Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:04:48 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7592
#KOTW7592
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 20, 2011
மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வது குறித்து, வணிகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3810 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்தில் மறு சுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடைசெய்வது குறித்து வணிகர்கள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்;சித்தலைவர் ஆஷிஷ் குமார் கலந்தாலோச செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மறு சுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 18.11.2011 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வணிகர்கள் சங்கத்தினர், திருமண மண்டப உரிமையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பல்வேறு தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், அரிமா சங்கத்தினர் அடங்கிய குழுவினருடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.



இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் ப்ளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்வது தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

மறு சுழற்சி செய்யமுடியாத ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் கப்புகள் போன்ற ப்ளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச் சுழல் பாதுகாப்பிற்கு மிகவும் சவாலாக உள்ளது.

இப்பொருட்களால் கால்வாய்கள், சாக்கடைகள் அடைத்து பாசனத்திற்கும், சுகாதாரத்திற்கும் தீங்காக உள்ளது. ஆடு, மாடுகள் இப்பொருட்களை உண்பதால் இறக்க நேரிடுகிறது.

இப்பொருட்களை எரித்தால் வரும் நச்சுப் புகையிலிருந்து மனிதர்களுக்கு நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு புற்று நோய் வரும் அபாயமும், மலட்டுத் தன்மையும் ஏற்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய வணிகப் பெருமக்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தடைசெய்ய ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேசினார்.


இக்கூட்டத்தில் உதவி இயக்குநா; (பஞ்சாயத்து) திரு.கதிரேசன், மாசுகட்டுபாட்டு வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்...
posted by fathima (kayalpatnam) [20 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13617

மிகவும் நல்ல முடிவு. பிளாஸ்டிக் ஒழிந்தால் சுற்று புற சுகாதாரத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கும்..

இனி பழைய காலத்தில் உபயோகிக்கும் துணி பை ..." மஞ்சள் கலர் பை" இனி அவங்க ராஜ்ஜியம்தான் போங்க .... அழகுக்காக உபயோகிக்க படும் பிளாஸ்டிக் பைக்கு இனி குட் பை தான்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விழிப்புணர்வு முகாமை நடத்துவது
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM) [20 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13621

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு நம் நகர் மன்றத்திலிருந்து யாராவது செல்வதற்கு வாய்ப்பு கிடைத்து சென்று வந்தீர்களா ?.

அப்படி சென்று அந்த கூட்டத்திலே பங்கேற்று வந்திருந்தால் - அவர் இங்குள்ளவர்களிடம் கலந்தாலோசனை செய்து - அது போன்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் நல்லது.
-----------------------------------------------
விழிப்புணர்வு முகாம் :

நகராட்சி நிர்வாகம் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி அதை தடை செய்யலாம்! விற்பதால்தானே! மக்கள் அதை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள் எனவே அங்கிருந்துதான் இந்த தடைகள் ஆரம்பம் ஆகவேண்டும்.

மேலும் நகரில் உள்ள உணவகங்கள் - கடைகள் போன்ற இடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நேரிடையாக எழுத்துப்பூர்வமாக அறிக்கைகளை கொடுத்து அவர்களுக்கு ஒரு தவணையையும் கொடுத்தால் இந்த தடையை நமது நகரிலே கடைபிடிக்க முடியும்.

மேலும் மக்களுக்கும் இந்த பிளாஸ்டிக் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு முகாமை நடத்துவது நல்லது - இப்படி செய்தால் நமது நகர் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட நகராக திகழும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்...
posted by mackie noohuthambi (KAYALPATNAM) [21 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13636

பிளாஸ்டிக் கேடுகள் பற்றி ஆராய்ச்சி நடக்கிறது.

குடி குடியை கெடுக்கும் என்று பெரிய BOARD போட்டு உள்ளே வகை வகையான குடி வஸ்துக்கள் விற்கப்படுகின்றன. அரசே இதை செய்கிறது. புகை பிடித்தல் ஆரோக்கியத்துக்கு கெடுதி என்று சிகரட் பக்கெட்டில் எழுதி, பலவகையான சிகரெட்கள் புகையிலை வஸ்துக்கள் அரசு அனுமதியுடன் விற்கப்படுகின்றன, வாய்மையே வெல்லும் என்றும் காவல் நிலயத்தில் பலகைகள் வைத்து, அங்கே அடித்து உதைத்து தவறானமுறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வெறும் சுலோகங்களால் எதையும் சாதித்து விட முடியாது.பிளாஸ்டிக் பொருள்களை விட்பதக்கும் அதனை உற்பத்தி செய்வதற்கும் அரசே ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து விட்டு அதை உபயோகிக்காதீர்கள் என்று உபதேசமும் செய்வதால் என்ன பயன்.

மது அருந்துவது தடை செய்யப்பட்டு விட்டது என்று அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் நபிதோழர்கள் அன்று வரை குடித்துKKONDIRUNDHAVARKAL பீப்பாய் பீப்பாய்களாக ரோட்டில் உருட்டிவிட்டார்களே அதை இந்த அரசாங்கம் செய்ய முடியுமா,

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்ற கதை தான். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தபடாத கற்பூரமாக தமிழகம் எத்தனைநாள் தன்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்று தத்துவம் பேசி கலைஞர் திறந்து விட்ட குடிப்பழக்கம், இன்று தமிழகத்துக்கும் 15000 கோடி ரூபாய்களை அள்ளித்தரும் காமதேனுவாக இருக்கிறது. பிளாஸ்டிக் பொருள்களும் அப்படித்தானே. பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கள் அரசு அனுமதி வழங்க மறுத்தால் பிளாஸ்டிக் பைகள் எப்படி உபயோகத்துக்கு வரும்?கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கைபிடிக்க முயன்ற கதைதான். ஆட்சி தலைவர் வெற்றி பெற வாழ்த்துக்கள். மக்கி NOOHUTHAMBI.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்...
posted by Ashika (kayalpatnam) [21 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 13638

நமதூர் மக்களுக்கு சொன்னதும் புரிந்து கொள்ளுபவர்கள். நீங்கள் ஒரு முறை சொன்னால் நூறு கேள்வி கேட்டு தெளிவான முடிவு எடுபவர்கள் நம் மக்கள்!!

பேப்பர் பை, தட்டு, கப் நமதூரில் வீட்டில் இருந்து தயார் பண்ணி கொடுகிறார்கள். டப்பெர்வர் உபயோகித்து ஆரோக்கியமாக வாழுங்கள். இதனை விளம்பரமாக சொல்லவில்லை, ஒரு பயனுள்ளத் கருத்தாக சொல்லுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்...
posted by L.A.K.BUHARY (Hong Kong) [21 November 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 13646

அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதனாலும் அல்லது அதை எரித்துவிடும் போதும் வரும் நச்சு புகையினாலும் முறையே நமக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் கெடுதி தான் என்பது இன்றைய அறிவியல் உண்மை.

பொதுவாக திருமண வைபவங்களிலும்,நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களிலும்,இதர விசேசங்களிலும் இதன் பயன்பாட்டை நிறுத்தி மாற்று பயன்பாடாக பேப்பரினால் செய்யப்பட்ட உறுதியான கிளாஸ்,மண் சிட்டி,கலையம் போன்றவைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால் மிகுதியான,(பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படாத) பிளாஸ்டிக் பொருட்கள் குறைய வாய்ப்பு உண்டு. மண்பாண்ட பொருட்களை சிறு தொழிலாக நமது நகர மக்கள் செய்ய வூக்குவிக்கவேண்டும் அத்துடன் விசேஷ காலங்களில் அதை பயன்படுத்த நாமும் முற்படவேண்டும்..!

குறிப்பாக,ஆரம்பமாக கடற்கரை நடைபாதை சிறு வணிகர்களிடம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் பயன்பாட்டை குறைக்கலாம். கடற்கரை பகுதியில் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் குப்பை மேடாகிவருவது குறித்து சம்பந்தப்பட்டவகள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Recycling waste to Bio Gas
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [21 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13647

Assalamu Aalikum.

It is now a General Green Practice in all Urban Cities including Chennai, that Garbage refuse is collected and Bio Gas is generated from the Waste, which in turn is used to generate Power/Bio fuel. The same can be utilized for Public Street Lighting, cooking gas,etc

Our panchayath must also consider this proposal which would be beneficial to the society in cutting down operational costs , for our town and our district.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்...
posted by ALS maama (Kayalpatnam) [21 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13650

அஸ்ஸலாமு அலைக்கும்

மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வது குறித்து, வணிகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை செய்தமைக்கு நன்றி.

carry bag உபயோகிக்கும் முறை நம்மூரில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூடிக்கொண்டே வருகிறது. நம்மூர் கடைகளில் ஒரு பென்சில், ஒரு வாழைப்பழம் வாங்கினாலும் கூட carry bag போட்டுக் கேட்கிறார்கள். இதை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று வீட்டில் சேரும் குப்பைகளை போட்டு கட்டி வீதியில் அல்லது தோட்டத்திற்கு பின்புறம் வீசிவிடுகிறார்கள்.

கழிவு நிறைந்த carry bag அப்படியே சிலசமயம் பூமியில் கிடந்தது புதைகிறது, மண்ணை மாசுபடுத்துகிறது, தாவரங்கள் வளர தடையாகிறது இந்த carry bag மூவாயிரம் ஆண்டுகள் ஆனாலும் பூமியின் அடியில் இருந்த போதிலும் மக்கிப் போவதில்லை.

இந்த மாதிரி carry bag களை சில கடைக்காரர்கள் குப்பைகளோடு வீதியில் வைத்து எரிக்கிறார்கள். இதனால் டைஆக்சைடு என்ற நச்சுப் புகை காற்றுடன் கலந்து வருகிறது. அந்த புகையை சுவாசிக்கின்ற அனைவர்களுக்கும் மூச்சித்திணறல், இழுப்பு நோய் ஏற்படவும், ஆஸ்துமா நோய் மற்றும் 70 வகையான கொடிய நோய்கள் உண்டாவதாக நிபுணர்கள் கூறுவதால் நாம் உடனடி carry bag வாங்குவதை நிறுத்த வேண்டும். இதனால் மனித சமுதாயத்திற்கு நாம் நன்மை செய்ய முடியும்.

என்னுடைய carry bag ஒழிப்பு இயக்கத்தில் நீங்கள் அனைவரும் சேரவேண்டுமானால் அரசாங்கத்தை carry bag உற்பத்திக்கு தடை செய்ய சொல்ல வேண்டாம், carry bag விற்கும் கடைகளிலும் விற்காதே என்று கூறவும் வேண்டாம், நமது அமைப்பை சார்ந்தவர்கள் எங்கும், எதிலும், எப்போதும் carry bag உபயோகிக்கக்கூடாது. பழைய காலம் மாதிரி துணி பேக்கை கடைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த carry bag ஒழிப்பு அமைப்பை நானும், V.T நூருல் அமீனும், மர்ஹூம் S.M.B டக்காஸ் முஸ்தபா ஆகியோரும் 2004 ல் தொடங்கி இன்று வரை செயல்பட்டு வருகிறோம். இந்த அமைப்பை நானே உருவாக்கியதால் கடைகளுக்கு செல்லும் போதெல்லாம் பொருள்களை காகிதத்தில் கட்டித் தர சொல்வேன், அல்லது நான் வைத்திருக்கும் துணி பேக்கில் வாங்கி வருவேன். நமது அமைப்பில் சேருவோர் இதை அமல் படுத்த வேண்டுகிறேன்.

எழுத்தாளர், பொது சேவை, ஓவியர்,
கேரி பேக் ஒழிப்பு இயக்க அமைப்பாளர்,
ALS மாமா,
K.T.M தெரு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [21 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13651

This is what I said on 23 of July this year upon reading the news.

(below is the link)

http://www.kayalpatnam.com/shownews.asp?id=6783

comment # 4


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்...
posted by K S Mohamed shuaib (Kayalpatinam) [22 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13666

பிளாஸ்டிக்கேரி பேக் ஒழிப்பு இயக்கம் அவசியம் நடந்தேறவேண்டிய ஒரு இயக்கம். முன்பெல்லாம் பலசரக்கு கடைகளில் பொருட்களை பேப்பரில் சுருள் பிடித்து தரும் முறை,கறிக்கடைகளில் கறியை ஒலைப்பட்டையில் பொதிந்து தரும் முறை (அக்காலங்களில் ஞாயிற்று கிழைமைகளில் தெருவெங்கும் காலி ஒலைப்பட்டைகள் வீசி எறிந்து கிடப்பதை காணக்கூடியதாக இருக்கும் )அதுபோல மீன்கடைகளில் மீன் வாங்க ஓலைக்கூடை இவைபோன்ற இயற்க்கை பொருட்கள் உபயோகித்த காலத்தில் நமது ஆரோக்கியம் நல்லமாதிரியாக்கத்தான் இருந்தது

இப்போது என்னவெனில் டீ சாம்பார் சட்னி இவைகளைக்கூட பிளாஸ்டிக் கவரில்தான் கட்டிக்கொடுக்கின்றனர் தூத்துக்குடி செல்லும் வழியில் ஆத்தூர் தாண்டி பார்த்தீர்களேயானால் உடைமரங்களில் இந்த பிளாஸ்டிக் சைத்தான் தோரணம் போல தொங்கி கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

நான் கொடைக்கானல் சென்றிந்த பொது அங்குள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் அறவே தவிர்க்கபட்டதை கண்டேன். நமது திருசெந்தூரில் கூட இம்முறை கொஞ்ச காலம் கடைபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் சுற்றுப்புறசூழலுக்கு குந்தகம் விளைவிப்பவை. இவைகள் ஒழிக்கப்பட்டே தீர வேண்டும் .இங்கே ஒரு வாசகர் சொன்னது போல அரசு சும்மா மேலுக்கு நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு எடுக்குமானால் கூடிய விரைவில் இந்த பிளாஸ்டிக் சாத்தானை ஒழித்துவிடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3287; Comments - 1]
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3290; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved