Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:56:17 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7694
#KOTW7694
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 12, 2011
ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு: நகரின் முக்கிய வீதிகளில் பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வுப் பேரணி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 16952 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, 15.11.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமியற்றப்பட்டுள்ளது.

பின்னர், 08.12.2011 அன்று மதியம் 02.30 மணிக்கு, நகரிலுள்ள உணவக வணிகர்களுக்கு விழிப்புணர்வேற்படுத்தி, அறிவுரை வழங்கும் சிறப்புக் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பொருட்டு, மறுநாள் 09.12.2011 அன்று மாலை 04.00 மணிக்கு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கண்ணையா, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், நகரப் பிரமுகர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துவக்கமாக பின்வருமாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது:-



என்னுடைய தாய்நாடு இந்தியா!

இந்தியர்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள்!

என்னுடைய தாய்திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்!

என்னுடைய தாய்திருநாட்டில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நான் அரும்பாடுபடுவேன்!

மேலும் நான் இனிவரும் காலங்களில் மனிதர்களுக்கு பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க நான் அரும்பாடுபடுவேன்!

மேலும் நான் இனி வரும் காலங்களில் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாக உறுதி கூறுகிறேன்!

நான் இந்த விழ்ப்புணர்வு பேரணியில் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன்!


இவ்வாறு உறுதிமொழி வாசகம் அமைந்திருந்தது.

நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உறுதிமொழியை முன்மொழிய, அனைத்துப் பள்ளி மாணவர்களும் அதனை வழிமொழிந்தனர். பின்னர், அவர் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.



பேரணியில் பின்வரும் முழக்கங்களை முழங்கியவாறு மாணவர்கள் வீதிகள் வழியாக சென்றனர்:-

தடுத்திடுவோம் தடுத்திடுவோம்!
பிளாஸ்டிக் உபயோகத்தை தடுத்திடுவோம்!!

நம்மால் முடியும் நம்மால் முடியும்!
பிளாஸ்டிக்கை ஒழிக்க நம்மால் முடியும்!!

பிளாஸ்டிக்கை எரிக்காதே!
கேன்சரை உருவாக்காதே!!

உருவாக்குவோம் உருவாக்குவோம்!
பிளாஸ்டிக் இல்லா காயலை உருவாக்குவோம்!!

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!
நீர் வளம் காப்போம்!!

நெகிழி – நெகிழாது!
நிம்மதி கிடைக்காது!!

குடிகுடியைக் கெடுக்கும்!
பிளாஸ்டிக் எல்லாவற்றையும் கெடுக்கும்!!

நீர்வளம் காக்க!
பிளாஸ்டிக்கை வெறுப்போம்!!

பிளாஸ்டிக் உபயோகம்!
கேன்சர் உருவாக்கம்!!


இவ்வாறு முழக்க வாசகங்கள் அமைந்திருந்தது.



நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி மாலை 05.45 மணியளவில் நகர்மன்ற வளாகத்தை வந்தடைந்தது. இடையிடையே பொதுமக்கள் அதிகமாகத் தென்படும் இடங்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் விழிப்புணர்வுரையாற்றினார்.







பேரணியின் நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.) [12 December 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14390

இந்த ஊர்வலத்தில்..... கலந்துகொண்ட அணைத்து பள்ளி மாணவர்கள், மற்றும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:...
posted by Mohmed Younus (Trivandram) [12 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14395

பிளாஸ்டிக் பொருள்கள் நம் வாழ்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்ட சூழ்நிலையில்,சமீப காலமாக பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுக்க தொடக்கி உள்ளன. அகில உலக அளவில், சுற்ற்புரசூல ஆர்வலர்கள் இதற்காகவே இயக்கம் நடத்தியும் உள்ளனர்.

கடலின் அடியில் 90 சதமான் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் என்று ஆய்வறிக்கை கூறுகின்றன. பிளாஸ்டிக் எரிப்பதினால் ஏற்பாடு வாயுக்களில் இருந்து புற்று நோய் ஏற்படுகின்றது என்பது மருத்துவ ரீதியிலான உண்மையும் கூட.

ஆனால்,நம் வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்ட இந்த பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு வெறும் போராட்டங்களும், கோசங்களும் போதாது. இதில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்துதான் நம் அனைவரும் விழித்து கொள்ளாமல்,இதை எளிதில் அகற்ற முடியாது.

இந்த செய்தியை கவனிக்கும் பொது, 20 வருடங்களுக்கு முன்பு இறைச்சி வாங்க பனை ஓலையயும், அதனால் வேயப்பட்ட பெட்டியும் யாபகம் வருகின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:...
posted by Seyed Mohamed Seyna (Bangkok - Thailand ) [12 December 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 14411

ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு ஒரு அருமையான ஆரம்பம் அதும் பள்ளி கூட மாணவர்களை வைத்து, மாணவர்கள் நினைத்தால் எதிலும் வெற்றி பெற முடியும் இந்த விழிப்புணர்வு வில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்,

இது போன்று சுத்தம் , சுகாதாரம் பற்றி ஒரு விழிப்புணர்வு வைத்தால் நமது காயல் இன்னும் ஆளாக இருக்கும், வீட்டின் உள்ளே இறந்து குப்பையை ரோட்டில் வீசுவது தடுக்க படும் ,

Mhamed Younus காக்கா வின் கமெண்ட்ஸ் எனக்கு நிறைய நியாபக படுத்துது ,

பனை மரம் :

பனை ஓலை கரி பட்டைகு உபோகைய படுத்த பட்டது பிறகு வெந்நீர் அடுப்புக்கு உபோகைய படுத்தி , அதன் சாம்பல் கருவபிள்ளை மரத்துக்கு ஓரமாக உபோகைய படுத்த பட்டது , இன்று உபோகயாக படுத்த பாடும் ப்லாசடிக் பை , கரி வங்கி விட்டு பிறகு ரோடில் போடுவது, மண்ணை தோண்டி போதைது நீலதடி நீரை தான் நசமகுது,

பனை மரத்தின் உபயோகங்கள் எனக்கு நினைவில் தேரின் தா வரை :

1 கரி பட்டைக்கு உபோகைய படுத்த பட்டது
2 விசிறி
3 பல போட்டி
4 ஓலை பாய்
5. நாறு கட்டில்
6 சொளவு
7 கருக்கு மட்டை
8 சரா கம்பு
9 கா ஓலை

இப்படி நிறைய இருக்கு , ஆனால் இன்றைய சமுதாயத்துக்கு பனை மரத்தின் தேரிந்தது

1 பதநீர்
2 குருத்து
3 . ஓலை paie
4. சொளவு
5 நாறு கட்டில் மட்டும் தான் ,

இதை தாங்கள் தெரிய வேண்டும் என்றல் உங்குடைய பெற குழந்தைகளை கேட்டு பாருங்கள் , உண்மை நிலை தெரிய வரும் ,

இந்த கம்மேன்ட்சை படிக்கும் ஒவருவரும் அன்று எப்படி இருந்தது காயல் என்று நியாபக படுத்துங்கள் ,

இன்னும் சொல்ல போனால் ,

அன்று ஒவொரு தேறு உக்கும் ஒரு நாராயண ஓடை இருந்தது , குப்பை வண்டி வீட்டுக்கு பின் புரத்தின் வழியாக சென்று குப்பை யை அல்ல , அன்றை குப்பை வண்டி ஒரு தகர மட்டு வண்டி , இன்றும் நகராட்சியில் இருக்கும் என்று நினைக்கிரெய்ன் , அன்றைய நாராயண ஓடை இன்று என்ன வகி விட்டது தேறி மா, அந்த நிலத்து காரர்கள் 2 அடி, இந்த நிலத்துகாரர் 2 அடி அபகரித்து விட்டார்கள் ,

இந்த நாராயண ஓடை மாநகராட்சி உட்பட்டது, அன்றைய நமது முனோர்கள் சுகாதாரமாக வாழ்ந்தார்கள் சுகதரத்தை பிள்ளைகளுக்கு கற்று குடுத்தார்கள், இன்று நம் சமுதயதினற்கு சீரியல் பார்க்க நேரம் சரியாக இருகின்றது ,

இவ்வாறு நம் காயல் சென்றால் , கான்செர் மாட்டும் இல்லை , இன்னும் பல கொடிய நோய் கள் தாக்கும் இதுல இருந்து எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் காப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

இப்படிக்கு
Seyed Mohamed Seyna
Kayal Ikiya Mandram - Bangkok -Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [12 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14414

பிளாஸ்டிக் உடைய கொடுமை என்ன என்று தெரிந்தால் கண்டிப்பாக மக்கள் உபயோகப்படுத்த மாட்டார்கள்.

அதற்க்கான இந்த விழிப்புணர்வு பேரணி நடத்திய அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள். தாங்கள் நடந்து செல்லும் சாலையின் (ரோட்டின்) தரத்தையும் கொஞ்சம் கவனியுங்கள்.(போட்டோ 3, 4, 5 ஆகியவற்றை நோக்குங்கள்).

சகோதரர்கள் பனை ஓலையில் கறி வாங்கின சம்பவங்களை நினைவுபடுத்தினார்கள். நன்றிகள்.

நானும் சிறுவனாக இருந்த சமயம் பனை ஓலை பட்டையில் கறி வாங்கி வரும் போது, ஒரு கழுகு (அதான் கல்லாப்பருந்து) ஒட்டு மொத்த கறியையும் அடித்துக்கொண்டு போக, கம்மாவிடம் மொத்து வாங்கின ஞாபகங்கள்.

இன்னும் அந்த பருந்தை தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன்..ஓஹ்..செத்து போயிறுக்கும்லே...

பனை ஓலை மட்டையில் கறி வாங்கி வந்தால் அது கிடாக்கறி, பனை ஓலை பெட்டியில் வாங்கி வந்தால் அது மாட்டுக்கறி(மறைத்து மறைத்து தான் கொண்டுவருவார்கள் பொட்டிக்கறியை)...எல்லாம் அந்த காலம்..சுகமான காலம்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:...
posted by N.T.SULAIMAN (YANBU) [12 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14419

பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு நிச்சயமாக நமது மக்களின் ஊர்வலம் மூலமாக வெற்றிபெறும் .நமது நகராட்சி மன்றதின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.நமது ஊர் மக்கள் கண்டிப்பாக செயல் வடிவில் கொண்டுவரவேண்டும் .வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:...
posted by Vilack SMA (Yi Li , Hetang) [13 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 14420

மாணவர்களின் இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி , நல்ல ஒரு ஏற்பாடு .

பொதுவாக இந்த வலைதளத்தில் , விருந்துகள் பற்றிய செய்திகள் வரும்போது , காயல் பாரம்பரியமான கரிகஞ்சி , களறி சாப்பாடு , போன்றவைகள் பரிமாறப்பட்டது என்றெல்லாம் வரும் . ஆனால் அசல் பாரம்பரியமான " கலய தண்ணீர் " இருக்காது . நகரில் இப்போது நடக்கும் விழாக்கள் , விருந்துகளில் இந்த " அசல் பாரம்பரியம் " இல்லாமல் , " பாக்கெட் தண்ணீர் " என்ற நவீன பாரம்பரியம் மேலோங்கி விட்டது . " கலய தண்ணீர் " கலாச்சாரம் மீண்டும் வருமா நமதூருக்கு ?

அப்புறம் , சாளை ஜியா பாய் , நீங்க எப்பவுமே , " கம்மா தேங்கா வாங்க சொன்னா , கம்மா கறி வாங்க சொன்னா " னு கம்மா புராணமே பாடுறீங்களே ! உங்க உம்மா எதுவும் வாங்க சொல்ல மாட்டாங்களா ?

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கம்மா புராணம்
posted by சாளை S.I.ஜியாவுதீன், (அல்கோபார்) [13 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14435

சகோ. விளக்கு SMA (அலி) அவர்களே, உங்களின் கூற்று சரிதான்.

பழைய காலங்களில் பெரும்மா (பெரியம்மா). சாச்சி, மாமா ஆகியோரின் குடும்பங்கள் எல்லாம் ஒன்றாக, ஒரே குடும்பமாக, ஒரே சமையலாக, ஒரே தலைமையின் கீழ் (கம்மாவின்) வாழ்ந்து வந்தோம்.

காலையில் மாட்டிலிருந்து பால் கறப்பது முதல், இரவு அனைவர்களுக்கும் லரபுடன் அதான் அடியுடன்.. குரான் ஓதிக்கொடுத்து, அனைவர்களையும் தூங்க வைப்பது வரை கம்மாதான். (வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்).

இது மாதிரிதான் நம் ஊரில் அதிகமான குடும்பங்கள் இருந்தன.

இன்றோ மாடும் கிடையாது, கம்மாவும் கிடையாது.

அடியும் கிடையாது, வீடுகளில் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுப்பதும் கிடையாது (சில வீடுகள் உள்ளன).

பெரிய வீட்டில் குறுக்கு குறுக்காக சுவர்கள் கட்டி பெரும்மா, சாச்சி, லாத்தா என்று பிரிந்து வாழ்கிறார்கள், மனதிலும் கூட.

சோ, சகோதரரே கம்மா புராணம் பாடுவது சரிதானே..

அனைத்து கம்மாக்களுக்கும் வல்ல ரஹ்மான் சுவனத்தை கொடுக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:...
posted by Ruknudeen Sahib (China) [13 December 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 14439

அஸ்ஸலாமு அலைக்கும் நம் நகர் மன்றம் மற்றும் நம்மூர் பள்ளி மாணவர்களின் இந்த சிறு முயற்சியால் இன்ஷா அல்லாஹ் நம் நகரின் பிளாஸ்டிக் உபயோகம் குறையும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

அல்லாஹ் நம் எல்லோருக்கும் ஈருலக பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் இதமழை!  (13/12/2011) [Views - 3459; Comments - 2]
இன்றிரவிலும் கனமழை!  (12/12/2011) [Views - 2994; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved