Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:50:24 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7615
#KOTW7615
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 25, 2011
நகர்மன்ற நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளை - காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் - சென்னையில் சந்தித்தார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4701 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் ஐ. ஆபிதா - சென்னையில் நகராட்சி நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளை நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 - ஆகிய இரு தேதிகளில் நேரில் சந்தித்தார். அப்போது காயல்பட்டின நகர்மன்றத்தின் தற்போதைய தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.

நவம்பர் 24 (வியாழக்கிழமை) அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் (MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT) - அரசுக்கான செயலாளர் (SECRETARY TO GOVERNMENT) டாக்டர் எஸ். கருத்தைய பாண்டியன் IAS யை - தலைமை செயலகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் ஆபிதா சந்தித்தார். அப்போது காயல்பட்டின நகர்மன்றத்தின் தற்போதைய தேவைகள் குறித்த கோரிக்கை மனுவினை நகர்மன்ற தலைவர் வழங்கினார். கோரிக்கைகளை பார்வையிட்ட செயலாளர் - அவைகளை ஆய்வுசெய்து, உரித்த நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வதாக தெரிவித்தார்.



இன்று காலை (நவம்பர் 25) - நகர்மன்ற தலைவர் - சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் (COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION) ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே IAS யை சந்தித்தார். அவரிடமும் கோரிக்கை மனுவினை நகர்மன்ற தலைவர் வழங்கினார். அச்சந்திப்பின் போது சிறந்த முறையில் நகராட்சியினை நடத்துவதற்கான ஆலோசனைகளை ஆணையர் வழங்கினார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மக்களின் நலனில் இடையூறாக நகர்மன்றத்தில் செயல் படும் ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுங்கள்...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [25 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13767

காயல்பட்டின நகர்மன்றத்தின் தற்போதைய தேவைகள் என்ன என்னவோ அதை நல்ல முறையில் நமது நகர்மன்றம் பெற்றிட அதற்க்காக தாங்கள் எடுக்கும் அணைத்து நல்ல முயற்சிகளும் வெற்றி பெற்றிட இறைவன் உதவி செய்வானாக ஆமின்..

நமதூரில் வாழும் அணைத்து சமுதாய மக்களின் நலனில் இடையூறாக நகர்மன்றத்தில் செயல் படும் ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் தாங்கள் தயங்க வேண்டாம்... ஊர் நலன் ஒன்றே உங்கள் குறிக்கோள் ஆக செயல்படுங்கள்...!

ஊர் நலனுக்காக தாங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஊர் மக்கள் உங்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by suaidiya buhari (chennai) [25 November 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 13768

assalamualikum

நல்லதொரு சந்திப்பு, அருமையான ஆரம்பம் என நினைக்கின்றேன், மேலும் சென்னை இல் நகர் ஆட்சி சம்பதம்மாக யாரை எல்லாம் மீட் பண்ண வேண்டி உள்ளதோ, அவர்களை எல்லாம் மீட் பண்ணி கொள்ளவும் , நாளை நமக்கு உதவியாக இர்க்கும் என நம்புகிறேன்.

எல்லாம் நன்மையாக அமையும், அல்லா நம் யா வருக்கும் துணை நிற்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [25 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13770

நம் நகர்மன்றத் தலைவி அவர்களின் இந்த சந்திப்பிற்கு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள். இந்த சந்திப்புக்கள் வெற்றியாகவும், நன்மையாகவும் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.

எப்பொழுதும் 'பிஸி' ஆகவே இருக்கும் சகோதரர்கள் மரியாதைக்குரிய இப்னு சஊத் காக்கா, செய்யத் காக்கா ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் இருப்பதை பார்த்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் நன்றிகள் பல.

தலைவி கூட எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கும் குட்டி ரோஜாவிற்கு அன்பு பாராட்டுக்கள். இப்பொழுதே ட்ரைனிங்கா..நடக்கட்டும்..நடக்கட்டும்...

நன்றாக உட்சாகப்படுத்தி, கண்டிப்பாக ஒரு I.A.S. அதிகாரியாக ஆக்கிக் காட்டுங்கள்,இன்ஷாஹ் அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by fathima (kayalpatnam) [25 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13771

அஸ்ஸலாமு அழைக்கும்

நகராட்சி தலைவி ஆபிதாஷைக் அவர்கள் சேவை மென்மேலும் தொடர அவகளின் எண்ணம் போல காயல் நகர மக்களுக்கு தேவைகள் நல்ல முறையில் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

அவர்கள் கூட இருக்கும் அனைத்து கொவ்ன்சிலர்களும் நேர்மையாகவும் தலைவிக்கு துணையாகவும் இருந்து நம் காயல்பட்டினத்தை ஒரு நல்ல மாதுரியான பட்டினமாக உருவாக்கினால் மறுமையில் இறைவன் நற்க்கூளியை உங்களுக்கு தருவான்...

இரு கைகள் சேர்ந்தால் தான் ஓசை உண்டாகும்...நான் என்று சொல்வதை விட நாம் என்று சொல்வது தான் உயர்ந்தது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நமதூர் வளர்ச்சி பெற நாம் அனைவர்களும் ஒன்று பட்டு பாடு படுவோம்...
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [25 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13772

நமது நகரமன்ற மனுக்கள் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்...

நமது நகர்மன்ற தலைவர் திருமதி ஆபிதா அவர்கள் உயர் அதிகாரிகளை சென்னையில் சந்தித்து நமதூர் நலனுக்கான மனுக்களை கொடுத்து ஊரின் வளர்சிக்காக முயற்சி செய்யும் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... தாங்கள் கொடுத்த அணைத்து மனுக்களும் பரிசீலிக்கபட்டு நல்ல தீர்வு ஏற்பட்டு நமதூர் வளர்ச்சி பெற நாம் அனைவர்களும் ஒன்று பட்டு பாடு படுவோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அரசாங்கத்துடன் போராடி நம் உரிமைகளை.....
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM ) [25 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13773

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற தலைவர் சகோதரி ஆபிதா அவர்கள் சென்னை சென்று நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து - நமது நகர் மன்றத்திற்கு தற்போதைய தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை கொடுத்து விண்ணப்பித்தது சந்தோஷத்தை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்!.

" கோரிக்கைகளை பார்வையிட்ட செயலாளர் அவர்கள் - அவைகளை ஆய்வுசெய்து, உரித்த நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வதாக தெரிவித்தார் " என்ற செய்தி நம்பிக்கையை அளிக்கிறது.

நகராட்சி நிர்வாகத்துறையின் (COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION) ஆணையர் அவர்கள் " சிறந்த முறையில் நகராட்சியினை நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார் " என்பதும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது.
---------------------------------------------------
இன்றைய சூழலுக்கு உகந்தது :

சகோதரி ஆபிதா அவர்கள் மேற்கொண்டிருக்கும் இந்த அணுகுமுறைதான் என்னுடைய எதிர்பார்ப்பு - இன்ஷா அல்லாஹ்! உங்களுடைய முயற்சிக்கு நிச்சயம் பலனுண்டு - அல்லாஹ்வின் அருளும் உண்டு.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள் - அதுபோல் நாம் கேட்டால்தான் கிடைக்கும். அதுவும் நீங்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கின்றீர்களே இதுதான் இன்றைய சூழலுக்கு உகந்தது - நிச்சயமாக பலன் கிட்டும்.

இதே அணுகுமுறைகளை நமது மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், அதிகாரிகளிடமும் கையாள வேண்டியது - நமது தேவைகள் நிறைவேற்றப்படும்.
--------------------------------------------------
ஆற்றலுடன் செயல்படுங்கள் :

மக்கள் மன்றத்திற்கு தலைவராக போட்டியிடும்போது மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு பலமாக இருக்கும் - அரசாங்கத்தினுடைய ஆதரவு அப்படியும், இப்படியுமாகத்தான் இருக்கும் - இருந்தாலும் இன்ஷா அல்லாஹ்! நம் பிரதிநிதிகள் எல்லாம் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு அரசாங்கத்துடன் போராடி நம் உரிமைகளை பெற்று நகராட்சியை சிறப்பாக நடத்தலாம் என்ற கனவுடன் வந்தீர்கள்.

ஆனால் பதவியேற்றபின் நிலைமைகள் தலை கீழாக இருப்பதாக தெரிந்திருக்கும் - இன்ஷா அல்லாஹ்! எல்லா நிகழ்வுகளும் சரியாகி ஒவ்வொரு உறுப்பினரும் உங்களுடன் ஒருமித்தக் கருத்துடனே செயல்படுவார்கள் என்று நம்புங்கள்.

ஒரு வேளை உறுப்பினர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பும் இல்லாது போனாலும் - மேல் அதிகாரிகளின் அனுசரணையோடு, ஆற்றலுடன் செயல்படுங்கள் - அல்லாஹ்வின் உதவியால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருங்கள் - எல்லாம் வல்ல அல்லாஹ்! உங்கள் சேவையில் நகர்மன்றம் சிறப்புடன் நடைபெற கிருபை செய்வான் ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by k.seyed ismail presidential flight (ABUDHABI) [25 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13777

அஸ்ஸலாமு அழைக்கும் மாஷா அல்லாஹ் நம் காயல் நகரமன்ற மக்கள் தலைவின் ஜனாபா ஆபிதா ராத்தா மகத்தான பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள் பல இன்ஷா அல்லாஹ் இன்னும் இதை விட சிறப்பாக செயல்பட அல்லாஹ் கிருபையாக இருப்பான் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by Mohamed Ali (Kayalpatnam) [26 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13781

எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் செயலாளரும் தங்களின் தந்தையுமான ‎பாளையம் இபுறாகீம் காக்கா அவர்களுக்கு மிகவும் நெருக்கமான திரு. ஜோதி ‎ஜெகராஜன் I.A.S. (தற்போது குடிநீர் வாரியத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக ‎அறிகிறேன்) அவர்களையும் வாய்ப்பிருந்தால் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நல்ல முயற்சி
posted by Mauroof (Dubai) [26 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13783

நகர்மன்றத்தின் செயல்பாடுகள் நல்லவிதம் அமைய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைத்திருப்பதும் ஆலோசனைகளை பெற்றிருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று.

நகர்மன்ற நிர்வாகம் சீரிய முறையில் செல்லவும் காயல் மாநகரின் மிக அத்தியாவசிய தேவைகளான சுத்திகரிக்கப்பட்ட சீரான குடிநீர் விநியோகம், தரமான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சாலைகள், அரசு மருத்துவமனை மேம்பாடு, அரசு சார்ந்த கல்வி நிலையங்களின் மேம்பாடு மற்றும் ஏனைய எண்ணற்ற தேவைகள் நல்ல விதம் செயல்வடிவம் பெற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு துணை புரியட்டும் என பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [26 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13800

அஸ்ஸலாமு அலைக்கும்

நமதூர் நகராட்சி தலைவி ஆபிதா அவர்களின் சேவையை நாம் யாவர்களும் பாராட்ட வேணும். இவர் எடுத்துள்ள இந்த நல்ல முயற்சியை. வல்ல நாயன் வெற்றியாகி அருள்வானாக ( கிருபை செய்வானாக ) ஆமீன்.

நிச்சயம் நமதூர்க்கு நல்லது நடக்கும் என்று நாம் யாவர்களும் நம்புவோமகா. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by M Sajith (Dubai) [26 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13812

அவசியமான சந்திப்பு.. வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வெப் தளத்தில் உள்ள தகவல்படி தினசரி குடிநீர் வினியோக ஆளவுகள், (LPCD)

2,16054 ஜனத்தொகை உள்ள தூத்துக்குடி கார்ப்பரேஷனுக்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு 80 லிட்டரும், 87,450 ஜனத்தொகை உள்ள கோவில்பட்டி முனிசிபலிட்யில், நாள் ஒன்றுக்கு நபருக்கு 56 லிட்டரும் வினியோகிக்கப்படுகிறது..

ஆனால் 32,664 ஜனத்தொகை (பழைய கணக்கெடுப்பு) உள்ள காயல்பட்டனத்துக்கு, நாள் ஒன்றுக்கு நபருக்கு 37 லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது..

அருகில் உள்ள 24856 மக்கள் உள்ள ஆறுமுகநேரி பஞ்சாய்த்துக்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு 66 லிட்டரும், ஆழ்வார்திருநகரி, சாயர்புரம், ஏரல், ஸ்ரீவைகுன்டம், கயத்தார், நாசரேத் உள்ளிட்ட பஞ்சாயத்துக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு 70+ லிட்டர் வீதம் வழங்கப்படுகிறது.

(மேலதிக விபரத்திற்கு, http://twadboard.gov.in/twad/thoothukudi_dist.aspx )

தற்சமயம் ஏறத்தாள 50,000 ஜந்தொகையை தாண்டிவிட்டதால், காயலில் இரண்டாவது பைப் லைன் வந்தாலும், இந்த அளவு விகதத்தை உயர்த்தாதவரை தட்டுப்பாடு நிலவத்தான் செய்யும்.

தலைவி இது குறித்து ஒரு வேண்டுகோள் வைக்கவேண்டும்.

அத்தோடு இந்த அளவு அதிகரிக்க தமிழக அரசை வலியுறுத்தி நகர்மன்றத்தில் ஒரு தீர்மாணம் நிறைவேற்றி, அளவு அதிகரிக்கப்பட ஆவன செய்யவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு முதல் தொடர்மழை!  (25/11/2011) [Views - 2776; Comments - 0]
இரவு நேரங்களில் சிறுமழை!  (24/11/2011) [Views - 2649; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved