருவிலும் மின் கம்பிகள் உள்ளன.

எனவே ஊர் நலன் கருதி விரைவில் ஒருவழி பாதை திட்டத்தை நிறைவேற்ற விரைவில் தீர்மானம் கொண்டு வாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [15 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14598

இப்படி ஒரு கமெண்ட் "சுய நலத்திற்கு சொந்தக் காரர்களே!முதலில் அடுத்தவர் இடங்களை ஆட்டை போடுவதை விட்டு விட்டு, நீங்கள் ஆட்டை போட்டு வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி மக்களுக்கு வழி காட்டுங்கள்,புண்ணியம் கிடைக்கும்! இல்லையேல் போக்குவரத்து துறை அதை இடிக்கும்! அப்ப உங்கள் பிசாசு மனது கிடந்தது துடிக்கும்!!! இதில் எல்லோர்க்கும் விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்!!!"

இப்படி கமெண்ட் பண்ணி உள்ளது, KTM தெரு மக்களின் எரியும் நெருப்பில் என்னை ஊதுவது போன்று உள்ளது.. ஊரில், நூல் பிட்த்து அளவு எடுத்தால், எந்த தெருவில் யார் வீடு தான் மிஞ்சும்.. ஊர் நலனுக்காக, நெடுஞ்சாலை துறை , ரோடு expansion க்காக , அடையாள மார்க் போட்ட போது, எதிர்த்து நீதி மன்றங்களை நாடி தடை உத்திரவு பெற்று இருக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்.. highways dept உத்திரவு படி, தவணைக்குள், சொந்த செலவில் சொந்த வீட்டில் சில பகுதிகளை , ஊர் நலன் ஒன்றுக்காக இழந்த எங்களை பார்த்து , இப்படி கமெண்ட் பண்ணினது , எரிகிற நெருப்பில் என்னை ஊதுவதுதான்..

கமெண்ட் பண்ணிய நண்பர் எந்த தெரு என்று தெரியவில்லை.. அவர் எங்க தெருவில் இருந்து சிறு வயது சுகம் முதல் சொந்த வீட்டின் ஒரு பகுதியை ஒர்ருக்காக இழந்து இருந்தால் இப்படி ஒரு கமெண்ட் வந்து இருக்காது. அப்படி இடித்தது ஒன்றும், ஆக்கிரமிப்பு அல்ல... ரோடு expansion தேவைபடுகிறது என்ற காரணத்தினால், விட்டு கொடுத்தது.. அன்றே நீதி மன்றம் சென்று இருந்தால், முடிவுக்கு வர இன்னும் அரை நூற்றாண்டுகள் நங்கள் எங்க வீடுகளின் ஒரு பகுதியை அனுபவித்து இருக்க முடியும்..

ஒன்று மட்டும் மனதில் கொள்ளுங்கள்.. KTM தெரு வாசிகளும் , மனிதர்கல், அங்கு உள்ள சிறுவர்களுக்கு விளையாட்டு ஆசாபாசம் இருக்கும்.. அந்த மக்களுக்கும், தங்கள் வீட்டுய் முன், தங்கள் வீடு கல்யாண நிக்காஹ் நடத்தட்ட ஆசை இருக்கதான் செய்யும்.

தவயு செய்து அட்மின் , இதை edit அப்படியே போட்டு, எங்கள் மனம் குமுறலுக்கு வடிகால் தரவும்

DR த முஹம்மத் கிஸார்,
KTM தெரு சார்பாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by MAHMOOD HASAN (mammaash) (qatar) [15 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14599

சம்பந்தம் இல்லாமல் விஷயம் தெரியாமல் அடுத்தவன் நிலத்தில் ஆட்டய போடான்... ஒட்டை போடான்னு... விஷத்தை புரிஞ்சு எழுந்துங்கள்... அதுதான் எல்லாருக்கும் நல்லது..

சும்மா நேரம் போகவில்லை என்று எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்காதீர்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (Makkah ) [15 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14605

சிலர் எங்கே எளவு வீட்டில் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்ற தோரணையில்..அவரின் கமெண்ட் தான் அதிகம் பேசபட வேண்டும் என்ற உற்சாகத்தால் எதையும் எழுதலாம் என்று நினைத்து...அடுத்தவன் நிலத்தை ஆட்டை போட்டவர்களே!! சுய நலத்திற்கு சொந்தகாரர்களே!! என்றெல்லாம் வசைபாடி இருக்கிறார்!!

பொது நலம் காக்கும் இந்த வசையாளரும் அவர் குடும்ப மக்களும் இன்று சொகுசாக பஸ்சில் ஏறி செல்லவதற்கு எங்கள் KTM தெரு மக்கள் எல்லாவற்றையும் இழக்கணும், யார் சுய நலம்...உட்காந்த இடத்தில இருந்து தங்கள் நலத்தையும் நிலத்தையும் இழந்தவர் பற்றி வாய் கூசாமல் கமெண்ட் செய்யும் நீங்கள் சுயநலவாதியா இல்லை.. சிறு வயது விளையாட்டு ஆசை முதல்...முதியவயதில் வீட்டுமுன் கூட ஒரு சேர் போட்டு நிம்மதியா உட்கார வழி இல்லாமல்.... நீங்கள் இன்று பஸ்இல் போய் வர நாங்கள் சிரமங்களை மட்டுமே ஆண்டாண்டாய் அனுபவிக்கிறோமே நாங்கள் சுயநல நலகாரர்களா என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள்!!

நங்கள் எல்லாம் சுய நலத்திற்கு சொந்த காரர்கள்!! நீங்கள் மகான்!! உங்கள் பொது நலமான கமெண்ட் ஐ அப்படியே கல்வெட்டில் செதுக்கி வைப்போம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by abbas saibudeen (kayalpatnam) [15 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14610

பல விதமான command களில் சின்ன நெசவு தெரு என்ற நெசவு ஜமாதிக்கு உட்பற்ற தெருவில் வெறும் 4 ,5 வீடு மட்டும் தான் உள்ளதாம்,ktm தெருவில் மட்டும்தான் அதிக வீடுகள் உள்ளதாம்.......இதிலேயே தெரிகிறது ஒரு தலைபட்சமான கருத்து என்று.கருத்துக்குரியவர் காயல் வந்து பார்த்தது உண்டா........

சின்ன நெசவு தெருவில் kattivulla வாவு வீடுகள் மட்டும் 5 ,6 உள்ளது.எனக்கு தெரிந்து சின்ன நெசவு தெரு வில் 40 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.........thirutthikkullavum .......மற்றுண்டு ,பல ஆண்டுகளுக்கு முன்பே kayalpatnam to திருச்செந்தூர் செல்ல ktm தெரு vali மட்டும்தான் mapil உள்ளது........தியாகம் செய்யவிட்டாலும் highway ஆகித்தான் இருக்கும்...........

பெரிய நெசவு தெரு வுன்றும் அப்படி mapப்பில் மெயின் ரோடு என்றோ பஸ் pokkuvarathitku தகுந்தது entro engum kurippillai.

ஏன் பெரிய நெசவு theruvai கொண்டாடுகிறீர்கள்........நெசவு தெருவில் one way allathu.......evaravathu பஜார் akkiramitbai கண்டிதிர்களா...........எப்போது thiruntuvirgal...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [15 December 2011]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 14613

KTM தெரு மற்றும் நெசவு தெரு உம்மா வீடு பொண்டாட்டி வீடு போல எடுத்து கொள்ளுங்கள். துக்கத்திலும் பங்கு கொள்பவனே உண்மையான நண்பன்.

எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

Mohamed Ibrahim Nowshad
KTM Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by sulaiman (manama,) [15 December 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 14615

அஸ்ஸலாமு அழைக்கும் காகா மார்களே !!! இப்படி எங்க தெரு உங்க தெருன்னு சண்டை போட்டு ,, அடுத்து L F ரோட்டில் உள்ளவர்களும் BYPASS ரோட்டில் உள்ளவர்களும் மறுப்பு தெரிவித்தால் ,

வீட்டுக்கு வீடு HELIPAD வைக்க வேண்டிய நிலைமை வந்துரும் ,, SO IF ANY ONE PROPOSE ANY NEEDFUL INNOVATION FOR OUR KAYAL, PLEASE DONT JUST OPPOSE IT, ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Tariq (Jeddah) [15 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14616

முதலில் தாயிம்பள்ளி ஜமாஅத் நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இத்தனை காலமாக நமது மனதில் இருந்த மனக்குமுறல்களை நாளு பேருக்கு உரக்க சொல்லி வெளிபடுதியதற்கு.....

இவர்கள் சொல்லுவது போல் ஒரு வழி பாதை நடை முறை படுத்துவதால் ஒரு பாதிப்பும் வராது. இந்த Ktm தெருவில் வாழ்ந்த எங்கள் மூதயர்கள், வாழும் பெரியவர்கள், மற்றும் நாங்கள் எங்கள் பிள்ளைகள் அனைவரும் அல்ஹம்து லில்லாஹ் நன்றாக இருக்கிறோம்....

புதியதில் கொஞ்சம் சிரமமாக இருக்கும் போக போக சரி ஆகி விடும்..எங்கள் தெரு பிள்ளைகள் இந்த அதிரும் பஸ் horn சத்தத்தில் தான் தூங்கவில்லையா இல்ல இதே தெருவில் விளையாடிய பிள்ளைகள் தான் விளையாட்டில் ஜொலிக்க வில்லையா? பொது நலம் கருதி இந்த சுமைகளை நாங்கள் இத்தனை தலைமுறை தாங்கியது போல் பெருகிவரும் வாகன நெரிசலை குறைக்க நெசவு தெரு நண்பர்கள் முன் வர வேண்டும்.

எங்கள் தெருவில் நாங்கள் இழந்த உரிமைகள் சம்பந்த பட்டவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். எத்தனை பேர் வீட்டுக்கோட்டை மற்றும் படிகளை இழந்தது போக இன்னும் அகலபடுத்தி வீட்டையும் இழக்க வேண்டுமா? இதனை படிக்கும் மாற்று தெரு அன்பர்கள் கூட படித்தது மட்டுமில்லாமல் உங்கள் நடு நிலையான கருத்துகளை பகிர்த்து கொண்டால் சம்பந்த பட்டவர்களுக்கு தெளிவு கிடைக்கும்......

தாரிக் , ஜித்தாஹ்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:..புரிந்து கொள்ளுங்கள்!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 December 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 14618

எங்கள் சின்ன நெசவுத் தெரு போன்றே துவக்கத்தில் கே.டி.எம். தெரு, மெயின் பஜார் சாலை, ஹாஜியப்பா தைக்கா தெரு ஆகியவைகளும் ஒரே மாதிரியான அகலமுள்ள சாலைகளாக இருந்தன. இச்சாலைகளை காலப்போக்கில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடங்களையும், கடைகளையும் உருவாக்கியுள்ள காரணத்தால்தான் சின்ன நெசவுத் தெரு தவிர்த்து மற்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த கருத்து KTM தெருவாசிகளை பாதிக்கும் என்று அறிந்து இருந்தால், நிச்சயம் இதை நான் பதிவு செய்திருக்க மாட்டேன்! நான் கருத்தை பதிவு செய்தது மெயின் ரோட்டுக்கு மட்டுமே!

நானும் இதே ஹாஜி அப்பா தெருவில் பிறந்து அம்பல மரைக்காயர் தெருவில் முடித்த மர்ஹும் V M S அனசுத்தீன் மகன்தான்!எனக்கும் தெரியும் இந்த மாமி வீட்டில் நின்று அந்த மாமி வீட்டிற்கு போகும் போது உள்ள பயம்! ஹாஜி அப்பா பள்ளியில் நின்று போஸ்ட் ஆபீஸ் வரைதான் முக்கிய பிரச்சினையே உள்ளது.

அது மட்டும் இன்றி ஆறாம் பள்ளி எதிர் முனையில் நின்று ஜாமிஉல் அஸ்கர் வரை ஆக்கிரமிப்பு உள்ளது! இதை யாராலும் மறுக்க முடியாது! நான் கூறிய கருத்தின் பதிவு இதுதான்! என் பதிவு நிச்சயமாக உங்கள் தெரு பக்கம் இல்லை. (எனது இந்த கருத்தை அட்மின் புரிந்துதான் வெளியிட்டுள்ளார்! இல்லையேல் நிச்சயம் விவாதம் என்று கட் பண்ணி இருப்பார்!)

அது போல் நெசவு தெருவும் மாற்றுப் பாதையினைதான் கேட்கிறார்கள்! கூலக்கடை பஜார் இன்றி வேறு மார்க்கமாக பஸ்ஸை விட முடியாதா?

எங்கோ இடிக்கிறது அதை நீங்கள்தான் தெளிவு படுத்த வேண்டும்! மற்றபடி உங்கள் பகுதியில் உள்ளவர் நின்ற இடத்திலேயே பஸ் ஏறலாம் நாங்கள் இப்பவும் ஆட்டோ பிடித்துதான் பஸ் ஏற வேண்டும் இதுவும் காயல் ரயில்வே ஸ்டேசன் போகும் ஜார்ஜ்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. ஊர் நலனே எங்களின் நலன்
posted by Salai Sheikh Saleem (Dubai) [15 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14622

சங்கைக்குரிய நெசவு தெரு ஜமாத்தார்களே, உங்களின் தெரு ஒற்றைப்பாதையாவதால் நீங்கள் எதிர்பார்க்கும் தொந்திரவுகளை அறிக்கையாக கொடுத்து உள்ளீர்கள்.

பொதுவாக பொதுநலம் என்று வரும் பொது சில சுயநலங்களை தியாகம் பண்ணத்தான் வேண்டும். ஒற்றையடிப்பாதை வர வேண்டாம் என்று நீங்கள் முன்வைக்கும் எந்த முக்கிய காரணங்களும் ஊர் நலன் என்று வரும்போது எற்ப்புடையதாய் இல்லை.

நீங்கள் நினைக்கலாம் ஊரின் மற்ற தெருக்காரர்கள் எல்லாம் எல்ல சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்களே எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நெருக்கடி என்று. இந்த கால கட்டத்தில் நமதூரில் எல்லா தெருக்களுமே கிட்டத்தட்ட பிரதான வீதியாகத்தான் மாறிவிட்டது - அவ்வளவு வாகனங்கள் நமதூரில் கூடி விட்டன. எல்லா தெருக்களுக்குமே இந்த பிரச்சனை இருக்கிறது.

என்ன செய்வது ?

காலத்தோடு ஒத்துப்போக வேண்டியது கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அலைபேசியை உபயோகம் செய்வதால் வரும் மிகப்பெரிய உபாதைகளுக்காக நாம் அதை உபயோகம் செய்யா விட்டால் நஷ்டம் நமக்கு தானே.

அதே போல் ஊர் விரிவாக்கம் என்று வரும் போது நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் போல் மற்ற தெருக்காரர்களும் சொல்ல ஆரம்பித்தால் ???? அப்போ ஒரு ஜமாத்தார்கள் என்கிற நிலையில் உங்களிடம் ஊர் நலம் எனபது எங்கே இருக்கிறது? சிந்திக்க வேண்டாமா ?

ஏனைய தெருக்களிலும் பேருந்துகள் ஓடத்தானே செய்கிறது. அங்கெல்லாம் என்ன தினம்தோறும் வாகன விபத்துக்களா நடக்கின்றன? சப்தங்கள் இருக்கலாம், அதுவும் நாளடைவில் பழகிவிடும்.

உங்களுக்கு இடையூறுகளே இல்லாமல் இருக்கும் என்று யாரும் சொல்ல முடியாது. அந்த இடையூறுகளிலும் சில பல நன்மைகள் இருக்கத்தானே செய்கிறது.

தயவு செய்து நம்மைகளை முன்வைத்து இடையூறுகளை பொறுத்து நாளைய சந்ததிகள் உங்களை, உங்கள் தியாகத்தை போற்றும் வண்ணம் நீங்கள் கொஞ்சம் மனமிரங்கி ஊர் நன்மைக்காக விட்டுக்கொடுத்து இந்த பெரிய காரியத்தை உங்களின் காலத்திலேயே செய்துமுடியுங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் இந்த நற்செயலிர்க்கு உங்களிற்கும் உங்களின் சந்ததியினருக்கும் தகுந்த சன்மானம் வழங்குவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Habeeb Rahman (Abu Dhabi) [15 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14626

நான் KMK தெருவில் பிறந்து வளர்ந்து KTM தெருவில் கல்யாணம் ஆகி போனவன். இரண்டு தெருக்களின் நன்மை தீமைகளை பற்றி அலசும் தகுதி எனக்கு இருக்கின்றது என்று நான் நினைகின்றேன்.

நான் சிறுவயதில் எனது தெருவினில் சுதந்திரமாக பாதுகாப்பாக விளையாடிய சுகத்தையும் அனுபவித்திருகின்றேன்.இதோ இப்போது எனது மக்களை எங்கள் முடுக்கிற்குள் பூட்டி வைக்கும் வேதனையும் அனுபவித்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொரு தினமும் அவர்களை வெளியே அனுப்பும்போதும் திரும்பி வரும் வரை மனதில் பக் தான். ரோட்டில் வாகனகளின் சப்தம் - அதனால் அமைதியான தூக்கம் வெகு தூரம்! இதனை எனது KTM தெரு சகோதரர்கள் இத்தனை நாள் எவ்வளவு தூரம் சகித்து கொண்டிருகின்றார்கள் என்றால் அதனை பாராட்டாமல் இருக்க முடியாது! அவர்களின் அணைத்து கோபத்திற்கும் பலமான கரணங்கள் இருகின்றது என்பதை மறுக்க முடியாது. அவர்களுக்கு சகிப்பு திலகங்கள் என்று பட்டம் கொடுத்தாலும் தகும். அதனை விட்டு விட்டு ஆக்கிரமிப்பு காரர்கள் என்று வீண் பட்டம் கொடுப்பது கொடுமைதான்.

நெசவு தெரு காரர்கள் சிறு தியாகம் செய்து உங்கள் அண்டை தெருகாரர்களின் கஷ்டத்தை கொஞ்சம் குறைப்பது மட்டுமில்லாமல் ஊர் போக்குவரத்து நெரிசலை பெரிதும் தவிர்க்கலாம்! பிற தெருவாசிகள் உங்களை பிரித்து பார்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு சம்மட்டி கொடுக்கும் முகமாக காயலின் உயர்வில் எங்களுக்கும் பங்கு இருக்கின்றது என்பதை நிருபிக்கும் ஒரு வாய்ப்பாக நினைத்து இந்த தியாகத்தை இன்று செய்தால், ஊர் உங்களை நாளை உயர்வாக பார்க்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by MAHMOOD HASAN (Mammaash) (QATAR) [15 December 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14631

நெசவு தெரு நண்பர் ஒருவர் சின்ன நேசவுதேருவில் 6 வீடு 7 வீடு என்று கணக்கிட்டுள்ளார்..நாங்கள் கூறியது பஸ் போக்குவரத்துக்கு துவங்கியபோது அங்கு எதனை வீடுகள் இருந்ததென்று ...இப்போது உள்ள கணக்கல்ல ..

இப்போது கூட அங்கு ktm தெருவில் 3 முடுக்கில் இருக்கும் வீடுகளே மொத்த தெருவில் இருக்கும்...

பின்பு நான் 25 ஆண்டுக்கு முன்னாடி பார்த்த கோட்டைகள் எதுவும் ktm தெருவில் இப்போது இல்லை பாவம் எங்கள் வீட்டு முன் வீட்டு காரர்களின் ஒரு ரூமை காணவில்லை ...

அப்புறம் ஆட்டோ ஜார்ஜ் இங்கு ஒருவரை பாதித்திருக்கின்றது ... உங்கள் பக்கங்களில் நின்ற இடத்திலேயே பஸ் ஏறலாமாம் ...இதற்க்கு அர்த்தம் என்ன?அவர் என்ன சொல்ல வருகிறார்?எங்களுக்கு இடைஞ்சல் ஒன்றும் இல்லை லாபம்தான் என்றா?ஏன் இந்த எறியும் நெருப்பில் என்னை ஊற்றும் வேலை?

பாவம் அவர் நேசுவு தெருவில் இருந்திருந்தால் கண்டிப்பாக ..ஒருவளிப்பதைக்கு குரல் கொடுத்திருப்பார் ...ஆட்டோ ஜர்ஜ்க்காஹவாது ..!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (KTM Street.) [15 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14635

திருவாளார் அப்பாஸ் சைபுதீன்!! கொஞ்சம் நாங்க என்ன எழுதி இருக்கிறோம் என்பதையாவது நல்ல படித்து புரிந்து விட்டு கருத்து சொல்லுங்கள்!!

நான் சொன்னது

(copy and paste )

1975 முதல் (எங்களுக்கு தெரிந்து) பேருந்து போக்குவரத்து KTM தெரு வழியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது!! அந்த வேளைகளில் நீங்க சொன்ன சின்ன நெசவு தெருவில் மிஞ்சி போனா 4 ,5 வீடுகள் தான் அமைத்திருக்கும்... ஆனால் KTM தெருவும் மெயின் ரோட்டின் அமைப்பும் இப்போது இருந்தது போல தான் இருந்தது

4 ,5 வீடுகள் என்று சொன்னது 1970 களில்..இப்போ உள்ள அந்த உங்களுக்கு தெரிஞ்ச 40 வீடுகளை இல்லை!!

உங்கள் கருத்து தான் Tangligh இல் இருப்பதால் பாதி புரிந்து மீதி புரியவில்லை (இங்கிலீஷ் & தமிழ் mixing ) ..எங்கள் கருத்துமா உங்களுக்கு புரியவில்லை..... கருத்துக்குரியவர் காயல்பட்டணத்தில் தான் இருக்கிறோம்...காணாத துரத்தில் இருந்தாலும் பிறந்த காயலையும் வளர்ந்த KTM தெருவையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிறோம்.

உமர் அனீஸ் காக்கா கருத்தை திருத்தியமைக்கும், எங்கள் உணர்வை புரிந்து கொண்டதற்கும் நன்றி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. அன்பின் நெசவுத்தெரு சகோதரர்கலுக்கு!
posted by Firdous (Colombo) [16 December 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14638

அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மனக்குமுறல்கள் நியமாக இருப்பினும் பொதுநலன் கருதி தாங்கல் ஒத்துழைப்பு நல்கவும். இதற்காக இறைவனிடம் உங்களுக்கு அளப்பரிய நன்மை உண்டு.

மேலும் KTM தெருவாசிகள் இப்பொழுது சந்திக்கும் அசவுகரியங்கள் போன்று ஒரு வழி பாதையானால் இரு தெருவசிகளுக்கும் இருக்காது.

ஏனென்றால் இரு பஸ்கள் எதிரெதிர் வந்தால்தான் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக இருக்கும். அதுவே ஒருவழி பாதை என்றால் நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகவும் அரிதே. மேலும் KTM தெருவைவிட வீதியில் பெரியது உங்களது தெரு.

ஆகவே தயவுகூர்ந்து தாங்கல் ஜமாத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்!

ஊர் நலனில் நாங்களும் சளைத்தவர் அல்ல என்று பறைசாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Kaleel Rahman (Chennai) [16 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14644

We should analyze this issue and close this discussion else finally we didn’t get any solutions for our Problem.

Did you analyze why because of High Traffic on your Town?

Root Cause Analyze for High Traffic in our Town:

Reason for Traffic

 Number of vehicles increased in our town.
 May be some people encroachment of govt. property in our Main Road.
 People parking the Vehicles at Main Road and etc.

Where the Traffic Problem

 The distances in between Thayumpali to Al-Jaamil Azher no issues with traffic. It is good enough spaces and it’s going good with out any traffic for two ways.

 High Traffic in between USC corner to Al-Jaamil Azher & Al-Jaamil Azher to 100 Meters towards K.T.M.Street only.

Major Traffic Jam Places in our Main Road

The following are the major traffic jam places in our main road. Look & analyze what are the places traffic is jam in our main road.

 Al-Jaamil Azher corner
 Aarampali
 Next to Shafire Medical shop
 City Medical
 Muthu sweets
 Post office
 Haji appa Taika Pali
 Ajith Travels - (Regarding this traffic issue, Ajith travels bus stop moved to new bus stand. Moosa Kakka did good job!)

What are the Solutions?

We need solution for this problem with out blaming any one. At this time, Nesavu Jamaath produced their documents here for our kind reference. As per the documents, they are supporting/ preferred to go ahead with two ways.

i. . By the analyze report from Mr.Deepak on 17-06-2008, we should extend the encroachment area in our main road. This encroachment will be happening only on major places in our main road and not all the building. Only where the high traffic is caused or encroachment area only.

(In the meantime every building’s owner in main road must be aware of this and they should come out to fix this problem on their property.)

OR

ii. By the analyze report from Mr. Seyed Mohamed on 17-09-1990, Via from Trichendur - Miya Moopanar Odai - Mela Nesavu Street - Old Post Office Road – New Bus Stand – Tuticorin. We can use this as a one way. This is the parallel road for Nesavu Street and KTM Street.

We have to put new road on this way and I hope it will not affect any one day today life.

Observation:

We should thing before does it anything. We need solution for our traffic issues. Instead of that, we don’t want any cold wars with our brother-hoods & friends. So we may go ahead with anyone of the best way for our people.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (Riyadh) [16 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14653

அன்பிற்குரிய சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எந்த ஒரு திட்டமும் அமுல் படுத்த யோசிக்கும்பொழுது அந்த திட்டத்தால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களுடைய கருத்தையும் அறிந்து அவர்களின் கருத்துக்களில் நியாயம் இருந்தால் அதை பரிசீலிக்கவும், இல்லையெனில் சகோதர வாஞ்சையுடன் அவர்களுக்கு விளக்குவதும் கடமையல்லவா? ஏன் மறந்து விட்டோம் ?

நாட்டில் பல திட்டங்களில் தற்பொழுது ஒரு சாரார் அதனால் தங்களுக்கு பாதிப்பு என்றும் மற்றொரு சாரார் அந்த வாதத்தில் உண்மையில்லை என்றும் கூறி, இன்று நாடே அமலிப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வுகள் நம் காயல் மாநகரத்திலும் எழ வேண்டுமா?

இந்த அறிக்கையை பதிவு செய்துள்ள சகோதரர் கூறியுள்ள முக்கியமான கருத்தை லாவகமாக கண்டுக்கொள்ளாமல் ஒரு சில கருத்துக்களை மட்டும் பெரிது படுத்தி, கருத்து பதிவு செய்துள்ள சகோதரர்களே, இது உங்களுக்கு அழகு தானா ?

அப்படி அவர் என்னதான் சொல்லியிருக்கிறார்?

ஒன்று

" தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தீபக் டாமோர் அவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையை ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில், காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரை, 17.06.2008 தேதியில் வெளியான தினத்தந்தி நாளிதழின் நெல்லை பதிப்பில் செய்தியாக வெளிவந்துள்ளது."

காவல் துறை ஆய்வாளரே ஆய்வுக்குப்பின் சமர்பித்த அறிக்கையைத்தானே அமல் படுத்த கூறுகிறார்?

நமது நகராட்சியின் இரண்டாவது கூட்டத்தில் ஒரு உறுப்பினர் அவர்கள் மெயின் ரோட்டில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை பற்றி பேசும்பொழுது நிழற்குடையின் கீழ்பக்கம் ஆக்ரமிப்பு இல்லாமலும் மேற்புறம் ஆக்கரமிக்கப்படிருப்பதாகவும், நிழற்குடையை புதுப்பிப்பதினால் ஆக்கிரமிப்புக்கு நகராட்சியே துணைபோகக்கூடாது என்று தந்து கருத்தை பதிவு செய்துள்ளாரே அது இந்த வலை தலத்திலேயே செய்தியாகவும் வந்துள்ளதே, அதை கருத்து பதிவு செய்துள்ள சகோதரர்கள் கவனிக்கவில்லை போலும்..

இரண்டு

" இந்த ஒருவழிப்பாதையை பெரிய நெசவுத்தெரு வழியாக அல்லாமல், ஏற்கனவே பலரால் அறிவுறுத்தப்பட்டபடி மாற்று வழியில் அமுல்படுத்த வேண்டுகிறோம்.

அடுத்து, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காயல்பட்டினம் பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டத்தின் ஆவணப் பரிந்துரையும் நிறைவேற்றத் தகுந்ததாகும் என்று கருதுகிறோம்.

ஆக, முற்காலங்களில் இதுபோல் அறிவுறுத்தப்பட்ட எந்தப் பரிந்துரையையும் கருத்திற்கொள்ளாமல், நமதூரிலுள்ள சில அமைப்புகள் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், எங்கள் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதை நாங்கள் மிகுந்த வேதனையுடன் கண்டிக்கிறோம். " என்று அவர் வேதனயுடன் பதிவு செய்துள்ள வார்த்தை (எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல்),உங்கள் மனதி நெருடல் ஏற்படுத்ட வில்லையா?

உணர்வுகள் காயப்படுத்தப்பட்டுள்ளது உங்களுக்கு புரியவில்லையா?

காயல்பட்டினம் பேரூராட்சியே வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டமிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? பேருராட்சியே முன்னர் பரிந்துரைத்த அத்திட்டமிருப்பதை சகோதரர் தனது அறிக்கையில் தெரிவித்த பின்னரும் ஏன் அதன் சாதக பாதகத்தை நம்மில் ஒருவரும் சுட்டிக்காட்ட முற்படவில்லை ?

"கடந்த 19.08.2009, 11.06.2010, 27.11.2011 ஆகிய தேதிகளில், நமதூரின் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஒரு வழிப்பாதைக்கான பேருந்து போக்குவரத்து ஒத்திகையை எங்கள் பெரிய நெசவுத்தெரு வழியாக மேற்கொண்டனர். ஆனால் இதுகுறித்த எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு (நெசவு ஜமாஅத்தாருக்கு) வரவில்லை. என்றும் 27.11.2011 அன்று, எங்கள் பெரிய நெசவுத் தெருவையும் உள்ளடக்கிய 11ஆவது வார்டின் உறுப்பினர் கூட அதில் கலந்துகொள்ளாத நிலையில், இதர உறுப்பினர்கள் பலரையும், எங்கள் பெரிய நெசவுத் தெருவைச் சாராத பொதுமக்கள் சிலரை முன்வைத்தே, திருச்செந்தூர் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி அவர்களை வைத்து ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்." என்றும் சகோதரர் அறிக்கையில் கூறியிருப்பது நமதூரின் ஒற்றுமைக்கு முக்கியஸ்தர்களும் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதனை உணர்த்துகின்றதே.

சென்ற 2010 ஆம் ஆண்டு ஆய்வு நடக்கும் பொழுது தெரு வாசிகளிடமும் கருத்து கேட்க வேண்டுமே என்று காவல் துறை ஆய்வாளர் அவர்கள் கூறிய பொழுது அவர்களிடமெல்லாம் கேட்கத்தேவையில்லை என்று ஐக்கியபேரவையைச்சார்ந்த ஒருவர் பிரபுத்தனமாக கூறியது, ஊர் நெசவுத்தேருவை எந்த அளவுக்கு மதிக்கிறது என்று படம் பிடித்து காட்டவில்லையா?

“ஊரின் பொதுநலன் கருதி... பொதுநலன் கருதி...” என்று தொடர்ந்து கூறுபவர்கள், தங்கள் தெருவில் நடக்கும் ஒருவழிப்பாதை தங்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே இன்று வரை மர்மமாக நடத்தப்படுவதை அங்கீகரிக்கிறார்களா? என்றும் தங்கள் தெருவை முன்னிறுத்தி செய்யப்படும் ஒரு திட்டத்தில் தங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) அணுகாது, பிற தெரு மக்களைக் கொண்டு ஒருதலைப்பட்சமாக செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் சகோதரர் கேட்பதில் நியாயம் இல்லை என்று நினைகின்றீர்களா?

தங்கள் தெருவை ஒருவழிப்பாதையாக்கும் திட்டத்தைத் தவிர்த்து, திரு.தீபக் டமோர் உத்தரவின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றியோ அல்லது 1990இல் காயல்பட்டினம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று ஒருவழிப்பாதை திட்டத்தையோ பரிசீலித்து, அதன்படி செயலாற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதுடன், இத்திட்டத்தை ஆதரிக்குமாறு ஊர் மக்களையும் அன்பொழுக கேட்டுக்கொள்கிறோம் என்று சகோதரர் வின்னப்பித்திருப்பதை திறந்த மனதுடன் ஆய்வு செய்து உணர்வுகளை மதித்து, கலந்து பேசி, ஊருக்கும் பலன் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் பாதிப்புகளும் குறைவாக இருக்கவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, நாம் எழுதும் வலைதள கருத்துக்கள் ஊரின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வு நம் அனைவரிடமும் பிரதிபலிக்க வேண்டும் என்பதனை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பேருந்து செல்வதால் சிரமதிற்குல்லாகியிருக்கின்றோம் என்று கூறும் சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கின்றோம். அதே போன்று இனி வரப்போகும் மாற்று வழிப்பாதை திட்டத்தில் அவ்விதம் ஏற்படும் சிரமங்களை முடிந்த அளவுக்கு குறைக்க, ஏற்கனவே காவல் துறை மற்றும் பேரூராட்சி அரசு அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்ட மாற்று திட்டங்களையும் பரிசீளிப்போம். வல்ல இறைவன் கண்டிப்பாக நமது ஊரின் ஒற்றுமைக்கு குந்தகம் வராத நல்ல முடிவை தருவான் இன்ஷா அல்லாஹ்

அன்புடன்
ஹைதர் அலி
பெரிய நெசவு தெரு
(ரியாத்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Habeeb Rahman (Abu Dhabi) [16 December 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14660

நெசவு தெரு ஒருவழிபாதையினை எதிர்த்தும் ஆதரித்தும் ஆரோக்யமற்ற, ஆனால் ஆக்ரோசமான கருத்துகளை பதிவு செய்தவர்களுக்கு இடையில் சகோ. ஹைதர் அலி அவர்கள் தமது கருத்தை மென்மையான முறையில் பதிந்திருகின்றார். அதே நேரத்தில் அவர் கருத்தில் பதிந்த சில விசயங்கள் ஏற்புடையதாக இல்லை.

நெசவு தெரு ஒரு வழி பாதையை நடை முறை படுத்தும்போது நெசவு தெருகாரர்களை ஒருமுறைகூட கலந்து பேசாதது போல் ஒரு பிரமை உருவாகியிருகின்றது.அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

சகோதரர் கோடிட்டு காட்டிய அந்த பத்திரிக்கை செய்தியிலேயே அன்றைய தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் இதற்கென்றே ஒரு கமிட்டியை உருவாக்கியதாகவும் அது நெசவு தெரு ஜமாத்தை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் வந்திருகின்றது. அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை என்றும் இருகின்றது. எப்படி ஏற்படும்?

நெசவு தெருவின் வழியாக ஒரு போதும் போக்குவரத்தை அனுமதிக்கவே முடியாது என்று அடம் பிடித்தால் எப்படி ஏற்படும்? ஆக அணுகவில்லை என்று சொல்வதை விட அவர்கள் உடன் பட வில்ல என்று சொல்வதுதான் பொருத்தம்.

இப்படித்தான் ஒவ்வொரு இடத்திலும் போக்கு வரத்தை தொடங்குவதற்கு முன் அவர்களின் முழு அனுமதியும் ஒத்துழைப்பும் வேண்டும் என்றால் எங்கும் ரோடு போடா முடியாது. KTM தெருவில் தொடங்குவதற்கு முன் அவர்களிடம் அனுமதி கேட்டார்களா என்று தெரியவில்லை. இவ்வளவு பிரசினைகளுக்கு மத்தியில் இதனை தொடர்வதுக்கு இப்போது KTM தெருவில் ஒரு கருத்துகணிப்பு நடத்துவார்களா? அதில் KTM தெருகாரர்கள் வேண்டாம் என்றால் அதனை மாற்றி அமைப்பார்களா?

சகோதரர் சுட்டிகாட்டிய அந்த புதிய ரூட்டில் இரண்டு வழிகளையும் மாற்றி அமைத்தால் நலம். அந்த ரூட்டில் உள்ளவர்கள் கம்பை தூக்கி கொண்டு வர மாட்டார்கள் என்று நம்புவோமாக!

நெசவு தெரு ஒருவழி பாதை கதை நான் சிறு வயதிலேயே கேட்டு கேட்டு பழகிப்போன விஷயம். நான் படிக்கும் காலத்தில் பல முறை போக்குவரத்தை விட்டு முயற்சியும் செய்தாகிவிட்டது. இது ஒன்றும் நேற்று அல்லது இன்று ரகசியமாக பேசப்பட்டு யாருக்கும் தெரியாமல் முயற்சி செய்யப்படும் விஷயம் இல்லை.அனைவரும் நன்றாக அறிந்ததே!

அடுத்து அவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில இருக்கும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவே எடுத்து கொள்வோம்! அதை அகற்றினால் மட்டும் இரு வழி பாதையை சுமூகமாக நடத்த முடியும் என்று நல்ல படித்த சிந்தனை வாதியான சகோதரர் நம்புகிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

மாற்று வழிகள் பல இருக்கலாம். ஆனால் இருப்பதில் காயலர் அனைவர்களுக்கும் எளிதானதும் நடைமுறைக்கு உகந்ததும் இது இருப்பதால்தான் நெசவுதெரு ஜமாஅத்தை தவிர்த்து அனைவரும் இதனை வரவேற்கின்றார்கள். சகோதரர் நெசவு தெருக்காரர் என்பதை விட எங்களின் தலை சிறந்த "காயல்" நண்பர் என்ற உரிமையுடன் கேட்கின்றோம். உங்கள் காயலுக்காக இதை செய்ய கூடாதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [16 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14665

ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையில் இரண்டுபக்க கருத்துக்களையும் சீர்தூக்கிபார்த்து முடிவெடுப்பதே பிரச்சினையை தீர்க்க வழிவகுக்கும். அதுவல்லாமல் "எறிந்த கட்சி எரியாத கட்சி "என்று பேசி பிரயோஜனமில்லை.

நமதூர் பஜாரில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்ற என்ன வழி என்று யோசிக்கவேண்டும். ஆக்ரமிப்பே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எல்லா தெருக்களிலும் நிறைய வீடுகள் தெருவை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் நெசவு ஜமாத்தார்கள் தயவு செய்து ஊர்னலனை முன் நிறுத்தி ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும். நிறைய இடங்களில் பொது நலனை முன்னிட்டு அந்த இடத்தையே காலி பண்ண சொல்கிறார்கள்/ அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லையே... தெரு வழியாக போக்குவரத்து நடக்கவேண்டும் என்று தானே சொல்கிறார்கள். எனவே மரியாதைக்குரிய நெசவு ஜமாத்தார்கள் இதில் ஒரு நல்ல முடிவு எடுத்து எல்லோரது நெஞ்சங்களையும் வெல்ல வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by OMER ANAS (DOHA QATAR.) [16 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14670

சகோ மஹ்மூது ஹசன்

உங்களுக்காக மீண்டும் ஒரு முறை எனது கருத்தை பதிவு செய்கிறேன். நான் குத்து மதிப்பாக(பொதுவாக) விரால் மீனுக்கு போட்ட தீனியில் சுறா மீன் மாட்டும் என்று நினைக்க வில்லை! முடுக்கு விஷயம் உள்படநான் உதாரணத்திற்கு போட்டது, உங்கள் இரு தெரு விஷயம் தெரிந்தே இவர் போட்டு இருப்பதாக கருதி பதிவு செய்கிறீர்கள். இது தவறு!

எனது இரண்டாம் கருத்தின் உண்மையை புரிந்து கொண்ட தம்பி Cnash உண்மை அறிந்து பதிவு செய்து இருப்பதையும் கவனிக்கவும்! உங்களின் கஷ்டங்களை நானும் மதிக்கிறேன். உங்கள் தெரு தேசிய நெடுஞ்சாலை. ஆனால் எங்கள் நெய்னார் தெரு பொதுச்சாலை. இங்கேயும் இப்ப மினி பஸ் போக்கு வரத்தால் நாங்களும் பாதிக்கவே பட்டுள்ளோம்!

உங்களுக்காவது தெரியும் பஸ் எப்பவும் வரும் என்று! எங்களுக்கு எப்ப இஸ்ராயில் இந்த பஸ் ரூட்டில் வருவார் என்றே தெரியாது!

எது எப்படியோ உங்கள் இரு தெரு பிரச்சினையில் என்னை அறியாமல் நான் தலை இட்டமைக்கு வருந்துகிறேன்! இப்பவும் சொல்கிறேன் நான் போட்ட கருத்து பிரதான வீதிக்கே! மேலும் விளக்கம் வேண்டும் எனில் முகா முகம் கண்டு பேசுவோம்!

தொலை தொடர்பு!66076255


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. அவங்களை கண்டிப்பாக மதிக்கணும்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [16 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14679

மதிப்பிற்குரிய ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத்தாரின் அறிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் நாம் கொஞ்சமும் ஆதங்கப்படாமல் அவர்கள் சொல்வதை மதித்து கேட்க்க தான் வேண்டும்.

அவர்கள் சொல்ல கூடிய விஷயங்களில் முக்கியமானவை:
================================================
1) மெயின் ரோட்டில் உள்ள அக்கரமிப்புகளை அகற்றுதல்

2) மாற்றுவழி பாதை பற்றியது (இது பற்றி யாரும் கருத்தில் டச் பண்ணவே இல்லை)

3) ஒருவழிப்பாதை எங்களுக்குத் தெரிவிக்கப்படாமலேயே இன்று வரை மர்மமாக நடத்தப்படுவது.

மற்றவைகள் எல்லாம் இப்படியான விஷயங்கள் சொல்லும் போது கொஞ்சம் கூட குறைய எடுத்து வைக்க தானே செய்வோம், அப்படி தான் அவர்களும் எடுத்து வைத்துள்ளார்கள் என்று எடுத்துகொள்ள கூடிய விஷயம் தான்.

எந்த விஷமானாலும் உட்கார்ந்து சரியான முறையில் பேசினால் தீருமானம் ஆகாதது ஒன்னும் இல்லை.

ஆதலால் இப்போது நகராட்சியில் உள்ள நல்ல சூழ்நிலையை முடிந்த வரை உபயோக படுத்தி அவங்களை (ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத்தார்களை) மதித்து பேச்சு வார்த்தைக்கு நல்ல வழிவகுக்க ஊர் நலனை கருதி வேண்டுகிறேன். அல்லாஹு வெற்றியை தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (Riyadh) [16 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14681

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ

பேருந்து ஏற்கனவே செல்லும் வழித்தடத்தில் வசிக்கும் இளவல்களின் கருத்துக்களில்/வாசகங்களில் தவறுகள் இருகின்றன என நாம் நினைப்பினும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் சில சகோதரர்களோ, வலை தளத்தில் தமது கருத்தும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உண்மை நிலை அறியாமல் அள்ளி தெளித்திருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் சில சகோதரர்கள் மிக நடு நிலையோடு போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆக்கிரமிப்பு என்பதனை உணர்ந்த்வரகலாய், அவ்வாக்கிரமிப்பு அகற்றப்பட்டால் பாதை விரிவாக்கமாகும் என்றும் அல்லது ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழித்தடத்தையும் பரிசீலிக்கலாமே என கருத்து பதிவு செய்திருப்பது மனிதாபிமானம் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றது என்பதனை எடுத்து காட்டுகிறது.

பெரும் பெரும் பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக தீர்க்கப்படும் பொழுது, அனைவருக்கும் நல்ல பலன் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் பிறருக்கு சிரமங்களும் முடிந்த அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று நாம் சிந்த்தித்தால் தீர்வு கிடைக்காதா என்ன?

ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by mohamed abdul kader (dubai) [16 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14690

நண்பர் ஹைதர் அலி அவர்களே தாங்கள் கூறுவது எதுவாகினும் பெரிய நெசவுத்தெரு வழியாக வாகனம் செல்லவேண்டாம் மெயின் பஜாரை அகலபடுத்திவிட்டு சின்ன நெசவுத்தெரு,கே.டி.எம்.தெரு,ஹாஜி அப்பா தெரு,மக்களே கஷ்டப்பட வேண்டும் தாங்கள் சவ்ரியமாக இருக்க வேண்டும் இது என்ன நியாயம் ?

கே.டி.எம்.தெரு மக்களாகிய எங்களுடைய குமுறல் நியாயமானது.காரணம் சிலர் எழுதிய விரும்பத்தகாத வார்த்தையாழ் காயலின் ஒற்றுமைக்கும் முன்நேற்றதிற்கும் எழுதுகின்ற தாங்கள் வூர் நன்மைக்காக மற்ற தெரு மக்கள் சுமந்திருக்கும் சுமையை நாமும் பகிர்துகொள்வோம் என தாங்கள் தங்கள் தெரு மக்களிடம் எத்தி வைத்தால் நன்றாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (KTM Street) (Makkah ) [16 December 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14691

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்ன தான் சமூக பார்வை, தொலைநோக்கு சிந்தனை, பொதுநலம் என்று பலபரினாமங்கள் இருந்தாலும், தான் மற்றும் தான் சார்ந்து இருக்கும் சமூகம், மக்கள், இனம் என்று வரும்போது சில உண்மைகள் கூட உணர்வால் மழுங்கடிக்கபடுகிறது!! இது நாம் வாழும் நாட்டில் வழக்கமாக காணும் காட்சிதான் என்றாலும், இன்று இது போல சிந்தனை நம் மதிப்பிற்குரிய ஹைதர் காக்கா அவர்களின் கருத்திலும் பிரதிபலித்திருப்பது துரதிஷ்டவசமானதே!!!

முதலில் நீங்கள் மேற்கொள்காட்டியிருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரைப்படி KTM தெரு, மெயின் ரோடு, அகலபடுத்தபட வேண்டும் என்பது எதற்கு என்று திரும்ப ஒரு முறை படித்து பாருங்கள்!! சம்பந்தபட்ட தெரு பொதுமக்கள் ஒரு வழி பாதைக்கு மறுப்பு தெரிவிப்பதாலும்!! வேறு சில தெருக்கள் குறுகலாகவும் இருப்பதால் ஒரு வழி பாதை அமுல்படுத்த இயலாது என்பதால் தான்... மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு அவர் தள்ளபட்டு இருக்கிறார்.

சரி.. அவர் பரிந்துரையில் முன்னரே 2006 இல் எங்கள் தெருவில் சப்-கலெக்டர் உத்தரவின் படி ஆக்கிரமிப்பு என்று அவர்களாகவே ஒரு நிர்ணயம் செய்து சில வீட்டு முன்புற கோட்டைகள், பால்கனிகள், படிகட்டுகள், மேலும் 3 வீட்டின் முன்புறம் ஒரு அறையையே (ஜான்ஸ்) இடிக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டது...நாங்களும் ஊர் நன்மை கருதி எந்த ஒரு பதில் நடவடிக்கைக்கும் (STAY ORDER உட்பட) போகாமல் நாங்களே முன் வந்து இடித்தோம்... அதனால் நஷ்டம் இன்று வரை எங்களுக்கு தான்!!

ஆனால் போக்குவரத்துக்கு என்ன பயன் என்று சொல்லமுடிமா!! அவர்களின் அறிவுகெட்ட அளவீட்டின் படி ஒரு வீட்டில் கோட்டை இடிபட்டது !! அதுக்கு பக்கத்தில் அடே அளவில் முன்னோக்கி உள்ள மற்ற்றொரு கோட்டை இன்னும் கம்பீரமா நிற்கிறது!! காரணம் 1960 க்கு முன் நெடுச்சாலை துறை என்ற ஒன்று வரும் முன்னரே உரிய அனுமதியுடன் அவர்கள் சொந்த இடத்தில் கட்டிய கோட்டை!! எனவே உரியவரில் நிலங்கள் தான் நெடுஞ்சாலை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யபட்டு இருக்கிறது என்பது இதில் இருந்தே தெரியவில்லையா!! அப்படி என்றால் இந்த விரிவாக்கத்தால் KTM தெரு போக்குவரத்திற்கு என்ன நன்மை வர போகிறது, என்று நடுநிலை என்று இங்கே வந்து கருத்து சொல்பவர்கள் சிந்தித்து சொல்லட்டும்?

சரி மெயின் ரோட்டில் சில ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான்.. அவை எல்லாம் மிஞ்சி போனால் 5 அடி என்ற அளவிற்குள்தான் வரும்!! அந்த இடங்களை மட்டும் மீட்டு எடுத்தால் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்று நீங்கள் நினைகிறீர்களா? சொல்லுங்கள்!!! நீங்கள் சொன்ன அந்த நிழற்குடை முழுவதுமே உள்ள நீளத்தை அளந்து அதுவரை உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் கிடைக்கும் 5 அடி அதிகம் நிலம் இப்போதுள்ள போக்குவரத்துக்கு போதுமானதா?

மாற்றுவழிபாதை, VAO செய்யத் அஹ்மத் காட்டிய வழி என்று ஒன்றை எல்லோரும் மறந்து விட்டதாக சுட்டி காட்டி இருக்கும் ஹைதர் அலி காக்கா, அந்த மாற்றுவழி ஏற்புடையது அல்ல, தெருக்கள் குறுகலானது என்று அதே காவல்துறை கண்காணிப்பாளர் சுட்டிகாட்டி உள்ள அறிக்கையை ஏன் உங்கள் வசதிக்காக மறந்து விட்டீர்கள்? மேலும் நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் அந்த மக்களும் சொல்லமாட்டார்களா? அந்த தெருக்கள் குறுகலாக உள்ளதால் அவர்களுக்கு உங்களை விட அதிகமான கரணங்கள் உள்ளது என்பதையும் உங்கள் சிந்தனைக்கும், ஆதில் ஐதுரூஸ், அவர்கள் சொன்ன கருத்துக்கும் விட்டு விட்டுவிடுகிறேன்.!!

மேலும் சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமல் அவர்கள் திட்டம் நடக்கிறது என்று நீங்கள் சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதா? இந்த திட்டம் நேற்று இன்று நடைபெறும் திட்டம் அல்ல!! 1986 அமைச்சர் KPK காலத்திலே திட்டம் ஒப்புதல் அளிக்கபட்டு நிதி ஒதுக்கபட்டு இன்று வரை உங்கள் தெரு மக்கள் எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் இருப்பது உங்களுக்கு தெரியும்..

பல முறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், அது உங்கள் ஜாமாத் ஒத்துழைப்பு இல்லாமல் தடுக்கபட்டு வருகிறது!! பல வருடங்களுக்கு முன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட போது உங்கள் தெரு மக்களால் எதிர்க்கபட்டு தடுத்து நிறுத்தப்பட்டதும் உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை!!

இறுதியாக முன்னாள் நகரமன்ற தலைவர் முன்னிலையில் நடந்த கூட்டத்திலும் நீங்கள் கலந்தலோசிக்கபட்டு உங்கள் ஒத்துழைப்பின்மையால் அது நிறைவேற்ற முடியவில்லை என்றெல்லாம் நன்று தெரிந்தும் சம்பந்தப்பட்டவர்களை கலந்தலோசிக்கவில்லை என்று சொல்லுவது எப்படி நியாயம்?

ஏற்கனவே கிடப்பில் உள்ள ஒரு திட்டத்தை ஆய்வு செய்யவும் கோட்டாச்சியர் உங்கள் அனைவரிடமும் அனுமதி வாங்கி தான் செய்யணுமா? மறைமுகமா என்ன நடக்கிறது? ஆண்டாண்டுகாலமாய் அலைகழிக்கபட்டுகொண்டிற்கும் ஒரு திட்டம் தானே இது இதில் என்ன மர்மம் இருக்கிறது?

இந்த திட்டம் உங்கள் தெருவின் வழியே செயல்படுத்தபடுவதால் என்ன தீமைகள் வர போகிறது என்பதை அறிவுபூர்வமாக சுயநலம் மறந்து தெருவின் பந்தல்போட முடியாது, பிள்ளைகள் விளையாட முடியாது, மின்கம்பங்கள் இருக்கிறது, ஆடுமாடு உலவ இயலாது போன்ற அற்ப காரணம் தவிர்த்து ஆக்க பூர்வ காரணம் ஏதும் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்...உங்கள் சகோதர ஜமாத்தான நாங்களும் உங்களோடு தோளோடு தோள் நின்று எதிர்க்கிறோம்.

அன்புடன்,
உங்கள் சகோதரன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [17 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14734

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கே. டி. எம். தெரு சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றிகள். பல வருடங்களாக ஊர் நன்மையை கருதி - தங்கள் தெரு வழியே போக்குவரத்தை அனுமதித்து - அதனால் ஏற்பட்ட பல இன்னல்களைத் தாங்கிவரும் உங்கள் அனைவருக்கும் காயல்பட்டிணத்தின் சார்பாக நன்றிகள் பல கோடி.

இங்கு தங்கள் கருத்துக்களை அள்ளி வீசியுள்ள சகோதரர்கள் அதிகம் பேர், “இது வரை நாங்கள் அனுபவித்த கஷ்டங்களை நீங்களும் அனுபவிக்க வேண்டும்” எனும் தொனியில் கருத்துரைதுள்ளது தான் மனதிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

ஆனால், நீங்கள் இது நாள் வரை அனுபவித்த கொடுமைகளை பொறுக்க முடியாமல், உங்கள் தெருவில் சென்று வரும் போக்குவரத்தையே மொத்தமாக நிறுத்த வேண்டும் என்று சொன்னால், உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வலிமையானவையாக இருந்திருக்கும். உங்களுக்கு ஒன்று தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்கள் தெருவில் மொத்தமாக பஸ் போக்குவரத்தை நிறுத்த போவதில்லை. ஒரு வழி பாதையாகத்தான் மாற்றப் போகிறார்கள். நீங்கள் பட்ட அனைத்து கஷ்டங்களும் –

சிறுவர்கள் விளையாட முடியாதது,
ஈசிசேர் போட்டு தெருவில் உட்கார முடியாதது,
தெருவில் பந்தல் போடமுடியாதது,
ரோட்டை சுலபமாக கடக்க முடியாதது
- போன்றவைகளை இனியும்படத் தான் போகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. குறைந்தபட்சம் இக்கஷ்டங்களை இத்தனை நாள் பட்ட அனுபவமாவது உங்களுக்கு துணை இருக்கிறது. ஆனால், எங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள். இதுவரை இது போன்ற கஷ்டங்களை அனுபவித்தது இல்லை என்பதால் நாங்கள் மிகவும் தயங்குகிறோம். உங்களுக்கு இந்த பிரச்சனை தெரிந்த பிசாசு. எங்களுக்கு தெரியாத தேவதை.

ஆகவே தான் எங்களது எண்ணங்களை உங்களுக்கு தெரிவிக்க முயற்சி செய்கிறோம். மேலும் நாம் இருவரும் பங்காளிகள். முஸ்லிம்கள், காயல்வாசிகள், 11வது வார்டை சேர்ந்தவர்கள் – என்று பல விஷயங்கள் நம்மை சகோதரர்களாக்க முயலும்போது நம்மை நாமே ஏன் பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் என் கேள்வி.

1986ல் ஒரு வழிபாதையாக மாற்ற முடிவெடுத்து, 1990ல் பெரிய நெசவு தெரு சரிவராது என்று தீர்மானித்து தான் மாற்றுபாதை (மியா மூப்பனார் ஓடை – மேல நெசவு வீதி – பழைய போஸ்டு ஆபீஸ் தெரு வழியாக...) ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அப்படி ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு வழி இருக்கும் போது பெரிய நெசவு தெரு வழியாகத்தான் பஸ் போக வேண்டும் என ஊர்காரர்கள் நிர்பந்திக்கப் போவதில்லை என நம்புகிறேன்.

இன்னும் சொல்லப்போனால், கே.டி.எம். தெருவின் முனையிலிருந்து ஐ.சி.ஐ.சி.ஐ வரைக்குமாகத் தான் டிராபிக் ஜாம் ஆகிறது. ஆகவே பிரச்சனை – மெயின் ரோடில் தான் உள்ளது. மேலும் எதற்காக ஒரு வழி பாதையாக மாற்ற முயலுகிறோமோ அதே பிரச்சனை கூலைகடை பஜார் (நாலு தெரு சந்திப்பு) இடத்திலும் வராது என்பது நிச்சயமில்லை. இதில் உடன்பிறவா சகோதரர்களாக பழகி வரும் நாம் ஏன் அடித்துக் கொள்ளவேண்டும்? தயவு செய்து சிந்தியுங்கள்.

வருங்காலத்தில் மறுபடியும் பிரச்சினை வரக் கூடிய ஒரு வழியில் பஸ் ரூட்டை மாற்றுவதை விட இப்போதே ஊருக்கு ஒதுக்குபுறமாக வழி ஏற்படுத்தி நமது வருங்கால சந்த்தியினரும் பாராட்டும் வகையில் ஒரு முடிவை நாம் ஏன் எடுக்க்க் கூடாது? இங்கு ஒரு அன்பர் கூறியபடி நமது வார்டை சேர்ந்தவர்கள் தான் நமதூருக்கு தலைவியாகவும் துணை தலைவராகவும் இருக்கிறார்கள். அவர்களின் துணைக் கொண்டு இதற்கு ஒரு சரியான, நியாயமான தீர்வு எடுப்பதில் நமது கோபதாபங்களை காட்டலாம். அதை விடுத்து ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இப்போதைய பஸ் ஸ்டாண்டு ஒன்றும் ஊர் நடுவில் இல்லை. ஊரின் தென்-மேற்கு மூலையில் தான் உள்ளது. பல தெரு மக்கள் ஆட்டோ சார்ஜ் செலவு செய்துதான் பஸ் ஸ்டாண்டு வருகிறார்கள். தாயம் பள்ளியிலும், போஸ்டு ஆபீஸ் ஸ்டாப்பிலும் ஏறும் மக்களை நேரே பஸ் ஸ்டாண்டிலேயே வந்து ஏறும் படி சொல்லிவிட்டு, கே.எம்.டிக்கு பின்னால் உள்ள (ரூபாய்க்கு 4 என கூவி விற்க்கப்படும்) காலி நிலங்களை ஆர்ஜிதப்படுத்தி ஒரு பை-பாஸ் போட முடியாதா?. மெயின் ரோடு வியாபாரிகள் கவலைப்பட வேண்டாம். பல ஊர்களில் பஜார் தெரு என்பது பஸ் போகாத தெருவாகத்தான் இன்னும் உள்ளது.

முயன்றால் முடியாத்து எதுவுமில்லை. சகோதரர்களான நாம் ஒன்றுப்பட்டு முயன்றால் எல்லோரும் இன்புறும் வண்ணம் நல்ல முடிவு கிடைக்கும்.

வஸ்ஸலாம்.
சினேகத்துடன்
சிராஜூதீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (Riyadh) [17 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14736

அன்பின் சகோதரர்களே,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ...

கோபம் வேண்டாம்.

நாம் இன்னும் முழுமையாக சகோ. ஜின்னா அவர்களின் அறிக்கையை விவாதிக்கவில்லை. நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும வர வேண்டாம்.

தாங்கள் கூறும் ஒரு வழிப்பாதையாகட்டும், இருவழிப்பாதையக்கட்டும் சின்ன நேசவுத்தேருவுக்கு எந்த மாற்றமும் இல்லை. இப்பொழுது வாகன நெரிசல் உள்ள இடங்கள் என்றோ ஆக்கிரமிப்புகள் என்றோ நாம் KTM தெருவை கூறவில்லை. மாறாக ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள மெயின் ரோடைத்தான் கூறுகிறோம்.

சகோதரர் கூட "சரி மெயின் ரோட்டில் சில ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான்.. " என்று ஒத்துக்கொள்கிறார். நன்றி. ஆனால் அதே நேரத்தில் "அவை எல்லாம் மிஞ்சி போனால் 5 அடி என்ற அளவிற்குள்தான் வரும்!!" . இது தங்களுடைய கணக்கு. உங்களுடைய தகவலுக்காக சொல்லுகிறேன். பத்தடிக்கும் மேல் மெயின் ரோடில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு பஸ் போகும் அளவுக்கு சில இடங்கள் ஆக்கிரமிக்காப்பட்டுள்ளன.

பயணிகள் நிசற்குடை மட்டுமல்ல, அதற்கும பின்னால் இருந்து ஆரம்பமாகிரது ஆக்கிரமிப்பு. எந்த பிள்டிங்கயையும் குறிப்பாக சுற்றிக்காட்ட விரும்பாததால் நாம் இங்கே குறிப்பிடவில்லை. தாங்கள் மெயின் ரோடில் நின்று பார்த்தால் தெரியும் எல்லா கட்டிடங்களும் ஒரே அளவுக்கு இல்லை சில கட்டிடங்கள் பல அடிகள் ரோடு பக்கம் வந்திருக்கிறது. பிரச்சினை அத்தகைய ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் தான் பெரும்பாலும். இது தெரிந்த புதிதாகக்கட்டிடம் கட்டும் மக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு முன்னாள் காம்பவுண்ட் வைத்து கட்டியிருப்பதை சில இடங்களில் பார்க்கலாம். நாளை இடிக்கப்படும் சூழ்நிலை வந்தால் காம்பவுண்ட் தானே போகும் என்று.

சகோதரர் சொல்லுவது போன்று நாம் சொல்லுவது அற்ப காரணமாக இருக்கலாம். ஆனால் அதே காரணத்தைதானே "இப்போது எனது மக்களை எங்கள் முடுக்கிற்குள் பூட்டி வைக்கும் வேதனையும் அனுபவித்து கொண்டிருக்கின்றேன். " என்று இளவல் ஆர்கிடெக்ட். ஹபிபுர்ரகுமானும் " நாங்கள் இழந்த உரிமைகள்" என்று சகோ. தாரிக்கும், "சிறு வயது விளையாட்டு ஆசை முதல்...முதியவயதில் வீட்டுமுன் கூட ஒரு சேர் போட்டு நிம்மதியா உட்கார வழி இல்லாமல்.... " என்று சகோ. Cnash உம, "அனைத்து தெரிவிலும் தெரிவில் விளையாடும் விளையாட்டுகளை, என் சிறுவயதில், நானும் என்னை போன்றோர்களும் இழந்தோம்.." என்று தம்பி Dr. கிசாரும் சொல்லுகிறார்கள். இன்னும் பல காரனங்களியும் சோதரர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களின் அந்த தியாகத்திற்கு பெரிதும் மதிப்பளிக்கிறேன்.

சம்பந்தப்படாத சகோதரர்களுக்கு காரணங்கள் அற்பமாக இருக்கலாம். இவ்வளவு காரணங்களை தெரிந்தபின், முடுக்குகள் ஏதும் இல்லாத, அடுத்த தெருவிற்கு பெண்களும் சிறுவர்களும் செல்ல வேண்டுமென்றால் தெருவின் கடைசிவரை சென்று திரும்ப வேண்டுமே என்ரமைந்து விட்ட எங்கள் தெருவின் அமைப்பு முறை, ஏன் நம்மூர் சகோதரர்கள், காவல் துறை பரிந்துரைப்பிரகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றியோ அல்லது பேரூராட்சி நிர்வாக அதிகாரின் பரிந்துரைப்படி மாற்றுவழிப்பாதை பற்றியோ சிந்திக்க மறுக்கிறார்கள்? என்று எண்ணவைக்கிறது.

தற்பொழுது மூன்று வழிகள் உள்ளதாக நாம் அனைவரும் எண்ணுகிறோம்.

1. காவல் துறை பரிந்துரைப்பிரகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசல் அதிகம் உள்ள இடங்களை விரிவாக்கம் செய்தல்.

2. ஏற்கனேவே பரிந்துரைக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் மாற்றுவழிப்பாதை திட்டம்

3. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை.

அன்பின் சகோதரர்களே,

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஏன் நாம் மூன்றாவது பாய்ண்டை யோசிக்கும் முன் மீண்டும் முதல் இரு பாய்ண்டுகளையும் தீர ஆலோசனை செய்யக்கூட்டது?

சாத்தியங்கள் இருந்தால், தம்பி கிசாருடைய கருத்தயும் பரிச்சிளிக்கலாம்.

"ஒரு வேண்டுகோள்.. ஊர் மக்களுக்கு.. இத்தனை ஆண்டுகளாக எங்கள் தெரு (KTM) செய்த தியாகர்த்திர்க்கு , இந்த நன்றியாக, விசயச அந்தஸ்து வழங்க வேண்டும்..அரசி பனி மற்றும் கல்வியில் நலிவுட்டோர்க்கு தனி இடவொதுக்கீடு வழங்குவதை போல், ஊரில் எல்லா விசயங்களுக்கும் எங்கள் தெருவுக்கு அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும்.. நகராட்சி பனி, குடிநீர் விநியோகம், சுகாதார பணிகள், மற்றும் எல்லா வற்றிலும் அதிக பிரதிநிதுவமும், ,மற்றும் அதிக ஒதுக்கேடும் செய்ய வேண்டும்..பள்ளி admission போன்ற வற்றிலும் தியாகம் செய்த தெரு பிள்ளைகளுக்கு உடனடி சீட் தரவேண்டும்."

வஸ்ஸலாம்

தங்கள் சகோதரன்
ஹைதர் அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Javed Nazeem (Chennai) [17 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14739

சகோதரர் ஹைதர் அவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆக்கிரமிப்புக்கள் மட்டும் அகற்றப் பட்டால் கிடைக்கும் தீர்வு தற்காலிகமானதாகவே இருக்கும். வளரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து - இதன் அடிப்படையில் தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தோமானால்:

1. ஆக்கிரமிப்புக்கள் நிச்சயம் அகற்றப் பட வேண்டும்
2. ஒரு வழிப் பாதையும் வேண்டும்.

இதன் கஷ்டம் உணர்ந்த பின்னும் இன்னொரு தெருவினரை அனுபவிக்கச் சொல்லலாமா என்பது மிகவும் நியாயமான கேள்வி. ஆனால் ஒரு வழிப்பாதையின் மூலம் 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இரண்டு தெருவிலும் செல்லும். அதுவும் ஒரே திசையில். அந்த சூழ்நிலையிலும் நெசவுத் தெருவின் பரந்த அமைப்பின் படி அங்கே ஆபத்துக்கள் குறைவு (comparatively).

போதுமான மற்றும் சரியான அளவிலான ஸ்பீட் பம்ப்கள் மூலம் இன்னும் பாதுகாவலான சூழ்நிலையை உருவாக்கலாம். இன்னொரு தெருவினருக்கும் மற்றும் ஊரின் வருங்கால தேவைகளுக்கும் உதவும் முகமாக இதை தாங்கள் ஏற்றுக் கொள்ள முன் வரலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by G.M.SHAIK DAWOOD (MALDIVES) [17 December 2011]
IP: 123.*.*.* Maldives | Comment Reference Number: 14748

அன்புடையீர் அஸ்ஸலாமுஅழைக்கும்,

உணர்ச்சிகரமான ஒரு பிரச்சினையில் கருத்துக்களையும் சீர்தூக்கிபார்த்து முடிவெடுப்பதே பிரச்சினையை தீர்க்க வழிவகுக்கும். அதுவல்லாமல் இஷ்டத்திற்கு எழுதுவது சரி ஆகாது . இதற்கு மூன்று தீர்வு உள்ளது

1. காவல் துறை பரிந்துரைப் பிரகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசல் அதிகம் உள்ள இடங்களை விரிவாக்கம் செய்தல்.

2. ஏற்கனேவே பரிந்துரைக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் மாற்றுவழிப்பாதை திட்டம்

3. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை.

முதல் தீர்வை பார்த்தோமானால் , எந்த ஒரு பொது மனிதரும் ஏற்றுகொள்ளகூடியதாகும். ஏனென்றால் ஆக்கிரமிப்பு கண்டிப்பாக இருக்கிறது.

இதற்கு சரியான உதாரணம் மூப்பனார் ஓடை , அதாவது சின்ன நெசவு தெரு-KTM தெரு மற்றும் பெரிய நெசவு தெருவிற்கு இடயில் அமைந்துள்ள மழை நீர் வடியும் ஓடை. அந்த ஓடை KMT HOSPITAL லில் தொடங்கி ஆரம்பள்ளிவாசல் எதிரில் முடிவடையும். தற்போது அந்த ஓடையை பார்க்கவே முடியாது , ஏனென்றால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து அடைபட்டுள்ளது. இதற்கு பெரும்பான்மை காரணம் KTM தெருவாசிகளே. இதை அவர்கள் யாரும் ஒத்துகொள்ளமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

மற்றபடி தற்போது ஒரு வழிப்பாதைக்கஆக தேர்தெடுக்க பட்டுள்ள இணைப்பு சாலையானது அதாவது இரு தெருவிற்கு இடயில் உள்ள குறுக்கு சாலை (தாயீம்பள்ளி அருகில்) உண்மையில் இவ்வளவு அகலம் கிடையாது. ஒரு மாட்டு வண்டி செல்லும் அளவிற்கே இருந்தது. காலப்போக்கில் அது விரிந்து இவ்வாறு உள்ளது. பெரிய நெசவு தெருவில் அந்த சாலைக்கு அருகில் உள்ள வீடுகளின் origional பத்திரத்தை வாங்கி பாரத்தால் உண்மை நிலை புரியும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று அல்லது நான்கு அடி அகலம் குறைவாக இருக்கும்.

இரண்டாவது தீர்வு, ஏற்கனேவே பரிந்துரைக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் மாற்றுவழிப்பாதை திட்டம். இதனால் தற்காலிகமாக சுமூகமான தீர்வு ஏற்படலாம்.

மூன்றாவது தீர்வினால் முக்கியமாக பாதிக்கபடுவது இரு எல்கே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் தான் என்பது நல்ல உள்ளம் கொண்ட எல்லோரும் அறிவார்கள் . எனவே மூன்றாவது தீர்வினால் பாதிக்கபடுவது ஊர் நலன் தான் என்பதை எல்லோரும் புறிந்துகொண்டு, இப்போது நகராட்சியில் உள்ள நல்ல சூழ்நிலையை முடிந்த வரை உபயோக படுத்தி ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத்தார்களை மதித்து பேச்சு வார்த்தைக்கு நல்ல வழிவகுக்க ஊர் நலனை கருதி வேண்டுகிறேன். அல்லாஹு வெற்றியை தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Abubacker Siddiq (Riyadh) [17 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14765

அன்பிற்கினிய சகோதரர்களே,
அஸ்ஸலாமு அழைக்கும்,

அ.மு.செய்யது முஹம்மது (பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி) அவர்களால் முன்பு எடுக்கப்பட்ட ஆய்வின் கீழ்க்கண்ட முடிவின்படி:

1. காவல் துறை பரிந்துரைப் பிரகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசல் அதிகம் உள்ள இடங்களை விரிவாக்கம் செய்தல்.

2. ஏற்கனேவே பரிந்துரைக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் மாற்றுவழிப்பாதை திட்டம்

3. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை.

அறிந்தும் அறியாமலும் ஆக்ரமித்தவர்களின் கவனத்திற்கு:

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' ஹதீஸ்: புஹாரி

எனவே ஆக்ரமிப்புகளை அகற்றி பாதையை விரிவுபடுதுவதே முதன்மை தீர்வாகும்.

இரண்டாவதாக, ஒருவழிபாதைக்காக பெரிய நெசவு தெரு அல்லாது மாற்று வழிப்பாதை இருக்கும் பட்சத்தில் அதற்கே முன்னுரிமை கொடுத்து செயல்முறை படுத்துவதே சகோதரத்துவத்தின் அடையாளமாகும்...

இந்த வலையதலத்தில் சிலர் நெசவு ஜாமாத்தார்கள் ஊர் நன்மையை கருதாதவர்கள் என குற்றம் சாற்றுகிறார்கள்.

ஊர் நன்மையை கருதுபவர்களாக இருந்ததால் தான் எங்கள் ஜமாத்திற்கு உட்பட்ட சின்ன நெசவு தெரு பெருவழிபாதையாக நடைமுறையில் உள்ளது.

இதிலிருந்து தெளிவு படுத்த விரும்புவது என்னவென்றால், முதல் இரண்டு முடிவுகளை ஆராய்ந்து நடைமுறைபடுத்துவதே நம் அனைவருக்கும் நன்மையாக அமையும்.

அன்புடன், அபூபக்கர் சித்திக், ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (Makkah) [17 December 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14775

அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்த கருத்து பரிமாற்றங்கள் ஒரு ஆரோக்கியமான விஷயம் தானே தவிர, கோபத்திற்கும் மனஸ்தாபத்திர்க்கும் எந்த இடமும் இல்லை. இந்த பகுதி மூலம் சில உண்மைகளையும், உண்மையிலேயே பாதிக்கபட்டு இருக்கும் எங்கள் மனக்குமுறல்களையும் பதிவு செய்யும் வாய்ப்பாக கருதி இங்கே உரைத்து இருக்கிறோம்.. அதே வேளையில் சும்மா வெளியில் இருந்து கொண்டு விட்டு கொடுத்தால் என்ன? பரந்த மனம் வேணும், என்று வாயால் மட்டும் பேசிகொண்டிர்போர்க்கும் இங்கே விவாதித்த கருத்துக்கள் விடயமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்பு சகோதரர் ஹைதர் காக்கா மற்றும் இங்கே கருத்து சொல்லி இருக்கும் நண்பர் தாவூத் அவர்களுக்கு ஒரு விளக்கம்.

* முதலில் நீங்கள் திரும்ப திரும்ப சொல்லும் அந்த காவல்துறை பரிந்துரை, எதனால் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்!! சம்பந்தபட்ட தெரு பொதுமக்கள் ஒருவழிபாதையை மறுப்பதாலும், மாற்றுதிட்ட பாதையின் சாலை குறுகலாக உள்ளதால் தானே காவல் துறை மூன்றாம் திட்டமான ஆக்கிரமிப்பை அகற்ற பரிந்துரைத்துள்ளது. நீங்கள் மனம் வைத்தால் என்ன?

* ஆக்கிரமிப்பு நீங்கள் சொன்ன படி 10 அடி என்று கூட வைத்துகொண்டாலும், அதனால் எதாவது சொல்லப்பட கூடிய போக்குவரத்து மாற்றம் வருமா? அவர்கள் அளவீட்டின் படி, நெடுஞ்சாலை துறை முன் / பின் என்ற அளவு முறை தானே பின்பற்றப்படும். பின் உரிய அனுமதியுடன் கட்டப்பட்ட கட்டிடம் அப்படிதானே இருக்க போகிறது!! அது வெளிநோக்கி இருந்தால் கூட!! ஒரு வழிப்பாதையால் கிடைக்ககூடிய நன்மை கிடைத்து விடுமா?

* நீங்கள் சொன்ன அத்தனை காரணங்களும் ஊர் நலன் என்று வரும் பொது அற்பமானைவை தான்.. அதனால் தான் நாங்கள் விட்டு கொடுத்து.. சில சந்தோசங்களை இழந்து, சங்கடங்களை அனுபவித்து வருகிறோம்... இருந்தாலும்,நாங்களோ, எங்கள் முன்னுள்ள தலைமுறையினரோ, எங்கள் பிள்ளைகளோ, கல்வியிலும், விளையாட்டிலும் மற்ற எந்த தெருவை சார்ந்தவருக்கும் சளைத்தவர்கள் அல்ல.. அல்ஹம்துலில்லாஹ் ஆரோக்கியத்திலும் அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் எந்த குறையும் வைக்கவில்லை. ஆகையால் இந்த போக்குவரத்து பாதிப்பு என்பது பல அற்பமான காரணங்களுக்கு தானேயன்றி வேறில்லை!!

* இது எல்லாம் அற்பமானவை என்று சொன்னதும் இரண்டு LK பள்ளிகள் இருக்கு அவை பாதிக்கப்படும் என்ற புதிய காரணத்தை நண்பர் கண்டுபிடிருக்கிறார். அதுபற்றி சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகமோ, பெற்றோர்களோ கவலை படவில்லை கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே உங்களுக்கும் வீண் கவலை வேண்டாம். எல்கே பள்ளிக்கு மெயின் ரோட்டிலும் ஒரு வாசல் உள்ளது, மத்திய, மேற்குகாயல் பகுதி மாணவர்கள் அந்த பகுதியைதான் பயன்படுத்துகிறார்கள்...அதுவும் மிகுந்த போக்குவரத்து உள்ள இடம்.. எந்த பாதிப்பும் யாருக்கும் வரவில்லை... அல்லாஹ் இனியும் காப்பாத்துவான்!!

* இறுதியாக மூப்பனார் ஓடை பற்றி சொல்லி விட்டு, KTM தெரு மக்கள் தான் அதை அதிகம் ஆக்கிரமித்து இருகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார் நண்பர்.. KMT மருத்துவமனையில் இருந்து ஆரம்பிக்கும் அந்த ஓடை.. சின்னநெசவு தெரு தாண்டி இங்கே வந்து... ஆராம்பள்ளியை சென்று அடையும் ..இது 60 -70 வருடங்களுக்கு முன்.. அப்படி என்றால் KMT தொடங்கி தாயும் பள்ளி வரை உள்ள ஓடையை ஆக்கிரமித்து இருப்பது யார்? அதுவும் KTM தெருவினரா?

தாயும் பள்ளியில் தொடங்கி எத்தனை இடம் மூப்பனார் ஓடையில் பெரிய நெசவு தெருவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது என்றும் மனசாட்சியை கேட்டு சொல்லுவீர்களா? அது என்ன பெரும்பாலும்?

சரி இப்போ மூப்பனார் ஓடையும், GK வாசன் ஓடையும் பிரச்னை இல்லை..இந்த ஓடையை மீட்டால் போக்குவரத்து சரியாகிவிடுமா? அப்படி 100 வருஷ முன்கனக்கு எல்லாம் ஊரில் எடுத்து பார்தால்... ஒரு வீடு கூட மிஞ்சாது!! எதற்கு சம்பந்தம் இல்லாததை முடிச்சி போடுகிறீர்கள் என்று தெரியவில்லை?

இப்படி நீங்கள் குறுகிய நோக்கில் விவாதம் பண்ணி கொண்டிருந்தால் ஒன்றும் ஆக போறது இல்லை....முன்பு போல் மீண்டும் இத்திட்டம் கிடப்பில் போடப்படும்!! நாங்களும் விரிவாக்கம்... விரிவாக்கம் என்ற பேரில் உரிமையை மட்டும் அல்ல உடமைகளையும் (சிலர் வீட்டில் பகுதி உட்பட) இழந்து விட்டு இருக்கிறோம்!! இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. நாங்கள் மட்டுமே ஊர் நலன் என்று தியாகம் பண்ணி கொண்டு எல்லாவற்றையும் இழந்து வெறும் தியாகி பட்டத்தை மட்டும் சுமக்கும் சுமை தாங்கிகள் அல்ல!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by MAHMOOD HASAN (Mammaash) (QATAR) [18 December 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14837

நண்பன் தாவூத்...

இந்த பிரச்சனி யில் நாம் அந்த நாரோடையை இழுக்காமல் இருப்பது நல்லது ..மூப்பனார் ஓடை யில் முக்கால் வாசி பெரிய நேசவுதெரு வீடு தோட்டங்களும் செப்டிக் டேன்க்களும் தான் உள்ளது... கடைசி வரை பொய் பார்த்தல் தெரியும் அது எல்லாம் மற்ற பிரச்னை அதற்கும் ஒருவழி பாதைக்கும் சம்பந்தம் இல்லை..

அப்புறம் நாங்கலாம் ஸ்கூல் போஹும்போது சில சமயம் பெரிய நெசவு தெருவு வழி உபயோஹிப்போம் அதை எல்லாம் இப்போ அடைத்து விட்டார்கள். வட காயல் மற்றும் அணைத்து மக்களும் மெயின் ரோடைதான் உபயோக்கிறார்கள் அந்த பள்ளிகளுக்கு செல்ல so பஸ் விட்டால் பள்ளிகளுக்கு போவது பாதிக்கும் என்பது ?

நான் இங்கு வாதம் பண்ணவில்லை அந்த வலி அமைந்தால் நாம அனைவருக்கும் நல்லது... இல்லை நாம் பஸ் ஏறுவதற்கு ஓடக்கரை ,ரத்தினபுரி போஹவேண்டி இருக்கும் இப்போது உள்ள கல சூழ் நிலையில் நம் பெண்களெல்லாம் பஸ்காஹ அங்கெல்லாம் போவது சரி ஆகுமா?

உமர் அனஸ் காகா...

முதலை இம் மாட்டலை ஆமைஇம் மாட்டவில்லை....
உங்களுக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது... ஒரு நாள் தூத்துக்குடி போக நைனார் தெருவிளுருந்து ஓடக்கரை ,ரத்னபுரி போஹும்போது நமக்கு புரியும்... நானும் நைனார் தெருவாசிதான்...!!! இன்ஷா அல்லா ஒன்னா ஆட்டோ புடிச்சி போலாம் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by uvais zul karani (colombo) [18 December 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 14843

Moderator: சகோ. உவைசுல் கரனி அவர்கள், தமது கருத்தை ஒன்று நேரடியாக தமிழிலோ அல்லது நேரடியாக ஆங்கிலத்திலோ தரலாம். தமிங்கிலிஷில் அனுப்பப்படும் கருத்துக்களைப் பரிசீலிக்க மிகவும் சிரமம் எடுக்க வேண்டியுள்ளது. புரிந்துகொண்டு ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். சிரமத்திற்கு வருந்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Hasbullah Mackie (Dubai) [21 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14925

அன்புள்ள சகோதரர்களே

மாற்று வழிப்பாதை அவ்வளவு easy அல்ல ......முதலில் கூலக்கடை பஜார் இல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பிறகு L.K. SCHOOL STUDENTS களின் பாதுகாப்புகள் பற்றி ஒரு தெளிவான முடியு எடுக்கப்படவேண்டும் ... சிறிய நெசவு வழியாக போவதால் அதன் விபத்திலிருந்து தவிர்க்கலாம்... எல்லாவற்றிற்கும் மேலாக மெயின் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்படவேண்டும் எந்த விதமான பார பட்சமுமின்றி .........

K.T.M. தெருவில் போக்குவரத்துக்கு வழி கொடுத்தது பெருந்தன்மைக்கு உரியது .....ஆனால் அந்த தெருவில் பஸ் நிறுத்தம் இல்லை என்பது வேதனைக்குரியது ....

அவர்கள் post ofiice வரை நடந்தோ அல்லது auto வில் வர வேண்டும் என்பது நிர்பந்தம் ஆகி விட்டது .......

மெயின் வீதியில் ஆக்கிரமிப்புகளை நீக்கி தற்போது உள்ள நிலையில் போவது தான் எல்லோருக்கும் வசதி .....

ஹஸ்புல்லாஹ் மக்கி , துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by SEYED ALI (ABUDHABI) [21 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14930

ஆரம்ப முதலே அரசாங்கம்தான் இதில் குழப்பம் ஏற்ப்படுத்தி உள்ளது. தெருவும் வீதிகளும் பொது சொத்து. அரசுக்கே சொந்தம். எந்த ஜமாத்திர்க்கும் அல்ல.

அந்தக்காலத்தில் முதன் முதலில் போக்குவரத்து ஆரம்பிக்கும் பொது வசதிக்கு ஏற்றார்ப்போல்தான் வாகனங்கள் இயங்கின. வழியில் உள்ளோர் அதற்கேற்றாற்போல் தங்கள் மனோநிலையை ஆக்கிக்கொண்டனர். பிரதான வீதியும் கேடிஎம் தெருவும் இப்படித்தான் திருசெந்தூர் பாதை ஆகின. யாரும் யாரிடமும் அனுமதி கேட்டதில்லை. இப்போ மட்டும் எதற்கு அனுமதி. ஊர் நன்மையை கருதி அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டு. வீட்டுக்குள் பஸ் விடவில்லையே. அரசுக்கு சொந்தமான வீதியில் தானே விடப்போகிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved