Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:49:11 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7621
#KOTW7621
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 27, 2011
அமைதியாக நடந்து முடிந்தது நகர்மன்ற மாதாந்திர கூட்டம்! தத்தம் பகுதிகளுக்கான நலத்திட்டங்களுக்கு உறுப்பினர்கள் கோரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4212 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர - சாதாரண கூட்டம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று காலை 11.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.







இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகரின் 18 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு, தத்தம் வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய நலத்திட்டப் பணிகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.







அக்கோரிக்கைகளில் சில உடனடியாகவும், மற்றவை பரிசீலனைக்குப் பின்பும் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது.



நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நகர்நலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள நடைமுறை சாத்தியங்கள் குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி ஆகியோர் கூட்டத்தில் விளக்கமளித்தனர்.



கூட்டத் துளிகள்:

*** 01ஆவது வார்டு உறுப்பினர் லுக்மான், தனது கோரிக்கை மனுவில் “கடையக்குடி என்ற கொம்புத்துறை” என்றே குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால் வெறுமனே “கொம்புத்துறை” என்று மட்டுமே கூட்டப் பொருள் மடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இனி வருங்காலங்களில் இத்தவறுகள் முற்றிலும் திருத்தப்பட்டு, ஆவணப் பெயர் அடிப்படையில் “கடையக்குடி” என்றே குறிப்பிடுமாறும், “கொம்புத்துறை” என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதுபோல, “கற்புடையார் பள்ளி வட்டம்” என்றே குறிப்பிடுமாறும, அதனை “சிங்கித்துறை” என்று குறிப்பிட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

*** 02ஆவது வார்டு உறுப்பினர் முஹம்மத் செய்யித் ஃபாத்திமா தன் பகுதி கோரிக்கைகள் குறித்து குறிப்பிடுகையில், ஏற்கனவே கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டப் பணிகளுக்காக நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

அதனைக் கேட்ட நகர்மன்றத் தலைவர், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளுக்காக முதன்முதலாக நன்றி தெரிவித்தமைக்காக அவரைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

*** 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, தனது வார்டிலுள்ள தனியார் நிலத்தில் உள்ள குப்பை மேடு காரணமாக பல்வேறு சுகாதாரக் கேடுகள் நிறைந்து, சுற்றுவட்டாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதனை நகராட்சி அப்புறப்படுத்தித் தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய 03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள், அது இரு தரப்பினரிடையே உள்ள பிணக்கு காரணமாக வழக்கு நிலுவையில் உள்ள பிரச்சினைக்குரிய இடம் என்றும், அங்கு நகராட்சி எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் முறையிட்டார்.

அதனை மறுதலித்துப் பேசிய கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, பிணக்கில் உள்ள அவ்விரு தரப்பினரிடமும் தான் பேசியுள்ளதாகவும், சுற்றுவட்டாரத்தில் சுகாதாரக் கேடு ஏற்பட்டால் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில், அவ்விடத்திலுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் இரு தரப்பினரும் தெரிவித்த பின்னரே தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும், இந்த விபரங்களை மறைத்துவிட்டு, பணிகளை மேற்கொள்ளக்கூடாது என யாரும் வெறுமனே மறுத்துப் பேச வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உறுப்பினர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நகராட்சி சார்பில் அவ்விடத்திலுள்ள குப்பைகளை அகற்றி, இனி குப்பைகள் போடப்படாதிருக்க எச்சரிக்கைப் பலகை நிறுவப்படும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தெரிவித்தார்.

*** நகர்மன்றத் தலைவரின் நகருக்குப் பொதுவான 16 கோரிக்கைகளில், காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகிலுள்ள - சேதமடைந்து, பயன்பாடற்று ஆபத்தான நிலையிலும், பல்வேறு சமூக விரோத செயல்களுக்குக் களமாகவும் உள்ள பெண் பயணியர் தரிப்பிட கட்டிடத்தை இடித்துக்கட்ட முன்வைக்கப்பட்ட கோரிக்கை தவிர மற்ற கோரிக்கைகளை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அந்த பயணியர் தரிப்பிட கட்டிடம் குறித்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர், அந்த நிழற்குடைக்கு கீழ்ப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் அஞ்சலக கட்டிடம் அமைந்துள்ள மட்டத்தின்படியே உள்ளதாகவும், நிழற்குடைக்கு மேற்பகுதியிலுள்ள கட்டிடங்கள் நிழற்குடை அமைந்துள்ள மட்ட அளவுக்கு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக அறிவதாகவும், தேவையற்ற ஆக்கிரமிப்பிற்கு நகராட்சியே காரணமாகி விடக்கூடாது என்ற அடிப்படையில், அவ்விடத்திலுள்ள நிழற்குடையை அகற்றலாமே தவிர இடித்துக் கட்டுவது அவசியமற்றது என்று தெரிவித்தார்.

அதனை மறுத்துப் பேசிய பல உறுப்பினர்கள், நிழற்குடைக்கு மேற்பகுதியிலுள்ள கட்டிடங்களும் பெரும்பாலும் சரியான அளவிலேயே கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதுபோல, 04ஆவது வார்டு உறுப்பினர் முன்வைத்த குப்பை மேடு பிரச்சினை தனது வார்டையும் உள்ளடக்கியது என்றும், இப்பிரச்சினையை தனியார் நிலம் என்றோ, வழக்கு நிலுவையில் உள்ளது என்றோ பாராமல், அதனால் ஏற்படும் தீங்குகளால் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைவருக்கும் உயிரளவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் அக்குப்பை மேட்டை அகற்ற வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமை என உறுப்பினர் ஜஹாங்கீர் வலியுறுத்திப் பேசினார். இரண்டு உறுப்பினர்கள் இக்கோரிக்கையை இணைந்து வைத்ததும், அதன் விளைவை அறிந்துகொண்ட பல உறுப்பினர்கள் அவர்களின் கோரிக்கையை வழிமொழிந்தனர். அதன்பிறகே, நகராட்சியின் சார்பில் அக்குப்பை அகற்றப்பட்டு எச்சரிக்கை பலகை நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டது.

*** 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், குடிநீர் வினியோகத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் சித்தன் தெரு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றை அமைத்துத் தருமாறும், நகராட்சி மூலம் அமைக்க இயலாத நிலையில், தனக்கு வேண்டப்பட்ட தனியார் மூலம் அமைத்துத் தருவதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

*** 07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி, அண்ணா நகரிலிருந்து (கற்புடையார் பள்ளி வட்டம் என்ற) சிங்கித்துறை வடபகுதி வரை உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகளை புதிதாக அமைத்துத் தருமாறு கோரினார்.

அதனை மறுத்துப் பேசிய பல உறுப்பினர்கள், அண்ணா நகர் என்று சொல்லப்படும் அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு சுனாமி நகரில் புதிதாக குடியிருப்புகள் அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும, ஆனால் அம்மக்கள் தாம் ஏற்கனவே இருந்த இடத்தை இன்னும் காலி செய்யாமல் இருப்பதாகவும், எனவே அவ்விடத்தில் புதிதாக விளக்குகள் எதுவும் அமைக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.

அதனை மறுத்துப் பேசிய உறுப்பினர் அந்தோணி, அவ்விடத்தில் அனைத்து சமுதாய மக்களுமே ஆக்கிரமித்து அமர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்து குடியிருப்போர் விஷயத்தில் எந்த சமுதாயம் என்று பார்க்கத் தேவையில்லை என்றும், சட்டம் அனைவருக்கும் பொதுவானதே என்றும் அப்போது உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

*** 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், தனது வார்டில் உள்ள குறைகளை நகர்மன்றக் கூட்டத்தில் ஆதாரத்துடன் குறிப்பிட்டுப் பேசும் வகையில், தான் சுட்டிக்காட்டும் குறைகளுக்கான வண்ணப் பட ஆதாரங்களை தலைவர் பார்வைக்கு முன்வைத்தார். அதனை அனைத்து உறுப்பினர்களும் பாராட்டினர்.





*** 09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பயன்கள் கிடைக்கச் செய்யும் வகையிலும் நகர்மன்ற செயல்பாடுகள் அமைய வேண்டும் என்ற தனது கோரிக்கை குறித்து உரையாற்றுகையில், அதனை மறுத்துப் பேசிய நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மக்கள் நலப் பணிகளை செய்ய முடியாத அளவுக்கு தேவையற்ற கேள்விகள் கேட்கப்படுவது வழமையாக உள்ளதாகவும், இச்சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க என்றே ஒருவரை பணியமர்த்த வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே இது விஷயமாக இக்கூட்டத்தில் ஒன்றும பேச வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

*** கூட்ட நிரல் பொருள் எண் 16இல், “05ஆவது வார்டு உறுப்பினர் திரு. ஜலால்” என்று உள்ளது “திரு. ஜஹாங்கீர்” என்று திருத்தப்பட்டது.

*** 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், “சிங்கித்துறை”, “கொம்புத்துறை” என்ற சொற்பயன்பாடுகளுக்கு தனது வலுவான ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

*** 15ஆவது வார்டு உறுப்பினர் ஜமால், தனது கோரிக்கைகள் குறித்து பேசும்போது, தூய தமிழில் உரையாற்றினார். கூட்டம் துவங்கி வெகுநேரம் ஆகிவிட்டதால், நீண்ட நேரம் அவர் முன்னுரை வழங்குகையில், கோரிக்கை குறித்து விரைவாகப் பேசுமாறு உறுப்பினர்கள் அவரைக் கேட்டுக்கொண்டதையடுத்து, தனது உரையை அவர் சுருக்கிக்கொண்டார்.

*** 16ஆவது வார்டு உறுப்பினர் சாமு ஷிஹாபுத்தீன் என்ற தைக்கா சாமு, அஞ்சலகம் அருகிலுள்ள பெண்களுக்கான பயணியர் தரிப்பிடம் ஏற்கனவே அரிமா சங்கத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டதுதான் என்றும், ஒருவேளை அதை இடித்துக்கட்ட தீர்மானித்தால், தான் சார்ந்துள்ள அரிமா சங்கத்தின் மூலமே மீண்டும் அதைக் கட்டித்தர ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

*** உறுப்பினர்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவது, இரண்டாவது பைப் லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவது, புதிய சாலைகள் அமைப்பது, பழைய சாலைகளை சரிசெய்வது குறித்தே அமைந்திருந்தன.

*** காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 20 பேர் கூட்ட நிகழ்வுகளை வெளியரங்கிலிருந்து சாளரம் (ஜன்னல்) வழியாக பார்வையிட்டனர்.



*** மதியம் 02.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் கலைந்து சென்றனர். பின்னர், சிறிது நேரத்தில் குடிசை மாற்று வாரியத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளதாகவும், அவர்களிடம் மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேச வேண்டும் என்றும் ஆணையர் (பொறுப்பு) கண்ணையா கேட்டுக்கொண்டதற்கிணங்க கலைந்து சென்ற நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் மீண்டும் கூட்ட அரங்கில் வந்தமர்ந்தனர்.

அவர்களிடம் பேசிய குடிசை மாற்று வாரியத்தினர், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அரசால் கட்டப்பட்டு வரும் சுனாமி குடியிருப்பு குறித்த நிலுவையில் உள்ள வழக்கு குறித்து நகராட்சியின் நிலை என்ன என்று கேட்டனர்.



அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அது பழைய தலைவர் தொடுத்துள்ள வழக்கு என்றும், அது குறித்த எந்த விபரமும் இதுவரை தன்னால் பெறப்படவில்லை என்றும், விபரங்கள் எதுவுமில்லாத நிலையில் எந்தக் கருத்தும் இதுகுறித்து தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். உறுப்பினர்கள் பலரும் அதனை அங்கீகரித்துப் பேசிதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் விடைபெற்றுச் சென்றனர்.

*** மதியம் 03.00 மணியளவில் கூட்டம் முற்றிலுமாக நிறைவுற்றது.

*** கூட்டம் நடந்துகொண்டிருக்கையிலேயே பல உறுப்பினர்கள், லுஹர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக இடையிடையே வெளிச்சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

படங்களில் உதவி:
மாஷாஅல்லாஹ் டிஜிட்டல்,
பிரதான வீதி, காயல்பட்டினம்.


செய்தியில் சில வாசகங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. (27.11.2011 - 16:55hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சும்மா எதையாவது பேச வேண்டும் என்பதற்காக கட்டிட உரிமையாளரின் மனவருத்தத்திற்கு ஆளாக கூடாது...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13818

தபால் நிலைய நிழற்குடைக்கு மேற்பகுதியிலுள்ள கட்டிடங்கள் நிழற்குடை அமைந்துள்ள மட்ட அளவுக்கு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக அறிவதாகவும், தேவையற்ற ஆக்கிரமிப்பிற்கு நகராட்சியே காரணமாகி விடக்கூடாது.. என்று 5 ஆம் வார்டு உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் நகரமன்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார் இவர் எந்த ஆதாரத்தை அறிந்து அந்த கட்டிடத்தை ஆக்கிரமிப்பு என்கிறார்.. ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக (S J M மெடிக்கல் எதிர்புறம்) அவர் சொல்லும் அந்த கட்டிடம் ஹைவே டிபார்ட்மேண்டுக்கு தெரியாதா..? தெரிந்தால் சும்மா விட்டு வைப்பார்களா..?

சும்மா எதையாவது பேச வேண்டும் என்பதற்காக கட்டிட உரிமையாளரின் மனவருத்தத்திற்கு ஆளாக கூடாது... ஹலாலாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஹராமாக பிறர் மணம் நினைக்க தோன்றும் எதை பேசினாலும் பேசும் நபர் ஆதாரத்தோடு பேசுவது சபை நாகரீகம் ஆகும்.. தம்பி ஜகாங்கீர் வயதில் சிறியவர் நிறைய அனுபவம் தேவை என அவரின் அறியா பேச்சின் மூலம் அறிய முடிகிறது இனி நடக்கும் நகரமன்ற கூட்டங்களில் உண்மையை அறிந்து ஆதரத்துடன் பேசுவது சிறந்தது...

தபால் நிலைய நிழற்குடையில் என்ன அசிங்கங்கள் நடைபெறுகிறது நான் தினமும் கவனித்து வருகிறேன்.. சில நபர்களை இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள், சைக்கிள் மற்றும் பைக் நிறுத்தாதீர்கள் இந்த நிழற்குடை பெரியவர்கள், பெண்கள் குழந்தைகள் அமரும் பயணிகளுக்குரிய இடம் என குடிகாரர்களிடம் சண்டை போட்டு இருக்கிறேன்..

சமீபத்தில் இந்த இணைய தளம் இந்த நிழற்குடையின் அசிங்கங்களை புகை படத்துடன் (ஒருவர் மது அருந்தி மயக்கத்தில் தன் நிலை மறந்து அசிங்கமாக ஆடைகள் விலகி படுத்து கிடப்பதை) செய்தி வெளியட்டு இருந்தது குறிப்படத்தக்கது..

கண்டிப்பாக இந்த நிழற்குடை சீரமைக்க பட வேண்டும்..! அதற்க்கு ஜகாங்கீர் அவர்களே தயவு கூர்ந்து தடையாக இருக்காதீர்கள்... இது எனது தாழ்மையான வேண்டுகோள்.. அனைவர்களின் வேண்டுகோலும் இதுவாகவே இருக்கும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அமைதியாக நடந்து முடிந்தது...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [27 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13821

அருமையாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்த நகரமன்ற கூட்டத்திற்கு பாராட்டுக்கள்.

சகோ. KVAT ஹாஜரா அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றனும்.

- மலை போல குப்பை மேட்டை வைத்துக்கொண்டு, கொசுக்கு மருந்து புகை அடிப்பது... பிரயோசனம் உண்டா..புரியவில்லை.

- பயணிகள் நிழல்குடை கண்டிப்பாக அங்கு தேவை. பெண்களையும், குழந்தைகளையும் மதிய வெயிலில் பஸ்சுக்காக காத்து இருந்தால் அதன் அருமை புரியும்.

- குத்துக்கல் தெருவில், மொகுதூம் பள்ளி வளாகத்தில் நீநீநீநீண்ட நாட்களுக்கு முன்பே கட்டிமுடிக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தொட்டி, என்று, எப்போது அதன் கடமையை செய்யுமோ தெரியவில்லையே...

- படத்துடன் பிரச்சனைகளை கொண்டு வந்த அம்மா. பெத்தாதாய் அவர்களுக்கு நன்றிகள். நகரமன்றத்தின் அருகிலேயே மூன்று மரணக்குழிகள் இருக்கின்றனவே, அதற்க்கு விடிவு காலம் என்றோ..

- எல்லாம் ஒன்று ஒன்றாக செய்வார்கள்.... வெயிட் பண்ணுவோம்... இன்ஷாஹ் அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அமைதியாக நடந்து முடிந்தது...
posted by PS ABDUL KADER (jeddh) [27 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13824

4 வது வார்டு உறுப்பினர் கோரிக்கைக்கு.3 வது வார்டு உறுப்பினர் குறுக்கிட்டு பேசுவது கண்டனடக்குறியது. சுட்டு புற சுழல், சுகதரம் நலன் கருதி, குப்பையை சுத்தி வாழும் மக்களின் முழு ஒத்துழைப்பு கோரிக்கை. இது உறுப்பினர் தனிப்பட்ட கோரிக்கை அல்ல. அணைத்து உருப்பினர்கலும் அவர் அவர் வார்டுக்கு ஆக்க பூர்வ தேவையை மட்டும் பேசி மக்களுக்கு பணியாட்ட முன் வரவும். வேருவார்டு விசியத்தில் தலையிட தேவை இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அறிஞர்களும் , சான்றோர்களும்........
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [27 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13825

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் அமைதியாக நடந்ததற்கு வாழ்த்துக்கள்.

கூட்டத்தை நேரில் சென்று காணாவிட்டாலும் இந்த செய்தியின் மூலம் படங்களுடன் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது - தெளிவாகவே தெரிகிறது ஒவ்வொரு உறுப்பினரும் உற்சாகமாக உரையாடியிருப்பது.
------------------------------------------
இது உங்கள் குடும்பம் :

நகர்மன்ற அங்கத்தினர்களே இது உங்கள் குடும்பம் உங்களுக்குள் கருத்து பரிமாற்றங்கள் காரசாரமாக அதே நேரத்தில் கண்ணியமாக சபை மரபுகள் மீறாமல் நடக்கட்டும் அப்போதுதான் நல்லவைகள் பலவும் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! உங்கள் அனைவருக்கும் உற்சாகமாக சேவைகள் செய்ய ஆற்றலை கொடுத்தருள்வானாக ஆமீன்.
------------------------------------------
வேண்டுகோள் :

நகர்மன்ற கூட்டத்தினை காண வரும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் இப்படி கையைக்கட்டிக் கொண்டு நின்ற நிலையில் நிற்க வைப்பது நாகரீகமாக தெரியவில்லை.

கூட்டம் நடத்த இடவசதி இல்லை என்று நினைக்கிறேன்! - அதே நேரத்தில் பொது மக்களும் கூட்டத்திற்கு வந்து பார்வையிட்டு சபை நடப்புகளை தெரியவும் வேண்டும் என்ற எண்ணம் உங்கள் அனைவருக்கும் இருக்கும்.

ஆகையால் கூட்டம் நடத்த வசதியான ஓர் இடத்தை ஏற்படுத்தி - நீங்கள் அனைவரும் வட்டமாக உட்கார்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவதற்கு தோதுவாகவும் - அதே நேரத்தில் பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஓர் ஓரமாக 25 அல்லது 20 இருக்கைகள் அமைப்பதற்கும் வசதிகள் செய்வது நல்லது.

அப்படி பார்வையாளர்களுக்கு இருக்கை வசதிகள் செய்தால் அறிஞர்களும் , சான்றோர்களும் பார்வையாளர்களாக வந்து செல்வார்கள் - அதன் மூலம் பல இன்னல்கள் களையப்படும் - நல்லவைகள் நடைபெறும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அமைதியாக நடந்து முடிந்தது...
posted by M.N.Sulaiman (Bangalore) [27 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13828

அன்பார்ந்த நகர்மன்ற உறுபினர்களே,

நாம் யாவரும் சகோ. KVAT முத்து ஹாஜரா அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்னும் போர்கால அடிப்படையில் அக்குப்பை மேட்டை அகற்றிட வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நம் அனைவரும் அறிவோம். இன்னும் ஏன், மழை காலங்களில் இப்பகுதி மக்கள் பெரும் அவதியை சொல்லி மாளாது.....

இதற்கு முன்னர் இருந்த பல உறுபினர்களும், ஏதாவது காரணத்தை காட்டி இக்குப்பை மேட்டை அகற்றும் பணியை கைவிட்டனர். ஆனால் தற்சமயம் சகோ. முத்து ஹாஜரா அவர்கள் இதற்காக முழு முயற்சிடன் பாடுபடுவது பாராட்ட தக்கதே............ தவிர நில பிரச்னை அது இது என்று கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நகராட்சி சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என இப்பகுதி மக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் காத்திருகின்றனர்.

மேலும், ஆதாரங்களுடன் வந்து தன் வார்டு பிரச்சனைகளை எடுத்து கூறிய 8 ஆம் வார்டு உறுப்பினர் ஜனாபா. பீவி பாத்திமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் & சபாஷ்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அமைதியாக நடந்து முடிந்தது...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [27 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13829

சுனாமி குடிஇருப்பு விசயமாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நம்முடைய பல்ஸை பிடித்து பார்க்க வந்து இருக்கிறார்கள். தலைவர் மற்றும் மெம்பர்கள் சாதுரியமாக பதில் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். மிக்க நன்றி. கடந்த நகர்மன்றம் தீர்மானம் போட்டு அதன்படி வழக்கு நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் வீக்காக இருப்பதினால் நம்மை கெஞ்சுகிறது போல் தெரிகிறது. உசாராக இருக்கவும்.

2 . அண்ணா நகர் என்று நமது கடற்கரை வட பகுதியில் தெரு விளக்கு வேண்டும் என்று திரு அந்தோனி கோரிக்கை எழுப்பி இருக்கிறார். அங்கே குடி இருந்த அனைவருக்கும் சுனாமி நகரில் வீடு இருக்கிறது. சுனாமி நகரில் குடி பெயர்ந்த சிலர்கள் இங்கே தங்கள் குடிசைகளை வாடகைக்கு விட்டு இருகிர்ரர்கள்.

நான் அறிந்து சகோதரி ஒருவரே மாதம் ஒன்றுக்கு 150 கொடுத்து குடிஇருந்து வருகிறார். இவருக்கு குடிசை வாடகைக்கு கொடுத்தவர் சுனாமி குடிஇருப்பில் வீடு பெற்று வசித்து வருகிறார். இது ஒரு உதாரணம்தான். இது போன்று வாடகைக்கு விட்டு சுனாமி குடி இருப்பில் வசிபவர்களை அடையாளம் கண்டு துரிதமாக கடற்கரை வட பகுதியை காலி செய்ய நமது நகர சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:அமைதியாக நடந்து முடிந்தது...
posted by T.M.RAHMATHULLAH (72) 27-11-2011 (KAYALPATNAM 04639 280852) [27 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13832

அஸ்ஸலாமு அலைக்கும்!

".SO FOR SO GOOD " எனும் ஆங்கில பழமொழிக்கேற்ப நடந்து முடிந்த கடந்த நகராட்சி கூட்டம் திருப்தியாக முடித்த உறுப்பினர்களுக்கும் முடித்து வைத்த தலைவி யாருக்கும் அத்தனைக்கும் உதவிசெய்த வல்ல அல்லாஹுவுக்கு முதற்கண்முறையாக காயலர்கள் சார்பாக நன்றியை கூறுகிறோம். அல்ஹம்து லில்லாஹ் வஷ்ஷுக்ரன் லில்லாஹ். இனி வரும் காலங்களில் “முதற்கோணல் முற்றும் கோணல் ”என்ற தமிழ் பழமொழி போலல்லாமல் சீராகவும், சிறப்பாகவும் கூட்டங்கள் நடக்க வேனும் என்று ஆசைப்பட்டால் , இதோ சில பிரார்த்தனை சுலோகம். This my presentations

“அல்லாஹும்ம அல்ஹிம்னா மறாஷித உமூறினா வ அ இதுனா மின் ஷுரூரி அன்ஃபுஸினா வமின் ஸையி ஆத்தி அஃஉமாலினா “

அதன் தாத்பரியமும் பலணும் அநேகம் இருக்கிறது.


இதன் பொருளின் கருத்தாவது:-

இறைவா நாங்கள், எங்களுடைய காரியங்களை நேர்வழியில் நடத்தாட்ட எங்களுக்கு நேரான யோசனையை தருவாயாக, மேலும் நாங்கள் நேர்மையற்ற செயல்களை செய்யும், (செய்ய வைக்கும்) கெட்ட உசாட்டங்களைக் கூட எங்கள் மனதில் ஏற்படாமல் கப்பாற்று வாயாக. ஆமீன்.

இந்த துஆ வை நமதூரின் எல்லாஅ பொது சன்மார்க்க ஸ்தாபனங்களிலும் கடை, வீடு முதலான இடங்களிலும் எல்லாகாரியங்களுக்கும் பின்பற்றி வெற்றியுடன் அனுபவித்துவரும் அழகான மந்திர (கலிமாவின்) சுலோகமாகும். மேலும் தகவலுக்கு ௦04639-280852 க்கு அனுகவும்.

ஒரு நம்பிக்கைக்காக கீழ் வரும் திருக்குற்ஆன் தருகிறேன்:- 3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அடிப்படை வசதியாகிய சுகாதாரத்திற்கு போராடும் K.V.A.T. முத்து ஹாஜரா!!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [27 November 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13836

அஸ்ஸலாமு அழைக்கும்.

4 வது வார்ட் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் உறுப்பினரின் தேர்தல் வாகுரிதியுடன் அடிப்படை வசதியாகிய சுகாதாரத்திற்கு குப்பைகளை அகற்றிட போராடும் வீர மங்கை K.V.A.T. முத்து ஹாஜரா அவர்களுக்கும் அன்பு சகோதரர் காயல் இளைய தளபதி ஜகாங்கீர் அவர்களுடன் ஆதரித்த மாமன்றத்தின் அணைத்து உறுப்பினர்களுக்கும் 4 வது வார்டு மக்கள், தனியார் நிலத்தின் வழக்குகளின் கட்சிக்காரர்களின் ஒரு கட்சி குடும்பத்தார்களின் சார்பாகவும் வாழ்த்துகளை மனமார வழங்குகிறோம்.

அன்பான எதிர்க்கும் உரிபினர்கலே! தாங்கள் தயவு கூர்ந்து குப்பை மேட்டையும் அதனால் உண்டாகும் தொல்லைகள், பலிகொடுத்த உயிர்கள் அனைத்தும் அறிந்தும் பிரச்சனை உள்ள நிலத்தின் வாதி மற்றும் பிரதி வாதி ஆகியோர்களை K.V.A.T. முத்து ஹாஜரா அவர்களுடன் வந்து நிலைமைகளை அறிந்தால் உண்மைகள் அறியும்.

அன்பான உரிபினர்கலே தாங்கள் அனைவர்களும் தத்தம் வார்டுகளின் முன்னேற்றத்தில் கவனம் செளுதிடுங்கள். வீணாக நல்லதை செய்பவர்களுக்கு முட்டு கட்டையாக இருக்காதீர்கள்.

மாநில முதல்வர் முதல் மாவட்ட ஆட்சி தலைவர் வரை அனைவருமே மிக மிக முக்கியமாக வழி உறுத்துவது சுத்தம், சுகாதாரம். அதன் அடிபடையில் நகர்மன்றம் இந்த குப்பைமேட்டை மிக மிக அவசரமாக காரணம் மழைகளால் மிகவும் இன்னல்கள், காலரா போன்ற வியாதிகள் பரவும் அபாயம் இருப்பதாலும் தனியார் நிலம், வழக்கில் உள்ள நிலம் என்று பாராமல், பறவை காச்சல், சிக்கன் குன்யா போன்ற வியாதிகளை தடுக்க அரசு போர்கால அடிபடையில் எவ்வாறு நடக்குமோ அதைவிட விரைவாக செயல்பட்டு மக்களின் மகிழ்சியான சுகாதாரமான வாழ்விற்கு உதவிடுங்கள்.

அன்பு கமிசினர் [பொறுப்பு] கண்ணையா அவர்களே! தங்களின் அறிவிப்பு பலகையில் மறவாமல் இந்த தனியாருக்கு உட்பட்ட நிலத்தில் இனிமேல் குப்பைகள் போடுபவருக்கு அபராதம் விதிக்க படும் என்று [ குறிப்பாக தனியார் நிலம் என்றும், அபராதத்தை வலியுறுத்தி] போடவும்.

இவன்,
முகியதீன் அப்துல் காதிர்,
ஐக்கிய அமீரக பாராளு மன்றம்.
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Technology has improved so much!
posted by Firdous (Kayalpatnam) [27 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13838

மாஷாஹ் அல்லாஹ்! நகர்மன்ற கூட்டம் இனிதே நடைபெற்றதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி வரும் காலங்களிலும் கூட்டங்கள் இனிதே நடேந்தேரே எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக!

08 ம் வார்டு உறுப்பினர் பீவி பாத்திமா ராத்தவின் presentation அருமை. இனிவரும் காலங்களில் laptop பயன்படுத்தி projector மூலம் presentation செய்து தங்கள் வார்டின் குறைகளை தெரியபடுதினாலும் ஆச்சரியபடுவதர்க்கு இல்லை. Technology has improved so much!

04 ம் உறுப்பினரின் முயற்சி வெற்றி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். மற்ற உறுப்பினர்கள் இதை முன்மாதிரியாக எடுத்துகொண்டு தத்தம் பகுதிகளின் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் தொற்றுநோய்யற்ற ஊராக மாறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவான்.

************************************************************

துணைத்தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!

தயவுகூர்ந்து பொதுமக்களாகிய எங்களின் உரிமைகளில் கைவைக்க முயற்சி செய்யாதிர்கள். தகவல் அறியும் உரிமைச்சட்டம் எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நாங்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை ஒட்டு மற்றும் போடும் எந்திரம் அல்ல. இதன் மூலம் நகர்மன்றத்தில் நடக்கும் செய்திகளை அறிய எங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

உங்களின் துரித (மின்விளக்கு சரிசெய்த) நடவடிக்கைக்கு ஒரு சபாஷ்!

*****************************************************************

பார்வையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் சந்தோசத்தை தருகிறது. உறுப்பினர்களும் பொது மக்கள் கூட்ட நிகழ்வுகளை கவனிக்கிறார்கள் என்று ஆக்கபூர்வமான விசயங்களில் கவனம் செலுத்துவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ?இப்ப நம்ம காட்லெ தான் மழை!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [27 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13842

நகர் மன்றத்தின் நிகழ்வுகள் அனைத்தும் நேரில் கண்ட திருப்தி!வடிவமக்கப்பட்ட வார்த்தை நயங்களையும்.வரிக்கு வரி வாசிக்கத் தூண்டும் விதத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.நம் நகர் மன்றம் ஓர் திறந்த வெளிப் பல்கலைக் கழகமாக மாறிவருவது வரவேற்கத் தக்கதே!!!

குசும்பு:
என்னைக்கியா இப்படி பஞ்சாயத்து பஞ்சாங்கங்களை பகிரங்கமாப் பார்த்தோம்?இப்ப நம்ம காட்லெ தான் மழை!!! பெய்யட்டும்.பெய்யட்டும்...!!! இப்ப சந்தோஷம் தானே...?

-ராபியா மணாளன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. குப்பை இல்லா சுகாதார காயல்
posted by W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை) [27 November 2011]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 13848

குப்பைகள் இல்லா சுகாதார காயல் அமைவதற்கு அடித்தளமாக குறுக்குத் தெரு குப்பைமேட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் 4 வது வார்டு உறுப்பினர் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர். அவரின் நற்பணி தொடரட்டும். அதே சமயம் சுய விருப்பு வெறுப்பிற்காக எதிர்க்கும் உறுப்பினர் மிகவும் கண்டனத்துக்குரியவர்.

ஊர் மக்கள் நலனிற்காக எடுக்கப்படும் திட்டங்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்து செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் "சுகாதார காயல்பட்டணம்" அமையும் காலம் வெகு தொலைவில் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. தொழுகைக்கு கூட்டம் ஒத்திவைக்கப் படவேண்டும்...
posted by S.T.Kader Sulaiman (Kolkata) [28 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 13873

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு சில உறுப்பினர்கள் லுஹர் தொழுகைக்காக சென்று விட்டு வந்திருக்கின்றனர். ஏன் சபையை லுஹர் தொழுகைக்காக ஒரு 20௦ நிமிடம் ஒத்திவைக்கலாமே? தொழுகை முடிந்து எல்லா உறுப்பினர்களும் சபைக்கு வந்த பிறகு கூட்டத்தை மீண்டும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். முடிந்தால் அங்கேயே ஜமாஅத நடத்தினால் ஜமாஅததுடைய நன்மை எல்லோருக்கும் கிடைக்கும். என் கருத்தின் படி நீங்கள் செயல்படுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி
வஸ்ஸலாம்.

S.T.காதர் சுலைமான்
கொல்கத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நகராட்சியில் மறை மாட்சி
posted by Salai Sheikh Saleem (Dubai) [28 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13880

நகராட்சி மன்றத்தின் மாதாந்திர கூட்டம் மிகவும் தரமான முறையில் நடைபெற்றது நம்பிக்கை அளிக்கிறது. மன்ற உறுப்பினர்கள் தொழுகைக்காக கூட்டத்தின் மத்தியில் எழுந்து சென்றது "தொழுகை ஒருவரை தீமையின் பால் நெருங்கவிடாது" என்ற நபி மொழி என்றும் பொய்க்காது என்பதனால் ஊழலற்ற நிர்வாகம் என்ற ஒரு நம்பிக்கை ஒளி எங்கோ தெரிகிறது.

பங்காளிகள் சண்டை என்பதனால் குப்பை மேட்டை கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது. அதேபோல், ENCROACHMENT டாக இருந்தாலும் நிழற்குடை பிரதான வீதியில் கண்டிப்பாக வேண்டும். சாமு காக்கா சொல்வது போல் அரிமா சங்கத்தின் உதவியுடன் கூடிய விரைவில் அதனை இடித்து கட்டி முடிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நகராட்சியின் பிரதான கடமைகளான,

சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புற சூழல்
பாதுக்காக்கப்பட்ட குடிநீர்
தெருப்புற மின் விளக்குகள்
பாதுகாப்பான சாலைகள்
ஊழலற்ற தாமதமில்லா நிர்வாகம்

ஆகியவைகளை உடனடியாக செய்துவிட்டு மற்றவைகளை ஒன்றன் பின் ஒன்றாக செய்து தரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு முதல் தொடர்மழை!  (25/11/2011) [Views - 2776; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved