Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:57:46 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7346
#KOTW7346
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 7, 2011
அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஷாந்தாவின் காயல்பட்டினம் வருகை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5690 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் ஷாந்தா 02.10.2011 அன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துமனையில், புற்றுநோய் விழிப்புணர்வு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை நடத்திய புற்றுநோய் காரணிகள் கண்டறியும் குழுவான (Cancer Fact Finding Committee) CFFC சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

டாக்டர் ஷாந்தா வருகை:
சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 50 ஆண்டு கால தலைவரும், புற்றுநோய் மருத்துவத்தில் உலகப்புகழ் பெற்றவரும், நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமனின் பேத்தியும், நோபல் பரிசு வென்ற சந்திரசேகரின் மருமகளும், பத்மஸ்ரீ, ரேமோன் மகசேசே, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றவருமான 84 வயது நிறைந்த மருத்துவ மாமேதை டாக்டர் சாந்தா அவர்கள் 02.10.2011 அன்று காயல்பட்டினம் வருகை தந்தார்.

முன்னதாக மருத்துவக் குழுவினருடன் வந்திருந்த டாக்டர் சாந்தா அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான CFFC ( Cancer Fact Finding Committee )யின் வரவேற்புக்குழுவினரால் பூச்செண்டு வரவேற்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறும் K.M.T.மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவமனை செயலாளர் ஹாஜி T.A.S.முஹம்மது அபூபக்கர் பூச்செண்டு வழங்கி வரவேற்றார்.

அமர்வு 1 - மருத்துவர்களுடன் கலந்தாய்வு:
டாக்டர் ஷாந்தா அவர்களை கொண்டு, காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு ( CFFC ) சார்பில், கே.எம்.டி. மருத்துவமனையில் இரண்டு அமர்வுகளாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முதல் அமர்வு மருத்துவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக - ''Profile of Cancer Victim from Kayalpatnam - காயல்பட்டினத்தில் புற்று நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய மேலோட்ட குறிப்பு '' என்ற தலைப்பில் காயல்பட்டினத்திலுள்ள அனைத்து மருத்துவர்கள், காயல்பட்டினம் மக்களுக்கு பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையளிக்கும் வெளியூர்களிலுள்ள மருத்துவர்களுடன், காயல்பட்டினத்தின் நோயாளிகள் குறித்து டாக்டர் சாந்தா அவர்கள் கலந்துரையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்நிகழ்ச்சி மாலை 05.15 மணிக்குத் துவங்கியது. ஹாஜி எஸ்.ஐ.புஹாரி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.பல்லாக் அப்துல் காதிர் நெய்னா வரவேற்புரை நிகழ்த்தினார்.



அதனைத் தொடர்ந்து CFFC - யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் A.தர்வேஷ் முஹம்மது, மருத்துவ மாமேதை டாக்டர் வீ . சாந்தா அவர்களுக்கு மலர்ச்செண்டு வழங்கி கவுரவித்தார். அடுத்து அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் ஆன்காலஜி துறைத்தலைவர் டாக்டர் செல்வலக்ஷ்மி அவர்களுக்கு ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், எபிடமோலஜி துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் அவர்களுக்கு M.W.ஹாமீத் ரிபாஈ ஆகியோரும் பூச்செண்டு வழங்கி கவுரவித்தனர்.



காயல்பட்டினத்தில் இதுவரை நடத்தப்பட்டுள்ள புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், Cancer Survey - யின் தகவல்கள், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகள் குறித்தும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நோக்கம், மருத்துவர்கள் தரப்பில் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் CFFC -யின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விரிவாக விளக்கிப் பேசினார். அவையனைத்தையும் டாக்டர் ஷாந்தா அவர்கள் மிகவும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்.



டாக்டர் ஷாந்தா உரை:
இதனைத் தொடர்ந்து எல்லோரின் எதிர்பார்ப்புக்குரிய மருத்துவ மாமேதை டாக்டர் ஷாந்தா பேசினார்.CFFC -யின் முயற்சிகளையும் ஏனைய அமைப்புகளின் சேவைகளையும் டாக்டர் ஷாந்தா வெகுவாகப் பாராட்டினார்.



குறிப்பாக புற்றுநோய் பரவல் குறித்த தகவல் சேகரிப்பில் இக்ராஃ கல்விச் சங்கத்தின் 40 பெண் தன்னார்வத் தொண்டர்கள் 10 தினங்களில் முழுமையான தகவல்களை சேகரித்தது குறித்து வியப்பு தெரிவித்து பாராட்டினார்.

புற்றுநோய் நிரந்தர பதிவகம்:
மேலும் காயல்பட்டினத்தில் புற்றுநோயை அடியோடு ஒழிப்பதில் தாம் கவனம் செலுத்தப் போவதாகவும், காயல்பட்டன மக்களை புற்றுநோய் இறப்பிலிருந்து பாதுகாத்திட தம்மால் இயன்ற உதவிகளை செய்வதாகவும், துவக்கமாக Cancer Registry நிரந்தரமாக பதிவு செய்திடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவிருப்பதாகவும், காயல் நகரின் நாற்பதாயிரம் மக்களிடமும் சென்று தகவல் சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், Cancer Screening centre நிரந்தரமாக காயல் நகரிலேயே அமைத்திடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் இன்று பெருமளவில் பேசப்படும் புகையிலைப் புற்று நோயிலிருந்து மக்களை காத்திடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் என்றும், இதற்கு பள்ளி ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என்றும், ஆசிரியர்கள் மாணவப்பருவத்திலேயே இதன் தீங்கைப் பற்றியும், இதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியும் விளக்கிட வேண்டும் என்றும், இதன் மூலம் வருங்கால சந்ததியினை இக்கொடிய புற்று நோயிலிருந்து காத்திட முடியும் என்றும் கூறினார்.

தொடர்ந்து மருத்துவர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பயனுள்ள, ஏராளமான தகவல்கள் பரிமாறப்பட்டன. மருத்துவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் டாக்டர் ஷாந்தா பதிலளித்தார்.

அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் ஆன்காலஜி துறைத்தலைவர் டாக்டர் செல்வலக்ஷ்மி, எபிடமோலஜி துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோரும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளித்தனர்.





டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் உரையாற்றுகையில் அனைத்து மருத்துவர்களும் தங்களிடம் வரும் புற்று நோயாளிகள் குறித்த தகவல்களை கண்டிப்பாக பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும் என்றும், அது பல வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இவ்வமர்வில், காயல்பட்டினத்திலுள்ள மருத்துவர்கள், காயல்பட்டினம் வருகை தரும் மருத்துவர்கள், காயல்பட்டினம் மக்களுக்கு பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையளிக்கும் வெளியூர்களிலுள்ள மருத்துவர்கள் 23 பேர் கலந்து கொண்டனர்.





அனைத்து மருத்துவர்களுக்கும் CFFC -யின் சுருக்கமான விளக்க அறிக்கை -Information Kit வழங்கப்பட்டது. ஜித்தா காயல் நற்பணி மன்றம் வெளியிட்ட ''புற்றுக்கு வைப்போம் முற்று'' குறுந்தகடும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவரும் மருத்துவ மாமேதை பத்மபூசன் டாக்டர் ஷாந்தா அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.



நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் டாக்டர் ஷாந்தா உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.



மருத்துவர்கள் மகிழ்ச்சி:
இதற்கு அழைக்கப்பட்ட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சி என்றும், மருத்துவ மாமேதை டாக்டர் ஷாந்தா அவர்களுடன் சந்திப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினர்.

அமர்வு 2 - பொதுமக்களுடன் கலந்துரையாடல்:
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்ச்சி இரவு 07.00 மணிக்குத் துவங்கியது. இது ''காயல்பட்டினத்தில் புற்று நோய் பிரச்சினையை எதிர்கொள்வதில் பொது மக்களின் பங்கு'' என்ற தலைப்பில் மருத்துவ மாமேதை டாக்டர் ஷாந்தா அவர்கள் பொதுமக்ககளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்விற்கு கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத், அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் ஆன்காலஜி துறைத்தலைவர் டாக்டர் செல்வலக்ஷ்மி, எபிடமோலஜி துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன், CFFC தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் பல்லாக் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

CFFC - யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் வெள்ளி முஹ்யித்தீன் கிராஅத் ஓதினார். ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி அறிமுகம் குறித்தும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர் சாந்தா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் குறித்தும் அறிமுகப்படுத்திப் பேசினார். காயல்பட்டினத்தில், புற்றுநோய் பரவல் தடுப்புக்காக இதுவரை செய்யப்பட்டுள்ள செயல்திட்டங்கள், அதனால் கண்ட பலன்கள் குறித்தும் தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், அடையாறு புற்றுநோய் மையத்தின் மூலம், காயல்பட்டினத்தில் நிரந்தர புற்றுநோய் பதிவகம் உருவாக்கித் தரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.



மருத்துவர்களுக்கு சங்கை:
பின்னர், மேடையில் அமர்ந்திருந்த மருத்துவ நிபுணர்களுக்கு கத்தர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலாளர் சட்னி செய்யித் மீரான், ஹாஜி எல்.டி.இப்றாஹீம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.



டாக்டர் ஷாந்தா சிறப்புரை:
பின்னர், டாக்டர் சாந்தா உரையாற்றினார். புற்றுநோயை அதன் துவக்கத்திலேயே கண்டறிந்தால் அதுவும் குணப்படுத்தக் கூடியதே என்றும், புற்றுநோயில் பல வகைகள் உள்ளதால், அதுகுறித்து எதையுமறியாமல் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.



சமீபத்தில் காயல்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரவல் குறித்த தகவல் சேகரிப்பில் 40 பெண் தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டு 10 தினங்களில் சேகரித்த விபரம், சற்று முன் நடைபெற்ற மருத்துவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அறிய வந்ததாகவும், அது தனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியதாகவும், இது ஒரு மிகப்பெரிய விஷயம் என்றும் புகழ்ந்துரைத்து, இதனை முன்னின்று செய்தவர்களை தான் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில் நிரந்தர பதிவகம்:
புற்றுநோய் தடுப்பு முயற்சியில் அளப்பரிய பணிகளைச் செய்துள்ள CFFCயின் வேண்டுகோளை ஏற்று, அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில் காயல்பட்டினத்தில் புற்றுநோய் நிரந்தர பதிவகம் உருவாக்க அனைத்தும் செய்து தரப்படும் என்று அவர் தனதுரையில் அறிவித்தார்.

பின்னர் புற்றுநோய் குறித்த பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவரைத் தொடர்ந்து அடையாறு புற்றுநோய் மையத்தின் எபிடமோலஜி பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சுவாமினாதன் பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.





CFFC தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பல்லாக் சுலைமான் டாக்டர் சாந்தாவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.



நிறைவாக, இலங்கை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நன்றி கூற, துஆ பிரார்த்தனையுடன் இரவு 09.00 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள்:
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த - பொதுமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் சுமார் 550 பேர் கலந்துகொண்டனர்.









நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், அப்துல் வாஹித், ஹாஜி வி.ஐ.புகாரீ, ஹாஜி எல்.டி.இப்றாஹீம், ஹாஜி மண்டேலா நூஹ், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், காழீ முஹம்மது நூஹ், எஸ்.கே.ஸாலிஹ், எம்.எம்.ஷாஹுல் ஹமீத், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, பல்லாக் சுலைமான், கே.எம்.டி.சுலைமான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இக்ராஃ கல்விச் சங்கம், கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங், ரியாத் காயல் நற்பணி மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம், கே.எம்.டி. மருத்துவமனை, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், காயல்பட்டினம் வெல்ஃபர் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பளித்திருந்தன.


இவ்வாறு, CFFC சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by M.N Refai (Dar Es Salaam, Tanzania.) [07 October 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 9899

Dear Admin, Thanks for your update.

Please update Audience question and answer from doctor, Insha allah it might be useful to all who’s not in Kayalpatnam.

Hope update soon and our special thanks to organizers and Doctors. we all pray for No cancer and live long, Allah give "SHIFA " to every one.. Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. GREAT JOB CFFC
posted by K M SHAFEER ALI (CHENNAI) [07 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9904

அஸ்ஸலாமு அழைக்கும்

டாக்டர் ஷாந்தவின் நமதூர் வருகை உண்மையில் நமதூருக்கு விழிப்புணர்வை இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

டாக்டர் ஷாந்தா அவர்கள் நமக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் வெகு விரைவில் நிறைவேற்றிட அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு நீங்கள் ( CFFC ) முயற்சி செய்யவும்.

நீங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு பெரும் முயற்சி.உங்களுக்கு என்" ராயல் சல்யுட்" நீங்கள் எடுத்த இந்த முயற்சி நிச்சயமாக உங்கள் காலத்திற்கு பிறகும் உங்கள் பெயர் ( CFFC ) சொல்லும் இன்ஷா அல்லாஹ்.

வல்ல அல்லாஹ் உங்கள் இந்த முயற்சிக்கு வெற்றியை தந்து நமதூர் மக்களை இந்த கொடிய நோயில் இருந்து பாது காப்பானாக

அணைத்து காயல் மக்களுக்கும் என் பணிவான வேண்டுகோள் நீங்கள் அனைவரும் வல்ல அல்லாஹ்விடம் நமதூர் மக்களுக்காக இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாப்பு வேண்டி துவா செய்யவும்

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இந்நோயில் இருந்து பாதுகாப்பானாக ஆமீன். அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by ismail (Jeddah K.S.A.) [07 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9911

very useful and definitely couraging to those who are now being the victims of this deadly disease and also no doubt it is so informative to the public.

Thanks alot for Dr.Shantha and her team of medical experts for their valuable contribution in eradicating this disease in our kayalpatnam.

May Allah save the whole community from this deadly dragon. Congrats and hatsup to those who are behind this valuable programme for the successful reach to the public, and if possible please upload Dr.Shantha`s speach to the public and the answers of Dr.Shantha`s to the public queries.ALLAH YESFIYH LILJAMIAH AAMEEN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. CFFC
posted by T.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam 04639280852) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9915

Dear Admin, Thanks for your update. Please update Audience question and answer from doctor, Insha allah it might be seful to all who’s not in Kayalpatnam. Hope update soon and our special thanks to organizers and Doctors. we all pray for No cancer and live long, Allah give "SHIFA " to every one.. Ameen.

JAZAA AKU MULLAAH .VA KARAL JAZAAU. VA KHARAN JAZEELAAH.

Administrator: Text in unclear font edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [08 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9918

Thanks to Admin

Nice and great arrangement.It create awareness of cancer.Almighty Allah protect us from such dieases.

Regards
Salai Syed Mohamed Fasi

AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by mackie Noohuthambi (kayalpatnam) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9930

Very Very interesting and very much useful function ever held in kayalpatnam. It was a belief among us that Cancer means it is life's end. Dr Shanta changed this view and she sowed the seeds amongst us that cancer is like anyother disease which can be cured.

Mother Theresa went to Paradise and knocked at the door. The Angel in charge of Paradise asked, " Who is that?" "I am Mother Thersa!" she replied. " Sorry, this is Paradise, we have no Slums here, you can go back to India" the Angel replied. These sentences are found in the Vikram Hospital in Coimbatore. One can find Paradise in earth if they help others.

"He alone lives who lives for others, others are more dead than alive". Dr Shanta is born to help cancer patients in India, especially in Tamil Nadu. She is Dr. C.V.Raman's grand daughter. This proves that the Old Lady, but young in stamina, deserves " Bharat Ratna". The way she answered questions raised by our women, she has every details of cancer in fingertips.

We salute the entire team of Doctors from Adyar, and we hope a cancer finding team will be constituted in our KMT itself, and all kayalpatnam citizens all over the world should help this cause.

Thanks for the organizers, the way they printed invitation cards, invited those who are really interested in the noble cause, arranged all doctors to participate, in two separate sittings.

Best Regards

Mackie Noohuthambi.9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by Mohamed Buhary (Chennai) [08 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9936

CFFC மேற்கொண்ட இந்த அயராத உழைப்பும் முயற்சியும் பாராட்டப்பட வேண்டியது. நகரின் நலனுக்காக தொண்டுள்ளத்துடன் தங்களை அர்ப்பணித்துச் செயல்படுகிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் ஈருலகிலும் தந்தருள்வானக எனப் பிரார்த்திக்கிறேன்.

உள்ளூரில் நடக்கின்ற இதுபோன்ற நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி காயல்பட்டினம்.காம் பார்த்தேன். ஆனால், ஒரு வாரத்திற்குப் பின்னரே செய்தி கிடைத்துள்ளது.

உங்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருப்பினும், இதில் கொஞ்சம் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன்.

முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Wonderful
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [08 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9938

Wonderful step to eradicate the no.1 killer disease (cancer) from our town. Congrats to CFFC and other members who have taken such initiative.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by mariyam thahira (chennai) [08 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9939

காயல்பட்டினம் நகருக்கு மிகவும்(தற்போதுள்ள சூழ்நிலையில்)அத்தியாவசியமான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தந்த அனைத்து அமைப்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by Vilack SMA (Hetang) [08 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9971

டாக்டர் ஷாந்தா அவர்களின் , நிகழ்ச்சிகள் , புற்று நோய் பற்றி பேசியது , நமதூர் environmental ( குறிப்பாக DCW ) பற்றி பேசியது அனைத்தையும் , முழுமையாக அறியத்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . ( இந்த நோய்க்கு DCW ஒரு சிறிய சதவீதமே lessthan 4 % காரணம் என்றும் , குறிப்பாக மரபணுக்கள் மூலமே வருவதாகவும் , smoking & alchohol இதுவும் காரணம் என்று டாக்டர் பேசியதாக அறிந்தேன்.

நாமெல்லாம் அரேபியாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறோம் . அரேபியர்கள் மிகுதியானோர் புகைப்பவர்கள் , மது குடிப்பவர்கள் என்றெல்லாம் படித்தும் , கேள்விப்பட்டும் இருக்கிறோம் . இதன்படி பார்த்தால் , டாக்டர் அவர்களின் பேச்சின்படி , இந்த நோய்க்கு மரபணுக்கள் முக்கிய காரணமாக அறிய முடிகிறது . ஆனால் நாம்தாம் DCW தான் முக்கிய காரணம் , தங்க ஊசியால் கண்ணை குத்துவதா ? காலை கிழிப்பதா ? என்றெல்லாம் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தோம்.

நாம் விளிப்படைந்தோமோ இல்லையோ , டாக்டர் அவர்களின் பேச்சின் மூலம் DCW நிச்சயம் விழிப்படைந்திருக்கும் . அதாவது முன்பெல்லாம் பயந்து கொண்டு தண்ணீரை திறந்து விடுவார்கள் இப்போது தைரியமாக விடுவார்கள் . மேலும் இந்த நோய் புதிதான ஒன்றல்ல , ஆதி காலத்து நோய் . முன்பெல்லாம் சரியான மருத்துவ வசதிகள் , தகவல் தொடர்பு இல்லாமல் இந்த நோய் பற்றி அவ்வளவாக தெரியவில்லை என்றும் , இன்று நவீன உலகில் இதையெல்லாம் கண்டு பிடிக்கும் மருத்துவமும் , தகவல் தொடர்பும் உள்ளதால் தான் நாம் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்றும் டாக்டர் பேசியதாக அறிகிறேன்.)

ஆகயால் இதைப்பற்றி அதிகம் விளம்பரம் செய்யாமல் இருந்தாலே போதும் , இந்த நோயில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by syed omer kalami (colombo) [08 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9979

Excellent work. Most needed. keep more awareness camps like this to eradicate killer disease with early examine centre also. HAT OFF


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [09 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10006

CFFC ய்க்கு எனது வாழ்த்துக்கள்....மக்கள் கேட்ட கேள்வியும் அதற்க்கு DR. SANDA அளித்த பதிலையும் போடுங்கள் இன்னும் பயனுல்லதாக இருக்கும்.....சகோதரர் சொன்னது போல ..நாம் யாரும் அரபில் இருந்து வந்தவர்கள் இல்லை (பல தலை முறைக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இதன் (GENE) மூலம் கான்செர் வந்தது என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

இது பாராட்டு விழா இல்லை எல்லோரும் பொன்னாடை போர்த்துவதற்கு.....ஒருவர் போதும்..சிறந்தவர்களின் பொன்னான நேரத்தை மேலும் சரியாக பயன்படுத்தி இருக்கலாம்.

My kind advice to CFFC pls. do the same survey from Arumuganeri , Peyanvilai, Pattanam and Thriuchedur ...It will help to know Is it from our special kayal custom or Not ?

I hear cancer disease very rarely from Mangalvaadi, Odakarai and Thengapandaka salai peolple's mouth....why from our streets and more ? Think ?

நம் ஊரில் வீட்டுக்கு வீடு படிக்காத பெண் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.....எதற்க்கு எடுத்தாலும் தாங்களாகவே மருந்து கொடுக்கும்/எடுக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?

மாப்பிளையை பேசுவதை விட்டுவிட்டு நோயை பற்றி அதிகம் பேசும் (அப்பாவி) இவர்களை என்னவென்று சொல்வது? மாற்றங்கள் வீட்டில் (உணவு மற்றும் மருந்து) இருந்து வரட்டும்...

பை பாஸ் ஆபரேஷன் செய்துவிட்டு ஸுபுஹ் இல் (களறி) சாப்பாடு வைத்தாலும் உண்பார்கள் போல தெரிகிறது? பழக்கங்கள் மாறவேண்டும்....நீண்டநாள் வாழவேண்டும்...

பெண்களே தாங்களும் மாறி, கணவனையும், இந்த சமுதாயத்தையும் மாற்றுங்கள். நான் உங்களை குறை சொல்லவில்லை உங்களால் முடியும் என்கின்றேன்.

அப்போதுதான் கான்செர் மற்றும் மற்ற நோய் இல்லாத சமுதாயம் உருவாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. புற்றுநோய் பயம் வேண்டாம்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [09 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10031

எனதருமை காயல் மாநகர சகோதர சகோதரிகளே ,

நாம் அனைவரும் பயபடுவது போல், புற்று நோய் ஒன்றும் பயபடக்கொடிய நோய் அல்ல. இன்றைய கால கட்டத்தில் புற்று நோயை முழுவதுமாக குனபடுத்த, சிகிச்சை முறை கள் வந்துள்ளது. கடந்த காலத்தை விட புற்று நோயின் தாக்கம் அதிகம் அஆனதிர்க்கு, மற்ற காரணங்களை விட, இன்றைய மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக, முன்பை விட பல புற்று நோய்கள் கண்டு அறிய படுகிறது.அதன்னால்,அதன் அதிகரிக்கும் எண்ணிக்கை நம்மை மிரள வைக்கிறது..

முன்பு தெரியாமல் இருந்த பல புற்று நோய்கள் கண்டு அறிய படுவ அது , ஒரு நல்ல விசயமே..அதை கண்டு அறிந்தால் தான் சிகிச்சை பெற ஏது வாக இருக்கும்.. நான் அறிந்து ( நான் இந்த பிரிவில் நேர்வடியாக இல்லாவிட்டாலும்) , நான் பார்த்த புற்று நோய் நோயாளிகளில், 75 சதவிகிதத்தினர் இன்று, ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்கிறார்கள் என்பது நிதர்சமான உண்மை..

அவ்வாறு நோயை கண்டு அறிவதை, மிக சீக்கிரம் கண்டு பிடுத்து விட்டால், நமக்கு டபுள் வெற்றி, இந்த புற்று நோயை எதிர் கொள்வதில்..எனவே நோயால் பாதிக்க பற்றவர்கள், மனம் சோர்ப்து விடாமல் இருக்க வேண்டும்..மனம் அழுத்தம் ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்பு உள்ளது..அது குறைந்தால், சிகைசியின், வெற்றி வாய்ப்பு குறையும்..

எனவே, மனம் தளராமல், அல்லாஹ் தந்த இந்த நோயால், அல்லாஹ் ஒருவனே, மருத்துவர்கள் மூலம் குணம் தருவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில்,மன திடகாதிரதுடன் இருந்தால், நிச்சயம் எல்லா வல்ல அல்லாஹ் நமக்கு இந்த நோயை எதிர்கொள்வதில், நிச்சயம் வெற்றி தருவான்....இதை விட மேல், நோய் தடுப்பு முறை, இன்னும் அதிக வசியம்....

நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டர்யும் சில ஸ்க்ரீனிங் டெஸ்ட் கள் மேற்கொள்வதின் மூலம், புற்று நோயை அதன் ஆரம்ப கட்டத்திற்கு முந்தய நிலையில்,precancerous stage இல் kandupiditthu கான்செர் வரும் முன்னே குனபடுதிடலாம். முக்கியமாக பெண்கள், மார்பு சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்கம் கீழ் கண்ட மூன்று வெப் சைட் மூலம் அறியலாம்

http://www.imaginis.com/breast-health/breast-self-examination-video

http://www.breastcancer.org/symptoms/testing/types/self_exam/bse_steps.jsp?gclid=CJqwx-O826sCFUF_6wodYiSXRA

http://www.videojug.com/film/how-to-become-breast-self-aware


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. புற்று நோய் gene
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [09 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10098

பொதுவாக புற்று நோய்க்கான ஜீனுக்கு ONCOGENE என்று பேர்.. பொதுவாக இந்த oncogene உள்ளவர்களை தான் புற்று நோய் பாதிக்கும்.. இந்த ஜீன் தான் basic foundation , அதற்க்கு மேல் தான் புற்று built ஆக்க படுகிறது..

சரி.. oncogene உள்ள எல்லோரையும், புற்று நோய் பாதிக்குமா என்றால் இல்லை, oncogene உள்ளவர்கள், புற்று நோயை உருவாகும், மற்ற காரணிகளான, புகை பழக்கம் (நுரையீரல், மற்றும் பல புற்று ), அல்கஹால்,(கல்லீரல் புற்று ),சுற்று புற சூல்நிழை மாசு(பல புற்று) , புகையிலை பழக்கம்(வாய் புற்று, தொண்டை புற்று),சில வைரஸ் களான hbv , hpv ,மற்ற CHEMICAL இது போன்ற பலவற்றின் தாக்குதலுக்கு உட்படுத்த பட்டால், அவர்களுக்கு புற்று நோய் வரும் ம்வைப்பு அதிகரிக்கிறது..

சரி oncogene இல்லாதவர்கள், இது போன்ற காரணிகளுக்கு EXPOSE ஆனாலும், புற்று வற்றாத என்றால், வர வாய்ப்பு மிக குறைவு.. அனால் மற்ற நோய்கள் வரலாம்.

என் குடும்பத்தில் வேற யாருக்கும் புற்று இல்லை, அப்பா எனக்கு மட்டும் எப்படி வந்தது என்றால், GENE சில மாற்றங்கள் என்னும் MUTATION அடைவதால், SUDDEN ஆகா பரன்பரையில், கான்செர் இல்லாமல், புதிதாக கான்செர் உருவாகும்..மற்ற்றொரு காரணம், பல தலைமுறைக்கு முன் ஒருவருக்கு கான்செர் இருந்து, கான்செர் என்று கண்டறியாமல் இராது இருக்கலாம், அந்த GENE பல GENERATION SKIP பின்னர் வரும் GENERATION ஐ பாதிக்கலாம், இதற்க்கு GENETIC ATAVISM என்று பேர்..

அந்த oncogene தான் நாம் பொத்தாம் பொதுவாக தலைவிதி என்று குறிப்பிடுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:அடையாறு புற்றுநோய் மையத்த...
posted by Vilack Seyed Mohamed Ali (kangxi) [10 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 10116

டாக்டர் khizaar அவர்களின் விளக்கம் அருமை . இதுமட்டும் அல்லாமல் உங்கள் துறையை சார்ந்த நோய்களுக்கும் , செய்திகளை வெளியிட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved